3
பாரதியாரின் அத்தை குப்பம்மாளுக்கு ருக்மணி என்று இன்னொரு பெயரும் உண்டு. அவரைப் பற்றிய பல குறிப்புகளில் ருக்மணி என்றே காணப்படுவதால் பெயர்க் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க நாமும் ருக்மணி என்றே பாரதியாரின் அத்தையை இனி குறிப்பிடுவோம். பாரதியின் அத்தை ருக்மணியின் கணவர் பிரம்மஸ்ரீ கிருஷ்ணன் சிவன்.
பாரதியாருக்கு ஒரு தங்கை உண்டு. அவர் பெயர் லஷ்மி. லஷ்மியின் கணவர் பெயர் கேதர்நாத் சிவன்.
கேதர் நாத் சிவனின் அண்ணன் விஸ்வநாதன் சிவன். இவரின் மனைவி பார்வதி. இந்தப் பார்வதி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாவின் சகோதரி.
1897-ம் வருடம் ஜூன் மாதம் 27-ம் தேதி. இந்தத் திருநாள் தான் சுப்பிரமணிய பாரதியாருக்கும் செல்லம்மாவுக்கு திருமண நன்னாள்.
அதே நன்னாள் அன்று பாரதியாரின் தங்கை லஷ்மி-- கேதர்நாத் சிவன் திருமணமும், விஸ்வநாதன் சிவன்-- பார்வதியின் திருமணமும் நடந்திருக்கின்றன.
பாரதியாரின் தங்கை கணவரின் அண்ணன் பாரதியாரின் துணைவியார் செல்லம்மாவின் தமக்கையை மணந்து கொண்டார்.
ஒரே நாளில் ஒரே மேடையில் குடும்ப உறவுகளுக்குள்ளேயே நடைபெற்ற மூன்று திருமணங்கள்.
அக்காலத்தில் ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை போகும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யும் கைங்கரியத்தை பாரதியாரின் தாத்தா புலி சுப்பையரும், கிருஷ்ண சிவனின் தந்தை மீனாட்சி வல்லபரும் செய்து வந்தனர். அவர்களின் தருமச் செயல்களை மெச்சும் காரியமாக அந்நாளைய ராமநாதபுரம் சேதுபதி ராஜா தன் ராஜாங்க பிரதிநிதிகளை அனுப்பி வைத்து இந்த மூன்று திருமணங்களையும் சிறப்பாக நடத்தி வைத்தார்.
தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள சின்ன கிராமம் மாகுளம். இந்த கிராமத்தில் கிருஷ்ண சிவனின் முன்னோர்கள் காலத்திலிருந்து அவர்களுக்குச் சொந்தமான நிறைய நிலபுலன்கள் இருந்தன. 1857- 58 காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் நீர் வற்றிப் போய் பயிர் நிலங்கள் எல்லாம் தரிசுகளாகி மிகப் பெரிய வறட்சியில் அந்தப் பகுதியே சிக்கிக் கொண்டது. இனிமேல் இங்கிருந்து வாழ முடியாது என்ற சூழலில் மீனாட்சி வல்லபரின் தமையனார் வெங்கடேஸ்வர சிவன் கடுமையான வழிப்பயணங்களை மேற்கொண்டு ஒரு வழியாக காசிக்கு வந்து சேர்ந்தார்.
காசியில் காலூன்றி அவர் காலத்தில் வாங்கிப் போட்ட மனைகளில் சங்கர மடமும் சிவ மடமும் கட்டப்பட்டன. பிரிட்டிஷார் காலத்தில் கூட கோயில் சார்ந்த மனைகள், மடங்கள் இவற்றிற்கு வரி விலக்குகள் அளித்திருந்தார்கள். அதனால் வீட்டோடு சேர்ந்து கோயிலும் உருவாகின. சிவ மடத்திலும் சித்தேஸ்வரன், சித்தேஸ்வரி என்று மூர்த்திகளை பிரதிஷ்டை செய்தனர். இன்றும் இக் கோயில்களை சிவ மடத்தில் காணலாம். காஞ்சிப் பெரியவர் இந்த மடத்திற்கு வந்து ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி வைத்திருக்கிறார். இக்கோயிலில் நந்திகேஸ்வரர் மீது நாகம் இருப்பது இன்னொரு அதிசயம்.
