6
அடுத்த வாரமே அடுத்த புத்தகத்தை NBT-காரர்கள் தமிழ் மொழிபெயர்ப்புக்காக அனுப்பி வைத்து விட்டார்கள்.
புத்தகத்தின் பெயர்: WIND ENERGY. எழுதியவர்: SUNEEL B. ATHAWALE
சுனில் பி. அதாவாலே இந்தப் புத்தகத்தை தம் பெற்றோருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார் என்று தெரிந்தவுடனேயே நம் மதிப்பில் பெரிதும் உயர்ந்து போய் விடுகிறார். இந்த நூலின் முதல் பதிப்பை 2000 ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா வெளியிட்டிருக்கிறது.

சூரியன் ஒவ்வொரு நிமிடமும் ஐந்து மில்லியன் டன் அளவு ஜடப் பொருள்களை ஆற்றலாக மாற்றுகிறது. இந்த ஆற்றலில் மிகச் சிறிய அளவு பல்வேறு வடிவங்களில் பூமியை வந்தடைகிறது. அவற்றில் காற்று ஆற்றலும் ஒன்று. காற்றின் ஆற்றலானது காற்றின் இயக்க ஆற்றல் சக்தியிலிருந்து உருவாக்கப்பட்டு, இயந்திர அல்லது மின்சர ஆற்றல்
போன்றதொரு பயனுள்ள சக்தியாக மாற்றப்படுகிறது. கி.மு. 4000 ஆண்டிலேயே காற்றின் ஆற்றலை பூவுல வாசிகள் உணர்ந்திருந்தனர். பழங்கால எகிப்தியர்கள் பயன்படுத்திய பாய்மரப் படகிலிருந்து தற்கால தென்பகுதித் தமிழகத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் காற்றாலைகள் (Windmills) வரை காற்றின் பன்முகப்பட்ட ஆற்றல்களை இந்த நூல் விவரிக்கிறது.
இடைப்பட்ட காலத்தில் இரண்டு நூல்களுக்குமான மொழிபெயர்த்த ஆசிரியருக்கான தொகை+ இதர செலவுகள் எல்லாவற்றையும் NBT தனது பிரசுரங்களுக்கு வரையறுத்திருந்த பிரகாரம் அனுப்பி வைத்திருந்தார்கள். அத்துடன் அடுத்த நூல் மொழியாக்கம் பற்றியும் கேட்டிருந்தார்கள். AMIE, IETE தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தலால் மொழியாக்கப் பணியைத் தொடர முடியாமல் இருந்தது. NBT-காரர்களும் சூழ்நிலையைப் புரிந் து கொண்டார்கள்.
AMIE- தேர்வும் சரி, IETE- தேர்வும் சரி, கல்லூரி பொறியியல் படிப்பை விட எந்தந்த கோணங்களில் கடினமானது என்பதை ஏற்கனவே கோடி காட்டிக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆண்டுக்கு 6 பாடங்கள் என்று எடுத்துக் கொண்டாலும் 4 ஆண்டிற்கு 24 பாடங்கள். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்சம் 40% மதிப்பெண் வாங்கினால் தான் அந்தந்த பாடத்தில் தேர்ச்சி என்கிற விஷயத்தை கண்டிப்பாக அமுல் படுத்துகிற நிருவனங்கள்... இயல்பாகவே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு தேர்வுக்கும் முயல்கிற பெரும் பகுதியினர் இந்த இரண்டு அகில இந்தியத் தேர்வுகளையும் எழுதுவதால் பாக்கி (arrears) வைத்துக் கொண்டு முழுமையான தேர்வு பெறாதவதர்களையே அதிகமாகக் கொண்ட பொறியியல் பட்டத்திற்கான முயற்சியாக இந்த இரண்டு தேர்வுகளும் இருந்தது இயல்பே.
நல்லவேளை வாசித்த நான்கு ஆண்டு தேர்வு காலங்களில் இரண்டு பகுதி வாசிப்புக்கும் ஒரே நாளில் எந்தத் தேர்வும் குறுக்கிடாதது நல்லதுக்கு ஆயிற்று. (An Examination for AMIE or IETE was not held on the same date) அப்படி நடந்திருந்தால், இதுவா அதுவா என்ற தடுமாற்றம் ஏற்பட்டு இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க நேரிட்டிருக்கும்.. அப்படி நடக்காததும் நல்லதே.
