புதிய பகுதி:
ஆரம்பித்து வைக்கும் முன்னுரை
நாம் நினைப்பதை எப்படி வார்த்தைகளில் பிறருக்குத் தெரிவிக்கிறோம் என்பது மிகப் பெரிய கலை. அதனால் தான் பேச்சுக்கலை அரசியல்வாதிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது. அரசியல்வாதிகளால் வெகுதிரள் மக்களுக்கு பலன் கிடைக்கிறதோ இல்லையோ, அது பெரிய விஷயமில்லை, பேசத்தெரிந்திருந்தால் போதும் அவர் தன் ப்ரொபஷனில் ஜெயித்து விடுவார் என்று நிச்சயமாய் சொல்லி விடும் அளவுக்கு அரசியல் உலகில் பேச்சுக்கலை வெற்றிகரமாக வலம் வருகிறது.
பேச்சுக்கலையைப் போலத் தான் எழுதுகலையும். வாசகர்கள் ரசித்துப் படிக்கிற மாதிரி எழுதத் தெரிந்தால் போதும், இந்தத் துறையில் வெற்றிக்கொடி நாட்டி விடலாம் என்பது வாசிப்புலகில் பலர் ஏற்றுக் கொள்கிற கருத்தாகியிருக்கிறது.

'வாசகர்கள் ரசிக்கிற மாதிரி' என்பதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
1. வாசகர்கள் பொதுவாக ரசிக்கக் கூடியவைகள் என்று சிலது இருக்கின்றன. (உ-ம்) 'காதல்' போன்ற இனக்கவர்ச்சி விஷயங்களை கையாளுகிற விதத்தில் கையாளுகிற மாதிரி எழுதுவது, எதை எழுதினாலும் அதல் நகைச்சுவை கலந்து எழுதுவது என்பது மாதிரி சில விஷயங்கள் இருக்கின்றன. இந்த மாதிரி சில சொக்குப்பொடிகளைத் தூவி வாசிப்பவர்களை மயக்கவும் செய்யலாம்.
2. இரண்டாவது தான் எழுதுவதை வாசகர்கள் ரசிக்கிற மாதிரி எழுதுவது. வாசகர் பிடிக்குத் தான் போகாமல் தன் பிடிக்கு வாசகர்களை வளைத்துப் பிடிப்பது. பிடித்த பிறகு தன் ரசிப்புகளை வாசகர்களின் ரசிப்பாக்குவது.
இந்த இரண்டாவது சொன்ன விஷயத்தில் எழுத்தாளர் சுஜாதா சமர்த்தர். அவர் அவரது லான்ட்ரி கணக்கை எழுதினாலும் சுவைபட எழுதுவார் என்பது தெரிந்த விஷயம் சொல்லப்போனால் சுஜாதாவின் வெற்றியே எழுதுகலையில் துறைபோகிய ஞானத்துடன் தனக்குப் பிடித்ததைச் சொல்லி அதைக் கையாண்ட ரகசியத்தில் அடக்கம்.
இந்த விஷயத்தில் தமிழ் எழுத்துலகில் சுஜாதா ஒரு துருவ நட்சத்திரம். தனக்கு முன்னாலும் பின்னாலும் தன்னைப்போல் பிரிதொருவர் இல்லாமல் தனித்த நட்சத்திரமாய் ஜொலித்த தனித்தன்மையான ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்.
அதனாலேயே தமிழ் எழுத்துலகின் அவரது இனிய வாசகர்களுக்கு அவர் வாத்தியார் ஆனார்.. பத்திரிகைகளில் கதை எழுதுவது தான் எழுத்தாளர்களின் வேலை என்ற நிலையை மாற்றி தாயினும் சாலப்பரிந்து தன் அனுபவத்தில் தான் பெற்ற கல்வியை தனது அருமை வாசகர்களுக்கும் புகட்டிய விநோதமான வாத்தியார் அவர்.
எந்தத் துறையிலும் வெற்றி ஒரு போதை. அந்தப் போதையிலிருந்து விலகத் தெரிந்தவர்கள், செய்யும் காரியங்களில் ஒரு தார்மீக பலத்தைப் பெற்றிருப்பார்கள். விலகத் தெரிந்திருந்தாலும் சில நிர்பந்தங்களினால் சில சுமைகளை ஏற்க நேரிடவும் கூடும். யார் யாரை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதின் அடிப்படையில் வேண்டாத சுமைகளையும் ஏற்க நேரிடும்.
