tag:blogger.com,1999:blog-72235161725902399902024-03-05T14:38:31.702-05:00பூ வனம் எழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger321125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91569469860387202162021-04-20T03:42:00.000-04:002021-04-20T03:42:00.252-04:00மொழி<p> <span style="color: red;"> <b><span style="font-size: x-large;">11</span></b></span></p><p><span style="font-size: medium;"><span style="color: red;">எ</span><span>ன்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதலாம். எக்காலத்தும் மனிதன் தனித் தீவல்ல. அந்தத் தொன்மை காலத்தும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதே நியதி. உலகின் மற்ற நிலப்பகுதி வாழ் மக்களிடமிருந்து தமிழன் மட்டும் வேறுபட்டுத் தனித்திருந்தான் என்று கொள்வது வரலாற்று ரீதியான பிழை என்று கொண்டால் கி.மு. எட்டாம் நூற்றாண்டிற்கான உலக அளவிலான தொன்மை நாகரிகச் சிறப்புகளை அலச வேண்டியது கட்டாயமாகிறது.</span></span></p><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><span>இப்போதைக்கு நாம் ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டம் தலைச்சங்க, இடைச்சங்க காலம் மட்டுமே. </span><span>தொன்மையான இந்த காலத்துக்கான வரலாற்று சான்றுகளில் தான் பல்வேறுவிதமான மாறுபட்ட கருத்துக்களை வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டுள்ளார்கள்.</span></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் பார்த்தாலே ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த அஜாதசத்ரு கங்கைக் கரையில் பாடலிபுத்திரம் என்ற பெருநகரை நிர்மாணிக்கிறான். நந்த வம்சத்தின் கடைசி மன்னனான தன நந்தனுக்கும் அர்த்த சாஸ்திர புகழ் கெளடில்யர் என்னும் அந்தணருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக கெளடில்யர் சந்திரகுப்தன் துணையுடன் நடத்திய புரட்சியின் விளைவு மெளரிய பேரரசுக்கு வித்திடுகிறது. பாடலிபுத்திரம் மெளரிய ஆட்சியின் தலைநகராகிறது. இது நடந்தது கி.மு. 322 ஆண்டில்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><span>கிரேக்க மாமன்னன் அலெக்ஸாந்தரின் படைத்தளபதி செலுக்கஸ் நிகோடர் சிந்து ஆற்று சமவெளி வரை படையெடுத்து வந்த பொழுது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சந்திரகுப்தனுடன் நடந்த போரின் விளைவாக இரு பகுதியினருக்கும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாபின் சில பகுதிகள் மெளரிய பேரரசுடன் இணைக்கப்பட்டன. ஒரு நல்லிணக்க நட்பின் அடையாளமாக </span><span>செ.நிகோடரின் மகள் ஹெலனாவை </span><span>சந்திர குப்தர் மணம் முடித்தார். செலுக்கஸ் நிகோடரின் தூதுவராக மெகஸ்தனிஸ் மெளரிய பேரரசின் அரசவையை அலங்கரித்தார். மெகஸ்தனிஸின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலான இண்டிகாவும், கெளடில்யரின் அர்த்தசாத்திரமும் சந்திரகுப்தரின் ஆட்சி சிறப்பை நமக்கு தெரியப்படுத்தும் வரலாற்று ஆவணங்களாயின. அலெக்ஸாந்தரின் படையெடுப்பின் மிகச் சிறந்த விளவுகளில் ஒன்று கிரேக்க செலுக்கசிய மரபினர் வழிவந்த கலப்புத் திருமணங்களாகும்.</span></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><span>சந்திரகுப்த மெளரியரின் திருமகனார் பிந்துசாரர் சந்திர குப்தருக்கும், ஹெலனாவிற்கும் பிறந்தவராவார். </span><span>சந்திர குப்தனின் பேரன் அசோகன் கி.மு. 273-ல் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இவர் பிந்துசாரருக்கும் அவர் மனைவி சுமத்திராங்கிக்கும் பிறந்தவர். இந்திய துணைக்கண்டத்தின் தமிழக, கேரளப் பகுதியைத் தவிர்த்து கிட்டதட்ட மொத்த இந்திய நிலப்பரப்பும் மெளரிய பேரரசின் ஆட்சிக் குடைக்கீழ் வந்த காலம் இது.</span></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">பேரரசர் அசோகர் எதிர்கொண்ட முதல் போரும் முடிவுப் போரும் கலிங்கப் போரே. கங்கை ஆற்றிலிருந்து கோதாவரி ஆறு வரை விரிந்து கிடந்த பரந்த பூமி கலிங்கம். இந்தப் பகுதியின் வித்தியாசமான சிறப்பு சுதந்திர வேட்கை கொண்ட பழங்குடிகளின் வாழும் பூமியாக இருந்தது. இன்றைய ஒரிஸாவின் தயா ஆற்றங்கரையில் ஒன்றுபட்ட பழங்குடியினர் மிகத் துணிசலுடன் ஒரு பேரரசின் பிர்மாண்ட படையை எதிர் கொண்டனர். பல்லாயிரக் கணக்கான எளிய மக்களை காவு வாங்கிய ரத்த ஆறு ஓடிய வன்மப் போர் இது. கி.மு. 261 காலகட்டத்தில் நிகழ்ந்த கலிங்கப் போரின் துயரம் அசோகரின் மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்து எல்லா உயிர்களின் மேலுமான அன்பே மனிதகுலத்தின் ஆன்ம ஞானத்திற்கு வழிகாட்டல் என்ற கோட்பாட்டை சொந்த அனுபவத்தில் ஏற்றுஅசோகர் புத்தமதத்தைத் தழுவுகிறார். தன் மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் புத்த மதம் பரப்பும் ஞானத் தூதுவர்களாக இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">தென் இலங்கையில் ஜம்புகோளப்பட்டினம் என்ற கடல் சார்ந்த இடம். இன்றைய சம்புத்துறை இதுவே. இங்கே தான் சங்கமித்திரை தன் சகோதரன் மகேந்திரனுடன் ஒரு வெள்ளரசு மரக்கிளையுடன் வந்து சேர்கிறார்கள். அசோகனே இந்தக் மரக்கிளையுடன் தன் மக்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக பெளத்த வரலாற்று நூலான மகாவம்சத்தில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">கர்னாடகம் வரை அசோகரின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்து கிடந்தது. இலங்கைக்கு தன் மக்களை புத்த மதத்தைப் பரப்பும் நோக்கோடு அனுப்பும் அளவுக்கு இலங்கையின் அக்கால சூழல்களோடு அசோகருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. இடையில் இருந்த அந்நாளைய தென் தமிழக நிலப்பரப்பில் அசோகரின் செல்வாக்கின் நிலை என்ன என்பது தான் வரலாற்றின் பக்கங்களில் நாம் தேட வேண்டிய சேதி.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">கிட்டத்தட்ட இந்தக் காலம் தான் தமிழ் கூறு நல்லுலகில் தலை, இடை சங்கங்கள் இருந்த காலம்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><span>அசோகரைப் பற்றி ஏகப்பட்ட குறிப்புகள் சரித்திர பாடங்களில் </span><span>நான் வாசித்த 1950 பள்ளிப்பருவ காலகட்டங்களிலேயே உண்டு. அந்த அளவுக்கு சங்க காலங்களைப் பற்றிய தகவல்கள் இருந்ததா என்றால் வருத்தத்துடன் இல்லை என்றே சொல்ல வேண்டும். அன்றில்லை, இன்றாவது இருக்கிறதா என்றால் தெரியவில்லை. அது போகட்டும். அதை விட மெத்தனப்போக்கு என்னவென்றால் மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களே முதல், இடை சங்கங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் வேடிக்கையானவை. அல்லது மேலோட்டமானவை. </span></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">அவர்களை போல அல்லாமல், தமிழின் முதல், இடைச் சங்க காலத்தைப் பற்றி தீர்க்கமாகவே நாம் பார்ப்போம்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">================================================</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">"அரசனின் மகிழ்ச்சி அவனது குடிமக்களின் மகிழ்ச்சியில் உள்ளடக்கியுள்ளது.. அவனது நலம் அவர்களின் நலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவன் தனக்குத் திருப்தியளிக்கக் கூடிய ஒன்றை மட்டும் நல்லதென்று கருதக் கூடாது. குடிமக்களுக்கு எது நலனாகவும் அவர்களின் </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">திருப்தியாகவும் இருக்கக்கூடுமோ அதுவே தனக்கான திருப்தியாகவும் நலனாகவும் அவன் கொள்ள வேண்டும்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">--- கெளடில்யர்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">================================================</span></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">(வளரும்)</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"> </span></div>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-26111246022361958842021-03-27T08:49:00.001-04:002021-03-28T04:29:06.285-04:00மொழி<p> <span style="color: red; font-size: x-large;"> 10</span></p><p><br /></p><p><span style="font-size: medium;"><span style="color: red;">ச</span>மஸ்கிருதம் தேவ மொழியென்றால் அமிழ்தத் தமிழ் தெய்வ மொழி என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.</span></p><p><span style="font-size: medium;">பண்டைய தமிழன் தெய்வத்தைத் துதித்துப் பாடாதிருந்ததில்லை. சங்க காலத்தில் தெய்வத்தின் வழிபாடாகவே வண்ண வண்ண மலர்களாய் அர்ச்சிக்கப்பட்ட பாடல்கள்.. 'சங்க காலத்தோடு மட்டும் சொந்தம் கொண்டாடுவோம், சங்க காலத்து தமிழரின் தெய்வ வழிபாட்டை கண்டுக்க மாட்டோம்' என்பது காலத்தின் நிர்பந்தம் போலாயிற்று. </span></p><div style="text-align: left;"><span style="font-size: medium;">'<span style="color: red;">மாயோன் மேய காடுறை உலகமும்</span></span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">சேயோன் மேய மைவரை உலகமும்</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">வேந்தன் மேய தீம்புனல் உலகமும்</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">வருணன் மேய பெருமணல் உலகமும் </span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><span style="color: red;">சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே' </span>-- என்றும்</span></div><div style="text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs86lH-P7njyLA7rX-adS88CiolWmpzn2YkIF_Nl5Nvely6Od-YKE-bnMmG7OyAngx9Gf7EoBjFOgy1oMoj-URu9P33-4pkw8HaH-qWgjSH6n1p-ME6r7HyVgqkRIKo0DteugSHJ8rnpbw/s2048/%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1536" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs86lH-P7njyLA7rX-adS88CiolWmpzn2YkIF_Nl5Nvely6Od-YKE-bnMmG7OyAngx9Gf7EoBjFOgy1oMoj-URu9P33-4pkw8HaH-qWgjSH6n1p-ME6r7HyVgqkRIKo0DteugSHJ8rnpbw/s320/%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">பாலை நில கொற்றவை வழிபாடு குறித்து---</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">'<span style="color: red;">மறம் கடை கூட்டிய துடி நிலை. சிறந்த</span></span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">கொற்றவை நிலையும் அகத்திணை புறனே' </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"> <span style="color: #2b00fe;">(-- தொல். பொருளதிகார புறத்திணையியல்)</span></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">என்றும், வாழ்ந்த ஐவகை நில அமைப்புகளுக்கு ஏற்ப மாயோன், சேயோன், இந்திரன், வருணன், துர்க்கை என்று திணைநிலைத் தெய்வங்களை வழிபடும் வழக்கமிருந்திருக்கிறது என்பதற்கு ஆதார பூர்வமான எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><b><span style="color: red; font-size: medium;">கொடி நிலைக் கந்தழி வள்ளி என்ற</span></b></div><div style="text-align: left;"><b><span style="color: red; font-size: medium;">வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்</span></b></div><div style="text-align: left;"><b><span style="color: red; font-size: medium;">கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே</span></b></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"> <b><span style="color: #2b00fe;">(தொல். புறத்திணைவியல்: 85)</span></b></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUz6fdrvUd1MdQ_WeCKCaVwRkgUlttBzzSqZUmsZAE1WbITEeq2KL8ZPkM7AaJTNBqicFHiZe2ZPdPwaz4jEd5gKxIDbB5shdwK9VxXUFqpOpR2fgWspiaECyMusVV21YU2AuagqIhgkwF/s820/%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%2593%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF+%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="67" data-original-width="820" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUz6fdrvUd1MdQ_WeCKCaVwRkgUlttBzzSqZUmsZAE1WbITEeq2KL8ZPkM7AaJTNBqicFHiZe2ZPdPwaz4jEd5gKxIDbB5shdwK9VxXUFqpOpR2fgWspiaECyMusVV21YU2AuagqIhgkwF/s320/%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%2593%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF+%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg" width="320" /></a></div>கடந்து நிற்பவர் என்ற பொருளில் கடவுள் என்ற சொல் தொல்காப்பியத்திலேயே எடுத்தாளப்படுகிறது. 'தெய்வம் தான் தமிழரின் வழிபாடே தவிர கடவுள் இல்லை' என்று கடவுள் - தெய்வம் வார்த்தைகளையே வித்தியாசப்படுத்திய பெருங்கவிஞர் ஒருவரின் உரையைக் கேட்ட நேரத்து திகைப்பாய் இருந்தது, 'எம்மிடம் தயிர் தான் இருக்கிறது; மோர் இல்லை' என்கிற மாதிரியாக இது எனக்குத் தோன்றியது. ஏதோ தயிருக்கும் மோருக்கும் அவரளவில் வித்தியாசம் காணுகிறார் என்று நினைத்துக் கொண்டேன். மேற்கண்ட தொல்காப்பிய நூற்பா இப்பொழுது தெரிய வந்து, இதோ கடவுளும் தொல்காப்பிய காலத்தில் இருக்கிறரே என்று குஷியாயிற்று. </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">கடவுள், தெய்வம் எல்லாம் ஒன்று என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?.. இல்லை என்பது சில தமிழ்ப் பேரறிவாளர்களின் கருத்து. எல்லாம் வார்த்தைகளுக்குக் கொள்ளும் பொருள் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் தான். </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">'இயற்கையை தெய்வமாக வணங்கியவன் தமிழன்; தீயைத் தெய்வமாகப் போற்றியது ஆரியம்' என்று <b>ஆறு வித்தியாசம்</b> <b>காணுகிற மாதிரி</b> என்னன்னவோ மயக்கங்கள். தீ, இயற்கையின் வெளிப்பாடு இல்லையா, என்றால் அதெப்படி என்று ஆயிரத்தெட்டு வக்கணைகள்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><b><span style="color: red; font-size: medium;">'கொடி நிலைக் கந்தழி வள்ளி என்ற'</span></b></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><span style="color: red;">கொடிநிலை</span> என்றால் கதிரவன் (சூரியக் கடவுள்). 'ஆதித்யானாம் அஹம் விஷ்ணு' என்பது பகவத்கீதையில் கண்ணபிரான் வாக்கு. 'நானே சூரியனாய்த் திகழ்கிறேன்' என்று இதற்குப் பொருள். தமிழகத்தில் சூரியக் கடவுள் கோயில் கொண்டுள்ள குடந்தைக்கு அருகிலுள்ள தலம் சூரியனார் கோயில் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்திலோ உச்சிக் கிழான் கோட்டம் என்ற பெயர் சூரியனுக்கான கோயிலைச் சுட்டுகிறது. இன்றைய ஒடிசா மாநிலத்தில் கொனார்க்கில் அமைந்துள்ள சூரியனார் கோயில் பற்றி நாம் அறிவோம்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">தன் ஈர்ப்பு சக்தியால் அத்தனைக் கோள்களையும் ஆகர்ஷித்துப் பின்னிப் பிணைந்திருக்கும் நிலை 'கொடிநிலை'யாகி அதுவே காரணப் பெயராயிற்று.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">தண்கதிரை வாரிவழங்கி இராக்காலங்களில் பயிரைக் காத்து அருளுவதால் திங்கள் (சந்திரன்) வள்ளியாயிற்று.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">கந்தழி என்றால் நெருப்பு (அக்னி). நெருப்பு, தீ என்றால் உடன்பாடாகத் தெரிவது அக்னி என்றவுடனேயே முகச்சுளிப்பாகி விடுவதற்கு காரணம் இருக்கிறது. உண்மை என்பது உணர்வாக இருப்பினும் சமஸ்கிருதம் என்றால் ஒரு தயக்கத்துக்கு பிறகே ஏற்றுக்கொள்ள மனதில் சம்மதம் கிடைக்கிறது. இந்த சம்மதம் கிடைக்காததாலேயே கடலில் மூழ்கிய கடைச்சங்க காலத்திற்கு முந்தைய காலத்தை அப்படியான ஒரு பொற்காலம் இருந்ததே இல்லை என்று மறுக்க மனசைத் தயார்படுத்தியது.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">ஞாயிறு, தீ, திங்கள் ஆகிய மூன்றும் வடுநீங்கு சிறப்பு கொண்ட தெய்வங்கள் என்பது தொல்காப்பியனார் வாக்கு.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">பிற்காலத்தில் இதே நிலையை ஒட்டித் தான் 'வான் இனிமையுடைத்து, தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது, என்ற பாரதியாருக்கு தீக்குள் விரலை வைத்த பொழுதும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் உணர்ந்து இறைவனுடனான</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">நெருக்கத்தின் சுகம் பெறும் பேறு பெற்றார்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">தெய்வம் உணாவே மாமரம் புள்பறை</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">அவ்வகைப் பிறவும் கருவென மொழிப</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"> <span style="color: #2b00fe;">(தொல்காப்பியம். பொருள். அகத்திணையியல். 18)</span></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">இந்நூற்பாவிலிருந்து தொல்காப்பியர் காலத்து தெய்வம் என்பது வாழ்வின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது என்பதனை உணரலாம். மக்கள் வாழ்ந்த நிலம், அவரவர் தேவைகள் என்பவையின் அடிப்படையில் அவர்கள் தெய்வ வழிபாடு அமைந்திருக்கிறது.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">(தொடரும்)</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"> </span></div><div style="text-align: left;"><br /></div>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-22977829840441978042021-03-15T05:50:00.005-04:002021-03-15T08:51:30.635-04:00மொழி<p> <span style="color: red; font-size: x-large;"> 9</span></p><p><span style="font-size: medium;"><span style="color: red;">ச</span>ங்க இலக்கிய காலம் என்பது கி.மு. 500-லிருந்து கி.பி.200 வரை உள்ள காலப்பகுதியில் உருவான செவ்வியல் தமிழ் இலக்கிய படைப்புகளைக் குறிப்பிடும் கால கட்டமாகும். தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற நம் வசதிக்காக மூன்றாகப் பிரித்த மன்றங்கள் வளர்த்த தமிழின் மேன்மையான காலம் இது. </span></p><p><span style="font-size: medium;">தலைச்சங்க காலத்தில் சகோதரிகள் போல சமஸ்கிருதமும் தமிழும் ஒன்றாய் உறவாடிய மொழிகள் என்றும் அதற்கு ஆதாரங்களாய் தொல்காப்பிய அரங்கேற்றத்தில் அதங்கோட்டு ஆசானின் பங்கு, தொல்காப்பிய பாயிரம் சொல்லும் தகவல்கள் என்றெல்லாம் பார்த்தோமில்லையா?</span></p><p><span style="font-size: medium;">சமஸ்கிருத -- தமிழ் உறவுகளை சகிக்காத சிலர் இந்த சரித்திர உண்மைகளை புறந்தள்ளும் முனைப்பில் தலையாவது, இடையாவது, தமிழ்ச் சங்கம் என்று எதுவுமே இல்லை. எல்லாமே ஆதாரமற்ற கட்டுக்கதைகள் என்று தீர்மானமாக மறுத்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் வேடிக்கையானது.</span></p><p><span style="font-size: medium;">சங்கம் என்ற வார்த்தை தமிழிலேயே இல்லையாம். சங்கம் என்ற வார்த்தையே தமிழில் இல்லாத பொழுது தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று ஆகப்பெரிய கண்டுபிடிப்பாய் மனமறிந்த பொய்யை உண்மை போலச் சொல்லத் துணிந்தனர்.</span></p><p><span style="font-size: medium;">அதற்கு ஆதாரமாய் தொல்காப்பியத்தையே துணைக்குக் கொண்டது தான் வேடிக்கை. சங்கம் என்ற வார்த்தையின் முதல் எழுத்து, 'ச' என்ற எழுத்து இல்லையா?.. இந்த 'ச' முதல் எழுத்தாய் இருந்து தொடங்கும் சொற்களுக்கு சில வரையறைகள் உண்டு என்பதற்கு தொல்காப்பிய எடுத்துக்காட்டு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டனர்.</span></p><div style="text-align: left;"><span style="font-size: medium;">சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">அ ஐ ஒள எனும் மூன்றலங் கடையே</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"> </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"> (தொல்காப்பியம் 62)</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">அ ஐ ஒள என்னும் மூன்று எழுத்துகளோடு சேர்ந்து சகரம் முதலெழுத்தாக வராது. (உதாரணம்: ச, சை, செள) இந்த மூன்றைத் தவிர்த்தப் பிற ஒன்பது உயிர்களுடன் சேர்ந்து முதலெழுத்தாய் வரும் என்பது கருத்து.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">சகரக் கிளவி பற்றிய தொல்காப்பியரின் இந்த நூற்பாவிற்கு </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">உரையாக இளம்பூரணர் இரண்டு காரணங்களைச் சொல்வார்:</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">அ ஐ ஒள -- என்னும் மூன்று எழுத்துக்களோடு சேர்ந்து 'ச' என்ற எழுத்து முதலெழுத்தாக வருகின்ற சூழல்களில் அது சமஸ்கிருத எழுத்தின் பாதிப்பில் இருக்கும் என்பது இளம்பூரணர் கருத்து. இரண்டாவதாக இன்னொன்றையும் சொல்கிறார் அவர். 'கடி சொல் இல்லை, காலத்து படினே' (சொல்லதிகாரம் - 56) என்ற வரியை எடுத்துக் காட்டாகச் சொல்லி அவ்விதிப்படி அவை அமையும்' என்கிறார். </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">நச்சினார்கினியர் கருத்தும் இதுவே. சட்டி, சகடம் -- ஆகிய சொற்கள் தமிழ்ச் சொற்களே என்று தன் காலத்து வழக்கில் இருக்கும் சொற்களையும் இவர் எடுத்துக் காட்டுகிறார்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">வட சொல் கிளவி வட எழுத்து ஒரீஇ</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகுமே</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"> (தொல். சொல்லதிகாரம். 5)</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">என்பதும் தொல்காப்பியர் காட்டிய வழிதான்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">சமஸ்கிருத மொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் வடசொல் என்று தொல்காப்பியரே இலக்கணம் வகுத்து, சங்கம் என்ற சொல்லின் இருப்பிற்கு நியாயம் வழங்கியிருக்கையில் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல தலைச்சங்கம், இடைச்சங்கம் இவையெல்லாம் இருந்ததே இல்லை, எல்லாம் நம் கற்பனை என்றால் எப்படி?.. அந்த இரண்டு சங்கமும் கடற்கோளில் மூழ்கிப் போயிருக்கலாம். ஆனால் அந்த இரண்டு சங்கங்களிலும் படைக்கப்பட்ட இலக்கியங்கள், ஆகச்சிறந்த தொல்காப்பியம் இருக்கிறதே என்றால்... இருக்கும் அந்த இலக்கியங்களின் தொன்மை குறித்து கேள்வி எழுப்புவதில் கொண்டு போய் முடிக்கிறார்கள்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">ஆயிரம் இருந்தும் என்ன, சங்கம் என்ற ஒன்று இருந்ததே இல்லை, அது முழுக் கற்பனை என்ற வாதததை முன் வைத்கும் அளவுக்கு சமஸ்கிருத ஒவ்வாமை கொண்டிருந்தது உறுத்தலாகத் தான் இருக்கிறது.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">புறப்பொருள் வெண்பா மாலை என்றொரு நூல் உண்டு. அந்த நூலில் தமிழ்க்குடியின் மூத்த வரலாற்றைக் கொஞ்சமே உயர்வு நவிற்சியுடன் குறிப்பிடும் பாடல் ஒன்றுண்டு.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் -- கையகலக்</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">முன் தோன்றி மூத்த குடி!</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;"> (பு.வெ. மாலை -- கரந்தைப் படலம்)</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு முன் தோன்றிய மூத்த குடி இது' என்ற குரல் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்து அரசியல் மேடைகளில் ஒங்கி ஒலித்த குரல்... </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">அந்தக் காலம் வேறே! இந்தக் காலம் வேறே! இந்தக் கால மாற்றத் கோளாறுகளையும் இந்தப் பாடலின் முதல் வரி படம் பிடித்துக் காட்டுவது இன்னும் அதிசயம்! ஆதித்தமிழ் மொழிக்கு புகழ்மிகு புலவர்கள் சூட்டிய கிரீடங்களான சங்க இலக்கியக்களை பயிலாமலும், பயின்ற சிலரும் மறந்தே போவோம் என்று சூளுரைத்த மாதிரி மெளனம் பயில்வதும் மனம் போன போக்கில் மாற்றி வரலாற்றை திசைதிருப்ப முயல்வதுமான காலம் இது! </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><b><span style="font-size: medium;">சங்க இலக்கியங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு எழும்பிய தமிழ் மொழியின் இயல்பான வளர்ச்சி பிற்காலத்தில் எப்படியெல்லாம் மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது என்பதைத் துல்லியமாகப் பார்க்கலாம். </span></b></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">அகப்பொருளையும் இலக்கண வரையறைகளுக்கு உள்ளடக்கிய கி.பி. காலத்து நூலான இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு அக்காலத்துப் புலவரான நக்கீரர் என்பவர் எழுதிய உரையில் மூன்று சங்கங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகிறது. </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">ஒரு பருந்துப் பார்வையில் சங்க காலம் பற்றிய அடிப்படை குறிப்புகளை நம் நினைவில் கொள்வோம்:</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">தலைச்சங்கம் கடல் கொண்ட தென்மதுரையில்செயல்பட்டது. தலைச் சங்கத்தைத் தோற்றுவித்து பெருமை கொண்டவன் காய்சின வழுதி என்ற பாண்டிய மன்னன். தலைச்சங்க கால கட்டத்தின் இறுதியில் ஆட்சி புரிந்தவன் கடுங்கோன் என்ற பெயரிய பாண்டியன். இந்த நீண்ட காலத்தில் ஏறத்தாழ 449 புலவப் பெருந்தகைகள் மன்றத்தை அலங்கரித்ததாகத் தெரிகிறது.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">அக்காலத்து முக நாரை, முதுகுருகு, கனரியாவிரை, பரிபாடல் போன்ற நூல்களை பற்றி பிற்காலத்து இறையனார் களவியல் தெரியப்படுத்துகிறது. <span style="color: red;">தலைச்சங்க காலத்து முக நாரை என்ற இசைப் பற்றிய நூல் தான் தமிழின் முதல் படைப்பாக்கம். </span></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"> அகத்தியரின் அகத்தியம் தலைச்சங்க காலத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இலக்கண நூல் . இடைச்சங்க காலத்தில் அகத்தியத்தோடு தொல்காப்பியமும் சேர்ந்து கொள்கிறது. </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">காற்று வந்ததும் கொடி அசைந்ததா, இல்லை, கொடி அசந்ததும் காற்று வந்ததா போன்ற சிக்கலான கேள்வி, இலக்கியம் தோன்றியதும் தோன்றிய நூலுக்கு இலக்கணம் வகுக்கப் பட்டதா, இல்லை இலக்கண வழி காட்டல்களின் அடிப்படையில் இலக்கியம் உயிர்ப்பு கொண்டதா என்பது.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">இலக்கண அடிப்படையில் இலக்கியம் உருவானதாகக் கொள்வோம்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><span style="color: #444444;">எ</span>ட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் தான் சங்க நூல்களில் காலத்தால் முற்பட்டது. தலைச்சங்க காலத்து பழம்பெரும் சொத்து இது. </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">'<span style="color: red;">முதலூழி யிருதிக்கண் தென் மதுரையகத்து தலைச்சங்கத்து அகத்தியனாரும், இறையனாரும், குமர வேளும், முரஞ்சியூர் முடி நாகராயனாரும், நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்பர் எண்ணிறந்த பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களறியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து..' </span>என்ற அடியார்க்கு நல்லாரின் உரை பரிபாடலின் தலைச்சங்க காலத்துத் தொன்மையை உரைக்கும். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="color: red; font-size: medium;">ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை</span></div><div><span style="color: red; font-size: medium;">தீயுமிழ் திறனொடு முடிமிசை அணவர</span></div><div><span style="color: red; font-size: medium;">மாயுடை மலர் மார்பின் மையில்வால் வளைமேனிச்</span></div><div><span style="color: red; font-size: medium;">சேயுயிற் பணைமிசை எழிற்வேழம் ஏந்திய</span></div><div><span style="color: red; font-size: medium;">வாய் விளங்கும் வளை நாஞ்சில் ஒருகுழை ஒருவனை...</span></div><p><span style="font-size: medium;">-- என்று தொடங்கும் 70 பாடல்களைக் கொண்ட பண்ணிசை இலக்கியம் பரிபாடல். பரிகள் கால்களைப் பரிந்து விரைவது போல பண்ணிசை வரிகளால் பாக்கள் ஆனதால் பரிபாடல் என்று காரணப் பெயர் பெற்றது. 'பாய் பரிப் புரவி' என்று மதுரைக் காஞ்சி பரிபாடலின் புகழ் பாடும்.</span></p><p><span style="font-size: medium;">பரிபாடல் அமைந்த அழகைப் பார்ப்போம்:</span></p><p><span style="font-size: medium;">திருமாலுக்கு எட்டு பாடல்கள், மால் மருகனுக்கு 31 பாடல்கள், கொற்றவை காளி தேவிக்கு பாடல் ஒன்று, வையை நதிக்கு 26 பாடல்கள், பழம் பெருமை கொண்ட மதுரைக்கு நான்கு பாடல்கள் மொத்தம் எழுபது பாடல்கள் கொண்ட பழம்பெரும் நூலென்று இளையனார் களவியல் எடுத்தோதும்.</span></p><p><span style="font-size: medium;">அழிந்து படும் நிலையிலிருந்த ஓலைச்சுவடி பரிபாடல் பாடல்களை ஐயந்திரிபற சோதித்து 1889-வாக்கில் அச்சு வடிவம் ஏற்றியவர் தன்னேரில்லா தமிழர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள்.</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">(தொடரும்)</span></p>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77663562493734999512021-03-09T04:29:00.001-05:002021-03-09T07:28:46.907-05:00மொழி<p> <span style="color: red; font-size: x-large;"> 8</span></p><p><span style="font-size: medium;"><span style="color: red;">ப</span>ண்டைய தமிழோடு ஒன்றிக் கலந்த சமஸ்கிருதமும் தமிழைப் போலவே இலக்கண வளப்பம் நிறைந்த மொழி. </span></p><p><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">அஷ்டாத்யாயிக்கு முன்பே சமஸ்க்ருதம் வேறு சில இலக்கண நூல்களைப் பெற்றிருந்தது என்பதற்கான குறிப்புகளை அஷ்டாத்யாயிலேயே காணலாம். இது எட்டு அத்தியாயங்களை உள்ளடக்கிய ஆக்கம் ஆதலினால் அஷ்டாத்யாயி என்று அழைக்கப்படல் ஆயிற்று. தில்லை நடராஜ பெருமான் நடனமாடிய பொழுது அவரது உடுக்கையிலிருந்து புறப்பட்ட பதினாங்கு ஒலி வடிவுகள் எட்டு அத்தியாயங்களாயின என்று புராணக் கதை வழி சொல்லப்படுகிறது.</span></p><div style="text-align: left;"><span style="font-size: medium;"><b><span style="color: red;"><span style="font-family: Lora, Georgia, serif;">ஐந்த்³ரம்ʼ சாந்த்³ரம்ʼ காஸா²க்ருʼத்ஸ்னம் கௌமாரம்ʼ ஸா²கடாயனம்ʼ |<br /></span></span></b><b><span style="color: red;"><span style="font-family: Lora, Georgia, serif;">ஸாரஸ்வதம் சாபிஸ²லம்ʼ ஸா²கலம்ʼ பாணினீயகம்ʼ ||</span></span></b></span></div><p><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif;"><span style="font-size: medium;">-- என்று சமஸ்கிருத இலக்கண படைப்புகளுக்கு வழிகாட்டும் ஸ்லோகம் ஒன்று உண்டு.</span></span></p><p><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif;"><span style="font-size: medium;">வியாகரணம் என்றால் இலக்கணம். இந்திர வியாகரணம், சந்திர வியாகரணம், காஸாக்ருத்ஸ்னம், கெளமாரம், ஸாகடாயனம், ஸாரஸ்வதம், ஆபிஸலம், ஸாகலம், பாணினீயம் -- என்பன சமஸ்கிருத இலக்கண நூல்களாக அறியப்பட்டவை. இவற்றில் கெளமாரம் திருமுருக பெருமானானின் அருளால் படைப்பாக்கம் கொண்டது என்று அறியப்படுகிறது. கெளமாரம், கலாபம் என்றும் அழைக்கப் படுகிறது. கலாபம் என்றால் சமஸ்கிருதத்தில் மயில்.</span></span></p><p><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">ஐந்திரம் தான் இந்திர வியாகரணம். இந்த ஐந்திர வியாகரணத்தை ஒட்டித் தான் தொல்காப்பியம் ஆக்கமுற்றதாக தொல்காப்பியப் பாயிரம் பகின்றதை ஏற்கனவே பார்த்தோம்.</span></p><p><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">மேற்சொன்ன சமஸ்கிருத இலக்கண நூல்களில் பாணினியின் படைப்பாக்கமான அஷ்டாத்யாயி தான் இன்றும் காணக் கிடைக்கிறது. இந்த அரிய நூலை முனைவர் கு. மீனாட்சி அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து தமிழகத்து உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அதை நூலாகவும் வெளியிட்டிருக்கிறது. பாணினியின் அஷ்டாத்யாயி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்திருக்கிறேன். சென்னை தரமணியில் இருக்கும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் கு. மீனாட்சி அவர்களின் தமிழாக்கத்தில் மூன்று பாகங்களாய் அஷ்டாத்யாயி மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. </span></p><div style="text-align: left;"><span style="font-size: medium;"><span style="font-family: Lora, Georgia, serif;"><span style="color: red;">ச</span><span style="color: #444444;">மஸ்கிருதம் தேவ மொழி </span></span><span style="font-family: Lora, Georgia, serif;"><span style="color: #444444;">என்றால் நம் அருமைத் தமிழோ </span></span><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif;">தெய்வ மொழி. </span><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif;">இறையனாரும், முருக பெருமானும் தலைச்சங்கத்தைக் காத்து நின்ற கடவுளர்கள். தமிழனுக்கு இலக்கணமே தெய்வத்தின் புகழ் பாடுவது தான் என்று சொல்லும் அளவுக்கு இறை வழிபாட்டை உயிர் மூச்சாகக் கொண்டிருந்த இனம் இது. </span></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif;"><br /></span></span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">பழந்தமிழரின் தெய்வ வழிபாடுகளைப் பற்றிப் பேச விருப்பமில்லாது </span><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">போயின், சங்க </span><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: large;">இலக்கியங்களைப் பற்றிப் பேச முடியாமலேயே போகும். </span></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: large;">வாழ்வுக்கு அடிப்படை நிலம் தான். அந்த நிலப்பாகுபாடுகளை முன் நிறுத்தி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நிலப் பாங்குகளை அந்தந்த பகுதி மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட வகுத்த பழந்தமிழ் பண்பாட்டு அழகு வியக்கத் தக்கதாகும். தமிழர் வாழ்வு காத்த தெய்வங்களைப் பற்றிப் பார்ப்போம்:</span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: red; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">மாயோன் மேயக் காடுறை உலகமும்</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">சேயோன் மேய மைவரை உலகமும்</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">வேந்தன் மேய தீம்புனல் உலகமும்</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">வருணன் மேய பெருமணல் உலகமும்</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">முல்லைக் குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">சொல்லிய முறையால் சொல்லவும் படுமே..</span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">-- என்பது தொல்காப்பிய பொருளதிகாரச் செய்யுள்.</span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">நில அமைப்புகளையே திணைகளாகக் கொண்டு அந்தந்த நிலப் பகுதிகளுக்கான வழிபடும் தெய்வங்களையும் வகுத்து வணங்கிய தமிழரின் மாட்சியை துல்லியமாகப் படம் பிடித்துச் சொல்லும் அழகு நினைத்து நினைத்து இன்புறத் தக்கது.</span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம்</span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி</span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்</span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்</span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">முல்லை நிலத்திற்கு திருமாலை தெய்வமாக வரித்தும், குறிஞ்சிக்கு மால் மருகனை கடவுளாகக் கொண்டும், மருதத்திற்கு இந்திரனை தலைவனாகக் கொண்டும், </span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">நெய்தலுக்கு வருணனைத் தெய்வமாக வகுத்தும் பழந்தமிழரின் இயற்கையோடு இயந்த வழிப்பாட்டு முறை தொல்காப்பியரால் தெளிவு படுத்தப் படுகிறது.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">பைந்தமிழில் 'முருகு' என்றால் அழகு என்று பொருள். இயற்கையின் அழகுச் செடி கொடிகளாய் பூத்துச் செறியும் மலையும் மலைச்சாரலும் நிறைந்த குறிஞ்சி நிலத்திற்கு அந்த இயற்கை அழகையே வழிபடும் நிலையில் முருகன் தெய்வமானார்.</span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif;"><span style="font-size: medium;"><br /></span></span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif;"><span style="font-size: medium;">கோடை வெப்பத்தால் மாற்றுத் தோற்றம் கொள்ளும் இடம் பாலையாயிற்று. பாலை நிலத்திற்கான தெய்வத் தலைமை தொல்காப்பியத்தில் குறிப்பிடாவிட்டாலும் தொல்காப்பியம் பொருளதிகாரத் துணைத் திணையியலில்,</span></span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif;"><span style="font-size: medium;"><br /></span></span></div><div style="text-align: left;"><span style="font-family: Lora, Georgia, serif;"><b><span style="color: red; font-size: medium;">மறம்கடை கூட்டிய துடிநிலை, சிறந்த</span></b></span></div><div style="text-align: left;"><span style="font-family: Lora, Georgia, serif;"><b><span style="color: red; font-size: medium;">கொற்றவை நிலையும் அகத்திணை புறனே </span></b></span></div><div style="text-align: left;"><span style="font-family: Lora, Georgia, serif;"><b><span style="color: red; font-size: medium;"><br /></span></b></span></div><div style="text-align: left;"><span style="font-family: Lora, Georgia, serif;"><b><span style="color: red; font-size: medium;"> (தொல், புறத்திணை: 62) </span></b></span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif;"><span style="font-size: medium;"><br /></span></span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif; font-size: medium;">-- என்ற வரிகள் காணக் கிடைக்கின்றன.