tag:blogger.com,1999:blog-7223516172590239990.post7627930997926870380..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: இரு பதிவர்களிடம் ஒரே மாதிரியான கேள்விஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-61548239266560778942016-02-15T23:35:07.771-05:002016-02-15T23:35:07.771-05:00பதிவு பின்னூட்டங்கள் எல்லாமே சுவாரசியம்.பதிவு பின்னூட்டங்கள் எல்லாமே சுவாரசியம்.ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-75610503015879871852016-02-14T03:25:47.622-05:002016-02-14T03:25:47.622-05:00நன்றி, ஐயா!
'டச்'சுக்கு தமிழ்லே என்ன சார்...நன்றி, ஐயா!<br /><br />'டச்'சுக்கு தமிழ்லே என்ன சார், கைவண்ணமா? (அடுத்த பதிவு எழுதிக் கொண்டிருப்பதின் பாதிப்பில்)ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-36896374980194236352016-02-13T06:38:11.652-05:002016-02-13T06:38:11.652-05:00
ஜீவி சாரின் வித்தியாசமான பதிவிலும் ஜீவியின் டச்...<br /> ஜீவி சாரின் வித்தியாசமான பதிவிலும் ஜீவியின் டச் தெரிகிறது வாழ்த்துக்கள் ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25556643228258191692016-02-13T02:54:11.320-05:002016-02-13T02:54:11.320-05:00@ கீதா சாம்பசிவம்
வெளியில் 'நல்ல சாப்பாடு'...@ கீதா சாம்பசிவம்<br /><br />வெளியில் 'நல்ல சாப்பாடு'என்று எதுவுமில்லை என்பது என் கருத்து. என் அலுவலக பணிக்காலத்தில் ஏறத்தாழ 22 வருடங்கள் தொடர்ந்து உணவகங்களில் சாப்பிட்டவனின் கருத்து இது. உணவகங்களில் உணவுப் பொருட்கள் தயாராகும் இடத்தைப் பார்த்திருக்கிறீர்களா? <br /><br />வீட்டு சாப்பாடு ஜீரணத்திற்கு பழக்கப்பட்டு விடுவதும் ஒரு காரணம். ஒத்துக்கொள்ளும், ஒத்துக்கொள்ளாதது தெரிந்து சமைக்கற சமையல். வெளியிடங்களுக்குப் போகும் பொழுது வேறு வழியில்லை என்பதைத் தவிர 'நல்ல சாப்பாடு' என்று குறிப்பிட்டு நீங்கள் சொல்வது புரியவில்லை.'நல்ல சாப்பாடு'க்கு இலக்கணம் தான் என்ன?<br /><br />இளமைப் பருவத்தில் தொந்தரவாகத் தெரியாததின் பலனை முதுமையில் அறுவடை செய்கிறோம். நல்லது--அல்லாததை அவரவர் ஜீரண மண்டலம் தாம் தீர்மானிக்கின்றன. ஒருவருக்கு தொந்தரவு கொடுக்காதது இன்னொருவருக்கு இன்னலாகிப் போகும். ஆக இதிலும் நல்லது என்ற தேர்வுக்கு எதுவும் இல்லாது போகிறது!<br /><br />இந்த மாதிரி சுற்றுலாக்களில் சுற்றுலா என்பது முக்கியமாகும் பொழுது வேறு வழியில்லை என்று இதையெல்லாம் சகித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்; பக்தி சுற்றுலாவா கேட்கவே வேண்டாம்! பக்திக்கு ஆரம்பப் படிக்கட்டு, சகிப்பு தான்! ஆக, பூரண பக்தி வாய்க்க அதை இங்கு அனுபவப்பாடமாக பழகிக் கொள்ளலாம்! இல்லை, 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி' கதை தான்! இதான் இன்றைய நிலை!<br /><br />வெளிநாடுகளில் ஏதாவது சுற்றுலா தலங்களில் 'டேரா' போட்டோமென்றால் பொருட்கள் வாங்கி தங்குமிடங்களில் அத்தனை வசதிகளுடன் நாமே சமைத்துக் கொள்ள வழியிருக்கிறது. அதன் சுகமே தனி. (நம்மவர்கள் இங்கு வந்தும் சமையலா என்று முகத்தைச் சுளிப்பார்கள் என்பது வேறு விஷயம்.) ஒருவர் தேங்காய் துருவ, இன்னொருவர் காய் நறுக்க, எலெக்டிரிக் அடுப்பு பக்கம் மாற்றி மாற்றி இருவர் என்று--- அத்தனை பேரும் குளித்து டாணென்று எட்டு மணிக்கெல்லாம் சுற்றிப் பார்க்க வெளியே கிளம்பி விடலாம். சுற்று வட்டார பச்சைப் பசுமையில் மனமெல்லாம் குதூகலிக்கும்.<br /><br />நார்த் கரோலினா மலைப்பகுதியில் இந்த மாதிரியான ஒரு தங்குமிடத்தை ஒரு வார காலத்திற்கு வாடகை எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தோம். 'உலகம் பிறந்தது நமக்காக' என்று உணர்ந்தோம்.<br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-66046750713519929312016-02-13T01:45:13.305-05:002016-02-13T01:45:13.305-05:00@ வை. கோபாலகிருஷ்ணன்
