பகுதி--21
அவள் கண்ட கனவில் பாண்டிய
வேந்தனின் வெண்கொற்றககுடையும், செங்கோலும் சரிந்து கீழே விழுந்தன. அரண்மனை
வாயிலில் கண்டாமணி தன் நடுநா நடுங்க இடைவிடாது அசைந்து அசைந்து ஒலி
எழுப்பியது. கருந்திட்டென எழுந்த இருள்
பட்டப்பகலில் பகலவனை விழுங்கியது.
வான்வில் இரவில் தன் ஏழு வண்ணங்களுடன் ஜொலித்தது. நண்பகலில் எரிகொள்ளிகளாக விண்மீன்கள்
வானத்திலிருந்து விழுந்தன. ஒரேகனவில் பகல்
இரவு என்று அடுதடுத்த காட்சிகளைக் கண்டாள் கோப்பெருந்தேவி.
“கொற்கை வேந்தன் வாழி! தென்னம் பொருப்பின் தலைவ வாழி! செழியனே
வாழி! பாண்டிய அரசே வாழி! இது வரை பழிஎதுவும் படராத பஞ்சவ வாழி! வெட்டு வாயிலிருந்து பீறிட்டெழும் குருதி
நீங்காத பிடர்த் தலைப் பீடம் ஏறி வெற்றிவேல் ஏந்தியிருக்கும் கொற்றவையும்
அல்லள்! கன்னியர் எழுவருள் பிடாரியும்
அல்லள்! இறைவன் ஆடல் கண்டு அருளிய பத்திர காளியும் அல்லள்! செறிந்த காட்டுப் பிரதேசத்தை நேசிக்கும்
காளியும் அல்லள்! தாருகனின் விரிந்த மார்பைப் பிளந்த துர்க்கையும் அல்லள்! கருவு கொண்டவள் போலவும் கோபம் கொண்டவள் போலவும்
தோற்றம் தருகிறாள். ஒற்றைச் சிலம்பொன்றை
தன் கையில் தூக்கிப் பிடித்தவளாய் நிற்கிறாள்.. கணவனை இழந்த கைம்பெண்ணாய் அரண்மனை
வாசலில் நிற்கிறாள், அரசே!” என்று
நடுக்கத்துடன் அறிவித்தான்.
‘நீ யாரோ?’ என்று மன்னன் கேட்ட்து உசுப்பி விட்டது போலும்
அவளை. படபடவென்று பொறிகிறாள்: “தேரா
மன்னா! சொல்கிறேன், கேள்! தேவர்களும் வியக்க தன் தொடைச்சதை அறுத்து
தராசுத் தட்டிலிட்டு புறா ஒன்றின் துயரத்தைத் தீர்த்த மாமன்னன் சிபியின் நாட்டினள்
நான். அரண்மனை வாசலில் கட்டிய மணியின்
நடு நா நடுங்க, அந்த மணிக்கயிற்றை அசக்கிய பசுவின் கடைக்கண் வழி ஒழுகிய நீர் தன் நெஞ்சைச்
சுட, தவறு செய்த தன் அருமைப் புதல்வனைத்
தேர்க்காலில் இட்டு நீதியை நிலை நாட்டிய மனுநீதிச் சோழனின் புகார் என் ஊர். அவ்வூரில் சிறப்பு மிக்க இசை விளங்கு
பெருங்குடி வணிகன் மாசாத்துவானின் மகள் நான்.
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரத்த உன்
மாமதுரை நகருக்கு என் கணவனுடன் வந்தேன்.
என் கால் சிலம்பை விற்க வேண்டி
உன்னிடத்துக் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி நான். கண்ணகி என்பது என் பெயர்!” என்றாள்.
அப்படி அவள் எறிந்த பொழுது
நீல நிறமும், முறுக்கு கொண்ட நீள்சடையும், வெண் பற்களையும் கொண்டவனாய் தான் பற்றியதை எரிக்கும் அக்னி தேவன் அவள் முன்
தோன்றினான். தோன்றி, “போற்றுதலுக்குரிய
பத்தினி தெய்வமே! உனக்கு மிகவும் கொடுமை
இழைத்த அந்தாளிலே இந்நகரைச் சூழ்ந்து எரியூட்டவதான ஏவலை ஏற்கனவே
பெற்றுள்ளேன். ஆதலால் இந்நகரை
எரியூட்டுவது என் வேலையாயிற்று. அந்த எரியூட்டலில்
ஈங்கு யார் யார் பிழைப்பார்?” என்று கேட்ப, “அறவோர், பசுக்கள்,, பத்தினிப் பெண்டிர், முதியோர், குழந்தைகள் இவர்களை கைவிட்டுத் தீத்திறத்தார்
பக்கமே சேர்க!” என்று சினம் கொண்ட கண்ணகி ஏவ, நல்ல தேரையுடைய பாண்டிய வேந்தனின் கூடல் நகரை புகையுடன் கூடிய
தீப்பிழம்பு பற்றியது.
