30
சென்ற அத்தியாயத்தைப் படித்து விட்டு வல்லிசிம்ஹன் அவர்கள் 'பத்து தபால்காரர்களா?.. குமாரபாளையம் பெரிய ஊர் தான் போலிருக்கு' என்று வியந்திருந்தார்கள்.
குமாரபாளையம் மெயின் ரோடு தான் அந்த ஊரின் இதய பாகம். மெயின் ரோடில் தான் சினிமா தியேட்டர், ஓட்டல், கடைகள், போஸ்ட் ஆபிஸ் என்று சகலமும் இருந்தது. நெசவுத் தொழில் குடிசைத் தொழிலாக புழக்கத்தில் இருந்த காலம் அது.. பெண்மணிகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்திற்கு மிகவும் பிரசித்திபெற்ற ஊர் குமாரபாளையம். அந்நாட்களில் பெண்கள் தங்கள் கூந்தலை பின்னி, நுனியை ரிப்பன் போட்டு முடிவார்கள் அல்லவா?.. அந்த ரிப்பன் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஊர் குமாரபாளையம். கலர்க் கலராய் ரிப்பன்கள்-- அவற்றில் தான் எத்தனை வகைகள், வண்ணங்கள்! அந்த ரிப்பன் சுருள்கள் அழகாய் பேக் செய்யப்பட்டு பண்டில் பண்டிலாய் குமாரபாளையம் தபால் நிலையத்தில் பார்ஸல் செக்ஷனில் நிறைந்திருக்கும்.
குமார பாளையமும், பவானியும் இரட்டைக் குழந்தைகளாய் ஜமக்காளம் நெசவில் கைதேர்ந்த ஊர்கள். திருமணம் போன்ற குடும்ப குதூகல நிகழ்வுகளில் தரையில் விரிப்பார்கள் அல்லவா, அந்த ஜமக்காளம். கல்யாண சீர்வரிசைகளில் பாய்--தலையணை-- ஜமக்காளம் என்பது அந்நாட்களில் மும்மூர்த்திகளாய் இருந்தன. ஜமக்காள நெசவு குமாரபாளையத்திலும் உண்டு என்றாலும் பவானி ஜமக்காளம் என்று ஜமக்காளத் தயாரிப்புக்கு பவானி பெயர் சூட்டி விட்டு. ரிப்பனுக்கு குமாரபாளையத்தைக் கொண்டாடினார்கள்! ஜமக்காளம் நெய்வதற்கு குழித்தறி என்று அழைக்கப்பட்ட விசேஷ தறி இருந்தது. விசைத்தறி பகாசுரன் வந்து அத்தனையையும் சாப்பிட்டு விட்டது இன்னொரு பரிதாபம்.
குமாரபாளையம் தபால் ஆபிசில் பார்சல் செக்ஷ்னில் பணியாற்றுவோருக்கு பெண்டு நிமிர்ந்து விடும். பார்சல்களைக் கையாள-- எடுக்க, எடை போட, உள்ளே உருட்டித் தள்ள என்று உதவிக்கு இரண்டு மூன்று இலாகா ஊழியர்களுக்கு எந்நேரமும் வியர்வை வழிய வேலையிருக்கும்!
கிட்டத்தட்ட இருவாரங்கள் போஸ்ட் பாக்ஸ் செக்ஷனின் வேலைக்குப் பிறகு ரிஜிஸ்ட்ரேஷன் பிரிவில் பணியேற்றுக் கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்துப் போன வேலையாக இது ஆனது.. நிதானமாக நறுவிசாக நாமுண்டு நம் வேலை உண்டு என்று பணி செய்ய நல்ல செக்ஷன் இது. கவுண்ட்டர் வழியாக நீட்டப்படும் கடித உறையை எடை போட்டு, எவ்வளவு மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்ட வேண்டும் என்பதை கவரின் பின்பக்கம் பென்சிலால் குறித்துக் கொடுத்து அவர் ஸ்டாம்ப் ஒட்டி வந்ததும் சரி பார்த்து அஞ்சல் தலையில் முத்திரை குத்தி கடித உறை கொடுத்தவருக்கு ரசீது கொடுத்து உறையை பக்கத்திலிருக்கும் டிரேயில் போட்டு விட வேண்டியது தான்.
