அத்தியாயம்-- 16
மழை விட்டும் தூவானம் விடவில்லை. பிரஞ்சு போலீசாரிடம் சுதேசிகள் பதிவு செய்து கொண்டும் அவர்களை எப்படியாவது புதுச்சேரியிலிருந்து வெளியே கொண்டு வந்து கைது செய்து விடவேண்டுமென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சதித் திட்டம் தீட்டினர். என்ன விலை கொடுத்தும் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வதற்கு தயாராக இருந்தனர்.
மேற்கிந்திய தீவுகளில் சில இடங்கள் பிரிட்டிஷாருக்குச் சொந்தமாக இருந்தன. அந்த இடங்களில் சிலவற்றை பிரஞ்சு அரசுக்குக் கொடுத்து விட்டு ஒரு பண்டமாற்று போல புதுவையை தங்கள் வசப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஒரு யோசனையும் அவர்களுக்கிருந்தது. பிரஞ்சிந்தியா ஆட்சியாளர்களும் இந்த வலையில் சிக்கி விடுவார்கள் என்ற நிலையும் இருந்தது தான் பரிதாபம். அதற்கான உயர்மட்ட பேச்சு வார்த்தைளும் அரசு புரசலாக நடக்க ஆரம்பித்தன.
பாரீஸில் புகழ்பெற்றிருந்த புரூஸன், லா போர்த் போன்ற பிரமுகர்களுக்கு அரவிந்தர் கடிதமெழுதி இந்த ஏற்பாட்டை ஆரம்பத்திலேயே முறியடிக்க முயற்சி செய்தார். பாரதியாரின் அருமை நண்பர் பொன்னு முருகேசன் பிள்ளைக்கு பிரஞ்சு அரசியல் வட்டாரத்தில் சில தொடர்புகள் இருந்தன. வியாபார நண்பர்கள் சிலரின் உதவியையும் நாடி பிரிட்டிஷாரின் சூட்சிகளை முறியடிக்க முருகேசன் வெகுவாக முயன்றார்.
இந்த சமயத்தில் தான் தெய்வாதீனமாக அந்தக் காரியம் நிகழ்ந்து.. பிரஞ்சு மந்திரி சபையில் மிகப்பெரும் மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. ப்வாங்கரே என்றொரு புண்ணியவான் ஆட்சி அதிகாரத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார். இன்றைய சுதந்திர யுகத்தில் கூட 'நான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுவாகத் தான் இருக்கும்' என்று சில அரசியல் வாதிகள் அறிவிப்பு செய்கிறார்கள் அல்லவா, அந்த மாதிரி சாகச அறிவிப்புகள் எல்லாம் செய்யாமலேயே பிரஞ்சு ஆட்சிப் பிரதேசங்களின் மேல் ஆழமான பிடிப்பு வைத்திருந்த ப்வாங்கரே ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்திய சுதேசிகளில் வயிற்றில் பால வார்க்கிற மாதிரி ஒரு காரியத்தைச் செய்தார்.
"பிரஞ்சுக் கொடி பறக்கும் எந்த நாட்டையும் எந்த
பரிவர்த்தனை என்ற பெயலும் இழக்க நான் சம்மதிக்கப் போவதில்லை.." என்று பிரஞ்சு பார்லிமெண்டில் ப்வாங்கரே சூளூரைத்தார்... "பிரஞ்சு வீரர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற பிரதேசங்கள் அவை. எங்களைப் பொறுத்த மட்டில் அந்த வீரர்களின் தியாகத்தில் கிடைத்த புனிதமான பூமி அது. அதுவும் எங்கள் போர்த்தளபதி துய்ப்ளெக்ஸ் உருவச் சிலை கம்பீரமாக கடற்கரையில் நிற்கும் புதுவை மண்ணை எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இழக்க நாங்கள் சம்மதிக்கவே மாட்டோம்.." என்று வீராவேச பிரகடனம் செய்தார்.
ப்வாங்கரேயின் பிரஞ்சுப் பார்லிமெண்ட் உரை புதுவை சுதேசிகள் அத்தனை பேருக்கும் உவப்பான சேதியாக இருந்தது. புதுவைப் பிரதேச பிரான்சு அதிகாரிகளுக்கும் சுதேசிகளின் பால் வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத ஒரு அந்நியோன்யம் நிலவ ஏதுவாயிற்று.
முத்தியாலுப்பேட்டை புதுவையைச் சார்ந்த ஒரு பகுதி.
