tag:blogger.com,1999:blog-7223516172590239990.post3947420780629807607..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: அழகிய தமிழ் மொழி இது!...ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-21371415341796929262016-05-25T12:15:07.350-04:002016-05-25T12:15:07.350-04:00@ வே. நடனசபாபதி
//தன்னை நம்பி கை பிடித்து வந்த கண...@ வே. நடனசபாபதி<br /><br />//தன்னை நம்பி கை பிடித்து வந்த கண்ணகியை மறந்து மாதவியின் வீட்டில் தங்கியவனின் நடத்தை பற்றி என்ன சொல்ல? //<br /><br />அந்தக் கால வழக்கப்படி இதெல்லாம் பெரிய விஷயமே அல்ல. சங்க காலத்தில் இதை விட மோசம். இந்தக் கால இயைபுப்படி இதையெல்லாம் சிரச்சேதம் பண்ணுகிரோமே தவிர ஒவ்வொரு காலத்தும் அந்தந்த காலத்து இயைபுகள் இயல்பாகத் தான் இருந்திருக்கின்றன.<br /><br />என் கணிப்புப்படி கண்ணகியிடம் இல்லாத மாதவியிடம் இருந்த ஒரு ஈர்ப்பு மாதவியின் நாட்டிய + இசைக் கலை ஈடுபாடு தான். கோவலனும் இசைக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற கலைஞனாகத் தெரிகிறான். கவிதை அவன் உதடை அசைத்தாலே கொப்பளீத்துக் கொண்டு வருகிறது.. கண்ணகியுடனான முதல் இரவில் 'மாசறு பொன்னே, வலம்புரி முத்தே' ஒரு நல்ல உதாரணம். உண்மையிலேயே கோவலனுக்கு மாதவியின் உடல் ஈர்ப்பு ஒரு பொருட்டாகவே இல்லாமல் இசை ஈர்ப்பு விஞ்சி இருந்திருக்கலாம். எல்லா ஈர்ப்புகளுமே தனக்கே சொந்தம் என்று நினைக்கிற தன் வயப்பட்டவை. அந்தந்த நேரத்து அவையெல்லாம் அவற்றைக் கையாளுகிறவர்களைப் பொறுத்தும் இருக்கிறது.<br />இப்படித் தான் இவற்றைக் கையாள வேண்டும் என்று இன்னொருத்தர் சட்டம் போட முடியாது.<br /><br />இதெல்லாம் அவரவர் சம்பந்தப்பட்டு இருப்பதால், நாம் இப்படியெல்லாம் குடைந்து பார்த்துக் கொண்டிருக்க இளங்கோவோ அவருக்குப் பிடித்த மூன்றில் ஒன்றான 'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று ஒரே போடாகப் போட்டு விடுகிறார். 'ஆமாம் தானே?' என்று நாமும் ஒத்துப்பாட வேண்டியிருக்கிறது.<br /><br />'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்பதும் "Everu action has an equal and opposite reaction' என்று பிற்காலத்து இயற்பியல் மேதை சர் ஐஸக் நியூட்டன் சொன்னது தான். இங்கு வினையை செயல்பாடு என்று கொள்ள வேண்டும்.<br /><br />தொடர்ந்து வாசித்து பின்னூட்டம் இடுவதற்கு மிக்க நன்றி, ஐயா.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-51897432226175154582016-05-25T09:59:14.628-04:002016-05-25T09:59:14.628-04:00@ Bhanumathi Venkateswaran
ரொம்பவும் உள்ளார்ந்து ...@ Bhanumathi Venkateswaran<br /><br />ரொம்பவும் உள்ளார்ந்து பார்த்திருக்கிறீர்கள். இருவரும் இந்த கானல்வரி பாட்டு மூன்றோடு நிற்கவில்லை. நிறைய வரிப்பாடல்கள் பாடுகிறார்கள். அதில் கோவலன் பாடும் மூரிவரிப் பாடல்களும் மாதவி பாடும் சாயல்வரிப் பாடல்களும் குறிப்பிடத் தக்கன. இருந்தாலும் வேறு ஒரு பெண்ணை நினைத்து அவன் பாடுவது போலவும், இவளோ வேறொரு ஆணை நினைத்துப் பாடுவது போலவும் இருவரும் மாற்றி மாற்றி கற்பிதம் கொண்டது என்னவோ உண்மை. ஆனால் கானல்வரி காதைக்கு முன் இருவரிடம் எந்த சந்தேகமோ, சலசலப்போ இருந்ததில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.