</span></div><div style="text-align: left;"><span style="color: #444444; font-family: Lora, Georgia, serif;"><span style="font-size: medium;"><br /></span></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">குறிஞ்சியும் முல்லையும் என்னதான் வளப்பச் செல்வம் பொருந்தியிருப்பின் நெடுநாள் மழையில்லாது தவிக்கும் நிலை ஏற்பட்டால் பாலையாகும் என்ற உண்மையை ஓர்ந்து அதுபற்றிய குறிப்பொன்றை சிலப்பதிகாரத்தில் பார்க்கலாம்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">சிலம்பின் மதுரை காண்டத்தின் ஆரம்பப் பகுதி தான் காடு காண் காதை. கவுந்தி அடிகளின் வழிகாட்டலுடன் கோவலனும் கண்ணகியும் உறையூரை விட்டு நீங்கி மதுரை மாநகர் நோக்கி வழிப்பயணம் மேற்கொண்ட பொழுது வழியில் குறுக்கிட்ட ஒரு சோலையினுள் நுழைகின்றனர். அங்கிருந்த மண்டபம் ஒன்றில் பாண்டியன் புகழ் பாடிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைச் சந்திக்கின்றனர். அவரிடம் "மாமறை முதல்வ! மதுரைச் செந்நெறி கூறுவீர்' எனக் கோவலன் கேட்க, </span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">".. முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து </span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்</span></div><div style="text-align: left;"><span style="color: red; font-size: medium;">பாலை என்பதோர் படிவம் கொள்ளும்..."</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">".. இத்தகைய வேனில் காலத்தே காரிகையுடன் கடும் பயணம் மேற்கொண்டீரே!" என்பார். முல்லையும் குறிஞ்சியும் நீண்ட காலம் மழை பொய்யாது காய்ந்து போயிருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதனை மாமறை முதல்வன் மூலமாக இளங்கோ அடிகளார் சுட்டிக் காட்டுகிறார்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">இத்தகைய இயற்கை மாறுபாடு காரணமாகவே முல்லைக்கும் குறிஞ்சிக்கும் கொற்றவை பொது தெய்வமாகிப் போனாள். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணனரும் பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவையே என்று உறுதி செய்கிறார்.</span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: left;"><span style="font-size: medium;">(தொடரும்)</span></div>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-23246979917707802872021-03-02T06:17:00.000-05:002021-03-02T06:17:57.948-05:00மொழி<p> <span style="color: red; font-size: x-large;"> 7</span></p><p><span style="font-size: medium;"><span style="color: red;">தொ</span>ல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனார் பற்றிய குறிப்புகளைக் கேட்டிருந்தார் ஸ்ரீராம். </span></p><p><span style="font-size: medium;">அதற்கு முன் தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் அரசவையில் அரங்கேறிய பொழுது அந்த சிறப்பான நிகழ்விற்கு தலைமை தாங்கிய அதங்கோட்டு ஆசானைப் பற்றி தெளிவு கண்டு விட்டு பனம்பாரனாருக்கு வருவோம்.</span></p><p><span style="font-size: medium;">அதங்கோட்டு ஆசானுக்கு அறிமுகமாய் 'நான்மறை முற்றிய' அதங்கோட்டு ஆசான் என்ற பரம்பாரனாரின் குறிப்பு வருகிறது. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தாம் நான்கு மறைகள் என்பது நமக்குத் தெரியும். சமஸ்கிருத மொழியில் அமைந்த இந்த நான்கு வேதங்களையும் முற்றும் கற்ற அதங்கோட்டு ஆசான் என்று பரம்பாரனார் அவரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தொல்காப்பிய</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-fNlmjgYHqCNN5DYZpIW2FJzjQExN5Rf-EUyDeYBXKbM9TNtYpMvKbKGcq5oectEd_x1DFDLJT_bvpI2_TTnrgcxGq9N93evw1EUddC36ANyS2YnkGCkItEW8Uta6rreXxj1L3JmpRnWZ/s4624/20210302_100931.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><span style="font-size: medium;"><img border="0" data-original-height="4624" data-original-width="3468" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-fNlmjgYHqCNN5DYZpIW2FJzjQExN5Rf-EUyDeYBXKbM9TNtYpMvKbKGcq5oectEd_x1DFDLJT_bvpI2_TTnrgcxGq9N93evw1EUddC36ANyS2YnkGCkItEW8Uta6rreXxj1L3JmpRnWZ/s320/20210302_100931.jpg" /></span></a></div><span style="font-size: medium;"><br /> எழுத்ததிகாரத்திற்கு உரைப் பாயிரம் எழுதிய இளம் பூரணரும் இதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறார். அன்றைய தமிழறிஞர்கள், தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஒன்றரக் கலந்தக் கல்வியாய் கற்றுப் புலமை பெற்றிருந்தார்கள் என்பதற்கு அதங்கோட்டு ஆசான் எடுத்துக் காட்டுமாகும்.</span><p></p><p><span style="font-size: medium;">இத்தகு மொழிப்புலமை பெற்ற அதங்கோட்டு ஆசான் தான் அந்த நிகழ்விற்கு தலைமையேற்று நடத்திச் செல்கிறார். தகுந்த சான்றோர்களின் மேற்பார்வையில் அவர்களின் ஒப்புதலுடன் தான் அரசவையில் அரிய நூல்கள் அரங்கேறின என்பதற்கு சான்றுகள் இவை.</span></p><p><span style="font-size: medium;">தொல்காப்பியம் அரங்கேறும் பொழுது எழுத்து, எழுத்து முறை இவற்றில் தமக்கேற்பட்ட சில ஐயங்களை தொல்காப்பியரிடம் கேட்டு தெளிவு கொள்கிறார் அதங்கோட்டு ஆசான். இவையெல்லாமே பனம்பாரனார் தம் பாயிரத்தில் சொல்லி நமக்குத் தெரிபவை.</span></p><p><span style="font-size: medium;">கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளுவன் கோடு (!) என்றொரு ஊர் உண்டு. இதுவே இன்று விளவன்கோடு என்று அழைக்கப் படுகிறது. இதன் அருகில் அமைந்த சிற்றூர் தான் அதங்கோடு. இந்த அதங்கோட்டில் இருக்கும் சூரிய முக்கு என்ற பகுதியில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. குழித்துறை தாமிரபரணி என்று அழைக்கிறார்கள்.. (இந்த இடம் பற்றிய மேலதிகத் தகவல்கள் நமது நெல்லைக்குத் தெரிந்திருக்கலாம்.) இந்தக் குழித்துறை தாமிரபரணி தான் பண்டைய சங்ககால பஃறுளி ஆற்றின் விட்ட குறை தொட்ட குறையாய் இன்றிருப்பது என்றும் சொல்வார்கள்.</span></p><p><span style="font-size: medium;">அடுத்து பாயிரம் பாடிய பனம்பாரனார் பற்றி.</span></p><p><span style="font-size: medium;">தொல்காப்பியரும் பனம்பாரனாரும் அகத்தியரிடம் பயின்ற ஒருசாலை மாணாக்கர்கள் என்று ஏற்கனவே தெரிந்திருந்தோம். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாத்தான் குளம் அருகில் பன்னம்பாறை என்றொரு சிற்றூர் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற கருத்தில் பனம்பாரனார் என்ற அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.</span></p><p><span style="font-size: medium;">இந்தி மொழி வேறு; சமஸ்கிருதம் வேறு. வடமொழி என்ற பொதுச் சுட்டலில் இரண்டையும் ஒன்றாகக் கருதி நாம் மயக்கம் கொள்கிறோம். சமஸ்கிருதம் தமிழைப் போலவே இலக்கணச் சிறப்பில் வளப்பம் நிறந்த மொழி. தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து கி.மு. காலங்களிலேயே செம்மொழிச் சிறப்புடன் தனித்தியங்கும் ஆற்றலுடன் இலக்கிய, இலக்கண வளம் நிறைந்து இயங்கின. இன்னொரு ஒப்புமை இவ்விரண்டு மொழிக்கும் என்னவென்றால் இரண்டுக்குமே மூல இலக்கணம் ஒன்றே தான்.</span></p><p><span style="font-size: medium;">ஐந்திரம் என்பது காலத்தால் முற்பட்ட சமஸ்கிருத இலக்கண நூலென்றும் இது இந்திரனால் ஆக்கப்பட்டது என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஐந்திரம் பற்றிய முதல் தகவல் குறிப்பைத் தந்தவர் ஆர்ய பட்டர் என்று சொல்லப்படுகிறது.</span></p><p><span style="font-size: medium;">சொல்லக் கேட்டது தானே தவிர, ஆர்ய பட்டர் என்ன குறிப்பு கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த இலக்கிய மேதைகள் ஐந்திரம் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.</span></p><p><span style="font-size: medium;">சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்ட முதல் பகுதி '.காடு காண் காதை'. கோவலன் கண்ணகியுடன் மதுரை புகுங்கால் வழித்துணையாகக் கிடைத்த கவுந்தி அடிகள், அவர்களுக்கு வழிகாட்டிச் செல்கிறார்:</span></p><p><span style="font-size: medium;">"...... அவ்வழி செல்லாது இடப்பக்க வழியாகச் செல்வீராயின் திருமாலிருஞ்சோலை மலையை அடைவீர்கள். அங்கே பிலத்துவ வழியொன்று உண்டு. அப்பிலத்தினுள்ளே புண்ணிய சரவணம், பலகாரணி, இட்ட சித்தி எனப் பெயர் கொண்ட மூன்று பொய்கைகள் உள்ளன. அதில் புண்ணிய சரவணம் என்கிற பொய்கையில் மூழ்கி நீராடுவீராயின், விண்ணவர் கோமானால் இயற்றப்பட்ட ஐந்திரம் என்னும் இலக்கண நூலைக் கற்றுத் தேர்ந்தவராவீர்..' என்று ஐந்திரத்தின் பெருமை பற்றிச் சொல்கிறார். </span></p><p><span style="font-size: medium;">கம்பனோ, அனுமன் ஐந்திரம் பற்றி அறிவான் என்று சொல்லி நம்மை வியக்க வைக்கிறார்.</span></p><p><span style="font-size: medium;">யுத்த காண்டத்தில் விபீஷணன் அடைக்கல படலம்:</span></p><p><span style="color: red; font-size: medium;">'இயைந்தன இயைந்தன இனையக் கூறலும்</span></p><p><span style="color: red; font-size: medium;">மயிந்தம் துயிந்தனும் என்னும் மாண்பினார்</span></p><p><span style="color: red; font-size: medium;">அயிந்திரம் நிறைந்தவ நானை ஏவலால்</span></p><p><span style="color: red; font-size: medium;">நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்..' </span></p><p><span style="font-size: medium;">-- என்பது கம்பன் வாக்கு. </span></p><p><span style="font-size: medium;">மயிந்தன், துயிந்தன் என்ற இரு வானரர்கள், ஐயிந்திர இலக்கண வழிகாட்டுதல்களை அறிந்த அனுமன் கட்டளையால் அங்கு வந்தனர் என்கிறார். இது படித்து யுத்த சாத்திர நுணுக்கங்களின் பாங்குகள் ஐந்திரத்தில் காணக் கிடைக்குமோ என்ற ஆவலும் நம்முள் தலையெடுக்கிறது.</span></p><p><span style="font-size: medium;">தொல்காப்பியப் பெருமான் அகத்தியத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றவர். அதே காலத்து சமஸ்கிருத இலக்கண நூலான ஐந்திரத்தின் சிறப்பையும் அறிந்தவர். இந்தச் சிறப்புகளையே அடித்தளமாகக் கொண்டு தன் மொழி ஆற்றலையும் ஆழப்பதிந்து தொல்காப்பியத்தை ஒரு முந்து நூலாகப் படைத்தருளியிருக்கிறார். சொல் அதிகாரம், எழுத்து அதிகாரம், பொருள் அதிகாரம் என்ற முப்பெரும் பிரிவுகளில் காப்பிய அழகோடு, தமிழ்த் தாய்க்கு அணிகலனாய் விளங்கும் ஒப்பற்ற நூல் தொல்காப்பியம்.</span></p><p><span style="font-size: medium;">சமஸ்கிருதத்தில் இந்திரனின் ஞானத்தில் விளைந்த ஐந்திரம் என்னும் இலக்கண முறையும், பாணினியின் உருவாக்கத்தில் விளைந்த பாணினீயம் என்ற வகையும் இருந்ததாகத் தெரிகிறது.</span></p><p><span style="font-size: medium;">இவ்வளவு சொல்லி விட்டு சமஸ்கிருத இலக்கண நூலான பாணினியின் அஷ்டாத்யாயி பற்றியும் சொல்லவில்லை என்றால் இந்தப் பகுதி நிறைவு கொள்ளாது. </span></p><p><span style="font-size: medium;">அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.</span></p><p><span style="font-size: medium;">(தொடரும்)</span></p><p><br /></p>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31349071948911762952021-02-26T08:44:00.004-05:002021-02-27T01:48:27.503-05:00மொழி<div><span style="color: red;"><b> <span style="font-size: x-large;">6 </span></b></span></div><span style="color: red; font-size: medium;"><b><div><span style="color: red;"><b><br /></b></span></div><span>வட வேங்கடம் தென் குமரி</span></b></span><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து </span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்</span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி</span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு</span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்</span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">புலம் தொகுத்தோனே போக்கு ஆறு பனுவல்</span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து</span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">அறங்கறை நாவின் நான் மறை முற்றிய </span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து</span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி</span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த</span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்</span></b></i></span></div><div style="text-align: left;"><span style="background-color: white; font-size: 17.5px;"><i><b><span style="color: red;">பல்புகழ் நிறுத்த படிமை யோனே..</span></b></i></span></div><p><span style="color: #202122;"><i><span style="background-color: white; font-size: 17.5px;">-</span><span style="background-color: white;"><span style="font-size: medium;">--- என்பது தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் வரிகள். பனம்பாரனார் பற்றிய மேலதிக விவரங்களைச் சொல்லுங்களேன் என்று சென்ற பகுதியில் ஸ்ரீராம் கேட்டிருந்தார்.</span></span></i></span></p><p><span style="background-color: white; color: #202122;"><span style="font-size: medium;"><i>பனம்பாரனார் பற்றி மட்டுமல்ல. தொல்காப்பியம் அரங்கேறிய அந்தச் சூழலையும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களையும் பற்றி விவரித்து விட்டு அடுத்த பகுதிக்குச் செல்வதே முறை என்று ஸ்ரீராம் சொன்ன பிறகு தான் உணர்ந்தேன். </i></span></span></p><p><span style="font-size: medium;">நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேறியதாக பாயிரக் குறிப்பு கூறுகிறது.</span></p><p><span style="font-size: medium;">யார் இந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பதிலிருந்து தொடங்கலாம்.</span></p><p><span style="font-size: medium;">பண்டைய தமிழ் இலக்கியங்களில் இன்றைய வாசிப்புக்கு வழி காட்டலாய் நல்லதொரு அம்சம் உண்டு. பெரும்பாலும் பெயர்கள் என்பது சம்பந்தப் பட்டவர்களைப் பற்றிய ஒரு குறிப்புடனேயே இருக்கும். </span></p><p><span style="font-size: medium;">தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் அதியஞ்சேரல், காய்தின வழுதி வடிவம் பல நின்ற நெடியோன், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், வெண் தேர் செழியன், சோழன் வளி தொழிலாண்ட உரவோன், சேரன் பல் யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும் பூண் சென்னி, ஒல்லையூர் பூதப் பாண்டியன் என்பது போல.</span></p><p><span style="font-size: medium;">-- மேற்குறித்த அத்தனை மன்னர்களும், கி.மு. காலத்தவர்கள் என்பது இன்னொரு வியப்பு. </span></p><p><span style="font-size: medium;">நிலந்தரு திருவிற் பாண்டியனும் அப்படித் தான். நிலம் தந்த பாண்டியன் என்று இந்தக் குறிப்பிலிருந்து தெரிகிறது.. கி.மு. 7-ம் நூற்றாண்டு இவன் காலம் என்று வரலாற்றியல் அறிஞர்கள் யூகிக்கிறார்கள். அப்படியானால் கி.மு. 7-ம் நூற்றாண்டில் தான் தொல்காப்பியம் அறங்கேறியதா?..</span></p><p><span style="font-size: medium;">கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலம் தலை, இடை, கடை என்ற மூன்று சங்கங்களும் இருந்த காலம். தலைச்சங்கம், தென் மதுரையிலும், இடைச்சங்கம் கபாட புரத்திலும், கடைச் சங்கம் இன்றைய மதுரையிலும் இருந்ததாகக் கொள்ளலாம். தென்மதுரையும், கபாடபுரமும் கடற்கோளால் கடலில் மூழ்கின என்பது கால மாற்றங்களிலும் நினைவில் கொள்ள வேண்டிய அம்சம். 'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள' என்பது சிலப்பதிகார வரிகள். கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் குமரி மலை என்றே அழைக்கப்பட்ட மலையும் இருந்ததாகத் தெரிகிறது.</span></p><p><span style="font-size: medium;">சங்ககாலம் பற்றிய பல்வேறு குழப்பச் சர்ச்சைகளுக்கிடையே தொல்காப்பியம் பற்றி முதல் முதலாய் பிரஸ்தாபிக்கும் இடைச் சங்ககால நூல் ஒன்றைப் பார்ப்போம்.</span></p><p><span style="font-size: medium;">இந்த நூலின் பெயர் <b>இறையனார் களவியல். </b> காதலுக்கும் இலக்கணம் வகுத்த தமிழனின் அகப்பொருள் சார்ந்த நூல். இறையனார் என்ற புலவரின் படைப்பாகையால் இறையனார் களவியல் என்றே குறிப்பிடுவது வழக்கமாயிற்று.. நக்கீரர் என்று பெயர் தரித்த புலவர் இந்நூலுக்கான உரையில் மூன்று சங்கங்களையும் பற்றிச் சொல்லும் செய்தி தான் முச்சங்கங்கள் பற்றி நமக்குக் கிடைக்கும் முதல் தகவல் அறிக்கையாகும்.</span></p><p><span style="font-size: medium;">தலைச் சங்கத்தில் கடவுளரும் முனிவர்களும் பெரும் பங்கு வகித்ததாக சொல்லப்படுகிறது. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் (சிவபெருமான்) தலைமையில் முருகவேள், அகத்தியர் , முரிஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்றோர் பங்கு கொண்ட மன்றம் இது. </span></p><p><span style="font-size: medium;">கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு மேலாக தலைச் சங்கம் செயலாற்றி வந்திருக்கிறது. தலைச் சங்க காலத்திலேயே அகத்தியரின் அகத்தியம் தமிழ் மொழிக்கு இலக்கண நூலாக இருந்து பெருமை பெற்றது. வேதங்களில் மிகப் பழைமையானது ரிக் வேதம். சமஸ்கிருத செய்யுள்களின் தொகுப்பு நூல் இது. ருக்கு என்றால் மந்திரம். </span><span style="font-size: medium;">அகத்தியரால் இயற்றப்பட்ட </span><span style="font-size: medium;">செய்யுள் வடிவ மந்திரங்கள்</span><span style="font-size: large;"> </span><span style="font-size: medium;">ரிக் வேதத்தில் காணக் கிடைக்கின்றன.. </span></p><p><span style="font-size: medium;">தமிழுக்கு ஆதி இலக்கணம் படைத்தருளிய அகத்தியரின் பங்களிப்புகள் ரிக் வேதத்திலும் இருக்கிறது என்றால் சமஸ்கிருதமும் தமிழும் கைகோர்த்து உலாவிய இரட்டைச் சகோதரிகள் என்று தெரிகிறது.</span></p><p><span style="font-size: medium;">அதங்கோட்டு ஆசானும், தொல்காப்பியனாரும் அகத்தியரிடம் கல்வி பயின்றவர்கள். மொத்தம் 12 சீடர்கள் அகத்தியருக்கு. இந்தப் பன்னிரண்டு பேரும் சேர்ந்து பன்னிரு படலம் என்ற நூலை இயற்றியதாக புறப்பொருள் வெண்பா மாலை என்ற பழந்தமிழ் நூல் சொல்கிறது. </span></p><p><span style="font-size: medium;">பத்து தமிழ் எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு நாவலை குமுதம் காலத்தில் படைத்தது இருபதாம் நூற்றாண்டிற்கு என்றால் அந்த நூற்றாண்டிற்கு அது.</span></p><p><span style="font-size: medium;">(தொடரும்)</span></p><p><br /></p>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-39574065493406083492021-02-14T05:05:00.000-05:002021-02-14T05:05:25.212-05:00மொழி<p> </p><p><span style="color: red;"><span style="font-size: medium;"> </span><span style="font-size: x-large;"> 5</span></span></p><p><span style="font-size: medium;"><span style="color: red;">தொ</span>ல்காப்பியர் இதைச் சொல்லியிருக்கிறார் என்றால் அதற்கு அப்பீலே கிடையாது. அந்த அளவுக்கு பழந்தமிழர் வாழ்க்கை நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கும் நூல் தொல்காப்பியம். அதுமட்டுமல்ல, தமிழுக்கென தனித்தன்மையாய் இலக்கிய வடிவில் அமைந்த ஓர் இலக்கண நூலாய்த் தொல்காப்பியம் திகழ்வது தான் தமிழ் மொழிக்கான வித்தியாசப்பட்ட சிறப்பாகிப் போகிறது.</span></p><div dir="ltr" trbidi="on"><span style="font-size: medium;"><br />பொதுவாக இலக்கணம் என்றால் ஒரு மொழியை தவறில்லாமல் எழுதுவதற்கும் பேசுவதற்கும் நெறிப்படுத்தும் விதி முறைகளே இலக்கணம் என்று பரவலாகக் கருதப்படுகிறது. இப்படியான இலட்சணம் கொண்ட இலக்கண வரைமுறைகளில் இலக்கியம் சமைப்பது எப்படி என்பது ஒரு அடிப்படை வினா.<br /><br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAQp6HmdQPNHKsd9qD2V00FHf9mWHktSelCyqAcFC_IcMwd508EFQuDAH43tLCj1CMpm2PGWI6Y0pH-SlMVSBIqQJDkpP4BBatQHq_ojsWg9bQzjOuiDy4cDSgjCkZpjWk61Z2A17Sf3lw/s1600/%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><span style="font-size: medium;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAQp6HmdQPNHKsd9qD2V00FHf9mWHktSelCyqAcFC_IcMwd508EFQuDAH43tLCj1CMpm2PGWI6Y0pH-SlMVSBIqQJDkpP4BBatQHq_ojsWg9bQzjOuiDy4cDSgjCkZpjWk61Z2A17Sf3lw/s1600/%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" /></span></a><span style="font-size: medium;">இந்த அடிப்படை வினாவிற்கு விடையளித்திருப்பது தான் தொல்காப்பியம்.<br /><br />தொல்காப்பியர் இயற்றியதால் அது தொல்காப்பியம் என்று பெயர் பெற்றதா இல்லை தொல்காப்பியத்தை இயற்றியமையால் அவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்பட்டரா என்பது ஒன்றில் ஒன்று புதைந்த ஒரு கேள்வி.<br /><br />எது எப்படியாயினும் தொல்காப்பியம் என்பது தொன்மையான நூல் என்று அதன் பெயரிலிருந்தே பெறப்படுகிறது.<br /><br />தொல்காப்பியத்தின் தோற்றத்திற்கு முன்பே அதன் பழமைக்கு முன்பேயே இலக்கிய, இலக்கண நூல்கள் இருந்தன என்பது தெரிகிறது. அவர் காலத்தில் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண நூல் இருந்திருக்கிறது. அகத்தியரால் இயற்றப்பட்ட அகத்தியம் இருந்திருக்கிறது. அவற்றையெல்லாம் ஆராய்ந்ததின் அடிப்படையில் அவற்றைப் பற்றியதான ஓர் ஆராய்ச்சி நூல் போன்றே இயற்றப்பட்டது தொல்காப்பியம். இந்த ஆராய்ச்சியில் இதெல்லாம் இப்படி இருந்தால் தான் இது; இல்லையென்றால் இது இல்லை என்று சொல்வது போல இருந்தவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து பெறப்பட்டதை அவற்றிற்கான இலக்கணமாகக் கொண்ட அரிய படைப்பு தொல்காப்பியம்.<br /><b><br /></b><b>ஒன்றைப் பற்றிச் சொல்வதற்கு அது இருந்தாக வேண்டும் என்ற இருத்தலியக் கொள்கைக்கு சரியான சான்று தொல்காப்பியம்.</b><br /><b><br /></b>பனம்பாரனார் தொல்காப்பியருடன் பயின்றவர். இவர் தான் தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதியிருக்கிறார். பாயிரம் என்றால் தற்காலத்தில் நூல்களுக்கு முகவுரை என்று எழுதுகிறோமே அது தான். பாயிரம் இல்லாமல் நூலில்லை என்பது அக்கால வழக்கமாகவே இருந்தது.<br /><br /><b>வடவேங்கடம் தென்குமரி<br />ஆயிடை<br />தமிழ்கூறு நல்லுலகத்து</b><br /><br />----என்று ஆரம்பமாகும் <b>பனம்பாரனார்</b> எழுதிய அந்தப் பாயிரத்தில்,<br /><br /><b>அதன் கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து<br />மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி<br />மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த<br />தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்</b></span><b style="font-size: large;">றிப்</b></div><div dir="ltr" trbidi="on"><span style="font-size: medium;"><b>பல்புகழ் நிறுத்த படிமை யோனே</b><br /><br />--என்ற வரிகள் காணக்கிடக்கின்றன.<br /> <br />முதல் தழிழ்ச் சங்கம் தென்மதுரையிலும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்திலும், மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையிலும் அமைந்திருந்ததாக அறியப் படுகிறது. முதல் தமிழ் சங்கம் அமைந்திருந்த தென்மதுரையும், இரண்டாம் தமிழ் சங்கம் அமைந்திருந்த கபாடபுரமும் கடல்கோளில் மூழ்கடிக்கப்பட்டன. . வால்மீகி இராமாயணத்தில் கபாடபுரம் பற்றிய குறிப்பு உண்டு.<br /><br />இரண்டாம் தமிழ்ச் சங்க காலம் கி.மு. 3600 முதல் 1500 வரை தொல்காப்பியரின் காலம் இரண்டாவது தமிழ்ச்சங்கம் இருந்த காலம்.</span></div><div dir="ltr" trbidi="on"><span style="font-size: medium;"><br />நிலந்தரு திருவிற் பாண்டிய அரசன் முன்னிலையில் தமிழ்ச்சங்க அவைக்கு அதங்கோட்டாசான் தலைமை தாங்கிட இரண்டாவது தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேறுகிறது. தலைமை தாங்கிய அதங்கோட்டாசான் இடையிடையே எழுத்து பற்றிய சில சந்தேகங்களை எழுப்புகிறார். அதற்கு தொல்காப்பியர் தமிழுக்கான எழுதிலக்கணம் பற்றி விளக்கிச் சொல்ல தொல்காப்பியம் அரங்கேறுகிறது.<br /><br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVFssOu-TyFdQiBcQtW5jsxNWXpya3JxpHrzwU-qSpIdLw5zMbZrVsdRdr02SyRmqt1QA80z7Uhx3ZsSUyo9ME6uRVYiBhu73ViZYdwiP2EtcYxaKgqMILHHQ0qul3OfaZ2rsIrM2HIzCU/s1600/%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><span style="font-size: medium;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVFssOu-TyFdQiBcQtW5jsxNWXpya3JxpHrzwU-qSpIdLw5zMbZrVsdRdr02SyRmqt1QA80z7Uhx3ZsSUyo9ME6uRVYiBhu73ViZYdwiP2EtcYxaKgqMILHHQ0qul3OfaZ2rsIrM2HIzCU/s1600/%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" /></span></a><span style="font-size: medium;">எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பிரிவுகளாக தொல்காப்பியம் பகுக்கப் பட்டுள்ளது. எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் இயல்பழகைக் கூறுகின்றன. பொருளதிகாரமோ பழந்தமிழரின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுகின்றன. பொருளதிகாரத்தில் ஒன்பது அதிகாரங்கள் உள்ளன.<br /><br />அகத்திணையியல்,புறத்திணையியல், களவியல்,கற்பியல்,பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் என்கிற ஒன்பது இயலியலும் படைப்பாக்கங்களுக்கு இட்டுச் செல்கிற கூறுகள் நிரம்பியிருப்பது தான் ஆச்சரியம்.<br /><br />இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நுண்மாண் நுழைபுலம் கொண்ட பேராசான் தொல்காப்பியர் செய்யுளில் கருத்துச் சொல்லும் வழக்கம் இருந்த காலத்திலேயே செய்யுளின் இயல்பையும் அதன் இயல்பின்மையும் ஒருசேர கற்பிதம் கொள்ளும் அளவுக்கு உரைவகை நடை ஒன்றை சொன்னதோடு எவ்வகைத்தானது அது என்று விளக்கமும் கொடுக்கிறார்.<br /><br /><b>பாட்டிடை வைத்த குறிப்பினாலும்<br />பாவின்றி எழுந்த கிளவியானும்<br />பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்<br />பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழியானும்<br />உரைவகை நடை மொழியே நான்கென மொழிய<br /><br /> (தொல்காப்பியம் செய்யுளியல்-- 173)<br /></b><br />செய்யுள்களுக்கு உரை எழுதுவதையும், செய்யுளின் கருத்தை மட்டும் எழுதும் உரை வகையையும், கற்பனையாய் புனையும் கதைகளையும், உணமையான செய்திகளில் நகைச்சுவை கலந்து எழுதுவதையும் குறிப்பிடும் பொழுது நம் வியப்பு எல்லை மீறி திகைக்கிறது.<br /><br />இன்றைய உரைநடைக்கு முந்தியது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள். செய்யுளுக்கு இடையிட்டு உரைநடை போலவான வரிகளும் வருவது அது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளுக்கான தமிழின் முதல் படைப்பு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம்.<br /><br />அதே மாதிரி இன்றைய நாவல்களுக்கு முந்தியது அன்றைய காப்பியங்கள்..சொல்லப் போனால் அன்றைய காப்பியங்களே காலத்தில் மாற்றங்களில் மாற்றம் கொண்டு இன்றைய நாவல்களாகியிருக்கின்றன.<br /><br />இத்தாலி நாட்டினர் நூவெல் (Novella) என்று பெயர் கொண்டு அழைத்த கற்பனை கலந்த கதைகள் தாம் நாவல்கள் என்று காலப்போக்கில் அழைக்கப்பட்டன என்று சொல்வார்கள். நாவல் என்பதற்கு புதுமை என்றும் அர்த்தம் கொள்ளலாம். இதன் அடிப்படையில் வந்த சொல், நவீனம்.<br /><br />இதெல்லாம் பிற்காலத்துச் செய்திகள். இதெற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உரைநடையும் செய்யுளும் கலந்த உருவில் உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் காப்பியங்கள் என்ற உருவில் நாவல்கள் தமிழில் முகிழ்த்திருக்கின்றன என்பதே இங்கு எடுத்தாளக் கூடிய கருத்தாகும்.<br /><br /><br />(தொடரும்)<br /><br /><br />படங்களை உதவியோருக்கு நன்றி.<br /><br /></span><br /></div>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91351368954595585382021-02-11T01:45:00.002-05:002021-02-12T04:10:05.066-05:00மொழி<p> <span style="color: red; font-size: x-large;"> 4</span></p><p><br /></p><p> <span style="font-size: large;"><span style="color: red;">ஆ</span>ரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், கே.ஆர்.ரங்கராஜூ பொன்றவர்கள் ஆங்கில மர்ம நாவலக்ள் கதை மாந்தர்களுக்கு தமிழ் உடை உடுத்தி அழகு பார்த்தவர்கள் என்றால் இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவராய்த் திகழ்ந்தார் வை.மு. கோதைநாயகி அம்மாள். வை.மு.கோ. என்று வாசிப்பு உலகத்தினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.</span></p><div dir="ltr" trbidi="on"><span style="font-size: large;"><br />அந்தக்கால வழக்கப்படி பெண்ணாய்ப் பிறந்ததினால் கல்விச்சாலையை நெருங்க முடியாமல் ஆரம்பக்கல்வியே மறுக்கப்பட்ட நிலைக்கு உள்ளானார். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த இவரை வளர்த்த சித்தப்பா இவருக்கு ஞான ஆசிரியராய் ஆனார். அவரிடம் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி என்று கற்றார். ஐந்து வயதில் பால்ய விவாகம். கணவர் பார்த்தசாரதிக்கு ஒன்பதே வயது.<br /><br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4OV9ID3A3eSdAnE79QLBjBI-hbRdMv6SSQ3Cx1Gp6vzxwy-33ZwtlSiQqgUADGN_N205KEZvjFwFvr5SRlCFTPsxd9GJuXQ3hJunwJIHMzqhgDDNeaLCf29UdmJY495bn38dtaeEtqOEg/s1600/%25E0%25AE%25B5%25E0%25AF%2588.%25E0%25AE%25AE%25E0%25AF%2581.%25E0%25AE%2595%25E0%25AF%258B.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><span style="font-size: large;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4OV9ID3A3eSdAnE79QLBjBI-hbRdMv6SSQ3Cx1Gp6vzxwy-33ZwtlSiQqgUADGN_N205KEZvjFwFvr5SRlCFTPsxd9GJuXQ3hJunwJIHMzqhgDDNeaLCf29UdmJY495bn38dtaeEtqOEg/s1600/%25E0%25AE%25B5%25E0%25AF%2588.%25E0%25AE%25AE%25E0%25AF%2581.%25E0%25AE%2595%25E0%25AF%258B.jpg" /></span></a><span style="font-size: large;">சிறுவயதிலேயே தன்னையொத்த சிறு குழந்தைகளுக்கு கோதை கதை சொல்லும் திறமை பெற்றிருந்தார். கணவரின், மாமியாரின் அன்பும் ஆதரவும் பெண்ணுக்கான சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது. பிற்காலத்தில் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெரியாத நிலையிலேயே இவ்ர் சொல்லவும் இவர் சொல்வதை எழுதவும் பட்டமாள் என்ற தோழி கிடைத்தார். அப்படி வை.மு.கோ. சொல்லி எழுதியது தான் இவரின் முதல் நாவலான 'இந்திர மோகனா'!. நாளாவட்டத்தில் பட்டமாளே இவருக்கு கல்வி போதித்த ஆசிரியையும் ஆனார்.</span></div><span style="font-size: large;"><br />அன்னி பெசண்ட் அம்மையாரின் அறிமுகம், சமூக சேவகி அம்புஜம் அம்மாளின் தோழமை, தீரர் சத்யமூர்த்தியின் தீவிர மேடைப்பேச்சு , மஹாத்மாவின் தமிழக விஜயம் எல்லாம் சேர்ந்து இவரை சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள இழுத்துச் சென்றது.<br /><br />இந்த காலகட்டத்தில் தான் 'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை தம் சொந்தப் பொறுப்பில் நடத்தவும் அதற்கு ஆசிரியையாகவும் ஆகிறார் வை.மு.கோ. . ஜெகன்மோகினியில் தன் இரண்டாவது நாவலான 'வைதேகி'யை எழுதினார்., பின் 'சண்பகவிஜயம்', ''ராதாமணி,' பத்ம சுந்தரன்', 'கெளரி முகுந்தன்'' என்கிற நாவல்களை 1926-27 காலகட்டத்தில் எழுதினார். 'நாவல் அரசி' என்ற பட்டம் வை.மு.கோ.விற்கு தன்னாலே தேடிவந்தது. பிரமிக்காதீர்கள், இவர் எழுதிய மொத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்று இலக்கிய ஆய்வாளர்கள் கணக்கு சொல்கின்றனர். இன்றைக்கும் இந்த எண்ணிக்கையை யாரும் எட்டவில்லை என்று நினைக்கிறேன்.<br /><br />வை.மு.கோ. தன் நாவல்களுக்கு எடுத்துக் கொண்ட எழுது பொருள் பெண் விடுதலை, மதுவிலக்கு, விதவைத் திருமணம், மத நல்லிணக்கம் என்று--- அத்தனை நாள் ஆங்கில நாவல்களை அடியொற்றி எழுதிய எழுத்துப் பாங்கு தமிழில் இவரால் மாறுபடுகிறது. இவ்வாறாக தமிழ் நாவல்களில், நாவலுக்காக எழுதும் கருப் பொருளில் முதல் முதலாக மாற்றம் கண்ட பெண்மணி வை.மு.கோ. தான். இது தமிழ் நாவல் எழுத்துலகம் கண்ட மிகப் பெரும் வரலாற்று மாற்றம்.<br /><br />வை.மு.கோ.வின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் தீரம் மிக்கது. காந்திஜியின் அறைகூவலை ஏற்று சென்னை திருவல்லிக்கேணியில் கள்ளுக்கடை மறியல், மற்றும் அன்றைய சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றார் என்று ஆறு மாதம் சிறைதண்டனை+ அபராதம் என்று தண்டனை வழங்கப்பட்டு, அபராதம் செலுத்த மறுத்ததால் இன்னும் 4 மாதங்கள் சேர்த்துக் கிடைத்த தண்டனையையும் புன்முறுவலுடன் ஏற்று சிறை சென்றார் அன்னிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் தண்டனை பெற்று வேலூர் சிறைவாசம். சிறை வாழ்க்கையையும் எழுதுவதற்குக் கிடைத்த வாய்பாகக் கொண்டு 'உத்தம சீலன்', 'சோதனையின் கொடுமை' என்று இரு நாவல்களைப் படைத்தார்.<br /><br />வை.மு.கோ, தேச நலனுக்காகப் பயன்பட்ட நல்ல மேடைப் பேச்சாளர், கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்று ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக் காரர். பெண் எழுத்தாளர்களில் சாதனைகள் படைத்த முதல் பெண்மணி. பாரத தேசத்தின் நலன்கள் சார்ந்த கொள்கைகளை தம் எழுத்துக்கு கருப்பொருளாக அவர் எடுத்துக் கொண்டது என்றென்றும் நினைவு கொள்ள வேண்டிய சாதனை.<br /><br />தமிழ் நாவலுலகில் 1879-ல் பிரசுரமான மயூரம் வேதநாயகம் பிள்ளையின் 'பிரதாப முதலியார் சரித்திரம்', 1896-ல் வெளிவந்த ராஜம் அய்யரின் 'கமலாம்பாள் சரித்திரம்' போன்ற நாவல்கள், வை.மு.கோ.வின் நாவல்களுக்கு முற்பட்ட காலத்தினது ஆயினும் அவை தனி மனித கோணல்மாணல்களை அச்சுப்பிச்சுத் தனமாக வர்ணித்தவை. இந்த நிலைகளிலிருந்து மாறுப்பட்டுப் போனதும் வை.மு.கோ.வுக்கு வாய்த்த தனிச் சிறப்புகளாகின்றன.<br /><br />1898-ல் பிரசுரமான மாதவய்யாவின் 'பத்மாவதியின் சரித்திரம்' இதற்கு முந்தைய காலகட்டதின் நாவல் தலைப்புகளைப் பிரதி எடுத்திருப்பது மேலோட்டமான பார்வைக்கே புலப்படுவது.. ஒரு நாவல் என்றால் குறிப்பிட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வது தான் என்று முடிவு எடுக்கிற மாதிரியும் உள்ளடக்கத்தின் தேர்வு நிகழ்ந்திருக்கிறது. அதே நேரத்தில் பத்மாவதி என்னும் தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் நேர்ந்துவிட்ட சோக வரலாற்றின் விவரிப்பாக குறுக்கம் கொண்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.<br /><br />அடுத்து நெடுங்காலம் கழித்து 1946-ல் பிரசுரமான க.நா.சுப்பிரமணியம் அவர்களின் 'பொய்த்தேவு' தான் தேறுகிறது. தமிழ் நாவலுலகின் இலக்கிய ஆய்வாளர்களால் விசேஷப்படுத்தும் நாவல் இது. </span><div><span style="font-size: large;"><br />இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாக திகழும் பொழுது அதன் பெருமை வருங்காலத்திற்கு வழிகாட்டியாகிறது. இலக்கியம் வாழ்வின் மதிப்பிடல்களைத் தீர்மானிக்கும் சக்தி பெறும் பொழுது அதற்கான உண்மையான உயிர்ப்பினைக் கொண்ட சாதனையாகிறது. அந்த சாதனைகளும் சமூக அவலங்களைக் களைந்த நேர்த்திகளுக்குச் சொந்த மாகும் பொழுது இயல்பாகவே அவை நம் நேசிப்பை விட்டுத் தப்ப முடிவதில்லை. இதுவே இலக்கியங்களுக்கான அடிக்கோடிட்டு அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய அளவுகோல்களுமாகும்.<br /><br /><br />(தொடரும்)<br /><br /><br />படம்</span></div>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-44196289620219098762021-02-10T09:47:00.007-05:002021-02-10T10:48:06.997-05:00மொழி<p> <span style="color: red; font-size: x-large;"> 3 </span></p><p><span style="font-size: large;"><span style="color: red;">"மொ</span>ழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? ஒருவொருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் அது. அவ்வளவு தானே?" என்று கேட்டார் என் நண்பர் ஒருவர்.</span></p><span style="font-size: large;"><br />என்னால் அவ்வளவு எளிதாக அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் (tool) மட்டும் தானா மொழி என்பது?..<br /><br />நிச்சயமாக இல்லை. </span><div><span style="font-size: large;"><br />மொழி பற்றி, ஒருவனில் அந்த மொழியின் ஆளுகை பற்றி எத்தனையோ அறிஞர்கள் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள். கருத்துப் பரிமாற்றம் கொள்வதற்கு மொழியை விட்டால் வேறு வழி இல்லை. உண்மை தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு மொழியில் புலமை பெறும் பொழுது அது நம்மை ஆட்கொள்ளும் நேர்த்தியில் எத்தனையோ விஷயங்கள் இருப்பதாக புரிதல் ஏற்படுகிறது.<br /><br />முக்கியமாக அந்த மொழியின் இலக்கிய செல்வங்கள்.<br /><br />எந்த மொழியும் தன்னில் ஞானம் கொண்டவனுக்கு இதில் வஞ்சனை செய்ததில்லை. உலக மொழிகளில் எல்லா மொழிகளும் இந்த செல்வத்தை தன்னை அறிந்தோனுக்கு வாரி வழங்குவதில் பாகுபாடு கொண்டதில்லை.<br /><br /> ஒரு மொழியில் புலமை பெற்றவன் அந்த மொழியின் கருவூலமான இலக்கிய இன்பங்களை உள்வாங்கிக் கொண்டு அதில் ஆழ அமிழும் பொழுது இகவுலக சுகங்களை தாண்டியதான விவரிக்க இயலாத இன்பத்தை ஓர்ந்து உண்ர்ந்து கொள்பவனாகிறான்.<br /><br /> திவ்ய பிரபந்த நாலாயிரத்தில் ஒரு பாடல் அது.<br /><br />அச்சுதனின் அரங்கனின் பெருமைகளை நா புரட்டி உச்சரிக்கும் புல்லரிக்கும் உணர்வை விட்டு விட்டு இந்திரலோகம் ஆளும் பெருமையையும் வேண்டேன் என்று இச்சுவை-- அச்சுவை வேறுபாடு காட்டி நெகிழ்ந்திருப்பார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.<br /><br />மொழி என்பது ஒரு லாகிரி வஸ்து போல போதை தருவது.<br /><br />எந்த மொழியாக இருக்கட்டுமே, அந்த மொழியின் படைப்புகளில் ஆழ்ந்த தோய்தல் ஏற்படும் பொழுது அந்த ரசனை ஒருவித கிறக்க உணர்வை ஏற்படுத்தாமல் விடாது.<br /><br />தாய் மொழி-- பிற மொழி என்றெல்லாம் இதில் பாகுபாடு ஏதுமில்லை. தாய்மொழி என்றால் இரட்டை மடங்கு கிறக்கம். அவ்வளவு தான்.<br /><br />அது ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட காலம். பல நல்லது -- கெட்டதுகள் நமக்கு அறிமுகமான காலம்.