வாங்கோ, வைகோ சார்! ஒப்பீடு ம...@ வை. கோபாலகிருஷ்ணன்<br /><br />வாங்கோ, வைகோ சார்! ஒப்பீடு மாதிரி இல்லை. அவரவர் தங்கள் பதிவுகளைப் பெரும்பாலும் எப்படி அமைக்கிறார்கள் என்பதைச் சொல்ல வந்தது அவர்களைப் பற்றியும் நான் உணர்ந்த குறிப்புகளைக் கொடுத்ததினால் அப்படித் தோற்றம் கொடுக்கிறது, போலும்.<br /><br />ஆனால் ஒன்றுபடும் விஷயத்தைத் தேர்ந்தெடுத்தது உண்மை. <br /><br />'வாணலியில் போட்டேன், வதக்கினேன், எடுத்து வைத்தேன்' என்று ரொம்ப இயல்பாகச் சொன்னவர்கள் செய்த சமையல் ஒரு காலத்தில் தேவாமிருதமாக இருந்தது. சமையல் என்பது இயல்பான ஒரு செயலாக இருந்தது. போட்டதை எடுத்துச் சாப்பிட்டோமே தவிர அதில் அதிகப்படியான கவனம் பதிந்ததில்லை. அதிக முக்கிய்த்துவம் கொடுத்ததில்லை. இப்பொழுதெல்லாம் உணவைப் பற்றிய கவனம் அதிகமாகியிருக்கிறது. உண்டபின் அதனால் ஏற்படும் விளைவுகள் தாம் கீதாம்மா சொல்லியிருக்கிற மாதிரி அதில் கவனம் கொள்ள நேரிட்டிருக்கிறது. <br /><br />புத்தகச் சந்தைகளில் கூட சமையல் புத்தகங்களின் விற்பனை தான் உச்சம்! இணையப் பதிவுகளில் கூட அதான் அதிகம் போலிருக்கு! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-18703056242502472982016-02-13T01:00:26.172-05:002016-02-13T01:00:26.172-05:00@ ஸ்ரீராம்
அரைத்த மாவையை அரைக்காமல், புதுப்புது ஐ...@ ஸ்ரீராம்<br /><br />அரைத்த மாவையை அரைக்காமல், புதுப்புது ஐடியாக்கள் கிடைக்கும் போதே குஷி தான், இல்லையா? ஒரு பதிவர் பார்வையில் மிகச் சரியாகப் பார்த்திருக்கிறீர்கள். இதே கோண்த்தில் 'எங்கள் பிளாக்'கில் அவ்வவ்போது நீங்கள் பரிசோதித்துப் பார்ப்பவ்பைகளை ஆர்வத்துடன் நானும் பார்த்து வியப்பதுண்டு.<br /><br />சமீபத்திய உதாரணம்: 'கேட்டு வாங்கிப் போடும் கதைகள்'. செவ்வாய்க் கிழமை அதிகாலையிலேயே இந்த வாரம் யாரோ என்கிற ஆவலைக் கிளப்புகிற அளவுக்கு வாசகர்களைக் கவரந்த தொடர் பதிவு இது.<br /><br />ரமணி சார் பதிவுகளுக்குப் போய்ப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி. அப்பாதுரை சாரை இப்பொழுதெல்லாம் பார்க்க முடியாத குறை இருக்கத்தான் செய்கிறது. நினைக்கும் சந்தர்ப்பங்களில் அவர் எழுத்துக்களை நினைத்துக் கொள்வது தான் அவருக்கான வெற்றி. <br /><br />நன்றி ஸ்ரீராம்! !ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-58613357383805242862016-02-12T07:09:19.860-05:002016-02-12T07:09:19.860-05:00எங்கே என்னோட கருத்து? நல்லவேளையா அதை சேமிச்சு வைச்...எங்கே என்னோட கருத்து? நல்லவேளையா அதை சேமிச்சு வைச்சிருந்தேன். ஆகையால் மீண்டும் கொடுக்கிறேன்.<br /><br />//வாசகர்களோடு வாசகராக ஒத்த ரசனையில் பயணிப்பது ஜிஎம்பீ சாருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.. என்று தெரிகிறது.// <br /><br /><br />இருக்கலாம் ஐயா! ஆனால் என்னோட கருத்தில் எனக்கு மாற்றமில்லை. ஏனெனில் பலரும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றை நிறைத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஹோட்டல் சாப்பாடு சாப்பிட முடியாத இடங்களில் நான் பெரும்பாலும் பழச்சாறு, பழங்கள் என்று சாப்பிட்டதைக் கூடக் குறிப்பிட்டிருப்பேன். அத்தகைய பயணங்களில் அயோத்தி, திருக்கயிலைப் பயணம், பத்ரிநாத் பயணம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. சித்ரகூடத்தில் எங்கோ சாலைஓர உணவு விடுதியில் வாங்கிய உணவைக் குப்பையில் போட நேர்ந்தது. அடுத்துச் செல்பவர்கள் இதைப் படித்தால் ஓரளவு முன் ஜாக்கிரதையாக