tag:blogger.com,1999:blog-7223516172590239990.post5099009861816512769..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: அழகிய தமிழ் மொழி இது!...ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-50773867496439654102016-05-24T08:13:00.379-04:002016-05-24T08:13:00.379-04:00//செய்யுளும் உரைநடையும் விரவிக் கலந்தவாறு உரைநடை இ...//செய்யுளும் உரைநடையும் விரவிக் கலந்தவாறு உரைநடை இடையிட்ட செய்யுளாய் இருந்த காப்பிய வடிவு, செய்யுள் நீங்கிய உரைநடையாய் நாவல் என்று வடிவு கொண்டிருக்கிறது. //<br /><br />மிக சுருக்கமாக இன்றைய நாவல் பிறந்த கதையை சொல்லியிருக்கிறீர்கள். <br /><br /><br />சிலப்பதிகாரத்தை முழும் படிக்க ஆசைதான். ஆனாலும் சில இடங்களில் பொருள் புரியாதே என எண்ணியபோது என்னைப் போன்றோருக்கு உதவ தங்களின் படைப்பான 'சிலப்பதிகாரம்-- மூலமும் தெளிவுரையும்' ஜூன் திங்களில் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிடுகிறது என அறிந்து மகிழ்ச்சி. நிச்சயம் வாங்கிப் படிப்பேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-17711295137188155032016-05-06T11:44:00.216-04:002016-05-06T11:44:00.216-04:00@ ஜிஎம்பீ
இந்தப் பதிவுக்குத் தொடர்ந்து வாருங்கள...@ ஜிஎம்பீ<br /><br />இந்தப் பதிவுக்குத் தொடர்ந்து வாருங்கள். அதுவே சிலம்பை ஆழ்ந்து கற்ற அனுபவத்தை ஏற்படுத்தும். நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-86781173962902652252016-05-06T11:40:23.430-04:002016-05-06T11:40:23.430-04:00@ சிவகுமாரன்
'என் தமிழ் என்ற பெருமை கொள்ள வைக...@ சிவகுமாரன்<br /><br />'என் தமிழ் என்ற பெருமை கொள்ள வைக்கிறது' என்று நீங்கள் சொல்லியிருப்பது சாகித்ய அகாதமி பரிசு பெற்றதே போன்ற சந்தோஷத்தை பெற வைத்தது. தொடர்ந்து வாருங்கள், கவிஞரே!.. நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-68582628530195396192016-05-04T11:11:58.092-04:002016-05-04T11:11:58.092-04:00சிலப்பதிகாரத்தை மேம்போக்காகப் படித்ததுதான் . உங்கள...சிலப்பதிகாரத்தை மேம்போக்காகப் படித்ததுதான் . உங்கள் பதிவு ஆழ்ந்து படிக்க வைக்கும் என்று நம்புகிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-41973407248595494432016-05-03T15:29:08.533-04:002016-05-03T15:29:08.533-04:00ஊருக்குப் போனதும் சிலப்பதிகாரத்தை மீண்டும் எடுத்து...ஊருக்குப் போனதும் சிலப்பதிகாரத்தை மீண்டும் எடுத்து படிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியது தங்கள் எழுத்து. <br />என் தமிழ் என்ற பெருமை கொள்ள வைக்கிறது இந்தத் தொடர். <br />நன்றி சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-9941409806961462392016-05-03T12:35:08.875-04:002016-05-03T12:35:08.875-04:00வரைபடப் புரிதல் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து க...வரைபடப் புரிதல் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து கூட வருகை தந்து பயணக் களைப்பை தங்கள் உற்சாகமூட்டலால் களைய வேண்டுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-32546223488040572832016-05-03T08:28:32.201-04:002016-05-03T08:28:32.201-04:00ஜீவி சார்!
