tag:blogger.com,1999:blog-7223516172590239990.post7515918561199626423..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: அழகிய தமிழ் மொழி இது!...ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-41513444348942046052016-10-18T20:51:05.816-04:002016-10-18T20:51:05.816-04:00இந்திரா பார்த்தசாரதி எழுதி இருந்ததை ஏற்கெனவே படிச்...இந்திரா பார்த்தசாரதி எழுதி இருந்ததை ஏற்கெனவே படிச்சேன். ஶ்ரீராமரைக் குறித்து எத்தனை விதமான கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. கேள்விகள் பிறக்கின்றன. ஆனால் கண்ணகி குறித்துச் சொன்னால் மட்டும்! :)))) போகட்டும், என்னைக் குறித்த உங்கள் கருத்தைச் சொல்வதற்கு நன்றி. இது உங்கள் கருத்து மட்டுமே தான்! உண்மையில் நான் எதையும் எப்போதும் எங்கும் எதற்காகவும் தவிர்த்தது இல்லை. கண்ணகி குறித்த என் கருத்தை பேசுவதன் மூலமெல்லாம் அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. அதற்காகவெல்லாம் நான் தவிர்க்கவில்லை என்பதே உண்மை. முதலில் இதை உங்களுக்கு எழுத வேண்டாம்னு நினைச்சிருந்தேன். ஆனால் என்னைக் குறித்த உங்கள் கருத்தைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. தவறான கருத்து என்றாலோ, தவறாகச் சொன்னாலோ உடனே மன்னிப்புக் கேட்கும் சுபாவம் உடைய எனக்கு உங்கள் இந்த கருத்து ரசித்துச் சிரிக்க வைத்தது. நன்றி. என்னுடைய வேலைப்பளுக் காரணமாகவும் வேறு சில அடுத்தடுத்த சொந்தப் பிரச்னைகள் காரணமாகவுமே இணையத்தில் இருப்பதும் பதிவுகள் படிப்பதும் கருத்துகள் சொல்வதும் குறைந்திருக்கிறது. மற்றபடி மற்றவர் பேசினால் எல்லாம் கருத்து மாற்றம் ஏற்படும் என்றெல்லாம் பயப்படவில்லை. அப்படி ஒண்ணும் கண்ணகி பெரிய கதாபாத்திரமே இல்லை. சிலப்பதிகாரத்தில் மாதவிக்கு உள்ள இடம் கண்ணகிக்கு என்றுமே கிடையாது! கோவலனைத் திருமணம் செய்து கொண்டு பின்னர் மாதவியிடம் அனுப்பி வைத்ததைத் தவிர அவள் அதிலே என்ன செய்தாள்? போகட்டும், இந்த வாதம் இதோடு முடித்துக் கொள்கிறேன், காலை நேரம், வீட்டு வேலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-3123729023236965642016-10-18T12:37:18.100-04:002016-10-18T12:37:18.100-04:00@ கீதாசாம்பசிவம் (2)
கண்ணகி மீது எதனாலோ ஒரு அவெர...@ கீதாசாம்பசிவம் (2)<br /><br />கண்ணகி மீது எதனாலோ ஒரு அவெர்ஷன் உங்களுக்கு இருக்கிறது. இயல்பாகவே கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ள அவ்வளவு சிரமப்படாத நீங்கள், கண்ணகி பற்றி உங்கள் ஆழ்மனத்தில் பதிந்து போன கருத்தை மாற்றிக் கொள்ள சிரமப்பட்டு மறுக்கிறீர்கள். <br />கண்ணகி பற்றி நிறைய பேசப்பேச எங்கே அவள் பற்றி நாம் கொண்டிருக்கிற கருத்து மாற்றம் கொண்டு விடுமோ என்று தவிர்க்கிறீர்கள்.