வழக்கமாக மாலை மூன்று மணி வரைக்கும் தான் இந்தக் கவுண்ட்டர் செயல் படும். அப்புறம் அன்றைய பதிவுத் தபால்களை பட்டியல் இடுகிற மாதிரி விவரக் குறிப்புகளை எழுத வேண்டும். ஒரே ஊருக்கு பத்து உறைகள் இருக்கும் பட்சத்தில் அந்த பத்து கடித உறைகளையும் காக்கி நிற பெரிய உறையில் போட்டு அதன் மேல் எந்த ஊர் என்பதனை எழுத வேண்டும்.
இப்படியான உறைகளுக்கு ஆர்.பி (Registered Budle) கவர்கள் என்று பெயர்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் அவசர கதியில் பின்னால் நடக்கப் போகும் கடிதப் பிரித்தல் வேலைகளுக்கு உதவியாகத் தான்.
பிறகு ஒவ்வொரு பீட் தபால்காரரும் பட்டுவாடா ஆன ரிஜிஸ்தர் தபால் விவரங்களைக் கொடுப்பார். பட்டுவாடா ஆகவில்லை என்றால் அதற்கான காரணத்தை ரிஜிஸ்தர் தபால் உறைகளின் பின் பக்கம் குறித்திருப்பார். (Door Locked, Not in Town, Addressee not available, Refused -- இந்த மாதிரி.)
ஒரு ஞாயிற்றுக் கிழமை. அத்தனை பேருக்கும் விடுமுறை.
காலையில் காலைக்காட்சி என்று ஆங்கில படம் எதற்கோ ஒரு செட் ஆட்கள் போய் வந்தனர். நான் காவிரிக்குப் போய் மனசார அமுங்கிக் குளித்து விட்டு வந்தேன். ரூமிற்கு வந்து உடை மாற்றி ராமாஸ் கேப் போய் சாப்பிட்டு வந்தேன். எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏதாவது பாயசம் ஒரு கப்பில் வைப்பார்கள். அன்று எனக்குப் பிடித்த சேமியா பாயசம். ரூமிற்கு வந்த பொழுது திம்மென்றிருந்தது. பின்பக்க ரேழியில் நல்ல காற்று வரும். கதவை பரக்கத் திறந்து பாய் விரித்துப் படுத்தது தான் தெரியும். பெண்டுலம் கடிகாரத்து மணியோசை தான் எழுப்பியது. மணியைப் பார்த்தால் ஐந்து. மாலை ஐந்து.
வீடு பூராவும் அமைதியாக இருந்தது.. ஈ காக்கை காணோம். முகம் கழுவி துடைத்து உடை மாற்றி வாசல் பக்கம் வந்தேன். மாடிக்குப் போகும் படிக்கட்டு வாசல் பக்கம் தான். வெளிக் கதவு திறந்து உள்ளே நுழைந்ததும் இருக்கும். மாடிப் பக்கமிருந்து பேச்சுக் குரல் வந்தது கீழே கேட்டது. ஆஹா! அத்தனை பேரும் மொட்டை மாடிக்குப் போயிருக்கிறார்கள் என்று தெரிந்து படியேறினேன்.
வெளிப்பக்கம் போனதும் நல்ல காற்று.. வட்டமாக உட்கார்ந்தும், சிலர் கைப்பிடிச் சுவரில் அமர்ந்தும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்திருந்தனர். நான் போய்ச் சேர்ந்ததும் தபால் ஆபிஸ் 2 வந்தாச்சய்யா என்று யாரோ உரத்த குரலில் சொன்னார்கள். ரத்தினம் தபால் ஆபிஸ் 1 அவர்களுக்கு.