உங்கள் முயற்சியின் வரைப்படம் துல்லியம...ஜீவி சார்! <br /><br />உங்கள் முயற்சியின் வரைப்படம் துல்லியமாகவே இருக்கிறது. அப்படியே செய்யுங்கள். நீங்கள் சிலம்பை விரிவாக அடுத்த ப்ராஜெக்ட் எனக் கொள்ளலாம்.<br />விசிலடிக்க அடியேன் தயார். மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-43627256469294321932016-05-01T08:54:32.976-04:002016-05-01T08:54:32.976-04:00@ பானுமதி வெங்கடேஸ்வரன்
சிலப்பதிகாரத்தின் ஈடுஇணைய...@ பானுமதி வெங்கடேஸ்வரன்<br /><br />சிலப்பதிகாரத்தின் ஈடுஇணையற்ற சிறப்புகள், சிலம்பு வரிகள் என்று தனிக் கட்டுரை எழுதுவதே பொருத்தமாக இருக்கும். நம்முடைய இப்பொழுதிய வேலை-- கீதாம்மாவின் பின்னூட்டப் பதிலில் சொல்லியிருக்கிறேன். இன்னொன்று. சிலப்பதிகாரச் செய்யுள் பகுதிகளை உரைநடையில் சொல்லி, சிலப்பதிகார உரைநடைப் பகுதிகளை எடுத்தாண்டு சிலப்ப;திகார உருவ, உள்ளடக்க நேர்ந்திகளோடு முடித்து விட்டால் நாம் சிலம்பைக் கடந்து மற்ற பகுதிகளுக்கு வந்து விடலாம்.<br /><br />சிலப்பதிகாரத்தில் ஆரம்பித்த இந்த ஆரம்பத்தை இன்றைய கதைப் படைப்புகளில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.இந்தத் தொடருக்கான நோக்கம் அதுவே.<br /><br />உங்களின் ஆசை எனக்கும் உண்டு. அன்றைய தமிழ் ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லி இருப்பது முக்காலும் உண்மை. எல்லாம் அவர்கள் போட்ட பிச்சையில் முகிழ்த்து இன்னமும் தொடர்புக் கொடியாய் சுற்றிக் கொண்டிருப்பதால் தான் இதெல்லாம் சாத்தியப்படுகிறது. பள்ளிக் கல்வியில் எனக்கு வாய்த்த தமிழாசிரியர்கள் மறக்க முடியாதவர்கள்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி சகோதரி!<br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-40347445297837083922016-05-01T08:34:34.817-04:002016-05-01T08:34:34.817-04:00@ மோகன்ஜி
தங்கள் அன்பான வேண்டுகோளுக்கு நன்றி,மோகன...@ மோகன்ஜி<br /><br />தங்கள் அன்பான வேண்டுகோளுக்கு நன்றி,மோகன்ஜி!<br /><br />சிலம்பு பற்றி விரிவாக எழுதுவதை வேறொரு பகுதியில் வைத்துக் கொண்டால் போயிற்று.<br /><br />இப்பொழுது சிலம்பின் உருவ, உள்ளடக்கச் சிறப்புகளைக் கோடி காட்டிவிட்டு, மற்றா ஐம்பெருங்காப்பியங்களின் கதை, கற்பனைச் செறிவு, உரைநடை+செய்யுள் இலக்கியங்களிலிருந்து பாரதி அதற்குப்பின்னான புதுக்கவிதை எழுச்சி, கல்கியிலிருந்து ஜெகே வரையிலான காலத்துப் படைப்பிலக்கியங்களின் செழுமை, இன்றைய படைப்பிலக்கியங்களின் வறுமை அதற்கான காரணங்கள் என்று அலசி, பழைய ராஜபாட்டைக்குத் திரும்புவதற்கு வழிவகைகள் கண்டு விட்டால் இந்தத் தொடர் எழுதுவதற்கான முயற்சி நிறைவடைந்து விடும்.<br /><br />கீதாம்மா பின்னூட்டத்திற்கு நான் அளித்திருக்கும் பதிலையும் பாருங்கள். அந்தளவில் எழுதலாம் என்று ஆசை. என்ன நினைக்கிறீர்கள், ஜீ?.. <br /><br /> <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-78878539336392785612016-05-01T08:17:58.270-04:002016-05-01T08:17:58.270-04:00@ Ajay S.J.