கிருஷ்ணசாமி செட்டியார் என்றொரு இளைஞர் முத்தியாலுப் பேட்டையிலிருந்து பாரதியாரைப் பார்க்க அடிக்கடி வருவார். கிருஷ்ணசாமி அடிப்படையில் நெசவுத் தொழிலை மேற்கொண்டிருந்தார். அதோடு சேர்ந்து துணி வியாபாரமும் உண்டு. முத்தியாலுப்பேட்டையில் நிலபுலன்களும் அவருக்கு இருந்தன. இவர் பாரதியாரைப் பார்க்க வருவது மனசுக்குப் பிடித்த அன்பர் ஒருவரை தரிசிக்க வருவது போல இருக்கும்.
பாரதியாருக்கு இவர் மேல் நிரம்பப் பிரியம். தான் இயற்றிய பாடல்களை இருபது வயது இளைஞர் கிருஷ்ணசாமிக்கு பாடிக் காட்டுவதில் பாரதியாருக்கு அலாதியான சந்தோஷமும் திருப்தியும் உண்டு. ஆனால் கிருஷ்ணசாமியோ முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பாரதியார் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்கிற மாதிரியான தோற்றம் கொண்டிருப்பார். பாரதியின் கவிதகளை கேட்பதற்கென்றே முத்தியாலுப்பேட்டை யிலிருந்து இங்கு வந்திருப்பவர் போலவும் சமயங்களில் காட்சி தருவார். பார்க்கிறவர்களுக்கு இந்த பாரதி இவரிடம் போய் ஏன் இவ்வளவு சாங்கோபாங்கமாக தன் கவிதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றும்.
புதுச்சேரி வாசமே பாரதியாரின் கவிதா மனோபாவத்திற்கு சிறைவாசம் போல இருந்தது. பாரதியாருக்கு எந்த இடத்திலும் அடைந்து கிடப்பது பிடிக்காது. காலாற நடக்க வேண்டும். இயற்கையின் கொடையை செடி, கொடிகள், வயல், வரப்பு, கடற்கரை என்று ரசித்து புளகாங்கிக்க வேண்டும் என்று உள்ளக்கிளர்ச்சி கொண்டவர் அவர்.
முத்தியாலுபேட்டையில் கிருஷ்ணசாமிக்கு பச்சை பசேலென்று தோட்டம் ஒன்றிருந்தது. இந்த தோட்டத்திற்கு வந்து ஆனந்திப்பதில் பேரின்பம் கண்டார் பாரதி. உணர்வே இல்லாத இறுகிய முக மனிதர்களுடன் உரையாடுவதை விட கிளி, குருவி, குயில் என்று கொஞ்சுவது இயற்கையை
நேசித்த பாரதியாருக்கு இன்ப பொழுதாக இருந்தது. இதற்குள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தத் தோட்டத்தில் தான் பாரதி தனது இறவாப் புகழ் பெற்ற குயில் பாட்டை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார்.
பாரதியார் தம் கவிதைகளை எப்படி இயற்றுவார்?.. எழுதி வைத்துக் கொண்டு பாடுவாரா?.. எழுதி வைத்துக் கொள்ளவில்லை என்றால் வேறு யார் அவர் பாடுவதை எழுதி வைத்தார்கள்?.. எப்படி அவை நமக்குக் கிடைத்தன?-- போன்ற கேள்விகளை முந்தைய பதிவில் பெரியவர் ஜி.எம்.பீ. அவர்கள் எழுப்பியிருந்தார். பாரதியாருடன் கூடப் பழகி இருப்பவர்களுக்குத் தான் இதெல்லாம் தெரியும் என்ற அடிப்படை உண்மையில் வ.ரா. அவர்கள் இது பற்றி எழுதியிருப்பவற்றை இந்த இடத்தில் எடுத்துச் சொல்கிறேன். அவர் சொல்லியிருப்பதை அப்படியே இங்கு எடுத்தாண்டு விட்டால் உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்ற கேள்வி எழாமலும் இருக்கும் தான்.