<br /><br />சிலப்பதிகார வரிகளைத் தாண்டி கோவலன் மனநிலையை ஆராய்ந்தால் ஒன்று தெரிகிறது. அது ஒரு ஆண் மனோபாவம் சம்பந்தப்பட்டது.<br /><br />மனைவி இருக்க மாற்றாளோடு தொடர்பு கொண்டவர் மனைவியோடு கூட இல்லாத நெருக்கத்தை மாற்றாளிடம் காண்பார்கள். வேறெந்த ஆண்களோடும் அவள் பேசிச் சிரிப்பதைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தாங்கள் நேசிப்பவரிடம் கொண்டிருக்கும் ஆழ்ந்த காதலும், நெருக்கமும் அப்படியான ஒரு ஆளும் உரிமையை எடுத்துக் கொண்டு இவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்றும், மாற்றாரிடம் லவலேசமும் அவள் மனசு படியக் கூடாது என்றும் நினைப்பார்கள். அந்த நினைப்புக்கு அடுத்த கட்டம்<br />தனக்கு இடம் கொடுத்த மாதிரி இன்னொருத்தனுக்கு இடம் கொடுத்து விடுவாளோ என்ற சந்தேகமாக விரியும். சோழமன்னனை நினைத்துப் பாடிய மாதிரியான மாதவியின் பாட்டு அந்த அளவுக்கு கோவலனிடம் ஆழ்ந்த சலனங்களை ஏற்படுத்தியிருக்கலாம். அந்த காரணத்தால் தான் "மாயப் பொய் பல கூட்டு மாயத்தாள்" என்றும் "ஆடல் மகளே அவள் நடிப்பை கண்டு நான் மயங்கேன்" எனறும் வார்த்தைகள் அவனிடமிருஜ்து வெளிப்பட்டிருக்கலாம் என்றும் கொள்ளலாம். சுத்தமாக தனிநபர் கையாளல் சம்பந்தப்பட்ட உளவியல் சமாசாரம் இது.<br /><br />ஆழ்ந்து உன்னிப்பாக நோக்கிய உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-26312658431799198892016-05-25T02:05:04.425-04:002016-05-25T02:05:04.425-04:00// சோழமன்னனின் அரசவையில் போற்றப்பட்ட ஆடல் அணங்கு க...// சோழமன்னனின் அரசவையில் போற்றப்பட்ட ஆடல் அணங்கு கடைவீதியில் விலை பேசப்பட்ட பொழுது, இசையில் நாட்டமில்லாத வேறு எந்த வசதிபடைத்த குணக்கேடனுக்கும் இவள் உரிமையாகி விடக்கூடாது என்ற கலைஞான அக்கறையிலும் கோவலன் மாலையை வாங்கி அவளை உரிமையாக்கிக் கொண்டிருக்கலாம்.//<br /><br />ஒருவேளை கோவலனது குணநலத்தை இந்த நிகழ்வு தூக்கிப்பிடிக்கலாம். ஆனாலும் தன்னை நம்பி கை பிடித்து வந்த கண்ணகியை மறந்து மாதவியின் வீட்டில் தங்கியவனின் நடத்தை பற்றி என்ன சொல்ல? <br /><br /><br />//தேவந்தி பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்றை இந்த இடத்தில் சொல்கிறார் அடிகளார். // <br /><br />இதைப் படிக்கும்போதே கதைக்குள் கதை இருப்பது திரு ஜெயமோகன் அவர்கள் சொன்ன ஒரு நாவலுக்கான இலக்கணம் இருக்கிறதே என நினைத்துக்கொண்டே மேலே படித்தபோது தாங்களும் அதையே அடிக்கோடிட்டு காட்டியுள்ளீர்கள். <br /><br />//தேவந்தி கதை மாதிரி இன்னும் நிறைய நிறைய குறுங்கதைகள் இந்தக் காப்பியத்தில் நீங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன.//<br /><br />நானும் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-1546215471840940832016-05-24T12:46:23.449-04:002016-05-24T12:46:23.449-04:00@ மோகன்ஜி
