tag:blogger.com,1999:blog-7223516172590239990.post955453432900528596..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: அழகிய தமிழ் மொழி இது!...ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-64069351861982605252016-06-01T09:03:19.362-04:002016-06-01T09:03:19.362-04:00தங்கள் பதிவின் வாயிலாகவே சிலப்பதிகாரத்தின் பெயரிலி...தங்கள் பதிவின் வாயிலாகவே சிலப்பதிகாரத்தின் பெயரிலிருக்கும் சிறப்பு புரிகிறது. மணமகள் மணமகன் அறிமுகம் எவ்வளவு அழகாக உள்ளது. திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் என்று இயற்கையைப் போற்றும் வரிகள் நினைவுக்கு வருகின்றன. மேலும் சுவைக்க ஆவல் பெருகுகிறது. தொடர்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-90755354259170290062016-05-24T07:53:58.990-04:002016-05-24T07:53:58.990-04:00
பாயிரமும் பதிகமும் ஒன்றுதான் என்று இன்றுதான் அறிந...<br />பாயிரமும் பதிகமும் ஒன்றுதான் என்று இன்றுதான் அறிந்தேன். <br />சிலப்பதிகாரத்தின் சில பாடல்களை பள்ளி இறுதி வகுப்பிலும் புகுமுக வகுப்பிலும் படித்ததுண்டு. பின்னர் வேளாண் அறிவியல் படிக்கும்போது தமிழ் பாடம் இல்லாததால் தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து படிக்க இயலாமல் போய்விட்டது. தங்களின் தொடர் பதிவு திரும்பவும் என்னை தமிழ் மாணாக்கனாக ஆக்கி இருக்கிறது என்பது உண்மை. அதற்கு நன்றி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-22979529371297262382016-05-03T12:46:26.401-04:002016-05-03T12:46:26.401-04:00@ கீதா சாம்பசிவம்
பதிகம் என்றால் பத்து என்று பாடம...@ கீதா சாம்பசிவம்<br /><br />பதிகம் என்றால் பத்து என்று பாடமும் ஒன்று உண்டு. உதாரணமாக பதிற்றுப் பத்தும், ஐங்குறு நூலும் பத்து பத்து பாடல்களாகத் தொகுக்கப் பட்டவை. தேவாரப் பாடல்களும் இப்படி பத்தாகத் தொகுக்கப்பட்டவை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-27819504297844811542016-04-30T04:26:51.177-04:002016-04-30T04:26:51.177-04:00அருமையான ஆய்வு. சிலம்பின் சிறப்பை அழகாக எடுத்துச் ...அருமையான ஆய்வு. சிலம்பின் சிறப்பை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கீங்க! ஆனால் பதிகம் என்றால் பத்துப் பாட்டுகள் கொண்டது என்று படித்த நினைவு. பாயிரம் என்பது அந்தக் காப்பியத்தின் முன்னுரையாக அமையும் என்று கேள்வி. இரண்டும் ஒன்றே என்பதை இன்று தான் அறிந்தேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-83212414784930865792016-04-29T00:00:55.032-04:002016-04-29T00:00:55.032-04:00இப்போத் தான் பார்க்கிறேன். எப்படியோ தவற விட்டிருக்...இப்போத் தான் பார்க்கிறேன். எப்படியோ தவற விட்டிருக்கேன். மறுபடி வந்து படிச்சுட்டுக் கருத்துச் சொல்றேன். நன்றி சுட்டிக்கு! :) நான் பதிவிடுவது தாத்தாவின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் மட்டுமே. மாறாக நீங்க எப்போதும் நினைப்பது இன்னும் சிறப்பு. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-85556785888413580942016-04-26T15:48:55.710-04:002016-04-26T15:48:55.710-04:00ஜீவி சார்!
