tag:blogger.com,1999:blog-7223516172590239990.post7031235593591065657..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: வசந்த கால நினைவலைகள்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-11330128813363503592019-04-12T11:58:24.144-04:002019-04-12T11:58:24.144-04:00@ Dr. Jaambulingam, Tamil University, A.R. (Retd)...@ Dr. Jaambulingam, Tamil University, A.R. (Retd)<br /><br />பட்டீஸ்வரம் என்றாலே எழுத்தாளர் பாலகுமாரன் ஞாபகம் எனக்கு வந்து விடும். உங்களை மாதிரித் தான். பட்டீஸ்வரம் மேல் தனி ஈர்ப்பு கொண்டவர். தாங்கள் சொல்வதும் சரி தான்.<br /><br />கும்பகோணத்தின் சமீபத்திய வளர்ச்சி என்னை பிரமிக்க வைக்கிறது. சுற்றி நவகிரக சந்நிதிகளும் கோயில்களும் சூழ்ந்திருப்பது முக்கிய காரணமாகத் தெரிகிறது.<br /><br />ஜேஜே என்று கடைத்தெருக்கள், எந்நேரமும் சுற்றுலா கூட்டம் என்று ஒரு மாவட்டத் தலைநகர் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் கூடியிருக்கின்றன. சற்று ஒதுங்கியிருப்பது தான் குறையாக இருந்தாலும் நகரத்தின் விறுவிறு வளர்ச்சி எல்லாவற்றையும் ஈடு செய்து விடும்.<br /><br />சமீபத்தில் தஞ்சாவூர், திருச்சி சென்றிருந்த பொழுது கும்பகோணத்திற்கு இருக்கிற இந்தக் கூடுதல் கவன ஈர்ப்புகள் அங்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-10633586155683930872019-04-12T11:44:58.156-04:002019-04-12T11:44:58.156-04:00@ துளசிதரன், கீதா
உங்களுக்கு பிடித்த இடத்தை ரசி...@ துளசிதரன், கீதா<br /><br />உங்களுக்கு பிடித்த இடத்தை ரசித்திருக்கிறீர்கள். நன்றி.<br /><br />தொடர்ந்து வாசித்து வாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-46955684683387546122019-04-12T11:42:36.764-04:002019-04-12T11:42:36.764-04:00@ நடன சபாபதி
இப்போது எல்லாம் மாறியிருக்கிறது போ...@ நடன சபாபதி <br /><br />இப்போது எல்லாம் மாறியிருக்கிறது போலிருக்கு.<br /><br />"அப்போது பார்த்தது போல மீனாட்சி, சொக்கனை பார்க்க முடியாது நிதானமாக திருப்பதி போல் வாங்க வாங்க நகருங்கள் என்று நகர்த்தி விடுவார்கள்".<br /><br />--- என்று கோமதி அரசு அவர்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தீர்களா?..<br /><br /><br />வழக்கமாக தொலைந்து போகிற சிறுவர்கள் பேசி வைத்துக் கொண்ட மாதிர் ஒரே மாதிரி தான் தொலைந்து போவது தான் வேடிக்கை. நான் தொலைந்து போனதும் அந்த மாதிரியான ரகத்தில் ஒன்று தான். சொல்கிறேன்.<br /><br />தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-3637934551506699662019-04-12T08:12:28.564-04:002019-04-12T08:12:28.564-04:00@ GMB
சுயதரிசனம் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு ...@ GMB<br /><br />சுயதரிசனம் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு தாங்கள் பாராட்டியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது, ஐயா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-46624911880078389632019-04-12T08:08:11.402-04:002019-04-12T08:08:11.402-04:00@ வெங்கட் நாகராஜ்
தொடர்ந்து வாசித்து தாங்கள் உணர்...@ வெங்கட் நாகராஜ்<br /><br />தொடர்ந்து வாசித்து தாங்கள் உணர்ந்த கருத்தையும் பதிவது மகிழ்ச்சியாக இருக்கிறது.<br />இந்தப் பகுதி இன்னும் சூடு பிடிக்கவில்லை. நான் வேலைக்குப் போன கால கட்டத்திலிருந்து பல்வேறு அனுபவங்கள்! வரிசையாகப் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-39544638946190884522019-04-12T08:02:35.197-04:002019-04-12T08:02:35.197-04:00@ கோமதி அரசு
