tag:blogger.com,1999:blog-7223516172590239990.post5859813922986444025..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வசந்த கால நினைவலைகள்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77702971851969558752019-06-16T10:51:54.133-04:002019-06-16T10:51:54.133-04:00@ வே. நடனசபாபதி
தவறுகள் குற்றங்கள் அல்ல என்ற ஒரு ...@ வே. நடனசபாபதி<br /><br />தவறுகள் குற்றங்கள் அல்ல என்ற ஒரு கோணம் உண்டு. <br /><br />கல்யாண விருந்தில் அழைப்பில்லாமல் கிழிசல் சட்டையுடன் சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்திருந்த பெரியவரைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய உணர்வு எனக்கு.<br />அந்த நிலை ஏன் அந்தப் பெரியவருக்கு என்று மனம் வேதனைப்படும் இல்லையா?..<br /><br />பத்திரிகைக்களுக்கு தொடர்ந்து கதைகள் எழுதி அனுப்பி உருப்படியில்லாத எழுத்துக்கள் எல்லாம் பிரசுரமாகும் பொழுது தனது கதைகள் ஏன் அலட்சியப்படுத்தப் படுகின்றன என்று நொந்து போன ஒருவர், அவ்வளவு வெளிக்குத் தெரியாத ஒரு எழுத்தாளர் நான் தான் என்று <br />மனநிலை பிறழ்ந்து இலக்கியக் கூட்டம் ஒன்றில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்..<br /><br />அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?.. சொல்லுங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-75952196570971728982019-06-12T08:09:04.774-04:002019-06-12T08:09:04.774-04:00திரு ராகவன் அவர்கள் செய்தது சரியே. புகழ் பெற்ற ஒரு...திரு ராகவன் அவர்கள் செய்தது சரியே. புகழ் பெற்ற ஒரு எழுத்தாளர் பெயரில் அதுவும் அவரது சொந்த ஊரிலேயே அவர் பெயரை சொல்லிக்கொண்டு வாசகர்களை ஏமாற்றுபவருக்கும் , ஒரு புகழ் பெற்ற நுகர்பொருளின் பெயரில் தங்களது தரம்ற்ற பொருளை விற்பனை செய்யும் போலி நிறுவனத்திற்கும் வேறுபாடு ஏதும் இல்லை. அவரைக் கண்டித்தது சரியென்றே நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-42541968024311645792019-06-03T02:52:42.913-04:002019-06-03T02:52:42.913-04:00@ தி. கீதா
தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் பிரசுர...@ தி. கீதா<br /><br />தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் பிரசுரிக்கிறேன். இல்லையென்றால் வரவில்லை என்றே கொள்ள வேண்டுகிறேன்.<br /><br />நீங்கள் வரிசையாக தொடரை வாசித்து வருவதால், கமெண்ட்டை பார்த்தவுடனேயே பிரசுரித்து விடுவேன். பதிலளிக்கத் தான் தாமதமாகலாம். எப்படியிருந்தாலும் தேடிப் போய் பதிலளித்து விடுவேன்.<br /><br />எனக்கென்று ஓர் இதயம்-- என்றொரு புனிதனின் குறுநாவல் உண்டு. அந்தக் குமுதக் கதை என் நினைவுக்கு வந்தது..<br /><br />அது சரி, ஆசை முகம் மறந்து தான் போகுமா என்ன? -- என்று தன் தொடர் ஒன்றின் ஒரு அத்தியாய ஆரம்ப வரியாகக் கொண்டு ஆரம்பித்து அந்த அத்தியாயத்தோடு அந்த வரியை எஸ்.ஏ.பி. சம்பந்தப்படுத்தியிருப்பார். அவர் விளக்கம் பிரமாதமாக கதையோடு ஒட்டி வரும்.<br /><br />விட்டு விடாமல் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சகோதரி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-37798399075779923982019-06-02T09:58:42.010-04:002019-06-02T09:58:42.010-04:00நான் இதற்கு அன்றே கமென்ட் போட்டிருந்தேனே வரலையோ?
