மின் நூல்

Tuesday, April 24, 2018

வாசிப்புக்கு வந்திருக்கும் எனது நூல்கள்

து  இ-புத்தகக் காலம்.

புத்தகங்கள் மட்டுமல்ல, பத்திரிகைகளே இ--மேகஸின்களாக வெளிவரும் காலம் இது.  அச்சடித்த புத்தகங்களின் காலத்திற்கு அடுத்த வளர்ச்சியாக இந்த இ-யுகத்தில்  புத்தகங்களுக்கான வளர்ச்சியின் இன்றைய கால கட்ட மேம்பாடு இது. 

இ-புத்தகங்களாக வெளிவந்திருக்கும் எனது நூல்கள் சிலவற்றை வாசகர்களின் வாசிப்புக்காக இங்கு அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்வு கொள்கிறேன்.

'unlimited' என்ற சொல் வெகு கவர்ச்சியாக  உலா வரும் காலமும் இது தான்.  புத்தக  உலகிலும் நிறைய 'unlimited' கள்  காணக் கிடைக்கின்றன.

புஸ்தகா டிஜிட்டல் மீடியா  (  www.pustaka.co.in  )   புத்தக வாசிப்புக்கான உருவெடுத்திடுத்திருக்கும் பிரத்தேயக புத்தகப் பிரபஞ்சம்.  பல்வேறு மொழிகளில் புத்தகங்களை வாசிக்கும் பெரும் பேறும் இந்தப்   புஸ்தகா பிரபஞ்சத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.

ரு.99/- செலுத்தினால் ஒரு மாத காலத்திற்கு unlimited- ஆக எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் நம் வசதிக்கேற்ப வாசித்துக் கொள்ளலாம் என்பது புத்தகப்  பிரியர்களுக்காகவே ஜனித்த ஏற்பாடாகத் தெரிகிறது.  இந்த எளிய ஏற்பாட்டில் எனது நூல்களையும் உள்ளடக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலிலேயே எனது  படைப்புகள் சிலவற்றை இந்த இ-நூலகத்திற்கு வழங்கியிருக்கிறேன்.

சமீபத்தில் இவர்கள் வெளியிட்டிருந்த எனது நூல்களுக்கான அறிமுக முன்னுரை கேட்டிருந்தார்கள்.  நான் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்த அந்த அறிமுக முன்னுரைகளையும்
புத்தகங்களைப் பற்றிய விவரங்களையும் நமது பதிவுலகின் பார்வைக்கும் நண்பர்களின் உபயோகத்திற்காகவும் இங்கு பிரசுரிப்பதில் மகிழ்வு கொள்கிறேன்.

இனி, புத்தகங்களின் தலைப்புகளும் அவற்றிற்கான அறிமுக முன்னுரைகளும்:


1)
                                                                                                                                       ஜீவியின்  கவிதைகள்    

  நூல் வகை:
விதைகள்


நாடாண்ட மன்னர்களையும் அவர்களது வீர பராக்கிரம செயல்களையும் மிகைப்பட புனைந்து கவிதைகள் இயற்றி புலவர்கள்
பரிசில்கள் பெற்ற காலம் ஒன்றிருந்தது.  சுதந்திரப் போராட்ட காலத்து பாரதியார் தமது கவிதைத் திறனை அடிமைத்தளை அறுக்க ஆயுதமாகக் கொண்டார்.  பிரபஞ்சத்தின் விடை தெரியாக் கேள்விகளுக்கு பதில் காணும் வேள்வியாகக் கவிதைகள் தம்மைப் புதுப்பித்துக் கொண்ட காலமும் உண்டு.  இப்படி ஒவ்வொரு காலத்தும் அந்தந்த காலத்து தேவைக்கேற்ப கவிதைகள் உள்ளடக்கம் கொண்டிருந்திருக்கின்றன.   மக்களின் ஜனநாயக யுகம் பூத்துப் பூச்செரிந்த பொழுது மக்களின் பிரச் னைகளும், அதற்கான தீர்வுகளும் புதுயுகக் கவிஞர்களால் கவிதைகளின் உட்பொருளாயிற்று.   ஆனால் எல்லாக் காலத்தும் இயற்கை அழகும்,  காதலும் தான் கவிஞர்களின் பாடு பொருளாக இருந்து பெருமை பெற்றன.