உங்களுக்கு வெறும் அடடா! எனக்கோ பேரிழப்...@ மோகன்ஜி<br /><br />உங்களுக்கு வெறும் அடடா! எனக்கோ பேரிழப்பாக இருக்கிறது. தேடித் தேடிப் பார்த்து விட்டேன். எங்கேயும் கண்டேனில்லை. நினைவில் இருந்து எடுத்து மீண்டும் எழுதி அனுப்ப முடியுமா, மோகன்ஜி?,, <br /><br />காளமேகப் புலவரே பிறவி எடுத்த உணர்வை ஏற்படுத்துபவர் அல்லவோ வாகீச கலாநிதி?.. மதுரையின் படபடப்பையும், அயோத்தியின் அசைவையும் ஒலி-ஒளிக் காட்சியாய் கற்பனையில் கண்டு ரசித்திருக்கிறாரே!<br /><br />எனக்கோ எம்.ஏ.வேணுவின் சம்பூரண ராமாயணம் நினைவுக்கு வந்தது.<br />அயோத்தியில் கொடிகள் அசைய, தேரோட்டிக்கு கை அசைவில் சேதி சொல்லி கன்னக் கதுப்புச் சதைகள் துடிதுடிக்க என்னமாய் நடித்திருப்பார் நடிகர் திலகம்! <br /><br />இன்னொரு சிவாஜி எப்போ தெரியலையே! காத்திருப்போம். காலமெலாம் காத்திருப்போம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-70355490444391743382016-05-24T12:30:00.257-04:002016-05-24T12:30:00.257-04:00@ வை.கோ. (5 )
"கோவலன்—கண்ணகி—மாதவி என்று இவ...@ வை.கோ. (5 )<br /><br />"கோவலன்—கண்ணகி—மாதவி என்று இவர்களைச் சுற்றியே கதை போகாமல் பல கதை மாந்தர்கள், சுற்றுப்பட்ட சிறுசிறு கதைகள், அது சம்பந்தப்பட்ட செய்திகள் என்று கூடை முடைவது போல சிலப்பதிகார நாவலை முடைகிறார் இளங்கோ." <br /><br />-- இதான் முக்கியமானது. கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அங்கங்கே வாசித்து வரும் பொழுது உங்களுக்கே சிலப்பதிகாரக் காப்பியம் என்பது ஒரு நாவலாக நம் கற்பனையில் எப்படிப் பரிமாணம் கொள்கிறது' என்பது புரிபட்டுப் போய்விடும். அந்தப் பார்வையில் படிக்கும் பொழுது இதுவரை தெரிந்த சிலப்பதிகாரம் இல்லாமல் வேறொன்று மாதிரியும் புலப்படும். <br /><br />தொடர்ந்து வாசித்துக் கருத்துக்களை உங்கள் பாணியில் பதிவிடுவதற்கு மிக்க நன்றி, கோபு சார்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-56728860776875139432016-05-24T12:21:22.515-04:002016-05-24T12:21:22.515-04:00@ வை.கோ. (4)
திருச்சி அருகேயுள்ள பிச்சாண்டர் கோய...@ வை.கோ. (4)<br /><br />திருச்சி அருகேயுள்ள பிச்சாண்டர் கோயில் பற்றி இதற்கு முன்னே தங்கள் பதிவில் எழுதி படித்த நினைவு.<br /><br />நானும் கும்பகோணம் ஆகையால், திருச்சியிலும் என் தந்தை வழி உறவினர்கள் சிலர் இருந்தனர். அதில் பிஷ்ஷாண்டார் கோயில் ஊரைச் சார்ந்தவர்களும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள். அதனால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.<br /><br />பிஷ்ஹாண்டார் கோயில் ஊர் பற்றி நினைவு கொண்டமைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-65241622802178350742016-05-24T12:14:15.652-04:002016-05-24T12:14:15.652-04:00@ வை.கோ. (3(
//நல்லதொரு அருமையான விளக்கம். GOOD ...@ வை.கோ. (3(<br /><br />//நல்லதொரு அருமையான விளக்கம். GOOD JUSTIFICATION :) //<br /><br />இதுவும் இதுவரை யாரும் பார்த்திராத பார்வை, கோபு சார். தங்கள் நியாயத் தீர்ப்புக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-46583512496855826002016-05-23T22:07:19.515-04:002016-05-23T22:07:19.515-04:00This comment has been removed by the author.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-34204848334550853162016-05-23T13:45:16.984-04:002016-05-23T13:45:16.984-04:00சாதாரணமாக எல்லா கதைகளுக்கும் ஒரு துவக்கம், ஒரு சிக...