என்னையும் ரத்தினத்தையும் தவிர அத்தனை பேரும் பள்ளி ஆசிரியர்கள் தேர்வுகளுக்குப் படித்தவர்கள்.. சொல்லப் போனால் சிலர் தமிழாசிரியர்களாகவும் தனியார் பள்ளிகளில் பணியாற்றியவர்கள். ஏதோ ஏற்பாட்டில் தமிழில் பட்டப்படிப்பு படிக்க இங்கு வந்திருப்பவர்கள். அந்நாளைய தமிழாசிரியர்களில் முக்கால்வாசிப் பேர் திராவிட முன்னேற்றக் கழக அனுதாபிகளாய் இருந்தனர். பாக்கி கால்வாசி கிராமப்புறத்து ஆசிரியர்கள், காங்கிரஸ். இதெல்லாம் அவர்களோடுப் பழகிய அந்தப் பதினைந்து நாட்களில் நான் தெரிந்து கொண்டது. வேலைக்குப் போனதிலிருந்து மனசில் மறைந்திருந்த திமுக மீதான பற்றும் பாசமும்
இந்தத் தமிழ் ஆசிரியர்களுடனான பழக்கத்தில் மீண்டும் என்னுள் துளிர்த்திருந்தது. நான் மாதவி பத்திரிகையைக் கையாண்ட விஷயத்தை இவர்களிடம் சொன்ன போது மகிழ்ந்து போனார்கள். மாதவி தமிழ் தேசியக் கட்சி பத்திரிகை என்று இவர்களுக்குத் தெரிந்திருந்தது. இரவில் ஒன்பது மணி சுமாருக்கு எல்லோரும் மலாய் மிதக்கும் பால் சாப்பிட வெளியே போவோம். மாதவி பத்திரிகை சம்பந்தமாக அரட்டை அடித்த அன்றைக்கு அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் பன், பால், பழம் என்று எனக்கு வாங்கித் தந்து ஜமாய்த்து விட்டார்கள்.
தமிழ் வாரப் பத்திரிகைகள் பற்றி பெரிசாக கருத்து ஏதும் அவர்களுக்கு இல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கழக செய்தித்தாட்கள், கழக வார ஏடுகளைத் தாண்டி வாசிக்கும் பழக்கம் இல்லாதிருந்தது. சலூனில் முடிவெட்டிக் கொள்ளப் போன பொழுது ஆனந்த விகடன் பத்திரிகையைப் பார்த்ததாகவும் அதிலிருந்த ஜோக்குகள் மிகவும் பிடித்திருந்ததாகவும் ஒருவர் சொன்னார்.
"புதுமைப் பித்தனைக் கூடப் படித்ததில்லையா?" என்று கேட்டேன்.
"புதுமைப்பித்தனை படிக்கறதா? திரைப்படம் இல்லையா அது?" என்று பதிலுக்குக் கேள்வி வந்தது.
அந்நாட்களில் டி.கே. சீனிவாசன் என்ற கழக எழுத்தாளர் இருந்தார். அவரது 'ஆடும் மாடும்' என்ற நூல் பரவலாக பேசப்பட்ட நூல். திமுக பகுதியிலிருந்து வந்திருந்த அந்த நாளைய நல்ல ஆக்கமாக எனக்கு அறிமுகமாகியிருந்தது. அந்த நூல் பற்றி நான் குறிப்பிட்டு சிலாகித்த பொழுது யாருக்குமே அது பற்றித் தெரிந்திருக்கவில்லை. இன்றைக்குக் கூட திமுக சார்பான இலக்கிய அணி என்று ஏதாவது இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் தெரிந்திருக்காது.
இலக்கியங்கள் என்றால் சங்க இலக்கியங்கள் தான் என்ற அளவில் அவர்கள் புரிதல் இருந்தது. பாரதிதாசனை கழகத்தின் புரட்சிக் கவிஞர் என்ற மட்டில் அறிந்திருந்தனர். பாரதியாருடன் அவருக்கிருந்த தொடர்புகள் பற்றி விவரமாக அறியாதாராய் இருந்தனர். பாரதிதாசனை கழகத்தின் நாத்திகக் கவிஞர் என்பது போலவான தோற்றம் தான் அவர்களுக்கிருந்தது. மயிலம் முருக பெருமான் மீது பக்தி கொண்டு, 'மயிலம் ஸ்ரீசுப்பிரமணியர் துதியமுதி' என்ற பெயரில் பாரதிதாசனின் பாடல் திரட்டு ஒன்று இருப்பதைப் பற்றி நான் சொன்னபோது, 'அப்படியா?' என்று ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டனர். அந்த நேரத்தில் பெருமாள் என்பவர் அழகின் சிரிப்பிலிருந்து பாரதிதாசனின் கவிதை ஒன்றை ராகத்துடன் அழகாகப் பாடினார்.
