19. குடும்ப தியானம்
சென்ற பகுதியில் குப்பண்ணாவின் குடும்ப சூழ்நிலையையும், ராஜாராமனின் குடும்ப நிலையையும் குறிப்பிட்டுச் சொல்லியமைக்குக் காரணம் ஒன்றுக்கொன்று எதிரான இருவேறு குடும்பச் சூழல்களை எடுத்துக்காட்டத் தான். ஒன்றில் புருஷன் செயலில் மனைவி அதிருப்தி கொள்கிறார் என்றால் இன்னொன்றில் கணவர் விஷயத்தில் அவரது மனைவி தலையிடுவதே இல்லை என்றிருக்கிறது.
இந்த இரண்டு நிலைகள் மட்டுமல்ல. இந்த மாதிரி வகைக்கொன்றாக நிறைய நிலைகள். சில அதீத தீவிரம் கொண்டவை. சில மட்டுப்படுத்த முடிந்தவை. பல சரிப்படுத்தவே முடியாத நிலைகள்.
குடும்பம் என்றாலே எந்த ஒருவரின் செயல்பாடும் இன்னொருவரின் மனம் சம்பந்தப்பட்ட சந்துஷ்டிக்கோ, சீர்குலைவிற்கோ காரணமாக இருக்கிறது. அதனால் மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு புரிந்துணர்வோடு நம் ஆளுகைக்குக் கொண்டு வர தனி நபர் முயற்சி எடுப்பதைத் தாண்டி அவர்
குடும்பமே கவுன்ஸிலிங் என்று சொல்வார்களே, அந்த மாதிரி இந்த தியானத்தில் புரிதலோடு ஈடுபட்டால் தான் அது அந்த குடும்ப உறுப்பினர் அனைவரின் நலனுக்கும் பயனுடையதாக இருக்கும்.
'தியானம் என்று ஒருவர் உட்காருவது கடினம். உட்கார்ந்த உடனேயே, சமையலறையில் செய்யும் பொருட்களின் வாசனை, குழந்தை ஏதோ அம்மாவிடம் சண்டை போடுவது, பாத்திரங்கள் கீழே விழும் சப்தம்... இது மாதிரி ஏகப்பட்டது நடக்கும். அப்போ, இன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டிருப்பா, பருப்புசிலிக்கு இந்த வாசனை வராதே.. நேற்று மோர்க்குழம்புன்னுனா சொன்னா..இன்னைக்கு வெந்தயக் குழம்பு வாசனை வருதே... குளித்துவிட்டு ஹீட்டரை ஆஃப் பண்ணினாளா... என்றெல்லாம் எண்ணங்கள் அலைபாயும்.'
-- என்று இந்தத் தொடர் பதிவுக்கான பின்னூட்டமொன்றில் நெல்லைத் தமிழன் சொல்லியிருந்தார். எந்த தியானத்திற்கும் இந்த மாதிரி அலைபாய்கிற மனம்
தியானத்தில் ஆழாது தான். அந்தச் சுற்றுப்புற சூழ்நிலை நம்மை பாதிக்காத அளவுக்கு நாம் நம்மை பக்குவப்படுத்திக் கொள்வது தான் எந்த தியானத்தின் வெற்றியையும் தீர்மானிக்கும். சொல்லப் போனால் சுற்றுச்சூழலை மறக்க முயன்று வெற்றி காண்பது தான் எந்த தியானத்தினதும் முதற் கட்ட பரிசோதனை. அதில் வெற்றி காண்பதைப் பொறுத்து இருக்கிறது நீங்கள் அந்தக் கட்டத்திற்கு அடுத்து தியானத்தைத் தொடர்வதற்கான நகர்தல்.
நெல்லை சொன்ன மாதிரியான சாதாரண விஷயங்களே இந்த அளவுக்கு தியானத்திற்கு குறுக்கே வரும் என்றால், நிம்மதியற்ற அல்லது யாரும் யாரின் மேலும் அக்கறை கொள்ளாத குடும்ப சூழ்நிலை தனி மனிதரை எவ்வளவு பாடுபடுத்தும், நினைத்துப் பாருங்கள்..
குப்பண்ணாவின் பரோபகாரமும் அவரின் அந்த உயர்ந்த நிலையும் அவர் மனைவியால் எள்ளி நகையாடப்படுகிறது.. இளிச்சவாயன் என்று பட்டம் சூட்டப்படுகிறார். இந்த மாதிரியான குடும்பச் சூழ்நிலைகள் அமைதியான தியான முறைக்கு நிச்சயம் ஒத்து வராது. ராஜராமனின் நாத்திகப் போக்கும் அவர் மனைவியின் ஆத்திகமும் ஒரே குடும்பத்தில் இரு வேறு துருவ சிந்தனைப் போக்கிற்கான முரண்பாடுகள்.
இப்படியான போக்குகளைக் கூட்டிக் கழித்து ஒருநிலைப்படுத்த குடும்ப உறுப்பினர் அத்தனை பேரும் இந்த தியானத்தில் தங்களை ஆட்படுத்திக் கொள்வதே சரியாக தீர்வாக அமையும்.