சாதாரணமாக எல்லா கதைகளுக்கும் ஒரு துவக்கம், ஒரு சிக்கல், ஒரு முடிவு இருக்க வேண்டும் என்பது பொது விதி. சிக்கல்தான் கதை அல்லது காப்பியத்திற்கு சுவாரஸ்யம் கூட்டி நகர்த்தி செல்வது. சிக்கல் வர ஒரு முடிச்சு விழ வேண்டும். சிலப்பதிகாரத்தில் எனக்கு ஒரு சந்தேகம், சுகமாக சென்று கொண்டிருந்த கோவலன், மாதவி பிரிய வேண்டும் என்றால் இங்கே ஒரு முடிச்சு வேண்டும். ஆனால் ஒரே பாடலிலேயே உறவை முறித்துக் கொள்ளும் அளவிற்கு சென்று விடுவார்களா? இதற்கு முன் சிறு சிறு சச்சரவுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் அவர்களுக்குள் தோன்றியிருக்குமோ? அதை ஏன் இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை? "மாயப் பொய் பல கூட்டு மாயத்தாள்" என்னும் சொற்றொடரும், பின்னால் மாதவி கொடுத்தனுப்பிய மடலை வாங்க மறுக்கும் பொழுதும், "ஆடல் மகளே அவள் நடிப்பை கண்டு நான் மயங்கேன்" என்னும் சொற்றொடரும் இதற்கு முன் பல முறை கோவலன் மாதவியால் காயப் பட்டிருக்கலாமோ, அதனால் கண்ணகிக்கு தான் இழைத்த துரோகத்தின் குற்ற உணர்ச்சி அதிகமாகி இருக்கலாமோ? என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன. ஒரு சிறு விரிசல், அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி படாரென்று வெடித்தது என்று நாமாக யூகித்துக் கொள்ள வேண்டும் என்று இளங்கோவடிகள் விட்டு விட்டாரா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-47543639764687687572016-05-23T12:55:57.044-04:002016-05-23T12:55:57.044-04:00@ வை.கோ. (2)
மாலை வராவிட்டாலும் நாளை வருவார் என...@ வை.கோ. (2)<br /><br />மாலை வராவிட்டாலும் நாளை வருவார் என்ற நம்பிக்கை தான் மாதவிக்கு.<br /><br />அவள் நம்பிக்கை தான் பொய்த்துப் போய்விட்டதே! ஊழ்வினை வலிது.<br />அவள் நம்பிக்கையைப் பொய்க்க வைத்ததில் ஊழ்வினைக்குப் பெரும் பங்கு உண்டு!<br /><br />அவன் ஊழ்வினை வேறு மாதிரி இருந்திருந்தால், அவள் கொண்ட நம்பிக்கை படி அடுத்த நாள் கோவலன் அவள் இல்லத்தில் அசட்டுச் சிரிப்புடன் ஆஜராகி இருந்திருப்பான்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-54790794315484416452016-05-23T12:51:43.952-04:002016-05-23T12:51:43.952-04:00@ வை.கோ. (1)
தாழம்பூக்கும் பாம்புக்கும் ஜென்மத்...@ வை.கோ. (1)<br /><br />தாழம்பூக்கும் பாம்புக்கும் ஜென்மத் தொடர்பு. <br />அதனால் வாசமுள்ள மலர் மட்டுமில்லை, சிறு புழு போல நெளியும் அதுவும் உண்டு. ஓரிரண்டு தடவை பார்த்தும் இருக்கிறேன். அதனாலே தாழம்பூ என்றாலே அதான் நிங்கைவுக்கு வரும்!<br /><br />வரலெஷ்மி விரதம் பண்டிகை போது வெள்ளி அம்மன் முகத்திற்கு ஜடை அலங்காரம் செய்ய தாழ்ம்பூ இல்லை என்றால் என் மனைவிக்கு சுரத்தே இருக்காது! எங்கே கிடைக்குமோ, ஏது செய்வேனோ எப்படியாவது வாங்கி வந்தே ஆக வேண்டும்!<br /><br />சென்னையில் அரிதிலும் அரிதாய் கிடைக்கும் இடம் தேடிப்போய் (ஒரு மடல் அந்த நேரத்திற்கு 50 ரூபாய் என்பான்) புலிப்பாலே கொண்டு வந்த சாகசத்தில் ஒரு வழியாய் வாங்கி வந்து விடுவேன்!<br /><br />நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி, கோபு சார்!<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-52681533098041997622016-05-23T06:23:25.120-04:002016-05-23T06:23:25.120-04:00ஜீவி சார் !