<br /><br />ஆங்கில மொழியறிவுக் கள்ளைப் பருகியதின் பாதிப்பில் அது போலவே தமிழில் எழுத வேண்டுமென்ற அளப்பரிய ஆசையின் போதை வயப்பட்டவர் பல பேர்.<br /><br />'அது போலவே'என்ற வார்த்தையை அட்சரம் பிசகாமல் தமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்டு வந்த சிலரை மறக்கவே முடியாது. இவர்கள் துணிந்து,பேண்ட், சட்டை, டை கட்டிய கதா பாத்திரங்களுக்கு வேஷ்டி, சட்டை தங்க பித்தான் கோர்த்த கோட், அங்கவஸ்திரம் உடுத்தி அழகு பார்த்தனர். சட்டை என்றால் அந்தக் காலத்தில் பெரும்பாலும் முழுக்கை சட்டை தான். முழுக்கை சட்டையில் மணிக்கட்டு இடத்தில் கஃப் பட்டன் போட்டு, புஜப்பிரதேத்தில் கால் செ.மீ. அளவுக்கு வட்டமாய் துணியை மடித்துத் தைத்த கோலத்தில் அட்டகாசமாய் இருக்கும்.<br /><br />ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜூ (நம்ம ரா.கி.ரங்கராஜன் இல்லை; இன்னொரு ஸ்ரீரங்கம் ரங்கராஜனும் அறவே இல்லை!) போன்றவர்களை மறக்கவே முடியாது. ஆங்கில நாவல்களை தமிழ் படுத்தியதில் பயங்கர இலக்கிய மாற்று பங்களித்தவர்கள் இவர்கள்! கதைகள் வாசிக்கம் பழக்கம் இவர்களால் தான் அக்காலத்தில் படித்த வர்க்கத்தினரிடையே வழக்கமாகவும் மாறியது<br /><br />இரத்தினபுரி இரகசியம், சொர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம், அபூர்வ சிந்தாமணி, மதன பூஷணம் அல்லது இறந்தவன் பிழைத்தது போன்ற ஆரணி குப்புசாமி முதலியார் அவர்களின் மனதைக் கொள்ளை கொண்ட நாவல்களை மறக்கவே முடியாது.<br /><br />ஆரணியாரின் நாவல்களில் ஆங்கில கதாபாத்திரங்களும் இங்கிலாந்து இடங்களும் தமிழ்ப் பெயர் பூணுவதை ரசித்து படிப்பதே ஒரு தனி இன்பம் பயக்கும். எழுதிய மாத்திரத்தில் இவர் எழுத்தில் லண்டன் இரத்தின புரியாகும்; வாட்ஸன் விஸ்வநாதன் ஆவார்; ஆர்ஸின் லூயின் அரசூர் லஷ்மணனாவார்.<br /><br /><br />ஆரணி குப்புசாமி முதலியார் சிலகாலம் 'ஆனந்த போதினி' என்னும் பத்திரிகைக்கு ஆசிரியாராக வேறு இருந்தார். ஆ.கு.மு. காலத்திற்கு பிறகு நாரண துரைக்கண்ணன் (இவர் ஜீவா என்று புனைப்பெயர் கொண்டிருந்தார். பொதுவுடமைக் கட்சி ஜீவா இல்லை) 'ஆனந்த போதினி'யின் ஆசிரியராக சில காலம் இருந்தார். இந்த நாரண துரைக்கண்ணன் அவர்கள் 'கலைமகள்'<br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi8OMx3jt_kZucxZzhzQIYkoWTIX9qDYz3EJafeR_5Bd6Nev5PEON1qdXFsb6jwkt_zDBT0xDKDMgyQeR5gQGYU0201E2q3yhj5rXtm7VVcErlvPoMt91EtsJ3zBzww9p034bPZxpxJTgY/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25BF++%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><span style="font-size: large;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi8OMx3jt_kZucxZzhzQIYkoWTIX9qDYz3EJafeR_5Bd6Nev5PEON1qdXFsb6jwkt_zDBT0xDKDMgyQeR5gQGYU0201E2q3yhj5rXtm7VVcErlvPoMt91EtsJ3zBzww9p034bPZxpxJTgY/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25BF++%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg" /></span></a><span style="font-size: large;">பத்திரிகையில் தனக்கு முன்னோடியான ஆரணி குப்புசாமி முதலியாரின் எழுத்தின் ரக்சியம் பற்றி ரசித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. அந்தக் கட்டுரையின் சில வரிகளை என் குறிப்புப் புத்தகத்திலிருந்து எடுத்து இங்கு எழுதுகிறேன்:<br /><br /><b>"ரெயினால்ஸ், வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமாஸ், எட்கார் வாலஸ், கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களை மொழிபெயர்த்து தமிழர்களுக்குத் தர விரும்பிய குப்புசாமி முதலியார் தமிழ்நாட்டுப் பண்பாடுக்கு ஏற்றவாறு கதை நிகழும் இடங்களையும் கதை மாந்தர்களின் பெயர்களையும் நடை உடை பழக்க வழக்கங்களையும் மாற்றியிருக்கிறார். அத்துடன் கதைகளுக்கு இடையிடையே நீதி போதனைகளையும் வேதாந்த தத்துவங்களையும் கூறியிருக்கிறார். இதை இவர் கதைச் சுவை சிறிதும் குன்றாதவாறு திறமையாகச் சொல்லியிருக்கிறார்.</b><br /><br />-- என்று நாரண துரைக்கண்ணன் ஆரணியாரைப் பற்றி ரசனையுடன் எழுதியிருக்கிறார்.<br /><br />ஆரணியார் இப்படி என்றால் வடுவூரார் கதையே தனி. துப்பறியும் பாணி கதைகளை தனிக்குத்தகைக்கே எடுத்தவர் இவர். தமிழ்வாணனில் ஆரம்பித்து பட்டுக்கோட்டை பிரபாகர் வரை அத்தனை மர்மக்கதை மன்னர்களுக்கும் இவர் தான் முன்னோடி! இவர் எழுதுவதற்காகவே தான் பணியாற்றிய தாசில்தார் வேலையைத் துறந்தார். அந்தக்காலத்தில் 'அல்லது' இடையிட்டு நாவல் தலைப்பை எழுதுவது பிராபல்யம் அடைந்தவர்களின் ஒரு பழக்கமாகவும் இருந்தது!<br /><br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq_bj8M8Q00K7UG7E_Uvp8TP5Taln6-e9iWHxrPjcfsvAoqp1fGhEBfAVburKElWfazVLOCygGSEhCOy4qJsHLrvB7FNflf1ymExmMPhyphenhypheneCjyn8TeOci1xa6X8ytxUC0D69o1YPhOwLr9f/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><span style="font-size: large;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq_bj8M8Q00K7UG7E_Uvp8TP5Taln6-e9iWHxrPjcfsvAoqp1fGhEBfAVburKElWfazVLOCygGSEhCOy4qJsHLrvB7FNflf1ymExmMPhyphenhypheneCjyn8TeOci1xa6X8ytxUC0D69o1YPhOwLr9f/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" /></span></a><span style="font-size: large;">கல்யாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை<br /><br />மரண புரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடு மந்திரம்<br /><br />இரு மன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி!<br /><br />--என்று வடுவூராரின் 'அல்லது' போட்ட சில நாவல் தலைப்புகள் இன்னும் நினைவுகளில் நிழலாடுகிறது!<br /><br />இவரது ''கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார்' பயங்கர பிரபல நாவல்! திகம்பரம் (ஐயே!) என்றால் அர்த்தம் தெரியும் தானே! 'திகம்பர சாமியார்' திரைப்படமாகவும் வந்திருக்கிறது. எம்.என்.நம்பியார் தி.சாமியாராய் நடித்து அசத்தியிருப்பார்! மயிலாப்பூர் அல்லையன்ஸ் பதிப்பகத்தார் இவரது நாவல்களின் வரிசை ஒன்றை சில ஆண்டுகள் முன்பு பதிப்பித்திருக்கிறார்கள்! வேண்டுகிறவர்கள் வாங்கிப் படித்து மகிழலாம்!<br /><br />(தொடரும்)<br /><br /> <br /> </span></div>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-63278164110327371532021-02-09T11:05:00.001-05:002021-02-09T11:14:42.897-05:00மொழி<p> <span style="color: red; font-size: x-large;"> 2</span></p><p><span style="font-size: x-large;"><span style="color: red;">உ</span>லகில் மொத்தம் 2796 மொழிகள் உள்ளனவாம் இதில் பல மொழிகள் பேச்சு மொழிகளாகவே உள்ளன. அதாவது அவற்றிற்கு எழுத்து வடிவம் இல்லை.</span></p><span style="font-size: x-large;"><br />பாரதத்திலோ, 499-க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளன.<br /><br />இந்த நானூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஆறு மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கின்றன. அவை: தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஒடியா மொழி. பொதுவாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழிலிருந்து கிளைத்த தமிழ்க் குடும்ப மொழிகளாதலால் மனத்தளவில் அவற்றைத் தனியாகப் பிரித்தும் பார்க்க முடியவில்லை. இருப்பினும் கணக்குக்காக ஆறில் நான்கு திராவிட மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கின்றன என்பது நமக்குப் பெருமை.<br /><br />உலக அளவில் கிரேக்க மொழி, இலத்தீன், பாரசீக மொழி, அரபு மொழி, எபிரேயம் மற்றும் சீன மொழி ஆகியவை செம்மொழிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.<br /><br />எதையும் ஆங்கிலத்தில் சொன்னால் இளைஞர்களுக்கு சுலபமாகப் புரியும் காலம் இது.<br /><br />செம்மொழி என்றால் classical language. என்று ஓரளவு பொருந்தக் கூடிய அர்த்தத்தில் சொல்லலாம்.<br /><br />அது சரி, classical language என்றால்---<br /><br /><i>"To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature "</i><br /><br />--- என்று மொழியியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூறுகிறார்.<br /><br />செம்மொழி என்பது ஒரு மொழியில் அமைந்திருக்கும் இலக்கிய மற்றும் கலைப்படைப்புகளைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது. என்றோ இருந்த பழங்கதையாக இல்லாமல் அப்படியான இலக்கிய கலைப்படைப்புகள், வருங்காலத்திலும் மென்மேலும் உருவானால் தான் இந்த மொழி செம்மொழி என்பதற்கான வரலாற்று பெருமைகளையும் தக்க வைத்துக் கொண்டவர்களாவோம்.<br /><br />தற்கால தமிழின் கலை இலக்கிய கலைப்படைப்புகள் பற்றிய பார்வை நமக்கு அவசியம். பண்டைய தமிழ்ப் புலவர்களின் தொடர்ச்சியாய் தொடர்ந்து வரும் இன்றைய இலக்கிய சாம்ராட்களின் படைப்புகளைப் பற்றிய பார்வையும் நமக்கு அவசியம்.<br /><br />மன்னர்களின் ஆட்சி காலங்களின் பொழுது இயல்பாகவே கலை இலக்கியங்கள் ஆட்சி அதிகாரத்தில் வலிமை பெற்றிருந்த மன்னர்களைச் சார்ந்திருந்தன. தமிழில் கூட மன்னரைத் தவிர்த்து ஒரு வணிகனை பாட்டுடைத் தளைவனாக வரித்துப் பாடப்பாட்ட முதல் காப்பியம் சிலப்பதிக்காரமே. அந்த வகையில் அதுவே தமிழில் முதன் முதல் தோன்றிய குடிமக்கள் காப்பியமாகும்.<br /><br />சங்க காலத்தில் தமிழின் தமிழகத்தின் தமிழ்ப்புலவர்களின் நிலையை இன்றைக்கும் தாம் தெரிந்து கொள்வதற்கு தோன்றாத் துணையாய் இருப்பது சங்க இலக்கியங்களே. அந்த வகையில் இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பது எல்லா நாட்டு அறிஞ்ர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.<br /><br />அதே போல தற்காலத்தைப் பற்றி எதிர்காலத்துக்கு எடுத்துச் சொல்லப் போவது இன்றைய இலக்கியங்களே. அதனால் தமிழின் இன்றைய இலக்கியங்களை இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கக் கூடியதாய் படைக்க வேண்டியது அவசியமாகிறது. அதே நேரத்தில் செம்மொழித் தமிழின் நீட்சியாய் இன்றைய தமிழ் இலக்கியங்களும் தமிழ் மொழியின் பெருமைகளை இழக்காமல் அதே நேரத்தில் காலத்தின் அலையோட்டத்தில் அமிழ்ந்து போய் விடாமல் காலத்தைத் தாண்டி வாழும் படைப்புகளாய் ஜீவிதம் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் ஆகிறது...<br /><br />இந்தக் கோணத்தில் தற்கால தமிழ் இலக்கியம் பற்றிய புரிதல் நமக்கு அவசியம்.<br /><br />வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகிற சிறப்பில் தமிழின் சங்க இலக்கியத்திற்கு ஈடு இணை இல்லை. இதே ஈடு இணை எதிர்காலத்திற்கான தற்கால படப்பிடிப்புக்கும் தேவை என்றே சங்க இலக்கியங்கள் நமக்கு பாடம் சொல்கின்றன.<br /><br />இலக்கியத்தை பாட்டில் வடித்தது பண்டைய காலம்; உரைநடையில் சொல்வது தற்காலம். இதை ஒழுங்கில் சொல்ல வேண்டுமானால், பண்டைய கால கதைப்பாடல்கள், காப்பியங்கள் என்று நம்மால் அடையாளப் படுத்தப்பட்டன. அன்றைய காப்பியங்கள் தாம் இன்று நாவல் என்று பெயர் கொண்டு வலம் வருகின்றன.<br /><br />சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அன்றைய காப்பியங்கள் என்றால் கல்கியின் அலைஓசையும், ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகமும் .சமகால நாவல்கள்.<br /><br />நம் தேசத்தில் நூற்றைம்பது கால அன்னிய ஆங்கிலேயர் ஆட்சி எல்லாவற்றிலும் தன் தடத்தைப் பதித்திருப்பது போல இலக்கியங்களிலும் தன் தடத்தைப் பதித்திருக்கிறது.<br /><br />நாம் காப்பியங்கள் என்று பெயர் சூட்டியவை போன்று அமைந்திருப்பதை அவர்கள் நாவல் என்று அழைப்பார்கள் என்று புரிந்து கொண்டோம். அவர்கள் நாவல் என்று அழைத்ததினால் அத்தகையவற்றை நாமும் நாவல் என்று அழைக்கத் தலைப்பட்டோம்.<br /><br />நாவல் என்பதனை புதினம் என்று அழைப்பதினால் அது ஒன்றும் தமிழ் வடிவமாகி விடாது. ஆங்கில நாவல்கள் போன்று உரைநடையில் நாமும் நாவல்கள் படைக்கத் தொடங்கினோம் என்பதே உண்மை.<br /><br /><br />(தொடரும்)</span><br />ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-71570350225385163062021-01-27T01:45:00.002-05:002021-01-27T10:41:12.719-05:00மொழி<p> <span style="font-size: large;"><span style="color: red;">'ஒ</span>ரு மொழியின் வளர்ச்சிப் போக்கும் அதற்கான உந்து சக்திகளும்' என்று இந்தத் தொடருக்கு தலைப்பு வைக்கலாம் என்று தீர்மானம் செய்து தலைப்பாக தட்டச்சும் செய்து விட்டேன்.</span></p><span style="font-size: large;"><br />ஒரு தலைப்பே அதன் உள்ளடக்கத்தைச் சொல்கிற மாதிரியான தலைப்பு அது. ஆனால் இன்றைய வாசக ஆர்வம் இதையெல்லாம் வாசிக்கக் கூடத் தயங்கும் கூட இல்லை, திரும்பியே பார்க்காது என்கிற அச்சத்தில் தலைப்பை மாற்றினேன். குறைந்தபட்சம் இந்த ஆள் என்ன எழுதியிருக்கிறான் என்று பதிவைத் திறந்தானும் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை இந்த தலைப்பு ஏற்படுத்தும் என் கிற நினைப்பில் துணிந்தேன்!<br /><br />--- ஜீவி .<br /><br /><br /><span style="color: red;">'ஷ'</span><br />=======================<br /><br />இந்த வடமொழி எழுத்து 'ஷ'' என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. அது நம் கையில் சிக்கி படாதபாடு படுகிறது. வேண்டும் மாமியார், வேண்டாத மாமியார் போல சில நேரங்களில் நமக்கு இந்த 'ஷ' வேண்டும். சில நேரங்களில் வேண்டாம் என்கிற போக்கும் உண்டு. பலர் இந்த 'ஷ'வை தீர்மானமாக எழுத்தில் உபயோகப்படுத்துவதைத் தவிர்த்து விடுகின்றனர். நாளாவட்டத்தில் 'ஷ' எழுத்தே தமிழ் எழுத்து வடிவில் புழக்கத்தில் இராமல் போய்விடும் போலிருக்கிறது.<br /><br />வடமொழி வெறுப்பா என்று நினைத்தால் அதுவும் இல்லை என்று தெரிகிறது. 'ஷ்'ஷைத் தவிர்ப்பவர்கள், 'ஷ்'க்கு பதில் 'ஸ்'ஸை உபயோகிப்பதால், 'ஸ்'ஸும் வடமொழி தானே என்று ஒரு பக்கம் நினைப்பு ஓடுகிறது.<br /><br />(உதாரணம்: <span style="color: red;"> நாகேஷ் -- நாகேஸ்,</span> <span style="color: red;">ராஜேஷ் --ராஜேஸ்</span>) ,<br /><br />இதில் இன்னொரு முரண்பாடான விநோதம் கூட. பேச்சு வழக்கில் எங்கெல்லாம் 'ஸ', 'ச' வருகிறதோ அங்கெல்லாம் வெகு சரளமாக 'ஷ'வை நகர்ப்புறங்களில் பெரும்பாலோர் உபயோகப்படுத்துகின்றனர். ஷங்கவி, ஷங்கர், ஷக்தி, ஷம்யுக்தா இப்ப்டி.<br /><br />'ஷ'வைத் தவிரிக்கவே முடியாத சில சொற்கள் உண்டு.<br /><span style="color: red;"><br /></span><span style="color: red;">உஷா</span>, <span style="color: red;">பாஷை,</span> <span style="color: red;">கோஷ்டி</span><br /><br />தமிழ் எழுத்து 'க்'கைக் கண்டால் ஏகக் காதல் இந்த 'ஷ'வுக்கு. என்ன கெமிஸ்ட்ரியோ தெரியலே,, அந்த 'க்'கை நெருங்கினாலே அதனுடன் ஒன்றரக் கலந்து ஈருயிர் ஓருடலாய் ஒன்றி விடுகிறது..<br /><br /><span style="color: red;">ரிக் ஷா</span> --<span style="color: red;"> ரிக்ஷா</span><br /><br />சில ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும் பொழுது 'ஷ'வை உபயோகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லாது போகும்.<br /><span style="color: red;"><br /></span><span style="color: red;">ஷூ</span>,<span style="color: red;"> பாலீஷ்</span>, <span style="color: red;">.மஷ்ரூம்,</span><br /><br />இன்னொரு பக்கம் வடமொழி எழுத்துக்களை தமிழ் படுத்துகிறேன் பேர்வழி என்று அதற்கான தமிழ்ச் சொற்களே மறந்து விடும் அளவுக்கு பரவலாகிப் போயிருக்கிறது.<br /><br />சில உதாரணங்கள்: <br /> <span style="color: red;"> </span><br /><span style="color: red;">இஷ்டம்</span>' என்பதை இட்டம் என்று வலிந்து தமிழ் படுத்துவதை விட்டு, <span style="color: red;">விருப்பம்</span>' என்று அழகு தமிழில் எழுதலாம்.<br /><br /><span style="color: red;">வருஷம்</span>, என்பதனை வருடம் என்று எழுதாமல் <span style="color: red;">ஆண்டு</span> எனலாம்.<br /><br /><span style="color: red;">கஷ்டம்</span>, 'கட்டம்' ஆவதைத் தவிர்த்து<span style="color: red;"> துன்பமாகலாம்.</span><br /><br /><span style="color: red;">நஷ்டம்</span>, நட்டம் ஆகாமல் <span style="color: red;">இழப்பு</span> ஆகலாம்.<br /><br /><span style="color: red;">விஷயம்</span> விடயம் என்றோ விதயம் என்றோ ஆகாமல் <span style="color: red;"> செய்தி </span>ஆகலாம.<br /><br /><span style="color: red;">பாஷை</span> எந்த சிதைவும் இல்லாமல் <span style="color: red;">மொழி</span> ஆகலாம்.<br /><br /><br />இப்படி நிறைய அழகழகான தமிழ் சொற்கள் புழக்கத்திற்கு வராமலேயே நாளாவட்டத்தில் மறக்கப்பட்டு விடுமோ என்று அயர்வாக இருக்கிறது.<br /><br />தற்சமம், தற்பவம் என்கிற இலக்கண விதிகள் எல்லாம் இருக்கட்டும். வடமொழி எழுத்தைத் தவிர்க்க முயற்சித்து அதற்கு தமிழ் மாற்று எழுத்து எழுதுவது, பலநேரங்களில் நல்ல பல தமிழ்ச் சொற்களையே தவிர்த்ததாகி விடுகிறது.<br /><br />அந்த வடமொழி சொல்லின் அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய தமிழ் சொற்கள் உபயோகத்திற்கு வராமலேயே மறக்கப்படுகின்றனவே என்று ஆதங்கமாக இருக்கிறது.<br /> <br />தமிழின் தனிச் செல்வம்,<span style="color: red;"> ழ</span><br />======================= <br /><br />வடமொழி 'ஷ'வைப் போலவேயான நிலை 'ழ'க்கு நேராமல் இருக்க வேண்டும். 'ழ'வை உச்சரிப்பதே பலருக்கு சோதனையாக இருக்கிறது. தொலைக்காட்சி போன்ற மக்கள் நேசிக்கும் ஊடகங்களில் கூட 'ழ'வைச் சரியாக மொழிய வேண்டும் என்றோ அதற்கான பயிற்சியும் பழக்கமும் பெறவேண்டும் என்பதிலோ அக்கறையோ ஆர்வமோ கொள்ளாத நிலையில் இருக்கிறது. 'ழ' தான் இப்படி என்றால் சமீப காலங்களில் 'ள'வும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது.<br /><br />தமிழுக்கு சிறப்பு சேர்ப்பது <span style="color: red;">'ழ' </span>எழுத்து. ஆங்கிலத்தில் '<span style="color: red;">ழ</span>'வை எழுதும் பொழுது, பெரும்பாலும் ஆங்கில '<span style="color: red;">L'</span> எழுத்தையே உபயோகிக்கிறோம். பத்திரிகைகளில் கூட Tamil Weekly, Tamil Daily தான். தமிழை<span style="color: red;"> TAMIZH</span> என்று எழுதுவோர் இல்லை.<br /><br /><br /><br />புதுச்சொற்கள்<br />==============<br /><br />காலத்தின் தேவைகளூக்கேற்ப எல்லா மொழிகளிலும் புதுச் சொற்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. புதியன புழக்கத்திற்கு வருவதற்கு பழையன கழிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.<br /><br />அடுத்த நாளுக்கு இன்றைய நாள் பழசு; இன்றைய நாளுக்கு நேற்றைய நாள் பழசு என்பார்கள். புதுச் சொற்கள் வருகையைத் தவிர்க்க முடியாது. அது காலத்தின் கட்டாயம். தலைக்கவசம்-- தவிர்க்க முடியுமா, நம்மால்?..<br /><br />இன்னொன்று. எந்த மொழியின் வளர்ச்சியும் அது எந்த அளவு வெகுதிரள் மக்களின் நாவினில் எழுத்தில் புழக்கத்தில் இருக்கிறது என்கிற தகுதி கொண்டே அந்தந்த சொற்களின் ஆயுசு காலமும் தீர்மானிக்கப்படும்.<br /><br />மொழி ஒன்றும் கண்ணாடி சட்டத்திற்குள் அடைத்து பார்ப்பதல்ல. அழகு பார்ப்பதற்கும் அல்ல. அது அந்த மொழி பேசும் மக்களின் உபயோகத்தில் நீடித்து வாழ வேண்டும். எந்த மொழிக்கும் உயிர் கொடுத்து வாழையடி வாழையாக வளர்ப்பவர்கள் பண்டிதர்கள் அல்ல, அந்த மொழி பேசும் எளிய வெகுதிரள் மக்களே.<br /><br />எழுத்தாளர் சுஜாதா சர்வசாதாரணமாக தன் எழுத்தில் நிறைய புதுச் சொற்களை வெள்ளோட்டமிட்டுப் பார்த்திருக்கிறார். அவர் எழுதிய 'கிளிக்கினான்' என்கிற சொல் அவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும். ஒரு வினையின் காரணமாக அந்த வினைக்கான சொல் உருவாகலாம். சுஜாதா ஒரு வினையின் ஒலியை வைத்தே சொல்லை உருவாக்கியிருக்கிறார்.<br /><br />நேற்று தினமலரில் 'அலம்பல்' என்ற சொல்லை வாசித்து விட்டு இதற்கு வேர்ச்சொல் என்னவாக இருக்கும் என்கிற யோசனையில் ஆழ்ந்தேன்.<br /><br />தெரிந்தவர்கள் சொல்லலாம்.<br /><br />இன்று தொலைக்காட்சியில் 'கலாய்த்தான்' என்று கேட்ட சொல் எப்படி உருவாக்கம் பெற்றிருக்கும் என்று யோசனையாயிற்று.<br /><br />இப்படி நிறைய சொற்கள். இதை வாசிக்கும் அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புழக்கத்திற்கு வந்திருக்கும் புதுச்சொற்களைச் சொல்லுங்கள். அந்த சொல் எப்படியாக உருப்பெற்றிருக்கும் என்கிற கண்டுபிடிப்பையும் சேர்த்துச் சொல்வீர்கள் என்றால் நம்மால் முடிந்தது, பின்னூட்டங்களில் கைத்தட்டலாம்.</span><div><span style="font-size: large;"><br /></span></div><div><span style="font-size: large;"><br /></span></div><div><span style="font-size: large;">(தொடரும்)<br /></span><br /></div>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-39200073977632967302020-08-08T00:34:00.000-04:002020-08-08T00:34:23.196-04:00அறிவுடைநம்பியின் ரசனை<b><font color="#ff0000" size="6">செ</font></b>ல்வம் என்கிற வார்த்தைக்கு என்ன சரியான பொருள் கொள்வது என்றுத் தெரியவில்லை. பொதுவாக பணம், காசு, நகை, வீடு, ஆஸ்தி,கல்வி -- போன்றவற்றைச் செல்வம் என்று வழக்கில் குறிப்பிடுகிறோம். இவையெல்லாமே, மனிதன் தன் முயற்சியினால் ஈட்டுவது என்கிற செயலின் பாற்பட்டு இருக்கின்றவை; முயன்று கிடைப்பவை எதுவுமே சந்தோஷத்தைக் கொடுக்கும் இயல்பு படைத்தவை தான். 'அது கிடைக்க நான் பட்ட கஷ்டம் எனக்கல்லவா தெரியும்?' என்று நினைத்துப் பெருமூச்சு விடும் சிலரும் உண்டு. இந்த பெருமூச்சும் பெருமிதத்தின் பால் இருக்கும். என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்கிற இறுமாப்பும் சிலரிடத்தில் லேசாக இதில் கலந்திருக்கும். அதைப் பாதுகாப்பதற்கும், அதை வைத்து இன்னும் என்ன செய்யலாம் என்கிற யோசனையும் அதைத் தொடர்ந்து இருக்கும்.<div><br />இவையெல்லாம், உயிரில்லாத செல்வங்களென்றால், உயிருள்ள ஒரு செல்வமும் உண்டு. அதுதான் குழந்தைச் செல்வம். இந்தச் செல்வம் மற்ற செல்வங்களிலிருந்து மாறுப்பட்டது. பெற்றிருப்பவருக்கு மட்டுமில்லை, பெற்றிருப்பவரின் சுற்றத்தினருக்கும், பெருமையையும், மனமகிழ்ச்சியையும், உறவுச்சங்கிலி உணர்வையும் கொடுப்பது.இந்தச் செல்வம் மட்டும், யாருடைய முயற்சியின் அடிப்படையிலும் கிடைப்பதல்ல; வேண்டினால் கிடைப்பதும், வேண்டாமையால் கிடைக்காமல் போவதுமில்லை. அதனால் தான் குழந்தைச்செல்வத்தை மட்டும் பாக்கியம் என்கிறோம். இயல்பாக ஏழை,பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் கிடைப்பதினால் தான், குழந்தை பாக்கியத்தை கடவுளின் கொடை என்று சொல்கிறார்கள்.</div><div><br />இந்த வரம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதிலிருந்து தொடங்கி பரவ ஆரம்பிக்கும் மகிழ்ச்சி, அதைத்தொடர்ந்து தன் சுகம், தன் நலன் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு பிறக்கப்போகும் அந்த சிசுவுக்காக ஏங்கும் அந்த போக்குகள், ஒருவழியாக தாய்க்கு பிரசவம் நல்லபடி நடந்து குழந்தை இந்த பூமிப்பந்தின் பிரஜை ஆனதும் ஏற்படுகின்ற சிலிர்ப்பு, அந்த சிசுவின் அணைப்பில் ஏற்படுகின்ற சுகானுபவ ஆனந்தம், தங்கள் ரத்தத்தின் உயிர்த்துடிப்பான அந்த பூபாரத்தைக் கையில் தூக்கிச் சுமக்கையில் ஏற்படுகின்ற பரவசம், பொக்கை வாய் திறந்து அந்தக் குழந்தை சிரிக்கையில் ஏற்படும் பரமானந்தம், காரணமில்லாமலேயே வீல்வீலென்று அழுகையில் உணரும் பரிதவிப்பு --- எல்லாமே சொற்களில் சிறைபடுத்திச் சொல்லமுடியாத, ஒவ்வொருவரும் உணர்ந்து அனுபவித்து உணர வேண்டிய வாழ்க்கையின் வரங்கள்...<br /><br />இந்தக் காலத்தில் தான் இப்படி என்றில்லை. எந்தக் காலத்திலும், இந்த சீராட்டும், பாராட்டும் இப்படித்தான். வாராது வந்த அந்த மாமணியை கட்டி அணைத்து, ஊரார் கண் பட்டுவிடப் போகிறதே என்று கன்னத்தில் கண்மைப் பொட்டிட்டு,அதன் பொக்கைவாய்ச் சிரிப்பில் உலக இன்பங்கள் அனைத்தும் காலடியில் வீழ்ந்து கிடப்பதாக உவகை கொண்டு மகிழ்வோர் தான் எல்லோரும். மனித இனத்தில் மட்டுந்தான் என்றில்லை, ரத்தவாடை நுகரும் மிருகங்களிலிருந்து, சின்னஞ்சிறிய குருவிகள் வரை--தனது குட்டிகள்,குஞ்சுகள் என்றால் அந்த அன்பும், அளப்பரிய கரிசனமும் எங்கிருந்துதான் வரும் என்றுத் தெரியவில்லை. தனக்கில்லாவிட்டாலும், தன்னிலிருந்து விடுபட்ட அந்த தனி உயிருக்கு, தன்னையே தந்துவிடும் அந்த பாசத்திற்கு ஈடுஇணை இவ்வுலகில் எதுவுமே இல்லை எனலாம். இந்தச் சீராட்டல், மண் குடிசையாயிருந்தாலும் சரி, மன்னனின் மாளிகையாய் இருந்தாலும் சரி, ஆசையும் அன்பும், ய்பாசமும் போட்டி போட்டுக் கொண்டு இடம் பார்த்துப் பேதப்படாமல் எல்லா இடங்களிலும் ஒன்றாகத் தான் இருக்கும்.</div><div><br />இதோ, கடைச்சங்கக் காலத்து மன்னன் பாண்டியன் அறிவுடைநம்பி என்ன சொல்கிறான், பாருங்கள்:</div><div><img border="0" data-original-height="312" data-original-width="162" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnrKn0L1BjCk7ru25JzZhtQLNt9p_kh9RYQEmTmXwhJDtJFKNE2rdM9BoSTUxf13nTbWD0ojlEOAFllo377YxXD61fUmrHb7y_bE05SIYFzi0YyDTmqn7frtznOnpEl_3UCnPJ3PIHrcPI/s0/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg" /><br /><blockquote><span style="color: #000099; font-style: italic;">"படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்<br />உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்<br />குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,<br />இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்<br />நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,<br />மயக்குறு மக்களை இல்லோர்க்குப்<br />பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே."</span> <br /><br /><span style="color: red;">(புறநானூறு--188)</span></blockquote><br /><br />ஆஹா, எப்படி அனுபவித்திருக்கிறான்!..எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறான்! <span style="color: #000099; font-style: italic;"> </span>மன்னனாலும் சரி, பரம ஏழையாய் இருந்தாலும் சரி, ஒரே உணர்வு தான், போலும்!</div><div><br />தத்தித்தத்தி தளர் நடை நடந்து, தன் சின்னக்கை நீட்டி,அந்தச் சின்ன அன்ன பாத்திரம் தொட்டு, அதில் வைக்கப் பட்டிருக்கும் நெய்வார்த்த உணவில் தன் பிஞ்சு விரல்கள் புதைத்து,தொட்டு, விரல்களால் அளைந்து, ஓரிரு பருக்கைகள் எடுத்துக் கவ்வி வாயில் போட்டுக் கொண்டும், வாயிலிருந்து நழுவிய சில பருக்கைகளை தன் மேனி எங்கும் உதிர்த்துக்கொண்டும் அட்டகாசம் பண்ணி நம்மை மயக்கி களிப்பில் ஊஞ்சலாட்டும் இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெறாதவர், ஓ, வாழ்க்கையில் எந்தப் பயனையும் பெற்றதாக எனக்குத் தெரியவில்லை என்கிறான்!..<br /><br />எவ்வளவு உணர்வுபூர்வமான வர்ணிப்பு பாருங்கள்.. எவ்வளவு கூரிய பார்வை அவனுக்கு!..</div><div><br /></div><div> எனக்குத் தெரிந்து வேறு எந்தக் கவிஞனும்,சின்னஞ்சிறு குழந்தைகளின் சித்திர உலகையையும் அதனால் நமக்கு ஏற்படுகின்ற உவகையையும் இவ்வளவு அழகாக வர்ணித்ததில்லை! இவன் சரியான ரசிகனாய் இருக்கிறான்!</div><div><br />புலவர்கள் தன்னைப் புகழ்ந்து பாடும் புகழ்ப்பாட்டுகளால் மகிழ்வேற்பட்டு, ஆணவமும்-அகங்காரமும் பாதாதிகேசம் பரவி, அந்த அகமகிழ்ச்சியில் தன்னை வாழ்த்தி இறைஞ்சிய புலவர்களுக்கு, பண்டையத் தமிழ்மன்னர்கள் மனம்போன போக்கில் வாரி வழங்கினார்கள், என்கிற வசைச்சொல் இவனால் நீங்கியது... பாடும் புலவரின் பாடலை புரிந்து கொள்பவராயும், அதை வகைப்படுத்தி ரசிப்பவராயும் மட்டுமல்ல, தாங்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்களாயும் இருந்திருக்கின்றனர் என்று அறிவுடைநம்பியின் அட்டகாசமானப் பாட்டால் அறிந்து கொள்கிறோம். உண்மையிலேயே இந்தப் பாண்டிய மன்னன் தன் பெயர்கேற்ப, தமிழ்ப்புலமையை தன்னகத்தேக் கொண்டுச் சிறந்திருந்தான் என்று தான் இந்தப் புறப்பாடலால் புரிகிறது<img border="0" data-original-height="4128" data-original-width="3096" height="262" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7asvC3i-njFfZeV0NADXTn41xwnC1A9fkmsx1wPs_QiwL2lNvMECUlBvl30H0aJACN-NavfJM4u0xJOiBYPNsrHZLbdhtVvnmOS8mF9AIgzvuZnYQRe_7inctO1kzDOgQWZdK0NUuzW-i/w197-h262/20200706_142233.jpg" width="197" /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div></div>ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-52772780754733072442020-07-08T02:01:00.000-04:002020-07-08T02:01:12.239-04:00ஜஸ்ட் மிடில் மென்!..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div>
<strong><span style="color: red; font-size: x-large;">இ</span></strong>ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbir4_BvW_hr7CkcOBiK7hwXQlbHl2NtWhZx0-Hemb0KMOoKBWQckj_GTo_AY8N6R_iPItvfmGgat83shmC63dh_cxIU2V0PXXUTSRDfS3y61CYYLrWdRKWN3qip5KbDJsmz7HEL7hW8o9/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbir4_BvW_hr7CkcOBiK7hwXQlbHl2NtWhZx0-Hemb0KMOoKBWQckj_GTo_AY8N6R_iPItvfmGgat83shmC63dh_cxIU2V0PXXUTSRDfS3y61CYYLrWdRKWN3qip5KbDJsmz7HEL7hW8o9/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25BF.jpg" /></a></div>
<br />
அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டியிருக்கிறது. அப்படியே குற்றாலத்தில் ஒருநாள் தங்கல். ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தை முன்பதிவுக்காகப் புரட்டும் பொழுது, ராமசாமி ஞாபகத்திற்கு வந்து விட்டான்.<br />
<br />
அவன் தந்தையை நினைக்கையிலேயே எவ்வளவு அற்புதமான மனிதர் என்று மனசு நெகிழ்கிறது. ஆண்டவன் படைப்பில் மானுடராய் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்ந்த நல்ல மனிதர்களை நினைக்கும் பொழுது நாமும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று நெஞ்சில் சூளுரைத்துக் கொள்வதும் இயல்பான ஒரு செய்கையாகப் போய்விட்டது. ரொம்பவும் மோசமாகப் போய்விடாமல், இப்படிப்பட்ட நல்லவர்களின் வாழ்வுதான் நம்மை வழிநடத்தி காப்பாற்றுவதாகவும் நான் நம்புகிறேன்.<br />
<br />
ராமசாமி கொழுத்த செல்வந்தவர்களின் குடும்பத்தில் பிறந்தவன். பரம்பரையே மிட்டா மிராசுதாரர்கள். செலவம் ஓரளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால், அதுவே மேலும் மேலும் தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும் இயல்புடையது போலும்.<br />
<br />
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் மா,பலா,தென்னை மரங்கள் சூழ்ந்த மிகப்பெரிய பங்களா அவர்களது. அவர்களின் வீடு என்று சொல்லப்படும் மாளிகையின் வேலியை ஒட்டிய நீண்ட தெருவில் ஒரு வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். வரிசையாக பதினைந்துக்கு மேற்பட்ட பக்கத்துப் பக்கமாக ஒட்டிக்கட்டப்பட்ட வீடுகள்..அத்தனையும் ராமசாமி குடும்பத்துக்குச் சொந்தமானது.<br />
<br />
ராமசாமி என் பள்ளித்தோழன் கூட. எங்களது பெரிய ஜமா. மழைக் காலங்களில் பத்து பதினைந்து பேர்கள் கொண்ட எங்கள் குழு, தினமும் நெல்லை ஜங்ஷன் பகுதியில் இருக்கும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி பள்ளிக்கு போவதும், மாலையில் வீட்டுக்குத் திரும்புவதும் ராமசாமி வீட்டு வேனில் தான். அந்தப் பக்க சிறுகுழந்தைகள் ஆரம்ப பள்ளிக்குப் போவதற்காக இரண்டு வேன்களைத் தனியாக ஏற்பாடு செய்திருந்தனர்.<br />
<br />
பங்களாவை ஒட்டியவாறே சத்திரம் போல மிகப்பெரிய ஹாலுடன் ஒரு கட்டிடம் இருக்கும். காலையில் கூட்டமாக துண்டும் சோப்புப்பெட்டியுமாக அரட்டை அடித்தபடி தாமிரபரணியில் குளித்துவிட்டு வந்தோமானால், அவரவர் வீட்டிற்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு இந்த சத்திரம் போன்ற இடத்தில் குழுமிவிடுவோம்.<br />
<br />
எல்லோருக்கும் காலை டிபன் அங்கே தான். எப்படியும் தினம் இருபது பேருக்கு மேல் தேறிவிடும். ராமசாமி, ராமசாமியின் தம்பி, அவன் அப்பா, அம்மா சூழ உட்கார்ந்து சாப்பிடுவோம். சமையல்கார சாம்பு மாமா, பளீரென்று வெள்ளை வெளேர் வேஷ்டியும் மேல்துண்டுமாய் நெற்றி நிறைய வீபூதி-சந்தனப் பொட்டுமாய் ஆரோக்கியமாய் இருப்பார். ராஜ உபசாரம் தான். அவர் அவரவரைப் பேர் சொல்லி விளித்து, "தேங்காய்ச் சட்னி போடட்டுமா?.. கொத்ஸூ கொஞ்சம் போட்டுக்கோயேன்"..என்று கேட்டுக் கேட்டு விசாரித்து அன்புடன் பரிமாறுவார். குண்டு கத்திரிக்காயைச் சுட்டு, கட்டித் தயிரில் மூழ்க வைத்துத் தாளித்துக் கொட்டி சட்னிமாதிரி பண்ணியிருப்பார் சாம்புமாமா. அந்த வயசில் எனக்கு ரொம்பவும் அது பிடிக்கும். கேட்டுக்கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டு சாப்பிடுவேன்.<br />
<br />
அந்த சத்திரம் போன்ற ஹாலைச் சுற்றி வந்தால், இடதுப்பக்கக் கோடியில் ஒரு பிள்ளையார் கோயிலை பங்களாக்குள்ளேயே கட்டியிருப்பார்கள்...அந்தப் பிள்ளையாருக்கு தினமும் உச்சிகால பூஜை முடிந்ததும், ஏழை எளியோருக்கு இலை போட்டு எளிமையான சாப்பாடு தினமும் உண்டு.. கிட்டத்தட்ட மத்தியானம் இரண்டு மணி வரை நாலைந்து பந்திகள் நடக்கும். சாப்பிட்டு வயிறு நிறைந்தவர்கள் வாயார வாழ்த்தியது தான், அந்த குடும்பத்தையே எந்தக் குறையுமில்லாமல் வாழ வைத்தது போலும்!.. ராமசாமியின் அப்பாவுக்கு அப்பா, மற்ற சொந்தக்கார உறவுகள் என்று எண்பதைத் தாண்டியவர்களே ஏகப்பட்ட பேர் அந்த குடும்ப்த்தில் வளைய வந்து கொண்டிருப்பர்... எல்லோரும் ஏதோ வேலையில் ஈடுபட்டு எங்கங்கோ போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள்... பங்களா பூராவும் எந்நேரமும் கலகலப்புடன் 'ஜேஜே' என்ற கூட்டம் தான்! எல்லோரும் உரக்கப் பேசி உரக்க சிரித்துக் கொண்டிருப்பார்கள்.. ஏழைக் குழந்தைகளுக்கு இரவுப் பள்ளி உண்டு.. அவர்களுக்கு பாடம் படிக்க வகுப்பு போன்ற தோற்றத்துடன் கரும்பலகையும் மேஜை நாற்கலிகளுமாய் ஒரு பெரிய ஹால் உண்டு.. இரவு பள்ளி நடத்தவென்றே, டவுனிலிருந்து நாலைந்து ஆசிரியர்கள் வந்து போவார்கள்... அவர்கள் வருவது போவது எல்லாம் பங்களா காரில் தான்!..<br />
<br />
ஒருநாள், "என்ன இப்படி எல்லோருக்கும் வாரி வழங்குகிறீர்கள்?" என்று யாரோ 'ஒருமாதிரி' கேட்டதற்கு, ராமசாமியின் அப்பா, பரமார்திகமாக மேலே ஆகாயம் நோக்கி கையுயர்த்தி, "எல்லாம் அவன் கொடுத்தது; தீரத்தீர இன்னும் கொடுத்திண்டே இருக்கான்.. அவன் என்னிடம் கொடுப்பதைத்தான் நான் நாலு பேருக்குக் கொடுக்கிறேன்" என்று ரொம்ப சுருக்கமாகச் சொன்னார். இன்னொரு நாள் சாயந்திரம் இதே மாதிரி கேட்ட இன்னொருவரிடம், "என்ன புதுசா கேட்கறே?..என் தாத்தா..என் தாத்தாக்கு தாத்தா.. அவர்கள் செஞ்சதைத் தானே நானும் செய்யறேன்.. <span style="background-color: yellow;">இந்தக் குடும்பமே, ஜஸ்ட் மிடில் மென்! எல்லாம் அவனுக்குச் சொந்தம்.. எந்தக் காலத்திலே யார் செஞ்ச பூர்வபுண்ணியமோ, இந்த மேனேஜ்மெண்ட் பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.." </span>என்று 'பகபக'வென்று சிரித்துச் சொன்னது இன்னும் என் நினைவில் நிழலாடி சிலிர்ப்பேற்படுத்துகிறது..<br />
<br />
பிற்காலத்தில் நான் படித்த இந்தப் புறப்பாடலும் நினைவிற்கு வருகிறது:<br />
<br />
<span style="color: red;">"நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,</span><br />
<span style="color: red;">பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,</span><br />
<span style="color: red;">கடும்பின் கடும் பசி தீர யாழ நின்</span><br />
<span style="color: red;">நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்,</span><br />
<span style="color: red;">இனோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,</span><br />
<span style="color: red;">வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்</span><br />
<span style="color: red;">எல்லோர்க்கும் கொடுமதி--மனை கிழவோயே!--</span><br />
<span style="color: red;">பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்</span><br />
<span style="color: red;">திருந்து வேல் குமணன் நல்கிய வளனே."</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-ZbN0oQ6G3XNPzxLuv3MEPsOtwfYiZbqrYthXBF9Xio1KvWg2WVIB2qdVacyuOqOfzDS-NpWgNH_St75BEaEW4o6y0UZt3qmY9D9-BofLUz5rjSQeuconMdWyPFxZtwRxM8lX9jn-fxKD/s1600/20200706_142206.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-ZbN0oQ6G3XNPzxLuv3MEPsOtwfYiZbqrYthXBF9Xio1KvWg2WVIB2qdVacyuOqOfzDS-NpWgNH_St75BEaEW4o6y0UZt3qmY9D9-BofLUz5rjSQeuconMdWyPFxZtwRxM8lX9jn-fxKD/s320/20200706_142206.jpg" width="240" /></a></div>
<span style="color: red;">(புறநானூறு--163)</span><br />
<br />
வள்ளல் குமணனைப் பாடி பரிசில் கொணர்ந்த பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பெருந்தகை, தன் மனையாளுக்குச் சொன்னது, இப்பாடல்.<br />
<br />
கொடுத்தவன், வள்ளல்; பரிசில் பெற்ற புலவனும் அவனை விஞ்சிய வள்ளலாய் இருப்பான் போலிருக்கு என்று மனசு களியாட்டம் போடுகிறது..எப்படிப் பட்ட இனம், இந்த தமிழினம் என்று நெஞ்சு பூரிப்பால் விம்மித் தணிகிறது.. அடடா! அடடாவோ!.. என்ன அருமையான, வரிக்கு வரி பெருமிதத்தைப் பூசிக்கொண்ட வார்த்தைகளால், வார்த்தெடுக்கப்பட்ட கவிதை!...<br />
<br />
<span style="color: blue;">"உன்னை விரும்பி வந்தோருக்கும்,</span><br />
<span style="color: blue;">நீ விரும்பியோருக்கும், உத்தம குணம் கொண்ட</span><br />
<span style="color: blue;">வழிவழிவந்த உற்றோருக்கும்,</span><br />
<span style="color: blue;">பிறர்பசி காணப் பொறாது</span><br />
<span style="color: blue;">குறிப்பாலாயே உணர்ந்து அவர்தம் பசி</span><br />
<span style="color: blue;">போக்கியோர்க்கும்---</span><br />
<span style="color: blue;">இவருக்குத் தான் என்று எண்ணாது</span><br />
<span style="color: blue;">என்னையும் இது குறித்துக் கலக்காது</span><br />
<span style="color: blue;">நீண்ட நாள் கவலையின்றி வாழ இது</span><br />
<span style="color: blue;">நமக்காயிற்று என்றும் எண்ணாது</span><br />
<span style="color: blue;">எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடு--</span><br />
<span style="color: blue;">என் மனைக்கிழத்தியே--- இந்த</span><br />
<span style="color: blue;">செல்வம்?...இது முதிரத்துச் சொந்தக்காரனான</span><br />