<br /><br />மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்க்ள் கண்ணகி பற்றி 'திண்ணை' இணைய இதழில் எழுதியிருந்ததைப் பற்றி முன்பே இந்தப் பகுதியில் குறிப்பிட்டு அதற்கான சுட்டியையும் கொடுத்திருந்தேன். இதே திரு. இந்திரா பார்த்தசாரதி இப்பொழுது நாவல் வடிவில் சிலப்பதிகாரத்தை எழுத ஆயத்தங்கள் செய்து கொண்டிருப்பதாக குமுதம் லைஃப் இதழில் ஒரு பேட்டியில் சொன்ன நினைவும் வருகிறது. அவர் கூட முன்பு தான் சொன்ன கருத்துக்கு பிராயசிக்கம் வேண்டி இப்பொழுது எழுதப் போவதை மாற்றி எழுதலாம்.. <br />நீங்கள் மாற்றிக் கொள்ளாதற்குக் காரணம், உங்களுக்கு 'மாற்றி யோசிக்கும்' பழக்கம் இல்லாமலும் இருக்கலாம்.<br /><br />பொதுவாக கருத்துக்களை இன்னொருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்வதில்லை. தான் கொண்டிருக்கும் கருத்திற்கு மாற்றாக இன்னொருவர் சொல்லும் அந்தக் கருத்தின் இன்னொரு பக்கத்தையும் அவர் பார்க்க வேண்டும் என்பதியற்காகத்தான். இதனால் தான் பூவுலகில் எது பற்றிய கருத்துக்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-30582330059282549252016-09-12T06:23:42.383-04:002016-09-12T06:23:42.383-04:00மறுபடி மறுபடி படித்தால் கண்ணகி ஆரம்பத்திலிருந்தே க...மறுபடி மறுபடி படித்தால் கண்ணகி ஆரம்பத்திலிருந்தே கோவலனிடமிருந்து விலகி நின்றதையும் தன் பத்தினித் தனத்தை மட்டுமே காட்டும் ஆவல் இருந்ததையும் உணரலாம். இது என்னோட கருத்து. தனிப்பட்ட கருத்து! ஏற்கவேண்டும் என்னும் அவசியம் ஏதும் இல்லை. :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-16119093781220766522016-09-12T06:03:07.107-04:002016-09-12T06:03:07.107-04:00@ கீதா சாம்பசிவம்
பெண்தெய்வமாகப் போற்றப்படுவதற்கா...@ கீதா சாம்பசிவம்<br /><br />பெண்தெய்வமாகப் போற்றப்படுவதற்கான உங்கள் வரையறைகள் வேடிக்கையாய் இருக்கின்றன.<br /><br />அடுத்து வஞ்சிக்காண்டம் வரப்போகிறது. அங்கு தான் பத்தினித் தெய்வமாகிறாள்.<br /><br />அங்கே தொடர்ச்சியைப் பார்க்கலாம். தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதற்கு, நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-24681736679313062892016-09-12T05:51:24.204-04:002016-09-12T05:51:24.204-04:00@ தி. தமிழ் இளங்கோ