சுசீந்தரம்! ஆஹா! தாணுமாலயன் கோயில்...@ கோமதி அரசு<br /><br />சுசீந்தரம்! ஆஹா! தாணுமாலயன் கோயில்! <br />சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மூவரையும் தரிசிக்க வாகாக இருக்கும் ஆலயம்!<br />நான் பலதடவைகள் கூட்ட நெரிசல்களில் சொந்தங்களை விட்டுப் பிரிந்திருக்கிறேன். அந்தத் தொடர்ச்சியை ஆரம்பித்து வைத்தது அழகர் கோயிலில் காணாமல் போனது..<br /><br />லஷ்மண் ஜூலாவில் நாங்கள் பயணித்த டூரிஸ்ட் வண்டியையே தவற விட்டு அலைந்தது பெருங்கதை! அதை இந்தத் தொடரில் அதற்கான இடம் வரும் பொழுது சொல்கிறேன்.<br /><br />இளம் வயதில் இந்தி எதிர்ப்பு ஜோதியில் ஐக்கியமாகி இந்தி கற்காத பெருங்குறை பல ஆண்டுகள் தாண்டி என்னைத் தண்டித்த ஆனுபவம் அது!<br /><br />அந்த தண்டனை கூடப் பெரிதாகத் தெரியவில்லை; ஒரு மொழியின் பெயரால் அந்தத் தலைமுறையினர் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதே பெரும் தலைக்குனிவாக இன்று இருக்கிறது!<br /><br />இளமையில் கல் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்! அன்று கற்காது விட்டது முதுமையில் மனத்தில் படிய மறுக்கிறது. <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-55956455284249362332019-04-12T07:37:51.919-04:002019-04-12T07:37:51.919-04:00@ கோமதி அரசு
மதுரை மக்களையும் மினாட்சி அம்மனையும...@ கோமதி அரசு<br /><br />மதுரை மக்களையும் மினாட்சி அம்மனையும் பிரிக்க முடியாது. அந்தளவுக்கு பந்தம் கொண்டவர்கள். மதுரையைப் பிரதிநித்துவபடுத்துவது மீனாட்சி அம்மன் கோயில் தான்.<br /><br />73-வரை கிளிகள் இருந்தனவா? நல்லது. இந்த மாதிரி எந்தக் கோயிலிலும் இல்லாத தனித்தன்மை கொண்டிருந்தது. மீனாட்சி அம்மனின் தோளில் அமரும் பாக்கியம் பெற்ற பறவை.<br /><br />வக்கீல் புதுத்தெருவின் கோடியில் அமைந்துள்ள சொக்கநாதர் கோயிலில் படியேறி <br />சுந்தரேஸ்வரரை நின்று நிதானித்து மனமுருகி தரிசிக்கலாம். <br /><br />அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோஸ்டவுன் மீனாட்சி அம்மன் அமெரிக்காவில் அமைந்த முதல் இந்துக் கோயில் என்ற பெருமை கொண்டது என்று சொல்கிறார்கள்.. நீங்கள் தரிசித்திருக்கிறீர்களா? <br /><br />அமெரிக்காவில் தான் எத்தனை இந்துக் கோயில்கள்?. எந்த நாட்டில் வாழ்ந்தால் என்ன? நம் மக்களின் பக்தி ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-62842228904057653542019-04-11T21:31:42.574-04:002019-04-11T21:31:42.574-04:00இதனைப்படிக்கும்போது கும்பகோணத்தில் கோயில்களைச் சுற...இதனைப்படிக்கும்போது கும்பகோணத்தில் கோயில்களைச் சுற்றிய எங்களுடைய இளமைக்கால நினைவுகள் என்னை ஆட்கொண்டன. இளம் வயது முதல் சென்றுவரும் பாதிப்போ என்னவோ, பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயிலுக்குச் செல்லும்போது துர்க்கையை ஓர் இறையுரு என்பதைவிட மிகவும் அணுக்கமான நட்பாக, உறவாக எண்ணுகிறேன். துர்க்கையைப் பார்க்கும்போது எண்ணங்களால் ஒன்றிவிடுவேன். அதில் கிடைக்கின்ற இன்பத்தை சொற்களால் வெளிப்படுத்த முடியாது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-14831735341311708492019-04-11T10:26:43.596-04:002019-04-11T10:26:43.596-04:00நல்ல நினைவுகள். அதுவும் மீனாட்சி கோயில் விவரணம் மற...