வரையறுத்திருந்த நான்கே ஆண்டுகளில் நல்ல மதிப்பெண்களுடன் AMIE, IETE இரு தேர்வுகளிலும் தேர்ச்சி.. பொறியியலில் மேற்படிப்பு என்ற அடுத்த இலட்சியத்தை நோக்கி நகர அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மேற்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தான். அந்தத் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்வாகி M.E. பட்டப் படிப்புக்கான கவுன்சிலிங் போகும் பொழுது தான் அந்த சிக்கல் தலையெடுத்தது. அந்த நேர்முக ஆலோசனைக் குழுவினரிடம் பொறியியல் படிப்பில் தேர்வானதின் மூலச் சான்று (original certificate) அளிக்க வேண்டும். பொறியியல் பட்டத்திற்காக இரண்டு தேர்ச்சிகள் பெற்றும் அவ்வளவு சீக்கிரத்தில் வழக்கமாக மூலச் சான்று கிடைக்கும் என்பதே கனவாக இருந்தது. சென்னை AMIE தலைமை அலுவலகத்தில் நேரே போய்க் கேட்டதற்கு எப்படியும் ஆறு மாதங்கள் ஆகலாம். அதற்கிடையில் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி விட்டார்கள். அடுத்த பதினைந்தே நாட்களில் கெளன்ஸிலிங்..
அப்போ பொறியியல் மேற்படிப்பு என்பது கானல் நீர் தானா என்று கலங்கியிருக்கிற நேரத்தில் அடுத்த நாள் கவுன்ஸிலிங் என்றால் அதற்கு முதல் நாள் பதிவுத் தபாலில் IETE படிப்பு தேர்ச்சிக்கான மூலச் சான்று வந்து சேர்ந்தது இறைவனின் கருணை என்று தான் சொல்ல வேண்டும். ஒரே பட்டப் படிப்புக்காக இரண்டு விதத்தில் படிப்பானேன் என்று அறியாமையில் நான் கேட்ட கேள்விக்கு 'இதற்காகத் தான் அது' என்ற பதில் தீர்க்கமாகக் கிடைத்து விட்டது. கவுன்ஸிலிங்கில் ஜீவா விரும்பிய Instrumentation Engineering பாடத்திட்டமே கிடைத்தது. அதுவும் அப்துல் கலாம் ஐயாவும், எழுத்தாளர் சுஜாதாவும் வாசித்துப் பெருமை அடைந்த MIT (Madras Institute of Technology, Crompet) கல்வித் தலத்தில்!
இரண்டு வருடங்களில் பொறியியல் மேற்படிப்பு முடித்து VIVA முடித்து TCS வளாகத் தேர்வில் (Campus selection) தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பையில் வேலையில் சேர்ந்து அவர்கள் பணிக்காக New Jersy, America சென்று TCS-ல் அவர்கள் ஒப்பந்த வருடப் பணி நான் கு ஆண்டுகளை திருப்தியோடு முடித்து அவர்களிடமிருந்து வாழ்த்துடன் விடைபெற்று அமெரிக்காவில் நிரந்தர பணி வாய்ப்பு பெற்றதெல்லாம் அடுத்தடுத்து நடைபெற்றவை. எல்லாத் தகுதிகளும் நல்லவர்களின் ஆசியால் தான் என்பதும் நினைப்பை விட்டு அகலாத வாசகமாய் நினைவலைகளில் தவழ்கிறது...
இதில் ஒரு வேடிக்கை பாருங்கள். அடிப்படைக் கல்வி என்பது பொறியியல் படிப்பு. இடையில் அந்தத் தகுதியும் இருக்கட்டுமே என்று கற்றது கணினி அறிவியல். அந்த இருக்கட்டுமே என்ற கற்ற கல்வி தான் இன்று நிரந்தரப் பணிக்கு அடித்தளமாய் இருக்கிறது. இந்த உண்மையை அலட்சியப்படுத்தி இன்றும் நம் நாட்டில் அடிப்படைக் கல்வியை (Academic Education) தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு அநாவசிய முக்கியத்துவம் கொடுப்பதினால் எதிர்மறை வாழ்க்கைச் சூழல் அமைவதற்கும் காரணமாகிப் போகிறோம் என்ற நிதர்சன உண்மையை என்னால் இந்த இடத்தில் நினைத்துப் பர்க்காமல் இருக்க முடியவில்லை.
அமெரிக்க கல்வி அமைப்பில் இப்படி இருப்பதில்லை. அடிப்படைக் கல்வி என்பது ஏதோ ஒரு தகுதிக்காகத் தான். அந்தத் தகுதியைப் பெறுவதற்கும் மற்ற துறை சார்ந்த தகுதிகள் காரணிகளாக இருக்கின்றன. Extra curricular activities play a major role in education. அங்கு சித்திரம் கற்றுக் கொண்டு ஒரு சைத்திரீகனாக வாழ முடியும். ஆனால் இங்கு அப்படியல்ல. அப்படியான ஒரு நிலைமை நம் நாட்டிலும் வந்தால் இந்த மெகாலே கல்வி முறைக்கு ஒரு முடிவு கட்டலாம்.
(நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான தமிழ்ச் சொற்கள் தேர்வு செய்யத் தடுமாறி வாசிப்பவரின் புரிதலுக்காக அப்படித் தேர்வு செய்த வரிகளைத் தவிர்த்தும் அங்கங்கே ஆங்கிலச் சொற்களையே உபயோகிக்கும்படி ஆயிற்று. )