அப்படியா, நண்பரே! அன்றைய நாட்...@ தி. தமிழ் இளங்கோ<br /><br />அப்படியா, நண்பரே! அன்றைய நாட்களில்.. தமிழ் வகுப்பு என்றால் வெல்லக்கட்டியாய் இனிக்கும். தமிழ் பாடநூலும் அற்புதமான தொகுப்புக்களைக் கொண்டிருக்கும். நான் சிறப்புத் தமிழ்ப் பிரிவு எடுத்திருந்தேன். <br /><br />நான் படித்த காலத்து ஆறாவது பாரம் வாரை-- Sixth Form-- தான். (அதுவே எஸ்.எஸ்.எல்.சி.க்கான இறுதி வகுப்பு.) நான் வாசித்ததும் எஸ்.எஸ்.எல்.சி. வரை தான்.<br />கல்லூரி செல்லவில்லை.<br /><br />காமராஜர் காலத்தில் பஞ்சாயத்து யூனியன் துவக்கம். எஸ்.எஸ்.எல்.சி. படித்தோர்க்கெல்லாம் வேலை. வேலைவாயிப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த SSLC முடித்தோருக்கு வீடு தேடி வேலைக்கான உத்தரவு வந்தது.<br /><br />எனக்கு அப்போது வயது 16. அரசு வேலையில் சேர்வதற்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும் என்பதால் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வேலை இல்லாமல் போயிற்று.<br /><br />அடுத்த இருவருடங்களில் நிறைய அரசு இலாகாக்களில் 10A1 (தற்காலிக வேலைகள்-- Leave vacancies)<br /><br />கர்மவீரர் முதவராய் இருந்த காலத்தில் தமிழக அரசு வேலைக்கான உத்தரவு வீட்டுக் கதைவைத் தட்டியது. அதே வருடத்தில் மத்ய அரசுப் பணிக்காக விண்ணப்பித்திருந்ததில் தேர்வாகி தபால் தந்தி இலாகாவிலிருந்த தொலைபேசி துறையில் புதுவையில் பணியில் சேர்ந்தேன். <br /><br />அந்த வருடமே புதுவை கடற்கரைக் கூட்டத்தில் தோழர் ஜெயகாந்தனைச் சந்தித்தது, அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் எல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.<br /><br />தங்கள் அழ்ந்த வாசிப்புணர்வுக்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள். நிறைய பேசலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-35646505251933191622016-09-11T04:20:37.857-04:002016-09-11T04:20:37.857-04:00//கண்ணகி பெண் தெய்வமாகப் போற்றப்படுபவர். அவர் மேல்...//கண்ணகி பெண் தெய்வமாகப் போற்றப்படுபவர். அவர் மேல் யாருக்குக் கோபம் வரும்?//<br /><br />கோவலனோடு வாழ்ந்து குழந்தையப் பெற்றெடுத்தது மாதவி. கண்ணகி கடைசியில் சில நாட்களே கோவலனோடு இருந்திருக்கிறாள். அதுக்குள்ளாகப் பெண் தெய்வமாகப் போற்றப்படுவது தான் ரொம்பவே ஆச்சரியமானது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-87241994721222013392016-09-11T03:49:02.168-04:002016-09-11T03:49:02.168-04:00எனது பள்ளிப் படிப்பின் போதும், இந்த கண்ணகி வழக்குர...எனது பள்ளிப் படிப்பின் போதும், இந்த கண்ணகி வழக்குரை காதையை பாடமாக வைத்து இருந்தார்கள். இந்த தொடரின் ஒவ்வொரு வரியிலும் உங்களது சிலப்பதிகார ஈடுபாட்டையும், தமிழ் உணர்வையும் உணரமுடிகிறது. தொடர்கின்றேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-13144931834049207922016-09-10T12:00:35.409-04:002016-09-10T12:00:35.409-04:00@ G.M.B.