<span style="color: blue;">நம் குமணன் நல்கியது, அல்லவா?..</span><br />
<br />
<br />
கரன்ஸி நோட்டுகளை அடுப்புப்பற்ற வைத்தாலும் பத்து தலைமுறைக்குக் காணும் சொத்து என்று செட்டிநாட்டுப் பக்கம் பேச்சுக்குச் சொல்வார்கள். அப்படிப்பட்ட செல்வத்தைப் பெற்ற செல்வந்தர்கள் இரக்கத்தின் அடிப்படையிலும், தர்மம் செய்ய வேண்டுமென்கிற இயல்பாக வழிவழிவந்த குடும்ப குணநலனாகவும், வசதிகுறைந்த வறியோருக்குக் கொடுப்பதை தானம் என்பார்கள். வரும் வருமானத்தில் ஒரு சதம் தானத்திற்கு ஒதுக்கி வைப்பதை சில குடும்பங்களில் ஒரு பழக்கமாகவும் கொண்டுள்ளார்கள்.<br />
<br />
ஆனால், தானே வறிய நிலையில் இருக்கையில், இன்னொருவரிடம் தன் சொந்த திறமை காட்டிப்பெற்ற பரிசிலை, எல்லோருக்கும் வாரி வழங்குவது என்பது நினைத்துப் பார்க்கவே பெரிய விஷயமாகப் படுகிறது. அதுவும், "வல்லாங்கு வாழ்வோம் என்று எண்ணாது எல்லோருக்கும் கொடுத்துவிடு" என்று சொன்ன பெருஞ்சித்திரனாரின் குணமேன்மை நினைத்து நினைத்து மகிழத்தக்கது. 'இருப்பது தீர்ந்துவிட்டால், இருக்கவே இருக்கிறான், புலவர்களைக் காக்கும் புரவலன் குமணன்! பாடிப் பரிசில் பெறலாம்; பெறுவது என்பது பலருக்குக் கொடுத்து மகிழவே' என்கிற புலவர் பெருமானின் செம்மாந்த பண்புநலனும் ஊடும் பாவுமாய் பாட்டில் பரவியிருப்பதும் உன்னிப்பாய் கவனித்தால் புலப்படும்.</div>
</div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-57294425405131373522020-06-25T01:10:00.001-04:002020-06-25T07:37:47.855-04:00இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong><span style="color: red; font-size: large;">ம</span></strong>றக்கமுடியாtத திருநெல்வேலி நினைவுககள் இந்த வயதிலும் இ்ப்பொழுதெல்லாம் அடிக்கடி நினைவுக்கு வந்து சந்தோஷ அலைகளை என்னுள் புரளச் செய்கின்றன. <br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtZTPyqE-HCapfaXVChdmfWTbzQwjvnHtuDpJyLvZaZO9Ygvb_ntOBqxOpf2oh1i2ZRh7-lQt8bsZyYaZFFJJgZ9RFya-8QskboKzb8CHrge76G5HmkxREWYUC4g0OYwqw8jy9srXaBOsO/s1600/%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588+%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtZTPyqE-HCapfaXVChdmfWTbzQwjvnHtuDpJyLvZaZO9Ygvb_ntOBqxOpf2oh1i2ZRh7-lQt8bsZyYaZFFJJgZ9RFya-8QskboKzb8CHrge76G5HmkxREWYUC4g0OYwqw8jy9srXaBOsO/s1600/%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588+%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" /></a>திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் பள்ளியில் ஆறாவது ஏழாவது வகுப்புகளை முடித்துக் கொண்டு எட்டாவதுக்கு திருநெல்வேலிக்கு வந்து விட்டேன். திருநெல்வேலியில் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரிப் பள்ளியில் படிப்பு. மஹாகவியும் புதுமைப்பித்தனும் பயின்ற பெருமை வாய்ந்த பள்ளி இது.<br />
<br />
அது 1957-ம் ஆண்டு. திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையில் வாடகை வீடு. வண்ணாரப்பேட்டை தாமிரபரணி படித்துறையில் இறங்கி ஆற்றைக் கடந்து அக்கறையிலிருந்த மாந்தோப்பில் நுழைந்து ஏறி இறங்கி ரோடுக்கு வந்தால் ஜங்ஷன் அந்த வயது குஷியில் கொஞ்ச தூரம் தான். திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் தான் ம.தி.தா. இந்துக் கல்லூரி சார்ந்த ஹைஸ்கூல் இருந்தது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு என்பது அப்பொழுதெல்லாம் பதினோரு வகுப்பு வரை. ஆறாவது வகுப்பிலிருந்து பாரம் (FORM) என்று சொல்வார்கள். ஆறாவது பாரம் தான் எஸ்.எஸ்.எல்.ஸி.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoNPpWW_t4UXGY_G43IYGvmSmndxeT2FnegnPvkjdFQPC2BrdGJiPqAgbeEM7C7XaWXXr4dQQB77tlhyiY092oKTR4u7yKYRO9mcybmJcetNLxGga69gu7FBGXhzI0DuKA4Lwxo6v1Txry/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258B+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzdnJxn59usVh0Xzz7dxQgRY0Ja6sW10GTmGFR9XrXEPbc9I6rGNYyIwKCMpC48DROwI7W7NIMQ41XiV5McacUgRxi2tgodmuKTU1iEx3Hp6OtP4DeUzkUVgEzJpcIvMVZCN9_uHHxvYYs/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258B%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AE%25BE.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="182" data-original-width="276" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzdnJxn59usVh0Xzz7dxQgRY0Ja6sW10GTmGFR9XrXEPbc9I6rGNYyIwKCMpC48DROwI7W7NIMQ41XiV5McacUgRxi2tgodmuKTU1iEx3Hp6OtP4DeUzkUVgEzJpcIvMVZCN9_uHHxvYYs/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258B%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AE%25BE.jpg" /></a>ஆற்றைக் கடக்கும் பொழுதே சுலோச்சனா முதலியார் பாலம் கண்ணுக்குத் தட்டுப்படும். பாலத்தில் நடப்பது சுற்றுவழி என்று ஆற்றைக் கடந்தே தினம் பள்ளி செல்வோம். அந்த வயதில் நண்பர்களுடன் முட்டி அளவு நீரில் ஆற்றை அளைந்து கொண்டு செல்வது அற்புதமாக இருக்கும். தினந்தோறும் காலைக் குளியல் தாமிரபரணி ஆற்றில் தான். எங்களது நண்பர்களின் கூட்டம் பெரிய ஜமா. சுமார் 15 பேர்கள் தேறும்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi70AmEnxxYe8qZAYvPeBTEWGZ1X6R-DG-cNIEsoqLTAJQ85S6PYHIqfREv35xnR7SVvO-2YhI__l6aMJXSRjDfibMaOmC1qhqodvO-dHIyJNOGYw83HTtYyRA_qHoLiu5MfFKpgCIz5q3X/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="219" data-original-width="318" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi70AmEnxxYe8qZAYvPeBTEWGZ1X6R-DG-cNIEsoqLTAJQ85S6PYHIqfREv35xnR7SVvO-2YhI__l6aMJXSRjDfibMaOmC1qhqodvO-dHIyJNOGYw83HTtYyRA_qHoLiu5MfFKpgCIz5q3X/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" /></a>தாமிரபரணி ஆற்றை நினைவில் நினைத்து நினைத்து எழுத எழுத இனிக்கிறது. புதுமைப் பித்தன் வாழ்ந்த வண்ணாரப் பேட்டை சாலைத்தெரு, இன்று புதுமைப்பித்தன் வீதியாகியிருக்கிறது. வண்ணாரப்பேட்டை எங்கள் <br />
பகுதியிலிருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் நீண்ட தெரு வழியே நடந்தால், ஐந்து நிமிட நடை தூரத்தில் படித்துறை வந்து விடும். படித்துறையில் பிள்ளையார். காலையில் ஆற்றுக்கு வந்துக் குளித்துவிட்டுச் சென்றிருக்கும் பெண்கள் கூட்டம் வழிபட்டிருக்கும் சங்குப்பூக்கள் திருமேனியில் செருகப்பட்டிருக்கும் பிள்ளையாரை உற்றுப் பார்த்தால் சிரித்துக் கொண்டிருப்பது போலத் தோற்றமளிப்பார். நாங்களும் பிள்ளையாரை ஒரு சுற்று சுற்றித் தோப்புக்கரணம் போட்டுவிட்டு படித்துறைப் படிகளில் இறங்கி தாயின் மடி நோக்கி ஓடும் குழந்தைகள் போல, மணல்வெளி தாண்டி ஆறு நோக்கி ஓடுவோம்.<br />
<br />
அந்த ஏழுமணிக்கெல்லாம் காலைக் குளியலுக்காக நண்பர்கள் படித்துறையில் கூடி விடுவோம். அந்தக் காலைப் பொழுதில் கணுக்கால் நீரில் படும் பொழுதே உற்சாகம் உள்ளத்தில் கொப்பளிக்கும். இடுப்பும், மார்புப்பகுதியும் நீரில் அழுந்தி, இருகைகளையும் நீட்டி நீரைத் துளாவுகையில் பரம சுகமாக இருக்கும். ஜிலுஜிலுப்பு என்பது அறவே இல்லாத அந்த வெதுவெதுப்பு எப்படித்தான் தாமிரபரணிக்கு வாய்த்தது என்பது அந்த வயதில் எங்களுக்குப் புரியாத அதிசயம்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT-HIF14imMNZ6Y95xxQ5g8OfzOMJJvgRcxSkZdPA88bSeD5O2MBNeS8UkAqX3RSBPVDMIKhVTr5Ue8yfCVuqrdU1DSxNWI2XiXsA2H-8rkuKPvUufbs5YzSct44NG-bSLnyP6kDWtbTbH/s1600/%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AF%2588.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="276" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT-HIF14imMNZ6Y95xxQ5g8OfzOMJJvgRcxSkZdPA88bSeD5O2MBNeS8UkAqX3RSBPVDMIKhVTr5Ue8yfCVuqrdU1DSxNWI2XiXsA2H-8rkuKPvUufbs5YzSct44NG-bSLnyP6kDWtbTbH/s1600/%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AF%2588.jpg" /></a>ஆற்றின் வடகிழக்குப் பக்கம் இக்கரையிலிருந்து முக்கால்வாசி தூரத்தில் ஒரு பெரிய யானையே நீரில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிற மாதிரி, யானைப்பாறை என்று அழைக்கப் படும் மிகப்பெரிய பாறை ஒன்று உண்டு. யானையின் முதுகு மட்டுமே வெளித் தெரிகிற மாதிரி முண்டும் முடிச்சுமாக நீரில் அமிழ்ந்திருக்கும் அந்த பெரிய பாறையின் மேல் பகுதி மட்டும் கண்ணுக்குத் தெரியும்.<br />
<br />
பாறையைச் சுற்றி சுழல் போல் ஆற்றுநீர் சுழித்துக் கொண்டோடும். . அந்தச் சுழலின் போக்குக்கு எதிராக நீந்தி யார் முதலில் யானைப் பாறையின் முகட்டுக்கு ஏறுகிறார்கள் என்பது தினம் தினம் எங்களுக்குள் போட்டி.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBGaVbBajjO5te1xIorc6i0BvmJmBwaFRl7S79dHujRYxRKTaGUewtXkmTkR8tL8Mi3SPyuwZuIZxbJnGnu5dm-nHMs0K9D42zNuXodNp57YWQHOI7XPI6BkZ8EXm8SGZ7r63JmwogSyv7/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25BF+%25E0%25AE%2586%25E0%25AE%25B1%25E0%25AF%2581.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><br /></a></div>
எந்த முயற்சியும் வேண்டாம். அந்தச்சுழல் பக்கம் லேசாக உடலைக் கொடுத்தால் போதும். பாறையைச் சுற்றி அது இழுத்துக் கொண்டு போகும் வேகத்தில், நீரில் அழுந்திய பாறையின் துருத்திக் கொண்டிருக்கும் ஏதாவது முனை பற்றி, பாறையின் பக்கவாட்டு பள்ளத்தில் கால் புதைத்து எழும்பி பாறை பற்றி ஏறி விடலாம். சில நேரங்களில் பாறையின் முதுகு கையில் படாமல் வழுக்குவதும் உண்டு. அந்த நேரங்களிலெல்லாம், ஆற்றின் சுழலின் போக்குக்குப் போய், இன்னொரு சுற்று சுற்றி வேறு பகுதியில் ஏற வேண்டும். சில நேரங்களில் பச்சை நிறம் படிந்த நீரின் அடி ஆழத்திற்குப் போய் விடுவதுண்டு. ஆழத்திற்குப் போனால் மறக்காமல் ஆற்றின் அடி ஆழ மணலை உள்ளங்கையில் வாரி எடுத்து வெளியே வருவோம். நீரின் மேற்பரப்புக்கு வந்து மணலை வீசி வெற்றி வீரரகள் போல விளையாடுவதுண்டு. இளம் வயதின் திகட்டாத கொண்டாட்டங்கள்.<br />
<br />
ஒருதடவை இப்படித்தான் யானைப் பாறையின் பிடி கைக்கு சிக்காமல் வழுக்கி ஆற்றின் அடி ஆழத்திற்குப் போனவன், சுழலின் போக்குக்கே இழுத்துக்கொண்டு போய், தட்டுத்தடுமாறி எப்படியோ இன்னொரு பக்கம் பாறை பிடித்து மேலேறி விட்டேன். கால் வெடவெடவென்று நடுங்குகிறது. இப்படிப்பட்ட அனுபவம், இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. மறுபடியும் நீரில் குதித்துத்தான் கரைக்கு மீளவேண்டும். என்னைத் திடப்படுத்திக்கொண்டு தைரியத்துடன் நீரில் குதித்து சுழல் தாண்டி மீண்டேன்.<br />
<br />
எனது வலது கை ஆயுள் ரேகையில் வெட்டிச்செல்லும் தீவுக்குறி ஒன்றுண்டு. பின்னாளில் என் கைபார்த்த ரேகை ஜோதிடர் ஒருவர், 'உங்களுக்கு பதிமூன்று-பதினாங்கு வயதில் கண்டம் ஒன்று வந்திருக்குமே' என்றார். நானும் இதுதான் அந்த கண்டம் போலும் என்று நினைத்துக் கொள்வதுண்டு.<br />
<br />
இப்படிப்பட்ட இளமை நினைவுகளையொத்த இன்னொன்றைப் படிக்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ, அந்த செய்தி தரும் இன்ப அனுபவத்தில் நமது முழு மனசும் ஒன்றித்திளைத்து வார்த்தைகளில் வடிக்க இயலா மகிழ்ச்சியளிக்கிறது.<br />
<br />
மாறிச் செல்லும் கால வேகத்தில் கூட இளமைக்கால சில விளையாட்டுகள் எக்காலத்தும் மாறுதலற்ற நிலையானவை போலும்! இளையோர் ஆற்றில் குளிக்கையில், ஆற்றின் அடிச்சென்று கைநிறைய மணல் அள்ளி, தான் ஆற்றின் அடிஆழம் வரைச் சென்றதற்கு சான்று போல அந்த மணலை மற்றையோருக்குக் காட்டி மகிழ்வது சங்ககாலத்தில் கூட இருந்த ஒரு விளையாட்டு தான் என்று 'தொடித்தலை <br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3wWbFVM9LCdollRyOqmVPvis1Kpp19ocfE1s6PiSRYdRe7VycntNyCHsKKVRAUVbkzzt37TX0t-xFhW-8lStyl50sWY3LDiufx6CufhDga7LIIDDjLJ9vmKNVpP98u2aQoEp5eDHLgwOb/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%2582%25E0%25AE%25B1%25E0%25AF%2581.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3wWbFVM9LCdollRyOqmVPvis1Kpp19ocfE1s6PiSRYdRe7VycntNyCHsKKVRAUVbkzzt37TX0t-xFhW-8lStyl50sWY3LDiufx6CufhDga7LIIDDjLJ9vmKNVpP98u2aQoEp5eDHLgwOb/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%2582%25E0%25AE%25B1%25E0%25AF%2581.jpg" /></a>விழுத்தண்டினாரி'ன் புறப்பாடலின் மூலம் நமக்குத் தெரிய வந்து வியப்பு மேலிடுகிறது...<br />
<br />
தொடரும் இருமலுக்கிடையே, தமது இளமை நினைவுகளை எவ்வளவு அழகாக அந்த புலவர் பெருந்தகை நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்:<br />
<br />
<br />
<em><span style="color: red;">இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்<br />செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,<br />தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,<br />தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,<br />மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு<br />உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,<br />நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,<br />கரையவர் மருள, திரையகம் பிதிர,<br />நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,<br />குளித்து மணற் கொண்ட கல்லா இளமை<br />அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ--<br />தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,<br />இரும் இடை மிடைந்த சில் சொற்<br />பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?</span></em><br />
<br />
<span style="color: blue;">(<span style="color: black;">புறநானூறு--243)</span></span><br />
<br />
<span style="color: #cc0000;">இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருத்தம் மேலிடுகிறது<br />மணல் பிடித்துச் செய்த உருவிற்கு<br />கொய்த பூவைச் சூட்டியும்<br />பொய்கையில் இளம் பெண்களின் கைகோர்த்துக் களித்ததுவும்<br />அவர் தழுவும் பொழுது தழுவியும்<br />அசைந்தாடுகையில் அசைந்தாடியும்<br />ஒளிவு மறைவற்ற வஞ்சனையறியா<br />நண்பர் குழாமொடு விளையாடி மகிழ்ந்ததுவும்<br />மருத மரத்தின் உயர்ந்த கிளைகள் உயரம் தாழ்ந்து<br />நீரோடு படிந்தவிடத்து அக்கிளை பற்றி ஏறி<br />உச்சிக் கிளை அடைந்து<br />கீழே நிற்போர் வியக்க, அவர் மீது நீர் திவலை விழ<br />'தொடும்..' என நீரில் குதித்து, மூழ்கி<br />ஆழ் அடிச் சென்று அடிமணல் அள்ளிக் காட்டியும்<br />--- இப்படியான கள்ளமிலா<br />இளமைக்காலம் கழிந்து சென்றதுவே!<br />ஊன்று கோலை ஊன்றி, நடுக்கத்துடன்<br />இருமலுக்கிடையே சில சொற்கள் மொழியும்<br />முதியவனான எமக்கே<br />இனி எப்போது கழிந்த அக்காலம் வாய்க்கும்?...</span><br />
<br />
<br />
இப்பாடலை இயற்றியவரின் பெயர் தெரியவில்லை.. ஆனால் அவர் தன்னைத் தானே வர்ணித்த கோலேந்திய அவரின் தோற்றம், இலக்கிய ஏடுகளில் அழியாது அவரை நினைவு படுத்தும் சொல்லாக--- 'தொடித்தலை விழுத்தண்டினார்' என்று---அவரின் பெயராகவே ஆகிவிட்டது!<br />
<br />
'சென்ற காலம் மீளாது இனி' என்பது சித்தர்களின் வாக்கு. ஆனால் சென்ற காலம் நெஞ்சில் பதித்த தடங்களின் வடுக்கள் நிலையாக நினைவில் பதிந்தவை; குறைந்த பட்சம் எப்பொழுதாவது அமைதி வேண்டிடும் போதோ, அல்லது அமைதியாக இருக்கும் பொழுதோ அவற்றை நினைவுச் சுருள்களில் ஓட்டிப் பார்த்து மகிழும் பொழுது அடையும் இன்பமே அலாதி தான்!<br />
<br />
அப்படி அடிக்கடி மகிழ்ச்சியில் ஆழ்வது இந்தக்காலத்துக்கே வாய்த்த 'டென்ஷனை'க் குறைக்கும் அருமருந்து என்பது மட்டும் உறுதி.<br />
<br /></div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-26347143180510741732020-06-12T06:44:00.000-04:002020-06-12T06:44:05.847-04:00யாயும் ஞாயும் யாராகியரோ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong><span style="color: red; font-size: x-large;">ஒ</span></strong>ரு நெருங்கிய நண்பரின் மகளின் திருமணத்திற்குப் போயிருந்தேன். நான் அவர்கள் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் நண்பரின் மகள் மிகப்பாசமாக என்னுடன் பழகுவாள். என் மகளின் வயதுதான் அவளுக்கும் இருக்கும்.<br />
<br />
கல்யாண நிகழ்ச்சிகளெல்லாம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. திருமணத்திற்கு வந்திருந்த பெரும்பாலான நண்பர்களும், உறவினர்களும் சாப்பிட்டு விட்டுக் கலைந்து விட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் கல்யாணச் சத்திரத்தைக் காலி பண்ண வேண்டும்.<br />
<br />
பெண் வீட்டார் தங்கியிருந்த அறையில், கல்யாணப்பெண் தன் பெற்றோரின் கைபிடித்துக் கண்கலங்குகிறாள். அவளுக்கு ஒரே ஒரு தங்கை. அவளின் இன்னொரு கை தன் தங்கையின் தலைவருடித் தடுமாறுகிறது. இத்தனை வருடங்கள் சீராட்டி, கொஞ்சிக் குலவி, தனக்குக் கல்யாணப் பேற்றை அளித்த பெற்றோரைப் பிரிந்து, வேறொரு வீட்டுக்குச் சென்று வாழ வேண்டுமே என்கிற தடுமாற்றம்.. <b><i><span style="color: red;">பாசம் என்பது இறுக்கிக் கட்டிய கயிறு போன்றது. அதை லேசில் படாரென்று அறுத்துக் கொண்டு செல்ல இயலாது.. கட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தித்தான் விடுபட வேண்டும்.</span></i></b><br />
<br />
பெண்களாய்ப் பிறந்தவர் சுமக்க வேண்டிய பாரத்தை நினைத்தால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. பாட்டியாய்,தாயாய், தமக்கையாய், தங்கையாய், தாரமாய், மருமகளாய், மாமியாராய் பெண்களைத் தொட்டு, ஓ... எத்தனை உறவின் மேன்மைகள்....ஒளி பட்ட இடத்திலிருந்து பிரகாசிக்கும் வைரப் பளீரிடலகள்!...<br />
<br />
பெண்களும் மிக லேசாய், இலகுவாய் இந்த பெரும் பாரத்தைப் புரட்டிப்போடும் லாகவம், .. அந்த மிருதுவான கைகளுக்கும்,தோள்களுக்கும் இந்தப் பாரம் பஞ்சாக மாறிப்போகும் விநோதம் தான் படைப்பின் ரகசியம்!<br />
<br />
அந்தக் கல்யாண தினத்தன்று என் நண்பர் தன் மகளை, மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்த அறைக்கு, மனைவி-மாமன் மக்களோடு அழைத்துச் சென்று அவர்களிடம் விட்டுவிட்டுப் போகும் பொழுது, கண்கலங்கித் தன் சம்பந்தியிடம், "ஸார்...அவளுக்கு ஒன்றும் தெரியாது...குழந்தை மனசு. அப்படியே வளர்ந்து விட்டாள்..நீங்கள் தான் தந்தையாய்..தாயாய்.." என்று தழுதழுத்த பொழுது, அருகிலிருந்த எனக்கு நெஞ்சம் கனத்து என்னவோ போலாகிவிட்டது.<br />
<br />
அவரது சம்பந்தி,"அதெல்லாம் ஒன்றும் கவலைப்படாதீர்கள்.. என்றைக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாளோ, இனி அவள் எங்கள் மகள்..."என்று சொன்னதும், வழிவழியாய் வழக்கமாய்---<br />
<br />
--- பெண்ணைப் பெற்றவர்களாலும், இன்னொரு வீட்டு மருமகளாய் பெண்ணை அனுப்பியவர்களாலும் தான் இவற்றையெல்லாம் உணர்வு பூர்வமாக உணரமுடியும் என்று தோன்றுகிறது...<br />
<br />
போனவாரம் நண்பர் போன் போட்டு எனக்குச் சொன்னார்: "பிரமிளா வந்திருக்காடா... உங்களையெல்லாம் பார்க்கணும்ங்கறா...நீயும், தங்கையும் (என் மனைவியும்) வந்திடுங்க..சாப்பாடு இங்கே தான்..என்ன, தெரிஞ்சதா?" என்று உத்திரவு போடுகிற மாதிரிச் சொன்னார்.<br />
<br />
நானும் மனைவியைக் கூட்டிக்கொண்டு நண்பர் வீட்டிற்குச் சென்றேன். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டபடியால், பிரமிளாவைப் பார்க்க வேண்டும், நல்ல சேதி சுமந்து வந்திருக்கும் அவளுடன் பேசவேண்டுமென்று எங்களுக்கும் மிகுந்த ஆசை.<br />
<br />
வாசலில் நாங்கள் செருப்பைக் கழட்டிப் போடும் போதே ஓடி வந்து எங்களை அன்புடன் உள்ளே அழைத்துச் சென்றாள் பிரமிளா...கொஞ்சம் சதை போட்டிருந்தாள்; முகத்தில் களையும், கலகலப்பேச்சும்----<br />
<br />
சாப்பிடும் போது, தன் அம்மாவிடம் அவள் சொன்னதை அப்படியே இங்கு எழுதியிருக்கிறேன்.. "அம்மா!...<strong>எங்க வீட்லே</strong> வழக்கமா இட்லிதான் காலை டிபனுக்கு.. தொட்டுக்க சட்னியும், ஏதாவது பொடியும் செஞ்சிடுவேன்.. இவருக்கு தோசைன்னா, <strong>அப்பா--அம்மாக்கு </strong>இட்லினா, இஷ்டம்! அதனால், முதல் நாள் மாவை----"<br />
<br />
-- இங்குதான் பெண் என்பவள் ஜொலிப்பதாக எனக்குப் பட்டது. 'இதுதான் வாழ்க்கை நியதி..இதுதான் சாஸ்வதம்' என்று தன் கணவனின் தாய் தந்தையரை,'அப்பா--அம்மா' என்று அழைக்கிற மாதிரி, எவ்வளவு இயல்பாக உறவுகள் மாறிவிட்டன, பார்த்தீர்களா?..<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPOzpkKqN24UPicyR4d0od4e2xyaS6I1g1XT9qfIR9GRxp0NC91Ah81LnfuE2FlvEi-OXVUb8Z-rKA12wprAaw_9HFJ5CiY4XYE9Buj80E3GuxsZ5PxUncueJO-VMATiksio3G_q9WdbK5/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="299" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPOzpkKqN24UPicyR4d0od4e2xyaS6I1g1XT9qfIR9GRxp0NC91Ah81LnfuE2FlvEi-OXVUb8Z-rKA12wprAaw_9HFJ5CiY4XYE9Buj80E3GuxsZ5PxUncueJO-VMATiksio3G_q9WdbK5/s320/%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" width="273" /></a></div>
<br />
வியப்புடன், புருவமுயர்த்தி தொடுக்கும் இந்தப் பெண்ணின் அழகு வரிகளைப் பாருங்கள்!<br />
<br />
<b><span style="color: red;">"யாயும் ஞாயும் யாராகியரோ?</span></b><br />
<b><span style="color: red;">எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்?</span></b><br />
<b><span style="color: red;">யானும் நீயும் எவ்வழி அறிதும்?</span></b><br />
<b><span style="color: red;">செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்</span></b><br />
<b><span style="color: red;">தாம் கலந்தனவே."</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<span style="color: red;">(</span><span style="color: red;">குறுந்தொகை:40)</span><br />
<br />
யாய் என்றால் என் தாய் என்று அர்த்தம். ஞாய் என்றால் உன் தாய். எந்தை என்றால் என் தந்தை, நுந்தை என்றால் உன் தந்தை என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை.<br />
<br />
எவ்வளவு எளிய வார்த்தைகளில் கணவன் - மனைவி உறவின் தாத்பரியத்தின் சரித்திரமே சொல்லப்படுகிறது பாருங்கள்:<br />
<br />
<br />
என் தாயும் உன் தாயும் ஒருவருக்கொருவர் யாரென முன்பே தெரியாதவர்கள். அதே மாதிரி தான் என் தந்தையும் உன் தந்தையும் தங்களுக்குள் இந்த உறவுக்கு முன் அறிமுகமற்றவர்கள். அவ்வளவு தூரம் போவானேன்?. நாம் இருவருமே ஒருவருக்கொருவர் முன்னமேயே அறியாதவர்கள். ஆனால் நம் இருவர் நெஞ்சங்கள்?.. ஒன்றை ஒன்று அறிந்து கொண்ட வாக்கில் பின்னிப் பிணைந்து போனதுவே என்று பெண் மருகுகிறாள். அந்தப் பின்னிப் பிணைதலுக்கு செம்புலப்பெயல் நீர் போல என்று ஒரு உதாரணத்தை புலவர் கையாண்ட நேர்த்தி தமிழ் இலக்கியத்தில் மறக்கவொண்ணா உதாரணமாய் பதிந்து போயிற்று.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRgIEvBV_3-IeFNDIpi5flnfl38mu0Rap6xWOfl9ZjIvksb5hNWQcskjHfYpJcI7xaEeuRY_z2z5x9DaSNxyQ5EDKrST2DoSIVw7UvrKKk0jEVVMLo2X6buNmbYT_FCRLpt5w0fa1RDs7b/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; display: inline !important; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="200" data-original-width="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRgIEvBV_3-IeFNDIpi5flnfl38mu0Rap6xWOfl9ZjIvksb5hNWQcskjHfYpJcI7xaEeuRY_z2z5x9DaSNxyQ5EDKrST2DoSIVw7UvrKKk0jEVVMLo2X6buNmbYT_FCRLpt5w0fa1RDs7b/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg" /></a>சோவென்று மழை தாரை தாரையாய் பெய்து செம்மண் நிலம் பூராவும் விரவிப் பெருகுகிறது. நிறம் இல்லா நீர் செம்மண்ணில் ஒன்றரக் கலந்ததும் மண்ணின் செம்மை நிறத்தை தான் உள்வாங்கி பூசிக் கொள்கிறது. நீரின் நெகிழ்வுத் தன்மை நிலத்தில் ஊடுறுவி நிலமே நெகிழ்ந்து போகிறது. இதில் எது நீர், எது நிலம் என்று பிரித்துப் பார்க்கவியலாத பிணைப்பு இது. இந்தப் பிணைப்பை தலைவன்--தலைவி நெஞ்சப் பிணைப்புக்கு உதாரணமாக்குகிறார் புலவர்.<br />
<br />
'இந்தச் செம்புலப்பெயல் நீர் போல' உவமையை சிலாகித்து, அதற்கு வெவ்வேறான விளக்கங்கள் கூறி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள்! அதனால், மற்ற வரிகள் கிளர்த்தும் தொடர்பான சிந்தனைகளில் மனம் போய்விட்டது..<br />
<br />
இந்த அற்புதமான பாடலை எழுதிய புலவரின் பெயர் கூட அறிய முடியாமல் போய்விட்டபடியால், அவர் பெயரையே "செம்புலப்பெயனீரார்" என்று வழங்கும் படி ஆயிற்று!<br />
<br />
எட்டுத்தொகை நூல்களில் அடங்கிய ஒரு தொகை நூல் குறுந்தொகை. எட்டு வரிகளுக்குள் அடங்கிய 391 பாடல்கள் குறுந்தொகையில் நமக்குக் கிடைத்திருக்கின்றன. 205 புலவர்களின் பாடல் தொகுப்பு இது. காதல் வாழ்வின் அகப்பொருள் இன்பத்தை அள்ளித் தெளிக்கும் பாடல்கள் அத்தனையும். தமிழர் தம் பண்டைய பெருமிதங்களில் ஒன்றாய் இன்றும் நம்மைக் கிளர்ச்சியடையச் செய்யும் மயக்க வரிகளை உள்ளடக்கிய அற்புதம் குறுந்தொகையில் நிகழ்ந்திருப்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.</div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-66810333937722457532020-06-03T04:14:00.000-04:002020-06-03T04:15:50.957-04:00உயிரில் கலந்து உணர்வில் ஒன்றி....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="Apple-style-span" style="color: red; font-size: x-large;">மே</span>ட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது.<br />
<div>
<br /></div>
<div>
"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்டுமா?" என்றான் உமாபதி. பஸ் நிலையத்தின் வெளிப்பக்க மூலையில் ஒரு கிராமத்து பாட்டி கோணியில் குவித்து வைத்திருந்த மஞ்சமஞ்சேரென்ற பழங்களைப் பார்த்த்தும் தான் அவனுக்கு இந்த நினைப்பு வந்தது.</div>
<div>
<br /></div>
<div>
"எதுக்கு?" என்று கேட்கிறமாதிரி உமா வில்லாக புருவங்களை வளைத்தாள்.</div>
<div>
<br /></div>
<div>
"மேட்டுப்பாளையம் தாண்டியவுடனேயே ஆரம்பித்து விடும். வழிபூரா வளைந்து வளைந்து ஹேர்-பின் பெண்ட்ஸ்" என்றவன், அவளுக்கு மிக நெருக்கத்தில் வந்து "அதுக்கும் எலுமிச்சைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறாயா?" என்றான்.</div>
<div>
<br /></div>
<div>
"உவ்வே தானே?" என்று அவள் முகத்தை இயல்பாக சுளித்துக் காட்டிய பொழுது, அவளை அப்படியே அள்ளி எடுத்து பஸ் நிலையம் என்றும் பாராமல் ஒரு சுற்று சுற்றலாம் போலிருந்த்து உமாபதிக்கு. அறிவுக் கொழுந்து தான். ஒரு விஷயத்தை சுட்டி பேசினதுமே, எப்படிப் பாயிண்ட்டைப் பிடிக்கிறாள் என்று அவனுக்கு ஆச்சரியம். இப்படிப்பட்ட ஒரு மனைவி கிடைத்ததில் பெருமை.</div>
<div>
<br /></div>
<div>
"அதெல்லாம் எனக்கு வராது.. கொடைக்கானலில் இருந்திருக்கேன் இல்லையா, இந்த சுத்தல் எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டது தான்" என்றாள்.</div>
<div>
<br /></div>
<div>
"எதுக்கும் வாங்கிக்கறேன். எனக்கு சும்மாக்காச்சும் கையிலேயாவது வச்சுக்கணும்" என்ற உமாபதி பாட்டி கேட்ட காசைக் கொடுத்து இரண்டுக்கு நாலாகவே வாங்கிக் கொண்டான்.</div>
<div>
<br /></div>
<div>
"உமா.. வாங்க.. பஸ்ஸை எடுக்கப் போறான் போலிருக்கு.." என்று ஒரு சினிமா போஸ்டரைப் பார்த்து தயங்கி நின்றவனை அவசரப்படுத்தினான் அவள்.</div>
<div>
<br /></div>
<div>
"அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் எடுத்திடமாட்டான். இன்னும் டிக்கெட்டே சேரலே.. எடுக்கற மாதிரி, ஒரு 'பாவ்லா'; அவ்வளவு தான். உமா, நீ என்ன செய்றே?.." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவன், அவளைப் பார்த்து சிரித்தான்.</div>
<div>
<br /></div>
<div>
"என்ன, உமா?.." என்று அவள் திகைக்க, "எஸ்.. இதான்.. இதான்.." என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.</div>
<div>
<br /></div>
<div>
எதற்குச் சிரிக்கிறான் என்று தெரியாமல் அவள் விழித்தாள். "எதற்கு உமா இந்த சிரிப்பு?" என்றவள் கைபிடித்து அழுத்தினான். "என்னப் பொருத்தம், இந்தப் பொருத்தம்'னு ஒரு சினிமா பாட்டு இருக்குலே, அது போல இருக்கு, நம்ம பொருத்தம்", என்று மீண்டும் சிரித்த பொழுது அவளுக்குப் புரிந்து விட்டது.</div>
<div>
<br /></div>
<div>
"நீயும் என்னை 'உமா'ன்னு கூப்பிட, நானும் உன்னை 'உமா'ன்னு கூப்பிட பாக்கறவங்க, என்னாடா இது சரியான பைத்தியங்களா இருக்குன்னு நெனைக்கப் போறாங்க.."</div>
<div>
<br /></div>
<div>
"அதுக்கு என்ன செய்யறது?.. அத்தனைப் பொருத்தங்களோட, இப்படிப் பெயர் பொருத்தமும் அமைஞ்சிடுச்சி... இவங்களுக்காக பெயரையா மாத்திக்க முடியும்?"</div>
<div>
<br /></div>
<div>
"ஒண்ணு செய்யலாம். உன் பேரை ஒண்ணும் செய்ய முடியாது .. என் பேரை.. ஆங்.. என்னை நீ இனிமே, 'பதி'ன்னு கூப்பிடேன்"</div>
<div>
<br /></div>
<div>
"குட்.. பதியே.. பிராணநாதா.." என்று அடக்கமுடியாமல் சிரிப்பை அடக்கிக் கொண்டு உமா கூப்பிடச் சிரித்தான் உமாபதி.</div>
<div>
<br /></div>
<div>
இந்தப் புதுமணத் தம்பதிகளே இப்படித்தான். பெரிசா விஷயம்னு எதுவும் வேண்டாம். எதை ஒட்டியும் சிரிப்புத்தான். எதைப் பார்த்தாலும் புதுசு தான்.</div>
<div>
<br /></div>
<div>
போனவாரம் கல்யாணம். இப்போ ஹனிமூனுக்கு ஊட்டி. நேரே குன்னூர் போய் சிம்ஸ் பார்க்கில் ஒரு சுற்று சுற்றி சாயந்திரம் ஊட்டியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் அடைக்கலம் ஆகி, அதைத் தொடர்ந்து நாலு நாளைக்கு ஊட்டியில் தான்; ஒத்தகமந்துவில் தான்; உதகையில் தான்.</div>
<div>
<br /></div>
<div>
நிஜமாகவே பஸ்ஸை எடுத்து விட்டான். ஓடிவந்து ஏறிக் கொண்டவர்கள் முதலிலேயே குறித்து வைத்திருந்த ஜன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
</div>
<div>
உமாபதி சொன்னது சரிதான். மேட்டுப்பாளைய மலை அடிவார எல்லை தாண்டியவுடனேயே, சுற்றிச் சுற்றி மேலேறும் மலை வளைவுச் சுற்றுகள் ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு நீண்ட திருப்பத்துக்கும் சீட்டின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் பயணிகள் 'சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு' என்று அலைக்கழிக்கப் பட்டார்கள். </div>
<div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPBHjIa_6kNOUzPtKMlTmk-evMmJDo9aG24m28exffarvMlTg7EhKd_8fYTGsqXieeNBrZczyrRBapJyZvk3OOdkppGSlhtE7dBja2j8E1NuHeDwIUYa9wubxVSGQ4w-zQhDIlwJzWFLc_/s1600/%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="257" data-original-width="196" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPBHjIa_6kNOUzPtKMlTmk-evMmJDo9aG24m28exffarvMlTg7EhKd_8fYTGsqXieeNBrZczyrRBapJyZvk3OOdkppGSlhtE7dBja2j8E1NuHeDwIUYa9wubxVSGQ4w-zQhDIlwJzWFLc_/s1600/%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" /></a><span style="text-align: left;">உமாபதியும், உமாவும் அமர்ந்திருந்தது இருவர் அமரும் இருக்கை ஆதலால் இந்த சாய்தல் அவர்களிடையே உள்ளார்ந்த ஒரு சந்தோஷத்தைத் தான் கொடுத்தது. அதுவும் புதுமணத் தம்பதிகளாதலால், போகப்போக சந்தோஷம் கிளர்ச்சியாக உருமாறியது. பதியின் பரந்த தோளில் மெதுவாகச் சாய்ந்து கொண்ட உமா, பயணசுகத்தை மனசார அனுபவிக்கத் தொடங்கினாள்.</span></div>
</div>
<div>
<br /></div>
<div>
<br />
கல்லார் வந்ததும் பஸ்ஸைச் சுற்றி பழங்கள் விற்போரின் கூப்பாடு கேட்டது.</div>
<div>
<br /></div>
<div>
"பழம் வாங்கிக்கலாமா, உமா?"</div>
<div>
<br /></div>
<div>
"உம்.."</div>
<div>
<br /></div>
<div>
இப்பொழுதும் வயசான ஒரு பாட்டியிடம் தான் ஜன்னல் வழியாகவே கைநீட்டி, வால் பேரிக்காய்களும், குட்டி ஆப்பிள்களும் வாங்கிக் கொண்டான். பாட்டி அவற்றைத் தனித்தனியே காகிதப் பைகளில் இட்டுத் தந்தது உமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுற்றுப்புறச் சூழலைக் காக்கும் உணர்வு இவ்வளவு தூரம் மலையேறி வந்ததில் மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.</div>
<div>
<br /></div>
<div>
வழிபூராவும் இயற்கை அன்னை மலர்ந்து சிரித்து தன் மடியை விரித்திருந்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேல். பலா மரங்கள் சுமக்க மாட்டாத சுமையுடன் பழங்களைச் சுமந்து கொண்டு நிமிர்ந்து நின்றிருந்தன. குட்டிகள் மாரில் கவ்வியிருக்க மரத்திற்கு மரம் தாவிக்கொண்டிருந்த குரங்குக் கூட்டங்களைப் பார்த்துக் <br />
கொண்டாட்டமாக இருந்தது உமாவுக்கு. பாதை மலைச்சரிவுகளுக்கிடையே சலசலத்த சுனைகளின் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.</div>
<div>
<br /></div>
<div>
லேசான முணுமுணுப்புக்கள் மாதிரி ஏதேதோ அவர்கள் பேசிக்கொண்டு வருகையிலேயே, குன்னூர் வந்துவிட்டது. 'மலைகளின் ராணி வரவேற்கிறாள்' என்று இங்கேயே ஆரம்பித்து விட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டு, பஸ் குன்னூருக்குள் நுழைந்தது.</div>
<div>
<br /></div>
<div>
இறங்கியதும், "ஏதாவது சாப்பிட்டு விட்டு, மேற்கொண்டு போகலாமா?" என்று உமாவிடம் கேட்டான் உமாபதி.</div>
<div>
<br /></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGybQG0sbU0pT7ba_WDVFTIus8qWX3jrqPA3yqdt7qnSQCvqSGFsH7tN8mAM6YsK2yAnMzoDXhJA0lll4Xz0PwqHB4qdxGjcRC1k4hzj63YAzhc1ANjZoB0U5pMOfcLrihT17i0IY34py6/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25B8%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="171" data-original-width="294" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGybQG0sbU0pT7ba_WDVFTIus8qWX3jrqPA3yqdt7qnSQCvqSGFsH7tN8mAM6YsK2yAnMzoDXhJA0lll4Xz0PwqHB4qdxGjcRC1k4hzj63YAzhc1ANjZoB0U5pMOfcLrihT17i0IY34py6/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25B8%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258D.jpg" /></a>"சிம்ஸ் பார்க்குக்கு எப்படிப் போகணும்?"</div>
<div>
<br /></div>
<div>
"இந்த இடம் கீழ்க்குன்னூர். பார்க் மேல்குன்னூரில் இருக்கிறது. இதோ இந்த மலைப்பாதை வழியே மேலேறிப் போக வேண்டும். மேலே போனால், காடு மாதிரி பிர்மாண்டமான பூங்கா. நாம் தனிவண்டிலே போகலாம். அதுக்கு முன்னாடி ஏதாவது லைட்டா ஹோட்டலில் சாப்பிட்டுப் போகலாம்."</div>
<div>
<br /></div>
<div>
"சரி.." என்று தலையசைத்தாள் உமா. ஒரு சின்ன சூட் கேசும், பழங்கள் ஸ்நாக்ஸ் அடங்கிய ஜோல்னாப் பையும். ஜோல்னாப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டான் உமாபதி.</div>
<div>
<br /></div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnIsUf8ZkbkApaj1uiHPJqi7cTG1PVEcKuEwbWW0oNU9LNycEJHWXB3FbF1ukPP6zOSw_C7ITsQu0HdbB_9vd52TMxj8iqlnFjfjDk08XqKR0senCgclD5pYOyXSj1TPFO0bPYfxqE6AyN/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="275" data-original-width="550" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnIsUf8ZkbkApaj1uiHPJqi7cTG1PVEcKuEwbWW0oNU9LNycEJHWXB3FbF1ukPP6zOSw_C7ITsQu0HdbB_9vd52TMxj8iqlnFjfjDk08XqKR0senCgclD5pYOyXSj1TPFO0bPYfxqE6AyN/s320/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" width="320" /></a></div>
"நீங்களே ஏன் இரண்டையும் சுமப்பானேன்?" என்று அவனிடமிருந்து ஜோல்னாப் பையை வாங்கிக் கொண்டு தன் தோளுக்கு மாற்றிக் கொண்டாள் உமா.</div>
<div>
<br /></div>
<div>
"கொஞ்ச தூரம் தான். அதோ இருக்கே, ரயில்வே ஸ்டேஷன்.. அதுக்கு முன்னாடியே ஒரு பெரிய ஹோட்டல் இருக்கு.." என்று நடந்தான் உமாபதி.</div>
<div>
<br /></div>
<div>
ஹோட்டல் அந்த மலைப்பகுதி சாயலில் கொஞ்சம் விஸ்தாரமாகவே இருந்தது. சிற்றுண்டி சாப்பிட்டார்கள். அதுவும் இரண்டு வகை வரவழைத்து, இதில் பாதி அதில் பாதி என்று இரண்டு வகைகளையும் இரண்டு பேரும் மாற்றிக் கொண்டு சுவைத்தார்கள். "கூல் டிரிங்க்ஸ் ஏதாவது சாப்பிடலாமா?" என்றாள் உமா.</div>
<div>
<br /></div>
<div>
"ஓ.." என்று அவள் சொன்னதிற்கு 'ஓ' போட்டுவிட்டு, வழங்குபவர் வந்ததும், ஒரே ஒரு கூல்டிரிங்கை வரவழைத்தான். வழங்குபவரும் புரிந்து கொண்டு பெரிய அளவு கண்ணாடிக் கோப்பையில் குளிர்பானத்தை நிரப்பி இரண்டு ஸ்ட்ரா போட்டு எடுத்து வந்தார்.</div>
<div>
<br /></div>
<div>
"என்னங்க, இது?.. யாராவது பார்த்தா என்னவாவது நெனைச்சுக்கப் போறாங்க.." என்று பதியிடம் கிசுகிசுத்தாள் உமா.</div>
<div>
<br /></div>
<div>
"கணவன்-மனைவி சேர்ந்து வந்தால், இங்கெல்லாம் இதான் வழக்கம். நான் என்ன இரண்டு ஸ்ட்ராவா கேட்டேன்?.. அந்த சிப்பந்தியே புரிந்துகொண்டு இரண்டு கொண்டுவரவில்லை?" என்று ஒரு ஸ்ட்ராவில் உதடைப் பொருத்தினான் உமாபதி. "இன்னொண்னு உனக்கு.." என்று இன்னொரு ஸ்ட்ராவை அவள் பக்கம் திருப்பி வைத்தான்.</div>
<div>
<br /></div>
<div>
இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்தபடியே லேசான நாணத்துடன் இன்னொரு ஸ்ட்ராவைக் கவ்வினாள் உமா. முகம் நெருங்கிய நெருக்கத்தில் அவளைப் பார்க்க இரக்கமாக இருந்தது உமாபதிக்கு. 'நல்ல புத்திசாலியான பெண்; வாழ்க்கை பூராவும் கூட வரப்போகிறவள். கொஞ்சம் பூஞ்சைதான்; நிறைய வாங்கிக் கொடுத்துத் தேற்ற வேண்டும்' என்று எண்ணிக் கொண்டான். 'பாவம், எவ்வளவு பரிவுடன் இருக்கிறார்.. என்மேல் தான் எவ்வளவு ஆசை. பார்த்துப் பார்த்து எல்லாம் பண்ணிப்போட்டு நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள் உமா.</div>
<div>
<br /></div>
<div>
கொஞ்ச நேரம் கழித்து ஏதோ அவளிடம் சொல்ல உமாபதி தலைநிமிர்ந்த பொழுது, வைத்த குளிர்பானம் கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே இருந்தது. "என்ன நீ குடிக்கவில்லை?" என்று அவளைப் பார்த்துத் திகைத்தான் உமாபதி. "வெட்கமா இருந்தா தனியா இன்னொண்னு வரவழிச்சுடலாமா?"</div>
<div>
<br /></div>
<div>
"வேண்டாம்.. வேண்டாம்" என்று அவசரமாக மறுத்தவள், "அட! நீங்களும் குடிக்கவில்லையா?" என்று அவனைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தாள்.</div>
<div>
<br /></div>
<div>