இப்படியான  கோட்பாடுகளின் அடிப்படையில் இக்காலத்தின் தேவைகளைக்களுக்கேற்ப  பல்வேறு சிந்தனைகளைப் பூக்களைக் கோர்த்து தொடுக்கப்பட்ட ஜரிகை மாலை தான் இந்தக் கவிதைத் தொகுப்பு.  மொத்தம் 34 கவிதைப் பூக்கள்.   ரசித்து அனுபவிக்க வேண்டி கவிதைப் பிரியர்களின் பார்வைக்குப் படைக்கப்பட்டிருக்கிறது.   வாசித்துப் பாருங்கள், தோழர்களே!

2)                            
                                   இலக்கிய  இன்பம்


புத்தக வகை:  இலக்கியம்
                                                            
ங்க காலம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் ஒன்று கூடி சங்கமித்த காலம்.  அந்த ஒப்பற்ற காலத்தின் விழுமிய சிறப்புகளை இன்றைக்கு நமக்கு எடுத்தோதுவதே சங்க கால இலக்கியங்கள். 

ஒருகாலத்துப்  பெருமைகளும், பண்பாட்டுச்  செயல்பாடுகளும் தொன்று தொட்டுத் தொடரும் செல்வங்களாய் பிற்காலத்திலும் நம் செயல்பாடுகளில் அழியாமல் பிரதிபலிக்குமா என்பது மிலியன் டாலர் கேள்வி. இந்தத் தொகுப்பு அந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்வது.

சங்ககால நிகழ்வுகளை,  இக்காலத்து நிகழ்ச்சிகளோடு ஒரு கதை போலவான வடிவத்தில் ஒன்றிப் பார்ப்பதற்கான அரிய முயற்சி நூல் வடிவாகியிருக்கிறது.   அந்தந்த இடங்களில் சங்க காலப் பாடல்களையும்  கொண்டிருப்பது தனிச் சிறப்பு.

வாசித்துத் தான் பாருங்களேன்.    உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது உறுதி.

3)                                                       
                         பார்த்தவை படித்தவை


புத்தக வகை:   பகிர்தல்
                                                                  
ச்சிட்ட எல்லாவற்றையும்  படித்துப் பார்க்க நாம் தவறுவதில்லை.  ‘அப்படிப் படிப்பதினால் ஆய பயன் என்ன?’ என்பது கூட அறிவார்ந்த கேள்வி தான்.

இந்தக் கேள்விக்கான பதில் நம்மிடையே விளைவிக்கும் சிந்தனைகள் எக்கச்சக்கம்.  ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!’ என்ற பிரமிப்பே கேள்வியாகிப் போய் சிலிர்க்கிறார் பாரதியார்.  அந்த அத்தனை கோடி இன்பங்களில் வாசிப்பு இன்பமும் தன்னிகரில்லாதது.
வாசித்தவற்றை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வதே வாசிப்பிலான பயனாகத் தோன்றுகிறது.

நான் வாசித்து நேசித்தவைகளை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  நீங்களும் அவற்றை உங்கள் நேசத்திற்க்குரியவரிடம் பகிர்ந்து கொண்டால் அதுவே இந்த நூலாக்கத்தின் பெரும் பயன்.

இதையும் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் இன்பம் வேறு எதில் இருக்கிறது?..  நீங்களே சொல்லுங்கள்.


4)
                            
                     காதலினால் கதையுண்டாம்


புத்தக வகை:  சிறுகதைகள்

                                                                           
‘சின்னச் சின்ன ஆசை; சிறகடிக்க ஆசை’  என்பது திரைப்படக் கவிதையாக நம்மைக் கிரங்கடிக்கிற வரிகள்.  இந்தத் தொகுப்பில் இருப்பதும் சின்னச் சின்ன ஆசைகள் போல் சின்னச் சின்ன கதைகள் தாம்.  ‘காதலினால் கவிதையுண்டாம்’ என்பது யுகக்கவிஞனின் வாக்கு;  கவிதை மட்டுமல்ல, காதலினால் கதையுமுண்டாம் என்று இத்தொகுப்பில் உள்ள ஒரு  கதை நம் காதுகளில் கிசுசிசுக்கிறது.

மொத்தம் 10 சிறுகதைகள்.  இந்தப் பத்தையும் வாசித்த உணர்வும் உங்களைக் கிரங்கடிக்கும் தான்.  வாசித்துவிட்டுத் தான்  சொல்லுங்களேன்!