...நான் இதற்கு அன்றே கமென்ட் போட்டிருந்தேனே வரலையோ?<br /><br />புனிதன் பற்றி தெரிந்து கொண்டு நெட்டில் அவர் எழுதிய ஒரு கதையும் எடுத்து வைத்திருக்கிறேன் வாசிக்க. ஆசை முகம் மறந்து போச்சே...<br /><br />தொடர்கிறேன் ஸ்வாரஸ்யமான தகவல்கள்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-19309923683024348982019-05-21T19:35:29.042-04:002019-05-21T19:35:29.042-04:00மகரிஷி.மகரிஷி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-11906483132748178932019-05-21T12:31:10.668-04:002019-05-21T12:31:10.668-04:00ஸ்ரீராம், புவனா ஒரு கேள்விக்குறி -- புனிதனா, மகி...ஸ்ரீராம், புவனா ஒரு கேள்விக்குறி -- புனிதனா, மகிரிஷியா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20488740202883491432019-05-21T12:29:38.037-04:002019-05-21T12:29:38.037-04:00@ ஸ்ரீராம்
தேடி எடுத்து இன்னொரு தடவை வாசித்துப் ...@ ஸ்ரீராம்<br /><br />தேடி எடுத்து இன்னொரு தடவை வாசித்துப் பாருங்களேன். எங்கள் பிளாக்குக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவும்.. :}}ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-54335134965819869132019-05-21T12:26:31.564-04:002019-05-21T12:26:31.564-04:00@ பானுமதி வெங்கடேஸ்வரன்
//ஆனால் எழுத்தாளரின் முக...@ பானுமதி வெங்கடேஸ்வரன்<br /><br />//ஆனால் எழுத்தாளரின் முகம் தெரியாது என்பதால் ஏமாற்ற முனைவதை ஏற்றுக்கொள்ளாதது சரிதான்.//<br /><br />ஆனால் அப்படிப்பட்ட எண்ணம் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்று இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் குழப்பமாக இருக்கிறது..<br /><br />புனிதனின் இயற்பெயரான சண்முக சுந்தரம் என்ற பெயரிலேயே மணிக்கொடி கால எழுத்தாளர் ஆர். சண்முக சுந்தரம் என்ற ஒருவர் இருந்தார். 'நாகம்மாள்' என்ற புகழ்பெற்ற நாவலின் ஆசிரியர். ஆனால் ஏ.எஸ்.ஆருக்கு அவரை நிச்சயம் தெரிந்திருக்கும். இந்தக் குழப்பம் வேறே. என்னவோ எனக்கு அன்றைக்கு மனசே சரியில்லை. <br /><br />இப்பொழுது நினைத்தாலும் அதெல்லாம் நடந்திருக்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-55997786782488666842019-05-21T12:15:26.522-04:002019-05-21T12:15:26.522-04:00@ வல்லி சிம்ஹன்
ஸ்ரீரங்கம் சதர்ன் ரயில்வே எக்ஸ்...@ வல்லி சிம்ஹன்<br /><br />ஸ்ரீரங்கம் சதர்ன் ரயில்வே எக்ஸ்டன்ஷன் பகுதியில் அப்பொழது ஏ.எஸ்.ஆர் வசித்து வந்தார். மனிதன் நாவலுக்கு கோபுலு தான் பாத்திரங்களை மனத்தில் பதித்து விடுகிற மாத்ரி சித்திரங்கள் வரைந்தார். நாயகனின் கோடுகள் போட்ட முழுக்கை சட்டை நினைவில் பதிந்திருக்கிறது. <br /><br />ஏ.எஸ்.ஆரின் தம்பி மகன் இந்திரா செளந்தர ராஜன். மகன் ராஜரிஷி என்ற பெயரில் எழுதியவர். மைதிலி உங்களுக்குத் தெரியும்.<br /><br />விகடன் வெள்ளி விழாப் போட்டியில் மனிதன் பரிசு பெற்ற நாவலாக இருந்தும், விகடன் ஆசிரியர் அந்தக் கதையில் சில மாற்றங்களை செய்ய விரும்பியிருக்கிறார். அதை ஏஎஸஆரிடம் சொல்லி விகடன் அலுவலகத்திலேயே சில நாட்கள் தங்கி எழுதித் தரச் சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப வசதிகளையும் செய்து தந்திருக்கிறார். வெற்றிலை சீவல் பிரியருக்கு கும்பகோணம் வெற்றிலை, ஏ.ஆர்.ஆர். சீவல் பாக்கெட்டுகள் எல்லாம் ரெடியாக இவருக்காக டேபிளில் காத்திருக்குமாம். ஏஎஸஆர் எழுதி வாசித்திருக்கிறேன்.<br /><br />ராகவன் சார் கோபம் நியாயம் என்கிறீர்கள்?.. எனக்கென்னவோ நான் தான் புனிதன் என்று சொல்லிக் கொண்டு வந்தவரின் தோற்றம் பார்க்க பாவமாக இருந்தது. அப்படிச் சொல்ல அவருக்கு என்ன அவசியம் வந்தது என்பது புதிராக இருக்கிறது. எந்தக் காலத்திலும் எழுத்தாளர்களுக்கென்று தனிப்பட்ட ஒளிவட்டம் இருந்ததில்லை. இந்த நிகழ்வை வைத்துக் கொண்டு சிறுகதை ஒன்று எழுதலாமா என்று தோன்றும். பரிதாபத்தை பெரிது படுத்தி என்ன எழுவது என்று தோன்றிய யோசனையை புறந்தள்ளுவேன்.