என் மனைவிக்கு ஷேத்திராடனங்கள் செல்வதில் ஆர்வம் மிகவும் அதிகம்.
இறை பக்தியும் அதிகம்.
தெற்கு பக்கம் நாங்கள் வந்தாலே ஏதாவது ஷேத்திராடனம் செய்ய
வேண்டும் என்று வற்புறுத்துவாள். எனக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. அதற்காக நான் நாத்திகன் என்பது அல்ல. பயணம் செய்வது என்பதே என்னை மிகவும் சோர்வு கொள்ள வைக்கும் விஷயம்.
என்னால் கூட்டங்களில் சிக்கிக் கொள்ள முடியாது. முண்டியடித்து முன்னேறிச் செல்லும் சாமர்த்தியமும் கிடையாது. வாயை வைத்துக் கொண்டு வெறுமனே மென்று கொண்டிருக்காமல் எதையாவது சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது போன்ற விஷயங்களில் மட்டுமே ஆனந்தம் அடைபவன் நான்.
அது 1944 என்று நினைக்கிறேன். எனக்கும் அப்படியொரு ஷேத்திராடனம் மேற்கொள்ளும் வாய்ப்பு நேர்ந்தது. கூடவே, ஒரு அதிர்ஷ்டமும் வாய்த்தது. அது என் நண்பர் கிருஷ்ணமூர்த்தி சிலாக்கியமான ஆஞ்சநேய உபாசகர். குருவாயூர், திருவனந்தபுரம் முதலிய ஷேத்திரங்களுக்கு அவருடன் நானும் என் மனைவியும் கிளம்பினோம்.
சரி.. மறப்பதற்கு முன் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். எங்களுடன் வருவதற்கு கிருஷ்ணமூர்த்தி முன் வந்ததற்கு முக்கியமான காரணம் ஒன்று இருந்தது. அவர் ஆஞ்சநேய உபாசகர் என்று சொன்னேன், அல்லவா?..
என் மனைவியின் சொந்த ஊர் தாராபுரம் அருகிலிருக்கிறா கொளிஞ்சவாடி என்னும் கிராமம். அங்கு ஒரு ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தம். வனவாசத்தின் போது ராமபிரானும் சீதாபிராட்டியும் லஷ்மணனும் அங்கே வந்து தங்கியதாக ஐதிகம். எங்கள் ஷேத்திராடனத்தை முடித்ததும் தாராபுரம் செல்வதாக எங்கள் திட்டம். அந்த ஊர் அஞ்சநேயர் கிருஷ்ண மூர்த்தியை இழுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
சரி, மீண்டும் எங்கள் பயணத்திற்கு வருவோம். கன்யாகுமரியில் அதி அற்புதமான தரிசனம். அதை முடித்து திருவனந்தபுரம் செல்ல ஒரு வாடகை காரை அமர்த்திக் கொண்டு மிகவும் ஆவலுடன் கிளம்பினோம். அந்த ஆவலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள தவறி விட்டோம்.
நாங்கள் கிளம்பிய அன்று திருவனந்தபுரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மறியல் போராட்டம். கார் திருவனந்தபுரத்தில் நுழைந்தது. அங்கு பார்த்தால் மிகப் பெரிய கும்பல் ஒன்று கைகளில் சகலவிதமான ஆயுதங்களையும் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. எங்கும் ஒரே களேபரம். அப்பாவிகளாக உள்ளே நுழைந்த எங்களைச் சூழ்ந்து கொண்டது, அந்தக் கும்பல். எங்கும் வெறிக் கூச்சல்கள். கட்டைகளால் எங்களின் காரைத் தாக்க ஆரம்பித்தது, அந்தக் கும்பல். நாங்கள் நடுநடுங்கி விட்டோம். விவரிக்க முடியாத பதற்றம். உயிர் பயம்.
எந்த நேரமும் எங்களை வெளியே இழுத்துத் தாக்கத் தயாராக இருந்தது அந்தக் கூட்டம். எங்கள் ஓட்டுநர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். மன்றாடிப் பார்த்தார். கேட்பதற்கு யாரும் அங்கு தயாராக இல்லை. நான் நடிகணாகவும் (மேடைகளில் தான்!) இருந்திருக்கிறேன், இல்லையா?.. மனதில் ஒரு நல்ல யுக்தி தோன்றியது. கால்கள் ஊனமானவன் போன்ற பாவனையில் காரை விட்டு இறங்கினேன்.
