tag:blogger.com,1999:blog-7223516172590239990.post7928953710383924539..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: அழகிய தமிழ் மொழி இது!....ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-47278345500522267812017-01-15T09:17:31.571-05:002017-01-15T09:17:31.571-05:00எவ்வளவு நெடிய வரலாறு கொண்டது தமிழ் மொழி. நீங்களும்...எவ்வளவு நெடிய வரலாறு கொண்டது தமிழ் மொழி. நீங்களும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுகிறது. அதிலும், ஒவ்வொரு பகுதிக்கும் தேடித் தேடிப் படங்களைத் தேர்ந்தெடுத்து இணைத்துள்ளது பாராட்டும்படி இருக்கிறது. பின்னூட்டங்களும் அதற்குப் பதிலிறுக்கும் பின்னூட்டங்களும் வாசிப்பு அனுபவத்தை மிகுதியாக்குகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-42981846973821670982016-10-20T11:26:33.177-04:002016-10-20T11:26:33.177-04:00@ தி. தமிழ் இளங்கோ
சரியாகச் சொன்னீர்கள். வஞ்சி க...@ தி. தமிழ் இளங்கோ<br /><br />சரியாகச் சொன்னீர்கள். வஞ்சி காண்டமும் போகப்போக சூடு பிடித்து விடும். நடுவில் இடையில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டாலும் தொடர்ந்து பின் தொடர்ந்து வருவதற்கு நன்றி, நண்பரே!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25443170876347126372016-10-20T11:24:38.885-04:002016-10-20T11:24:38.885-04:00@ தளிர் சுரேஷ்
நன்றி, சுரேஷ் சார். வாசித்து வருவத...@ தளிர் சுரேஷ்<br /><br />நன்றி, சுரேஷ் சார். வாசித்து வருவதற்கு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-1229912164935462812016-10-20T11:23:40.730-04:002016-10-20T11:23:40.730-04:00@ கோமதி அரசு
தொடர்ந்து வாசித்து வருவதோடு அல்லாமல...@ கோமதி அரசு<br /><br />தொடர்ந்து வாசித்து வருவதோடு அல்லாமல் தங்கள் கருத்துகளையும் தவறாது அங்கங்கு பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-68168090920654600632016-10-18T20:32:55.673-04:002016-10-18T20:32:55.673-04:00வஞ்சிக் காண்டம் ஒரு வரலாற்றுக் காண்டம் என்பது சரித...வஞ்சிக் காண்டம் ஒரு வரலாற்றுக் காண்டம் என்பது சரிதான்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-60341075968211163272016-10-17T09:01:31.889-04:002016-10-17T09:01:31.889-04:00@ தளிர் சுரேஷ்
தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்...@ தளிர் சுரேஷ்<br /><br />தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி, சுரேஷ்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-7233704936663377382016-10-15T12:00:28.287-04:002016-10-15T12:00:28.287-04:00அருமையாக செல்கிறது! வரலாற்று தகவல்கள் சிறப்பு! நன்...அருமையாக செல்கிறது! வரலாற்று தகவல்கள் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-76055476144036322852016-10-15T03:53:21.363-04:002016-10-15T03:53:21.363-04:00@ கோமதி அரசு
விட்டு விடாமல் தாங்கள் தொடர்ந்து படி...@ கோமதி அரசு<br /><br />விட்டு விடாமல் தாங்கள் தொடர்ந்து படித்து கருத்துக்களைக் கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி, கோமதிம்மா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-36101245224567610882016-10-13T22:35:28.065-04:002016-10-13T22:35:28.065-04:00அருமையான தொடர்.