அவர்கள் கற்றது வேறு வகையாக இருந்தது. தொல்காப்பியம் பற்றி முகிலன் என்ற ஆசிரியர் சொன்ன கருத்துக்கள் பிரமிப்பாக இருந்தன. ஆனால் அவர்கள் சொன்னது எல்லாம் சொந்த முயற்சியில் ஆய்வின் அடிப்படையில் அறிந்தது என்றில்லாமல் யாரோ எழுதியவற்றை மனனம் செய்து ஒப்புவிப்பது போல செயற்கையாக இருந்தது.
வெள்ளை வாரணர் என்ற பழந்தமிழ் அறிஞர் மேற்கொண்ட ஆராய்சிகளை பற்றி சொல்லும் பொழுது கி.மு. 7-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியை தொல்காப்பிய காலம் என்று எப்படி அவர் வரையறுக்கிறார் என்று ஒப்பிலக்கிய சான்றுகளோடு முகிலன் விளக்கினார்.
'தொல்காப்பியத்திற்கு பனம்பாரனார் என்ற புலவர் பாயிரம் தந்துள்ளார். 'வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து' என்றும் இன்றும் பிரபலமாக இருக்கும் நாமறிந்த சொற்றொடர் பனம்பாரனாரின் பாயிரத்து ஆரம்ப வரி தான். நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் பாடப்பெற்றதாக பாயிரம் பதிவு செய்திருக்கிறது. நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் என்ற புலவர் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேற்றமானதாக பாயிரம் சொல்கிறது. தொல்காப்பியர் காலம் கி.மு. 700 என்றும் ஏழாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தொல்காப்பியம் அரங்கேற்றமாயிற்று என்றும் கொள்ளலாம்' என்று வெள்ளை வாரணர் வரையறுத்திருப்பதாக முகிலன் சொன்னார்.
கொஞ்சம் கொஞ்சமாக வானம் இருட்டிக் கொண்டு வந்தது. குருசாமி பாளையம் போனதிலிருந்து இலக்கியம், வார இதழ்கள் போன்ற எண்ணங்களே என்னில் அறுந்த மாதிரி இருந்து, இன்று அதன் தொடர்ச்சி தொடர்ந்த மாதிரி ஒரு புத்துணர்ச்சி மனசில் பொங்கியது.
ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இப்படியான கலந்துரையாடல் அந்த இல்லத்தின் மொட்டை மாடியில் நடப்பதாகத் தெரிய வந்தது. அன்றைய பொழுதுக்கு எல்லோரும் மகிழ்ச்சியாகக் கலைந்தோம்.
ரத்தினம் பவானியில் இருக்கும் அவரது சொந்தக்காரரைப் பார்க்கப் போக வேண்டியிருப்பதாகச் சொன்னார்.
லேசாகப் பசிக்கத் தொடங்கியிருந்தது. செருப்பை மாட்டிக் கொண்டு நான் ராமாஸ் கேப்பிற்கு புறப்பட்டேன்.
(வளரும்)
சென்ற அத்தியாயத்தைப் படித்து விட்டு வல்லிசிம்ஹன் அவர்கள் 'பத்து தபால்காரர்களா?.. குமாரபாளையம் பெரிய ஊர் தான் போலிருக்கு' என்று வியந்திருந்தார்கள்.