அந்த மறியல் கூட்டத் தலைவனின் கால்களை இறுகப் பிடித்துக் கொண்டு "ஐயா! நாங்கள் தெரியாமல் இந்த ஊருக்குள் நுழைந்து விட்டோம். பத்மநாப சுவாமியை தரிசிக்கத் தான் நாங்கள் வந்தோம். நான் ஒரு பத்திரிகையாளன். இதோ, என்னுடைய அடையாள அட்டை. எங்களுக்கு சுவாமி தரிசனம் கூட வேண்டாம். நாங்கள் திரும்பிச் செல்ல அனுமதியளித்தால் போதும்.." என்று அழாக்குறையாக மன்றாடினேன்.
கொஞ்ச நேரத்திற்கு நீண்ட அமைதி. கோபமான பார்வைகள். அப்புறம் என்ன தோன்றியதோ தெரியவில்லை.. "போய்க்கோடா.." என்று வெறுப்புடன் சொல்லி நகர்ந்தான். தப்பித்தோம், பிழைத்தோம் என்று எங்கள் காரைக் கிளப்பிக் கொண்டு கிளம்பினோம். அடுத்து இன்னொரு ஆபத்தை நோக்கிப் போகிறோம் என்பது தெரியாமலேயே.
எங்கள் காருக்கு முன்னால் ஒரு பெட்ரோல் டாங்க்கர் சென்று கொண்டு இருந்தது. அதிலிருந்து எண்ணெய் வழியெங்கும் கசிந்து கொண்டே இருந்தது. எங்கள் ஓட்டுநர் ஓட்டிய வேகத்தில், அந்த வழுக்கலில் சக்கரங்கள் சறுக்கி, நிலை தடுமாறி, அருகில் மிகவும் ஆவேசத்துடன் ஓடிக்கொண்டு இருந்த காட்டாறு ஒன்றில் இறங்கி விட்டது எங்கள் கார்.
'இதோடு நம் ஆயுள் முடிந்தது' என்ற தீர்மானத்திற்கு வந்தோம். நடுங்கிய பயத்தில் கண்களை இறுக்க மூடிக் கொண்டோம். நண்பர் கிருஷ்ண மூர்த்தி பரபரப்புடன் ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தை ஜபிக்க ஆரம்பித்து விட்டார். எங்களுடன் ஒட்டியிருந்த கொஞ்சமான நல்ல நேரம் என்னவென்றால், எங்களுடைய கார் ஆற்றின் ஊடாகத் துருத்திக் கொண்டு, உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பிர்மாண்டமான கிளைகளின் இடையே சிக்கி இருந்தது.
ஓட்டுநர் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து, பிரேக்கை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார். விட்டால், அதோகதிதான்... ஆற்று வெள்ளாத்தின் வேகம் எங்கள் காரை இழுத்துக் கொண்டு போய்விடும். எங்கள் உயிர்கள் மீண்டும் எங்கள் கைகளில் இல்லை, . நண்பர் கிருஷ்ணமூர்த்தியைத் தவிர, நாங்கள் எல்லோரும் "ஆபத்து.. ஆபத்து" என்று உதவிக்காகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தோம். அவர், தன்னுடைய ஸ்தோத்திரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். யாரையும் காணோம் எங்கள் பதைப்பு இன்னும் கூடியது.
திடீரென்று அந்தச் சாலையின் இடது புறத்தில், எங்கோ வெகுதொலைவு தள்ளி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சுமார் ஐம்பது பேர் ஓடோடி வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து காரை இந்தப் பக்கம் இழுக்க முயற்சிதார்கள். பாதி நம்பிக்கை வந்தது. ஆனால், மூச்.. கார் ஒரு இம்மி கூட நகரவில்லை! கார் போட்ட ஆட்டத்தில் எங்களுக்குப் பாதி உயிர் போய்விட்டது. மரணத்தின் நிழல் கொஞ்ச்சம் கொஞ்சமாக எங்களின் மீது படர ஆரம்பித்தது.