இந்த பகுதியை பாடத்தில் படித்து இரு...அருமையான தொடர்.<br />இந்த பகுதியை பாடத்தில் படித்து இருக்கிறேன். கதையாக படித்து இருந்தாலும்<br />உங்கள் தளத்தில் படிக்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது. மன்னரின் வெற்றிக்கு , மன்னரின் நல்லாட்சிக்கு உடன் இருப்பவர்களும் உறுதுணையாக இருந்தால் தான் முடியும் என்பதை அழகாய் சொல்லி செல்கிறீர்கள்.<br />மன்னன் நல்லாட்சி செய்தால் மக்களும் நல்லவர்களாய் நலமாக இருப்பார்கள்.<br />தொடர்கிறேன்.<br /><br />சிலநாட்களாய் இணையம் வர முடியவில்லை. உங்கள் பதிவுகளை எல்லாம் இனி தான் படிக்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-8967217214726061742016-10-12T09:53:57.879-04:002016-10-12T09:53:57.879-04:00@ வே. நடனசபாபதி
மன்னர் ஆட்சியில் மக்கள் ஆட்சி வ...@ வே. நடனசபாபதி<br /><br />மன்னர் ஆட்சியில் மக்கள் ஆட்சி விழுமியங்களும் மக்கள் ஆட்சியில் மன்னர் ஆட்சி நினைப்புகளும் மேலோங்குவது எக்காலத்தும் ஆட்சியாளர்களைப் பொறுத்தே அமைகிறது என்றும் தெரிகிறது. <br /><br />'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பது மோசிக்கீரனாரின் முது மொழி. இப்படியான மன்னர்களை புறநானூற்றுக் காலம் படம் பிடித்துக் காட்டுகிறது.<br /><br />பொழிய வேண்டிய காலத்தில் மழை பொய்ப்பினும் அதனால் நாட்டின் செழுமைக்குக் காரணமான விளைச்சல் குறைந்தாலும், அதன் காரணாமாக மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்தால் அதற்கான பழி மன்னனையேச் சாரும் என்று மன்னன் மனசார நம்பினான். <br /><br />மாமன்னன் செங்குட்டுவன் கண்ணகியின் சிலைப் படிமத்திற்கு கல் எடுத்து வர வட புலம் கிளம்பியதுமே என் நினைவுகள் பின் நோக்கி நகர்ந்தன.<br /><br />சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் முற்றுபுள்ளி இல்லாத ஒன்றரைப்பக்க ஒரே வரியில் வரும் பகுதி ஒன்று உண்டு. 'குமரியொடு வடவிமயத்து.. (என்று ஆரம்பிக்கும் கவிதை வரி) செங்குட்டுவர்க்குத் திறம்முரைப்பர் மன். (என்று முடியும்)<br /><br />அதில் 'உருள்கின்ற மணிவட்டை குணில் கொண்டு துரந்தது போல்' என்று ஒரு வரி.<br /><br />இயல்பாகவே உருளும் ஒரு வளைத்தை, ஒரு கோல் கொண்டு செலுத்தியது போல' என்று இதற்கு அர்த்தம். இந்த ஒன்றை வரியை வைத்துக் கொண்டு, எனது ஒன்பதாவது வகுப்பில் தமிழாசிரியர் கங்காதரன் அவர்கள் ஒரு வகுப்பு பூராவும் பலவித மேற்கோள்களைக் காட்டி பாடம் நடத்தினார். அவரது மேதமை மறக்க முடிதாத ஒன்று.<br />சேலம் பாரதிவித்தியாலயா பள்ளியில் அவர் பாடம் எடுத்தது-- இன்றைக்கும் அவர் குரல் நினைவுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.<br /><br />'உருள்கின்ற் மணி வட்டைக்<br />குணில் கொண்டு துரந்ததுபோல்,<br />‘இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்’<br />என்ற வார்த்தை இடம் துரப்ப;<br />ஆரிய நாட்டு அரசு ஓட்டி,<br />அவர் முடித்தலை அணங்கு ஆகிய<br />பேர் இமயக் கல் சுமத்தி... '<br /><br />சிலப்பதிகாரம் எளிமையான வரிகளைக் கொண்டது. அதற்கு உரை கூடத் தேவையில்லை.<br /><br />இன்றைய வழக்கத்தில் இருக்கும் புரியா புதிர் வரிக் கவிதைகளை விட மிக மிக எளிமையானது. <br /><br />சமீபத்தில் ஆனந்த விக்டன் பத்திரிகையில் வாசித்த இன்றைய புரியாக் கவிதை ஒன்றை, 'உங்களுக்காவது புரிகிறதா?' என்று வாசிக்கிறவர்களைக் கேட்டு வேறொரு இடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அவசியம் வாசித்துப் பாருங்கள்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-54510670942153756712016-10-12T08:36:38.815-04:002016-10-12T08:36:38.815-04:00@ Dr. B. Jambulingam