என் தாமதத்தை புரிந்து கொண்டதற்கும் அன்...ஜீவி சார்!<br /><br />என் தாமதத்தை புரிந்து கொண்டதற்கும் அன்பு வார்த்தைகளுக்கும் நன்றி!<br />அவசியம் தொடர்ந்து படிப்பேன். <br /><br />மிக இளமைப் பருவத்திலேயே தீவிரமான படிப்பும், ரசனையும் உருவான காரணத்தால் தானோ என்னவோ, மேலோட்டமான எழுத்தை தவிர்த்துவிட வேண்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் கொல்லையின் பழைய வைக்கோற்போரிலேயேதான் தலையைப் புதைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. என் ரசனைதெரிந்த நண்பர்கள் சுட்டும் புதிய எழுத்திருந்தால் வாசிக்கிறேன். <br /><br />சில நாட்களுக்குமுன் நாம் தொலைபேசியில் பேசிய நாளிலிருந்து, உங்கள் புத்தகத்தை வாசித்து என் விமரிசனமாக பதிவிட ஆவலாயிருக்கிறேன். ஏனெனில், நானும் இப்படி ஒரு எழுத்தாளர்வரிசை எழுத எண்ணியிருந்தேன். உங்கள் கைவண்ணத்தில் வரும்போது நானும் கூடவே எதற்கு என்று ஆசுவாசமாகவே தான் இருக்கிறது. வைகோ சார் உங்கள் புது நூல் பற்றி எழுதி வருவதை அறிவேன். இருந்தும், அதனால் நான் எழுதப்போகும் விமரிசனத்திற்கு முன்முடிவாய் கருத்து ஏதும் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டாம் என தான் அவர் பதிவை படிப்பதை தள்ளிப் போட்டிருக்கிறேன். <br /><br />மீண்டும் வருவேன் ஜி! <br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-66740949735820396002016-04-26T09:55:00.692-04:002016-04-26T09:55:00.692-04:00அன்புள்ள மோகன்ஜி,
நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான். ...அன்புள்ள மோகன்ஜி,<br /><br />நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான். அல்லாட்டங்களுக்கு இடையே தான் மனம் கொள்ளும் ப்ரீதிக்காக எழுத வேண்டியதாகி போய்விடுகிறது. ஒருவிதத்தில் சூழ்ந்திருக்கும் வாழ்க்கை அல்லாட்டங்களுக்கிடையே இது ஒன்றே ஆரோக்கியமாகவும் தென்படுகிறது. மனசுக்கு நெருக்கமான ஈடுபாடுகளில் விட்டமின் சக்திகள் புதைந்திருப்பதை உணர்கிறேன்.<br /><br />எதை எழுதினாலும் அது உங்கள் மன ஓட்டமாய் இருப்பது உங்களுக்கான பாக்யம். மனதை மறைத்து எதுவுமில்லை என்கிற இடத்தில் மறைப்பதற்கு எதுவுமே இல்லாமல் போய் பூரணமாய் சத்தியம் அங்கு சின்னக் குழந்தை போல அங்கே தவழ்கிறது.<br /><br />இந்தப் பகுதிக்குத் தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன். சம்பாஷணைகளில் கதையை நகர்த்தும் காலம் போய் இப்பொழுதெல்லாம் கதைசொல்லிகள் கதைசொல்லும் காலமாகி விட்டது. அந்த வித்தக வேலை இக்காலத்திற்கு சரிப்பட்டு வராததினால் (முடியாமையால்) இவர்களுகளுக்கான இந்த ஏற்பாடு. அதனால் எழுதுகிறவர்களின் மனநெகிழ்வுகளே படியாத உயிரற்ற சடலங்களாய் இன்றைய எழுத்தின் போக்கு போய்விட்டது.<br /><br />உயிர்ப்புள்ள தமிழை கோட்ப்பாட்டு இலக்கணமாய் தொல்காப்பியர் வகுத்திருக்கிறார். அந்த விதத்தில் இது தமிழுக்கான வழிமுறையும் அல்ல. இதை நிறுவுவதற்காக இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறேன். வருகை தநது தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.<br /><br />இந்தப் பகுதியைப் பார்த்திருப்பீகள் என்று நினைக்கிறேன். <br /><br />http://gopu1949.blogspot.in/2016/04/20.html<br /><br />அன்புடன்,<br />ஜீவிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-84466076199894868432016-04-25T13:58:22.451-04:002016-04-25T13:58:22.451-04:00அன்பின் ஜீவி சார்!