அப்பொழுது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. உதவிக்கு வந்த விவசாயத் தொழிலாளர்கள், அந்த லாரியை வலுக்கட்டாயமாக மறித்து நிறுத்தி, நிலைமையை விளக்கினார்கள். அந்த லாரியின் ஓட்டுனர் தன்னுடைய லாரியை எங்கள் காருக்கு சரியாக நிறுத்தி, ஒரு கயிற்றைக் கட்டி மிகவும் சாதுர்யமாக எங்கள் காரை இழுக்க ஆரம்பித்தார்.
கார் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வர ஆரம்பித்தது. நாங்கள் ஒரு வழியாக மரணத்தை தூர விரட்டி விட்டு மேலே வந்தோம். கரணம் தப்பினால் மரணம் என்று சொன்னால் மிகையாகாது. நன்றியுடன் பெருமூச்சு விட்டோம். நானும் என் மனைவியும் போட்டது வெறும் கூச்சல். கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தது ஆஞ்சநேய ஸ்தோத்திரம்.
அதன் சக்தி தான் இவர்களை இங்கு அனுப்பியதா?..
அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?.. ஆயிரம் ரூபாயை எடுத்துத் தந்து, அவர்களிடம் வைத்துக் கொள்ளச் சொன்னேன். அதில் ஒருவர், என் கண்களையே உற்றுப் பார்த்து, "நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?.. நீங்கள் பத்திரமாக ஊர் போய்ச் சேருங்கள். எங்களுக்கு அது போதும்.." என்றார்.
என்ன ஒரு பண்பாடு! என்ன ஒரு கருணை உள்ளம்! ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன். நெக்குருகிப் போனேன். அந்தக் கருணை உள்ளங்களில் நான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் என்னுடைய தெய்வத்தை நேரில் கைகூப்பித் தரிசித்தேன்!
---- பிரபல இசை விமரிசகர்
சுப்புடு அவர்கள்

நன்றி: ஆனந்த விகடன்
3--11--2002 இதழ்
படங்கள் உதவிய அன்பர்களுக்கு மனம் கனிந்த நன்றி.
இறை பக்தியும் அதிகம்.
தெற்கு பக்கம் நாங்கள் வந்தாலே ஏதாவது ஷேத்திராடனம் செய்ய
வேண்டும் என்று வற்புறுத்துவாள். எனக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. அதற்காக நான் நாத்திகன் என்பது அல்ல. பயணம் செய்வது என்பதே என்னை மிகவும் சோர்வு கொள்ள வைக்கும் விஷயம்.
என்னால் கூட்டங்களில் சிக்கிக் கொள்ள முடியாது. முண்டியடித்து முன்னேறிச் செல்லும் சாமர்த்தியமும் கிடையாது. வாயை வைத்துக் கொண்டு வெறுமனே மென்று கொண்டிருக்காமல் எதையாவது சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது போன்ற விஷயங்களில் மட்டுமே ஆனந்தம் அடைபவன் நான்.
அது 1944 என்று நினைக்கிறேன். எனக்கும் அப்படியொரு ஷேத்திராடனம் மேற்கொள்ளும் வாய்ப்பு நேர்ந்தது. கூடவே, ஒரு அதிர்ஷ்டமும் வாய்த்தது. அது என் நண்பர் கிருஷ்ணமூர்த்தி சிலாக்கியமான ஆஞ்சநேய உபாசகர். குருவாயூர், திருவனந்தபுரம் முதலிய ஷேத்திரங்களுக்கு அவருடன் நானும் என் மனைவியும் கிளம்பினோம்.
சரி.. மறப்பதற்கு முன் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். எங்களுடன் வருவதற்கு கிருஷ்ணமூர்த்தி முன் வந்ததற்கு முக்கியமான காரணம் ஒன்று இருந்தது. அவர் ஆஞ்சநேய உபாசகர் என்று சொன்னேன், அல்லவா?..