<br /><br />உங்கள் ரசனைகள் தான் எனக்கு பலம். கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் கதையையும் கோபுலுவின் சித்திரங்களை ரசித்து நீங்கள் மகிழ்ந்ததை இன்னும் நான் மறக்கவில்லை. நன்றி, வல்லிம்மா.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-61703104158311884532019-05-21T11:38:20.620-04:002019-05-21T11:38:20.620-04:00@ கோமதி அரசு
மகிழ்ச்சி. தொடர்ந்து வாசித்து வாருங்...@ கோமதி அரசு<br /><br />மகிழ்ச்சி. தொடர்ந்து வாசித்து வாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-3889425874785959282019-05-21T11:20:49.028-04:002019-05-21T11:20:49.028-04:00நாலுபேரும் ஓர் இரவும் வாசித்திருக்கிறேன். எங்கள் ...நாலுபேரும் ஓர் இரவும் வாசித்திருக்கிறேன். எங்கள் வீட்டு பைண்டிங் கலெக்ஷனில் கூட எங்கோ இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-42405758107323582752019-05-21T11:02:39.596-04:002019-05-21T11:02:39.596-04:00@ ஸ்ரீராம்
நாலு பேரும் ஓர் இரவும் - என்று சுவாரஸ்...@ ஸ்ரீராம்<br /><br />நாலு பேரும் ஓர் இரவும் - என்று சுவாரஸ்யமான தொடர்கதை ஒன்று குமுதத்தில் எழுதி இருக்கிறார். வாசித்திருக்ககிறீர்களா?..<br /><br />//அப்போதெல்லாம் எழுத்தாளர்-வாசக உறவுகள் சற்று எளிதாக இருந்தது என்று நினைக்கிறேன்.//<br /><br />அப்படியென்றும் ஒரேடியாகச் சொல்லி விட முடியாது.. எதில் நம் ரசனை பதிகிறதோ, அதை அந்தந்த காலங்களில் கப்பென்று பற்றிக் கொள்கிறோம். அவ்வளவு தான்.<br /><br />எதில் நம் மனசை பறி கொடுக்கிறோம் என்பதிலும் இருக்கிறது. என்னை விட பத்திரிகை அலுவலகங்களோடு தொடர்பு கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னளவுக்கு எழுத்தாளர்கள் பற்றி தகவல்களை சேகரித்து மனத்தில் நிறைத்துக் கொண்டு அதே பிரேமையுடன் அலைந்தவர்கள் இருக்கிறார்களா என்பது தான் கேள்வியாகிப் போகிறது.<br />பத்திரிகைகளில் நிறைய பிரசுரம் கண்ட எழுத்தாளர்களோடு அந்நாளைய பத்திரிகைகளைப் பற்றி ஏதாவது நீங்கள் பேசலாம் என்று நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். தமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களை இன்னொரு எழுத்தாளர் வாசிப்பதும், மனம் மகிழ்வதும் என்பதே அதிசயம். அதனால் தான் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது.<br /><br />இப்பொழுது கூட எழுத்தாளர் வையவன் அடையாறு பகுதியில் ஒரு வாசகர் வட்டத்தை அமைத்துக் கொண்டு அடிக்கடி கூட்டங்கள் நடத்துகிறார். <br /><br />ஆனால் பத்திரிகைகள் சினிமா-- அரசியல் என்று மோகத்தீயில் வீழ்ந்து விட்டதால் கதை வாசிக்கும் அன்றைய வாசகர் வட்டம் இன்றில்லை என்பது மட்டும் நிச்சயம். <br /><br />அன்றைய பத்திரிகை தொடர் வாசித்தோருக்கு தொலைக்காட்சி சீரியல்களும் ஓரளவு மாற்றாக மாறியிருக்கின்றன.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-58018427602881505412019-05-21T10:17:13.722-04:002019-05-21T10:17:13.722-04:00@ தளிர் சுரேஷ்
என் காலம் அப்படி. நாம் தேர்ந்தெடு...@ தளிர் சுரேஷ்<br /><br />என் காலம் அப்படி. நாம் தேர்ந்தெடுப்பதும் இருக்கிறது, இல்லையா?..<br /><br />சேலம் சினிமா ரசிகர்களுக்கு பெயர் பெற்ற ஊர். நிறைய சினிமா கொட்டகைகள். நல்லவேளை அதில் அதிகமாக மாட்டிக் கொள்ளவில்லை. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-88885220274125862502019-05-21T10:13:44.397-04:002019-05-21T10:13:44.397-04:00@ ஜிஎம்பீ
கரும்பு தின்னக் கூலியா?..