உங்கள் பின்னூட்டத்தின் முதல் வரியில் &...@ G.M.B.<br /><br />உங்கள் பின்னூட்டத்தின் முதல் வரியில் 'மதுரையைக் கண்ணகி எரித்ததால் மதுரை மக்களுக்குக் கோபம் போலும்' என்று சொல்லியிருக்கிறீர்கள், அல்லவா?<br /><br />ஸ்ரீராம், கீதாசாம்பசிவம் போன்ற நம் பதிவுலகைச் சார்ந்தவர்கள் மதுரைக்காரர்கள். 'மன்னன் செய்த பிழைக்கு மதுரை மண்ணையே எரித்தல் என்ன நியாயமோ?' என்று ஸ்ரீராமும் தன் முந்தைய பின்னூட்டத்தில் கேட்டிருக்கிறார். அதனால் இயல்பாகவே ஸ்ரீராம் உங்கள் பின்னூட்டத்தில் வந்தார். அவ்வளவு தான்.<br /><br />கண்ணகி பெண் தெய்வமாகப் போற்றப்படுபவர். அவர் மேல் யாருக்குக் கோபம் வரும்?<br />கண்ணகிக்காக சிலை எடுத்தது, சீர்காழியை அடுத்த பூம்புகாரில் சிலப்பதிகார காட்சிகளை விளக்கும் அரங்கு அமைத்து அதைச் சுற்றுலாத்தலமாக்கியது எல்லாம் கண்ணகியின் மேலான நம் மரியாதையையும் அன்பையும் காட்டத்தான். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77500355077939228532016-09-10T11:23:35.516-04:002016-09-10T11:23:35.516-04:00என் பின்னூட்டத்தை மீண்டும் பாருங்கள் ஸ்ரீராமின் பு...என் பின்னூட்டத்தை மீண்டும் பாருங்கள் ஸ்ரீராமின் புரிதலைப் பற்றியதல்ல அது பெயர் பெற்ற கண்ணகியின் வரலாறோ நினைவையோ கூறும் இடங்கள் மதுரையில் இல்லை என்றே தெரிகிறது அதையே மதுரை மக்களின் கோபமோ என்று குறிப்பிட்டேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-89749135628359484242016-09-09T12:53:42.839-04:002016-09-09T12:53:42.839-04:00
@ Sury Siva
//வாழ்ந்த காலத்துக்கு ஒரு பொருள் இர...<br />@ Sury Siva<br /><br />//வாழ்ந்த காலத்துக்கு ஒரு பொருள் இருக்காது. //<br /><br />வாழ்ந்த காலத்துக்கு ஒரு பொருள் கொடுக்கப்போகும் கதை தான் அது. அது ஒரு தொடர்.<br />எதை எழுதினாலும் எதை வலியுறுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ, எதற்காக பேனா பிடித்திருக்கிறோம் என்று நினைக்கிறோமோ அது தான் எழுத வரும்.<br />அதனால் அந்தப் பக்கமும் தங்கள் பார்வை பதியட்டும். <br /><br />நாளை, சிலம்பின் அடுத்த பகுதி பிரசுரமாகிறது. வந்து விடுங்கள், சுதாஜி! <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-75316722130236343422016-09-08T05:03:58.876-04:002016-09-08T05:03:58.876-04:00குடுகுடுப்பைக்காரன் வாசலில் நின்றது. //
75 வயதிலே...குடுகுடுப்பைக்காரன் வாசலில் நின்றது. //<br /><br />75 வயதிலே குடுகுப்பைக்காரன் சொல்லித்தான் தெரியவேண்டியது எதுவும் இருக்காது. அவன் சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற நிலை இருப்பின், வாழ்ந்த காலத்துக்கு ஒரு பொருள் இருக்காது. <br /><br />இருப்பது இன்னும் சில நாட்களோ மாதங்களோ ?<br />இன்னும் தெரியவேண்டியதோ பற்பல இருக்கும் வேளையில், <br /><br />சிலப்பதிகாரம் எனக்கு பாரம் அதிகமாக தோன்றவில்லை. <br />சாரம் அதில் தான் இருக்கிறது. அதனால் அடுத்த <br />வாரமாவது தொடருங்கள். <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-11090165731422541132016-09-08T03:34:09.480-04:002016-09-08T03:34:09.480-04:00@ Sury Siva