இதே நிலை தான் ஒட்டு மொத்த சமூக சிந்தனைப் போக்கின் ஒன்றிணைப்பும். சோவியத் யூனியன் சோஷலிச சிந்தனைகளுடனான சமூக அமைப்பை தன் தேசத்தில் கட்டமைக்க முயற்சிகள் மேற்கொண்ட பொழுது அந்த அணியில் மற்ற நாடுகளைக் கொண்டு வரவும் மிகுந்த பிரயத்தனங்களை மேற்கொண்டன. அதில் வெகுவாக பயனும் பலனும் பெற்ற நாடுகளில் நம் பாரதமும் ஒன்று. இது எதற்காக என்றால் உலக அரங்கில் எந்த தனித்த போக்கும் வளமும், வலிமையும் பெறாது என்ற நிதர்சன நோக்கிலேயே தங்கள் அணியில் மற்ற நாடுகளையும் திரளச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டன.
அடுத்து மொழி. இறைவனை மனக்கண்ணில் கொண்டு வந்து பூஜிக்க வேண்டியிருக்கும். இறை சக்தியோடு மனசார ஒன்றரக் கலக்க வேண்டியிருக்கும். இசையோடு பாடல் பாடி வணங்க வேண்டியிருக்கும். மனசார என்று வந்தாலே அவரவர்க்கு அவரவர் தாய் மொழி தான் துணை நிற்கும் என்பது எழுதப்படாத விதி.
தானே தன் போக்கில் மனம் நினைக்கும் வாறெல்லாம் தன் மொழியில் பேசிக் களிப்பது இறைவனுக்கும் தியானிப்பவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்கும். இடைவெளியைக் குறைக்கும். எந்தக் கட்டுப்பாடும் இன்றி இஷ்டம் போல எது வேணாலும் பேசிக் களிக்கலாம். பாடலாம். ஆடலாம். ஆனந்தக் கூத்தாடலாம்.
இறை பக்தி இல்லாதோரும் உடல் ஆரோக்கியம் போன்ற ஏதாவது குறிக்கோளை முன் வைத்து இந்த தியானத்தின் ஆரம்பப் படிக்கட்டில் மனசார கால் வைத்தால் போதும். ஆரம்ப முயற்சி அடுத்த நிலைக்கு காந்தம் போல இழுத்துக் கொண்டு போகும். மனம், தீப ஜோதியை ஏந்திய மாதிரி எந்த தயக்கத்தையும் தொய்வையும் துடைத்தெறிந்து நடக்கும் நிகழ்வுகளில் வெளிச்சத்தை ஏற்றும்.
(வளரும்)
சென்ற பகுதியில் குப்பண்ணாவின் குடும்ப சூழ்நிலையையும், ராஜாராமனின் குடும்ப நிலையையும் குறிப்பிட்டுச் சொல்லியமைக்குக் காரணம் ஒன்றுக்கொன்று எதிரான இருவேறு குடும்பச் சூழல்களை எடுத்துக்காட்டத் தான். ஒன்றில் புருஷன் செயலில் மனைவி அதிருப்தி கொள்கிறார் என்றால் இன்னொன்றில் கணவர் விஷயத்தில் அவரது மனைவி தலையிடுவதே இல்லை என்றிருக்கிறது.
இந்த இரண்டு நிலைகள் மட்டுமல்ல. இந்த மாதிரி வகைக்கொன்றாக நிறைய நிலைகள். சில அதீத தீவிரம் கொண்டவை. சில மட்டுப்படுத்த முடிந்தவை. பல சரிப்படுத்தவே முடியாத நிலைகள்.
குடும்பம் என்றாலே எந்த ஒருவரின் செயல்பாடும் இன்னொருவரின் மனம் சம்பந்தப்பட்ட சந்துஷ்டிக்கோ, சீர்குலைவிற்கோ காரணமாக இருக்கிறது. அதனால் மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு புரிந்துணர்வோடு நம் ஆளுகைக்குக் கொண்டு வர தனி நபர் முயற்சி எடுப்பதைத் தாண்டி அவர்
குடும்பமே கவுன்ஸிலிங் என்று சொல்வார்களே, அந்த மாதிரி இந்த தியானத்தில் புரிதலோடு ஈடுபட்டால் தான் அது அந்த குடும்ப உறுப்பினர் அனைவரின் நலனுக்கும் பயனுடையதாக இருக்கும்.
'தியானம் என்று ஒருவர் உட்காருவது கடினம். உட்கார்ந்த உடனேயே, சமையலறையில் செய்யும் பொருட்களின் வாசனை, குழந்தை ஏதோ அம்மாவிடம் சண்டை போடுவது, பாத்திரங்கள் கீழே விழும் சப்தம்... இது மாதிரி ஏகப்பட்டது நடக்கும். அப்போ, இன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டிருப்பா, பருப்புசிலிக்கு இந்த வாசனை வராதே.. நேற்று மோர்க்குழம்புன்னுனா சொன்னா..இன்னைக்கு வெந்தயக் குழம்பு வாசனை வருதே... குளித்துவிட்டு ஹீட்டரை ஆஃப் பண்ணினாளா... என்றெல்லாம் எண்ணங்கள் அலைபாயும்.'