இதோ பாரதியார் பாடத் துவங்குவதை அதைப் பார்த்த அனுப்வத்தில் வ.ரா. எப்படி வர்ணிக்கிறார், பாருங்கள்:
ஸரிக-க-காமா என்று அவர் வாய்க்குள் சொல்லிக் கொண்டால், புதிய பாட்டுக்குத் தாளம் கோலிக் கொண்டிருக்கிறார் என்று பக்கத்திலிருப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். மரத்தை வெறித்துப் பார்ப்பார்; குளத்தை உற்றுப் பார்ப்பார்; ஆகாயத்தை முட்டுகிறாற்போல மார்வை வெளியே தள்ளி. தலையை எவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்திப் பார்ப்பார்; ஸஸ்ஸ - ஸஸ்ஸ- ஸஸ்ஸ என்று மூச்சு விடாமல், உரக்கக் கத்துவார். வலக்காலால் தாளம் போடுவார்; தவறிப் போனால் இடக்காலால் பூமியை உதைப்பார். ஒரு நிமிஷம்- மெளனம். "சொல் ஆழி வெண் சங்கே' என்ற கூக்குரல். கூப்பாடு. இல்லாவிட்டால் தாயுமானவரின் கண்ணிகளில் ஒன்று. "மத்த கஜம் எனை வளர்த்தாய்" என்ற சந்தோஷ முறையீடு. மீண்டும் ஒரு முறை ஸரிக-க-காமா.
குழந்தையைப் பெற்றெடுக்கும் பிரசவ வேதனை தான். உற்சாகமும், சோர்வும் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு வெளி வருவதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மனித உலகத்தோடு பாரதியாருக்கு அப்பொழுது உறவே கிடையாது என்று சொல்லி விடலாம். புதுப்பாட்டு வருகிற வேகத்தில், அது அவருடைய கூட்டையே முறித்து விடுமோ என்று தோன்றும். பாரதியாரின் கீதங்களில் ரத்தப் பசை, ஜீவக்களை இருக்கிறது என்று சொல்லுவதில் பொய்யே கிடையாது.
கலைஞர்கள், மேதாவிகள் புதுக்கருத்துக்களை உலகத்துக்கு அறிவிக்கையில் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை உலகம் தெரிந்து கொள்ள முடியாது. புதுக்கருத்து ஒன்று--ஜீவ களை நிறைந்த கருத்து; மேதாவிகளின் உள்ளத்திலிருந்து வெளி வருவதற்குள் அதே உடல் முழுவதையும் குலுக்கி, நடுநடுங்கச் செய்து பிராணனை அரைகுறைப் பிராணனாகச் செய்து விடுகிறது. உலகத்துக்காக மேதாவிகள் ஒவ்வொரு நிமிஷமும் உயிரை விடுகிறார்கள் என்பது பல வகைகளிலும் உண்மை.

'நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை' என்ற உண்மையை எந்த மனிதன் உணர்கிறானோ, அவன் கவி. அவனுக்குப் பகைமை கிடையாது. எனவே, பலவீனம் துளிக் கூடக் கிடையாது. 'நோக்க நோக்கக் களியாட்டம்' அவனுக்கு ஏற்படுவதற்கு என்ன ஆட்சேபணையிருக்கிறது?
முத்தியாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே, நோக்கி நோக்கி களியாட்டம் ஆடுவார் பாரதியார். அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடையும். உன்மத்தனைப் போல- வெறி கொண்டவனைப் போல - சில சமயங்களில் அவர் ஆகிவிடுவார். இயற்கையின் மின்சார சக்தி, கவிதை உணர்ச்சி என்ற கம்பி மூலமாகப் பாரதியாரின் உடலிலும் உள்ளத்திலும் நுழைந்து பாய்ந்து, பரவி, பூரித்துப் போகும் பொழுது, அவர் ஆனந்தக் கூத்திடாமல் சும்மா இருக்க முடியுமா?.. குரலிலே ஸரிக-க-காமா; காலிலே தாளம்; கைகள் கொட்டி முழங்கும். உடல் முழுவதும் அபிநயம் தான். தேகமும் மனமும் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் சக்தியையும் கண்கள் வெளிக் காண்பிக்கும்.
குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்து விடும் தாய்மார்களைப் போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்து போய், மண் தரையில் படுத்துக் கொள்வார். தலைக்குயரமாய் எதையும் வேண்டார். எதையும் கொடுக்க எங்களுக்குத் தைரியமும் உண்டானதில்லை, இயற்கைத் தாய் நர்த்தனம் செய்த உடலுக்கு இயற்கையான சயனந்தான் வேண்டும் போலும்!..