முதல் நாள் இரவு பாண்டிய
அரசி கோப்பெருந்தேவி நடுக்கும் கனவு ஒன்றைக் கண்டாள்.

கண்ட கனவை காலையிலும் மறக்க
முடியவில்லை. முதலில் தன் நெருங்கிய
தோழியிடத்தும் பின் அரசனிடத்தும் இந்த எதிர்மறை நிகழ்வுகள் கனவைச் சொன்னாள். அரிமா ஏந்திய அமளியில் அமர்ந்திருந்த அரசன் அவள்
சொல்வதைக் கேட்டு திகைத்தான். ஏதோ
நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல அவன் உணர்வு அவனை உந்தித் தள்ளியது.
அந்த சமயத்தில் தான் கண்ணகி
அரண்மனை வாயிற் புறத்தில் புயலெனச் சீறி நின்றாள். “வாயில் காப்போனே! வாயில் காப்போனே! அறிவு அற்றுப்போகிய அறநினைவு அழிந்து அரச
நீதியிலிருந்தும் நழுவியவனின் வாயில் காப்போனே!
ஒற்றைச் சிலம்பை ஏந்திய கையினளாய் கணவனை இழந்த ஒருத்தி அரண்மனை வாசலில்
நிற்கிறாள் என்று உன் அரசனிடம் அறிவிப்பாயாக, அறிவிப்பாயாக..” என்று ஓங்கி ஒலித்த உரத்த குரலில் சீறினாள்.
ஒன்றைச் சிலம்பேந்திய ஆவேச
கண்ணகியைப் பார்த்த மாத்திரத்தில் நடுங்கிப் போனான் வாயில் காப்போன். அவள் சொன்ன
விஷயத்தை அரசனிடம் சொல்ல அரண்மனை உள்ளே வேகமாக ஏகினான். அந்த நேரத்தில் தான் அரசனிடத்து அரசி தான் கண்ட
தீக்கனவைப் பற்றிச் சொல்லி முடித்திருந்தாள்.

“அப்படியா?.. அப்பெண்ணை
‘வருக’ என்று கூறி இங்கு அழைத்து வருக!”
என்று ஆணையிட்டான் மன்னவன்.
வீசியடிக்கும் காற்றென
உள்ளே புகுந்த கண்ணகியை, “நீர் தளும்பும் கண்களுடன் எம்முன் வந்தோய்! நீ யாரோ?”
என்று மன்னன் கேட்டான்.

“பெண்ணணங்கே! கள்வனைக் கொல்லல் கொடுங்கோல் இல்லை. அதுவே அரச நீதி” என்றான் பாண்டியன்.
“நல்லறம் கொள்ளாத கொற்கை வேந்தே! என் கால் பொற்சிலம்பு மாணிக்கங்களைப்
பரல்களாகக் கொண்டது, தெரியுமா?” என்றாள்
கோவலனின் மனைவி.
“தேன்மொழி சொன்னது
நன்மொழி.. களவு போன எம் சிலம்போ
முத்துக்களைப் பரல்களாகக் கொண்டது” என்று சொன்ன மன்னவன், ஏவலரை அழைத்து
“கோவலன் கவர்ந்த எம் சிலம்பைக் கொணர்க!” என்று பணித்தான்.
மன்னனிடத்திலிருந்த அந்த ஒற்றைச் சிலம்பு வந்தது. வந்த சிலம்பை கண்ணகி முன் வைத்தான்.
கண்ணகியின் ஜோடிச் சிலம்பில் ஒன்று மன்னனால் கண்ணகியின் முன் வைக்கப்பட்டிருந்தது. மற்றது கண்ணகியின் கையில்.
கண்ணகியின் ஜோடிச் சிலம்பில் ஒன்று மன்னனால் கண்ணகியின் முன் வைக்கப்பட்டிருந்தது. மற்றது கண்ணகியின் கையில்.