-- என்று இந்தத் தொடர் பதிவுக்கான பின்னூட்டமொன்றில் நெல்லைத் தமிழன் சொல்லியிருந்தார். எந்த தியானத்திற்கும் இந்த மாதிரி அலைபாய்கிற மனம்
தியானத்தில் ஆழாது தான். அந்தச் சுற்றுப்புற சூழ்நிலை நம்மை பாதிக்காத அளவுக்கு நாம் நம்மை பக்குவப்படுத்திக் கொள்வது தான் எந்த தியானத்தின் வெற்றியையும் தீர்மானிக்கும். சொல்லப் போனால் சுற்றுச்சூழலை மறக்க முயன்று வெற்றி காண்பது தான் எந்த தியானத்தினதும் முதற் கட்ட பரிசோதனை. அதில் வெற்றி காண்பதைப் பொறுத்து இருக்கிறது நீங்கள் அந்தக் கட்டத்திற்கு அடுத்து தியானத்தைத் தொடர்வதற்கான நகர்தல்.
நெல்லை சொன்ன மாதிரியான சாதாரண விஷயங்களே இந்த அளவுக்கு தியானத்திற்கு குறுக்கே வரும் என்றால், நிம்மதியற்ற அல்லது யாரும் யாரின் மேலும் அக்கறை கொள்ளாத குடும்ப சூழ்நிலை தனி மனிதரை எவ்வளவு பாடுபடுத்தும், நினைத்துப் பாருங்கள்..
குப்பண்ணாவின் பரோபகாரமும் அவரின் அந்த உயர்ந்த நிலையும் அவர் மனைவியால் எள்ளி நகையாடப்படுகிறது.. இளிச்சவாயன் என்று பட்டம் சூட்டப்படுகிறார். இந்த மாதிரியான குடும்பச் சூழ்நிலைகள் அமைதியான தியான முறைக்கு நிச்சயம் ஒத்து வராது. ராஜராமனின் நாத்திகப் போக்கும் அவர் மனைவியின் ஆத்திகமும் ஒரே குடும்பத்தில் இரு வேறு துருவ சிந்தனைப் போக்கிற்கான முரண்பாடுகள்.
இப்படியான போக்குகளைக் கூட்டிக் கழித்து ஒருநிலைப்படுத்த குடும்ப உறுப்பினர் அத்தனை பேரும் இந்த தியானத்தில் தங்களை ஆட்படுத்திக் கொள்வதே சரியாக தீர்வாக அமையும்.
இதே நிலை தான் ஒட்டு மொத்த சமூக சிந்தனைப் போக்கின் ஒன்றிணைப்பும். சோவியத் யூனியன் சோஷலிச சிந்தனைகளுடனான சமூக அமைப்பை தன் தேசத்தில் கட்டமைக்க முயற்சிகள் மேற்கொண்ட பொழுது அந்த அணியில் மற்ற நாடுகளைக் கொண்டு வரவும் மிகுந்த பிரயத்தனங்களை மேற்கொண்டன. அதில் வெகுவாக பயனும் பலனும் பெற்ற நாடுகளில் நம் பாரதமும் ஒன்று. இது எதற்காக என்றால் உலக அரங்கில் எந்த தனித்த போக்கும் வளமும், வலிமையும் பெறாது என்ற நிதர்சன நோக்கிலேயே தங்கள் அணியில் மற்ற நாடுகளையும் திரளச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டன.
அடுத்து மொழி. இறைவனை மனக்கண்ணில் கொண்டு வந்து பூஜிக்க வேண்டியிருக்கும். இறை சக்தியோடு மனசார ஒன்றரக் கலக்க வேண்டியிருக்கும். இசையோடு பாடல் பாடி வணங்க வேண்டியிருக்கும். மனசார என்று வந்தாலே அவரவர்க்கு அவரவர் தாய் மொழி தான் துணை நிற்கும் என்பது எழுதப்படாத விதி.
தானே தன் போக்கில் மனம் நினைக்கும் வாறெல்லாம் தன் மொழியில் பேசிக் களிப்பது இறைவனுக்கும் தியானிப்பவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்கும். இடைவெளியைக் குறைக்கும். எந்தக் கட்டுப்பாடும் இன்றி இஷ்டம் போல எது வேணாலும் பேசிக் களிக்கலாம். பாடலாம். ஆடலாம். ஆனந்தக் கூத்தாடலாம்.
இறை பக்தி இல்லாதோரும் உடல் ஆரோக்கியம் போன்ற ஏதாவது குறிக்கோளை முன் வைத்து இந்த தியானத்தின் ஆரம்பப் படிக்கட்டில் மனசார கால் வைத்தால் போதும். ஆரம்ப முயற்சி அடுத்த நிலைக்கு காந்தம் போல இழுத்துக் கொண்டு போகும். மனம், தீப ஜோதியை ஏந்திய மாதிரி எந்த தயக்கத்தையும் தொய்வையும் துடைத்தெறிந்து நடக்கும் நிகழ்வுகளில் வெளிச்சத்தை ஏற்றும்.
(வளரும்)