குமாரபாளையம் மெயின் ரோடு தான் அந்த ஊரின் இதய பாகம். மெயின் ரோடில் தான் சினிமா தியேட்டர், ஓட்டல், கடைகள், போஸ்ட் ஆபிஸ் என்று சகலமும் இருந்தது. நெசவுத் தொழில் குடிசைத் தொழிலாக புழக்கத்தில் இருந்த காலம் அது.. பெண்மணிகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்திற்கு மிகவும் பிரசித்திபெற்ற ஊர் குமாரபாளையம். அந்நாட்களில் பெண்கள் தங்கள் கூந்தலை பின்னி, நுனியை ரிப்பன் போட்டு முடிவார்கள் அல்லவா?.. அந்த ரிப்பன் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஊர் குமாரபாளையம். கலர்க் கலராய் ரிப்பன்கள்-- அவற்றில் தான் எத்தனை வகைகள், வண்ணங்கள்! அந்த ரிப்பன் சுருள்கள் அழகாய் பேக் செய்யப்பட்டு பண்டில் பண்டிலாய் குமாரபாளையம் தபால் நிலையத்தில் பார்ஸல் செக்ஷனில் நிறைந்திருக்கும்.

குமாரபாளையம் தபால் ஆபிசில் பார்சல் செக்ஷ்னில் பணியாற்றுவோருக்கு பெண்டு நிமிர்ந்து விடும். பார்சல்களைக் கையாள-- எடுக்க, எடை போட, உள்ளே உருட்டித் தள்ள என்று உதவிக்கு இரண்டு மூன்று இலாகா ஊழியர்களுக்கு எந்நேரமும் வியர்வை வழிய வேலையிருக்கும்!
கிட்டத்தட்ட இருவாரங்கள் போஸ்ட் பாக்ஸ் செக்ஷனின் வேலைக்குப் பிறகு ரிஜிஸ்ட்ரேஷன் பிரிவில் பணியேற்றுக் கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்துப் போன வேலையாக இது ஆனது.. நிதானமாக நறுவிசாக நாமுண்டு நம் வேலை உண்டு என்று பணி செய்ய நல்ல செக்ஷன் இது. கவுண்ட்டர் வழியாக நீட்டப்படும் கடித உறையை எடை போட்டு, எவ்வளவு மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்ட வேண்டும் என்பதை கவரின் பின்பக்கம் பென்சிலால் குறித்துக் கொடுத்து அவர் ஸ்டாம்ப் ஒட்டி வந்ததும் சரி பார்த்து அஞ்சல் தலையில் முத்திரை குத்தி கடித உறை கொடுத்தவருக்கு ரசீது கொடுத்து உறையை பக்கத்திலிருக்கும் டிரேயில் போட்டு விட வேண்டியது தான்.
வழக்கமாக மாலை மூன்று மணி வரைக்கும் தான் இந்தக் கவுண்ட்டர் செயல் படும். அப்புறம் அன்றைய பதிவுத் தபால்களை பட்டியல் இடுகிற மாதிரி விவரக் குறிப்புகளை எழுத வேண்டும். ஒரே ஊருக்கு பத்து உறைகள் இருக்கும் பட்சத்தில் அந்த பத்து கடித உறைகளையும் காக்கி நிற பெரிய உறையில் போட்டு அதன் மேல் எந்த ஊர் என்பதனை எழுத வேண்டும்.
இப்படியான உறைகளுக்கு ஆர்.பி (Registered Budle) கவர்கள் என்று பெயர்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் அவசர கதியில் பின்னால் நடக்கப் போகும் கடிதப் பிரித்தல் வேலைகளுக்கு உதவியாகத் தான்.
பிறகு ஒவ்வொரு பீட் தபால்காரரும் பட்டுவாடா ஆன ரிஜிஸ்தர் தபால் விவரங்களைக் கொடுப்பார். பட்டுவாடா ஆகவில்லை என்றால் அதற்கான காரணத்தை ரிஜிஸ்தர் தபால் உறைகளின் பின் பக்கம் குறித்திருப்பார். (Door Locked, Not in Town, Addressee not available, Refused -- இந்த மாதிரி.)
ஒரு ஞாயிற்றுக் கிழமை. அத்தனை பேருக்கும் விடுமுறை.