பல அல்லாட்டங்களுக்கிடையே உங்கள்...அன்பின் ஜீவி சார்!<br />பல அல்லாட்டங்களுக்கிடையே உங்கள் தளத்திற்கு வர தாமதம். சிலம்பைப் பற்றி எவ்வளவு பார்வைகளைப் படித்தாலும் அலுப்பதில்லை. கம்பராமாயணமும் சிலம்பும் பெரும் பொக்கிஷங்கள். தற்சமயம் கம்பனில் தோய்ந்துள்ளேன். மறுபடியும் முழுவாசிப்பு எனத் தொடங்கி எனக்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கிறேன். ஏதும் நான் எழுதினாலும், சாதாரணனாய் எனக்குமுன் நானே நிற்கும் தருணம்... கடல்முன் நிற்பதாயும் இருக்கிறது. சரியான பாடல்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். <br /><br />ஸ்ரீராமுக்கு நீங்கள் அளித்துள்ள பதில் அக்ஷரலக்ஷம் பெறும். இரண்டுமுறை படித்துவிட்டேன். அனுபவத்தின் அழகு மிளிர்கிறது. இதையே இன்னமும் கொஞ்சம் வளர்த்து ஒரு தனிப்பதிவாக வெளியிடுங்கள். தக்க கவனம் பெறும்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-3126714845167567492016-04-20T12:45:48.857-04:002016-04-20T12:45:48.857-04:00@ Dr. B. Jambulingam
என் தளத்திற்கு தங்கள் முதல்...@ Dr. B. Jambulingam<br /><br />என் தளத்திற்கு தங்கள் முதல் வருகைக்கு நன்றி, ஐயா. தொடர்ந்து வருகை தந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 'இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன்..' கதையாகிவிடக் கூடாது.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-61557853646881611112016-04-20T12:39:48.767-04:002016-04-20T12:39:48.767-04:00@ ஜிஎம்பீ
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்தி பற்...@ ஜிஎம்பீ<br /><br />நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்தி பற்றி எழுதும் போது கூட உங்களுக்கு நான் எழுதியதும் என் நினைவில் நின்றது. உங்களைப் பற்றிய எதையுமே நீங்கள் மறப்பதில்லை என்பதும் உங்கள் நினைவாற்றலுக்கு எடுத்துக் காட்டு. சரியான இடத்தில் சரியானதை நினைவு கூர்ந்தது அதைச் சொல்ல என்றுமே நீங்கள் தவறியதுமில்லை. இதெல்லாம் உங்கள் சிறப்புகள் என்று அறிவேன், ஜிஎம்பீ ஐயா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-84836879146983594212016-04-20T12:32:21.401-04:002016-04-20T12:32:21.401-04:00@ வை.கோ. (3)
தமிழ்த் தாத்தாவின் பணி எதிர்பார்ப்ப...@ வை.கோ. (3)<br /><br />தமிழ்த் தாத்தாவின் பணி எதிர்பார்ப்பு இல்லாதது. இயல்பான ஆர்வமும் ஈடுபாடும் அதனால் அவர் செயல்களில் கூடியிருந்தன. செல்லரித்துப் போயிருக்க வேண்டிய இலக்கியச் செல்வங்கள் அவரது அயராத முயற்சிகளால் நம் பார்வைக்காவது இன்று கிடைத்திருக்கின்றன. தாத்தா ஒரு பீனிக்ஸ் பறவை. எந்த சாம்பலிலும் உயிர்த்தெழுவார்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-60151351165495965362016-04-20T12:21:33.760-04:002016-04-20T12:21:33.760-04:00@ வை.கோ. (2)