எப்பொழுது வந்தாலும், தொடர்ச்சியை வாச...@ Sury Siva<br /><br />எப்பொழுது வந்தாலும், தொடர்ச்சியை வாசித்திருப்பீர்கள் என்று தெரிகிறது.<br /><br />இனிமேல் தான் 'அழற்படு காதை'யே. கண்ணகி மதுரையை எரித்தது என்பது வரலாற்று நிகழ்வா, இல்லை இளங்கோவடிகளாரின் கற்பனையா என்ற பூதாகரக் கேள்வி எனக்குத் தெரிந்து இப்பொழுது தான் எழுந்திருக்கிறது.<br /><br />எழுந்திருப்பதற்கான காரணம்: 1. தனி ஒருவரின் பாதிப்புக்காக ஒட்டு மொத்த நகரத்தையே எரிப்பது என்ன நியாயம் என்ற கேள்வி. 2. எரித்ததே தப்பு என்கிற பொழுது அதில் என்ன சிலருக்கு சலுகை? <br /><br />பொதுவாகவே சரித்திர நிகழ்வுகள் அத்தனையுமே அந்த அந்த காலகட்ட நியாயங்களுக்கும் அல்லது அநியாயங்களுக்கும் சொந்தமாக இருக்கின்றன. அந்த நியாய அநியாயங்களை இன்னொரு காலகட்ட நியாய அநியாயங்களோடு பொருத்திப் பார்த்து சாட்டையை சுழற்றுவது நியாயமில்லை தான். இருப்பினும் வரலாற்று நிகழ்வுகளை ஒட்டி இந்தக் காப்பியத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்ற நோக்கில் அந்த பூதாகரக் கேள்வி எழுந்தது. இந்த அடிப்படை கேள்விக்கு பதில் இல்லை எனில், மேற்குறித்த இரண்டு கேள்விகளுக்கும் இயல்பாகவே பதில் இல்லாமல் போகிறது.<br /><br />தொடர்ந்து சிலப்பதிகாரம் பற்றி தொடராக எழுதுவது சிலருக்கு சோர்வேற்படுத்தலாம்.<br />அதனால் அதற்கு நடுவில் ஒரு குறுக்குப் பாய்ச்சல் தான் குடுகுடுப்பைக்காரன் வாசலில் நின்றது. சிலப்பதிகாரமும் அது பாட்டுக்கத் தொடரும். <br /><br />குடுகுடுப்பைக்காரன் பக்கமும் கொஞ்சம் பார்வை பதியட்டும், ஸ்வாமி. உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த சப்ஜெக்ட் தான் அதுவும்.<br /><br />தங்கள் அன்பான கருத்துப் பதிவுக்கு நன்றி, சுதாஜி!<br /><br /> <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-81763992217849605212016-09-08T02:54:34.147-04:002016-09-08T02:54:34.147-04:00@ சிவகுமாரன்
பாம்பறியும் பாம்பின கால் சமாச்சாரத்...@ சிவகுமாரன்<br /><br />பாம்பறியும் பாம்பின கால் சமாச்சாரத்தை சாந்தமாக உணர்த்தி விட்டீர்கள். அந்த இலக்கிய DNA சமாச்சாரம் உங்கள் வரை தொடர்ந்து வருவதையும் பார்த்திருக்கிறேன்.<br />அது வெள்ளைமனம் படைத்தார்களின் சொத்து. கவிஞர்கள் இந்த சொத்துக்குப் பட்டா போட்டுக் கொண்டவர்கள். உறுமல் அவர்கள் உள்ளம் வெந்து போனால் வெளியே பற்றிக் கொள்ளும்.<br /><br />வருகிறேன், சிவகுமாரன். <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-64774576014148204202016-09-07T23:39:04.503-04:002016-09-07T23:39:04.503-04:00மதுரைக்குள்ளே கோவலன் நுழையும்போது வந்த நான்,