அடடா ! என் நெடிய பின்னூட்டம் எங்கே போ...ஜீவி சார் !<br /><br />அடடா ! என் நெடிய பின்னூட்டம் எங்கே போயிற்று? உங்கள் மறுவினை உண்டோ என வந்தால், முதலுக்கே மோசம். தேவந்தி கைக் குழந்தையுடன் இடாகனி தான் அதையும் இழுங்கியிருக்க வேணும். மதுரைக்கு வருகிறானே கோவலன்... <br /><br />ஒருமுறை கிவாஜ அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது :<br /><br />" சிலம்பில், மதுரையை கோவலன் நெருங்கும் போது, நகரின் முகப்பில் கொடிகளெல்லாம் கொலைகளப் படப்போகிறாய் வராதே! வராதே!! என்று படபடத்தன என்கிறார் இளங்கோ. ஆனால் கம்பனிலோ,அதே கொடிகள் இராம பட்டாபிஷேக ஏற்பாடுகள் போது அனைவரையும் வா! வா!! என்றழைப்பதாய் இருக்கிறதே? இது எஞ்ஞனம்?"<br /><br />கிவாஜ உடனே சொன்னார். <br />"அயோத்தியில் கொடிகள் நெடுக தொங்கவிடப்பட்டவை. அசைவில் வாவா என்றதைப்போல் தோற்றமளித்தது. மதுரையிலோ கொடிகள் கம்பங்களில் கட்டப் பெற்றவை. காற்றில் இடமும் வலமுமாய் அலையும் போது போபோ என்பதாய்த் தோன்றியது. கம்பனும் சரி. இளங்கோவனும் சரியே!"மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-47724984093293491432016-05-21T12:53:45.875-04:002016-05-21T12:53:45.875-04:00@ Geetha Sambasivam (பகுதி -9 பின்னூட்டம்)
//...<br />@ Geetha Sambasivam (பகுதி -9 பின்னூட்டம்) <br /><br /><br />//உங்களைப் போன்ற சில ரசிகர்கள் இருக்கும்வரை கோவலனின் நன்மதிப்புக்கு என்ன குறை? நான் ஒருத்தி கோவலனை நல்லவன் என்று சொல்லாததால் எதுவும் குறையப் போவதில்லை! ஏனெனில் என்னைப் பொறுத்தவரை அவன் கேவலன்! கண்ணகியோடு மதுரைக்குப் போகும்போது கூட மாதவியின் கடிதம் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறான். ஆகவே வேறு வழியில்லாமல் தான் அவன் கண்ணகியோடு செல்கிறான். :) அவன் மனம் ஒப்பிப் போகவில்லை.//<br /><br />கீதாம்மா... நானும் சிலப்பதிகாரத்தை புரட்டிப் புரட்டிப் பார்த்து விட்டேன்.<br /><br />'கண்ணகியோடு மதுரைக்குப் போகும் போது கூட ... மனம் ஒப்பிப் போகவில்லை..' இப்படியான கருத்துக்கு எந்த சான்றும் இல்லையே!<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-2059444119414733892016-05-21T12:13:56.561-04:002016-05-21T12:13:56.561-04:00@ பெரியவர் சூரி சிவா
பாலாச்சுளையை தேனில் நனைத்தா...@ பெரியவர் சூரி சிவா<br /><br />பாலாச்சுளையை தேனில் நனைத்தாற் போன்றதோர் பின்னூட்டம். <br /><br />ஐயன் ஐந்து முறை படித்தது அனுபவித்ததற்கு தங்களின் தமிழ் ரசனையே காரணம். தமிழுக்காக தனிப் பக்க பதிவு கொண்டிருப்பவர், அல்லவா?..<br /><br />இது தான் உங்களுக்குப் பிடித்த கட்டுரை நடையா?.. ஜமாய்ச்சுடலாம்.<br /><br />தொடர்ந்து எழுதுகிறேன். தங்கள் ஆசிகளுக்கு நன்றி.<br /><br /><br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-17739114206485126952016-05-21T11:55:24.432-04:002016-05-21T11:55:24.432-04:00@ அ.சு. ஜோசப்