காலையில் காலைக்காட்சி என்று ஆங்கில படம் எதற்கோ ஒரு செட் ஆட்கள் போய் வந்தனர். நான் காவிரிக்குப் போய் மனசார அமுங்கிக் குளித்து விட்டு வந்தேன். ரூமிற்கு வந்து உடை மாற்றி ராமாஸ் கேப் போய் சாப்பிட்டு வந்தேன். எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏதாவது பாயசம் ஒரு கப்பில் வைப்பார்கள். அன்று எனக்குப் பிடித்த சேமியா பாயசம். ரூமிற்கு வந்த பொழுது திம்மென்றிருந்தது. பின்பக்க ரேழியில் நல்ல காற்று வரும். கதவை பரக்கத் திறந்து பாய் விரித்துப் படுத்தது தான் தெரியும். பெண்டுலம் கடிகாரத்து மணியோசை தான் எழுப்பியது. மணியைப் பார்த்தால் ஐந்து. மாலை ஐந்து.
வீடு பூராவும் அமைதியாக இருந்தது.. ஈ காக்கை காணோம். முகம் கழுவி துடைத்து உடை மாற்றி வாசல் பக்கம் வந்தேன். மாடிக்குப் போகும் படிக்கட்டு வாசல் பக்கம் தான். வெளிக் கதவு திறந்து உள்ளே நுழைந்ததும் இருக்கும். மாடிப் பக்கமிருந்து பேச்சுக் குரல் வந்தது கீழே கேட்டது. ஆஹா! அத்தனை பேரும் மொட்டை மாடிக்குப் போயிருக்கிறார்கள் என்று தெரிந்து படியேறினேன்.
வெளிப்பக்கம் போனதும் நல்ல காற்று.. வட்டமாக உட்கார்ந்தும், சிலர் கைப்பிடிச் சுவரில் அமர்ந்தும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்திருந்தனர். நான் போய்ச் சேர்ந்ததும் தபால் ஆபிஸ் 2 வந்தாச்சய்யா என்று யாரோ உரத்த குரலில் சொன்னார்கள். ரத்தினம் தபால் ஆபிஸ் 1 அவர்களுக்கு.
என்னையும் ரத்தினத்தையும் தவிர அத்தனை பேரும் பள்ளி ஆசிரியர்கள் தேர்வுகளுக்குப் படித்தவர்கள்.. சொல்லப் போனால் சிலர் தமிழாசிரியர்களாகவும் தனியார் பள்ளிகளில் பணியாற்றியவர்கள். ஏதோ ஏற்பாட்டில் தமிழில் பட்டப்படிப்பு படிக்க இங்கு வந்திருப்பவர்கள். அந்நாளைய தமிழாசிரியர்களில் முக்கால்வாசிப் பேர் திராவிட முன்னேற்றக் கழக அனுதாபிகளாய் இருந்தனர். பாக்கி கால்வாசி கிராமப்புறத்து ஆசிரியர்கள், காங்கிரஸ். இதெல்லாம் அவர்களோடுப் பழகிய அந்தப் பதினைந்து நாட்களில் நான் தெரிந்து கொண்டது. வேலைக்குப் போனதிலிருந்து மனசில் மறைந்திருந்த திமுக மீதான பற்றும் பாசமும்
இந்தத் தமிழ் ஆசிரியர்களுடனான பழக்கத்தில் மீண்டும் என்னுள் துளிர்த்திருந்தது. நான் மாதவி பத்திரிகையைக் கையாண்ட விஷயத்தை இவர்களிடம் சொன்ன போது மகிழ்ந்து போனார்கள். மாதவி தமிழ் தேசியக் கட்சி பத்திரிகை என்று இவர்களுக்குத் தெரிந்திருந்தது. இரவில் ஒன்பது மணி சுமாருக்கு எல்லோரும் மலாய் மிதக்கும் பால் சாப்பிட வெளியே போவோம். மாதவி பத்திரிகை சம்பந்தமாக அரட்டை அடித்த அன்றைக்கு அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் பன், பால், பழம் என்று எனக்கு வாங்கித் தந்து ஜமாய்த்து விட்டார்கள்.
தமிழ் வாரப் பத்திரிகைகள் பற்றி பெரிசாக கருத்து ஏதும் அவர்களுக்கு இல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கழக செய்தித்தாட்கள், கழக வார ஏடுகளைத் தாண்டி வாசிக்கும் பழக்கம் இல்லாதிருந்தது. சலூனில் முடிவெட்டிக் கொள்ளப் போன பொழுது ஆனந்த விகடன் பத்திரிகையைப் பார்த்ததாகவும் அதிலிருந்த ஜோக்குகள் மிகவும் பிடித்திருந்ததாகவும் ஒருவர் சொன்னார்.