மதுரை...மதுரைக்குள்ளே கோவலன் நுழையும்போது வந்த நான்,<br />மதுரை எரிந்தபின்பு தான் <br />மறுபடியும் வந்து படிக்கிறேன். <br /><br />சிலப்பதிகார நிகழ்வுகளைக் கண்முன்னே கொண்டு வந்து <br />மற்றும் ஒரு முறை நிகழ்ச் செய்து இருக்கிறீர்கள். <br /><br />மோகன்ஜி எங்கே காணோம் என்று நினைக்கின்ற வேளையில் அவர் கருத்துக்கள் முன் நின்று முறுவலிக்கச் செய்கின்றன.<br /><br />சிலப்பதிகாரம் முடிவுற்ற வேளையில் அடுத்த காவியத்தைத் துவங்குவீர்கள் என்று எதிர்பார்த்தால், <br /><br />குடு குடுப்பைக்காரன் வாசலில் வந்து நிற்கிறான். <br /><br /><br />சுப்பு தாத்தா.<br />www.subbuthatha72.blogspot.comnsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-69034293738253265742016-09-03T16:01:47.614-04:002016-09-03T16:01:47.614-04:00"கபீரும் நானும் " காண அழைக்கிறேன்"கபீரும் நானும் " காண அழைக்கிறேன் சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-83556755769942590222016-09-03T16:00:48.226-04:002016-09-03T16:00:48.226-04:00\\\\பாரதியின் உறுமலை இலக்கிய டி.என்.ஏ. செயலாகப் பா...\\\\பாரதியின் உறுமலை இலக்கிய டி.என்.ஏ. செயலாகப் பார்த்தது உச்சம்.<br /><br />காவிய கர்த்தாவின் கவிமனத்தை உணர்வது பாம்பறியும் பாம்பின கால் சமாச்சாரம். சிவகுமாரன் இது பற்றி ஏதும் சொல்லாமல் விட்டு விட்டாரே!/////<br /><br />மோகன் அண்ணா மிகச் சரியாய் சொன்னார். கண்ணகியின் கோபம் தலைமுறைகளை தாண்டி பாரதியிடம் வந்திருக்கிறது. <br />''' இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா <br />கதிரை வைத்த்திழந்தான் - அண்ணன்<br />கையை எரித்திடுவோம்.""<br /><br />''''மாதர் தம்மை இழிவு செய்யும் <br />மடமையைக் கொளுத்துவோம் '''<br /><br />"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை எரித்திடுவோம் ""<br /><br />அவனும் கண்ணகியின் நெருப்பைத் தான் தூக்கிக் கொண்டு திரிந்திருக்கிறான். சந்தேகமில்லை அது இலக்கிய DNA தான் <br /><br />சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-16677598519800115002016-09-02T05:17:49.616-04:002016-09-02T05:17:49.616-04:00"ஒரு அரசன் செய்த தவறுக்கு அவனது குடிமக்களைத் ..."ஒரு அரசன் செய்த தவறுக்கு அவனது குடிமக்களைத் தண்டிப்பது எந்த விதத்திலும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை"<br /><br />-- இது திரு. வே. நடன்சபாபதி அவர்கள் கருத்து இல்லையா?<br /><br />இதைத் தான் நீங்களும் வழி மொழிந்திருக்கிறீர்கள், அல்லவா?..<br /><br />சரி விஷ்யத்திர்கு வருவோம்.<br /><br />1. கண்ணகியின் மதுரை எரிப்பு ஒரு வர்லாற்று நிகழ்வு என்றால், அந்த நிகழ்வைக் காப்பியமாக்கிய இளங்கோவிடம், நிகழ்வு மாறான எந்த மாற்றத்தையும் எதிரிபார்ப்பது தவறு. ஒரு வர்லாற்று உண்மையை வைத்து காப்பியம் வடிக்கும் பொழுது வரலாற்று உண்மைகள் சிதைவு படாமல் பார்த்துக் கொள்வது எழுதுபவரின் பொறுப்பு.<br /><br />2. கண்ணகியின் மதுரை எரிப்பு இளங்கோவின் கற்பனை, அது வரலாற்று நிகழ்வு இல்லை என்றால், மதுரை எரியவே இல்லை. அது ககப்பியத்தில் வந்த கற்பனை. அப்படிப் பார்க்கும் பொழுது நிஜமாக எரியாத ஒன்றை எரிந்ததாகக் கொண்டு கருத்தே சொல்ல வேண்டாம். அது எழுதியவரின் கற்பனைச் சிறப்பை குறை சொல்வதாகும்.