அது என்ன பிரியமில்லாதவன்?.. எதிலும...@ அ.சு. ஜோசப்<br /><br />அது என்ன பிரியமில்லாதவன்?.. எதிலும் பிரியமில்லாமல் இருக்கவும் கூடுமோ?..<br /><br />பிரியமுள்ளவரின் பிரியமான பின்னூட்டத்திற்கு நன்றி..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-71744342996833941232016-05-21T11:51:06.315-04:002016-05-21T11:51:06.315-04:00@ தளிர் சுரேஷ்
நன்றி, தளிர் சுரேஷ் சார்!.. தங்கள்...@ தளிர் சுரேஷ்<br /><br />நன்றி, தளிர் சுரேஷ் சார்!.. தங்கள் பின்னூட்டமும் அசத்தல் தான். தொடர்ந்து வாருங்கள்.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-22954647221755066782016-05-21T06:20:52.858-04:002016-05-21T06:20:52.858-04:00//கோவலன்—கண்ணகி—மாதவி என்று இவர்களைச் சுற்றியே கதை...//கோவலன்—கண்ணகி—மாதவி என்று இவர்களைச் சுற்றியே கதை போகாமல் பல கதை மாந்தர்கள், சுற்றுப்பட்ட சிறுசிறு கதைகள், அது சம்பந்தப்பட்ட செய்திகள் என்று கூடை முடைவது போல சிலப்பதிகார நாவலை முடைகிறார் இளங்கோ. <br />தேவந்தி கதை மாதிரி இன்னும் நிறைய நிறைய குறுங்கதைகள் இந்தக் காப்பியத்தில் நீங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன. ஒரு காப்பியத்தை வடிக்கும் போக்கில் இளங்கோ அடிகள் நேர்த்தியாக வெகு நுணுக்கமாக என்னவெல்லாம் நகாசு வேலைகளைச் செய்திருக்கிறார் என்று வரும் பகுதிகளை ரசிப்பதற்கு ஏதுவாக முன்கூட்டியே சொல்லப்பட்ட இந்த நாவல் வரையறைகள் உதவும். //<br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும் தங்களின் இந்தத் தொடர் ......வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-70621110066559551602016-05-21T06:18:40.083-04:002016-05-21T06:18:40.083-04:00வசந்தமாலை, தேவந்தி, மாலதி போன்ற உப கதாபாத்திரங்களு...வசந்தமாலை, தேவந்தி, மாலதி போன்ற உப கதாபாத்திரங்களும், அவர்களின் கதைகளும், வழிபட்ட கோயில்களின் பட்டியலும் சிறப்பாக உள்ளன.<br /><br />//கடைசியாக பிச்சாண்டர் கோயில் அடைகிறாள். பிச்சாண்டர் கோயிலில் அந்த அதிசயம் நடந்தது.//<br /><br />ஆஹா, இங்கும் திருச்சியிலும் ஓர் பிக்ஷாண்டார் கோயில் உள்ளது. அதுவே என் மாமனார் மாமியார் வாழ்ந்த அவர்களின் சொந்த ஊர் ஆகும். அங்குள்ள சிவனுக்கு பிக்ஷாடனேஸ்வரர் என்றே பெயர். சென்றவாரம் கூட என் ஒரே மச்சினரின் பீமரத சாந்திக்காக (69 >>>> 70 years age இல் செய்துகொள்ளும் ஓர் விழா) இங்கு நான் சென்று வந்தேன். <br /><br />இந்த பிக்ஷாண்டார் கோயில் என்ற கிராமத்திலிருந்து 10 நிமிடம் நடக்கும் தூரத்தில் மட்டுமே உள்ளது உலகப்புகழ் பெற்ற திவ்ய க்ஷேத்ரமான மும்மூர்த்தி ஸ்தலம் ‘உத்தமர் கோயில்’ ..... இங்கு பிரும்மா+விஷ்ணு+சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அவர்களின் தேவிகளுக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. இங்கு வியாழக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். <br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-29291848650668481422016-05-21T06:04:45.382-04:002016-05-21T06:04:45.382-04:00//ஆண்—பெண் உடல் ஈர்ப்பை தாண்டி இசைக்கலைஞன் கோவலனின...