என் மனைவியின் சொந்த ஊர் தாராபுரம் அருகிலிருக்கிறா கொளிஞ்சவாடி என்னும் கிராமம். அங்கு ஒரு ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தம். வனவாசத்தின் போது ராமபிரானும் சீதாபிராட்டியும் லஷ்மணனும் அங்கே வந்து தங்கியதாக ஐதிகம். எங்கள் ஷேத்திராடனத்தை முடித்ததும் தாராபுரம் செல்வதாக எங்கள் திட்டம். அந்த ஊர் அஞ்சநேயர் கிருஷ்ண மூர்த்தியை இழுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
சரி, மீண்டும் எங்கள் பயணத்திற்கு வருவோம். கன்யாகுமரியில் அதி அற்புதமான தரிசனம். அதை முடித்து திருவனந்தபுரம் செல்ல ஒரு வாடகை காரை அமர்த்திக் கொண்டு மிகவும் ஆவலுடன் கிளம்பினோம். அந்த ஆவலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள தவறி விட்டோம்.
நாங்கள் கிளம்பிய அன்று திருவனந்தபுரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மறியல் போராட்டம். கார் திருவனந்தபுரத்தில் நுழைந்தது. அங்கு பார்த்தால் மிகப் பெரிய கும்பல் ஒன்று கைகளில் சகலவிதமான ஆயுதங்களையும் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. எங்கும் ஒரே களேபரம். அப்பாவிகளாக உள்ளே நுழைந்த எங்களைச் சூழ்ந்து கொண்டது, அந்தக் கும்பல். எங்கும் வெறிக் கூச்சல்கள். கட்டைகளால் எங்களின் காரைத் தாக்க ஆரம்பித்தது, அந்தக் கும்பல். நாங்கள் நடுநடுங்கி விட்டோம். விவரிக்க முடியாத பதற்றம். உயிர் பயம்.
எந்த நேரமும் எங்களை வெளியே இழுத்துத் தாக்கத் தயாராக இருந்தது அந்தக் கூட்டம். எங்கள் ஓட்டுநர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். மன்றாடிப் பார்த்தார். கேட்பதற்கு யாரும் அங்கு தயாராக இல்லை. நான் நடிகணாகவும் (மேடைகளில் தான்!) இருந்திருக்கிறேன், இல்லையா?.. மனதில் ஒரு நல்ல யுக்தி தோன்றியது. கால்கள் ஊனமானவன் போன்ற பாவனையில் காரை விட்டு இறங்கினேன்.
அந்த மறியல் கூட்டத் தலைவனின் கால்களை இறுகப் பிடித்துக் கொண்டு "ஐயா! நாங்கள் தெரியாமல் இந்த ஊருக்குள் நுழைந்து விட்டோம். பத்மநாப சுவாமியை தரிசிக்கத் தான் நாங்கள் வந்தோம். நான் ஒரு பத்திரிகையாளன். இதோ, என்னுடைய அடையாள அட்டை. எங்களுக்கு சுவாமி தரிசனம் கூட வேண்டாம். நாங்கள் திரும்பிச் செல்ல அனுமதியளித்தால் போதும்.." என்று அழாக்குறையாக மன்றாடினேன்.
கொஞ்ச நேரத்திற்கு நீண்ட அமைதி. கோபமான பார்வைகள். அப்புறம் என்ன தோன்றியதோ தெரியவில்லை.. "போய்க்கோடா.." என்று வெறுப்புடன் சொல்லி நகர்ந்தான். தப்பித்தோம், பிழைத்தோம் என்று எங்கள் காரைக் கிளப்பிக் கொண்டு கிளம்பினோம். அடுத்து இன்னொரு ஆபத்தை நோக்கிப் போகிறோம் என்பது தெரியாமலேயே.
எங்கள் காருக்கு முன்னால் ஒரு பெட்ரோல் டாங்க்கர் சென்று கொண்டு இருந்தது. அதிலிருந்து எண்ணெய் வழியெங்கும் கசிந்து கொண்டே இருந்தது. எங்கள் ஓட்டுநர் ஓட்டிய வேகத்தில், அந்த வழுக்கலில் சக்கரங்கள் சறுக்கி, நிலை தடுமாறி, அருகில் மிகவும் ஆவேசத்துடன் ஓடிக்கொண்டு இருந்த காட்டாறு ஒன்றில் இறங்கி விட்டது எங்கள் கார்.