"புதுமைப் பித்தனைக் கூடப் படித்ததில்லையா?" என்று கேட்டேன்.
"புதுமைப்பித்தனை படிக்கறதா? திரைப்படம் இல்லையா அது?" என்று பதிலுக்குக் கேள்வி வந்தது.
அந்நாட்களில் டி.கே. சீனிவாசன் என்ற கழக எழுத்தாளர் இருந்தார். அவரது 'ஆடும் மாடும்' என்ற நூல் பரவலாக பேசப்பட்ட நூல். திமுக பகுதியிலிருந்து வந்திருந்த அந்த நாளைய நல்ல ஆக்கமாக எனக்கு அறிமுகமாகியிருந்தது. அந்த நூல் பற்றி நான் குறிப்பிட்டு சிலாகித்த பொழுது யாருக்குமே அது பற்றித் தெரிந்திருக்கவில்லை. இன்றைக்குக் கூட திமுக சார்பான இலக்கிய அணி என்று ஏதாவது இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் தெரிந்திருக்காது.

அவர்கள் கற்றது வேறு வகையாக இருந்தது. தொல்காப்பியம் பற்றி முகிலன் என்ற ஆசிரியர் சொன்ன கருத்துக்கள் பிரமிப்பாக இருந்தன. ஆனால் அவர்கள் சொன்னது எல்லாம் சொந்த முயற்சியில் ஆய்வின் அடிப்படையில் அறிந்தது என்றில்லாமல் யாரோ எழுதியவற்றை மனனம் செய்து ஒப்புவிப்பது போல செயற்கையாக இருந்தது.
வெள்ளை வாரணர் என்ற பழந்தமிழ் அறிஞர் மேற்கொண்ட ஆராய்சிகளை பற்றி சொல்லும் பொழுது கி.மு. 7-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியை தொல்காப்பிய காலம் என்று எப்படி அவர் வரையறுக்கிறார் என்று ஒப்பிலக்கிய சான்றுகளோடு முகிலன் விளக்கினார்.
'தொல்காப்பியத்திற்கு பனம்பாரனார் என்ற புலவர் பாயிரம் தந்துள்ளார். 'வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து' என்றும் இன்றும் பிரபலமாக இருக்கும் நாமறிந்த சொற்றொடர் பனம்பாரனாரின் பாயிரத்து ஆரம்ப வரி தான். நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் பாடப்பெற்றதாக பாயிரம் பதிவு செய்திருக்கிறது. நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் என்ற புலவர் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேற்றமானதாக பாயிரம் சொல்கிறது. தொல்காப்பியர் காலம் கி.மு. 700 என்றும் ஏழாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தொல்காப்பியம் அரங்கேற்றமாயிற்று என்றும் கொள்ளலாம்' என்று வெள்ளை வாரணர் வரையறுத்திருப்பதாக முகிலன் சொன்னார்.
கொஞ்சம் கொஞ்சமாக வானம் இருட்டிக் கொண்டு வந்தது. குருசாமி பாளையம் போனதிலிருந்து இலக்கியம், வார இதழ்கள் போன்ற எண்ணங்களே என்னில் அறுந்த மாதிரி இருந்து, இன்று அதன் தொடர்ச்சி தொடர்ந்த மாதிரி ஒரு புத்துணர்ச்சி மனசில் பொங்கியது.
ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இப்படியான கலந்துரையாடல் அந்த இல்லத்தின் மொட்டை மாடியில் நடப்பதாகத் தெரிய வந்தது. அன்றைய பொழுதுக்கு எல்லோரும் மகிழ்ச்சியாகக் கலைந்தோம்.
ரத்தினம் பவானியில் இருக்கும் அவரது சொந்தக்காரரைப் பார்க்கப் போக வேண்டியிருப்பதாகச் சொன்னார்.
லேசாகப் பசிக்கத் தொடங்கியிருந்தது. செருப்பை மாட்டிக் கொண்டு நான் ராமாஸ் கேப்பிற்கு புறப்பட்டேன்.
(வளரும்)