இரண்டு பேருக்கும் இப்போது புரிந்தது. 'பாவம், இவன் குடிக்கட்டும்' என்று ஸ்ட்ராவில் அவள் உறிஞ்சாமல் இருக்க, அரும்பு கட்டியிருந்த அவள் நெற்றி வியர்வை பார்த்து 'பாவம், குளிரக் குளிர இவள் குடிக்கட்டும்' என்று அவன் ஸ்ட்ராவோடு உதடு மட்டும் உரச சும்மா இருக்க, கடைசியில் இரண்டு பேருமே உறிஞ்சாமல் கண்ணாடிக் கோப்பையில் குளிர்பானம் குறையாமல் வைத்தது வைத்தபடி இருக்க,... சிரிக்கத்தான் வேண்டும்!...</div>
<div>
<br /></div>
<div>
பார்த்துப் பார்த்து பரிதாபிக்கும் இந்த புருஷன் பெண்டாட்டி தம்பதிப் பிரியம், ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருக்கும் கரிசனை, அன்பு, ஆசை இன்னும் என்னன்னவோவெல்லாம், இன்று பார்ப்பது கூட காலங்காலமாய் தொடர்ந்துவரும் சங்கிலித் தொடரின் இன்றையக் கண்ணிதான்.</div>
<div>
<br /></div>
<div>
இதில் வேடிக்கை என்னவென்றால், மெத்த விஷயங்கள் தெரிந்தவர் என்று பீற்றிக்கொள்ளும் மனிதர்களை விட்டுத்தள்ளுங்கள்...</div>
<div>
<br /></div>
<div>
இந்தப் பரிவையும், பாசத்தையும் படம் பிடித்துக் காட்டும் சங்ககால இந்தக் காட்சிதான் நம்மை பரிதவிக்கச் செய்கிறது.</div>
<div>
<br /></div>
<div>
சின்ன குட்டைதான் அது. குட்டை என்று கூடச் சொல்ல முடியாது. ஏதோ கொஞ்சமே நனைந்த பிரதேசம். அந்தச் சின்னத் தேங்கலில் சிறிதளவே நிறைந்திருக்கும் நீர். அதுவும் லேசாகக் கலங்கியிருக்கிறது.</div>
<div>
<br /></div>
<div>
வெளிவெப்பத்தின் தாக்கம் நாவை வரளச் செய்கிறது. மருண்டு மருண்டு வந்த மான் ஜோடி ஒன்று, இந்தக் குட்டை நீரைப் பார்த்தும், இன்னும் நா வரள சேர்ந்து ஓடிவருகின்றன. வந்த இரண்டும் நீர் நனையும் இடத்தில் கால் பதித்துத் தலை குனிகின்றன.</div>
<div>
<br /></div>
<div>
<span class="Apple-style-span" style="color: #6600cc;">"சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்</span></div>
<div>
<span class="Apple-style-span" style="color: #6600cc;">பிணைமான் இனிதுண்ண வேண்டிக் -- கலைமாத்தன்</span></div>
<div>
<span class="Apple-style-span" style="color: #6600cc;">கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்</span></div>
<div>
<span class="Apple-style-span" style="color: #6600cc;">உள்ளம் படர்ந்த நெறி.</span></div>
<div>
<br /></div>
<div>
<span class="Apple-style-span" style="color: red;">--ஐந்திணை ஐம்பது (பாலைத்திணை)</span></div>
<div>
<br /></div>
<div>
அவை இரண்டும் ஆணும் பெண்ணுமான கலைமானும், பிணைமானும். நடந்தது இது தான். நா வறட்டும் தாகத்தில் தண்ணீர் கண்ட சடுதியில், ஓடிவந்து இரண்டும் தண்ணிரில் வாய் வைத்தன. வைத்ததும் தான், ஆண்மானுக்கு அந்த உணர்வு வந்தது. 'அடடா! இருக்கும் நீரே குறைச்சலாயிற்றே; இத்துனூண்டு இதை நான் அருந்தி விட்டால், தன் துணையான பிணைமானுக்கு நாவறட்சி தீர அருந்துவதற்கு போதிய அளவு நீர் கிடைக்காமல் போய்விடுமே என்று பதறி அருந்தாது நின்றதாம். அடுத்தாற்போல் அதற்கு வந்த நினைப்பு தான் அற்புதம்.</div>
<div>
<span class="Apple-style-span" style="color: red;">தான் அருந்தாமல் இருந்தால் தன் துணையும் அருந்தாமல் போய்விடும் என்று தண்ணீரில் வாய் மட்டும் வைத்துக் கொண்டு அருந்தாமல் அருந்துகிற மாதிரி பாவனை செய்ததாம்.</span> ஆண்-பெண் அன்பை இதைவிட மேலாகப் படம்பிடித்துச் சொல்லமுடியுமோ என்று வியக்கிறோம்.</div>
<div>
</div>
<div>
</div>
<div>
</div>
<div>
<br /></div>
<div>
அது என்ன ஐந்திணை? குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைப்பட்ட நிலப்பரப்புகளுக்கு ஏற்பனவாக ஐந்து வகையான திணைகளாகப் பிரித்துச் சொல்வது தமிழர் மரபு. வெவ்வேறு நிலைகளில் வெளிப்படும் மனப்பாங்குகளை அததற்கான திணைகளில் ஏற்றிச் சொல்வது பழந்தமிழர் சிறப்பு.</div>
<div>
<br /></div>
<div>
அது என்ன ஐம்பது கணக்கு?.. ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பாடல்கள் என ஐந்து திணைக்கும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால், ஐந்திணை ஐம்பது.</div>
<div>
<br /></div>
<div>
இந்த ஐந்திணை ஐம்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. சங்கம் மருவிய காலத்தது. காதலரின் ஒழுக்கம் பற்றிக் கூறும் அகப் பொருள் கீழ்க்கணக்கு நூல். இதை இயற்றியவர் <span class="Apple-style-span" style="font-size: large;"><span class="Apple-style-span" style="color: #3333ff;">மாறன் பொறையனார்</span></span> என்னும் புலவர் பெருமகனார்.</div>
</div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-65540292644468753032020-05-18T08:22:00.001-04:002020-05-18T08:22:11.740-04:00EVEN IF--ம் இந்திரர் அமிழ்தமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>ஒ</strong>ரு பிரபலத் தொலைக்காட்சியில் பேராசிரியர் ஒருவர் ஆங்கில மொழிக்கான இலக்கணப்பாட வகுப்புகளைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டிருந்தார். சென்னை தி.நகரில், சுலபமாக ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி வகுப்புக்களைக் கொண்ட டூடோரியல் பள்ளி ஒன்றையும் மிகப் பிரமாதமான முறையில் அந்தப் பேராசிரியர் நடத்தி வருகிறார்.<br />
<br />
அந்தப் பேராசிரியரின் பாடம் நடத்தும் ஆற்றலில் கவரப்பட்டு, அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தவறாது பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன்.<br />
<br />
ஒரு நாள் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ----<br />
<br />
If- என்னும் ஆங்கில Conjunction சொல்லின் தொடர்பாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை விவரமாக விளக்கப்புகுந்தவர், "EVEN IF" என்ற வார்த்தையை எந்த நேரத்து எப்படியெல்லாம் உபயோகப்படுத்தலாம் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.<br />
<span style="background-color: #eeeeee;"><br /></span><span style="background-color: #eeeeee; font-size: large;">Even if it is thunder strom, I will attend the programme.</span><br />
<span style="font-size: large;"><span style="color: blue;">Even if you provide $1000, I will not do that job.</span></span><br />
<br />
இடி இடித்துப் புயல் வீசினும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.<br />
ஆயிரம் டாலர் பணம் தந்தாலும், அந்தக் காரியத்தைச் செய்யமாட்டேன்.<br />
<br />
'Even if' என்கிற வார்த்தையை உபயோகப்படுத்துதலில் இன்னும் பல உதாரணங்களைச் சொல்லி மிக அழகாக அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் சிறார்களின் மனத்தில் படியும்படி பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார். <br />
தீர்மானமாக, உறுதிபட செயல்பட முடியாது என்று முடிவெடுக்கையில், இந்த 'Even if' வரும்;<br />
<br />
அதே மாதிரி எதுவரினும் செயல்படுவேன் என்கிற இடத்தும் இந்த 'Even if' ஒட்டிக்கொண்டு ஓடோடி வரும்.<br />
<br />
'EVEN IF'--ன் மாறுபட்ட எதிர் எதிரான இரண்டு உபயோகிப்புக்கள் இவை.<br />
<br />
இந்த 'Even if'-ஐ தொலைக்காட்சியில் அந்தப் பேராசிரியர் விளக்கிக் கொண்டிருக்கையில், கண்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, மனமோ தறிகெட்டு சங்க காலத்திற்குப் பறந்தது. கண்கள் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியை நினைத்துப் பனித்தன!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghjKdhZQa5vtqTGrl3JqCrTu1qTdM9N-H-hJFJnmr0WZXEV2sdX8xJN8R8KH25FvzRqGSIW6kUrCNiBwH2KN11VrKXouBXPOPJ5GAZoaEzyOvtXFKw_h6QPR7CBXfWTwfDKxwSNiL1zlZn/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%259F%25E0%25AE%25BF.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghjKdhZQa5vtqTGrl3JqCrTu1qTdM9N-H-hJFJnmr0WZXEV2sdX8xJN8R8KH25FvzRqGSIW6kUrCNiBwH2KN11VrKXouBXPOPJ5GAZoaEzyOvtXFKw_h6QPR7CBXfWTwfDKxwSNiL1zlZn/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%259F%25E0%25AE%25BF.png" /></a></div>
வழுதி என்கிற வழக்கிலேயே அவன் பாண்டிய மன்னனென்று தெரிகிறது. பெருவழுதி எப்படி இறந்திருப்பான்?.. எதிர்பாராத இறப்பு மாதிரி தான் தெரிகிறது, அவன் எந்தப் பெருவழுதி என்று குறிப்பிட்டுச் சொல்வதற்காக சுட்டப்படுவது, 'கடலுள் மாய்ந்த' என்னும் குறிப்புச் சொற்றொடர்!<br />
<br />
கடல் கடந்து படையெடுத்துச் சென்று வெற்றிவாகை சூடுவது, அன்றைய தமிழக மன்னர்களுக்கு இயல்பான ஒரு செயலாக இருந்தது. "கடாரம் கொண்டான்" என்று கடல கடந்து சென்று கடார நாட்டை வெற்றி கொண்டதைக் குறித்துச் சொல்லும்படி இராஜராஜ சோழனைக் குறிப்பிடுவதிலிருந்து, இந்த மாதிரி கடல் தாண்டிய போருக்கெல்லாம், தாங்களே தலைமை தாங்கிப் படை நடத்திச் சென்று வென்றிருக்கிறார்கள் தமிழக மாவேந்தர்களென்று தெரிகிறது! அப்படி ஒரு படையெடுப்பின் பொழுதுதான் இந்த பெருவழுதி கடலுள் மரக்கலம் கவிழ்ந்து மாய்ந்து விட்டானோ?...கடலுள் மாய்ந்த இந்த பெருவழுதி, இளம் வயதுடையோன் என்றுக் குறிக்க இளம் பெருவழுதியோ?..<br />
<br />
--என் நினைவுகள், பரிதாபச் சூழலில் முக்கித் தவித்தன.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJssONlVipZZ84kXsvMENVxPOpPrrpsR6gLdsy16rydemQMmMVgGUlbWgbICQUrPzTQKGbeb_lL2HlpYK7RGPo6lgQeh5z8IPMo9czhuoadXnIdJqZSXaPV639m7H-A93h8UUrNstjCJXT/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJssONlVipZZ84kXsvMENVxPOpPrrpsR6gLdsy16rydemQMmMVgGUlbWgbICQUrPzTQKGbeb_lL2HlpYK7RGPo6lgQeh5z8IPMo9czhuoadXnIdJqZSXaPV639m7H-A93h8UUrNstjCJXT/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581.jpg" /></a>எவ்வளவு புலமை?..எவ்வளவு சிந்தனைச் சிறப்பு?..எவ்வளவு குண மேன்மை?..இவன் யாத்ததாக புறநானூற்றில் ஒரு பாடல்தான் இன்று நமக்குப் படிக்கக் கிடைக்கப்பெறினும், அந்த ஒரு பாடலே ஓராயிரம் அர்த்தங்களை நமக்குச் சொல்லி நானூற்றில் நட்சத்திரமாக ஒளிவிடுகிறது!...பண்டைய தமிழன் தலை நிமிர்ந்து நிற்க முற்றிலும் தகுதியுடையோன் என்று பறைசாற்றும் இப்படிப்பட்ட அட்டகாசமான பாடல்களை வாசிக்கும்<br />
நேரத்து உள்ளம் விம்மி களிப்பெய்துகிறது!..<br />
<br />
<span style="background-color: white; color: red; font-size: large;">"உண்டால் அம்ம, இவ்வுலகம் -- இந்திரர்</span><br />
<span style="background-color: white; color: red; font-size: large;">அமிழ்தம் இயைவது ஆயினும், 'இனிது' எனத்</span><br />
<span style="background-color: white; color: red; font-size: large;">தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;</span><br />
<span style="background-color: white; color: red; font-size: large;">துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி</span><br />
<span style="background-color: white; color: red; font-size: large;">புகழ் எனின், உயிரும் கொடுகுவர்; பழியெனின்</span><br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipWQkxuXiANmN5-kUE1SNLRCbUfZlwlXGqaPOTmV_-k8khbbcBrk1M0XmTZXM9xwq3VHiH5X06UIw1k8XXlWgkeqG-YbWfZ7QJ2Orl8zwzF7R0do1nC4cqNwfYZ9XzVdtxTdcwSS6KZ5Ac/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25B5%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipWQkxuXiANmN5-kUE1SNLRCbUfZlwlXGqaPOTmV_-k8khbbcBrk1M0XmTZXM9xwq3VHiH5X06UIw1k8XXlWgkeqG-YbWfZ7QJ2Orl8zwzF7R0do1nC4cqNwfYZ9XzVdtxTdcwSS6KZ5Ac/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25B5%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" /></a><span style="background-color: white; color: red; font-size: large;">உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;</span><br />
<span style="background-color: white; color: red; font-size: large;">அன்ன மாட்சி அனையர் ஆகி</span><br />
<span style="background-color: white; color: red; font-size: large;">தமக்கு என முயலா நோன் தாள்,</span><br />
<span style="background-color: white; color: red; font-size: large;">பிறர்க்கு என முயலுநர் உண்மையானே"</span><br />
<span style="background-color: white; color: red; font-size: large;"><br /></span><span style="background-color: white; color: red; font-size: large;">(புறநானூறு--182)</span><br />
<span style="color: red;"><br /></span><span style="background-color: white; color: red;">திணை--பொதுவியல். துறை--பொருள்மொழிக்காஞ்சி</span><br />
<br />
<span style="background-color: cyan; font-size: large;">அமுது கிடைப்பினும் இனிது எனத்</span><br />
<span style="background-color: cyan; font-size: large;">தான் மட்டும் உண்ணார்; பிறரை வெறுத்தலும்</span><br />
<span style="background-color: cyan; font-size: large;">சோம்புதலும், மனச்சோர்வும் அறியார்</span><br />
<span style="background-color: cyan; font-size: large;">புகழ் என்றால் உயிரையே கொடுப்பர்</span><br />
<span style="background-color: cyan; font-size: large;">பழி என்றால் இந்த உலகையே</span><br />
<span style="background-color: cyan; font-size: large;">பரிசாகக் கொடுத்தாலும் பெறார்.</span><br />
<span style="background-color: cyan; font-size: large;">தனக்கென்றால், வலிந்து எந்த முயற்சியிலும் ஈடுபாடாதார்,</span><br />
<span style="background-color: cyan; font-size: large;">பிறர்க்கென்றால், எதையும் முயன்று செய்து கொடுக்கும் தன்மையுடையோர்.....</span><br />
<b><br /></b><span style="color: red;"><b>---'இப்படிப்பட்டவர் இருக்கையினால் தான், ஐயா, 'உண்டால் அம்ம இவ்வுலகம்'---இந்த உலகம் இருக்கிறது' </b></span><br />
<br />
<span style="color: red;"></span>--- என்று பிரகடனப்படுத்துகிற வகையில்,பாடலின் முழு அழுத்தத்தையும்<br />
முதல் வரியில் கொண்டு போய்ச்சேர்த்து முடிக்கும் கவி அரசனின் மாசுமறுவற்ற உள்ளமும் மொழியை தான் சொல்ல வந்ததற்கேற்ப வளைத்துக் கையாண்ட அவனது மொழியாற்றலும் சிலிர்ப்பேற்படுத்துகிறது!...<br />
<br />
"<strong>இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும்</strong>, இனிது எனத் தமியர் உண்டலும் இலரே"-- என்கிற வரிக்கு, "Even if"--என்னும் ஆங்கில Conjunction- வார்த்தையைப் பொருத்திப் பார்த்து உள்ளம் மகிழ்கிறது.<br />
<br />
அமிழ்தம் எப்படிப்பட்ட உச்சகட்டச் சிறப்பு உடைத்து என்பது தெரியும்; <strong>அந்த அமிழ்தமே</strong> <strong>கிடைக்கப்பெறினும்</strong>, தான்மட்டும் தனியே உண்ணமாட்டார்களாம்!<br />
<br />
<div style="text-align: left;">
"Even If"--என்ன அருமையாக இங்கே பொருந்துகிறது, பாருங்கள்!</div>
</div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-31059790533337730802020-04-19T04:34:00.000-04:002020-04-19T05:01:04.341-04:00தமிழ் பத்திரிகைகளின் வாசிப்பு அனுபவம் -- கலந்துரையாடல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வாசிக்க: <a href="https://jeeveesblog.blogspot.com/">https://jeeveesblog.blogspot.com/</a><br />
<br />
1. நெல்லைத் தமிழன்:<br />
<br />
நல்ல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். சொல்ல வந்த கருத்தும் சுளீர் எனத் தாக்குகிறது. வெகுஜனப் பத்திரிகை எழுத்தாளர்களைத் தாண்டி நான் வாசித்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பெரும்பாலும் வாசித்ததில்லை.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க வாசகன் இலக்கியத்தை அருதியிட முடியும், ஆனால் அது மெஜாரிட்டி வாசகர்களாக இருக்க வேணும் என்பது அவசியமில்லை. வெகுஜன ரசிப்பு என்பதை மட்டும் கணக்கில் கொண்டால், நமக்கு சகலகலாவல்லவன், காலா தர்பார் போன்ற படங்களே சிறந்த சினிமாக்கள் விருது பெறுவதைப்போல் ஆகிவிடும்.<br />
<br />
பதில்:<br />
<br />
மனம் திறந்த வெளிப்பாடுகள்.<br />
<br />
அந்த குறிப்பிட்ட எழுத்தாளர்களை இந்தத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றே ஒவ்வொருவராக எழுதிக் கொண்டு வருகிறேன். வாய்ப்பு கிடைக்கும் பொழுது என் தளத்தில் வாசியுங்கள், நெல்லை.<br />
<br />
//இதெல்லாம் ஒருபுறம் இருக்க வாசகன் இலக்கியத்தை அருதியிட முடியும், ஆனால் அது மெஜாரிட்டி வாசகர்களாக இருக்க வேணும் என்பது அவசியமில்லை... //<br />
<br />
பத்திரிகை, வாசிப்பு பழக்கம் உள்ள எனக்குத் தெரிந்த பதிவுலக நண்பர்களுக்காக நான் சொன்னது அது. 'சுஜாதாவோடு நின்று விடாதீர்கள். அது உங்கள் வாசிப்பபு வளர்ச்சியை குறுகலாக்கி விடும். சுஜாதாவை கடந்து வாருங்கள். இவர்கள் பற்றியெல்லாம் எழுதுங்கள். தமிழ் எழுத்துலகின் இருட்டுப் பகுதியை நாம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்' என்று விடுத்த அறைகூவல் அது.<br />
<br />
இதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் யார் படிப்பார்கள் என்ற எண்ணம், வாசக வருகை குறைந்து விடுமோ அச்சம் எல்லாம் தடையாக இருந்து சிலருக்கு தடுக்கலாம்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEkP6gqNeG4PbAXSraFzgfgE6wuRPZ_knpfw9UYRNokgv5K6WBULHSpJCSRhtEcyypPwj9klxIkIeH9MYZLww2H28e1yvKX84gwUjsqNRnliosY6XPObHoqcojA0f7fNmF8c3Y4-nTlmNb/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="284" data-original-width="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEkP6gqNeG4PbAXSraFzgfgE6wuRPZ_knpfw9UYRNokgv5K6WBULHSpJCSRhtEcyypPwj9klxIkIeH9MYZLww2H28e1yvKX84gwUjsqNRnliosY6XPObHoqcojA0f7fNmF8c3Y4-nTlmNb/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" /></a>முதலில் நல்ல எழுத்துக்களின் -- அந்த எந்த சப்ஜெக்ட்டாக இருக்கட்டுமே -- வாசிப்பு பழக்கம் தனி நபருக்கு ஏற்பட ஏற்பட அதை தான் தன் பதிவுகளில் எழுதத் தோன்றும் என்பது என் எண்ணம்.<br />
<br />
ஒன்று பார்த்திருக்கிறீர்களா, நெல்லை?.. குமுதம் மாதிரியான பத்திரிகைகளிலேயே திடீரென்று பக்கா இலக்கிய விஷயங்களைப் பற்றி பேட்டி போல ஒரு பக்க அளவில் --- வல்லிக்கண்ணனைப் பற்றி; இந்தத் தடவை ஞானபீட பரிசு பெற்றவர் -- என்று எந்த தலைப்பிலாவது ஏதாவது செய்வார்கள்..<br />
<br />
இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபாடு கொண்ட 5% வாசகர்களும் குறைந்த பட்சம் தன் பத்திரிகையைப் புரட்டிப் பார்க்கவாவது செய்வார்களே, என்று தான்; இல்லை,
இந்த மாதிரி விஷயங்களிலும் எங்களுக்கு அக்கறை உண்டு எனறு காட்டிக் கொள்வதற்காக. வாசகர்களின் எந்தப் பகுதியையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக.<br />
<br />
பெரிய ஜவுளிக்கடைகளில், 9 கஜம் புடவைகளும் இருப்பது மாதிரி; தைத்த நிலையிலேயே பஞ்சக் கச்சம் இருக்கிற மாதிரி.
அந்த மாதிரியாவது நமக்கு பழக்கமான பதிவர்கள் செய்தால் தேவலை.
எப்படியானும் நல்ல வாசிப்பு அனுபவங்கள் நம்மிடையே கூட வேண்டும் என்பதற்காகத் தான் இத்தனை பாடும், நெல்லை.<br />
<br />
2. ஸ்ரீராம்<br />
<br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஆரம்பத்தில் ஜெயகாந்தன் தான் எழுதியவற்றில் எதையும் மாற்றக்கூடாது என்று சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் அந்நிலை என்று மாறியதோ... </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihFiaeDmGvMgZoWfNXw2Uz4byBbB5I2WRK8KmRQ_MO9P-mV4HHEfE4Sjhi-GuF7pfgumBx_ZMa6ovmn4dUr0jobzZzggBJsUgejgTY9ig_S3Mb6oBuBAfu8UaoMpTUSjvhsbpjezfLUFbr/s1600/%25E0%25AE%259C%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="281" data-original-width="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihFiaeDmGvMgZoWfNXw2Uz4byBbB5I2WRK8KmRQ_MO9P-mV4HHEfE4Sjhi-GuF7pfgumBx_ZMa6ovmn4dUr0jobzZzggBJsUgejgTY9ig_S3Mb6oBuBAfu8UaoMpTUSjvhsbpjezfLUFbr/s1600/%25E0%25AE%259C%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a></span></div>
<br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பதில்:</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஆனந்த விகடனில் எழுத ஜெயகாந்தனை அழைத்த பொழுது "எனக்குத் தெரியப்படுத்தாமல் என் கதையில் எந்தப் பகுதியையும் நீக்கக் கூடாது.." என்பது தான் அவர் போட்ட முக்கியமான நிபந்தனை.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">மஹாபாரதக் கதைகளில் வருமே ஒரு வரம் கேட்டாலே போதும், அதில் வேறு சிலவும் உள்ளடங்கியிருக்கும் என்று. அந்த மாதிரியான ஒரு நிபந்தனை இது.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">நான் எழுதறதெல்லாம் எழுதுவேன், எதையும் நீக்காமல் நீ பிரசுரம் செய்ய வேண்டும் என்று இதற்கு அர்த்தமில்லை. நான் எழுதியதில் எதையானும் நீக்க நீ நினைத்தால், அதை எனக்குச் சொல்லி விட்டு என் அனுமதிக்குப் பிறகு அதை நீக்கலாம் என்பது தான். எழுதியவன் தன் எழுத்தின் மீது கொண்ட அக்கறை இது. கதையின் மத்தியில் எந்தப் பகுதியையாவது நீக்கப் போய் எழுதிய கதையின் உயிர்நிலையே போய் விட்டதென்றால் எனக்குத் தானே வருத்தம்? எனக்குச் சொல்லி விட்டுச் செய்தால் அதற்கு தகுந்த மாதிரி </span><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">மாற்றம் (modification) செய்து தரவும் எனக்கு வசதியிருக்கும் என்பதினால் இந்த நிபந்தனை..</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இரண்டு பேருக்கான ஒரு நிபந்தனை என்றால் அதற்கு இரண்டு பகுதியிலும் யோக்யமாக இருக்க வேண்டும் என்பது நியாயவான்களின் குணமாக இருக்கும்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அந்த மாதிரியே இரண்டு பகுதிகளிலும் இருப்பதற்காகத் தான் 'விகடனில் அச்சேறுவதற்கான எல்லை (limit) தெரிந்து 'இந்த அளவில் தான் வட்டாட வேண்டும் என்ற நிலை; இதை மீறிப் போனால் உறவு தகர்ந்து போகும்' என்கிறார். மிகுந்த பொறுப்புள்ள ஸ்டேட்மெண்ட் இது.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஜெயகாந்தன் தன் கதைகளில் சில இடங்களில் ஒரு வரிக்குப் பின்னால் மூன்று புள்ளிகள் பொறிப்பது பழக்கம். எழுதுகிறவன் தான் எழுதுகிற சங்கதிக்கு ஒலிக்குறிப்பும் கொடுக்கிறான். இந்த வரி முடிகிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டு அடுத்த வரியையும் இழுத்துக் கொண்டு முடிகிறது என்று தெரியப்படுத்துவதற்காக. வாசகன் வாசிக்கும் பொழுது அதே மாதிரி வாசித்துப் பார் என்று கொடுக்கிற குறிப்பு இது.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஜெயகாந்தனின் கையெழுத்துப் பிரதியைப் பார்த்த வாசன், "அந்த மாதிரியே அச்சில் எண்ணி மூணு புள்ளி வர்ற மாதிரி பாத்துக்கோப்பா.." என்பாராம். அவருக்கோ டெக்னிகலாக ஜெயகாந்தனுடன் போட்ட ஒப்பந்தத்தில் ஒரு அட்சாரம் பிசகக்கூடாது என்று எண்ணம்!...</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இரண்டு பக்கமும் கெளரவஸ்தர்களாக இருந்தால் நிபந்தனைகளெல்லாம் ஒப்புக்கு போட்டுக் கொண்ட மாதிரி பல நேரங்களில் ஆகிவிடும்!..</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">நான் எழுதிக் கொடுத்த கதையில் சில இடங்களில் வெட்டி விட்டார்கள் என்று அழகாபுரி அழகப்பனோடு நானும் சண்டை போட்டிருக்கிறேன். கதைகளுக்குப் போடும் படங்களில் நேரும் தவறுதல்களையெல்லாம் சுட்டிக் காட்டியதும் உண்டு. பாவம், அவர்.. எதற்காக அப்படியான திருத்தம், படத் தவறுகள் எப்படி நேர்ந்தன. தனக்கும் இப்படி நேர்ந்ததையெல்லாம் சொல்லி விவரமாக இன்லெண்ட் லெட்டரில் எழுதுவார். அப்படி ஓரிரு கடிதங்களை அந்த அரிய நண்பரின் ஞாபகமாக இன்னும் வைத்திருக்கிறேன்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அவ்வளவு தூரம் போவானேன்?.. 'கல்கியில் பிரசுரமான முதல் கதையில் சில பகுதிகளை வெட்டி விட்டார்கள் என்று அதற்குப் பிறகு கல்கிக்கு கதை அனுப்புவதையே கைவிட்டு விட்டேன்' </span><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">என்று நம் அருமை நண்பர் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி கூட சமீபத்தில் எழுதியிருந்தாரே, வாசித்தீர்களா?..</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">எழுத்தாள மனம் என்பது அனிச்சம் பூ போன்றது.</span><br />
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;">3. ஸ்ரீராம்:</span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அந்நாளிலேயே பெயர்பெற்ற இந்த எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்த இதே பத்திரிகைகளில், இப்போது பெயரைச் சொன்னால் கூ நினைவுக்கு வருகிற மாதிரி சில எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். உதாரணம் ஏ ஏ ஹெச் கே கோரி, சார்வாகன், ஹேமா ஆனந்ததீர்த்தன்... </span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பதில்:</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">என் கட்டுரையே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. பெரும் பத்திரிகைகளைச் சிறப்பாக உபயோகப்படுத்திக் கொண்ட எழுத்தாளார்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஜெயகாந்தன், வையவன், இந்திரா பார்த்தசாரதி, நா.பா., ஜெகச்சிற்பியன், சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், இந்துமதி, வாஸந்தி என்று ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது... ஆனால் இவர்கள் எழுத்தை இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவோர் இல்லை என்பது தான் என் ஆதங்கம். எங்கள் பிளாக் போன்ற வாசகர் வாசிப்பு அதிகமுள்ள தளங்களில் இவர்கள் பேசப்பட்டால் கைதட்டக் கூடிய முதல் ஆளாக நான் இருப்பேன். அது இல்லை என்பது தான் சோகம்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் -- இந்த மூவரின் பிரமையைத் தாண்டி வந்தார்களா (தீர்களா?) என்று நீங்களே சொல்லுங்கள்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip_boK29vC9zFgKU2bl7q6Mi8BC6afDn-pUZk9pxrmcbX_Yu3rIjnV8njIJtcEKkSQ0LE0x7GDwidcNRRIvWQgzXtOYWwO213QKdKCl27Ka_Ct1Sk5r2hYgTJGLTR-8JncHRfLKAJdD3JS/s1600/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="259" data-original-width="194" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip_boK29vC9zFgKU2bl7q6Mi8BC6afDn-pUZk9pxrmcbX_Yu3rIjnV8njIJtcEKkSQ0LE0x7GDwidcNRRIvWQgzXtOYWwO213QKdKCl27Ka_Ct1Sk5r2hYgTJGLTR-8JncHRfLKAJdD3JS/s1600/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg" /></a><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஏ ஏ ஹெச் கே கோரி -- குமுதத்தில் குமுதம் பாணிக்கேற்பவான நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். என் கணிப்பு அவ்வளவே.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"> </span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஹேமா ஆனந்ததீர்த்தன் -- அந்நாளைய குமுதத்தின் ஆஸ்தான எழுத்தாளர். மொழியாக்க வல்லுனர். இவர் மொழியாக்கத்தில் 'தீப்பிடித்த கப்பலில் அம்மணியும் நானும்' என்ற உண்மை நிகழ்வின் விவரிப்பு நேர்த்தியை (மலையாளத்திலிருந்து தமிழுக்கான மாற்றத்தில்) பல வருடங்களுக்கு முன் குமுதத்தில் படித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. மற்றபடி உங்களைக் கவர்ந்த இவரது சிறப்பு படைப்பு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். அலசலாம்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0m_cK8BEFytzmruLZTxo2QTwf-31kyCiqqNLXVDetiLswy_N2MBJQi-LfuEPX2iElt0HH2JfVO_cKOdR9VpA7niectXTk53ZH51P-xX4X-0l7OWyQivEuQdLKYEdtXIOkC6XXu0VnSpnd/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="187" data-original-width="269" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0m_cK8BEFytzmruLZTxo2QTwf-31kyCiqqNLXVDetiLswy_N2MBJQi-LfuEPX2iElt0HH2JfVO_cKOdR9VpA7niectXTk53ZH51P-xX4X-0l7OWyQivEuQdLKYEdtXIOkC6XXu0VnSpnd/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a></div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">சார்வாகன் -- பிரபல அறுவை சிகித்சை நிபுணர் இவர். தொழுநோய்க்கான சிறுப்பு மருத்துவத்தில் தேர்ந்த டாக்டர். தனக்கிருந்த எழுத்தார்வத்தில் பல்வேறு தொழில்முறை பணிகளுக்கிடையேயும் எழுதியவர் இவர். நகுலன், சி.சு. செல்லப்பா போன்றவர்களின் அன்பைப் பெற்றவர். நகுலன் தான் தொகுத்த 'குருஷேத்திரம்' என்ற நூலில் இவரது படைப்புகளைச் சேர்த்திருக்கிறார். சி.சு. செல்லப்பா தனது எழுத்து பத்திரிகையில் இவரது கவிதைகளை வெளியிட்டிருக்கிறார். மொத்தத்தில் இவரை சீறாட்டியது சிறு பத்திரிகைகள் தாம்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">சாலிவாஹனன் என்று இன்னொரு சிறப்பான எழுத்துச்சிற்பி இருந்தார். இவர் அந்நாளைய 'சுதேச மித்திரன்' வார இதழில் நிறைய எழுதியிருக்கிறார். கலைமகளோடு மித்திரனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுதேச மித்திரன் இதழின் பங்களிப்பு அற்புதமானது. பெரியவர் ஆர்வியின் 'திரைக்குப் பின்னால்' போன்ற நல்ல நாவல்களை வெளியிட்ட இதழ் அது.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஆக, சிறப்பாக எழுதிய நல்ல எழுத்தாளர்கள் ஏன் நினைவு கூறப்படவில்லை என்பது தான் என் ஆதங்கம். தேடிப் படிக்கும் இன்றைய வாசகர்களுக்குக் கூட தட்டுப்படாமல் போனது ஏன் என்பது தான் கேள்வி.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பின்னூட்டங்கள் பதிலோடு முடிந்து விடுவதில்லை. உங்களுக்கு ஏற்படுகிற ஐயங்களைக் கேளுங்கள். உங்கள் தளங்களில் மறந்து போய் விட்ட தமிழ் எழுத்தாளர்களை அவர்கள் படைப்புகளுடன் நினைவு கொள்ளுங்கள்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">உங்களிடம் நான் வேண்டிக் கொள்வது இந்தப் பணி ஒரு இயக்கமாகவே நடைபெற வேண்டும்.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<br /></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;">4. <span style="background-color: white;">வல்லிசிம்ஹன்</span></span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அன்பு ஜீவி சார், </span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"> இனிய புத்தாண்டுக்கான வாழ்த்துகள்.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">தீவிரமான அலசல். உண்மைதான். எங்களது எழுத்து ரசனை இந்த</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பத்திரிகைக்குள் அடங்கியது.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">கலைமகள் எல்லார் வீட்டிலும் அனுமதிக்கப்</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பட்டது.</span><br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq1WSDrZVMQl3eB_ZtXPUuKmvPFBVTpDogp2cbjAY3rHKkDXdSxmBMDJ2-mZyLHA7mz7Xtd_RpwUsKFV-s92CvX2XhtfibyS1lFHE6p_uL3xEHCA-SPkgGBIC5V64-3314zyV_JMoSZFRV/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25B9%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="163" data-original-width="310" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq1WSDrZVMQl3eB_ZtXPUuKmvPFBVTpDogp2cbjAY3rHKkDXdSxmBMDJ2-mZyLHA7mz7Xtd_RpwUsKFV-s92CvX2XhtfibyS1lFHE6p_uL3xEHCA-SPkgGBIC5V64-3314zyV_JMoSZFRV/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25B9%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">கல்கி அடுத்தாற்போல. அதற்குப் பிறகு விகடன். கடைசியில் குமுதம்.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இப்பொழுது எல்லாமே மாறிவிட்டது.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">கலைமகள் அப்படியே இருக்கிறது என்று நினைக்கிறேன்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">எல்லாமே வேறு கைகளுக்குப் போய்விட்டதாமே.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களையும்</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">75 சதவிகிதம் படித்திருக்கிறேன்.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அவர்களுக்குள்</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஒரு வட்டம் சதுரம் போடப் பட்டது தெரியாது.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">என்ன ஒரு பரிதாபம்:(</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">தொடருகிறேன் சார்.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பதில்: </span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">கலைமகள் சவரட்சணை இல்லாத குழந்தை போல இளைத்துப் போயிருக்கிறது. அமுத சுரபி பரவாயில்லை. ஸ்ரீராம் க்ரூப்பின் போஷாக்கில் திருப்பூர் கிருஷ்ணனின் அயராத உழைப்பில் 'எழுத்து - எழுத்துலகம்' என்று நிறைய உள்ளடக்கங்களைத் தாங்கி வருகிறது.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">மூன்றில் குங்குமம் பரவாயில்லை. கல்கியின் பழம்பெருமைகளை மீட்டெடுக்க யாருமில்லை போலிருக்கிறது. விகடன் டைஜஸ்ட் மாதிரியான முயற்சியில் சுலபமாக வாசிக்கக் கூடிய இயல்பான மொழி ஆளுமை இல்லாத அவஸ்தை. ஏதோ பிர்மாண்ட ஹாலிவுட் பட பங்கு கொண்டோரின் பெயர் பட்டியலை திரையில் பார்க்கிற மாதிரி ஒரு பக்கத்திற்கு பொடி பொடி எழுத்துக்களில் நிர்வாகக் குழுவினரின் பெயர் பட்டியல். பழைய விகடன் இல்லை; பத்திரிகையின் சைஸ் மாற்றியதிலிருந்து எல்லாமே அந்நியப்பட்டுப் போய்விட்டன. மகளிர் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்பவைகளில்</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">குங்குமம் குழும 'தோழி' எடுப்பாக இருக்கிறது. எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள இதழொன்று வாங்கி வந்து புரட்டிப் பார்த்த பொழுது, 'அட! நம்ம ரஞ்சனி நாராயணன்! அவர் கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது!</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">/அவர்களுக்குள்</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஒரு வட்டம் சதுரம் போடப் பட்டது தெரியாது.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">என்ன ஒரு பரிதாபம்:( //</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">????</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">தி.ஜா.வை பிறர் கணித்ததையா சொல்கிறீர்கள்?..</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அதெல்லாம் பற்றி ஒரு தொடரே எழுதலாம்! ஒன்றுக்கானும் தி.ஜா. அசரவே இல்லையே!</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">கருமமே கண்ணாயினார் வர்க்கம் அவர்!</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">5. சிகரம் பாரதி:</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பத்திரிகைகள் என்பது வேறு. சஞ்சிகைகள் என்பது வேறு. கல்கி, குமுதம் என்பதெல்லாம் சஞ்சிகைகள். தினகரன், மாலை மலர் போன்றவை தான் பத்திரிகைகள்.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பதில்:</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அப்படியா சி.பா?..</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">சென்ற தலைமுறை பத்திரிகையாளர் மத்தியில் பத்திரிகைகள் என்று சொல்வது தான் வழக்கம். 'தி ஹிந்து' போலவானவற்றை செய்தித் தாட்கள் (News Paper) என்று அழைப்பது வழக்கம். உரையாடலில், "'ஹிந்து' பேப்பரில் போட்டிருக்காங்க, பார்த்தையா?"</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இதைத் தெரிந்து கொள்ளவாவது ஒரு விகடன் இதழ் வாங்கிப் பாருங்கள். பத்திரிகை பற்றிய தகவல் குறிப்பில் பத்திரிகை விற்பனைப் பிரிவு என்று தான்</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் பத்திரிகை என்று குறிப்பிடுவது தான் பத்திரிகை பாஷை! :))</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">வார இதழ்கள் -- மாத இதழ்கள் என்ற வார்த்தை புழக்கத்தில் இதழ்கள் என்றும் குறிப்பிடுவது உண்டு. சிலருக்கு பருவ இதழ்கள்! (கவர்ச்சிக்கு கவர்ச்சி வேறே)</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">திராவிட கட்சிகள் வந்ததும் 'ஏடு' என்று அழைக்கலாயினர். 'கல்கி'யும் ஏடு தான்;</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">'இந்தியன் எக்ஸ்பிரஸூம்' ஏடு தான்.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இதெல்லாம் இருக்க, அரசு பாஷையில் எல்லாமே நியூஸ் பேப்பர்கள் தாம். எல்லா பத்திரிகைகளும் 'Registered as a Newspaper' கள் தாம். எந்த இதழைத் திருப்பிப் பின் அட்டையில் பார்த்தாலும் Registered with Registrar of Newspapers என்று குறிப்பிட்டு பத்திரிகையின் Regd.No. போட்டிருப்பார்கள். பத்திரிகையை ரிஜிஸ்டர் பண்ண வேண்டியது அவசியம். அப்படி செய்து கொண்டால் பல சலுகைகள் உண்டு. தபாலில் அனுப்ப, நியூஸ் பிரிண்ட் கோட்டா என்று. இரண்டாவது சொன்னது பகாசுர விஷயம்!</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">சிகரம் இணைய இதழ் தானே?.. கத்தியில்லா யுத்தம் மாதிரி, காகிதமில்லா அச்சடித்தல்! ஜமாயுங்கள்!</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;">6. சிகரம் பாரதி:</span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">படைப்புச் சுதந்திரம் படைப்பாளனுக்கும் வாசிப்புச் சுதந்திரம் வாசகனுக்கும் இருக்க வேண்டியது அவசியம். கல்கி, குமுதம் போன்றவை இதனை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றாலும் ஓரளவுக்காவது நிறைவேற்றியிருக்கின்றன. நிற்க, சிறந்தவை எவற்றுக்கும் முன்னுரிமை கிடைப்பதில்லை என்பது காலம் காலமாக நடப்பது தானே?</span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;">பதில்:</span></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">படைப்புச் சுதந்திரத்திற்கும் வாசிப்பு சுதந்திரத்திற்கும் எந்தக் குறைசலுமில்லை!</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">வேண்டியாங்கு வேண்டியவை விரவிக் கிடக்கின்றன! நமது தேர்வுச் சுதந்திரத்தில் தான் கோளாறு!</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">புத்தகச் சந்தையில், சுஜாதாவின் ஸ்ரீரங்கம் தேவதைகளும், 'களப்பிரர் கால வரலாறு' என்றும் நூல்கள் இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள், சொல்லுங்கள்!</span></div>