முனைவர் ஐயா! தாங்களும் கூட ...@ Dr. B. Jambulingam<br /><br />முனைவர் ஐயா! தாங்களும் கூட வருவது எனக்கு பெரும் பலம். சிலம்பும் என் மனமும் வழிநடத்துகையில் எழுத்து போகும் போக்கில் எங்காவது கருத்துத் தவறு ஏற்பட்டுவிடின் அதைத் திருத்தி செம்மைபடுத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்ற அதீதத் துணிச்சலில் எழுதிக் கொண்டு வருகிறேன்.<br /><br />இது புத்தகமாவதற்கு முன்னான வெள்ளோடத்திலேயே தவறுகள் களாய்யபடுமாயின் அது பிற்பாடு கவனித்துத் திருத்தும் சுமையை இப்போதே குறைக்கும் என்ற பெரும் நன்மையும் இதில் இருக்கிறது.<br /><br />தங்கள் உணர்வு பூர்வமான வரிகளுக்கு நன்றி. அதனைத் தமிழுக்கான சொல்லழகின் பெருமையாகக் கொள்கிறேன். அவசரமேயில்லை. தாங்கள் நேரம் கிடைக்கும் பொழுது வாசித்து வழிநடத்த வேண்டுகிறேன். மிக்க நன்றி, ஐயா! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-20014769053513263292016-10-12T08:20:22.188-04:002016-10-12T08:20:22.188-04:00 //குடிமக்கள் அறம் சார்ந்து வாழுதலுக்கும், கொடுங்... //குடிமக்கள் அறம் சார்ந்து வாழுதலுக்கும், கொடுங்கோன்மை அறவே இல்லாது ஆட்சி நடத்துவதற்கும் பொறுப்பேற்கும் மன்னர் குடியில் பிறத்தல் துன்பமே அல்லாது தொழுதற்கு ஏதுமில்லை.//<br /><br />இந்த வரிகள் தற்கால ஆட்சியாளர்களுக்கும் சொல்லப்பட்டது போலவே இருக்கிறது, <br /><br />பறை அறிவிப்பு மூலம், அழகு தமிழில் சேரன் செங்குட்டுவனின் வட புல பயணம் பற்றி அறிவித்த பின், நடந்ததை அறிய காத்திருக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-22564404756085482862016-10-12T07:47:52.117-04:002016-10-12T07:47:52.117-04:00தங்களின் பதிவுகள் எங்களை நிகழ்விடத்திற்கே கொண்டுசெ...தங்களின் பதிவுகள் எங்களை நிகழ்விடத்திற்கே கொண்டுசென்றுவிடுகிறது. எழுத்தின் நடையும், நிகழ்வுகளின் நகர்வும் இயல்பாக எங்களை அவ்வாறு அழைத்துச்செல்கிறது. தொடர்ந்து படிக்கிறேன். நேரம் இருக்கும்போதுதான் மறுமொழி இடமுடிகிறது. பொறுத்துக்கொள்க.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25479596837636783622016-10-11T12:27:21.351-04:002016-10-11T12:27:21.351-04:00@ வை.கோ.
நல்ல பகுதியைத் தேர்ந்தெடுத்துச் சொல்லியி...@ வை.கோ.<br /><br />நல்ல பகுதியைத் தேர்ந்தெடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். தமிழ்ப் பாடப் புத்தகத்தில் அந்தக் காலத்தில் மனப்பாடப்பகுதியில் இந்த வரிகள் எல்லாம் பாட வரிகளாக வரும்.<br /><br />செங்குட்டுவன் சொல்வதாக வரும் இந்தப் பகுதியின் சிலம்பு வரிகளைச் சொல்லாமல் இருக்க மனசு கேட்கவில்லை. அது இதோ:<br /><br />மழை வளம் கரப்பின் வான்பேர் அச்சம்<br />பிழையுயி ரெய்திற் பெரும்பேர் அச்சம்<br />குடிபுரவு உண்டும் கொடுங்கோ லஞ்சி<br />மன்பதைக் காக்கும் நன்குடிப் பிறத்தல்<br />துன்ப மல்லது தொழுதக் வில்லெனத்....<br /><br />தொடர்ந்து வாசித்துப் பின்னூட்டம் இடுவது மேலும் எழுத உற்சாகம் அளிக்கிறது. நன்றி, கோபு சார்!<br /> <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-59065571841259403672016-10-11T12:01:54.016-04:002016-10-11T12:01:54.016-04:00//”மழை பெய்யாது பொய்க்குமாயின் அரசர்க்கு அதுவே மி...//”மழை பெய்யாது பொய்க்குமாயின் அரசர்க்கு அதுவே மிகப்பெரிய அச்சமாகிப் போகிறது.. யாதொரு காரணத்தினாலும் பிறவியெடுத்த உயிர்கள் வருந்துமாயின் அதுவே அரசர்க்கும் பேரச்சம்.. குடிமக்கள் அறம் சார்ந்து வாழுதலுக்கும், கொடுங்கோன்மை அறவே இல்லாது ஆட்சி நடத்துவதற்கும் பொறுப்பேற்கும் மன்னர் குடியில் பிறத்தல் துன்பமே அல்லாது தொழுதற்கு ஏதுமில்லை..” //<br /><br />ஆஹா !<br /><br />"அழகிய தமிழ் மொழி இது!...." கட்டுரை மேலும் அழகு நடை போட்டுச் செல்கிறது. தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com