மின் நூல்

Thursday, October 10, 2019

மனம் உயிர் உடல்

12.   தெரிந்த  தெய்வங்கள்

போன ஜென்மம், அடுத்த ஜென்மம் என்கிற கருதுகோள்களையெல்லாம் தற்காலிகமாக மறப்போம்..  உபநிஷத்துக்களில் சொல்லப்படுகிற ஜென்ம தொடர்ச்சிகள் வேறே.

பழைய பொக்கிஷங்கள் பலவற்றில் அவர்கள் அறிவுபூர்வமாகச் சொல்லியிருப்பதையெல்லாம் நம் வசதிக்கேற்ப அல்லது  காலப்போக்கின் புரிதல்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவு தான்.

போன ஜென்மத்திற்கெல்லாம் போவானேன்?.. நிகழ் ஜென்மத்து உறவுகளை மனதில் கொள்வோம்.  தாத்தா, அப்பா, நான் -- என்கிறது நிறையவே ஏற்றுக் கொள்கிற மாதிரியான பிறவித் தொடர்ச்சி..  கொஞ்சம் கொஞ்சம் பாட்டி, அம்மா என்றும் சேர்ந்து வருவது உண்டு.  வம்சாவளித் தொடர்ச்சி தொடர்வதற்கு உடற்கூறு சாத்திரத்திலும் ஆதாரங்கள் உண்டு.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள்.  இந்த  வரி உளி  கொண்டு  செதுக்கியது மாதிரி உங்கள்  மனசில் மிக மரியாதையுடன் படிய வேண்டும்.  நிதர்சனமாக நம்முள் உறையும்  தாயையும், தந்தையையும் இறைவனாகக் கொள்ள வேண்டும்.  இதில் யாருக்காவது சங்கடம் இருந்தால் அது பற்றி தனக்குள்ளேயே தர்க்கித்து ஒரு முடிவுக்கு வருவதில் ஆட்சேபணை இல்லை..

நாம் இப்பூவுலகில் உயிர்  சுமந்து  உலவுவதற்குக்  காரணமான அப்பா--அம்மாவை நினைவில் கொள்வோம். தந்தை-- தாய் என்று சொல்வதை விட   -  அப்பா - அம்மா நெருக்கமான  வார்த்தை.  அதனால் அப்பா-- அம்மா என்றே   எப்பொழுதெல்லாம் தியானத்தைத்  தொடங்குகிறோமோ அப்பொழுதெல்லாம்   அவர்களின் ஆசியே நம் தியானத்தைத்ய் தொடங்கி வைக்கட்டும். 

கூட இருக்கும் பொழுது சகஜமாக இருக்கும் நெருக்கம் அவர்கள் இல்லாத பொழுது தான் உணர்வின் தகிப்பில்  இன்னும் கூடுகிறது..   அப்பா - அம்மா  இரண்டு பேருமே  இப்போ இல்லை என்றால்  தியானத்திற்கு ரொம்பவும் செளகரியம்.  தத்ரூபமாக அவர்கள் உருவத்தை, முகத்தை உள்ளார்ந்து ஓர்ந்து நினைவில் நிலை நிறுத்துங்கள்.  நிலையாக ஒரு மெழுகுவர்த்தி உங்கள் முன் ஒளியை உதிர்ப்பதை போல அப்பா - அம்மா  தனித்தனியே  உங்கள் எண்ணத்தில் ஒளி ஊட்டட்டும்.

தெரியாத தெய்வங்களை விட தெரிந்த தெய்வங்கள் அவர்கள்.  அதனால்  தியானத்தைத் தொடங்குவதற்கு முன்  ஒரு தெய்வத்தை வேண்டிக் கொள்கிற  நிலையில்  அம்மா - அப்பா அருள் வேண்டி தெய்வத்தின் நிலையில் அவர்களை நினைவில் ஆழந்து வரவழைத்துக் கொள்ளுங்கள்.  அவர்கள் உங்களுடன் உரையாடுகிற பாவனையில் நினைவுகள் இருந்தால் இன்னும் செளகரியம்.