நன்றி, நண்பரே. பாராட்டுகளை விட விமரிச...@ Ajay S.J.<br /><br />நன்றி, நண்பரே. பாராட்டுகளை விட விமரிசன ரீதியான கருத்துக்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அப்படியான கருத்துக்கள் எழுத உந்து சக்தியாக இருக்கும்.. தொடர்ந்து தங்கள் கருத்துக்களாய்ப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-8702197248395415602016-05-01T08:13:46.721-04:002016-05-01T08:13:46.721-04:00@ கீதா சாம்பசிவம்
மெக்காலே கல்வித் திட்டத்தைத் தொ...@ கீதா சாம்பசிவம்<br /><br />மெக்காலே கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து, ஆங்கில ஆளுகைக்கு இங்கு கிடைத்த சிவப்புக் கம்பள வரவேற்பு, நவீன இலக்கியம் என்கிற பெயரில் ஆங்கில வழிமுறை சார்ந்த எழுத்துப் படைப்புகள், தமிழ்க் கல்வி பெற்றோரின் படைப்புலக பங்களில்ப்பின்மை என்று நிறைய காரணங்கள். தமிழின் ஆதிச்சிறப்புகளை புதுப்பிக்க வேண்டிய கட்டாயங்களில் இருக்கிறோம்.<br /><br />இன்னொரு பக்கம் அகிலன், நா.பா., ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், சூடாமணி, ஆதவன் போன்றவ்ர்களுக்கு இணையான எழுத்து வாரிசுகள் உருவாவதற்கான தமிழ் பத்திரிகை உலகின் எழுத்து மாற்றத்திற்கும் பெருங்கனவுடன் காத்திருக்கிறோம்.<br /><br />எல்லாம் கனிந்து வரும் பொழுது தமிழ் படைப்புலகின் அன்றைய பொற்காலத்தை மீண்டும் நாம் தரிசிக்கலாம். <br /><br />தொடர்ந்து வருகை தந்து இந்தத் தொடரின் சிறப்புக்காண ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-1605103416873792422016-05-01T07:44:44.784-04:002016-05-01T07:44:44.784-04:00@ கீதமஞ்சரி
நாவல் உலகிலும், நவீன எழுத்துப் படைப்ப...@ கீதமஞ்சரி<br /><br />நாவல் உலகிலும், நவீன எழுத்துப் படைப்புகளிலும் உங்களுக்கு அறிமுகம் உண்டு ஆதலால் திரு. ஜம்புலிங்கம் அவர்களுக்கு நான் அளித்திருக்கும் விரிவான பின்னூட்டத்தின் பின்னணியில் இந்தக் கட்டுரைத் தொடரை வாசிக்க வேண்டுகிறேன். நான் எழுதுவதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் மனத்திற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். தவறாது எடுத்துரைக்க வேண்டுகிறேன். இந்தத் தொடரில் வரும் கருத்துக்கள் விவாதத்திற்கு உட்பட வேண்டும் என்பது என் எண்ணம். அப்படியான முயற்சிகள் இந்தத் தொடருக்கான கருத்துக்களை செழுமை படுத்தும். ஆகவே அந்த கோணத்தில் பின்னூட்டங்களை அமைக்க வேண்டுகிறேன். தங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி, கீதமஞ்சரி!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-19556769975361975292016-04-29T10:09:57.841-04:002016-04-29T10:09:57.841-04:00ஐம்பெருங்காப்பியங்கள் என்பதே உடான்சாக இருக்கிறது. ...