'இதோடு நம் ஆயுள் முடிந்தது' என்ற தீர்மானத்திற்கு வந்தோம். நடுங்கிய பயத்தில் கண்களை இறுக்க மூடிக் கொண்டோம். நண்பர் கிருஷ்ண மூர்த்தி பரபரப்புடன் ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தை ஜபிக்க ஆரம்பித்து விட்டார். எங்களுடன் ஒட்டியிருந்த கொஞ்சமான நல்ல நேரம் என்னவென்றால், எங்களுடைய கார் ஆற்றின் ஊடாகத் துருத்திக் கொண்டு, உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பிர்மாண்டமான கிளைகளின் இடையே சிக்கி இருந்தது.
ஓட்டுநர் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து, பிரேக்கை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார். விட்டால், அதோகதிதான்... ஆற்று வெள்ளாத்தின் வேகம் எங்கள் காரை இழுத்துக் கொண்டு போய்விடும். எங்கள் உயிர்கள் மீண்டும் எங்கள் கைகளில் இல்லை, . நண்பர் கிருஷ்ணமூர்த்தியைத் தவிர, நாங்கள் எல்லோரும் "ஆபத்து.. ஆபத்து" என்று உதவிக்காகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தோம். அவர், தன்னுடைய ஸ்தோத்திரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். யாரையும் காணோம் எங்கள் பதைப்பு இன்னும் கூடியது.
திடீரென்று அந்தச் சாலையின் இடது புறத்தில், எங்கோ வெகுதொலைவு தள்ளி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சுமார் ஐம்பது பேர் ஓடோடி வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து காரை இந்தப் பக்கம் இழுக்க முயற்சிதார்கள். பாதி நம்பிக்கை வந்தது. ஆனால், மூச்.. கார் ஒரு இம்மி கூட நகரவில்லை! கார் போட்ட ஆட்டத்தில் எங்களுக்குப் பாதி உயிர் போய்விட்டது. மரணத்தின் நிழல் கொஞ்ச்சம் கொஞ்சமாக எங்களின் மீது படர ஆரம்பித்தது.
அப்பொழுது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. உதவிக்கு வந்த விவசாயத் தொழிலாளர்கள், அந்த லாரியை வலுக்கட்டாயமாக மறித்து நிறுத்தி, நிலைமையை விளக்கினார்கள். அந்த லாரியின் ஓட்டுனர் தன்னுடைய லாரியை எங்கள் காருக்கு சரியாக நிறுத்தி, ஒரு கயிற்றைக் கட்டி மிகவும் சாதுர்யமாக எங்கள் காரை இழுக்க ஆரம்பித்தார்.
கார் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வர ஆரம்பித்தது. நாங்கள் ஒரு வழியாக மரணத்தை தூர விரட்டி விட்டு மேலே வந்தோம். கரணம் தப்பினால் மரணம் என்று சொன்னால் மிகையாகாது. நன்றியுடன் பெருமூச்சு விட்டோம். நானும் என் மனைவியும் போட்டது வெறும் கூச்சல். கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தது ஆஞ்சநேய ஸ்தோத்திரம்.
அதன் சக்தி தான் இவர்களை இங்கு அனுப்பியதா?..
அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?.. ஆயிரம் ரூபாயை எடுத்துத் தந்து, அவர்களிடம் வைத்துக் கொள்ளச் சொன்னேன். அதில் ஒருவர், என் கண்களையே உற்றுப் பார்த்து, "நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?.. நீங்கள் பத்திரமாக ஊர் போய்ச் சேருங்கள். எங்களுக்கு அது போதும்.." என்றார்.
என்ன ஒரு பண்பாடு! என்ன ஒரு கருணை உள்ளம்! ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன். நெக்குருகிப் போனேன். அந்தக் கருணை உள்ளங்களில் நான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் என்னுடைய தெய்வத்தை நேரில் கைகூப்பித் தரிசித்தேன்!
---- பிரபல இசை விமரிசகர்
சுப்புடு அவர்கள்

நன்றி: ஆனந்த விகடன்
3--11--2002 இதழ்
படங்கள் உதவிய அன்பர்களுக்கு மனம் கனிந்த நன்றி.