நம்மிடையே  தாய் - தந்தையரை விரோதித்துக் கொண்டவர்களும் இருப்பார்கள்.   ஏதாவது காரணங்களினால் அவர்களை வெறுத்துப் பிரிந்து வந்தவர்களும் இருப்பார்கள்.  அவர்களால் எடுத்தவுடன் பரிவான உணர்வுடன் நினைவில் கூட தாய்- தந்தையருடன் நெருங்கமுடியாத உணர்வு மிகுந்திருக்கும்.  அப்படிப் பட்டவர்கள்  மனசார தங்கள் செயல்களுக்கு வருந்தி பெற்றோர்களிடம் ஆத்ம சமர்ப்பணமாக மன்னிப்பை உருக்கமாகக் கோரி அவர்கள் தம்மை மன்னித்து விட்டார்கள் என்ற திருப்தியுடன்  தாய்-தந்தையரை நினைவில் நிறுத்தி வேண்டினால்  அற்புதம் நிகழும்.  இத்தனை நாள் பெற்றோரிடம் விடுப்பட்டுப் போயிருந்த அந்த நெருக்கம்  அவர்கள் அருட் பார்வையோடு கைகூடி வருவதை நிதர்சனமாகவே உணர்வார்கள்.

வேறென்னன்ன என்பதனைத் தொடர்ந்து  பார்ப்போம்.

தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?..

அமெரிக்காவில் பிலடெல்பியா நகரில் ஜேக்கப் க்ரெளன் என்னும் ரேடியாலாஜிஸ்ட் நமது உடம்பில் உள்ள மின்னியல் கதிர் அலைகள் தாம் இந்த ஆவி சமாச்சாரத்திற்கு அடிப்படையோ என்றும் ஆராய்ந்திருக்கிறார். 

ஒரு மனிதனை நாற்காலி ஒன்றில் கொஞ்ச நேரத்திற்கு உட்கார வைத்தார்கள்.  பிறகு அவனை அனுப்பி விட்டு 'இன்ஃப்ரா ரெட்' போட்டோ கிராஃபியில் அவன் உட்கார்ந்திருந்த இடத்தைப் படம் பிடித்துப் பார்த்த பொழுது  அவர்களுக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது!..

படத்தில் அந்த மனிதனின் முழு உருவமும்  புகை மூட்டம் போல வெள்ளையாய் விழுந்திருந்தது..  அந்த மனிதன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த  தருணத்தில் அவன் உடம்பிலிருந்து வெளியேறிய  மின் கதிர் அலைகள் நாற்காலியில் படிந்து தேங்கி விட்டது  தெரிந்தது.

கொஞ்ச நேர உட்காருதலுக்கே இப்படி என்றால் வாழ்க்கையின் பெரும் பகுதி  நாம் வசித்து உண்டு  உறங்கி உலாவும்  நமது வீட்டில்?..  

மனிதர்கள் மரித்த பின்பும் அவர்கள் வாழ்ந்த பொழுது அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட மின் கதிர் அலைகள் தம் வீச்சின் வீரியம் குறையாமல் அவர்கள் வாழ்ந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் இருக்கும் என்று சொல்கிறார்கள். 

திடகாத்திரமாக உடல் நலத்தோடு  உலவியவர்களின் மின் கதிர் அலைகள்  பல ஆண்டுகள் ஆகியும் அழிவதில்லை  என்றும்  விஷயம் தெரிந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்தும் காட்டியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்துரு தான் பேய் உலாவல்களுக்கு அடிப்படை என்று வாதிடுபவர்கள், அதனால் தான் தங்களை அணைத்துக் கொள்ளும்  இருட்டின் மேல் பேய்களுக்கு தனிப்பட்ட  மோகம் என்று அடித்துச் சொல்கிறார்கள்..


(வளரும்)

Related Posts with Thumbnails