வ.ரா.வின் பார்வையே அலாதி தான். அதுவும் பாரதியாருக்கு அணுக்க நண்பராய் இருந்து அவரது சோர்விலும் சந்தோஷத்திலும் பங்கு கொண்டவர். பாரதியாரின் வாழ்க்கைச் சரிதத்தை வ.ரா.அவருக்குத் தெரிந்தவாறு உள்ளது உள்ளபடி எழுதி வைக்கவில்லை என்றால் இந்த சரித்திரமெல்லாம் நமக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது என்ற ஆற்றாமையில் மனம் நெகிழ்ந்து போகிறது.
(வளரும்)
படங்கள் அளித்தவர்களுக்கு நன்றி.
மழை விட்டும் தூவானம் விடவில்லை. பிரஞ்சு போலீசாரிடம் சுதேசிகள் பதிவு செய்து கொண்டும் அவர்களை எப்படியாவது புதுச்சேரியிலிருந்து வெளியே கொண்டு வந்து கைது செய்து விடவேண்டுமென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சதித் திட்டம் தீட்டினர். என்ன விலை கொடுத்தும் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வதற்கு தயாராக இருந்தனர்.
மேற்கிந்திய தீவுகளில் சில இடங்கள் பிரிட்டிஷாருக்குச் சொந்தமாக இருந்தன. அந்த இடங்களில் சிலவற்றை பிரஞ்சு அரசுக்குக் கொடுத்து விட்டு ஒரு பண்டமாற்று போல புதுவையை தங்கள் வசப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஒரு யோசனையும் அவர்களுக்கிருந்தது. பிரஞ்சிந்தியா ஆட்சியாளர்களும் இந்த வலையில் சிக்கி விடுவார்கள் என்ற நிலையும் இருந்தது தான் பரிதாபம். அதற்கான உயர்மட்ட பேச்சு வார்த்தைளும் அரசு புரசலாக நடக்க ஆரம்பித்தன.
பாரீஸில் புகழ்பெற்றிருந்த புரூஸன், லா போர்த் போன்ற பிரமுகர்களுக்கு அரவிந்தர் கடிதமெழுதி இந்த ஏற்பாட்டை ஆரம்பத்திலேயே முறியடிக்க முயற்சி செய்தார். பாரதியாரின் அருமை நண்பர் பொன்னு முருகேசன் பிள்ளைக்கு பிரஞ்சு அரசியல் வட்டாரத்தில் சில தொடர்புகள் இருந்தன. வியாபார நண்பர்கள் சிலரின் உதவியையும் நாடி பிரிட்டிஷாரின் சூட்சிகளை முறியடிக்க முருகேசன் வெகுவாக முயன்றார்.
இந்த சமயத்தில் தான் தெய்வாதீனமாக அந்தக் காரியம் நிகழ்ந்து.. பிரஞ்சு மந்திரி சபையில் மிகப்பெரும் மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. ப்வாங்கரே என்றொரு புண்ணியவான் ஆட்சி அதிகாரத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார். இன்றைய சுதந்திர யுகத்தில் கூட 'நான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுவாகத் தான் இருக்கும்' என்று சில அரசியல் வாதிகள் அறிவிப்பு செய்கிறார்கள் அல்லவா, அந்த மாதிரி சாகச அறிவிப்புகள் எல்லாம் செய்யாமலேயே பிரஞ்சு ஆட்சிப் பிரதேசங்களின் மேல் ஆழமான பிடிப்பு வைத்திருந்த ப்வாங்கரே ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்திய சுதேசிகளில் வயிற்றில் பால வார்க்கிற மாதிரி ஒரு காரியத்தைச் செய்தார்.
"பிரஞ்சுக் கொடி பறக்கும் எந்த நாட்டையும் எந்த

ப்வாங்கரேயின் பிரஞ்சுப் பார்லிமெண்ட் உரை புதுவை சுதேசிகள் அத்தனை பேருக்கும் உவப்பான சேதியாக இருந்தது. புதுவைப் பிரதேச பிரான்சு அதிகாரிகளுக்கும் சுதேசிகளின் பால் வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத ஒரு அந்நியோன்யம் நிலவ ஏதுவாயிற்று.
முத்தியாலுப்பேட்டை புதுவையைச் சார்ந்த ஒரு பகுதி.
கிருஷ்ணசாமி செட்டியார் என்றொரு இளைஞர் முத்தியாலுப் பேட்டையிலிருந்து பாரதியாரைப் பார்க்க அடிக்கடி வருவார். கிருஷ்ணசாமி அடிப்படையில் நெசவுத் தொழிலை மேற்கொண்டிருந்தார். அதோடு சேர்ந்து துணி வியாபாரமும் உண்டு. முத்தியாலுப்பேட்டையில் நிலபுலன்களும் அவருக்கு இருந்தன. இவர் பாரதியாரைப் பார்க்க வருவது மனசுக்குப் பிடித்த அன்பர் ஒருவரை தரிசிக்க வருவது போல இருக்கும்.