இருக்கலாமே! நல்ல உணவு எங்கே கிடைக்கும் என்பதை நாம் சொல்லிவிட்டால் தனிப்பட்ட முறையில் எங்களைப் போல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வசதி! நான் இதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறேன். அநேகமாக எல்லாப் பயணங்களிலும் இதைக் குறிப்பிட்டிருப்பேன். குழுவாகப் பயணித்தால் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களே சாப்பாடுப் பொறுப்பை ஏற்பார்கள். அப்படிப் பயணித்த ஓரிரு பயணங்களில் அவற்றையும் குறிப்பிட்டிருக்கேன். இதிலிருந்து இந்தக் குழுவோடு பயணம் செய்யலாமா கூடாத என்னும் முடிவுக்கும் பயணிகள் வர ஏதுவாக இருக்கும். :)<br /><br /><br />ஃபாலோ அப் கருத்துகள் வருகின்றன. எதுக்கும் ஸ்பாமில் தேடிப் பார்த்துடுங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-13253224042845907362016-02-12T06:54:06.088-05:002016-02-12T06:54:06.088-05:00இரு பதிவர்களின் தனித்திறமைகள் + இயல்புகள் பற்றிய த...இரு பதிவர்களின் தனித்திறமைகள் + இயல்புகள் பற்றிய தங்களின் ஒப்பீடும், தாங்கள் அவர்களிடம் கேட்டுள்ள கேள்விகளும், அவர்கள் தங்களுக்குக் கொடுத்துள்ள பதில்களுமாக தங்களின் இந்தப் பதிவு வித்யாசமாகத்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், சார். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-59026903778883079852016-02-12T05:34:30.122-05:002016-02-12T05:34:30.122-05:00//வாசகர்களோடு வாசகராக ஒத்த ரசனையில் பயணிப்பது ஜிஎம...//வாசகர்களோடு வாசகராக ஒத்த ரசனையில் பயணிப்பது ஜிஎம்பீ சாருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.. என்று தெரிகிறது.//<br /><br />இருக்கலாம் ஐயா! ஆனால் என்னோட கருத்தில் எனக்கு மாற்றமில்லை. ஏனெனில் பலரும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றை நிறைத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஹோட்டல் சாப்பாடு சாப்பிட முடியாத இடங்களில் நான் பெரும்பாலும் பழச்சாறு, பழங்கள் என்று சாப்பிட்டதைக் கூடக் குறிப்பிட்டிருப்பேன். அத்தகைய பயணங்களில் அயோத்தி, திருக்கயிலைப் பயணம், பத்ரிநாத் பயணம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. சித்ரகூடத்தில் எங்கோ சாலைஓர உணவு விடுதியில் வாங்கிய உணவைக் குப்பையில் போட நேர்ந்தது. அடுத்துச் செல்பவர்கள் இதைப் படித்தால் ஓரளவு முன் ஜாக்கிரதையாக இருக்கலாமே! நல்ல உணவு எங்கே கிடைக்கும் என்பதை நாம் சொல்லிவிட்டால் தனிப்பட்ட முறையில் எங்களைப் போல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வசதி! நான் இதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறேன். அநேகமாக எல்லாப் பயணங்களிலும் இதைக் குறிப்பிட்டிருப்பேன். குழுவாகப் பயணித்தால் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களே சாப்பாடுப் பொறுப்பை ஏற்பார்கள். அப்படிப் பயணித்த ஓரிரு பயணங்களில் அவற்றையும் குறிப்பிட்டிருக்கேன். இதிலிருந்து இந்தக் குழுவோடு பயணம் செய்யலாமா கூடாத என்னும் முடிவுக்கும் பயணிகள் வர ஏதுவாக இருக்கும். :)<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91074154050289696252016-02-12T05:03:37.038-05:002016-02-12T05:03:37.038-05:00இரண்டு பதிவுகளிலும் இந்தக் கேள்வி பதில்களை நானும் ...இரண்டு பதிவுகளிலும் இந்தக் கேள்வி பதில்களை நானும் படித்தேன். புதுப்புது ஐடியாக்கள் பதிவு போட உதவுகின்றன. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' தளாதிபர் ரமணி ஸார் கூட இப்போது சக பதிவர்கள் பற்றி எழுதி வருகிறார். இதேபோல் அப்பாதுரை வெண்பா பாடியது நினைவிருக்கும். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com