ஏதாவது புது...@ ஜிஎம்பீ<br /><br />கரும்பு தின்னக் கூலியா?..<br /><br />ஏதாவது புது மொழியாகச் சொல்லியிருக்கக் கூடாதா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-39790784535513819932019-05-19T23:14:22.604-04:002019-05-19T23:14:22.604-04:00ஸ்வாரஸ்யமான அனுபவங்கள். பிரிக்க முடியாதது இலக்கிய ...ஸ்வாரஸ்யமான அனுபவங்கள். பிரிக்க முடியாதது இலக்கிய கூட்டங்களும் சர்ச்சைகளும். ஆனால் எழுத்தாளரின் முகம் தெரியாது என்பதால் ஏமாற்ற முனைவதை ஏற்றுக்கொள்ளாதது சரிதான்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91566778586822527612019-05-19T10:41:23.877-04:002019-05-19T10:41:23.877-04:00எத்தனை அருமையான நினைவலைகள்.
ஏ ஏஸ் ஆர் பார்க்க நினை...எத்தனை அருமையான நினைவலைகள்.<br />ஏ ஏஸ் ஆர் பார்க்க நினைத்த மனிதர். எனக்கு இது வரை<br />மனிதன் நாவல் கிடைக்கவில்லை.<br />ஷைலஜாவிடம் கூடக் கேட்டுப் பார்த்தேன். <br />புனிதன் தான் சுந்தர பாகவதரா. அட.<br />ராகவன் சார் கோபம் நியாயமானதுதானே.<br /><br />எவ்வளவு பெரியவர்களை எல்லாம் சந்தித்திருக்கிறீர்கள் ஜீவி சார்.<br />உங்கள் எழுத்தைப் படிக்கும் போது மனம் நெகிழ்கிறது.<br />அருமையான நினைவுகள். தெளிவான சமாசாரங்கள். மிக மிக நன்றி ஜீவி சார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-36645597140402619682019-05-18T11:28:45.860-04:002019-05-18T11:28:45.860-04:00உங்கள் மலரும் நினைவுகளால் நிறைய விஷயங்கள் அறிந்து ...உங்கள் மலரும் நினைவுகளால் நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-79604595073289413612019-05-18T07:27:14.635-04:002019-05-18T07:27:14.635-04:00புனிதன் எழுதிய கதைகள் வாசித்திருக்கிறேன். உங்களுக...புனிதன் எழுதிய கதைகள் வாசித்திருக்கிறேன். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அற்புதமானவை. அப்போதெல்லாம் எழுத்தாளர்-வாசக உறவுகள் சற்று எளிதாக இருந்தது என்று நினைக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91774948047694745332019-05-18T06:57:57.170-04:002019-05-18T06:57:57.170-04:00மலரும் நினைவுகள் அருமை! இளம்வயதில் இலக்கிய ஆளுமைகள...மலரும் நினைவுகள் அருமை! இளம்வயதில் இலக்கிய ஆளுமைகளுடன் பழக கிடைத்தமை பெரிய வரம்! அருமை! வாழ்த்துக்கள். ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-78273479697485446752019-05-18T02:38:39.541-04:002019-05-18T02:38:39.541-04:00/ திருச்சி எழுத்தாளர் ரெண்டு பேர். ஏ.எஸ். ராகவன்.../ திருச்சி எழுத்தாளர் ரெண்டு பேர். ஏ.எஸ். ராகவன் சாரும், திருலோக சீதாராம் சாரும் கலந்துக்கறாங்க.. குமுதம் புனிதன், ஜ.ரா. சுந்தரேசன் எல்லாரையும் அழைத்திருக்கிறோம். பிரமாதமா இருக்கப் போறது. மறக்காம வந்திடு.." என்றார்./ கரும்பு தின்னக் கூலியா <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com