5)
                                குமுதமும் விகடனும்


புத்தக வகை:  சிறுகதைகள்                                                

குமுதமும் விகடனும் தமிழ் நாட்டின்  பிரபல் பத்திரிகைகளின் பெயர்கள்.  அதுவே இந்தத் தொகுப்பிலுள்ள ஒரு கதைக்குத் தலைப்புமாகிற அதிசயம் நடந்திருக்கிறது.   தொகுப்பிலுள்ள பதினோறு சிறுகதைகளும் விதவிதமானவை.  வெவ்வேறு உணர்வுகளில் நம்மை ஆட்படுத்துகிற சக்தி படைத்தவை.  எழுது முறையில் முத்திரை படைத்தவை.  வாசிப்பவரின் உள்ளத்தில் சத்தப்படாமல் இடம் பிடிப்பவை.  நீங்களும் வாசித்துத் தான் பாருங்களேன்!..




6)                                         
                                         
                            இருட்டுக்கு   இடமில்லை


புத்தக வகை:  புதினம்

மூகத்தில்   பெண்களின் இருப்பை, அவர்கள் இயல்பை, வாழ்வில் அவர்களின் பங்களிப்பை அடிக்கோடிட்டுச் சொல்லும் நாவல் இது.  சொல்லப் போனால், இரு குறுநாவல்களை ஒன்றாக்கிப் படைக்கப்பட்ட பின்னல் இது.
                                                                                       
இந்தப் புதினத்தில் கதை மாந்தர்கள் எல்லோரும் நல்லவரே.  தமது செயல்களால் எல்லாவற்றையும் நல்ல விளைவுகளுக்கான அனுபவங்களாக்கிக் கொள்கிறார்கள்.  நல்ல சிந்தனை விளக்கேற்றி இருட்டுக் கவியாமல் பார்த்துக்  கொள்கிறார்கள்.
பத்திரிகை, பதிப்பகம், எழுத்து, ஷேர் மார்க்கெட் என்று பொருளாதார சுதந்திரத்தினூடான பெண்கள் சுதந்திரத்தை நிச்சயப்படுத்த நிறைய வாய்ப்புகளினூடே கதை பயணிக்கிறது.
தீவினை செயல்களோ, தீவினை கதாபாத்திரங்களோ இல்லாமல் தமிழில் முதன் முதலாக உருவான நாவல் இது.

பெண் வாசகர்களுக்கான புத்தம் புது பரிசு இது!
வாசித்துத் தான் பாருங்களேன்!



7)
                      கனவில் நனைந்த நினைவுகள்


புத்தக வகை:  குறு நாவல்    

யாருக்கும் தூக்கத்தில் கனவுகள் வருவது சகஜம் தான்.   ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்பவான கலர்க் கலர் கனவுகள்.

கனவுகள் தற்செயலானவை அல்ல.  கனவுகள் வருவதற்கும் காரணங்கள் உண்டு.  அத்துடன் அவற்றிற்கான குறிக்கோளும் பயன்பாடும், ஏன் தீர்வுகளும் கூட உண்டு.

வாழ்க்கையில் நமக்கு ஆசைகளும், அபிலாஷைகளும் அதிகம்.  சொல்லப் போனால், சில இலட்சியங்கள் நிறைவேற அது பற்றி ஆசை ஆசையாகக் கனவு காணச் சொல்லியிருக்கிறார்கள்.

கனவுகளே இந்தக் கதையல்ல.   ஆனால் கனவுகள் இந்தக்  கதையை நடத்திச் செல்ல பின்புலத்து ஆதர்ச சக்தியாய் செயல்படுகிறது.

இத்தனைக்கும் நடுவே கும்பகோண எழுத்தாளர் அமரர் எம்.வி. வெங்கட்ராமும்  நடுநடுவே நினைவு  கொள்ளப்படுகிறார்.  வாசித்துத் தான் பாருங்களேன்!
          
                                                 
                                                   
மேற்கண்ட புத்தகங்கள்  AMAZON  KINDLE  பதிப்புலகிலும் வாசிக்கவும்  வாங்கவும் கிடைக்கின்றன.   KINDLE  தளத்திற்குப் போய்  KINDLE  உலகில்  jeevee  என்று குறிப்பிட்டுத் தேடினால் கிடைத்து விடும்.

நன்றி சொல்ல வேண்டும்  இ-புத்தக  ஆக்கங்களை சாத்தியப் படுத்திய அன்பர்களுக்கு.  வாசித்து மகிழப் போகிற நண்பர்களுக்கும்.
Related Posts with Thumbnails