//ஆண்—பெண் உடல் ஈர்ப்பை தாண்டி இசைக்கலைஞன் கோவலனின் மனதை ஆரம்பத்தில் ஆக்கிரமித்தது மாதவியின் இந்த கலைத்திறமைகள் தாம். உடல் இச்சைக்காக மாதவியை கோவலன் விலைகொடுத்து வாங்கினான் என்று கொச்சையாகக் கொள்ளக்கூடாது. சோழமன்னின் அரசவையில் போற்றப்பட்ட ஆடல் அணங்கு கடைவீதியில் விலை பேசப்பட்ட பொழுது, இசையில் நாட்டமில்லாத வேறு எந்த வசதிபடைத்த குணக்கேடனுக்கும் இவள் உரிமையாகி விடக்கூடாது என்ற கலைஞான அக்கறையிலும் கோவலன் மாலையை வாங்கி அவளை உரிமையாக்கிக் கொண்டிருக்கலாம். இரண்டு கலைஞர்களின் இசை மீதான ஈடுபாடு ஆண்-பெண் என்பதால் அதற்கேற்பவான ஈர்ப்பைக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை இயல்பாக்கிக் கொண்டது என்றே கொள்ள வேண்டும். //<br /><br />நல்லதொரு அருமையான விளக்கம். GOOD JUSTIFICATION :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-65012796763729876702016-05-21T06:00:21.017-04:002016-05-21T06:00:21.017-04:00//ஆனால் மாதவியோ, ‘இன்று மாலை வராவிட்டாலும், நாளை க...//ஆனால் மாதவியோ, ‘இன்று மாலை வராவிட்டாலும், நாளை காலை வருவார்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறாள்.//<br /><br />அவளுக்குத்தான் இது தெரியுமே ..... நல்லதொரு நம்பிக்கை.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-82241890648687275522016-05-21T05:57:04.751-04:002016-05-21T05:57:04.751-04:00//மாதவி நிரம்ப யோசித்து கோவலனுக்கு ஒரு மடல் எழுதத்...//மாதவி நிரம்ப யோசித்து கோவலனுக்கு ஒரு மடல் எழுதத் துணிகிறாள். தாழை மடல் தான் எழுது தாள், பித்திகை என்ற மலரின் அரும்பு எழுதுகோலாகிறது. சாதிலிங்கப் பூவின் குழம்பு எழுது மை என்று உபயோகமாகி மடல் தயாராகி விட்டது.//<br /><br />ஆஹா ..... தாழம்பூ ..... <br /><br />வாசமுள்ள மடல் இது ..... வஸந்தத்தைத் தேடுது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-73397554337181477872016-05-21T01:39:38.011-04:002016-05-21T01:39:38.011-04:00இந்தப் பதிவினை ஒரு முறை, இரு முறை அல்ல,
இது வரை ஐந...இந்தப் பதிவினை ஒரு முறை, இரு முறை அல்ல,<br />இது வரை ஐந்து முறை படித்தேன். <br /><br />அழகான, நயமான, இதமான, எளிதான,<br />அவைக்கு அடக்கமான,<br />இனிமையான , இயல்பான வார்த்தைகளால் <br />ஈன்று இருக்கிறீ ர்கள் ஒரு கட்டுரையை, <br /><br />எனக்குப் பிடித்த ஒரு கட்டுரை நடையில் <br />காவியத்தைப் படிப்பது களிப்பைத் தந்தது. <br /><br />சில இடங்களில் மனதில் பல ஓவியங்கள் தோன்றின<br />என்றாலும் மிகை இல்லை.<br />இரு பெண்டிரிடையே காணும் வித்தியாசத்தை <br />இல்லற இலக்கணத்துக்குட்படுத்தி சமைத்திருப்பது <br /> <br />பாராட்டத்தக்கது என்று ஒரு சொல் சொன்னால் போதுமோ !<br /><br />உம்மை எனக்கு இன்னமும் முன்னமே பரிச்சயம் <br />ஆகியிருக்கவேண்டும். பல நான் கற்று இருக்கலாம்.<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்.<br /><br />சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-25037545093358852112016-05-20T12:55:31.976-04:002016-05-20T12:55:31.976-04:00@ ஸ்ரீராம்
