
நீயே எல்லாம் அல்லவோ--என்
நெஞ்சில் இசையின் நிலை நீயல்லவோ?--தாயே
(நீயே எல்லாம்)
தொடுப்புகூத்தனூரில் கோயில் கொண்டவள் அல்லவோ?
கூத்தனுக்கு வரம் கொடுத்தவள் அல்லவோ?
தக்கயாகப் பரணி தலைவி அல்லவோ?
தஷிண திரிவேணி தெய்வம் அல்லவோ?
விஜயதசமி தரிசனம் தவப்பயன் அல்லவோ?
ஜெயமுண்டு பயமில்லை நினது கருணை அல்லவோ?
அட்சரமாலை அமிர்த கலசம் அழகல்லவோ?
அன்னை சரஸ்வதி அறிவுக் கடவுள் அல்லவோ?
முடிப்பு
கலைமகள் தாயே கலைகளுக்குத் தாயே
நிலைகுலைந்த மனதுக்கு நிம்மதி தந்தாயே
சகலகலாவல்லி சதுர்முகதேவி
சகலவித்யாமயி ஞானத்தவச்செல்வி
நிலைகுலைந்த மனதுக்கு நிம்மதி தந்தாயே
சகலகலாவல்லி சதுர்முகதேவி
சகலவித்யாமயி ஞானத்தவச்செல்வி
(நீயே எல்லாம்)