<br /><br />-- இதற்காகத் தான் மதுரை எரிந்ததற்கு வரலாற்று சான்று ஏதாவது உண்டா என்கிற தகவலுக்காகத் தேடி அலைகிறேன்.<br /><br />இப்பொழுது சொல்லுங்கள். இதையே தான் ஸ்ரீராமிற்கான (6) பதிலாகவும் சொன்னேன்.<br /><br />இதன் அடிப்படையில் சிந்தியுங்கள். தொடர் வருக்கைக்கு நன்றி, கீதாம்மா.<br /><br /><br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-77131568585113654852016-09-02T04:03:44.167-04:002016-09-02T04:03:44.167-04:00. //சரியான தரவுகள் இல்லாமல் நம் எண்ணப்படி வரலாற்று.... //சரியான தரவுகள் இல்லாமல் நம் எண்ணப்படி வரலாற்று நிகழ்வுகளை விமரிசிக்க்க் கூடாது. //<br /><br />என் எண்ணப்படி எதையும் சொல்லவும் இல்லை. மூன்று பெருநகரங்கள் அழிந்தது முறையே அனல், மணல், நீர்(கடல்) ஆகியவற்றால் என்பது வரை தெரியும். <br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-58392323692919660622016-09-02T03:57:25.572-04:002016-09-02T03:57:25.572-04:00தவறான கருத்து எனில் மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும்...தவறான கருத்து எனில் மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் இந்தத் தகவல்கள் வரலாற்றில் படித்ததாக நினைவில் இல்லை! :) ஆகவே என்னிடம் வரலாற்றுக் குறிப்பெல்லாம் கிடையாது. மதுரை அனலில் எரிக்கப்பட்டது கண்ணகியால் என்றாலும் அதுவே முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்டது என்பார்கள். கண்ணகியால் மதுரை அனல் மாரியில் எரிந்து சாம்பலாக வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று படித்த நினைவு இருக்கு! அது போலவே உறையூரில் மண்மாரி ஏற்பட்டதும் தெரிந்திருக்கலாம். காவிரிப் பூம்பட்டினம் கடல் பொங்கி அழிந்ததும் தெரிந்திருக்கும். இவை எல்லாவற்றிற்கும் சரித்திரக் குறிப்புகளும் கிடைக்கும். மூன்று நகரங்களும் அழிந்ததன் காரணம் குறித்தும் படித்திருக்கேன். ஆனால் எதில் என்று தான் நினைவில் இல்லை. ஆகவே என்னுடைய தகவல்களுக்கு ஆதாரம் இருக்கிறது என்றோ அவை தான் உண்மை என்றோ நான் எங்கும் சொல்லவும் இல்லை. தற்சமயம் இதில் முழுமனதையும் செலுத்தும்படியான சூழ்நிலையும் இல்லை! :) மற்றபடி நீங்கள் ஆராய்ந்து எழுதுங்கள். படித்துக் கருத்துச் சொல்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-40130421124567114332016-09-02T03:32:51.627-04:002016-09-02T03:32:51.627-04:00@ Geetha Samasivam
சிலப்பதிகார காலம் கி.பி. இரண்...@ Geetha Samasivam<br /><br />சிலப்பதிகார காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று அராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள்.<br /><br />விதி இருக்கட்டும். அந்த காலகட்டத்தில் நீங்கள் சொல்கிற அனல்மாரி ஏற்பட்டதா என்று சொல்லுங்கள். அது போதும். திரு. நடனசபாபதியிடம் இது பற்றிக் கேட்டிருக்கிறேன். <br />வரலாறு முக்கியம், இல்லையா?.. சரியான தரவுகள் இல்லாமல் நம் எண்ணப்படி வரலாற்று நிகழ்வுகளை விமரிசிக்க்க் கூடாது. <br /><br />ஏன் கேட்கிறேன் என்றால்--<br /><br />ஸ்ரீராமிற்கு (6) கொடுத்துள்ள் பின்னூட்டத்தின் படி அந்த நிகழ்வை ஆராயலாம். அப்படி ஆராயும் பொழுது உங்கள் கருத்து எவ்வளவு தவறானது என்பது தெரியும்.