தன்னது மாணிக்கப் பரல்கள்
கொண்டது என்பதை நிலை நாட்ட வேண்டுமென்ற ஆவேசம் கண்ணகிக்கு. அதனால் சற்றும் தாமதிக்காது
தன் சிலம்பை பிளக்க வேண்டி வீசி எறிந்தாள்.
தரையில் மோதிச் சிதறிய அதனிடமிருந்து தெறித்த
மாணிக்கப் பரல் ஒன்று மாமன்னனின் வாயருகே தெறித்து கீழே விழுந்தது.
மாணிக்கப் பரல் ஒன்று மாமன்னனின் வாயருகே தெறித்து கீழே விழுந்தது.
பாண்டியன் நெடுஞ்செழியன்
திடுக்கிட்டுத் தடுமாறிப் போனான். தாழ்ந்த
குடையனனாய், தளர்ந்த செங்கோலனாய், “பொன்செய் கொல்லன் சொல் கேட்ட நானா
அரசன்?.. நானே கள்வன்..” என்று துடித்துப்
போனான். “மக்களை காக்கும் பாண்டிய குல
அரசுக்கு என்னால் தவறு நேர்ந்து விட்டதே!
இனியும் நான் பிழைத்திருக்கலாமா?.. இக்கணமே கெடுக என் ஆயுள்..” என்று மயங்கி விழுந்தான். தவறு செய்தோமே என்ற பிழை பொறுக்காக நெஞ்சு விழுந்த
கணமே தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது.
மன்னன் விழுந்ததும் அதிர்ச்சியில்
உறைந்து போனாள் பாண்டிய அரசி. முதல்
நாள் இரவு கண்ட கனவு அதற்குள் பலித்துப் போன ஊழ்வினைத் தாக்குதலில் அலமந்து போய்
அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து நழுவினாள். நழுவியவள் மாமன்னனின் காலடி பற்றித் தொழுதாள். கணவன் ஆவி துறந்தான் என்று உணர்ந்த அக்கணமே அவள்
உயிர் உடல் விட்டு நீங்கியது.
கண்ணகியோ தன்நிலை மறந்த
ஆவேச நிலையில் நிற்கிறாள். பாண்டிமா தேவி
உயிர் துறந்த நிலையைக் கூட அறியாதவளாய் சூளுரைக்கிறாள்: “கோவேந்தன் தேவியே! அநியாயமாய் கணவனைப் பறி கொடுத்த நான் எதையும்
உணர முடியாத நிலையில் உங்கள் முன் நிற்கிறேன்!
இருப்பினும் ஒன்று தெளிவாக எனக்குத் தெரிகிறது. முற்பகலில் ஒருவருக்கு கேடு செய்தவன் தன் கேட்டினை அன்றைப் பிற்பகலிலேயே காணுவான். வினையின் விளையாட்டு அந்தளவு
தீவிரமானது என்பதனை நீயும் உணர்வாயாக!...
“வன்னி மரமும்,
மடப்பள்ளியும் சான்று கூற இயலாத அஃறிணைப் பொருட்கள்! சான்றோர் அறிவர் இதனை;
இருப்பினும் அந்த வன்னி மரத்தையும், மடப்பள்ளியையும் தனக்குச் சான்று பகர சான்றோர்
முன் கொண்டு வந்து நிறுத்தினாள் அடர்ந்த
கூந்தலை உடைய பத்தினிப்பெண்
ஒருத்தி!
“பொன்னி நதிக்கரையில்
மணல்பாவை செய்து விளையாடினர் இரு மங்கையர்.
‘இப்பாவை உனக்கு கணவனாம்’ என்று ஒருத்தி இன்னொருத்திக்குச் சொல்லி விட,
வீடு திரும்பாது இரவு முச்சூடும் சீறியெழுந்த கடலலையால் அந்த மணல்பாவைக்கு அழிதல்
ஏதும் நேரிட்டு விடாதவாறு சுற்றிலும் ஆற்று மணல் கொணர்ந்துக் கொட்டி அங்கேயே அம்மணல்பாவையை தன் கணவணாக கருதிக் காத்து நின்றாள், வரி
பொருந்திய அகன்ற அல்குலைக் கொண்டிருந்த ஒரு பத்தினைப் பெண்!