<div>
</div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">7. பா.வெ.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3f-ArcHl4X4FSq7g50f9B4ZPV2ip-7seDkJtgGZPqtU-VQ-KnTphqZO8-U5VXoimJnTEu3SoB0vq3HLeUXne9MNAwPNANg7W2nAUcyr81fTK27NUXU6yIgLaiip3e3HmmA6fQjc6B4HoN/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="210" data-original-width="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3f-ArcHl4X4FSq7g50f9B4ZPV2ip-7seDkJtgGZPqtU-VQ-KnTphqZO8-U5VXoimJnTEu3SoB0vq3HLeUXne9MNAwPNANg7W2nAUcyr81fTK27NUXU6yIgLaiip3e3HmmA6fQjc6B4HoN/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" /></a><br />
<div style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px; margin-bottom: 15px; padding: 0px;">
நல்ல சப்ஜெக்ட் எடுத்துக் கொண்டு அதை சிறப்பாகவும் அலசியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்கள் பலரையும் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். </div>
<div class="comment-timestamp" style="background-color: white; color: #202020; display: inline-block; font-family: arial, sans-serif; font-size: 13px; margin-bottom: 15px; padding: 0px;">
</div>
</div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;">பதில்:</span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">மகிழ்ச்சி. மனசுக்குகந்த எழுத்தாளர்கள் பற்றி நானெழுதும் பகுதியில் தங்கள் கோணத்தில் அந்தந்த எழுத்தாளர்களை நீங்கள் பார்த்த பார்வை பற்றியும் அல்லது நான் எழுதாமல் விட்டு விட்ட செய்தி ஏதாவது பற்றியும் குறிப்பிட்டால் மிகவும் மகிழ்ச்சி.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">குறிப்பிட்ட அந்த எழுத்தாளரின் கதை ஒன்றை எடுத்துக் கொண்டு விவரித்தால் இந்தப் பகுதி இன்னும் சிறப்பாக இருக்குமா?..</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.. சொல்லுங்கள், பா.வெ.</span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;">8. Dr. B. Jambulingam A.R. (Retd) Tamil University.</span></span></div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEzngGKwrav9LQliJjDwiX7ikndYKiLXvuUty8HSrgWhkAST1xj_LWyj9JyEXfMbEK6qCchOy6dHQ9vG4r944RP68WOsaTzUFf5cFatWxrzQ31xvpZCRGSjuB9ZFiMR2LyRJCvU_VCbENk/s1600/%25E0%25AE%259C%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="244" data-original-width="206" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEzngGKwrav9LQliJjDwiX7ikndYKiLXvuUty8HSrgWhkAST1xj_LWyj9JyEXfMbEK6qCchOy6dHQ9vG4r944RP68WOsaTzUFf5cFatWxrzQ31xvpZCRGSjuB9ZFiMR2LyRJCvU_VCbENk/s1600/%25E0%25AE%259C%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581.jpg" /></a></div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">தளம் என்பதானது விரிந்த எல்லையாக இருந்தால் மட்டுமே எழுத்தின் வீச்சினை உணரமுடியும். குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து, கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு, அவ்வாறு செய்வதுதான் சரி என்று போகும் நிலையை எழுத்துலகில் காணமுடிகிறது. இவ்வாறாக வரையறுக்கப்படுகின்ற எல்லைக்கு அப்பாற்பட்டு சென்று எழுத்தால் சாதிக்க முடியும். பிறர் அங்கீகரிக்கவேண்டும் என்பதில்லை. நம் எழுத்தை நாம் ரசிக்கும்போதே வெற்றி பெற்றுவிடுகிறது. அடுத்தவரின் அங்கீகாரம் என்பதை இங்கு கொள்ளவேண்டாம் என்று நினைக்கிறேன்.</span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;">பதில்: </span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">வாழ்ந்து மறைந்த தமிழ் எழுத்தாளர்களின் சாதனைகளை வரும் தலைமுறைக்கு நினைவு படுத்தி அயராது தமிழ்ச் சுடரை ஏந்தி தமிழ் ஒளி பரப்ப வேண்டும் என்ற வேட்கையின் அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தேன். அவ்வப்போது வாழ்கிறவர்களை, சமீப காலம் வரை வாழ்ந்தவரை மட்டுமே நினைவில் ஏந்தி செயல்படுவது என்பது விட்டில் பூச்சி போல ஒரு நொடி பளபளத்து விட்டு மறைந்து விடுகிறது. அதற்கென்று இருக்கும் அடித்தளத்தை (base) இழந்தும் மேலோட்டமாக உயிர் வாழ்கிற மாதிரியான தோற்றத்தை </span><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">மட்டுமே தெரியப்படுத்துகிறது. இந்த நிலை இல்லாது எந்தத் துறையிலும் அதன் அடிமட்டத்திலிருந்து அன்றைய நாள் வரை அடைந்திட்ட வளர்ச்சியை பேணிப் பாதுக்காத்து </span><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அதை உந்து சக்தியாகக் கொண்டு மேற்கொண்டான வளர்ச்சிக்கு முயல வேண்டும் என்ற சுடர் தெறிப்பில் வெளிப்பட்ட எண்ணம் இது.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="background-color: white; font-size: 13px;">9. வே. நடன சபாபதி</span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="background-color: white; font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNjNPV5tv3OrT_oKSqxeWKfLOaSPT6P5oZFA1PGM_p0GWNyuIFodTxT_-8-4RXqd71aO3dm-MUyJID2BwsJDMAZFdg68ydME7d-TqspDySuYH1teKYG4Lj6M99-uowErJzdUr-F1BrPlUI/s1600/%25E0%25AE%25A8%25E0%25AE%259F%25E0%25AE%25A9+%25E0%25AE%259A%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="113" data-original-width="113" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNjNPV5tv3OrT_oKSqxeWKfLOaSPT6P5oZFA1PGM_p0GWNyuIFodTxT_-8-4RXqd71aO3dm-MUyJID2BwsJDMAZFdg68ydME7d-TqspDySuYH1teKYG4Lj6M99-uowErJzdUr-F1BrPlUI/s1600/%25E0%25AE%25A8%25E0%25AE%259F%25E0%25AE%25A9+%25E0%25AE%259A%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" /></a><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">//எது எப்படியோ இலக்கியம் எது என்பதைத் தீர்மானிப்பது வாசகன் தான்.அது மட்டும் நினைவிருக்கட்டும்.//</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;">ஐயா. நான் இந்த கருத்திலிருந்து மாறுபடுகிறேன். காரணம் இலக்கியம் எது என்று தீர்மானிக்க வாசகனுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்பது என் கருத்து.</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">வெகுஜன பத்திரிகைகள் என்று சொல்லப்பட்டவை வெளியிட்டதைத்தான் வாசகர்கள் படிக்கவேண்டியிருந்தது. வாசகர்கள் மீது ஒரு குறிப்பிட்ட இரசனையை திணித்து அதை மட்டும் கொடுத்து வணிகம் செய்து வந்தன அந்த பத்திரிக்கைகள். வாசகர்கள் அவற்றை புறக்கணித்திருக்கலாம். ஆனால் வாசகர்களின் இரசனையை அவர்கள் ஏற்கனவே மாற்றி தன்வயப்படுத்திக் கொண்டதால் வாசகர்களால் அவற்றை புறக்கணிக்கமுடியவில்லை</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">எழுத்தாளர்களையும் குற்றம் சொல்ல இயலாது. ஏனெனில் அவர்கள் பத்திரிக்கைகள் விரும்புவதைத்தான் எழுதமுடியும். இல்லையெனில் அவர்களுக்கு வருமானம் கிடைக்காது. ஏனெனில் அவர்களும் வாழவேண்டுமல்லவா?</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">திரைப்படத்துறையிலும் இதுபோன்று இரசிகர்களின் இரசனையை சுத்தமாக மாற்றி குப்பை படங்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். (இது ஒரு பொதுவான கருத்து தான் ) இரசிகர்கள்/வாசகர்கள் விரும்புகிறார்கள் அதனால் இவ்வாறு செய்கிறோம் என்று சொல்வதெல்லாம் பம்மாத்து வேலை.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பதில்:</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">'நான் இந்த கருத்திலிருந்து மாறுபடுகிறேன். காரணம் இலக்கியம் எது என்று தீர்மானிக்க வாசகனுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்பது என் கருத்து' -- என்கிறீர்கள்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">வாசகன் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதில் இருவருக்குமே மாறுப்பட்ட கருத்தில்லை, ஐயா. தீர்மானிக்கும் ஸ்திதியில் -- நிலையில் -- பத்திரிகைகள் அவனை வைத்திருக்கவில்லை என்பதே உங்கள் கருத்து. ரொம்ப சரி.. அதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">//எழுத்தாளர்களையும் குற்றம் சொல்ல இயலாது. ஏனெனில் அவர்கள் பத்திரிக்கைகள் விரும்புவதைத்தான் எழுதமுடியும். இல்லையெனில் அவர்களுக்கு வருமானம் கிடைக்காது. ஏனெனில் அவர்களும் வாழவேண்டுமல்லவா?//</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">எழுத்தே வேள்வியாகக் கொண்ட அந்தக் காலம் இல்லை சார், இது.. எழுத்தையே நம்பி எவரும் வாழ நேர்ந்திருக்கும் துர்பாக்கிய நிலையும் இன்று இல்லை சார். அரசு வேலைகளில் இருந்து கொண்டு எழுதுவோர் நிறைய பேர். தனக்கென்று ஒரு தொழிலில் இருந்து கொண்டு பெயருக்கும் புகழுக்கும் சொந்த ஆர்வத்திற்கும் எழுதுவோர் தான் அதிகம் பேர். பணம் பொருட்டல்ல; லட்சக்கணக்கான பிரதிகளில் தன் பெயரும், தன் எழுத்தும் அழகழனான </span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஓவியங்களோடு பவனி வருகிறதே-- அது தான் பெருமை. ஒவ்வொரு எழுத்தாளனையும் எத்தனையோ சோர்வுகளுக்குப் பிறகு எழுத வைத்துக் கொண்டிருக்கிற ஜீவசக்தி இது தான்.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பத்திரிகை அலுவலகங்களும் எல்லா அலுவலகங்களைப் போல ஒரு அலுவலகமாக மாறிப் போன காலம் இது. அதனால் அதில் பணியாற்றுவோருக்கும் தான் பணியாற்றும் ஒரு அலுவலகத்துடனான உறவு தான் காணப்படும். ஒரு வாரப்பத்திரிகையில் எல்லாமே இயந்திர கதி. அத்தனையும் கூட்டு முயற்சி. அடுத்த வார இதழ் அதற்கு முதல் வாரமே</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">தயாராவதற்குள் பெண்டு நிமிர்ந்து விடும்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இட்லி, பொங்கல், வடை, தோசை, பூரி -- தொட்டுக் கொள்ள வகைவகையாய். ஒரு ஹோட்டலில் காலை மெனு இப்படி இருப்பது போலத் தான் இன்றைய பத்திரிகை நிலைமையும். 'இந்த ஐட்டத்திற்கு மேட்டர் சரி பண்ணியாச்சா?.. அடுத்தது அந்த மேட்டர். அதற்குத் தயார் பண்ணு' என்கிற மாதிரி தான் எல்லாம். லகாரக்கணக்கான அந்த வார இதழ்கள் மிஷின் துப்பி சுடசுட வெளிவந்து நடுப்பக்கத்தில் பின் குத்திக் கொண்டு மடித்த வாக்கில் அடுக்கடுக்காக வரிசை கட்டப்படுவதைப் பார்க்க வேண்டுமே --- ஆயிரம் கண் போதாதே, வண்ணக்கிளியே -- கதை தான். பத்திரிகைத் துறை என்பது மிகப் பெரிய இண்டஸ்ட்ரி இன்றைய தேதியில்.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCHbLPXOFZxafQNbtLHc1UbJ_6DjNiUUxMhz0CXMC_Oy1AwbREYTJ3XGYYpmhP4sfQktQXR2e6KE_y2Da1_dwFL-R8eM_P0rxtA0QUJ-ZjNKTRUz4tu8cT4J1nrGuBd6K7W3bl5Bt5jJzX/s1600/%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="184" data-original-width="254" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCHbLPXOFZxafQNbtLHc1UbJ_6DjNiUUxMhz0CXMC_Oy1AwbREYTJ3XGYYpmhP4sfQktQXR2e6KE_y2Da1_dwFL-R8eM_P0rxtA0QUJ-ZjNKTRUz4tu8cT4J1nrGuBd6K7W3bl5Bt5jJzX/s1600/%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF.jpg" /></a></div>
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ரா.கி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்திலிருந்து ரிடையர் ஆகி விட்டார் என்ற தகவல் கேள்விப் பட்ட பொழுது நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். 'அறுபது வயசு ஆகி விட்டால் பத்திரிகை அலுவலகங்களிலும் பணி மூப்பு ஓய்வு உண்டு' என்ற விஷயத்தை முதன் முதலாகக் கேள்விப்பட்ட தருணம் அது!</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">10. தி. கீதா</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">மிகவும் ரசித்து வாசித்தேன். உண்மையை, யதார்த்தத்தை மிக மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கீங்க. எனக்கு வாசிப்பு அனுபவம் மிகவும் குறைவுதான். வலையுலகம் வந்த பிறகுதான் என் சிறு, இளம் வயதில் வாசிக்க ஆசைப்பட்டதை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அதுவும் வலையில் இலவசமாகக் கிடைப்பதை டவுன் லோடு செய்து வைத்துக் கொண்டு.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNXiOWtcMVAfxJTKE1BWxmNGoP1DtyO2ZxC-zVLrwinLkjf_EWzQmksaQ1lA_KddYrLchbl8IZRVGEh5BoTbVfKqEod3pTUcGb0xplvE1m-sIf__2Q9pjOOiI51oz2foOes3nR24sllyln/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BE+%25E0%25AE%25B0%25E0%25AF%2586%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="222" data-original-width="227" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNXiOWtcMVAfxJTKE1BWxmNGoP1DtyO2ZxC-zVLrwinLkjf_EWzQmksaQ1lA_KddYrLchbl8IZRVGEh5BoTbVfKqEod3pTUcGb0xplvE1m-sIf__2Q9pjOOiI51oz2foOes3nR24sllyln/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BE+%25E0%25AE%25B0%25E0%25AF%2586%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">உங்களின் இந்தப் பதிவு நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பவர்களையும் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஜெயகாந்தன் அவர்களின் கண்டிஷனில் எந்தத் தவறும் இல்லை. ஒரு படைப்பாளிக்கு எப்படித் தன் படைப்பில் மற்றவர் கை வைக்க மனசு வரும்? நாம் பெற்ற குழந்தை போல அல்லவா நம் ஒவ்வொரு படைப்பும்...</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="background-color: white; font-size: 13px;">பதில்: </span></span></div>
<div>
<span style="color: #202020; font-family: "arial" , sans-serif;"><span style="background-color: white; font-size: 13px;"><br /></span></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">தாங்கள் வாசித்து மகிழ்ந்ததில் ரொம்பவும் சந்தோஷம்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஜெயகாந்தன்?.. எழுத்தாளர்களின் தார்மீக பலத்தை இளம் வயதிலேயே தன் தோளில் தூக்கிச் சுமந்த சிம்ஹம் அவர்!</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இணைய வலையில் கிடைப்பதை----</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">'அழியாச்சுடர்' இணைய ஆக்க முயற்சியில் பங்கு கொள்வோருக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும், அது தகும். அவர்களின் இணைய தளத்தில் சென்ற காலத்து தமிழ் எழுத்தாளர்களின் அரிய படைப்புகளை வாசித்துக் களியுங்கள்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">http://azhiyasudargal.blogspot.com/</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இவர்களைப் பற்றித் தான் நானும் எழுதப் போகிறேன். என் தளத்தில் அவர்கள் பற்றி வாசிக்கும் பொழுது உங்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">மிக்க நன்றி, சகோ.</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">11. இராய. செல்லப்பா</span></div>
<div>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஆக, விஷயம், 'பெரிய பத்திரிகைகள் - சிறு பத்திரிகைகள்' என்ற அடிப்படையான வேறுபாட்டைப் பொறுத்ததே என்று ஆகிறது. இப்படியெல்லாம் நீங்கள் பெரிய பத்திரிகைகளைக் குறை சொல்லப்போய்த்தான் அவர்களே 'தீராநதி' என்றும் 'தடம்' என்றும் சிறு பத்திரிகைகளை ஆரம்பிக்க நேர்ந்தது. அதன் விளைவு என்னவாயிற்று?</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIC-b-O7MlLRCHNm62HZ74cCCvABotLO-eDUJ9qb0S88WVbMRQxnznDaSeLw-sds9W5nWH6q6g0HZxiuVzehux4ZzLgxVT97IHajVIJUf6dhMSkgC1sqCRKvFbbUisPghkRlb7IH80OCdm/s1600/%25E0%25AE%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AF.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="175" data-original-width="171" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIC-b-O7MlLRCHNm62HZ74cCCvABotLO-eDUJ9qb0S88WVbMRQxnznDaSeLw-sds9W5nWH6q6g0HZxiuVzehux4ZzLgxVT97IHajVIJUf6dhMSkgC1sqCRKvFbbUisPghkRlb7IH80OCdm/s1600/%25E0%25AE%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AF.jpg" /></a><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">'தடம்' நின்று போயிற்று. 'தீராநதி' வற்றிக்கொண்டே வருகிறது!</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">சிறு பத்திரிகைகளை நம்பி எந்த எழுத்தாளனும் பிழைக்கமுடியாது. அதை நடத்துபவர்களே பிழைக்கமுடிவதில்லை. எனவே இணையம் மற்றும் கிண்டில் போன்ற சுயபதிப்பு முயற்சிகளால்தான் எழுத்தாளர்கள் இனிப் பிழைத்தாகவேண்டும்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">வாசகன் எப்போதுமே அதிக சர்க்குலேஷன் உள்ள பத்திரிகைகளைத்தான் காசுகொடுத்து வாங்குவான். அவைதான் விலை மலிவாக இருக்கும். ஆகவே அதில் எழுதும் எழுத்தாளர்களுக்கு எளிதில் மவுசு வந்துவிடுகிறது. மாதம் முன்னூறு பிரதிகள் அடிக்</span><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இதுதான் வள்ளுவர் சொன்ன 'இருவேறு உலகத்து இயற்கை.' இது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நல்வாய்ப்பாக சமூக ஊடகங்கள் இலவசமாக நம்மைத் தேரில் ஏற்றிக்கொண்டு போகத் தயாராக உள்ளன. அதைப் பயன்படுத்திக்கொண்டு எழுத்தாளர்கள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே கண்கூடு. </span><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">சிறு பத்திரிகையால் எவ்வளவு எழுத்தாளர்களுக்கு சோறு போடமுடியும்? </span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இதுதான் வள்ளுவர் சொன்ன 'இருவேறு உலகத்து இயற்கை.' இது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நல்வாய்ப்பாக சமூக ஊடகங்கள் இலவசமாக நம்மைத் தேரில் ஏற்றிக்கொண்டு போகத் தயாராக உள்ளன. அதைப் பயன்படுத்திக்கொண்டு எழுத்தாளர்கள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே கண்கூடு.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பதில்:</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அடடா! எவ்வளவு நாட்கள் கழித்து, உங்களைப் பார்க்கிறேன்?.. சென்னை வந்து சேர்ந்து விட்டீர்களா, ஐயா! ரொம்ப சந்தோஷம்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">எனக்குத் தெரியும். இதையெல்லாம் வாசித்து விட்டால் உங்களால் சும்மா இருக்க முடியாதென்று.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பொதுவாக சிறுபத்திரிகைகளின் வெளியீடுகளுக்காக நம்மில் விளையும் உந்து சக்தியும்</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அவற்றிற்கான நோக்கமும் எல்லாக் காலங்களிலும் ஒன்று தான்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஆனாலும் அந்நாளைய சிறுபத்திரிகைகளில் பங்கு கொண்டவர்கள் மொழியைக் கையாண்ட அழகு, எடுத்துக் கொண்ட பொருள், விவரணைகளின் நேர்த்தி என்று எல்லா இலஷ்ணங்களுமே வேறு வகைத்தானது.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">ஜெயகாந்தன் அந்நாளைய 'சரஸ்வதி'யில் போர்வை என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். இரண்டே பக்கங்கள் தாம். வாசித்து விட்டால் பிரமித்தே போவோம். </span><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இதை எழுதியது யார் என்ற கேள்வி மனசில் கிளர்ந்து எழுதியவரின் பெயரைப் பார்க்க முனைவோம். அந்த மாதிரியான 'கிறுக்குத்தனங்கள்' எல்லாம் இந்தக் கால சிறுபத்திரிகைகளை வாசிக்கும் பொழுது நேராது.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பெரிய பேனர் திரைப்பட முதலாளிகள் சின்ன பட்ஜெட் படம் எடுப்பது போலத் தான்</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">குமுதத்தின் தடமும், தீராநதியும்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">சிறுபத்திரிகைகளின் தோற்றமும், வளர்ச்சியும் தெரிந்தே உப்பு மூட்டையை ஆற்றில் போடும் சமாச்சாரம். இலாப நஷ்ட கணக்குப் பார்ப்பவர்கள் தினமும் அப்படி ஆற்றில் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJOHpvSch2tE2MAHiw9x-lchqoJsHLtL1lYsvJxcjOmpmUEwUTsX8D1q3P7cETayTpEI6Sr0hzRzDmXGXnoNuqy-HHu2Ldq5Tm5mcC0I0irU73Gv6i5E8q4CogMweEkL8BNPBMmSAKRpmC/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="273" data-original-width="185" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJOHpvSch2tE2MAHiw9x-lchqoJsHLtL1lYsvJxcjOmpmUEwUTsX8D1q3P7cETayTpEI6Sr0hzRzDmXGXnoNuqy-HHu2Ldq5Tm5mcC0I0irU73Gv6i5E8q4CogMweEkL8BNPBMmSAKRpmC/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581.jpg" /></a><span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">சிறு பத்திரிகையின் ஆயுள் என்பது இலட்சியப்பிடிப்பிலும், கொள்கைச் சான்றாண்மையிலும், எந்த இடர் வந்தாலும் சமாளிப்போம்; இதை செய்தே தீருவோம் போன்ற கடப்பாடுகளுடன் பிணைந்தது.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"> </span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">சி.சு. செல்லப்பா, தன் மனைவியின் கழுத்தில், காதில் என்று இருந்த ஓரிரண்டு நகைகளை அடகு வைத்தும், அழித்தும் எழுத்து பத்திரிகையை அச்சடித்தார். பிரதிகளைத் தோளில் சுமந்து பாடசாலைகளின் படிகளில் ஏறி இறங்கி இளம் பிள்ளைகள் மத்தியில் அவற்றை அறிமுகப்படுத்த முனைந்தார். அந்த மாதிரியெல்லாம் இப்பொழுது ஏதும் நடந்து விடாது மட்டுமில்லை, அந்த மாதிரியான நடவடிக்கைகள் எல்லாம் தேவையில்லாத பைத்தியக்காரத் தனங்களாக இப்பொழுது எள்ளி நகையாடப்படும்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பிழைப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. சிறு பத்திரிகைகளை அச்சடித்துத் தான் பிழைக்க வெண்டும் என்று இல்லை. பிழைப்பதற்காகவும் இந்த மாதிரியான தன்னையே மாய்த்துக் கொள்ளும் காரியங்களிலும் யாரும் ஈடுபடுவதில்லை. அதனால் எழுதுவது என்பது பிழைப்பின் அடிப்படையில் இல்லை என்பதை எல்லோருமே அறிந்து தான் இருக்கிறார்கள். சொல்லப்போனால் பிழைப்பதற்காக வைத்திருப்பதை தொலைப்பதற்காகத் தான் என்பது நிதர்சன உண்மையாக இருக்கும் காலம் இது.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">எத்தனை இணைய தள எழுத்துக்கள்?.. எத்தனை வித தலைப்புகள்?.. எவ்வளவு ஈடுபாடுகள்?.. எவ்வளவு கால, நேர செலவழிப்புகள்?..</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இதற்கான ஆதார சுருதி என்ன?</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">பின் எதற்காக இத்தனை அல்லாடல்கள்?..</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">மனிதப் பிறப்பின் தீராத தாகம் தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற இயற்கை நியதி.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">கர்ப்பமுற்ற பெண் குழந்தையை பெற்றே தீர வேண்டும் என்பது போல இது. அறிவுத் தாகம் எடுத்தவனின் கதையும் இதே தான். தன் இருப்பை சமூகத்திற்கு தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்; இலட்சியங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்; பொது விஷயங்களில் தன் கருத்தைச் சொல்லியே ஆக வேண்டும் -- போன்ற தினவுகள்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">அந்தத் தினவுகள் தாம் கதைகளாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் முகிழ்த்து எழுத்தாய் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span>
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">எண்பது வயசு பெரியவரும் கண் பார்வைக் கோளாறுகளோடும், உடல் இயலாமைகளுக்கு இடையேயும் மூப்பின் அவஸ்தைகளுக்கு நடுவேயும் கணினியின் எதிரே உட்கார்ந்து கொண்டு சமூகத்தோடு பேசிக் கொண்டிருப்பதின் சூட்சும சக்தி இது தான் ஐயா!</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன?.. நிச்சயமாகத் தெரியும். இருந்தும் என் வாய் மொழியாக நான் சொல்லிக் கேட்பதில் அலாதி மகிழ்ச்சி என்பதும் தெரியும்.</span><br />
<br style="background-color: white; color: #202020; font-family: arial, sans-serif; font-size: 13px;" />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;">நெடுநாட்கள் கழித்து உங்களை இணைய தளத்தில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்து போனேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, ஐயா.</span><br />
<span style="background-color: white; color: #202020; font-family: "arial" , sans-serif; font-size: 13px;"><br /></span></div>
</div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-45848302492280880552020-04-14T13:06:00.000-04:002020-04-17T12:22:04.642-04:00தமிழ் பத்திரிகைகளின் வாசிப்பு அனுபவம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: red;">இது ஒரு விவாத்திற்கான பகுதி. </span><br />
<span style="color: red;"><br /></span>
<span style="color: red;">சொல்லப் போனால் எங்கள் பிளாக் வாட்ஸாப் க்ரூப்பில் தனி நபர்களாய் பேசியதின் தொடர்ச்சி.. இந்த மாதிரி விஷயங்களைத் துண்டு துண்டாக </span><span style="color: red;">தொடர்பு இல்லாமல் கிடைத்த இடைவெளியில் ஆளாளாக்கு பேசினால் அதற்கு கோர்வையான ஒரு தோற்றம் கிடைக்காது என்பதினால் ஒரு பதிவாக அந்த விவாதத்தின் தொடர்ச்சி இங்கு தொடரப்பட்டிருக்கிறது. </span><br />
<span style="color: red;"><br /></span>
<span style="color: red;">அந்த விவாதத்தில் பங்கு கொண்ட அன்பர்களையும் இதை வாசிக்க நேரும் மற்ற நண்பர்களையும் இந்தப் பகுதியைத் தொடரக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு விஷயத்தை விவாதிக்க ஒருவர் ஆரம்பித்தால் அதன் தொடர்ச்சியாக அதே விஷயத்தை விவாதித்து அதற்கு ஓரளவு தீர்வோ முடிவோ கிடைத்த பின்பு அடுத்த விஷயத்தை விவாதிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.</span><br />
<span style="color: red;"><br /></span>
<span style="color: red;">தொடர்ந்து விவாதத்தில் பங்கு கொள்ளவிருக்கும் அருமை நண்பர்களுக்கு என் முன்னான நன்றி. வாருங்கள், நண்பர்களே!..</span><br />
<br />
<br />
<span style="color: red; font-size: x-large;">த</span>மிழில் நெடுங்காலமாக வெளியீட்டீல் இருந்து வரும் பத்திரிகைகள் ஆனந்த விகடன், குமுதம், கல்கி. இந்த மூன்று பத்திரிகைகளோடு தினமணிக் கதிர், குங்குமம்<br />
ஆகிய பத்திரிகைகள் பிற்காலத்தில் சேர்ந்து கொண்டன.<br />
இதே கால கட்டத்தின் பிற்பகுதியில் சாவி, இதயம் பேசுகிறது என்று இதே பாணியில் சின்னச் சின்ன மாற்றங்களோடு இன்னும் சில குட்டிப் பத்திரிகைகள்.<br />
<br />
பொதுவாக இந்த ஐந்து பத்திரிகைகளில் எழுதியவர்கள், அல்லது இந்த ஐந்து பத்திரிகைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு எழுத வாய்ப்பு கிடைத்தவர்கள் தான் தமிழ் எழுத்தாளர்கள் என்று கருதப்படும் ஒரு பொய்யான தோற்றம் வழக்கில் இன்றைக்கும் இருந்து வருகிறது.<br />
<br />
இந்த ஐந்து பத்திரிகைகளை வாசித்தவர்கள் தாம் பெரும்பாலான பத்திரிகை வாசகர்கள் என்பதினால் இந்தப் பத்திரிகைகளில் எழுதியவர்களைத் தவிர பிற எழுத்தாளர்களை இயல்பாகவே தெரிந்து கொள்ள முடியாமல் போயிற்று.<br />
<br />
இந்த ஐந்து பத்திரிகைகளும் வெவ்வேறு விதமான உள்ளடக்கங்களை, வெவ்வேறு பாணிகளைக் கொண்டிருந்தவை. இதைப் பாமரத்தனமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு சிறுகதை என்றால் இந்தப் பத்திரிகைக்குத் தான் இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என்று கணிக்கும் அளவுக்கு அல்லது இந்தப் பத்திரிகைக்கு என்றால் இந்த மாதிரி தான் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு அவற்றின் பாணிகள் இருந்திருக்கின்றன.<br />
<br />
அவை இப்படியெல்லாம் தங்களிடம் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், பொதுவாக வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தை ஒரு பொழுது போக்கு அம்சத்தில் கொண்டு போய் இணைப்பதில் இந்தப் பத்திரிகைகள் தம்மிடையே ஒருமித்த இணைப்பைக் கொண்டிருந்தமை தான் இதில் வேடிக்கை. சமூகத்தின் நலனுக்காக அதன் மேம்பாட்டிற்காக சுதந்திரமான சோதனை முயற்சிகளை எழுத்தில் மேற்கொள்ளத் துடிக்கும் எழுத்தாளன் இந்த நான்கு பத்திரிகைகளை இயல்பாகவே தவிர்த்து விடுகிற நிலை; இல்லை எனில், அப்படியான கதைகளை ---புதுமைப்பித்தன், விந்தன் போன்றோர் எழுதிய மாதிரியான-- கதைகள் படைப்பதைத் தவிர்த்து விடுவது தான் புத்திசாலித்தனம் என்று நினைப்பது.<br />
<br />
இது ஒரு விபத்து. இப்படித் தான் எழுத்தாளன் எழுத வேண்டும் என்று ஒரு வட்டம் போட்டு தீர்மானிக்கப் பட்டு விடுவதால் அந்த வட்டத்திற்குள் தன்னை அடைத்துக் கொள்கிற மாதிரி தான் எழுத வேண்டிய சுய கட்டுப்பாடு எழுதுகிறவனுக்கு ஏற்பட்டு விடுகிறது. <br />
<br />
வாசகனுக்கோ இந்த நாலு பத்திரிகை உள்ளடக்க எழுத்தைத் தாண்டி வாசிக்க ஏதும் இல்லை என்றாகிவிடுகிறது. இதையே தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் இப்படியான வாசிப்புக்கே கோடிக்கணக்கான தமிழக வாசகர்களைப் பழக்கப்படுத்தியும், வாசகர்கள் இந்த வாசிப்புக்கே பழக்கப்பட்டும் போய் விட்டார்கள் என்பதே<br />
உண்மை.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivErHBM4ouMzO5FqWGfpU0edfeqsY2Qp7Gf3E5021ID2pVuk1NUYmTMBn6DwfigHgMYtJX3wyCAxa3PWgPwZgGvyoXIKfXiR_pZHOo96JTFmzVJ0Rxx3eeEHOE_qst1hnDSwq1YV8qYjnM/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%259C%25E0%25AE%25BE.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="190" data-original-width="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivErHBM4ouMzO5FqWGfpU0edfeqsY2Qp7Gf3E5021ID2pVuk1NUYmTMBn6DwfigHgMYtJX3wyCAxa3PWgPwZgGvyoXIKfXiR_pZHOo96JTFmzVJ0Rxx3eeEHOE_qst1hnDSwq1YV8qYjnM/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%259C%25E0%25AE%25BE.jpg" /></a>சுஜாதா உட்பட தமிழகத்தில் வாழ்ந்த பத்திரிகை எழுத்தாளர்கள் அத்தனை பேரும் இப்படியான உறவைப் பேணிக் கொண்டு தான் பத்திரிகைகளில் எழுதினார்கள். சுஜாதாவிற்கு இருந்த ஆற்றலுக்கு வெகு பிரமாதமான சிறுகதைகளை அவர் படைத்திருக்கலாம். கணேஷ்-- வசந்தை வைத்துக் கொண்டு இப்படிப்பட்ட குழந்தைத் தனமான மர்மக் கதைகளை எழுதுவதைத் தான் வாசகர்கள் விரும்புகிறார்கள் என்றும், அதையே உண்மையாக்கியும் அவரை உபயோகப்படுத்திக் கொண்ட இந்தப் பத்திரிகை உலகம் தன் அழிச்சாட்டிய போக்கில் வெற்றி கண்டிருக்கிறது. தனது சுயசரிதை போலவான தொடருக்குக் கூட 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' என்று வாசகர்களை சுண்டி இழுக்கக் கூட தலைப்பு வைக்கக் கூடிய நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.<br />
<br />
அவர் ஆளுமை ஒரு குடத்தில் அடைக்கப்பட்டு குறுகிப் போணதே நடந்த கதை. பாவம், அவர் தனது மிகச் சிறந்த கட்டுரைகளில் தன் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொண்டார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgE76UypDEiHK1WKXnEvxtKfcBu4xFZgDzqx3tpN_yZwtZNbUqjsm8tTls0WeoHgUpSx5UHbmm3oQfDH5pkO2HnPVXeBS7QRluDIuAKUpplHHO4UYB1rAW8ixn8N9Y2E1THRCNgaFsuOL1k/s1600/%25E0%25AE%259C%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="375" data-original-width="317" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgE76UypDEiHK1WKXnEvxtKfcBu4xFZgDzqx3tpN_yZwtZNbUqjsm8tTls0WeoHgUpSx5UHbmm3oQfDH5pkO2HnPVXeBS7QRluDIuAKUpplHHO4UYB1rAW8ixn8N9Y2E1THRCNgaFsuOL1k/s320/%25E0%25AE%259C%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" width="270" /></a></div>
<br />
ஆகப்பெரிய ஜெயகாந்தன்?.. அவருக்கும் இந்த நிலை தான். தனது நூல் ஒன்றிற்கான தன்னுரையில் இப்படி எழுதுவார்: 'இந்த அளவில் தான் வட்டாட வேண்டும் என்ற நிலை; இதை மீறிப் போனால் உறவு தகர்ந்து போகும்' என்று.<br />
<br />
'ஆ--ஊ'ன்னா அசோகமித்திரன் என்கிறார்கள். அவரும் இந்தப் பெரும் பத்திரிகைகளால் புறக்கணிக்கப்பட்டவர் தான். இத்தனைக்கும் ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றியவர். சிறு பத்திரிகைகள் மூலம் கல்லிடுக்கில் பிளந்து கொண்டு மலரும் ரோஜாவாய் மலர்ந்தவர் அவர். <br />
<br />
இப்படியான எல்லா எழுத்தாளர்களும் தங்களை சமரசப்படுத்திக் கொள்ளாமல் தாங்கள் ஏற்றுக் கொள்கிற சிறு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள். தனக்காகவே ஒரு பத்திரிகை கிடைக்காதா என்றும் நினைத்திருக்கிறார்கள். ஜெய காந்தனின் 'ஞானரதம்' தோற்றமும் இப்படிப்பட்டது தான்.<br />
<br />
தமிழகத்தில் சிற்றிதழ்கள் பலவும் இப்படியான தனக்கான அல்லது தங்களுக்கான எழுத்துக்காகத் தான் ஆரம்பம் கொண்டவை. பெரும்பத்திரிகைகளின் சட்டாம்பிள்ளைத் தனத்திலிருந்து விடுபட்ட சுதந்திர குரல்கள் அவை.<br />
<br />
இந்த நாலு 'பெரிய' பத்திரிகைகள் வந்த காலத்தும் தமிழகத்தில் நாவல்களுக்கென்று கி.வா.ஜ. ஆசிரியராய் இருந்த 'கலைமகள்' தனித்தன்மையுடன் திகழ்ந்தது. அகிலன் போன்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்தது அந்தப் பத்திரிகை தான். தமிழின் மிக உன்னதமான எழுத்துக்களை கலைமகள் பிரசுரித்திருக்கிறது. புதுமைப் பித்தன் கதைகளை கூட அது தயக்கத்துடன் தவிர்த்ததில்லை.<br />
<br />
அதே மாதிரி எழுத்தாளர் விக்கிரமன் (வேம்பு) ஆசிரியராய் இருந்த 'அமுதசுரபி', கும்பகோணத்திலிருந்து வெளிவந்த 'காவேரி' போன்ற பத்திரிகைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இன்றும் பெரும் பத்திரிகைகளின் அழுத்தத்திலும் அமுங்கிப் போய் விடாமல் மெல்லிசாக சுவாசித்துக் கொண்டு தான் இருக்கின்றன.<br />
<br />
ஆக, என்னதான் சொல்ல வருகிறோம்?...<br />
<br />
கன்ஸாலிடேட் பண்ணிச் சொல்கிறேன்.<br />
<br />
தமிழகத்தின் பெரும் பத்திரிகைகளால் முத்திரைக் குத்தப்பட்டவர்கள் தான் தமிழ் எழுத்தாளர்கள் என்றும் திருப்பி திருப்பி அவர்கள் எழுதியதை மட்டுமே சிலாகித்துப் பேசுவதும் பாவம். அதைத் தாண்டி வருகிற அறிவுத் தேடலை இந்தப் போக்கு சிறைப்படுத்தும்.<br />
<br />
சுஜாதாவை தாண்டி யார் யார் எல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று தேடி வாசித்துப் பாருங்கள்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8TWUEyS69kkNO6c1R-1Vah9UDyidOMgydAFN9yL90SXqGTl1iF9S2anSuEia-ToW9OGozZfsnA_887uaIchsdP-B4J4R2QXLh35yRPVGYSgeMra5rDhC-lZkb1HMsOw89x_ZCc8UQmnos/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581.%25E0%25AE%25AA.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8TWUEyS69kkNO6c1R-1Vah9UDyidOMgydAFN9yL90SXqGTl1iF9S2anSuEia-ToW9OGozZfsnA_887uaIchsdP-B4J4R2QXLh35yRPVGYSgeMra5rDhC-lZkb1HMsOw89x_ZCc8UQmnos/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581.%25E0%25AE%25AA.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE.jpg" /></a>'இவர்கள் எழுத்தெல்லாம் படிக்க முடியலையே, சார்!' என்று சிலரது முகச்சுணுக்கல். ஓரளவு உண்மை தான். பழக்கப்பட்ட பத்திரிகை எழுத்து முறை காலத்தின் மாற்றமாய் மாறிப் போய் விட்டது. தன் போக்கில், கதாசிரியரே வரட்டுத்தனமாய் முழுக்கதையையும் சொல்கிற மாதிரி' என்று நிறைய அசட்டுத்தனங்கள் பெருகி விட்டன. வாசகர்களுக்கு பழக்கப்பட்ட மனசில் இருப்பதை வடிக்கும் எழுத்துப் போக்கு , கதாபாத்திரங்களின் உரையாடலே இல்லாமல் கட்டுரை போல நீண்டு கிடக்கிறது. இப்படி ஏகப் பட்ட குறைபாடுகள். இருந்தும் இவர்கள் எதையோ ஆத்மார்த்தமாகச் சொல்ல முற்படுகிறார்கள். பெரும்பாலும் எளியவர்களின் குரல்கள் அவை. முடிந்தால் சிரம்பட்டாவது வாசித்துப் பாருங்கள். இல்லையென்றால், விட்டு விடுங்கள். பாதகமில்லை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh-uquNIKZAQO1vmjW3W43ALzI86y6sYGfEKEVzdE5uZqgJxvcDcmVF3bQJqeVqRXYbVE6gPrN4202AEdkFNGxKYIGQmn1YYg7qy-BNrqGo8a0HBvIPPyNJ7ZOalQfJkbp31dqj_QqBvAs/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25AE%25E0%25AF%258D.%25E0%25AE%25B5%25E0%25AE%25BF.%25E0%25AE%25B5%25E0%25AE%25BF..jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="182" data-original-width="276" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh-uquNIKZAQO1vmjW3W43ALzI86y6sYGfEKEVzdE5uZqgJxvcDcmVF3bQJqeVqRXYbVE6gPrN4202AEdkFNGxKYIGQmn1YYg7qy-BNrqGo8a0HBvIPPyNJ7ZOalQfJkbp31dqj_QqBvAs/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25AE%25E0%25AF%258D.%25E0%25AE%25B5%25E0%25AE%25BF.%25E0%25AE%25B5%25E0%25AE%25BF..jpg" /></a></div>
வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், எம்.வி. வெங்கட்ராம், சா. கந்தசாமி, கு.ப. ராஜகோபாலன். பிச்சமூர்த்தி, நகுலன், சி.சு செல்லப்பா -- என்று பழைய எழுத்து முறை பழக்கப்பட்ட பெரும் பத்திரிகைகளில் எழுதாத ஒரு பட்டாளமே இருக்கிரது. வாசித்துப் பாருங்கள். சுஜாதாவைத் தாண்டி இன்னொரு உலகம் இருப்பது தெரியும்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYD7t5JLqLhIvmTigng3sIv2B0vupjrHAQEsQy3Cxr6copqdXh1NnEPYp4UcwnC-rgFENh-QxrQVplPPqeKTzSTj8nfyMxSXYbpuylRp1g28okkjluXEkRtBRVB6Y-5xwwvs_6XlODFD9N/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYD7t5JLqLhIvmTigng3sIv2B0vupjrHAQEsQy3Cxr6copqdXh1NnEPYp4UcwnC-rgFENh-QxrQVplPPqeKTzSTj8nfyMxSXYbpuylRp1g28okkjluXEkRtBRVB6Y-5xwwvs_6XlODFD9N/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE.jpg" /></a>நூற்றுக்கும் மேற்பட்ட புதுமைப்பித்தனின் சிறுகதைகளை அந்நாளில் இருந்த பெரும் பத்திரிகைகள் எதுவும் வெளியிடவில்லை. கலைமகள் அவர் கதையை வெளியிட்டிருக்கிறது, மணிக்கொடி, சுதந்திர சங்கு, ஜோதிமணி, ஊழியன், நந்தன் போன்ற சிறுபத்திரிகளே வெளியிட்டிருக்கின்றன.<br />
<br />
'இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சி தானே?' என்பார் புதுமைப் பித்தன். 'நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் -- இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல் காதல், கத்திரிக்காய் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை, நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவும் இல்லை' என்பார் அவர்.<br />
<br />
தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவலை எந்த பெரும் பத்திரிகையும் வெளியிடவில்லை. 'ஆண்--பெண் உறவை எழுதுவது இலக்கியமா?" என்று கல்கியே ஜானகிராமனை குறை சொல்லிக் குறிப்பிட்டார். தி,ஜா.வின் 'மரப்பசு' கூட கணையாழியில் தான் வெளிவந்தது.<br />
<br />
எது எப்படியோ இலக்கியம் எது என்பதைத் தீர்மானிப்பது வாசகன் தான். அது மட்டும் நினைவிருக்கட்டும்.<br />
<br />
வாசகனுக்கு இலக்கியம் வாசிக்க வேண்டிய அவசியம் இல்லாது கூட இருக்கலாம்.<br />
<br />
ஆனால் இலக்கியம் என்பது எது என்று தீர்மானிக்க மட்டும் வாசகனுக்குத் தெரியாது இருக்கக்கூடது.<br />
<br />
அந்த முடியாமை ஒரு வார ஆயுசு கொண்ட வாரப் பத்திரிகை வகையாறா பக்கங்களையே புரட்டிப் புரட்டி குறுகிப் போகிற அறிவுச் சோர்வை ஏற்படுத்தி விடும்.<br />
அதில் குப்பை கொட்டும், கொட்டிய எழுத்தாளர்களை மட்டுமே பேச வைக்கும்.<br />
<br />
பதிவுலகே எனக்குப் போதும் என்று முடங்கிப் போகும் போக்கை நிச்சயப்படுத்தலாகி விடும்.<br />
<br />
இது தான் இப்போது பேச வந்தது.<br />
<br />
பின்னூட்டங்களில் தொடர்ந்து பேசவும் செய்யலாம்.<br />
<br />
<br /></div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-82836440655208683292020-04-11T03:26:00.000-04:002020-04-11T04:16:29.459-04:00புளிய மரத்தின் கதை சொன்ன சுந்தர ராமசாமி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: large;">இலக்கியம் செய்வதென்றால்</span><br />
<span style="font-size: large;">எளிதில்லை எழுத்தாளா,</span><br />
<span style="font-size: large;">கலக்கினால் காவிரியும்</span><br />
<span style="font-size: large;">கழிவுப் பொருள் காட்டும்.</span><br />
<span style="font-size: large;"> --- பசுவய்யா </span><br />
<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2u7gfsZJMtY_PokyON8Ip4-o-vKgzvUMu2IB7Kk0Ha5Jipe9_txIXV3aDseyDdLHF8L57zJmn1oUv62fAn43EvWYhuU-Vnjrk-L_8gKZ7ESGiS6KgcOlZnWMHMQdqsaqtLpChDumR_8le/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0+%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="210" data-original-width="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2u7gfsZJMtY_PokyON8Ip4-o-vKgzvUMu2IB7Kk0Ha5Jipe9_txIXV3aDseyDdLHF8L57zJmn1oUv62fAn43EvWYhuU-Vnjrk-L_8gKZ7ESGiS6KgcOlZnWMHMQdqsaqtLpChDumR_8le/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0+%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg" /></a><span style="color: red; font-size: x-large;">எ</span>னது இளம் வயதிலேயே 'ஒரு புளியமரத்தின் கதை' படித்த பொழுது பிடித்துப் போனது. பல ஆண்டுகள் கழித்து நூலகத்தில் வேறொன்றைத் தேடுகையில் கிடைத்த இதைப் படித்ததில் இன்னும் பிடித்துப் போயிற்று. <br />
<br />
தோழர் விஜய பாஸ்கரனின் 'சரஸ்வதி' பத்திரிகை பற்றி தனியே நிறையச் சொல்ல வேண்டும். அந்தப் பத்திரிகையில் இந்த புனிதத்தை எழுதும் வாய்ப்பு சுந்தர ராமசாமிக்கு கிடைத்தும் அவர் எழுத ஆரம்பித்து நான்கே அத்தியாயங்கள் பிரசுரமான சூழ்நிலையில் பத்திரிகை அடைந்த தளர்ச்சியில் சுந்தர ராமசாமியால் மேற்கொண்டு தொடர முடியவில்லை. எது எப்படிப் போயினும் முதல் நாவலை எழுதும் வித்தையை அவர் மனத்தில் ஊன்றியது 'சரஸ்வதி' தான். <br />
<br />
விட்டுப் போன புதினத்தைத் தொடர ஏழெட்டு வருஷமாயிற்று அவருக்கு இந்த இடைவெளியும் அவர் எழுத்துக்கு மெருகு கூட்டியிருக்கலாம். அதை உணர்ந்து தான் சுந்தர ராமசாமியும் அந்த நேரத்தில், 'இந்த நாவல் வழி;யாக அறிமுகம் எனக்குத் திருப்தி அளித்தாலும், இதை விட விரும்பும் நாவலை நான் பிற்காலத்து எழுதக் கூடும்' என்றார். எதற்கு சொல்ல வந்தது என்றால் காலமும் அந்த காலம் அந்தக் காலம் கைபட்டு மனிதன் வார்த்தெடுக்கப் படும் விநோதமும் அற்புதமானது. அதுவும் ஒரு கலைஞன் என்றால் கேட்கவே வேண்டாம்.<br />
<br />
அது என்ன புளியமரத்தின் கதை?..<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmtBaZw8hxCz40IYgfRtj_9xEKCoKgdnvsGQXlNFTaCfVlR1mtiD6bs9qNP7Gpkqo9DjZlShDmlupkPGdD9SsjV9VH-3wdtTN6u_Qy9PdJevRKdJuAs7U4chhRTE-LoEt9CpiM2tWIv_8j/s1600/%25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581++%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%25AF.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmtBaZw8hxCz40IYgfRtj_9xEKCoKgdnvsGQXlNFTaCfVlR1mtiD6bs9qNP7Gpkqo9DjZlShDmlupkPGdD9SsjV9VH-3wdtTN6u_Qy9PdJevRKdJuAs7U4chhRTE-LoEt9CpiM2tWIv_8j/s1600/%25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581++%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%25AF.jpg" /></a></div>
அந்தப் புளியமரத்தை நினைக்கும் பொழுதே தாமோதர ஆசான் நினைவில் நிழலாடுகிறார். ஆரம்பத்தில் கொப்பும் கிளையுமாக பிர்மாண்டமாக நிழல் பரப்பிக் கொண்டிருந்த<br />
அந்தப் புளியமரம் காலத்தின் கோலமான மனிதர்களின் அலங்கோல போக்கில் ஏற்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து போகும் சோகத்தை சுந்திர ராமசாமி பதிவு செய்திருக்கும் பாங்கு நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. <br />
<br />
அந்தப் பகுதி மக்களுக்கு புளிய மர ஜங்ஷனாய் மெளன சாட்சியாய் தன் தளர்ச்சியைத் தானே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த புளிய மரத்தின் நிலையைச் சொல்வதின் மூலம் சமூகத்தின் அவலங்களை பகிர்ந்து நகர்வதே கதையாகிப் போகிறது. தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தும் எளிய மக்களுக்கு அந்த சுதந்திரம் நீட்டிக்காது போனது போல அந்த மரத்திற்கும் ஆகிறது. இது மரத்தின் கதை என்று சொன்னாலும் அல்லது மனிதரின் கதை என்று சொன்னாலும் சரி, எல்லாம் ஒன்று தான்.<br />
<br />
நாகர்கோயிலுக்கு பக்கத்து கிராமம் தழுவிய மஹாதேவர் கோயில். சுந்திர ராமசாமி பிறந்த இடம் இதுவே. திருவிதாங்கூர் கோட்டயத்தில் தந்தை வியாபாரம் செய்ததினால் அவரின் ஆரம்பக்கல்வி கோட்டையத்தில் <br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm4Tg1IOwhjEP1lQ-aTc9vv9WlZfwTsV2bKylWAG17xMX_9jXC0j4qMSaGCMu4yaNEsrkczR-bB3Hdl723WbEweLUAlHIk6sUFZBswBBvanRSAmGAewwbEeIO4wEhjQPoYh9sjtJTqKd-z/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE..jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="200" data-original-width="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm4Tg1IOwhjEP1lQ-aTc9vv9WlZfwTsV2bKylWAG17xMX_9jXC0j4qMSaGCMu4yaNEsrkczR-bB3Hdl723WbEweLUAlHIk6sUFZBswBBvanRSAmGAewwbEeIO4wEhjQPoYh9sjtJTqKd-z/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE..jpg" /></a>அமைந்தாலும் சிறுவயதிலேயே கோட்டையம் நீங்கி நாகர்கோயிலில் பள்ளிக்கல்வி தொடர்ந்தது. உடல் நலக் குறைவினால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாது போயினும் தாயின் அறிமுகத்தில் மணிக்கொடி எழுத்தாளர்களின் கதையுலகம் பரிச்சயமாகி புதுமைப் பித்தன் மனம் கவர்ந்த எழுத்தாளர் ஆகிறார். இந்த வாசிப்பு அனுபவமே சுந்தர ராமசாமி எழுதுவதற்கு கிரியா ஊக்கியாக இருந்து செயல்பட்டிருக்கிறது. எதில் அளவற்ற ஈடுபாடு கொள்கிறோமோ அதுவே அவரை ஆக்கு;ம் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது என்பது உண்மை தான்.<br />
<br />
சுந்தர ராமசாமி எழுதியது மூன்றே நாவல்கள் தாம். புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று மூன்றே தான் ஆனாலும் மூன்றும் மூன்று வகையானவை. வெவ்வேறு காலத்தான அவர் கொண்ட வளர்ச்சியை சொல்பவை. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr0_10qnfGEunQikZUU1Y2tu7qxB8NDkZtXGVi96Kw-4voIYNBGeEUIim-GbsQebqpDR__vxL5QXTpaxbCgBexxKIB1TMj103cZFihWMO4g6GO4RaqgCrJgHL991DmkHYVjn2j88SFwgs4/s1600/%25E0%25AE%259C%25E0%25AF%2587.%25E0%25AE%259C%25E0%25AF%2587..jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr0_10qnfGEunQikZUU1Y2tu7qxB8NDkZtXGVi96Kw-4voIYNBGeEUIim-GbsQebqpDR__vxL5QXTpaxbCgBexxKIB1TMj103cZFihWMO4g6GO4RaqgCrJgHL991DmkHYVjn2j88SFwgs4/s1600/%25E0%25AE%259C%25E0%25AF%2587.%25E0%25AE%259C%25E0%25AF%2587..jpg" /></a></div>
ஜே.ஜே. சில குறிப்புகள் மலையாள மண் வாசனை கொண்டது. ஜோசப் ஜேம்ஸ் தான் ஜே.ஜே. ஓவியங்களின் நுணுக்கங்களிலும் சிற்பங்களின் நேர்த்தியிலும் மனதைப் பறிகொடுத்தவர். கால்பந்தாட்ட வீரர். கல்லூரி வாழ்வில் தனக்கு வாய்த்த ஆசிரியர் அரவிந்தாட்சனால் இலக்கியங்களின் பால் ஈர்ப்பு ஏற்படுத்திக் கொண்டவர்.<br />
<br />
இந்த ஜே.ஜே.யை உருவகப்படுத்தும் முயற்சியில் ஜே/ஜே. மாதிரி கற்பனையிலாவது சுந்தர ராமசாமி வாழப் பார்த்திருக்கிறார் என்று புதினத்தைப் படிக்கையில் தெரிகிறது. பாலு என்ற பாத்திரத்தையும் தனக்காகவே வடித்தெடுதிருக்கிறார் அல்லது அந்தப் பாத்திரத்தினுள் நுழைந்து கொண்டு விட்டார். இன்னும் நமக்குத் தெரிந்த வேறு சிலர் மாதிரி சாயல் தெரிகின்ற எம்.கே. அய்யப்பன், முல்லைக்கல் மாதவன் போன்றவர்களை வேறு சு. ராமசாமி நடமாட விட்டிருக்கிறார். சு.ரா.வின் இந்த மத்தாப்பு பூவாணங்கள் நாவலை ஒரு யதார்த்த உணர்வில் பொருத்தி வைக்கப் பார்த்த முயற்சிகளே என்று புரிகிறது. அவைகள், சு.ரா.அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த மன ஓட்டங்களே.<br />
<br />
ஜே.ஜே. மாதிரி இல்லை, 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' ; இது வேறு மாதிரி. ஒரு பெரிய குடும்பத்தைச் சார்ந்த பெண்கள், ஆண்களுக்கு மட்டுமில்லை, குழந்தைகளுக்குக் கூட விருப்பங்களும், வேண்டும் - வேண்டாமைகளும் இருக்கின்றன. குழந்தைகள் உலகம் நமக்குத் தெரிந்தது தான். ஒவ்வொரு குழந்தையும் ஒரு மாதிரி அமைந்தாலும் பொதுவான குழந்தை உணர்வுகள், அந்த அறியாப் பருவம் எல்லோருக்கும் ஒன்று தான்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBN4kykRgFd1vZ-KAn9k15c1bOdC1elTYLgPr7EwWTZyVQeVGs4zCzJto4AJLIaxGSCeCxwc2MaVCWzdQXtYQtfd6thnd3OD1RGNphWgzJ-xZSUBlVDA1AZqY8Uvk-SS6oLor-TiA1jzAJ/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="224" data-original-width="224" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBN4kykRgFd1vZ-KAn9k15c1bOdC1elTYLgPr7EwWTZyVQeVGs4zCzJto4AJLIaxGSCeCxwc2MaVCWzdQXtYQtfd6thnd3OD1RGNphWgzJ-xZSUBlVDA1AZqY8Uvk-SS6oLor-TiA1jzAJ/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg" /></a>மெதுமெதுவாகக் கதைவைத் திறந்து காட்டுகிற மாதிரி, பாலு, ரமணி, லச்சுவின் குழந்தைகள் உலகத்தைத் திறந்து காட்டுகிறார். குழந்தைகளின் கனவுகள், குலாவல்கள், சகஜ பாவங்கள் எல்லாம் துடிப்பாக செதுக்கப்பட்டுள்ளன. லஷ்மியும், வள்ளியும், சீதையும் பங்கஜாவும், கெளரியும், சுகன்யாவும் பெண்கள் உலகத்திற்கு செளந்தமானவர்கள். ஆண்கள் உலகத்திற்கோவெனில், எஸ்.ஆர்.எஸ்., டாக்டர் பிஷாரடி, பிடில் ராமய்யர், சேது அய்யர், சம்பத், ஸ்ரீதரன், செல்லப்பா, சாமு என்று ஒரு பட்டாளமே இருக்கிறது. இவர்களிடையே சு.ரா. ஏற்படுத்தும் உறவுகள், உணர்வுகள் இதான் கதை. யதார்த்த பாணியில் சுந்தர ராமசாமி எழுத முயற்சித்த நாவல். படித்து முடிக்கும் பொழுது ஒருவகையில் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. அவர்களுடன் கூடச் சேர்ந்து பழகிக் களித்த சுவாரஸ்யம் அது.<br />
<br />
சில வருடங்களுக்கு முன் தினமணி தீபாவளி மலர் ஒன்றில் சுந்தர ராமசாமியின் 'ரத்னாபாயின் ஆங்கிலம்' என்கிற சிறுகதையைப் படிக்க நேர்ந்தது. ஒரு மொழியைக் கையாளும் நேர்த்தியும், அந்த மொழியில் தனக்கிருக்கும் ஆளுமையை வார்த்தைகளாக வடித்தெடுக்கும் சுகத்திற்காக கைபோன போக்கில் கற்பனையாக எழுதிய ஒன்றை நிஜமாலுமே நடைமுறைபடுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது ரத்னாபாய்க்கு. அந்த நிர்பந்தத்திற்கு இடையே ரத்னாபாய் வாழ நேர்ந்த வாழ்க்கைக் கதையையும் பாங்காகச் சொல்லி நன்றாகத் தான் எழுதியிருந்தார் சந்தர ராமசாமி. <br />
<br />
அழைப்பு, போதை, பல்லக்குத்ன் தூக்கிகள் போலவான அவரது நிறைய கதைகள், படிப்பவர்க்கு நிறைவைக் கொடுக்கும். 'மரியா தாமுவுக்கு எழுதிய கடிதம்' என்கிற<br />
சிறுகதைத் தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். முப்பதுக்கு உள்ளடங்கிய சிறுகதைகளையும், நிறைய கட்டுரைகளையும், மொழியாக்கக் கவிதைகளையும் சுந்தர ராமசாமி தந்திருந்தாலும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதி பெரும் கவனம் பெற்றதைக் குறிப்பிட வேண்டும். 1959-ஆம் ஆண்டு வாக்கில் 'எழுத்து' பத்திரிகையில் பிரசுரமான 'உன் கை நகம்' கவிதையே இவர் எழுதிப் பார்த்த முதல் கவிதை. பல வருடங்களுக்கு முன் நாட்குறிப்பேடு அலவில் கெட்டி அட்டை போட்டு நல்ல தாளில் அச்சாகி சிற்றிதழ் வட்டாரத்தில் பிரபலமாகியிருந்த 'நடுநிசி நாய்கள்' கவிதைத் தொகுப்பு -- க்ரியா வெளியீடு என்று நினைக்கிறேன் -- நினைவில் நிற்கிறது. சு.ரா.வின் கவிதைகள் என்று தனிப் புத்தகமாகவும் வந்திருப்பதாகத் தெரிகிறது.<br />
<br />
சிறுகதைகளிலும், புதினங்களிலும் காணாத வேறொரு சுந்தர ராமசாமியை அவரது கவிதைகளில் நாம் பார்க்கலாம். இதில் வெளிப்படுவது தன் பார்வையில் பட்ட<br />
பல விஷயங்கள் குறித்து வெளிப்படும் தனி மனிதனின் தீட்சண்யமான குரல். தன் நிலையை தான் என்றோ நான் என்றோ சுட்டியே பதிவு செய்திருக்கிறார். பல கவிதைகள் தன்னுள் ஆழப் புதைந்து தட்டுப்படுவதைச் சொல்லும் லாவகம் பெற்றிருக்கின்றன. தனிக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து உலகக் கவிதைகளையும் அவர் தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார். பிற மொழிக்கவிதை வரிகளை அர்த்தம் குலைந்து போகாமால் மொழிமாற்றம் செய்வது மிகவும் சிரமம் மிகுந்த காரியம். எனினும், சு.ரா.-வின் மொழிபெயர்ப்பு அதற்கான மூலக்கவிதையை எவ்வளவு சிறப்பாக அவர் உள்வாங்கிக் கொண்டு மொழி மாற்றம் செய்திருக்கிறார் என்பதைப் புலப்படுத்தும்.<br />
<br />
'கதவைத் திற; காற்று வரட்டும்' என்று பிற்காலத்து பிரபலமடைந்த வார்த்தைத் தொடர், சுந்தர ராமசாமியின் ஒரு கவிதையின் ஆரம்ப வரி தான்.<br />
<br />
<br /></div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-42642377399709559082020-04-07T07:08:00.003-04:002020-04-07T12:50:23.654-04:00ராமசேஷன் ஆன ஆதவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எழுத்தாளர் ஆதவனின் இயற்பெயர் சுந்தரம்.<br />
<br />
கதைகள் எழுதுவதற்காக ஆதவன் ஆனவர், தான் எழுதிய ஒரு நாவலுக்காக ராமசேஷன் ஆகிறார்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu8OZ9rF1Gh-NjhakhYfFTcPfD2LJtvIPqiDMjQdGl-D79skW2-F_9ZF1O5CvRyFTiNwS_7TOtscobzX2WNwuOZbM_wqaBYQArEQgurgDhh4lk8BUFh2TuU1o6A9SgZsgb-o7wk8byweDK/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25A4%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="251" data-original-width="201" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu8OZ9rF1Gh-NjhakhYfFTcPfD2LJtvIPqiDMjQdGl-D79skW2-F_9ZF1O5CvRyFTiNwS_7TOtscobzX2WNwuOZbM_wqaBYQArEQgurgDhh4lk8BUFh2TuU1o6A9SgZsgb-o7wk8byweDK/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25A4%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a>ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்த ராமசேஷன் தனது பதின்ம வயது கல்லூரி படிப்பு காலத்தில் தான் பழக நேர்ந்தவர்களைப் பார்த்த பார்வை தான் 'என் பெயர் ராமசேஷன்' புதினத்திற்கான கரு ஆகிறது. ஆக, இதுவே ஆதவனுக்கு செளகரியமான ஒரு ஏற்பாடு ஆகிறது. ராமசேஷன் என்ற மூன்றாவது மனிதனின் பெயரைத் தரித்ததால், ராமசேஷனின் பார்வையாக மனித மன முரண்களைப் பார்த்த தன் பார்வையை கதை நெடுகிலும் மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் பதிக்கிறார்.<br />
<br />
எழுத்தாளர், சினிமா டைரக்டர், நண்பன் ராவ், அந்த நண்பனை அண்டி வாழும் மூர்த்தி, மாலா - பிரேமா என்று இரண்டு பெண்கள், அவர்களுடனான ராமசேஷனின் உறவு<br />
என்று நீளுகையில் உள்ளுக்கு உள்ளாகப் பம்மிப் பதுங்கியிருக்கும் இன்னொருவரின் உள்ளக் கிடக்கையை பிடுங்கி வெளியே எடுத்து வெளிச்சம் போட்டுக் காட்டும் வேலை நடக்கிறது. இவர்களோடு நிற்காமல் தந்தை, தாய், தங்கை, அத்தை, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா என்று நீளும் பொழுது ராமசேஷனை உற்றுப் பார்க்கும் உணர்வு படிப்பவனுக்கு ஏற்படுகிறது.<br />
<br />
ராமசேஷனுக்கு அப்பா, அம்மாவின் மேல் கொண்ட கவர்ச்சியே பிரதானமாகத் தெரிகிறது. அம்மா?.. அப்பா இல்லாமல் அம்மா இல்லை. அப்பாவுக்கு அவரது அந்த வயதில் இடம் கொடுக்கும் அம்மா. மற்றபடி அம்மா பார்த்த அவளின் சுற்று வட்டாரத்தின் பிள்ளைகள் பொறியியல் படிப்பு படிப்பதினால் அவளது பிள்ளையும் அப்படியான ஒரு படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அம்மா. இதற்கிடையே விதவை அத்தை, பாட்டி என்று <br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGKrMN7oKYDWtROI4N0WAjbIHEz79oigGrSbz0iixTygxF9NnNpife_PrbGmVU-Pgbd2qC3xqpdq7jK0bVptdk41JqRSVIv0CCo_jWcZqBB1FhppRdpj9xD2rJCTsuGNtinXtOiLjJBXhc/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="279" data-original-width="181" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGKrMN7oKYDWtROI4N0WAjbIHEz79oigGrSbz0iixTygxF9NnNpife_PrbGmVU-Pgbd2qC3xqpdq7jK0bVptdk41JqRSVIv0CCo_jWcZqBB1FhppRdpj9xD2rJCTsuGNtinXtOiLjJBXhc/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" /></a>ஒருவொருக்கொருவர் ஏதோ ஒன்றான ஒரு பிடிமானத்தைப் பிடித்துக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் சந்தர்ப்பம் கிடைத்த பொழுதெல்லாம் ஆளத்துடிக்கும் 'பொம்மனாட்டித்தனம்' அவர்களுக்குள்ளான முரணாக கதை நெடுகிலும் ஜீவனுள்ள வரிகளாகத் துடிக்கிறது. இதெல்லாம் இப்படி இருக்க இதே தன்மைத்தான இவர்களின் இன்னொரு தொடர்ச்சிக் கூறான ராமசேஷனுக்கும் நண்பன் 'ராவ்'வின் தங்கையான மாலாவுடனான 'எல்லைக்குட்பட்ட' இழைதல், கல்லூரித் தோழி பிரேமாவின் அருகாமை என்று அவன் காட்டிலும் மழை தான்!. எல்லாரையும் எப்படியோ பெளதீக உடல் சம்பந்தப்பட்ட கிளுகிளுப்பு கொள்ளச் செய்யும் மன முயக்கங்களோடு இணைத்துப் பார்க்க ராமசேஷனால் முடிகிறது.<br />
<br />
இன்னும் இன்னும் என்று நிறைய பேர்கள் வருகிறார்கள். மிஸஸ் ராவ், ராமசேஷனின் பெரியம்மா, பங்கஜம் மாமி என்று நிறைய பேர். நிறைய பெண்கள் வருவதினால் அவர்களின் அந்தரங்க மன சேஷ்டைகளை தன் பார்வையில் தோலுரித்துக் காண்பதான ராமசேஷனின் உள் உணர்வுகளின் வெளிப்பாடும் இந்த வெளிப்பாட்டு உணர்வில் படிக்கும் வாசகனைக் குப்புறத்தள்ளி குஷிப் படுத்த வேண்டும் என்ற சபலமும் ஒரு 'இண்டலெக்சுவல்' தளத்தில் நடக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.<br />
<br />
மேல்தட்டு குடும்பத்தின் பிரதிநிதியான மாலாவின் பழக்கம் அவனது கீழ்மட்டத்துச் சூழலை நாசூக்காக சீண்டுவதான உணர்வுக்கு ஆட்படுகிறான ராமசேஷன். என் எல்லைகள்<br />
ராகம், தாளம், பல்லவிக்குள்ளும் சட்னி சாம்பாருக்குள்ளும் அடங்கி விடுகிறவை; அவள் தொட்டிலில் கிடந்த பொழுதே சாச்சாவுக்கு காலை உதைத்தவள்; ப்ரூட் ஜெல்லியை நக்கினவள்' என்று தன்னுணர்வில் திகைக்கிறான். இந்தத் திகைப்பு கல்லூரித் தோழியான பிரேமாவிடம் கொண்டு போய் அவனைத் தள்ளுகிறது. அவளுடைய துடுக்கான சேஷ்டைகள் துடுக்குத்தனமான ஆரவரமாக அவனுக்குப் படுகிறது.<br />
<br />
".... அவளுடைய கருப்பு நிறமும், உயரக்குறைவும் அவளுக்கு ஒரு இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளது பாய்ச்சல்களுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டி தான் காரணம் என்பதைப் பின்னால் நான் புரிந்து கொண்டு அவள் மீது அனுதாபப்படக் கற்றுக் கொண்டேன்... பெளதீக ஆகிருதியையும், தோற்றத்தையுமே செலாவணியாகக் கொண்ட சராசரி பெண் வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம் இரண்டிடையேயும் தான் மிகக் குறைந்த மதிப்பெண்களே பெறுவோம் என்பதை உணர்ந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படும் முன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே அவள் தன் இண்டெலெச்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும் தூக்கலான மோஸ்தர்களிலும் நிறங்களிலும் அனாச்சாரமான உடைகளை அணியவும் செய்தாளென்பதை அப்பொழுது உணராத நான் -- அதாவது இவை அவளுடைய தன்னைப் பற்றிய பிம்பத்திற்கு எவ்வளவு நெருக்கமானவை என்பதை உணராத நான் இவற்றை அவளது துடுக்குத்தனமான சேஷ்டைகளாக நினைத்து இந்தத் துடுக்குத்தனத்தை ஆரவாரமாக ரசித்தேன். என்னுடைய நுட்பமான ரசனையின் நிரூபணமான என் ரசிப்பை தன்னுடைய 'முரண்படுகின்ற இண்ட்லெக்சுவல் கம் சமூக விமர்சன' பிம்பத்தின் அங்கீகாரமாகவே எடுத்துக் கொண்ட அவள் இந்த பிம்பத்தை மேன்மேலும் வலியுறுத்தியவாறு இருந்தாள். எனக்கு அது சலிக்கத் தொடங்கும் வரை-- என்று பிரேமாவைப் பற்றி ராமசேஷனின் உள்ளார்ந்து கிளர்ந்தெழும் எண்ணங்கள் வலைவலையாய் பின்னல்கள் இட்டுக் கொள்ளும்.<br />
<br />
அறிவுரீதியான அவரவர் எண்ணங்கள், சிறைப்படுத்தும் சிந்தனைகள் பாத்தி பாத்தியாகப் பிளவுண்டு அவர்தம் அபிலாஷைகளுடனும், அது குறித்த உணர்வுகளுடனும் கலந்து வினைபுரியும் பொழுது மனிதர்கள் தனித்தனி யூனிட்டுகளாக சிதறுண்டு போய் தங்கள் நலன்களைத் தற்காத்துக் கொள்ள புனைகின்ற வேடங்கள் உள்ளுக்குள் பதுங்கி மேற்பூச்சுடன் வெளிப்பார்வைக்கு தெரியாமல் கிடக்கின்றன. முள்ளம்பன்றி தன் முட்களைத் தேவைப்படும் பொழுது வெளிக்காட்டிப் பின் முடக்கிக் கொள்ளுமே அது போன்று எதிர்வினையாற்றும் பொழுது மட்டும் வெளிப்பட்டு வேலை முடிந்ததும் மீண்டும் உள்ளின் அடி ஆழத்திற்குப் போய் பதுங்கிக் கொள்கின்றன. இந்த வேலை இயல்பாய் நடக்கும் பொழுது அதுவே அவரவர் குணநலன்களாகத் தோற்றம் கொள்கின்ற பிரமிப்பு இந்த நாவல் நெடுக நீண்டு கிடக்கிறது.. இதுவே ஆதவனின் வெற்றியாகிப் போகிறது.<br />
<br />
ஆதவன் திருநெல்வேலி மாவட்ட கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். ஆரம்பத்தில் இந்திய ரயில்வேயில் பணியாற்றியவர், பின்னர் என்பீட்டியின் (NBT -- National Book Trust of India) தமிழ்ப்பிரிவில் தில்லியில் பணியாற்றத் தொடங்கினார். வணிகச் சந்தையின் வழுக்குப் பாதையில் சறுக்கி குப்பைகளைக் குவித்துக் குப்புற விழாமல், தீர்மானமாக மனம் கொண்ட எழுச்சிக்கு ஏற்ப எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்.<br />
<br />
சமூகத்துடனான நுட்பமான நேர்மையான சம்பாஷணை முயற்சிகளே எனது நாவல்கள் என்று எங்கோ ஆதவனும் தன் எழுத்துக்கள் பற்றி சொல்லியிருக்கிறார். தி. ஜானகிராமனின் வழித்தொடர்கிற மாதிரியோ என்று இவர் எழுத்துக்கள் தோற்ற மயக்கம் கொடுத்தாலும், தி.ஜா.வின் 'அழகுபூர்வமான' என்றில்லாமல் 'அறிவுபூர்வமான' என்கிற வேறுநிலை எடுத்தவர் ஆதவன். அது இவர் மிகவும் அபிமானம் கொண்டிருந்த இன்னொரு தில்லி எழுத்தாளர்<br />
இந்திரா பார்த்தசாரதியின் வழி.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge21xmQIJJGI84xxhHvQySblecFGsW5TsjOx99M4RAaOzW9-8gLl7-hxI-paB6-2nawTfVoMNNENxWhyphenhyphenzKrK-XaF6YwIa8k6G_IG8qAx-uohjdMZN__55m7jy1PuKDVAekYc0UAotBvavF/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25A4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="281" data-original-width="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge21xmQIJJGI84xxhHvQySblecFGsW5TsjOx99M4RAaOzW9-8gLl7-hxI-paB6-2nawTfVoMNNENxWhyphenhyphenzKrK-XaF6YwIa8k6G_IG8qAx-uohjdMZN__55m7jy1PuKDVAekYc0UAotBvavF/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25A4.jpg" /></a>ஆதவனின் இன்னொரு நாவல் 'காகித மலர்கள்'. புஷ்பங்களின் இயல்பு, அவற்றின் மணம். இயல்பான குண விசேஷங்களைத் தொலைத்து காகித மலர்களைப் போல மணமிழந்து திரியும் மனிதர்களைப் பற்றிய நாவலாதலால் 'காகித மலர்கள்' என்று பெயர்<br />
கொண்டது. நா. பார்த்தசாரதியின் 'தீபம்' இதழில் தொடராக வந்தது.<br />
<br />
கதை, தேசத்தின் தலைநகரான தில்லியை நிலைக்களனாகக் கொண்டது. புது மோஸ்தரில் நவீன போக்குகளையே நாகரிகமாகக் கொண்ட விதவிதமான மனிதர்கள் அறிமுகம் ஆகிறார்கள். நவீன வாழ்க்கையின் தள்ளு முள்ளுகளில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. அந்த ஆசைகளின் நிறைவேற்றத்திற்காக தங்கள் இயல்புச் சட்டைகளைக் களைந்து நிர்வாணமாகும் அவலம். அவர்களின் நடவடிக்கைகள் பல இவறிற்கெல்லாம் அந்நியப்பட்ட சாதாரண மனிதர்களுக்கு அதிர்ச்சியூட்டுபவை. இருந்தாலும் ஒவ்வொருவரும் அவர்களுக்கென்று ஸ்தாபித்துக் கொண்ட உலகம் தனித்தன்மை கொண்டவையாக அவரவர்க்குத் திகழ்கிறது. தங்களின் சந்தோஷத்திற்காக எதையும் இழக்க எவரும் தயாராக இருக்கிறார்கள். அப்படி அவர்கள் தயாராகுதலில் மனித குலத்தின் மகத்தான மதிப்பீடுகள் மதிப்பிழந்து செல்லாக்காசுகளாகின்றன. இழந்த மதிப்பீடுகளை மீட்டெடுக்க தனக்குத் தெரிந்த வழிகளை சொல்வதற்கு ஒரு நாவல் உருக்கொடுத்திருக்கிறார் ஆதவன்.<br />
<br />
தீர்க்கமாகப் பார்த்தால் 'என் பெயர் ராமசேஷ'னில் விட்டுப் போனவைகளைச் சொல்ல ஏற்படுத்திக் கொண்ட இன்னொரு முயற்சியாகவும் 'காகித மலர்கள்' தெரிகிறது. அதுவே சில<br />
திருத்தங்களுடனான அவரிடம் ஏற்பட்ட சில மாற்றங்களின் தொடர்ச்சியாகவும் தெரிகிறது. 'முதலில் வரும் இரவு' என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியிருக்கிறது.<br />
<br />
ஆரம்பத்தில் சிறுவர்களுக்காக எழுதத் துவங்கியவர் ஆதவன். 'ஆர்வி' அவர்கள் ஆசிரியராய் இருந்த கலைமகள் குழும 'கண்ணன்' பத்திரிகையில் நிறைய எழுதியிருக்கிரார். அப்பொழுது ஆதவன், லெமன், அம்பை, இனியவன், ஜே.எம். சாலி, புவனைக் கலைச்செழியன்<br />
என்கிற பெயர்கள் எல்லாம் சிறுவர்கள் உலகை மயக்கிக் கோலோச்சிய பெயர்கள்.<br />
<br />
குறைவாகவே எழுதி இருந்தாலும் புதினங்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், நாடகம் என்று எல்லா தளங்களிலும் தனது முயற்சிகளைப் பதிந்திருக்கிறார். பிற்காலத்தில் ஆதவனுக்கு பெங்களூர் வாழும் இடமாயிற்று. ஆதவன் எழுதிய நாவல்கள் இரண்டே. அந்த இரண்டுமே அவர் எவ்வளவு திறமைகளை உள்ளடக்கியவர் என்பதைச் சொல்லிக் கொண்டு தமிழ் எழுத்துலகில் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.<br />
<br />
<br /></div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-24839947595968880682020-04-03T12:02:00.000-04:002020-04-06T03:31:28.208-04:00நினைவு நதியில் வண்ணதாசன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: red; font-size: x-large;">நெ</span>ருங்கிய வட்டத்தில் கல்யாணியாகிறவர், கவிதைகள் எழுதும் போது கல்யாண்ஜி ஆவார் பெற்றோர் வைத்த பெயர், கல்யாண சுந்தரம் வேலை பார்த்த பாரத ஸ்டேட் வங்கியோடு சரி போலிருக்கு. சகோதரர் வல்லிதாசனிடமிருந்து எடுத்துக் கொண்ட வண்ணதாசன் கதைகளுக்காகவும், கல்லூரி நண்பர் அழைத்த கல்யாண்ஜி கவிதைகளுக்காகவும் ஆயிற்று. ஆனால் வண்ணதாசனை தெரிந்த அளவுக்கு ரொம்பப் பேருக்கு கல்யாண்ஜியைத் தெரியாது. அதாவது இவர் தான் அவர் என்று தெரியாது. வண்ணதாசனும் எந்த காலத்தும் இலக்கிய உலகில் தன்னைப் படாடோபமாகக் காட்டிக் கொண்டதில்லை. எழுத்திலும் அப்படித்தான். எல்லோமே அவரைப் பொருத்த மட்டில் இயல்பாகிப் போன விஷயங்கள்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9IG4WRhh6_6ZC8WUkyQzZCodOM56QHvhU1QNEUUmp_CLsGHJPJU2S9O7TQR0RMul2fz4sARHpbUgxT7C7fv_ynkHh5BqEnru3Rxg-x0H1FRNrFSmpOHH6aE40CtgtXoFGgzDqpuFsulBl/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="169" data-original-width="298" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9IG4WRhh6_6ZC8WUkyQzZCodOM56QHvhU1QNEUUmp_CLsGHJPJU2S9O7TQR0RMul2fz4sARHpbUgxT7C7fv_ynkHh5BqEnru3Rxg-x0H1FRNrFSmpOHH6aE40CtgtXoFGgzDqpuFsulBl/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a>வண்ணதாசனின் கதைகளைப் படிப்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம். கதையை எங்கு ஆரம்பிப்பது என்பது தான் அவருக்கு யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கும் என்பதைச் சுலபத்தில் தெரிந்து கொண்டு விடலாம். சொல்ல வேண்டிய கதையின் அடி நாதத்தை கறாராகத் தீர்மானித்து விடுவார் போல. மற்ற விஷயங்கள் எல்லாம் அது அது அதுபாட்டுக்க வந்து போகும்.<br />
<br />
ஒரு மையப்புள்ளியில் காம்பஸின் ஒரு ஊசி முனைய ஊன்றிக் கொண்டு பென்ஸில் செருகிய இன்னொரு முனையை அகட்டி வட்டமடிப்பது போல, எழுதுகையில் அது பாட்டுக்கு வந்து விழும் ஒவ்வொரு விவரணையும் அது தொடர்பான நிறைய ஜோடனைகளைச் சுற்றிக் கொண்டு பம்மென்று திரட்சியாக இருக்கும். இது வேண்டாம், அல்லது இது இதற்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்று ஒன்றைக் கூடச் சொல்லி விட முடியாது. சொல்ல எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் பாந்தமாகப் பொருந்தி வரும். ஒவ்வொன்றும் நுணுகி நுணுகிப் பார்த்து தேர்ந்த பொற்கொல்லர் மாதிரி அவரே சேகரித்து சேர்த்த அழகு சமாச்சாரங்கள். அத்தனையிலும் அத்தனை நகாசு படிந்திருக்கும்.<br />
<br />
வண்ணதாசனின் நினைவுகளில் படிந்துள்ள ஞாபகப் படிமங்கள் தாம் அவரது கதைகள். வண்ணதாசனின் தளமும் சிறுகதைகள் தாம். சின்னச் சின்ன கதைகளின் எல்லை தாண்டிப் போவது அவருக்குப் பிடிப்பதில்லை. இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை என்று மனத்தில் கோடு போட்டு வைத்திருப்பது போல முடிக்க வேண்டிய அந்த இடம் வந்ததும் அப்ரப்ட்டாக முடித்து விடுவார். அப்படி அவர் முடித்ததும் கனக்கச்சிதமாக இருக்கும். சில நேரங்களில் அந்தக் கடைசி வரி கூட மேற்கொண்டான கதையை வாசகர்களே தங்கள் யோசனையில் நீட்டித்து முடித்துக் கொள்கிற மாதிரி வசதி வேறு பண்ணிக் கொடுத்திருப்பார்.<br />
<br />
அன்பு தான் ஆரம்பம். இருந்தாலும் எல்லோராலுமே அந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியாது என்பது தான் சூட்சுமம். அன்பு செலுத்துதல் கூட சிலருக்கு மட்டுமே சாத்தியப்பட்டச் செயலாக இருப்பது தான் விநோதம். சில பேருக்கு சிலரிடம் அது ஆழ்ந்து விகசிக்கும் பொழுது காதலாக மலர்கிறது. ஞானப்பனுக்கு சற்றே காலை சாய்த்து சாய்த்து நடக்கும் தனுவிடம் ஏற்பட்டதும் அது தான். சொல்லப் போனால் டெஸ்சி டீச்சருக்கும் அதே மாதிரியான ஒன்று தான் ஞானப்பன் மீதும். ஆனால் தனலெட்சுமியின் பால் ஞானப்பன் கொள்வதற்கும், ஞானப்பன் மீது டெஸ்சி கொள்வதற்கும் மென்மையான வித்தியாசத்தை புலப்படுத்துவார் வண்ணதாசன். இந்த நுண்மையானப் புரிந்து கொண்டோருக்கு அவரின் 'தனுமை' அற்புதமான சிறுகதை.<br />
<br />
மருத்துவமனையும் ஒரு உலகம் இல்லாவிட்டாலும் ஒரு சிற்றூர் தான். வகைவகையான நோய்களுக்கு ஏற்றவாறு வகைவகையான மனிதர்கள். மனிதர்க்கு மனிதர் கொள்ளும் உறவுகளும் சில நாட்களுக்காயினும் அவர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் கொள்ளும் அக்கறையும்<br />
இயல்பாகப் படியும் அன்பு விசாரிப்புகளும், உதவிகளும் 'கடைசியாய்த் தெரிந்தவர்' கதையில் அழகாகப் பதியப்பட்டிருக்கும். <br />
<br />
காதலித்தவளை கரம் பிடிக்க முடியாமல் போகிறது அண்ணனுக்கு. வேறோர் இடத்தில் அவளுக்குத் திருமணமாகி, கைக்குழந்தையுடனான அவளை தம்பி தன் நண்பனுடன் எதேச்சையாக வழியில் சந்திக்கும் கதை 'ரதவீதி'. அந்தக் குட்டியூண்டு கதைக்குள் கோடானுகோடி உணர்வுகளைப் பதித்துத் தருவார் வண்ணதாசன்.<br />
<br />
'கிருஷ்ணன் வைத்த வீடு' மனசைக் குடையும். அந்த மாதிரி கிருஷ்ண பொம்மை பதிக்கப்பட்ட ஒரு வீட்டைப் பார்த்த அனுபவம், வேறோரு நிகழ்ச்சியின் அதிர்ச்சியை இங்கு கொண்டு வந்து சேர்த்து கதையாகியிருப்பதாகத் தோன்றுகிறது.<br />
<br />
அவர் பிறந்து வளர்ந்த திருநெல்வேலிப் பகுதியை அவரால் மறக்கவே முடியாததினால் தான் அந்த சுலோச்சனா முதலியார் பாலமும் குறுக்குத் துறையும், கல் மண்டபமும். நெல்லையப்பர் கோயிலும், கொக்கிரகுளமும், வாகையடி அம்மன் கோயிலும், சந்திப்பிள்ளையார் முக்கும், பாளையங்கோட்டை வாய்க்கால் பாலமும், அவர் எழுத்தில் அங்கங்கே தலைகாட்டிக் கொண்டே இருக்கும். அதே போல விறகுக் கடையில் விறகைப் பிளக்கும் சம்மட்டி அடி, ஈர விறகின் ஒரு புளிப்பான பச்சை வாசனை, திரும்ப சங்கடப் பட்டிருக்கும் என்று உணர்த்திய கடையிலிருந்து ரோடு வரை மடங்கி மடங்கி கிடந்த லாரித் தடம், வேப்ப மரத்தின் அடர்த்திக்குள் ஒளியும் பளீர் வெயில், பாக்கு மரத்திலிருந்து பொத்தென்று விழும் அணில், தாம்புக் கயிறு மாதிரி ஜடை பின்னிக் கொண்டிருக்கும் போகன் வில்லா -- என்று என்னன்னவோவான அனுபவித்த ரசனை ஜாலங்கள் அங்கங்கே பளிச்சிட்டு சித்திரமாய் நெஞ்சில் பசக்கென்று ஒட்டிக் கொள்ளும்.<br />
<br />
எழுதிக் கொண்டு வரும் பொழுதே ஒன்று தெரிகிறது. வண்ணதாசனின் சிறுகதைகளூக்கு இது இப்படியான கதை என்று குறிப்பு கொடுப்பது ஒருவிதத்தில் அவர் எழுதின அழகைக் குறைத்து மதிப்பிட வழிகோலும் என்று தோன்றுகிறது. அவர் கதைகளை நேரிடையாக வாசித்து<br />
அவருடன் பரிச்சயம் கொள்வதே சரி. <br />
<br />
அவருடைய 'சின்னு முதல் சின்னு வரை' குறுநாவலை நினைத்தால் நினைத்தால் எடுத்துக் கொண்டால் அப்படித் தான் முடிவுக்கு வரத் தோன்றுகிறது. அப்பொழுது தான் எடுத்துக் கொண்ட கதையின் போக்கினூடேயே நுணுகி நுணுகி ஒவ்வொன்றையும் நெருக்கத்தில் அணுகி படிப்போருக்கு அவற்றை எப்படிப் பழக்கப்படுத்துகிறார் என்று புரிபடும். <br />
<br />
'பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள், அந்த கரிசனம் காரணமாகவே அடைகின்ற துன்பங்கள் ரொம்ப நுட்பமானவை' என்பன போன்ற மென்மையான உணர்வுகள், ஒரு கதையைப் படித்தால் கதையின் அவுட்லைனை மட்டும் மேம்போக்காகப் பார்த்து விட்டு நகரும் மனங்களால் உணர முடியாதவை.<br />
<br />
கல்யாண்ஜியின் முதல் கவிதைத் தொகுப்பு, அன்னம் வெளியிட்ட 'புலரி', மறக்கவே முடியாத 'அந்த தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்' பற்றியெல்லாம் வேறொரு இடத்தில் நிறைய சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. அதே மாதிரி தான் ஆனந்த விகடனில் இவர் எழுதிய 'அகம் புறம்' கட்டுரைத் தொடரும். ஒரு காலத்தில் 'கண்ணதாசன்' தீபம், நடை, மீட்சி, கணையாழி, உயிரெழுத்து என்று நிறைய இதழ்களில் காணக் கிடைத்தார். 'கண்ணதாசனில்' வண்ணதாசனைப் பார்த்தது, அந்த அச்சு நேர்த்தியிலும் அமுதோன் வரைதலிலும் அந்தக் கால அதி அனுபவம்.<br />
<br />
<br />
இவ்வளவு சொல்லி விட்டு கல்யாண்ஜியின் கவிதைகள் பற்றி ஒரு கோடி கூட காட்டவில்லை என்றால் அது பெருத்த குறையாகிப் போகும். பொத்தி வைத்த மன உணர்வுகளை<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX_WoHErPHQ7YG6SNHOeGJFGpFt9hbAssmE1E9kcAKEwR0b_NNQ7EmtZ7IOKkk4emzz6Ao1FKp_5etZR0cGKl9K9YSXgr9PONNixOdNgQXYxe56PK0JxwGlLapXFTUroWW5hHdlw7V22fG/s1600/%25E0%25AE%25B5.+%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="169" data-original-width="297" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX_WoHErPHQ7YG6SNHOeGJFGpFt9hbAssmE1E9kcAKEwR0b_NNQ7EmtZ7IOKkk4emzz6Ao1FKp_5etZR0cGKl9K9YSXgr9PONNixOdNgQXYxe56PK0JxwGlLapXFTUroWW5hHdlw7V22fG/s1600/%25E0%25AE%25B5.+%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a>பையப் பைய வெளிகாட்டி நம் நெஞ்சில் நெகிழ்ச்சியுடன் உலா விடுவார். பகிர்தலுக்காக எனக்குப் பிடித்த அவர் கவிதை ஒன்று:<br />
<br />
<span style="color: red;">நீ வருவதற்காக</span><br />
<span style="color: red;">காத்திருந்த நேரத்தில்</span><br />
<span style="color: red;">பளிங்கு போல்</span><br />
<span style="color: red;">அசையாதிருந்த தெப்பக்குளம்</span><br />
<span style="color: red;">பார்க்க ஆரம்பித்தேன்.</span><br />
<span style="color: red;">தலை கீழாய் வரைந்து கொண்ட </span><br />
<span style="color: red;">பிம்பங்களுடன்</span><br />
<span style="color: red;">தண்ணீர் என் பார்வையை </span><br />
<span style="color: red;">வாங்கிக் கொண்டது முற்றிலும்</span><br />
<span style="color: red;">உன்னை எதிர்பார்ப்பதையே</span><br />
<span style="color: red;">மறந்து விட்ட ஒரு கணத்தில்</span><br />
<span style="color: red;">உன்னுடைய கைக்கல் பட்டு</span><br />
<span style="color: red;">உடைந்தது</span><br />
<span style="color: red;">கண்ணாடிக் குளம்</span><br />
<span style="color: red;">நீ வந்திருக்க வேண்டாம்</span><br />
<span style="color: red;">இப்போது.</span><br />
<br />