அந்த மங்கலம் தொடர்கிறது, கோபு சார்....@ வை.கோ. (2)<br /><br />அந்த மங்கலம் தொடர்கிறது, கோபு சார்.<br /><br />ஆர்வத்துடன் வாசித்து வருவதற்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-15507988414655540532016-04-20T12:17:54.217-04:002016-04-20T12:17:54.217-04:00@ வை.கோ. (1)
இந்த மாதிரி அனுபவித்த ஆச்சரியங்கள் ...@ வை.கோ. (1)<br /><br />இந்த மாதிரி அனுபவித்த ஆச்சரியங்கள் தமிழ் இலக்கியங்களில் பல. தமிழை ஆராய்ச்சிப் படிப்புக்காக எடுத்துப் படிததுப் பட்டம் பெற்றவர்கள், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாராவது புது முயற்சி எதிலாவது ஈடுபட்டாலும் கூட அதில் கலந்து கொண்டு தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. எல்லாம் ஒரு கை ஓசையாகவே போய் விடுவது குறைகளைத் தெரிந்து கொள்வதற்கும் வழியில்லாது போய் விடுகிறது. நமக்கோ ஏகலைவன் கல்வி. நம்மால் முடிந்த வரை முயன்று பார்ப்போம் என்ற எண்ணத்தில் தான் எழுதி வருகிறேன். <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-32904778837837993082016-04-20T12:05:31.103-04:002016-04-20T12:05:31.103-04:00@ Ajay
தங்கள் பின்னூட்டமும் அருமை நண்பரே!@ Ajay<br /><br />தங்கள் பின்னூட்டமும் அருமை நண்பரே!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-36590505224599373252016-04-18T02:01:13.059-04:002016-04-18T02:01:13.059-04:00//இதை மற்றவர்களும் தொடரக் கூடும்.//
என் பதிவுக்கு...//இதை மற்றவர்களும் தொடரக் கூடும்.//<br /><br />என் பதிவுக்கு வந்து பின்னூட்டமும் இடுகிறவர்கள் ஏழெட்டு பேரே. அவர்களும் இந்த மாதிரி ஆடு தாண்டுகிற காரியங்களைத் தவிர்த்து நேரடியாக மெயின் மேட்டருக்கு வந்து விடுகிறார்கள். அதனால் தொடராததிலும் ஆச்சரியமில்லை.<br /><br />//இவ்வளவு தமிழ் என் உடம்புக்காவதில்லை!//<br /><br />"படைப்பாளி யாருடைய பார்வையிலிருந்து கதையைப் படைக்கிறார் என்பதைப் பொறுத்துதான் பெரும்பாலான வாசகர்கள் பார்வை அமைகிறது. பல வாசகர்கள் அதைத் தாண்டி வேறு விதமாக்கவும் யோசிக்கிறார்கள். அந்தச் செயலையும் சிலவேளை எழுத்தாளரே மறைமுகமாகத் தூண்டுகிறார். பெரும்பாலான சமயங்களில் படிக்கப்படும் அந்தப் படைப்பு வாசகனின் வாழ்வனுபவத்தோடு ஏதோ ஒரு வகையில் எங்கோ ஓரிடத்தில் ஒன்றுகிறது. எதையோ நினைவு படுத்துகிறது. அதை ஒட்டியும் வாசகனுக்கான பாதிப்பு நேர்கிறது."<br /> -- ஸ்ரீராம்<br /><br />வாசிப்பில் இவ்வளவு ஆழ்ந்த பார்வை உள்ளவர், ரொம்ப நாளைக்கு லைட் ரீடிங்கிலேயே தேங்கியிருக்க முடியாது. இருக்க முடியாது என்பதை விட இருக்கக் கூடாது என்பதும் காலத்தின் கட்டாயம். பழந்தமிழ் இலக்கிய கோட்பாடுகளின் இருபதாவது நூற்றாண்டு வளர்ச்சியாய் தமிழ் எழுத்துலகம் இருந்தது. ஆனால் இன்று தமிழில் எழுதும் பெயர் தெரிந்திருக்கும் பிரபல எழுத்தாளர்கள் பிறமொழிக் கோட்பாடுகளில் தற்கால தமிழ் இலக்கியத்தை அடக்கி அழகு பார்க்கிறார்கள். மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது தான். இருப்பினும் எந்த மொழியின் வளர்ச்சியும் அதன் ஆதிச்சிறப்புகளை விழுங்கி விடக்கூடாது<br />வெகுதிரள் மக்களின் வாசிப்பு அனுபவங்களிலிருந்து விலகியும் விட முடியாது.