ஐம்பெருங்காப்பியங்கள் என்பதே உடான்சாக இருக்கிறது. எதற்காக இன்னும் இதைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறோம் தெரியவில்லை. தமிழில் எழுதப்பட்டது என்றாலும் சீவக சிந்தாமணியில் தமிழ்ப் பண்பாடு (ஹா!) சுத்தமாகக் கிடையாது. (அதனால்தான் படிக்க சுவாரசியமாக இருக்கிறதோ?) வளையாபதி கேசி இரண்டின் பாடல்களைக் கூட அறியமுடியவில்லை. எப்படி இவற்றை தமிழ்க்காப்பியம் என்பது? <br /><br />தமிழ்த் தாத்தாவின் முயற்சி வெற்றியடையக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் வளையாபதி நூலை ஒளித்து வைத்து அது மறைந்து விட்டதாக ஒரு conspiracy theory கேள்விப்பட்டிருக்கிறேன். <br /><br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-8955027439046461792016-04-29T10:03:59.996-04:002016-04-29T10:03:59.996-04:00// தமிழின் ஐந்து பெரும் காப்பியங்களின் கதையம்ச அழக...// தமிழின் ஐந்து பெரும் காப்பியங்களின் கதையம்ச அழகுகளை எடுத்து எழுதப் போகிறேன்<br /><br />வாழ்த்துக்கள். எதிர்பார்ப்புகளுடன் :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91532383220840299202016-04-28T14:21:16.236-04:002016-04-28T14:21:16.236-04:00தமிழ் நாவல் உலகைப் பற்றி பேசுவோமே? ஆங்கில நாவல் உல...தமிழ் நாவல் உலகைப் பற்றி பேசுவோமே? ஆங்கில நாவல் உலகை எதற்கு தாழ்த்தி எழுதவேண்டும்? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-49289140397344765242016-04-28T13:46:00.059-04:002016-04-28T13:46:00.059-04:00சிலப்பதிகாரமெல்லாம் பள்ளியில் படித்ததோடு சரி. நல்ல...சிலப்பதிகாரமெல்லாம் பள்ளியில் படித்ததோடு சரி. நல்ல தமிழ் ஆசிரியர்கள் இருந்தார்கள் அதனால் அப்போது படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போதே அழகான,எளிய தமிழ் வசீகரித்தது. உங்களின் அருமையான அலசலுக்கு நடுவே, சிலப்பதிகார பாடல்களையும் படிக்க கொடுங்களேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-7764369729340517652016-04-28T13:06:27.226-04:002016-04-28T13:06:27.226-04:00@ Dr. Jambulingam
எதற்காக இந்தத் தொடரை எழுதத் தொட...@ Dr. Jambulingam<br /><br />எதற்காக இந்தத் தொடரை எழுதத் தொடங்கினேனோ, அதற்கான காரணத்தை அந்த வரலாற்றுப் பிழையை நீங்கள் கண்டுகொண்டதில் மகிழ்ச்சி.<br /><br />இன்னொன்று. தொல்காப்பியத்தில் காணப்படும் இலக்கண வரையறைகளையும் கருத்தில் கொண்டு அந்த வரையறைகளை மீறாமலும் இந்தக் காப்பியத்தை இளங்கோ உருவாக்கி இருக்கிறார்.<br /><br />இன்றைய தமிழின் நாவல் உலகமோ, ஆங்கில நாவல்களின் காலம் தப்பிய இலக்கண வரையறைகளை வழிகாட்டியாகக் கொண்டு அலட்டுகின்றன. இது தான் நவீன் இலக்கியம் என்று ஒருசாரார் ஆர்பரிக்கின்றனர். தொல்காப்பியம் சுட்டும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வழிவழி வந்த தமிழ் நாவல்களையும் நாவல் துறையில் சாதனை படைத்த எழுத்தாளர்களையும் புறக்கணித்து விட்டு இன்று தாங்கள் எழுதுவதே புத்திலக்கியம் என்று பறைசாற்றுகின்றனர். இதெல்லாம் ஒரு சாராரின் உதார்களாக இருக்கிறதே தவிர மனசார தமிழ் நாவல்களை வாசித்து வந்த வாசகர் கூட்டம் இந்த நவீன நாவல்களில் அதிரடி மாற்றங்களை எதிர் கொள்ளும் திராணியற்றும் மனசுக்கு ஒன்றாமலும் கதை வாசிக்கும் பழக்கத்தையே துறந்து விட்டனர். சிலரின் பார்வை தொலைக்காட்சி பக்கம் போய்விட்டது.