எனக்கு வண்ணதாசனின் அப்பா தி.க. சிவசங்கரன் தான் பழக்கம். கலை இலக்கிய பெருமன்றம், இலக்கிய ஏடு 'தாமரை' என்று தொடர்ந்து வந்த பழக்கம். <br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlQ7brL_GfJc6wWEvuV1zqK3gdAz6ojJGQH8ghriHLtTpK8Ygz0hyG2yVieae24mJnKCaXweXumHBG03x0OxyXynHwOvI7WaDlOLcXqtkTfXZyDdsznzmiV6Mh8B5AjPQQ9kcK9AWH8ge8/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%252C%25E0%25AE%2595%252C%25E0%25AE%259A%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlQ7brL_GfJc6wWEvuV1zqK3gdAz6ojJGQH8ghriHLtTpK8Ygz0hyG2yVieae24mJnKCaXweXumHBG03x0OxyXynHwOvI7WaDlOLcXqtkTfXZyDdsznzmiV6Mh8B5AjPQQ9kcK9AWH8ge8/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%252C%25E0%25AE%2595%252C%25E0%25AE%259A%25E0%25AE%25BF.jpg" /></a> சிற்றிதழ்காரர்களுக்கு சொந்தக்காரர் அவர். வீட்டு கல்யாணங்களுக்கு சொந்த பந்தங்களுக்கு பத்திரிகை அனுப்புகிற மாதிரி, தமிழகத்தில் எவரேனும் சிற்றிதழ் ஆரம்பித்தால் தவறாமல் தி.க.சி.-க்கு ஒரு பிரதி அனுப்பவது பழக்கமாகிப் போன வழக்கம்... அனுப்பி வைத்த ஒரு வார காலத்திற்குள் ஒரு தபால் கார்டில் நுணுக்கி நுணுக்கி எழுதிய கையெழுத்தில் அந்த இதழ் பற்றி தாம் உணர்வதை அவரும் எழுதி அனுப்பி வைத்து விடுவார். ஆரம்பித்த சிற்றிதழுக்கு ஆசி கிடைத்த சந்தோஷத்தில், அடுத்த இதழில் ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதியில் அவரது அந்தக் கடிதத்தைப் பிரசுரித்து விடுவார்கள். தி.க.சி.யின் பதில் கடிதத்தைப் படித்துப் பார்ப்பதில் அத்தனை சந்தோஷமும் பெருமையும் அந்த்க் கால சிற்றிதழ் வட்டாரத்தில்!.. நானும் நான் நடத்திய இரு இதழ்களுக்கு பெரியவரிடமிருந்து கடிதம் வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன்.<br />
<br />
அதே மாதிரி தான் '77 வாக்கில் வெளிவந்த 'கமலி காத்திருக்கிறாள்' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பை வண்ணதாசனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். தந்தையைப் போலவே தனயனும் உடனே பதில் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் இவர் தபால் கார்டில் அல்ல; ஒரு இன்லாண்ட் லெட்டரில். அந்த வெளிர் நீலக் கடிதத்தை அசகாய சாமர்த்தியத்தோடு உள்ளடக்கம் கிழிந்து விடாமல் பிரித்துப் பார்த்தால், பேனாவால் ஒரு ஓட்டு வீடு' வாதாமரம் மாதிரியான ஒரு மரம் என்று படமெல்லாம் வரைந்து நடுவில் ஓட்டு சார்புகளில் ஓடி விளையாடும் அணில்கள் பற்றியும், மரத்தின் இடுக்குகளில் பளபளக்கும் சூரியனின் அதியற்புத ஒளிக்கீற்றைப் பற்றியும், திண்ணையைத் தொட்டு விடத் துடிக்கும் நிழலின் நீட்சி பற்றியும் கவிதை மாதிரியான வரிகளில் எழுதி, வந்து சேர்ந்த கதைத் தொகுப்பு பற்றி பொதுவாகக் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார். உண்மையில் சாகித்ய அகாதமி விருது கிடைத்ததே போன்ற சந்தோஷம் தான் அப்போது.<br />
<br />
அவரது 'உப்பு கரிக்கிற சிறகுகள்' கதையின் நடுவே 'ஊஞ்சல் அசையும் போதா, அசையாத போதா -- எப்போ ரொம்ப அழகு?' என்ற கேள்வியுடன் ஒரு வரி வரும். அதைப் படித்த பொழுது 'ஊஞ்சல் உறவுகள்' என்று தலைப்பிட்ட எனது பிற்கால சிறுகதைத் தொகுப்பொன்றின் முன்னுரையில் நானெழுதியிருந்த 'உண்மை தான். நிலையாக ஒரே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தால் அதற்குப் பெயர் ஊஞ்சுல் இல்லை; மேலே உந்தித் தள்ளிய பலகை கீழே வர வேண்டும்; கீழே வந்தது மேலே போக வேண்டும். அப்பொழுது தான் அது ஊஞ்சல். இல்லையென்றால் வெறும் தொங்கு பலகை தான்' என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.<br />
<br />
வண்ணதாசன் சார்! இப்பொழுது சொல்லுங்கள். 'ஊஞ்சல் அசையும் போதா, அசையாத போதா, எப்போ ரொம்ப அழகு?'<br />
<br />
<br />
<br /></div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-10043553773551289082020-04-02T03:30:00.001-04:002020-04-02T12:36:22.415-04:00 'ஜீவகீதம்' ஜெகசிற்பியன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: red; font-size: x-large;"> அ</span>து 1957-ம் ஆண்டு.<br />
<br />
'ஆனந்த விகடன்' நடத்திய அதன் வெள்ளிவிழா போட்டியில் இரு முதற்பரிசுகளை தன் சிறுகதைக்காகவும் சரித்திர நாவலுக்காகவும் பெற்றவரை தமிழ் எழுத்துலகும் பத்திரிகை படிக்கும் வாசகர் வட்டமும் வியப்புடன் நிமிர்ந்து பார்த்தது. ஜெகசிற்பியன் தமிழ் பத்திரிகைகளின் வெகுஜன வாசகர்களுக்கு அறிமுகமான ஆரம்பக்கதை இது தான்.<br />
<br />
பரிசு பெற்ற சிறுகதையின் பெயர் 'நரிக்குறத்தி'. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI_97tx_92jvaLAuxNZ7A2o-S2x1YBozfDdWkcv_rHKdl0_jLtYXCWeNTfLViQmeDebTTMNug_DqKgSo4qKmnyArO5WchoKcZeZWl5AD4QwAplj0Lx5Td0maEhbjL_Iq5dVaudd6RdLICF/s1600/%25E0%25AE%259C%25E0%25AF%2586%25E0%25AE%2595%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="202" data-original-width="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI_97tx_92jvaLAuxNZ7A2o-S2x1YBozfDdWkcv_rHKdl0_jLtYXCWeNTfLViQmeDebTTMNug_DqKgSo4qKmnyArO5WchoKcZeZWl5AD4QwAplj0Lx5Td0maEhbjL_Iq5dVaudd6RdLICF/s1600/%25E0%25AE%259C%25E0%25AF%2586%25E0%25AE%2595%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a></div>
வெளியூர்களில் நாடோடிகளாகச் சுற்றித் திரியும் அந்த சமூக ஆண்களும் பெண்களும் பாசிமணி, ஊசி, மணிமாலை விற்க தனித்தனியாகச் சென்றாலும் சூரியன் மலைவாயில் விழும் மாலை நேரத்திற்குள் பெண்கள் அவர்கள் கூட்டமாக வசிக்கும் இருப்பிடம் வந்து சேர்ந்து விட வேண்டும். இது அந்த சமூக கட்டுப்பாடு.<br />
<br />
பாடிகோடியும் ஆடிகோடாவும் இளம் தம்பதிகள். பாசி, மணிமாலை ஏந்தி விற்கச் சென்ற புது மணப்பெண் பாடிகோடி, ஊர் எல்லை ஆற்றில் திடீர் வெள்ளம் பிரவாகமாய்ப் பொங்கி எழ அக்கரையில் மாட்டிக் கொண்டு இக்கரை வர முடியாமல் தவிக்க, நொப்பும் நுரையுமாக சுழித்து ஓடுகிறஆற்றின் இக்கரையில் ஆடிகோடி.. ஆற்றின் கரையின் இருமருங்க்கிலும் இருவரும் அலமந்து ஒருவரை ஒருவர் ஓடித்தேடி, இரவு முச்சூடும் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கிற விதமாய் "ஆடிகோடா.. பாடிகோடி.." என்று தங்கள் பெயரைக் கூப்பிட்டு கூப்பிட்டு ஓலமிட்டது ஆண்டுகள் பல ஓடிப் போயினும் இப்பொழுதும் சிந்தையில் ஒலிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இரவு அந்தப் பகுதியைத் தன் இருட்டில் விழுங்கத் தொடங்க பின்னிரவும் நெருங்க... நெருங்க.. நரிக்குறத்தி' சோக முடிவைக் கொண்ட ஜெகசிற்பியனின் பேசப்பட்ட கதை.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX1_KtBIzR0rohje658FyvNdxqB-96PoLxcKnYgP8fj0zsIHHvYZsCJuHnFXcloj34b1vpOV6cLDN-Ec_GoAt-5lz2xxr5NNZfkPzi8H8KjLRqgOhePG3uDtOalPQ36e41so_I0RreDJlD/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX1_KtBIzR0rohje658FyvNdxqB-96PoLxcKnYgP8fj0zsIHHvYZsCJuHnFXcloj34b1vpOV6cLDN-Ec_GoAt-5lz2xxr5NNZfkPzi8H8KjLRqgOhePG3uDtOalPQ36e41so_I0RreDJlD/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" /></a>சரித்திர நாவலுக்கான முதற்பரிசைத் தட்டிச் சென்ற 'திருச்சிற்றம்பலம்' நாவல், ஓவியர் கோபுலுவின் படங்களுடன் அற்புதமாக விகடனில் வெளிவந்து <br />
படிப்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தில்லை நடராஜர் ஆலயத்தை விரிவு படுத்திப் பெரிதாகக் கட்ட விரும்பிய அநபாய குலோத்துங்கச் சோழன், கோயிலில் இருந்த கோவிந்தராஜப் பெருமாளை அகற்றிக் கடலில் அமிழ்த்த முயல , அரச குல போட்டிப் பங்காளிகள் அந்த நிகழ்ச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சி பீடத்தைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சியோயாய் சைவ வைணவ பூசல்கள் கிளப்பப்படுகிற பின்னணியில் பக்தியும், காதலும் பின்னிப் பிணைந்த நாவல். ஏழிசை வல்லபி, காடவராயர், பரிவாதினி, காளத்தி தேவன் போன்ற மறக்க முடியாத பாத்திரப் படைப்புகள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZyv-Pj7AHAnlxtUI_-Dvt2Rzpzz8Z7k6IqnDfBChxCmHBSbwSKRb6ybmAt9dTsoXZs4czOL0iLq9oYyTg1J6FGAg-28WndYYJEcGaH0nbi-4X7U1QjUOqws21NUiq6CMt1pvlTJS2bGw8/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="279" data-original-width="181" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZyv-Pj7AHAnlxtUI_-Dvt2Rzpzz8Z7k6IqnDfBChxCmHBSbwSKRb6ybmAt9dTsoXZs4czOL0iLq9oYyTg1J6FGAg-28WndYYJEcGaH0nbi-4X7U1QjUOqws21NUiq6CMt1pvlTJS2bGw8/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a></div>
ஜெகசிற்பியனின் முத்திரை பதித்த இன்னொரு சரித்திர நாவல் 'நந்திவர்மன் காதலி'. நந்திக்கலம்பகத்தின் பாட்டுரைத் தலைவன் மூன்றாம் நந்திவர்மன் தான் இந்த வரலாற்று நாவலின் நாயகன். அரியணையைக் கைப்பற்ற நடக்கும் பங்காளிகள் சண்டையில் தமிழ் மொழி மீது கொண்டிருந்த காதலால் தன் பேரில் கலம்பகம் பாடினால் இறந்து படுவோம் என்று தெரிந்திருந்தும் தமிழ்க் காப்பியத்தை அரங்கேற்றி பார்க்க தன் உயிரையும் பணயமாகத் தர சித்தமாகிறான்.<br />
<br />
அரசர்களுக்கு வரையறையான தொண்ணூறு பாடல்கள் கொண்ட கலம்பகத்தின் ஒவ்வொரு பாடல் அரங்கேறும் பொழுதும் நந்திவர்மன் ஒரு பந்தலில் அமர்ந்து அதைக் கேட்க வேண்டும் என்பது ஏற்பாடு. ஒவ்வொரு பாடலும் பாடி முடியும் பொழுது மன்னன் அமர்ந்திருக்கும் பந்தல் பற்றி எரி;யும். உடனே மன்னன் அடுத்த பந்தலில் அமர அது பற்றி எரிய அதற்கடுத்த பந்தல் என்று செல்லும் தொடர் வரிசையில் எண்பத்தொன்பதாவது பந்தலுக்கு அடுத்த தொண்ணூறாவது பந்தல் எரியும் பொழுது மன்னனை மாய்த்து விடலாம் என்பது ஏற்பாடு.<br />
<br />
நந்திவர்மனைக் கொல்லும் முயற்சியில் தோல்வியுற்ற அவனது முதல் மூன்று சகோதரர்களும் பந்தல் கட்டுகிறவர்கள் போன்று மாறுவேடம் அணிந்து பந்தல்களைக் கொளுத்தி நந்திவர்மனை மாய்க்கத் திட்டமிடுகின்றனர். நாலாவது சகோதரன் காடவன் கவிஞன். அவன் தான் கலம்பகம் இயற்றுகிறான். ஆயினும் கடைசி கட்டத்தில் அவன் மனம் நெகிழ்ந்து இந்த சூதை நந்தியிடமே சொல்லி அறம் பாட மாட்டேன் என்று மறுக்கிறான்.<br />
<br />
ஆனால் நந்திவர்மனுக்கோ தன் பெயரில் உருவான <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA7D7NJaUFpWABG1o2NlnVhpSbju1SzjFgjBHKqrJep9B0FyKgADBJNki9PpsOOhe8wSqQidwfVx9QQ6bqrgfAgxlBY6vyL4jzaCT-Sy7RWsA_IfcGSLDJ7uc98rENazjpLq8EdiMFW05Y/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25B2%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D+%25E0%25AE%2585%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="217" data-original-width="234" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA7D7NJaUFpWABG1o2NlnVhpSbju1SzjFgjBHKqrJep9B0FyKgADBJNki9PpsOOhe8wSqQidwfVx9QQ6bqrgfAgxlBY6vyL4jzaCT-Sy7RWsA_IfcGSLDJ7uc98rENazjpLq8EdiMFW05Y/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25B2%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D+%25E0%25AE%2585%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a></div>
கலம்பகக் காப்பியத்தை அரங்கேற்றிப் பார்க்க ஆசை . அந்த அளவுக்கு தன் உயிரையும் அர்ப்பணிக்க சித்தமாகிறான். இதற்கிடையில் பாண்டிய மன்னன் சீமாற சீவல்லபப் பாண்டியன் தன் பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள இந்த சூழ்நிலையில் தயாராகிறான். அவன் தங்கை வாருணி தேவியும் இதற்கு கூட்டாக செயல்படுகிறாள். இருப்பினும் வாருணி தேவி நந்திவர்மன் மீது கொண்ட காதல் தீயில் கருகி கடைசி தொண்ணூறாவது பாடல் பாடப்பட பந்தல் பற்றி எரியும் பொழுது தீயில் பாய்கிறாள்.<br />
<br />
<span style="color: red;">'வானுறு மதியம் அடைந்தது உன் வதனம்</span><br />
<span style="color: red;"> மறிகடல் புகுந்தது உன் கீர்த்தி</span><br />
<span style="color: red;">கான்உறு புலியை அடைதது உன் வீரம்</span><br />
<span style="color: red;"> கற்பகம் அடைந்தது உன் கால்கள்</span><br />
<span style="color: red;">தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள்</span><br />
<span style="color: red;"> செந்தழல் அடைந்தது உன் தேகம்</span><br />
<span style="color: red;">நானும் என் கவியும் எவ்விடம் புகுவேம்?</span><br />
<span style="color: red;"> நந்தியே நந்தயா பரனே!</span><br />
<br />
<br />
-- என்னும் நந்திக்கலம்பகப் பாடல் நந்திவர்மன் கீர்த்தி பற்றியும் அவன் தேகம் செந்தழல் அடைந்தது பற்றியும் சொல்கிறது. யார் பாடியது என்று யாத்தவர் பெயர் தெரியாத நந்திக்கலம்பகம் தகுந்த யூகத்தையும் கற்பனையையும் கிளறி இந்த நாவலை நடத்திச் செல்வதற்கு ஜெகசிற்பியனுக்கு வழி காட்டியிருக்கலாம்.<br />
<br />
வரலாற்று நாவல்களில் தீர்மானமான தடம் பதித்தவர் <br />
ஜெகசிற்பியன். நந்திவர்மன் காதலிக்குத் தொடர்ச்சியாக 'மாறம் பாவை', இமயவரம்பன் நெடுஞ்சேரலானை தலைனாகக் கொண்ட 'நாயகி நற்சோணை', விக்டனில் தொடராக வந்த 'ஆலவாய் அழகன், 'மகர யாழ் மங்கை', பத் தினிக்கோட்டம் என்று இந்த நேரத்தில் ஜெ.சி.யின் சரித்திரப் படைப்புகள் நினைவுக்கு வருகின்றன.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyeERkZwumA_RoioSsOr0NyIkPxleaxdB1gHMLGYbR3ckW_ybOP5D1Mgri3ZXlWdtAi2j1gLWSiNKqEY34bXQMbFz-m5anBONG2x5GOUIAWcCQrDUlEhTDXc2d11IwQWVGauYRju-eC4C1/s1600/%25E0%25AE%259C%25E0%25AF%2580%25E0%25AE%25B5%25E0%25AE%2595%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyeERkZwumA_RoioSsOr0NyIkPxleaxdB1gHMLGYbR3ckW_ybOP5D1Mgri3ZXlWdtAi2j1gLWSiNKqEY34bXQMbFz-m5anBONG2x5GOUIAWcCQrDUlEhTDXc2d11IwQWVGauYRju-eC4C1/s1600/%25E0%25AE%259C%25E0%25AF%2580%25E0%25AE%25B5%25E0%25AE%2595%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" /></a>நிறைய சமூக நாவல்கள். கூலி விவசாயிகளின் அல்லாடல்களைச் சொல்லும் 'மண்ணின் குரல்', கல்கியில் தொடராக வந்த 'சொர்க்கத்தின் நிழல்', பதிமூன்று இந்திய மொழிகளில் நேஷனல் புக் டிரஸ்ட்டால் மொழியாக்கம் செய்யப்பட்ட 'ஜீவகீதம்', புதுமைப்ப்பித்தனைக் கவர்ந்த 'கொம்புத்தேன்' கல்கித் தொடர் 'கிளிஞ்சல் கோபுரம்', அன்றாடங்காய்ச்சிகளின் அவல வாழ்வை படம் பிடித்துக் காட்டிய 'காணக்கிடைக்காத தங்கம்' என்று நிறைய சொல்லலாம்.<br />
<br />
நாடக உலகிற்கு அவரது பங்களிப்பாக படைத்திட்ட 'சதுரங்க சாணக்கியன்' பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். <br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQxMzXBNCoVEWN4RoTpiH74OVsb9tFv4m40QvJ_BhvkLBX8ld4twfU9l1D44JEDz8_Gdd1bakwXiWY49rXZAvD90S-c6OvlEe4rV85_69fnPq7sFjYCa7R0wVrBwRRWwbGHQUVadkbp13d/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%253B%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="185" data-original-width="273" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQxMzXBNCoVEWN4RoTpiH74OVsb9tFv4m40QvJ_BhvkLBX8ld4twfU9l1D44JEDz8_Gdd1bakwXiWY49rXZAvD90S-c6OvlEe4rV85_69fnPq7sFjYCa7R0wVrBwRRWwbGHQUVadkbp13d/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%253B%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a>மஹாகவி பாஸனின் மாணவியான கெளதமி என்னும் நாட்டிய நங்கை, சாணக்கியனைக் காதலிப்பதும், அது பற்றி அறியாத சந்திர குப்தன் கெளதமியின் மீது பிரேமை கொள்வதும் இந்த நாடகத்தின் முடிச்சு.<br />
<br />
அரசியல் சதுரங்க ஆட்டத்தில் மட்டுமே குறியாக இருந்த இது பற்றி ஏதும் அறியாத சாணக்கியன், சந்திர குப்தனின் மறுப்பையும் மறுத்து செலுகஸ் நிகேடாரின் அருமைப் புதல்வி டயோ பாண்டிஸை அரசியல் காரணங்களுக்காக சந்திரகுப்தனுக்கு திரும ணம் செய்விக்கிறான். எல்லா சிக்கல்களும் கொண்ட சாதுர்யமாக எழுதப்பட்ட இந்த நாடகம் ஜெகசிற்பியனின் எழுத்தாற்றலை பறைசாற்றும்.</div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixPwGG8lqwEWQSfFDAlKDeyQ7kpghwJ2oUJoKLQ4Ep9BbPXKTlKqCUcFCFPxiuzj94kBqn3Taz8f1mH6fw9rPNJ6b30dPsV5TLVvVDry7Fcou1Qi8rodSdjNoePHScoDdccH74DiD1_O3w/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="277" data-original-width="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixPwGG8lqwEWQSfFDAlKDeyQ7kpghwJ2oUJoKLQ4Ep9BbPXKTlKqCUcFCFPxiuzj94kBqn3Taz8f1mH6fw9rPNJ6b30dPsV5TLVvVDry7Fcou1Qi8rodSdjNoePHScoDdccH74DiD1_O3w/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg" /></a><br />
அரு. இராமநாதன் அவர்களின் 'காதல்' பத்திரிகையில் <br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP0LSWyXAnyI0jT8iwHvMjjD8p-koxDntkKhM4ZbXIgRPbn66Zy-pQTbUXq0y8tIh0AizUrkvfDZaZ76sItTEMQnHfvlwQaFfMaJyWZE6mx0-DaG9qgwMM5M_RrRoC9woJke3sCI84pZfP/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AF%2581.+%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="641" data-original-width="443" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP0LSWyXAnyI0jT8iwHvMjjD8p-koxDntkKhM4ZbXIgRPbn66Zy-pQTbUXq0y8tIh0AizUrkvfDZaZ76sItTEMQnHfvlwQaFfMaJyWZE6mx0-DaG9qgwMM5M_RrRoC9woJke3sCI84pZfP/s320/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AF%2581.+%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" width="220" /></a>அந்நாட்களில் ஜெகசிற்பியனும் நானும் தொடர்ந்து எழுதுபவர்களாக இருந்தோம் என்பது இனிய நினைவுகள். 'காதல்' பத்திரிகையின் பொங்கல் மலரை, வஸந்த மலர் என்று வெளியிடுவார்கள். அப்படியான ஒரு வஸந்த மலரில் எனது 'பார்வதி அம்மாள் என் அம்மா' என்ற குறுநாவலும்<br />
ஜெகசிற்பியனின் குறுநாவலும் அந்த மலரில் இடம் பெற்ற இரட்டைக் குறுநாவல்களாக வெளிவந்தன. எனது அந்தக் கதையை வாசித்து விட்டு ஜெ.சி. எனக்கு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்ததும் நெகிழ்ச்சியுடன் நினைவில் தேங்கி இருக்கிறது.<br />
<br />
அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கை நிலைகளை உரத்த குரலாய் பிரகடனம் பண்ணியது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் ஏழை மக்களின் மீது எல்லையற்ற பரிவு காட்டுகிற ரட்சகராய் அவர் திகழ்ந்ததை சொல்லித் தான் ஆக வேண்டும். காந்தீயத்திலும், சர்வோதைய சிந்தனைகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த ஜெகசிற்பியன் தமிழ் எழுத்துலகில் தாம் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் மறக்க முடியாதவை.<br />
<br /></div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-22336158274081169292020-03-31T10:16:00.002-04:002020-03-31T11:37:22.319-04:00மனக்கோலங்கள் கொண்ட மெளனி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: red; font-size: x-large;">த</span>மிழ் எழுத்துலகிற்கு தற்செயலாக வந்தவர் தான் மெளனி. மெளனியைப் பொறுத்த மட்டில் எல்லாமே தற்செயல் தாம்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU3ND7azEZKStc4EWlAXL02UZM5zXjPv9dDGA6KUGm6hWOtzO3UuIqXMz4YPNraNlx3YrKeOa7dHn7eQlDRNDGmwzPQ8_5fY235SGtGXiFLsM28siIy69pk0eh9TmfWA-IEiNZRTgk7V2s/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2586%25E0%25AE%25B3%25E0%25AE%25A9%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU3ND7azEZKStc4EWlAXL02UZM5zXjPv9dDGA6KUGm6hWOtzO3UuIqXMz4YPNraNlx3YrKeOa7dHn7eQlDRNDGmwzPQ8_5fY235SGtGXiFLsM28siIy69pk0eh9TmfWA-IEiNZRTgk7V2s/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2586%25E0%25AE%25B3%25E0%25AE%25A9%25E0%25AE%25BF.jpg" /></a>இவர் எழுத வருவதற்கு தூண்டுகோலாகவும் முழுமுதற் காரணமாகவும் இருந்தவர் 'மணிக்கொடி' பி.எஸ்.ராமையா அவர்கள். தமிழில் எழுதுவது பற்றி எந்த நோக்கமும் இல்லாது இருந்த சுப்ரமணியனை ஊக்குவித்து அவரை எழுதச் சொல்லிக் கதையைப் பெற்றவர், 'மெளனி' என்கிற புனைப் பெயரையும் அவருக்குச் சூட்டி பெற்ற கதையை மணிக்கொடியில் பிரசுரித்தார். அப்படி அவர் பிரசுரித்த கதைக்குப் பெயர் 'ஏன்?'. இதுவே தமிழில் மெளனியின் முதல் கதை ஆயிற்று.<br />
<br />
மெளனியின் 'ஏன்?' எழுப்பக் கூடிய கேள்வியே மிகப் பெரிதாய் நீண்டு விடை காண முடியாது நிலைகுலைந்தது. பதினாலு வயதுச் சிறுவன் மாதவன் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகையிலே தனது வகுப்புத் தோழி சுசீலாவிடம் தன் மனக்கட்டுப்பாட்டை இழந்து விட்டவன் போன்று, "சுசீ! நானும் வீட்டுக்குத் தான். சேர்ந்து போகலாமே?" என்று பொருத்தமில்லாமல் கேட்கிறான்.<br />
<br />
இதைக் கேட்டதும் சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து புருவங்களை உயர்த்தி வியப்புடன் கண்கள் விரியப் பார்த்தது, 'ஏன்?' என்று அவனைக் கேட்பது போலிருந்தது. இந்த 'ஏன்?' அந்தப் பையனை பிசாசு போலப் பற்றிக் கொள்கிறது. அதன் பின் இருவர் மனத்தையும் ஆட்டிப் படைக்கிறது. அதோடு விட்டதா?.. இந்த 'ஏன்?' அவர்கள் சம்பந்தப்பட்டது என்பதைத் தாண்டி வெளியுலகிலிருந்தும் அவர்கள் எதிர்கொள்ளும் ஒன்றாக வியாபிக்கிறது. ஏன், எப்படி, எதற்காக என்று விடைப்புடன் நிமிர்ந்து நிற்கும் கேள்விகளுக்கு விடையில்லை. அதற்கு மேலான கதையை நடத்திச் சென்று, இதற்கு மேலான யோசிப்பை வாசிப்பவரிடம் விட்டு விடுகிறார் மெளனி.<br />
<br />
மெளனியின் கதையுலகம் தனித்தன்மையானது. சிலந்தியென தன்னைச் சுற்றி தானே பின்னிக் கொண்ட வலையிழைகள் தாம் இவரது அத்தனை கதைகளும். மெளனிக்கு வார்த்தைகள் மிக மிக முக்கியம். ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் விரும்புகிற அர்த்தத்தைப் புதைத்து வைத்திருப்பார். புதைத்திருப்பது எது என்று கிளறிப் பார்ப்பவர்களுக்கு புரிதலும் பல சமயங்களில் அசாத்தியமான காரியமாக அமைந்து விடுவதும் உண்டு.,<br />
<br />
இதெற்கெல்லாம் மெளனியையும் குறை சொல்லி விட முடியாது. அத்தனை கதைகளையும் தனக்காகத் தான் எழுதிக் கொண்டாரோ என்று கூடத் தோன்றும். அவரிடமிருஜ்து யாரோ வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பிரசிரித்து விட்ட மாதிரி அப்படியொரு தோற்றம். <br />
<br />
அவரது பெரும்பாலான கதைகளும் 'அவன்' அல்லது 'அவள்' தான் கதைகளின் நாயக, நாயகிகள். தனக்குள் தோய்ந்து தான் சுமந்த நினைவுகளை தான் விரும்புகிற போக்கில் சாவதானமாக தனக்குள்ளாகவே மீட்டிப் பார்க்கிற மாதிரியான 'அவன்'; அதாவது அவனாகிய அவர், அவர் , அவனாகி தன் அக உணர்வு நிலைகளை அவன் தோள் மாற்றி சுமக்கச் செய்து தன் மனச்சுமைகளைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.<br />
<br />
அவரது 'அழியாச்சுடர்' லேசில் மறக்க முடியாத கதை.<br />
<br />
தன்னையும் அறியாத ஒரு உத்வேகத்தில் ஒருவன் பெண்ணொருத்தியிடம் உறுதிமொழி மாதிரி வெளிப்படுத்திய வார்த்தைகளை பல ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் நிறுத்திக் கொண்டு புழுங்கும் கதை அது. இத்தனைக்கும் அவள் மிக நெருக்கத்தில் அவனருகில் இருக்கும் பொழுது தான் அவன் அதை அவளிடம் சொன்னான்.<br />
<br />
கோயில் சந்நிதி என்பதால் சுற்றி பலர் இருந்தனர்.என்பது வாஸ்தவம் தான். இருந்தும் அந்த சூழ்நிலையில் யாரும் இதைக் கேட்டிருக்க முடியாது. இருந்தும் கோயிலில் ஈஸ்வரன் சந்நிதிக்கு முன் இதை அவன் அவளிடம் சொன்னதால் உள்ளிருந்த விக்கிரகம், எதிர் தூணில் ஒன்றி நின்ற யாளி, இதெல்லாம் அவன் சொன்னதைக் <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLO1m-t66uuPbbPRROIAdEwrgCL8WGidodBhzXv8mPFTQM5QlaT5-5LaflsZoRDIKmWPMQK4ABWdbuA5nDVNjcSeO8QWyzFpGE9jMKviV_FsglKICtWf8eBZerkUTYS748zZjO0huDSPiz/s1600/%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2588.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="193" data-original-width="262" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLO1m-t66uuPbbPRROIAdEwrgCL8WGidodBhzXv8mPFTQM5QlaT5-5LaflsZoRDIKmWPMQK4ABWdbuA5nDVNjcSeO8QWyzFpGE9jMKviV_FsglKICtWf8eBZerkUTYS748zZjO0huDSPiz/s1600/%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2588.jpg" /></a></div>
கேட்டிருக்கும் என்று எண்ணுகிறான். கேட்டதை ஊர்ஜிதப் படுத்துவது போல கீற்றுக்கு மேலே சந்தனப் பொட்டுடன் வீபூதி அணிந்த அந்த விக்கிரகம் உருக்கொண்டு புருவஞ்சுழித்து சினம் கொண்டது போலவும், தூணில் ஒன்றியிருந்த யாளியும் மிக மருண்டு பயந்து முகம் சுழித்து பின் கால்களில் எழுந்து நின்ரு பயமூட்டியதாகவும் உணர்கிறான்.<br />
<br />
மிஞ்சி மிஞ்சிப் போனால் அவளுக்கு பதிமூன்று வயது இருக்கும். பின்னிய ஜடை பின் தொங்க, மெதுவாகத் தன்னோடு வந்தவர்களுடன் சதங்கைகள் ஒலிக்க அவள் போய்விடுகிறாள். பிராகாரத்தை அவன் சுற்றி வருகையில் மீண்டும் அவனைத் தனியே பார்க்கிறான். அவளும் அவனைப் பார்க்கிறாள். 'உனக்காக நான் எதுவும் செய்யக் காத்திருக்கிறேன். எதையும் செய்ய முடியும் என்று அவளிடம் சந்நிதியில் அவன் சொன்ன வார்த்தைகளைத் திருப்பிக் கொள்ளும்படிக் கேட்டு அவள் அவனிடம் கெஞ்சுவது போல அவள் பார்வை இருந்ததாக அவனுக்குத் தோன்றுகிறது. அவளை நெருங்கும் அவன் மறுபடியும் ஒருதரம் 'என்ன வேண்டுமானாலும் உனக்காக..' என்று ஆரம்பித்து முழுதும் சொல்லி முடிக்காமல் வேகமாகத் திரும்புகிறான்.<br />
<br />
கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து அவன் கோயிலுக்குப் போகும் பொழுது மறுபடியும் அவளைப் பார்க்க நேரிடுகிறது. முன்பு அவளை அவன் பார்த்த மாதிரி இப்பொழுது அவள் இல்லை. ஒரு நவநாகரிகத் தோற்றம். 'இதுவும் நல்லதுக்குத் தான்; அப்பொழுது வேகத்தில் ஏதோ சொன்னதை இப்பொழுது ஒரு பொருட்டாக அவள் எண்ண மாட்டாள் என்று அவன் நினைத்துக் கொள்கிறான்.<br />
<br />
அதே சமயம் ஒருவித தியான நிலையில் கடவுள் முன் கைகூப்பி நிற்பவள் சடாரென்று திரும்பி அவனைப் பார்க்கிறாள். அந்தப் பார்வை அவள், அவனைக் கண்டு கொண்டு விட்டாள் என்று புலப்படுத்துகிறது. அவள் பார்வை எதிரிலிருக்கும் தூணில் படுகையில் அவன் முன்பு அவளிடம் சொன்ன வாக்கின் அழியாத சாட்சியாக இருந்த அந்த <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYqX7TJHiEAOWPHyKbIKqXEOxRlqjlwieQZDYrgGYiDlfvQzJ1oA9Aa5SkONiOVMVgMZA8ba5W0P7E1PgWfK9io3XsTOIwqjDHcCFjRkKncYpP-mSKediwrugd4oZdePk4N6_y6p4xvwJh/s1600/%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF+%25E0%25AE%25A4%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="180" data-original-width="280" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYqX7TJHiEAOWPHyKbIKqXEOxRlqjlwieQZDYrgGYiDlfvQzJ1oA9Aa5SkONiOVMVgMZA8ba5W0P7E1PgWfK9io3XsTOIwqjDHcCFjRkKncYpP-mSKediwrugd4oZdePk4N6_y6p4xvwJh/s1600/%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF+%25E0%25AE%25A4%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" /></a></div>
யாளியும் எழுந்து நின்று கூத்தாடுவது போல அவனுக்குத் தோன்றுகிறது. ஆணை இடுவது போல அவள் பார்வை அவனை ஊடுருவுகிறது. என்ன நடந்தது என்று அவன் சுதாரிப்பதற்குள் அவள் போய் விட்டாள்.<br />
<br />
இந்தக் கதையில் மெளனியின் பிரசித்தி பெற்ற் வாக்கியமான 'நாம் சாயைகள் தாமா?.. எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' என்ற வாக்கியம் வருகிறது. அந்த வாக்கியத்தின் அடிப்படையில் அவரவர் அவரவருக்குத் தோன்றிய வழியில் இந்தக் கதையை அவதானித்துக் கொள்ளலாம். ஏனெனில் ஒன்றை ஒருவர் சொல்லும் வகை, இன்னொருவர் அவர் சொல்லும் வகையில் அர்த்தப்படுத்திக் கொள்ள வழி கோலலாம்.<br />
<br />
மெளனியின் கதைகள் அந்தக் கதைகளுடான நேரிடையான பரிச்சயத்துடன் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியவை. அர்த்தச் செழுமையுடன் அவர் பிரயோகிக்கும் வார்த்தைகள் கொடுக்கும் அர்த்தங்கள், அவரவர் புரிதல்களுக்கு ஏற்ப எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றன. ஒரு படிமத்தை தீற்றலாகத் தீட்டிக் காட்டி விட்டு 'இனிமேல் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று நம் பொறுப்பில் விட்டு விடுகிற மாதிரி படிப்பவர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை அளித்து அவர் ஒதுங்கிக் கொண்டு விடுகிறார். இந்த ஒதுங்கல் மெளனியின் கதைகளீல் விசேஷமாகத் தெரிகிறது.. இதுவே யாரிடமும் இல்லாத மெளனியின் தனிச் சிறப்பாகவும் தெரிகிறது.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0vhoOEdrwWwjxW0O5314KWqqkWmPpyF1OXckTVff4oNuBsYRRcJQe32xhlNlxPD3b2Wcpo6qAwyliyJBDXOXZeBk35owMw-wNE9zdBRY472i1sPuEOqz-o-n5bNG66fylfAcdlDIrf1BO/s1600/%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0vhoOEdrwWwjxW0O5314KWqqkWmPpyF1OXckTVff4oNuBsYRRcJQe32xhlNlxPD3b2Wcpo6qAwyliyJBDXOXZeBk35owMw-wNE9zdBRY472i1sPuEOqz-o-n5bNG66fylfAcdlDIrf1BO/s1600/%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF.jpg" /></a>மெளனி பிறந்தது தஞ்சை மாவட்ட செம்மங்குடியில். மெளனி கல்லூரியில் படித்தது உயர் கணிதமும் தத்துவமுமே. சாஸ்திரிய சங்கீதத்தில் வெகுவாக ஈடுபாடு கொண்டவர். கும்பகோணத்திலும் திருச்சியிலும் படித்தவர், சிதம்பரத்தில் வாழத் தலைப்பட்டார். அது என்னவோ தெரியவில்லை, ஒருமாதிரியான வெறுமை சூழ்நிலை மெளனியின் ஆழ்மனத்தில் பதிந்து போய் விட்ட உணர்வுகள் போலும். அத்தனை கதைகளிலும் தவறாது இந்த உணர்வுகளைப் பதிந்திருக்கிறார். வாழ்க்கை பூராவும் அதை வெல்வதற்கான உபாயங்களாகிப் போனவை அவரது கதைகள். பல கதைகளுக்கு அவர் கொடுத்த தலைப்புகளும் இந்த நிலையாமை உணர்வை பறைசாற்றத் தவறவில்லை. மனதில் அடிக்கடி கவியும் இந்த உணர்வுகளுக்கு மாற்றாக முகிழ்க்கத் துடிக்கும் காதலும் கைகூடாமல் போவதைக் கதைகளில் கூட தவிர்க்க முடிந்ததில்லை.<br />
<br />
<br /></div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-45686649934418621732020-03-28T10:22:00.002-04:002020-03-28T10:22:32.865-04:00அசோக மித்திரன் என்னும் எழுத்துக் கலைஞர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: red; font-size: x-large;">எ</span>ல்லோருக்கும் வாசிக்க நேரம் கிடைத்திருக்கிறது. தொலைக்காட்சி பார்க்க நேரம் கிடைத்திருக்கிறது. வீட்டில் அடைந்து கிடைக்கும் நேரத்தை உபயோகமாக எப்படி செலவிடலாம் என்ற யோசனையின் வெளிப்பாடு இந்தப் புதுப் பகுதி. சென்ற தலைமுறை சார்ந்த நம் தமிழ் எழுத்தாளர்களின் என்னைக் கவர்ந்த சில கதைகளை இந்தப் பகுதியில் சொல்லலாம் என்று எண்ணம். கதை, கட்டுரை எழுத ஆசைப்படுபவர்களுக்கு பயிற்சிக் களமாகவும் இருக்கும். வாருங்கள், நண்பர்களே!...<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2Qzoy_xCupEdfYTaNrNowf6CjMyQTi_rGy8JhB1SLkdRyt3FLyqb0_fW8TYLePiYB9ev8J9p-2vdGRMCnNLVrgZKixuAHMvj_aNaOx0J2gFC9zCBBcN4cgX4bGxJv6YpmAyYPdtJFN4oV/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2Qzoy_xCupEdfYTaNrNowf6CjMyQTi_rGy8JhB1SLkdRyt3FLyqb0_fW8TYLePiYB9ev8J9p-2vdGRMCnNLVrgZKixuAHMvj_aNaOx0J2gFC9zCBBcN4cgX4bGxJv6YpmAyYPdtJFN4oV/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" /></a><br />
முதலில் ஒரு எலிக் கதை. இந்தக் கதையை எழுதியவர் தமிழில் தன் முத்திரையைப் பதித்த எழுத்தாளர் அசோக <br />
மித்திரன். <br />
<br />
<span style="color: red; font-size: x-large;">எ</span>லியொன்று ரொம்பவும் தொந்தரவு பண்ணிக் கொண்டிருக்கிறது. ராத்திரி ஆச்சுன்னா சமையலறையில் ஒரே துவம்சம். <br />
<br />
அந்த வீட்டில் இரவு பலகாரம் என்றால் பெரும்பாலும் தோசையும் உப்புமாவும் தான். எலிப்பொறி உள் கம்பியில் எப்படி உப்புமாவை மாட்டுவது?.. தோசையை வேண்டுமானால் பொத்தல் போட்டு மாட்டலாமா என்று அசோக மித்திரன் ரொம்பவே தமாஷ் பண்ணுகிறார்.<br />
<br />
'எப்படியாவது அந்த எலியை இன்றைக்குப் பிடித்து விட வேண்டும் என்று சூளுரைக்கிற மாதிரி மனைவி போட்ட உத்தரவில் உடனே கணேசன் அந்த இரவில் பொறியில் வைக்க வடை எங்கே கிடைக்கும் என்று தேடித் திரிகிறான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
பொதுக்கூட்டம் நடக்கும் ஒரு மைதானத்தை அவன் அடைந்த பொழுது எண்ணைய் சட்டியில் வடை போட்டுக் கொண்டிருக்கும் ஒரு தள்ளு வண்டிக்காரனைப் பார்க்கிறான். அவனைச் சுற்றி நிற்கும் கும்பலில் தானும் ஒருவனாக கணேசன் வடைக்காக வேண்டி நிற்கிறான். அவனானால் நீர்மூழ்கிக் கப்பல் மாதிரி எண்ணையில் மிதக்கும் மிளகாய் பஜ்ஜியேப் போட்டுக் கொண்டிருக்கிறான். அது முடிந்ததும் தான் வடை வேலை ஆரம்பிக்கும் போலிருக்கு. வடைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும் கூட்டமும் இடையில் கிடைத்த ஒரு தீனி சபலத்தில் பஜ்ஜியையும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு வழியாக பஜ்ஜி போடும் வேலையை முடித்தோ அல்லது நடுவில் நிறுத்தியோ இதோ வடை போடுவதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறான்.<br />
<br />
கணேசனுக்குத் தேவை இரண்டு வடைகள் தாம். அதுவும் அவனுக்காக அல்ல; அந்த எலிக்காக. எண்ணெயில் புரளும் வடையை ஜல்லிக் கரண்டியில் லாவகமாக நிமிர்த்தியும் அழுத்தியும் தேர்ந்த கலைஞனைப் போல அவன் கையாளலைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். தட்டில் எடுத்துப் போடுகையில் எனக்கு எனக்கு என்று கூட்டமே ஆலாய் பறக்கிறது. கணேசனுக்கு அவர்களோடு நெருக்கியடித்து தானும் கைநீட்ட லஜ்ஜையாக இருக்கிறது.<br />
<br />
அடுத்த ஈடு வடை எடுத்துப் போடும் போது எப்படியோ அந்த வண்டிக்காரனின் கவனத்தைக் கவர்ந்து அத்தனை நேரம் நின்றதற்கு ஒன்று கேட்டால் அவமானமாக இருக்கும் என்று சுடச்சுட பேப்பரில் பொத்தி இரண்டு வடைகளை வாங்கிக் கொண்டு கணேசன் வீடு திரும்புகிறான்.<br />
<br />
யார் முகத்தில் விழித்ததோ தெரியவில்லை, அன்று இரவு அந்த எலி பொறியில் வசமாக மாட்டிக் கொண்டு விடுகிறது.<br />
<br />
கொஞ்ச தூரத்தில் இருக்கும் மைதானத்தில் கொண்டு போய் விட்டால் அது வழி தெரிந்து திரும்ப கொஞ்ச நாளாவது ஆகும் என்ற தீர்மானத்தில் கணேசன் மைதானத்திற்கு எலிப் பொறியைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான்.<br />
<br />
இதோ, மைதானம் வந்து விட்டது. பொறியை மைதானத்து மண் தரையில் வைத்து மெதுவாக மூடிக்காம்பை கணேசன் அழுத்தினான்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMnLlYiknp6GV3k3cQFa46IVsXwMzI6sISMxCy8CKvxf0NOaK0EpCyhyphenhyphenqMIeFLkDxlWFhyJLeu2008lJDAffgwHH-CoXkv82WvROEp_YKDdlJGcY2rM3MhzpDrbAhwysI94S98FfoQlSaU/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25B2%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="171" data-original-width="294" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMnLlYiknp6GV3k3cQFa46IVsXwMzI6sISMxCy8CKvxf0NOaK0EpCyhyphenhyphenqMIeFLkDxlWFhyJLeu2008lJDAffgwHH-CoXkv82WvROEp_YKDdlJGcY2rM3MhzpDrbAhwysI94S98FfoQlSaU/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25B2%25E0%25AE%25BF.jpg" /></a>எலி வெளியே வந்தது.<br />
<br />
அது பெரிய எலியும் இல்லை மிகச் சிறியதும் இல்லை. பரந்த வெளி பழக்கமில்லாமல் எலி தாறுமாறாக ஓடியது. அப்போது எங்கிருந்தோ காக்கை ஒன்று எலியை ஒரு முறை கொத்தி விட்டுப் போயிற்று. எலி மல்லாந்து படுத்து துள்ளிற்று, பிறகு இன்னும் வேகமாக தத்தி தத்தி ஓடிற்று. காக்கை ஒரு சுற்று சுற்றி விட்டு வேகமாக கீழிறங்கியது. எலிக்கு பதுங்க இடம் தெரியவில்லை. காக்கை எலியை அப்படியே கொத்திக் கொண்டு தூக்கிச் சென்று விட்டது. கணேசனுக்கு துக்கமாக இருந்தது. <br />
<br />
இன்னொன்றும் அவன் துக்கத்தை அதிகரிக்கச் செய்தது. பொறியைத் தூக்கிக் கொண்டு வீடு திரும்ப ஆரம்பித்தான். பொறிக்குள் பார்த்தான். அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப்படாமல் இருந்தது.<br />
<br />
-- என்று கதை முடிகிறது.<br />
<br />
அந்தக் காலத்தில் தமிழ் வகுப்புகளில் 'நயம் பாராட்டுதல்' என்று ஒரு பகுதி உண்டு. பெரும்பாலும் கவிதைகளைக் கொடுத்து அதன் சிறப்புகளைச் சொல்கிற மாதிரி இது.<br />
<br />
வாசிப்பின் நேர்த்தி எதையும் படித்ததோடு நின்று விடுவதில்லை. படித்ததை மனசில் அசை போட்டு அனுபவிக்க வேண்டும். நாம் வாசிக்கற சமாச்சாரங்களும் அசை போடுகிற மாதிரி இருக்க வேண்டும் என்பது முக்கியம்.<br />
<br />
இந்த எலிக் கதை என்னைப் பொருத்த மட்டில் அசோக மித்திரனின் பாணி கொடி கட்டிப் பறக்கிற அற்புதமான கதை. சின்னச் சின்ன வரிகளில் பெரிய எழுத்து வித்தையை நடத்துவார் அவர். 'தேமே'னென்று ஒன்றும் தெரியாத மாதிரி தான் சொல்றதை அலட்டிக்காமல் மனுஷர் சொல்லி விட்டுப் போய் விடுவார். அதைப் படித்து விட்டு நாம் படுகிற அவஸ்தை இருக்கிறதே... <br />
<br />
அந்தக் கடைசி வரி, 'அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப்படாமல் இருந்தது என்பது தான் மொத்த கதையையுமே தாங்கி நிற்கிற தாங்குமிடம். அல்லது இந்த பரிதாபத்தை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே மொத்த கதையும்.<br />
<br />
எலி அந்த வடையை யாவது தின்று விட்டு செத்துப் போயிருந்தால் இவன் மனசு கொஞ்சம் சாந்தப்பட்டிருக்கும். செத்தே போய் விட்ட எலி, சாவதற்கு முன் வடையைத் தின்றிருந்தால் என்ன தின்னாவிட்டால் என்ன என்பது விவாதத்திற்கு சரியாக இருக்கும். 'அட செத்தது தான் செத்தது, சனியன் வடையைத் தின்று விட்டு செத்திருக்கலாமிலே' என்பது பரிதாபம். அதுவும் நேற்றிரவு<br />
மைதானத்தில் கால் கடுக்க நின்று அவ்வளவு பாடுபட்டு அது தின்பதற்காகவே வாங்கி வந்த வடை!<br />
<br />
இந்தக் கதையில் இன்னும் நிறைய சிறப்புகள் இருக்கின்றன. பின்னூட்டத்தில் தான் அவற்றைச் சொல்லுங்களேன்..<br />
<br />
<span style="color: red;">(அசோகமித்திரன் பிறந்தது </span><span style="color: red;">ஆந்திரத்து செகந்தராபாத்தில். </span><span style="color: red;">இயற்பெயர் தியாகராஜன். நமது பதிவுலக நண்பர் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு சொந்த சித்தப்பா உறவு முறை.</span><br />
<br />
<span style="color: red;">கல்லூரி வாழ்க்கைக்கு பிறகான அசோக மித்திரனின் பிற்காலத்து வாழ்க்கை பூராவும் தமிழகத்திலேயே. ஆரம்பத்தில் அன்றைய 'ஆனந்த விகடன்' ஆசிரியரின் ஜெமினி ஸ்டூடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் கொஞ்ச காலம் பணியாற்றினார். வெள்ளித்திரைக்கு பின்னாலான திரையுலகத்தினரின் வாழ்வின் சகல உணர்வுகளையும் சித்தரிக்கும் இவரது 'கரைந்த நிழல்கள்'</span><br />
<span style="color: red;">புதினம் அந்த ஆரம்பகால ஸ்டூடியோ அனுபவங்களின் சாயலில் எழுதியது தான். சினிமா வாய்ப்பு தேடி வந்த ஒரு நிஜப் புலிவேடக்காரரை நினைத்து எழுதிய கதை தான் இவரது 'புலிக்கலைஞன்' சிறுகதையும்.)</span><br />
<br /></div>
ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com29