<br /><br />இந்த கோணாத்திலான சில பகிர்தல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்தத் தொடர் எழுத நேர்ந்தது. அதனால் தான் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆரம்பமாகவும் செய்தது.<br /><br />தமிழ் படித்த முனைவர்களே கண்டு கொள்ளாத, சிந்தித்தும் பார்க்காத விஷயம் இது.<br />ஜெயகாந்தன் காலத்திலேயே அவர்கள் தற்கால தமிழ் இலக்கியம் பற்றி சிந்திக்க தவறி விட்டார்கள். சங்க நூலகளைத் தாண்டி இன்றைய தமிழின் நிலை பற்றி அவர்களுக்கும் எந்த கருத்தும் இல்லாதது மாதிரி ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. <br /><br />இதையெல்லாம் அலசத் தான் இந்தத் தொடர். தொடர்ந்து வாருங்கள். படிக்க படிக்க மனதுக்குப் பிடிக்கும். மனதுக்குப் பிடித்தால் தன்னாலே உடம்புக்கும் ஆகும். :))<br /><br />கருத்து பகிர்தலுக்கு நன்றி, ஸ்ரீராம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-51837830510469748402016-04-16T09:21:18.245-04:002016-04-16T09:21:18.245-04:00இப்பொழுதான் தங்களது தளத்தினைக் காணும் வாய்ப்பு கிட...இப்பொழுதான் தங்களது தளத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல பதிவுகளைக் கண்டேன். இப்பதிவு மூலமாக பாயிரமும் பதிகமும் ஒன்றுதான் என்பதை தற்போதுதான் நான் அறிந்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-65415710641968045712016-04-14T11:16:32.621-04:002016-04-14T11:16:32.621-04:00//'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த.....&...//'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த.....' என்று ஆரம்பிக்கும் பதிகம், 'இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு என்' என்று முடியும். பதிகத்தில் மொத்தம் 90 வரிகள். இந்தத் தொண்ணூறு வரிகளின் இடையில் எங்கேயும் முற்றுப்புள்ளியே கிடையாது. தொண்ணூறு மொத்த வரிகளும் ஒரே வரியில் அடங்கிய மாதிரி --ஆரம்பம் கொண்ட பதிகம் அதன் கடைசி வரியில் தான் முற்றுப்புள்ளி கொண்டு முற்றுப் பெறுகிறது./ இதே வரிகளை என்னுடைய ஒரே வாக்கிய சாதாரணன் ராமாயணம் பதிவுக்குப் பின்னூட்டமாக எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-85380379201374903362016-04-14T04:59:40.159-04:002016-04-14T04:59:40.159-04:00//'சிலப்பதிகாரம்' என்பது தமிழுக்குக் கிடைத...//'சிலப்பதிகாரம்' என்பது தமிழுக்குக் கிடைத்த அற்புத காவியம். சிலம்பை நினைக்கும் பொழுதெல்லாம் தமிழ்த் தாத்தா உ.வே,சாமிநாத ஐயர் நினைவும் கூடவே வருகிறது. பண்டையத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றின் ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடிச் சேகரித்தது மட்டுமின்றி பெரும் ஆராய்ச்சி செயலாய் அவற்றைப் பகுத்து, பாட பேதம் கண்டு, தொகுத்து, பதிப்பித்து... இன்று கையடக்கப் புத்தகங்களாய் தமிழ் இலக்கியங்கள் நம் கையில் தவழ்வதற்கு ஆரம்ப முயற்சிகளை எடுத்துக் கொண்ட அந்தப் பெரியவரை மறக்கவே