<br /><br />இப்படியாக தமிழ்ப் புதினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அருகி வரும் இந்த நிலையில் சரியான திசையில் பழைய போக்குக்கு தமிழ் நாவல் உலகைத் திருப்ப இந்தத் தொடர் முயற்சிக்கிறது.<br /><br />தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஐயா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-79054120155066283012016-04-28T12:08:50.484-04:002016-04-28T12:08:50.484-04:00சிலம்பின் பல சிறப்புகளையும் கோடிட்டு காட்டியிருக்க...சிலம்பின் பல சிறப்புகளையும் கோடிட்டு காட்டியிருக்கிறீர்கள்.<br />தீந்தமிழின் காவியமரபில் இளங்கோவடிகள் போட்டுவைத்த ராஜபாட்டையிலே தான் பிற காப்பியங்கள் பயணப்பட்டிருக்கின்றன.<br />நடையிலும், பொருளடக்கத்திலும் சிலம்பின் தோளில் நின்றபடி தான் உயரமும் கண்டிருக்கின்றன.<br />இன்னமும் மெருகூட்டிக் கொண்டு தமிழை வளப் படுத்துகின்றன.<br />உதாரணமாக, சீவக சிந்தாமணியும், கம்பன் காவியமும் பாயிரத்தோடு அவையடக்க பாடல்களும் சேர்த்து எழுதப்பட்டிருக்கின்றன.<br />கம்பனில் மட்டும் ஆறு பாடல்கள்.<br />சிலப்பதிகாரம் பற்றி இன்னமும் சற்று விரிவாகவே நீங்கள் எழுத வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.<br />பெரிய பொறுப்புதான். நீங்களே செய்ய ஏலும் அன்பரே!<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-58790156594010036722016-04-28T11:08:25.379-04:002016-04-28T11:08:25.379-04:00அருமையான பகிர்வு நண்பரேஅருமையான பகிர்வு நண்பரேAjai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-76535669862745033462016-04-28T08:59:35.892-04:002016-04-28T08:59:35.892-04:00நீங்கள் கோடிட்டுக் காட்டியிருக்கும் விதம் சிலப்பதி...நீங்கள் கோடிட்டுக் காட்டியிருக்கும் விதம் சிலப்பதிகாரம் எடுத்துப் படிக்கத் தோன்றுகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-17909807548013582122016-04-28T08:55:30.448-04:002016-04-28T08:55:30.448-04:00நாவல் என்கிற ஆங்கிலச் சொல்லே 1700 காலத்தில் வந்ததா...நாவல் என்கிற ஆங்கிலச் சொல்லே 1700 காலத்தில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் ஆங்கிலேயர் சொல்லித்தான் நமக்கு நாவல் என்பதே தெரிந்தது என்று எந்த ..ம் சொல்லமாட்டான்.. சொன்னால் சொன்னவர்கள் சொல்லப்போகும் கருத்தின் போலியை மறைக்கப் பூசப்படும் மேய்முலாம்.. சில நேரம் நாம் ஒன்று சொல்ல நினைப்போம்.. அதை இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று இல்லாதவர் மேலோ பொதுவானவர் மேலோ போலி அங்கீகாரத்துடன் போற்றிவிட்டால் அதை மெய்யான அங்கீகாரத்துடன் என்னவோ தான் தோண்டி எடுத்த தங்கம் போல் ஜெஜெ என்று பீற்றிக்கொள்ளலாம் இல்லையா? <br /><br />அப்படியே இருந்தால் தான் என்ன? ஆங்கிலேயர் சொன்னதினால் நமக்கு திடீரென்று புது ஞானம் வந்ததா? இல்லை இருந்த ஞானம் குறைந்ததா? இருப்பது தான் இருந்தது. இருந்தது தான் இருப்பது. இல்லையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-67993092408072886392016-04-28T08:46:24.371-04:002016-04-28T08:46:24.371-04:00கம்பன் இளங்கோவுக்கு முன்னவனா பின்னவனா?