பாரதியின் தகப்பனார் சின்னசாமி அய்யர் இறந்த பொழுது காசியிலிருந்த சின்னசாமி அய்யரின் சகோதரி ருக்மணி தம்பியின் இறுதிச் சடங்குகளுக்காக எட்டையபுரம் வந்தவர், காசி திரும்பும் பொழுது தன்னுடன் பதினாறு வயது பாரதியையும் அழைத்துச் செல்கிறார். பாரதி மட்டுமல்ல, பாரதியாரின் பாட்டி, கிருஷணன் சிவத்தின் தாயார், பாட்டி என்று அத்தனை பேரையும் கூட்டிச் செல்கிறார். ருக்மணி அம்மையாரின் அன்பையும் விட்டுக் கொடுக்காத குடும்ப பாசத்தையும் இந்தக் காலப் பார்வையில் நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
பாரதிக்கு காசியில் புத்தகங்களில் மேல் இருந்த காதலைத் தீர்த்து வைத்தது தியாசாபிகல் சொசைட்டி தான். ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரன் என்று எல்லா எழுத்துச் சிற்பிகளின் நூல்களும் பாரதியாருக்கு அங்கு வாசிக்கக் கிடைத்தன. அதற்காகவே தினமும் மாலை வேளைகளில் நாள் தவறாமல் பாரதி காசி தியாசாபில் சொசைட்டிக்குச் செல்வார். சொசைட்டியும் பாரதியார் வீட்டுக்கு அருகாமையில் இருந்திருக்கிறது.. சொசைட்டிக்கு போகும் வழியிலேயே அன்னி பெசண்ட் அம்மையார் தங்கியிருந்த வீடு இருந்தது. கோட்டு, வேஷ்டி, தலைப்பாகை என்று வித்தியாசமான உடை அலங்காரத்துடன் தன் வீட்டைக் கடந்து செல்லும் அந்த இளைஞன் அன்னிபெசண்ட் அம்மையாரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறான்.
ஒரு நாள் தன் வீட்டு ஜன்னல் அருகே அமர்ந்திருந்த அம்மையார் அவர் வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த தலைப்பாகை இளைஞனைப் பார்த்ததும் தன்னை மீறிய ஆவலில், "ஹலோ.. " என்று உரக்கக் கூவி அழைத்திருக்கிறார். திரும்பிப் பார்த்த பாரதியை, 'இங்கே வா' என்று சைகை காட்டி அழைத்து, "நீ யார்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று கேட்டிருக்கிறார்.
"நான் சுப்பிரமணிய பாரதி..." என்று நெஞ்சை நிமிர்த்தி தன்னை அம்மையாருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். "எனக்கு வரலாற்று நாயகர்களையும், ஷெல்லி போன்ற கவிஞர்களையும் மிகவும் பிடிக்கும். அவர்கள் எழுத்தைப் படிக்கவும், அவர்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளவும் தான் தினசரி தியாசாபிகல் சொசைட்டிக்கு செல்கிறேன். இங்கே அருகில் என் அத்தை வீட்டில் தங்கியிருக்கிறேன்." என்று பாரதி தன்னைப் பற்றிச் சென்னனும் அவரை வீட்டுக்குள் அழைத்து அம்மையார் பேச்சுக் கொடுத்திருக்கிறார்.;
"எனக்கு ஆங்கிலேயரின் நடவடிக்கைகள் ஒன்றும் சுத்தமாகப்
பிடிக்கவில்லை. அவர்களை எப்படியாவது இந்த நாட்டை விட்டுத் துரத்தி விட வேண்டும் என்று அல்லும் பகலும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக என் பள்ளித் தோழர்கள் எட்டு பேரைக் கொண்டு இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பை அமைத்திருக்கிறேன். ஆங்கிலேயரை இந்த நாட்டை விட்டு விரட்டுவதில் நாம் பயம் கொள்ளலாகாது. துணிந்து ஏதாவது செய்தாக வேண்டும்.." என்று பாரதியார் தன் மனத்தை உறுத்தும் சிந்தனைகளை அம்மையாரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பாரதியார் நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மத்திய இந்துக் கல்லூரி (Central Hindu College) அன்னிபெசண்ட் அம்மையார் நிறுவியது. தான் அந்த அம்மையாருடன் தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த பாரதியாருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை..
"நான் மதன் மோகன் மாளவியா அவர்களைச் சந்திக்க வேண்டுமே.. அந்த சந்திப்புக்கு உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டிருக்கிறார்.
இந்த இடத்தில் மதன் மோகன் மாளவியா எப்படி பாரதியாரின் உள்ளத்தைக் கவர்ந்தவராய் இருந்தார் என்பதைச் சொல்ல வேண்டும். பாரதியார் காசி மத்திய இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காசியில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவ மதன் மோகன் மாளவியா வீடு வீடாகச் சென்று நிதி திரட்டிக் கொண்டிருந்தார். அவர் நிதி திரட்டிய பட்டியலில் பெரும் பணக்காரர்களும் உண்டு; பரம ஏழைகளும் உண்டு. அவரது அயராத அந்த முயற்சியால் தான் காசி பல்கலைக் கழகம் (Banaras Hindu University) உருபெற்றது.