“பெரும் புகழ் கொண்ட மன்னன்
கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தி. வஞ்சி
நகரத்துத் தலைவனான ஆட்டனத்தியைக் கணவனாகக் கொண்டவள். இருவரும் புனலாடச் சென்ற பொழுது காவிரிப்
பெருவெள்ளத்தில் ஆட்டனத்தி அடித்துச் செல்லப்பட்டான். ஆதிமந்தியோ பொன்னி நதிக் கரையோரம் எங்கும் அலைந்துத் தேடி கணவனைக் காணாது கதற்னாள். ‘மலையொத்த தோளைக் கொண்ட எம் பெருமானே, எங்கே
சென்றீர்?’ என்று கூவிக் கூவி சோர்ந்து போனாள். அவள் கற்பின் மாண்பை அறிந்த கடல் அன்னை
தன் அலைக்கரங்களால் ஆட்டனத்தியை ஏந்தி வந்து ஆதிமந்தி முன் நிறுத்தினாள். தொலைந்த
கணவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவனைத் தழுவிக்கொண்டு பொன்னாலான பூங்கொடி போலத் திரும்பி வந்தாள்,
பத்தினிப்பெண் ஆதிமந்தி.
“மணல் மிகுந்த கடற்கரைச்
சோலையிலே கல்லுருவாய் நின்று, வரும் மரங்கலங்கள் எல்லாம் நோக்கியிருந்து, பொருளீட்டச் சென்ற கணவனின் திரும்பும் வருகையை
எதிர்பார்த்து எதிர்பார்த்துக் காலமெல்லாம் காத்திருந்தாள் பத்தினிப் பெண்
ஒருத்தி! ஒருநாள் கணவன் வர, தன்
கல்லுருவம் நீங்கி நல்லுருவம் பெற்று அவனுடன் கூடிக் களித்தாள் அந்த கள்ளி
அழகி!
“கணவன் வேற்று நாட்டிற்கு சென்றிருக்குங்கால், மாற்றான் ஒருவன் தன்னைத் தொடர்ந்து காமுற்று நோக்குவதை உணர்ந்து நிறைமதியை ஒத்த தன் அழகிய முகத்தை தன் கற்புத் திறத்தால் குரங்கு முகம் ஆக்கிக் கொண்டாள் ஒருத்தி. வேற்று நாட்டுக்குச் சென்ற கணவன் திரும்பி வரவும், தன் குரங்கு முகத்தைப் போக்கிக் கொண்டு இயல்பு முகம் கொண்டாள், அந்த பூம்பாவை..
“கணவன் வேற்று நாட்டிற்கு சென்றிருக்குங்கால், மாற்றான் ஒருவன் தன்னைத் தொடர்ந்து காமுற்று நோக்குவதை உணர்ந்து நிறைமதியை ஒத்த தன் அழகிய முகத்தை தன் கற்புத் திறத்தால் குரங்கு முகம் ஆக்கிக் கொண்டாள் ஒருத்தி. வேற்று நாட்டுக்குச் சென்ற கணவன் திரும்பி வரவும், தன் குரங்கு முகத்தைப் போக்கிக் கொண்டு இயல்பு முகம் கொண்டாள், அந்த பூம்பாவை..
--- “இத்தகைய நுண்மனம் படைத்த கற்புடை மகளிர்
பிறப்பெடுத்த பூம்புகார் நகரில் பிறந்தவள் நான்.
அந்த நகரில் பிறந்த யானும் ஒரு பத்தினியே யாமாகில், ஒருக்காலும் விட
மாட்டேன்! அரசனோடு சேர்த்து இம்மாமதுரை
நகரையும் அழிப்பேன்! என் சினம் தணியாச்
செயல்களை நீ இப்போதே பார்பாயாக!” என்று
சூளுரைத்த கண்ணகி பொங்கிப் புதுப்புனல்
போலவான வேக சீற்றத்துடன் பாண்டியனின் அரண்மனை விட்டு வெளியேறினாள்.
“ஓ! நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும், வானக்
கடவுளரும், மாதவம் செய்தோரும் கேட்டுக்
கொள்ளுங்கள்! நான் நேசித்த என் கணவனைக்
கொலை செய்த மன்னன் பாலும், அவன் ஆட்சி செய்த இந்த மண்ணின் பாலும் சீற்றம்
கொண்டேனே தவிர வேறேதும் குற்றம் செய்திலேன்..” என்று மக்களுக்குத்
தெளிவித்து, தானும் தெளிந்து மாமதுரை நகரை
மூன்று முறை வலம் வந்தாள். தேன் நிறைந்த
மணமுடைய தெருவில் நின்று, தன் இடப்பாகக்
கொங்கையைத் திருகி எடுத்துச் சுழற்றி விட்டெறிந்தாள்!

(தொடரும்)
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.