கம்பன் இளங்கோவுக்கு முன்னவனா பின்னவனா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-84348562284609138462016-04-28T05:38:07.945-04:002016-04-28T05:38:07.945-04:00//ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னால் தான் நாவல் இலக்க...//ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னால் தான் நாவல் இலக்கியம் பற்றி நாம் தெரிந்து கொண்டோம் என்று சொல்வது எவ்வளவு வரலாற்றுப் பிழை என்று தெரிகிறது//<br /><br />இந்த மெக்காலே கல்வித் திட்டம் நம்முடைய அறிவையே சிதைத்து விட்டது! இப்போ சும்மா மனப்பாடம் பண்ணிக் கக்கும் அளவில் வந்தாச்சு! :( ஒரு காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை அறிய நம் தமிழ்த்தாத்தா அவர்களின் சுயசரிதையைப் படித்தாலே போதும். சிலப்பதிகாரம் குறித்த அருமையான அலசலுக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-72934268899915923392016-04-28T02:11:08.276-04:002016-04-28T02:11:08.276-04:00@ வை.கோ.
சிலப்பதிகாரம் மட்டுமில்லை. தமிழின் ஐந்து...@ வை.கோ.<br /><br />சிலப்பதிகாரம் மட்டுமில்லை. தமிழின் ஐந்து பெரும் காப்பியங்களின் கதையம்ச அழகுகளை எடுத்து எழுதப் போகிறேன். படிக்கப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.<br /><br />டாக்டர் ஜம்புலிங்கம் பின்னால் சொல்லியிருக்கிறார் பாருங்கள், அதான் அடிப்படை விஷயம். அந்த வரலாற்றுப் பிழையை நிருவ வேண்டும். அதற்கேற்ப எழுத வேண்டும்.<br />அதனால் அந்த மாதிரி இடங்களை கூர்ந்து கவனித்து வாருங்கள். இப்பொழுது நாவல் என்று நாம் சொல்வதின் படைப்பிலக்கிய சாமர்த்தியம் அன்றே தமிழர்களுக்கு அத்துப்படியான விஷயம் என்பது தெரியும்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-36650231107436030572016-04-28T02:00:08.604-04:002016-04-28T02:00:08.604-04:00@ ஸ்ரீராம்
//.....ஒரு தகவலாக பதிவிடலாம் என்று தோன...@ ஸ்ரீராம்<br /><br />//.....ஒரு தகவலாக பதிவிடலாம் என்று தோன்றுகிறது!//<br /><br />நல்ல முயற்சி தான். இந்த கோவலன்--கண்ணகி திருமணக் காட்சியில் கூட தமிழர் திருமணங்கள் அந்த சிலப்பதிக்கார காலத்தில் எப்படி நடந்தன என்று தெரிந்து கொள்வதற்கு சான்று கிடைத்திருக்கிறதல்லவா?.. <br /><br />பண்டைய தமிழர் வாழ்வினைத் தெரிந்து கொள்ள சிலப்பதிகாரம் ஒரு தகவல் களஞ்சியம்.<br />ஏகப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்ட பெட்டகம். உறைநூல் தேவை என்ற தேவை இல்லாமல் எளிமையாகப் புரியும் வரிகள். நடுநடுவே உரைநடை.. அட்டகாசம் ஸ்ரீராம்.<br /><br />வர்த்தமானன் பதிப்பகத்தின் 'சிலப்பதிகாரம்-- மூலமும் தெளிவுரையும்' அற்புதமான பதிப்பு. விலையும் நூலும் கையடக்கமானது. வரும் ஜூன் புத்தகத் திருவிழாவில் வாங்க இப்பொழுதே குறித்துக் கொண்டு விடுங்கள்..<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com