அன்னி பெசண்ட் அம்மையார் மாளவியாவிடம் சொல்லி பாரதியார் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார்.
அந்த நாளும் வந்தது.
(வளரும்)
உசாத்துணை: பாரதியாரின் அத்தை ருக்மணி அம்மாளின் பேரன் பெரியவர் கே.வி. கிருஷ்ணன் நினைவிருக்கிறதா?.. அவர் ஒரு பேட்டியில் சொன்ன தகவல்களைத் துணையாகக் கொண்டு.
படங்கள் உதவியவர்களுக்கு நன்றி.
பாரதியாரின் அத்தை குப்பம்மாளுக்கு ருக்மணி என்று இன்னொரு பெயரும் உண்டு. அவரைப் பற்றிய பல குறிப்புகளில் ருக்மணி என்றே காணப்படுவதால் பெயர்க் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க நாமும் ருக்மணி என்றே பாரதியாரின் அத்தையை இனி குறிப்பிடுவோம். பாரதியின் அத்தை ருக்மணியின் கணவர் பிரம்மஸ்ரீ கிருஷ்ணன் சிவன்.
பாரதியாருக்கு ஒரு தங்கை உண்டு. அவர் பெயர் லஷ்மி. லஷ்மியின் கணவர் பெயர் கேதர்நாத் சிவன்.
கேதர் நாத் சிவனின் அண்ணன் விஸ்வநாதன் சிவன். இவரின் மனைவி பார்வதி. இந்தப் பார்வதி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாவின் சகோதரி.
1897-ம் வருடம் ஜூன் மாதம் 27-ம் தேதி. இந்தத் திருநாள் தான் சுப்பிரமணிய பாரதியாருக்கும் செல்லம்மாவுக்கு திருமண நன்னாள்.
அதே நன்னாள் அன்று பாரதியாரின் தங்கை லஷ்மி-- கேதர்நாத் சிவன் திருமணமும், விஸ்வநாதன் சிவன்-- பார்வதியின் திருமணமும் நடந்திருக்கின்றன.
பாரதியாரின் தங்கை கணவரின் அண்ணன் பாரதியாரின் துணைவியார் செல்லம்மாவின் தமக்கையை மணந்து கொண்டார்.
ஒரே நாளில் ஒரே மேடையில் குடும்ப உறவுகளுக்குள்ளேயே நடைபெற்ற மூன்று திருமணங்கள்.

தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள சின்ன கிராமம் மாகுளம். இந்த கிராமத்தில் கிருஷ்ண சிவனின் முன்னோர்கள் காலத்திலிருந்து அவர்களுக்குச் சொந்தமான நிறைய நிலபுலன்கள் இருந்தன. 1857- 58 காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் நீர் வற்றிப் போய் பயிர் நிலங்கள் எல்லாம் தரிசுகளாகி மிகப் பெரிய வறட்சியில் அந்தப் பகுதியே சிக்கிக் கொண்டது. இனிமேல் இங்கிருந்து வாழ முடியாது என்ற சூழலில் மீனாட்சி வல்லபரின் தமையனார் வெங்கடேஸ்வர சிவன் கடுமையான வழிப்பயணங்களை மேற்கொண்டு ஒரு வழியாக காசிக்கு வந்து சேர்ந்தார்.
காசியில் காலூன்றி அவர் காலத்தில் வாங்கிப் போட்ட மனைகளில் சங்கர மடமும் சிவ மடமும் கட்டப்பட்டன. பிரிட்டிஷார் காலத்தில் கூட கோயில் சார்ந்த மனைகள், மடங்கள் இவற்றிற்கு வரி விலக்குகள் அளித்திருந்தார்கள். அதனால் வீட்டோடு சேர்ந்து கோயிலும் உருவாகின. சிவ மடத்திலும் சித்தேஸ்வரன், சித்தேஸ்வரி என்று மூர்த்திகளை பிரதிஷ்டை செய்தனர். இன்றும் இக் கோயில்களை சிவ மடத்தில் காணலாம். காஞ்சிப் பெரியவர் இந்த மடத்திற்கு வந்து ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி வைத்திருக்கிறார். இக்கோயிலில் நந்திகேஸ்வரர் மீது நாகம் இருப்பது இன்னொரு அதிசயம்.