முடியாது. தமிழோடு கூடவே வாழும் பெருந்தகை அவர்//<br /><br />தமிழ் வருஷப்பிறப்பன்று தமிழ்த்தாத்தா அவர்களை நினைவு கூர்ந்து சொல்லியிருப்பது மிகப்பொருத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. <br /><br />இனிய பகிர்வுக்கு நன்றிகள், சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-34485468313986541542016-04-14T04:59:02.943-04:002016-04-14T04:59:02.943-04:00சிந்தியல் வெண்பாவில் ஆரம்பிக்கும் சிலப்பதிகாரக் கா...சிந்தியல் வெண்பாவில் ஆரம்பிக்கும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஆரம்பத்தை, கல்யாணக் காட்சியை விவரிப்பதற்கு வாகாக கொச்சகக் கலிப்பாவிற்கு மாற்றுகிறார் புலவர் பெருமான். அந்தத் திருமணக் காட்சியின் தொடக்க விவரிப்பாக இன்னார் இன்னார் என்று மணமகளையும், மணமகனையும் வெகு அழகாக அறிமுகப்படுத்துகிறார். கவனத்தில் கொள்ளுங்கள்: மணமகள் அறிமுகத்தை அடுத்துத் தான் மணமகன் அறிமுகம்.//<br /><br />மங்களகரமான கல்யாணச் செய்திகளை மிக இனிமையாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். படிக்கப் பரமானந்தமாக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-8336046589476491652016-04-14T04:56:44.897-04:002016-04-14T04:56:44.897-04:00//'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த.....&...//'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த.....' என்று ஆரம்பிக்கும் பதிகம், ’இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு என்' என்று முடியும். பதிகத்தில் மொத்தம் 90 வரிகள். இந்தத் தொண்ணூறு வரிகளின் இடையில் எங்கேயும் முற்றுப்புள்ளியே கிடையாது. தொண்ணூறு மொத்த வரிகளும் ஒரே வரியில் அடங்கிய மாதிரி --ஆரம்பம் கொண்ட பதிகம் அதன் கடைசி வரியில் தான் முற்றுப்புள்ளி கொண்டு முற்றுப் பெறுகிறது. இந்த மாதிரியான புதுமையான ஒரு முயற்சியை உலகத்தில் எந்த இலக்கியமும் கொண்டிருக்கவில்லை.//<br /><br />மிகவும் ஆச்சர்யமாக உள்ளது !!!!!!<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-30167944656530178982016-04-13T13:30:08.082-04:002016-04-13T13:30:08.082-04:00அழகிய தமிழ் மொழி இது!...
தொடர் பதிவு அருமை நண்பர...அழகிய தமிழ் மொழி இது!...<br /><br /><br />தொடர் பதிவு அருமை நண்பரே....<br />Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-88277912023628557172016-04-13T08:05:20.360-04:002016-04-13T08:05:20.360-04:00அந்தக் கடைசி வரி...பின்னூட்டத்துக்கான வாய்ப்பு!
இ...அந்தக் கடைசி வரி...பின்னூட்டத்துக்கான வாய்ப்பு!<br /><br />இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இதை மற்றவர்களும் தொடரக் கூடும். பின்னூட்டங்கள் பற்றிய உங்கள் பதிவு நினைவுக்கு வருகிறது.சில சமயங்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது! ஆமாம், பதிவு பற்றி என்ன சொல்லப் போகிறேன்? இவ்வளவு தமிழ் என் உடம்புக்காவதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com