நல்ல நினைவுகள். அதுவும் மீனாட்சி கோயில் விவரணம் மற்றும் அம்மை அப்பன் அவர்கள் குடும்பம் பற்றிய ரசனையான வரிகளை மிகவும் ரசித்தோம்.<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-29959413805008994802019-04-11T07:31:16.663-04:002019-04-11T07:31:16.663-04:00சிறுவனாக இருந்த போது நினைத்ததை, பார்த்ததை அப்படியே...சிறுவனாக இருந்த போது நினைத்ததை, பார்த்ததை அப்படியே நேரில் கொண்டு வந்துவிட்டீர்கள். பாராட்டுகள்! சுவாமி சன்னிதியில் கூட்டம் குறைவாய் இருப்பதைப் பார்த்து, மீனாட்சி அம்மனை வழிபடுவோரில் பலர் சுவாமி சந்நிதிக்கு வராமல் சென்றுவிடுவார்களோ என உங்களைப்போலவே நானும் நினைத்ததுண்டு. <br /><br />‘வடம் பிடித்து தேர் இழுப்போர் பசி போக்க, கூடை கூடையாக திண்டுக்கல் மலை வாழைப்பழத்தை சீப்பு சீப்பாக வீசிப் போடுவர்.’ என்ற வரிகளைப் படித்ததும் அந்த நாளும் வந்திடாதோ என்ற எண்ணம் தான் வந்தது. ஏனெனில் இப்போது மலை வாழைப்பழமும் முன்பு போல் கிடப்பதில்லை. மக்களுக்கும் அப்போதைய சேவை மனப்பான்மையும் இப்போது இல்லை என்பதால்.<br /><br />தாங்கள் சிறுவனாக இருந்த போது தொலைந்துபோய் பின் குடும்பத்தாரோடு சேர்ந்தது எப்படி என படிக்க தொடர்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-51302237020578934812019-04-11T06:29:33.203-04:002019-04-11T06:29:33.203-04:00சுய தரிசனங்கள் சுவையாக உள்ளன சுய தரிசனங்கள் சுவையாக உள்ளன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-29643268431327709592019-04-10T20:52:18.925-04:002019-04-10T20:52:18.925-04:00ஒவ்வொரு நினைவும் மறக்க முடியாதவையாக.....
உங்கள் வ...ஒவ்வொரு நினைவும் மறக்க முடியாதவையாக.....<br /><br />உங்கள் வார்த்தைகளில் அந்தக் காலத்திற்கே சென்று விட்ட உணர்வு. <br /><br />தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-37562364253888985652019-04-10T09:02:35.706-04:002019-04-10T09:02:35.706-04:00//ஒருதடவை கள்ளர் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது, ஆற்...//ஒருதடவை கள்ளர் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது. கூட்டம் மொத்தமும் அடித்துப்பிடித்துக் கொண்டு மேடு ஏறத் தவித்துத் தத்தளித்தது. "குழந்தையை கெட்டியா பிடிச்சிக்கோ" என்று என் பெரியம்மா, எட்டு வயசுப் பையன் என்னையும்-அம்மாவையும் அசுர பலத்தோடு இழுத்துக்கொண்டு, சின்ன கல்பாலம் ஏறிக்கடந்து ரோடுக்கு வந்தது இன்னும் மறக்கவில்லை.//<br /><br /><br />பெரியம்மாவின் தைரியம் மறக்க கூடிய நிகழ்ச்சியா!<br /><br />திருமலை நாயக்கர் மஹால் பற்றி நான் எழுதிய பதிவுக்கு வந்து உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது நினைவு இருக்கிறது. <br /><br />நீங்களும் காணாமல் போணீர்களா?<br />நானும் சிறு வயதில் அம்மாவை விட்டு பிரிந்து பின் சேர்ந்தேன் சுசீந்திரத்தில்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-62220294067863098912019-04-10T08:53:37.371-04:002019-04-10T08:53:37.371-04:00உங்கள் நினைவலைகள் மிகவும் அருமை.
மீனாட்சி, கோவில் ...உங்கள் நினைவலைகள் மிகவும் அருமை.<br />மீனாட்சி, கோவில் கிளிகள் 73 ம் வருடம் கூட இருந்தது அப்புறம் எப்போது கிளிகள் இல்லாமல் போச்சு என்று நினைவில்லை. <br /><br />அப்போது பார்த்தது போல மீனாட்சி, சொக்கனை பார்க்க முடியாது நிதானமாக திருப்பதி போல் வாங்க வாங்க நகருங்கள் என்று நகர்த்தி விடுவார்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com