பழந்தமிழகத்தில் கோயில்கள் இல்லாத நகரமே...@ ஸ்ரீராம்<br /><br />பழந்தமிழகத்தில் கோயில்கள் இல்லாத நகரமே இருந்ததில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். கோயில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற மூதுரையே குடியிருப்புகள் இருந்த இடங்களில் கோயில்கள் இருந்தன என்பதற்கு சான்று.<br /><br />கோயில்கள், அவற்றிற்கான இடத்தேர்வில் ஆரம்பித்து எதெது எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நிறைய வரையறைகள் அவற்றைச் சொல்லும் ஆகம் நூல்கள் வகைவகையாக இருக்கின்றன. இது பற்றி ஓரிரண்டு பதிவுகளாவது எழுத வேண்டுமென்பது எனது நெடுநாளைய ஆசை.<br /><br />எந்த தேசத்தில் தான் கோயில்கள் இல்லை?.. தெய்வங்கள், கோயில்கள், வழிபாடுகள் எல்லாமே உலகளாவிய பழக்கங்கள்.<br /><br />தொடர்ந்து வாசித்து வந்து கருத்திடுவதற்கு நன்றி, ஸ்ரீராம்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-75761362286382234402016-05-20T12:13:20.759-04:002016-05-20T12:13:20.759-04:00@ கோமதி அரசு
முடிந்தவரை காப்பியத்தோடு தொடர்பு கொண...@ கோமதி அரசு<br /><br />முடிந்தவரை காப்பியத்தோடு தொடர்பு கொண்ட குறுங்கதைகளைச் சொல்கிறேன். ஆனாலும் முழு சிலப்பதிகாரத்தையும் இங்கு எழுத முயற்சித்தால் அது சிலப்பதிகாரம் பற்றிய தொடராக மாறிப்போகும்.<br /><br />சிலப்பதிகாரம் மட்டுமல்ல, மற்ற நாங்கு காப்பியங்களின் கதைகளை மட்டுமாவது சொல்ல வேண்டும்.<br /><br />ஐம்பெருங்காப்பியங்களின் தொடர்ச்சியே இன்றைய நாவல் இலக்கியம் என்று விளக்கமாகச் சொல்லி நிரூப்பிப்பதே இந்தத் தொடரின் நோக்கம். <br /><br />அதுமட்டுமல்ல, தொல்காப்பியர் வகுத்த இலக்கணக்களிலிருந்து வழுவிப் போய் விடாமல் இந்த காப்பியங்கள் எப்படி இயற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் சொல்ல வேண்டும்.<br /><br />அதிலிருந்து தொலகாப்பிய காலத்திலிருந்தே உரைநடையில் கதை சொல்லும் கலையைப் பற்ரித் தெரிந்திருந்தோம் என்று தெரிகிறது.<br /><br />ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான் நாவல் இலக்கியம் பற்றி நாம் தெரிந்து கொண்டோம் என்பது ஒரு வரலாற்றுப் பிழை. இந்தப் பிழையை எந்தத் தமிழ் பல்கலைக் கழகமோ, அதில் பட்டம் பெற்ற முனைவர்களோ, பேராசிரியர்களோ இது வரைச் சுட்டிக் காட்டியதில்லை.<br /><br />தமிழ் இலக்கியச் சிறப்புக்கு பெருமை சேர்க்கும் தொடராக அமைய வேண்டும் என்ற ஆர்கத்தில் எழுதி வருகிறேன்.<br /><br />நல்ல நினைவாற்றலும் வாசிப்பனுபவமும் கொண்ட தாங்கள் தொடர்ந்து வந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.;<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-33608072505612706412016-05-20T08:02:53.649-04:002016-05-20T08:02:53.649-04:00தொடர்பதிவு படித்தேன் நண்பரே
தொடர்ந்து பதிவுகள் தார...தொடர்பதிவு படித்தேன் நண்பரே<br />தொடர்ந்து பதிவுகள் தாருங்கள்...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.com