பாரதியின் தகப்பனார் சின்னசாமி அய்யர் இறந்த பொழுது காசியிலிருந்த சின்னசாமி அய்யரின் சகோதரி ருக்மணி தம்பியின் இறுதிச் சடங்குகளுக்காக எட்டையபுரம் வந்தவர், காசி திரும்பும் பொழுது தன்னுடன் பதினாறு வயது பாரதியையும் அழைத்துச் செல்கிறார். பாரதி மட்டுமல்ல, பாரதியாரின் பாட்டி, கிருஷணன் சிவத்தின் தாயார், பாட்டி என்று அத்தனை பேரையும் கூட்டிச் செல்கிறார். ருக்மணி அம்மையாரின் அன்பையும் விட்டுக் கொடுக்காத குடும்ப பாசத்தையும் இந்தக் காலப் பார்வையில் நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
பாரதிக்கு காசியில் புத்தகங்களில் மேல் இருந்த காதலைத் தீர்த்து வைத்தது தியாசாபிகல் சொசைட்டி தான். ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரன் என்று எல்லா எழுத்துச் சிற்பிகளின் நூல்களும் பாரதியாருக்கு அங்கு வாசிக்கக் கிடைத்தன. அதற்காகவே தினமும் மாலை வேளைகளில் நாள் தவறாமல் பாரதி காசி தியாசாபில் சொசைட்டிக்குச் செல்வார். சொசைட்டியும் பாரதியார் வீட்டுக்கு அருகாமையில் இருந்திருக்கிறது.. சொசைட்டிக்கு போகும் வழியிலேயே அன்னி பெசண்ட் அம்மையார் தங்கியிருந்த வீடு இருந்தது. கோட்டு, வேஷ்டி, தலைப்பாகை என்று வித்தியாசமான உடை அலங்காரத்துடன் தன் வீட்டைக் கடந்து செல்லும் அந்த இளைஞன் அன்னிபெசண்ட் அம்மையாரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறான்.
ஒரு நாள் தன் வீட்டு ஜன்னல் அருகே அமர்ந்திருந்த அம்மையார் அவர் வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த தலைப்பாகை இளைஞனைப் பார்த்ததும் தன்னை மீறிய ஆவலில், "ஹலோ.. " என்று உரக்கக் கூவி அழைத்திருக்கிறார். திரும்பிப் பார்த்த பாரதியை, 'இங்கே வா' என்று சைகை காட்டி அழைத்து, "நீ யார்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று கேட்டிருக்கிறார்.
"நான் சுப்பிரமணிய பாரதி..." என்று நெஞ்சை நிமிர்த்தி தன்னை அம்மையாருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். "எனக்கு வரலாற்று நாயகர்களையும், ஷெல்லி போன்ற கவிஞர்களையும் மிகவும் பிடிக்கும். அவர்கள் எழுத்தைப் படிக்கவும், அவர்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளவும் தான் தினசரி தியாசாபிகல் சொசைட்டிக்கு செல்கிறேன். இங்கே அருகில் என் அத்தை வீட்டில் தங்கியிருக்கிறேன்." என்று பாரதி தன்னைப் பற்றிச் சென்னனும் அவரை வீட்டுக்குள் அழைத்து அம்மையார் பேச்சுக் கொடுத்திருக்கிறார்.;
"எனக்கு ஆங்கிலேயரின் நடவடிக்கைகள் ஒன்றும் சுத்தமாகப்

பாரதியார் நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மத்திய இந்துக் கல்லூரி (Central Hindu College) அன்னிபெசண்ட் அம்மையார் நிறுவியது. தான் அந்த அம்மையாருடன் தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த பாரதியாருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை..
"நான் மதன் மோகன் மாளவியா அவர்களைச் சந்திக்க வேண்டுமே.. அந்த சந்திப்புக்கு உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டிருக்கிறார்.
இந்த இடத்தில் மதன் மோகன் மாளவியா எப்படி பாரதியாரின் உள்ளத்தைக் கவர்ந்தவராய் இருந்தார் என்பதைச் சொல்ல வேண்டும். பாரதியார் காசி மத்திய இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காசியில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவ மதன் மோகன் மாளவியா வீடு வீடாகச் சென்று நிதி திரட்டிக் கொண்டிருந்தார். அவர் நிதி திரட்டிய பட்டியலில் பெரும் பணக்காரர்களும் உண்டு; பரம ஏழைகளும் உண்டு. அவரது அயராத அந்த முயற்சியால் தான் காசி பல்கலைக் கழகம் (Banaras Hindu University) உருபெற்றது.
அன்னி பெசண்ட் அம்மையார் மாளவியாவிடம் சொல்லி பாரதியார் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார்.
அந்த நாளும் வந்தது.
(வளரும்)
உசாத்துணை: பாரதியாரின் அத்தை ருக்மணி அம்மாளின் பேரன் பெரியவர் கே.வி. கிருஷ்ணன் நினைவிருக்கிறதா?.. அவர் ஒரு பேட்டியில் சொன்ன தகவல்களைத் துணையாகக் கொண்டு.
படங்கள் உதவியவர்களுக்கு நன்றி.