<br /><br />உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவேனும் அந்த வரலாற்றுத் தகவலை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.<br /><br />பின்னூட்டத்திற்கு நன்றி.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-23726313863438301362016-09-01T10:11:45.018-04:002016-09-01T10:11:45.018-04:00@ வே. நடனசபாபதி
சிலப்பதிகார மதுரை எரிப்புக்கு வர...@ வே. நடனசபாபதி<br /><br />சிலப்பதிகார மதுரை எரிப்புக்கு வரலாற்று ஆதாரம் ஏதாவது உண்டா என்று தெரியவில்லை.<br />தாங்களும் தேடிச் சொல்லுங்களேன்.<br /><br />அடிகளாரின் காப்பிய வரிகள் எந்த மாற்றமும் இல்லாமல் என் உரைநடையாகிறது. அவ்வளவு தான்.<br /><br />தங்கள் மீள் வருகைக்கு நன்றி, சார். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-43733447118135083212016-08-31T04:05:43.121-04:002016-08-31T04:05:43.121-04:00திரு நடனசபாபதியின் கருத்தே என் கருத்தும். ஆனால் மத...திரு நடனசபாபதியின் கருத்தே என் கருத்தும். ஆனால் மதுரை அனல்மாரியாலும், உறையூர் மண் மாரியாலும் காவேரிப்பூம்பட்டினம் நீர் மாரியாலும் அழிய வேண்டும் என்பது விதி! இது குறித்து முன் கூட்டியே சொல்லப்பட்டும் இருக்கிறது. விரிவாக எழுத நேரமில்லை; குறிப்புகள் கைவசம் இல்லை. :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-8219238842808994782016-08-30T17:27:19.630-04:002016-08-30T17:27:19.630-04:00பூவனத்தில் அழகிய தமிழிது
பதிவினையும் பின்னூட்டங்கள...பூவனத்தில் அழகிய தமிழிது<br />பதிவினையும் பின்னூட்டங்களையும்<br />படித்து ரசித்து மலைத்தேன்<br />ஆம் அத்தனையும் மலைத்தேன்<br />மீண்டும் ஒருமுறைப் படிக்கவேண்டும்<br />வாழ்த்துக்களுடன்.....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-76119209267672009452016-08-30T12:32:15.087-04:002016-08-30T12:32:15.087-04:00ஒரு அரசன் செய்த தவறுக்கு அவனது குடிமக்களைத் தண்டிப...ஒரு அரசன் செய்த தவறுக்கு அவனது குடிமக்களைத் தண்டிப்பது எந்த விதத்திலும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி தண்டிக்கும்போது எல்லோரையும் தண்டிக்காமல் அறவோர், பசுக்கள், பத்தினிப் பெண்டிர், முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கு மட்டும் விதி விலக்கு அளித்தது, ஒரு சலுகை போல் எனக்குத் தோன்றியதால் அவ்வாறு குறிப்பிட்டேன். மற்றபடி சம்பந்தமே இல்லாத பொதுமக்களைத் தண்டித்தது சரியல்ல என்பது என் கருத்து. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-23166811446322965732016-08-30T12:24:39.622-04:002016-08-30T12:24:39.622-04:00@ கீதா சாம்பசிவம்
ஊன்றிப் படித்து?...@ கீதா சாம்பசிவம்<br /><br />ஊன்றிப் படித்து?...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com