பாரதியாருக்கு இவர் மேல் நிரம்பப் பிரியம். தான் இயற்றிய பாடல்களை இருபது வயது இளைஞர் கிருஷ்ணசாமிக்கு பாடிக் காட்டுவதில் பாரதியாருக்கு அலாதியான சந்தோஷமும் திருப்தியும் உண்டு. ஆனால் கிருஷ்ணசாமியோ முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பாரதியார் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்கிற மாதிரியான தோற்றம் கொண்டிருப்பார். பாரதியின் கவிதகளை கேட்பதற்கென்றே முத்தியாலுப்பேட்டை யிலிருந்து இங்கு வந்திருப்பவர் போலவும் சமயங்களில் காட்சி தருவார். பார்க்கிறவர்களுக்கு இந்த பாரதி இவரிடம் போய் ஏன் இவ்வளவு சாங்கோபாங்கமாக தன் கவிதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றும்.
புதுச்சேரி வாசமே பாரதியாரின் கவிதா மனோபாவத்திற்கு சிறைவாசம் போல இருந்தது. பாரதியாருக்கு எந்த இடத்திலும் அடைந்து கிடப்பது பிடிக்காது. காலாற நடக்க வேண்டும். இயற்கையின் கொடையை செடி, கொடிகள், வயல், வரப்பு, கடற்கரை என்று ரசித்து புளகாங்கிக்க வேண்டும் என்று உள்ளக்கிளர்ச்சி கொண்டவர் அவர்.
முத்தியாலுபேட்டையில் கிருஷ்ணசாமிக்கு பச்சை பசேலென்று தோட்டம் ஒன்றிருந்தது. இந்த தோட்டத்திற்கு வந்து ஆனந்திப்பதில் பேரின்பம் கண்டார் பாரதி. உணர்வே இல்லாத இறுகிய முக மனிதர்களுடன் உரையாடுவதை விட கிளி, குருவி, குயில் என்று கொஞ்சுவது இயற்கையை
நேசித்த பாரதியாருக்கு இன்ப பொழுதாக இருந்தது. இதற்குள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தத் தோட்டத்தில் தான் பாரதி தனது இறவாப் புகழ் பெற்ற குயில் பாட்டை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார்.
பாரதியார் தம் கவிதைகளை எப்படி இயற்றுவார்?.. எழுதி வைத்துக் கொண்டு பாடுவாரா?.. எழுதி வைத்துக் கொள்ளவில்லை என்றால் வேறு யார் அவர் பாடுவதை எழுதி வைத்தார்கள்?.. எப்படி அவை நமக்குக் கிடைத்தன?-- போன்ற கேள்விகளை முந்தைய பதிவில் பெரியவர் ஜி.எம்.பீ. அவர்கள் எழுப்பியிருந்தார். பாரதியாருடன் கூடப் பழகி இருப்பவர்களுக்குத் தான் இதெல்லாம் தெரியும் என்ற அடிப்படை உண்மையில் வ.ரா. அவர்கள் இது பற்றி எழுதியிருப்பவற்றை இந்த இடத்தில் எடுத்துச் சொல்கிறேன். அவர் சொல்லியிருப்பதை அப்படியே இங்கு எடுத்தாண்டு விட்டால் உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்ற கேள்வி எழாமலும் இருக்கும் தான்.
இதோ பாரதியார் பாடத் துவங்குவதை அதைப் பார்த்த அனுப்வத்தில் வ.ரா. எப்படி வர்ணிக்கிறார், பாருங்கள்:
ஸரிக-க-காமா என்று அவர் வாய்க்குள் சொல்லிக் கொண்டால், புதிய பாட்டுக்குத் தாளம் கோலிக் கொண்டிருக்கிறார் என்று பக்கத்திலிருப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். மரத்தை வெறித்துப் பார்ப்பார்; குளத்தை உற்றுப் பார்ப்பார்; ஆகாயத்தை முட்டுகிறாற்போல மார்வை வெளியே தள்ளி. தலையை எவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்திப் பார்ப்பார்; ஸஸ்ஸ - ஸஸ்ஸ- ஸஸ்ஸ என்று மூச்சு விடாமல், உரக்கக் கத்துவார். வலக்காலால் தாளம் போடுவார்; தவறிப் போனால் இடக்காலால் பூமியை உதைப்பார். ஒரு நிமிஷம்- மெளனம். "சொல் ஆழி வெண் சங்கே' என்ற கூக்குரல். கூப்பாடு. இல்லாவிட்டால் தாயுமானவரின் கண்ணிகளில் ஒன்று. "மத்த கஜம் எனை வளர்த்தாய்" என்ற சந்தோஷ முறையீடு. மீண்டும் ஒரு முறை ஸரிக-க-காமா.
குழந்தையைப் பெற்றெடுக்கும் பிரசவ வேதனை தான். உற்சாகமும், சோர்வும் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு வெளி வருவதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மனித உலகத்தோடு பாரதியாருக்கு அப்பொழுது உறவே கிடையாது என்று சொல்லி விடலாம். புதுப்பாட்டு வருகிற வேகத்தில், அது அவருடைய கூட்டையே முறித்து விடுமோ என்று தோன்றும். பாரதியாரின் கீதங்களில் ரத்தப் பசை, ஜீவக்களை இருக்கிறது என்று சொல்லுவதில் பொய்யே கிடையாது.
கலைஞர்கள், மேதாவிகள் புதுக்கருத்துக்களை உலகத்துக்கு அறிவிக்கையில் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை உலகம் தெரிந்து கொள்ள முடியாது. புதுக்கருத்து ஒன்று--ஜீவ களை நிறைந்த கருத்து; மேதாவிகளின் உள்ளத்திலிருந்து வெளி வருவதற்குள் அதே உடல் முழுவதையும் குலுக்கி, நடுநடுங்கச் செய்து பிராணனை அரைகுறைப் பிராணனாகச் செய்து விடுகிறது. உலகத்துக்காக மேதாவிகள் ஒவ்வொரு நிமிஷமும் உயிரை விடுகிறார்கள் என்பது பல வகைகளிலும் உண்மை.

'நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை' என்ற உண்மையை எந்த மனிதன் உணர்கிறானோ, அவன் கவி. அவனுக்குப் பகைமை கிடையாது. எனவே, பலவீனம் துளிக் கூடக் கிடையாது. 'நோக்க நோக்கக் களியாட்டம்' அவனுக்கு ஏற்படுவதற்கு என்ன ஆட்சேபணையிருக்கிறது?
முத்தியாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே, நோக்கி நோக்கி களியாட்டம் ஆடுவார் பாரதியார். அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடையும். உன்மத்தனைப் போல- வெறி கொண்டவனைப் போல - சில சமயங்களில் அவர் ஆகிவிடுவார். இயற்கையின் மின்சார சக்தி, கவிதை உணர்ச்சி என்ற கம்பி மூலமாகப் பாரதியாரின் உடலிலும் உள்ளத்திலும் நுழைந்து பாய்ந்து, பரவி, பூரித்துப் போகும் பொழுது, அவர் ஆனந்தக் கூத்திடாமல் சும்மா இருக்க முடியுமா?.. குரலிலே ஸரிக-க-காமா; காலிலே தாளம்; கைகள் கொட்டி முழங்கும். உடல் முழுவதும் அபிநயம் தான். தேகமும் மனமும் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் சக்தியையும் கண்கள் வெளிக் காண்பிக்கும்.
குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்து விடும் தாய்மார்களைப் போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்து போய், மண் தரையில் படுத்துக் கொள்வார். தலைக்குயரமாய் எதையும் வேண்டார். எதையும் கொடுக்க எங்களுக்குத் தைரியமும் உண்டானதில்லை, இயற்கைத் தாய் நர்த்தனம் செய்த உடலுக்கு இயற்கையான சயனந்தான் வேண்டும் போலும்!..
வ.ரா.வின் பார்வையே அலாதி தான். அதுவும் பாரதியாருக்கு அணுக்க நண்பராய் இருந்து அவரது சோர்விலும் சந்தோஷத்திலும் பங்கு கொண்டவர். பாரதியாரின் வாழ்க்கைச் சரிதத்தை வ.ரா.அவருக்குத் தெரிந்தவாறு உள்ளது உள்ளபடி எழுதி வைக்கவில்லை என்றால் இந்த சரித்திரமெல்லாம் நமக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது என்ற ஆற்றாமையில் மனம் நெகிழ்ந்து போகிறது.
(வளரும்)
படங்கள் அளித்தவர்களுக்கு நன்றி.