அப்படி வேண்டாத சுமைகளாக பத்திரிகைகளின் விருப்பத்திற்கும் அந்தந்த பத்திரிகைகளின் வாசக வட்ட எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப எழுத வேண்டிய நிர்பந்தங்களும் அவருக்கு ஏற்பட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தும் பொழுது போக்கு வாசகர்களையும் அணைத்துக் கொள்கிற விதத்தில் தன் படைப்புகளை வார்த்தெடுத்தது தான் அவரது அசாத்தியமான சாமர்த்தியம்.
சுஜாதாவுக்கென்றே தனித்த ஒரு பாணி உண்டு. அந்த பாணியை அவருக்கு முன்னால் நடந்தவர்களின் பாணியாக இல்லாமல் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், பின்னால் வந்தவர்களும் தன் அளவுக்குத் தன் பாணியை கைக்கொள்ள முடியாத அளவுக்கு தனக்கே உரித்ததாக அமைத்துக் கொண்ட சிறப்பு சுஜாதாவுக்கு உண்டு.
தனக்கு அறிமுகமான அறிவியல் உலகையும் தமிழ் மரபுக்கென்றே வாய்த்த ஞானச்செல்வங்களையும் சம அளவில் கலந்து பிசைந்து தன் ரசவாத எழுத்தில் புதைத்து எளிமையான கட்டுரைகளாய் தனது வாசகர்களுக்கு அவர் பரிமாறிய நேர்த்தி அவருக்கான நமது நன்றியாய் நிலைத்து நிற்கிறது.
அறிவியல் உலகு நாள்தோறும் தன்னுள் வளர்ச்சி கொள்வதையே விஞ்ஞான உண்மையாய் கொண்ட ஒன்று. ஞான மரபுப் புதையல்களோ அவற்றின் விழுமிய நெறிகளைக் கற்கக்கற்க புதிய கல்வியாய் நம்முள் புதைந்து நம் செயல்பாடுகளில் மாற்றங்களை விளவிக்க சக்தி கொண்டதாய் திகழ்வது. இந்த இரண்டையும் கலந்து பிசைந்து தனக்கே உரிய பாணியில் சுஜாதா சொன்ன விஷயங்கள் சுஜாதாவோடு போய் விடக் கூடாது என்பது தான் இந்தத் தொடர் பதிவுகளுக்கான நோக்கம்.
அதனால் சுஜாதா எழுதிய விஷயங்களில் சுஜாதைத் தொடர்ந்து அவர் விட்ட இடத்திலிருந்து சொல்ல நாம் முயற்சிப்போம். ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய விஷயங்களின் தொடர்ச்சியாய் காலத்தின் வளர்ச்சிப் போக்கில் அந்தந்த விஷயங்களில் நாம் கற்றுக் கொண்டதை அலசுவோம். இதுவே சுஜாதாவுக்கான பெருமையும் ஆகும்.
வழக்கமான ஓரிரு வரி பின்னூட்டங்களை மறந்து விடுங்கள். சுஜாதா சொன்ன விஷயங்களில் அவர் சொன்னதற்குத் தொடர்ச்சியாய் ஒரு கலந்துரையாடல் போலக் கலந்து கொள்ளுங்கள்.
ஒருவர் சொன்னதைத் தொட்டோ, இல்லை சுஜாதா சொன்னதின் நீட்சியாகவோ கருத்துக்கள் அமைந்து அவற்றை அலசும் போக்கில் உங்கள் கருத்துக்கள் நீண்டால் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' கட்டுரைகளின் பிற்கால தரிசனமாய் அமையும்.
வாருங்கள், நண்பர்களே! கலந்துரையாடலைத் தொடர வாருங்கள்!
கட்டுரை-- 1
அறிவியலில் முக்கியமான கேள்விகளில் ஒன்று மனித குணங்கள் உருவாவது பிறப்பிலா, வளர்ப்பிலா என்கிற கேள்வி.
சென்ற இருபதாம் நூற்றாண்டின் பாதிவரை விஞ்ஞானிகள் 'எல்லாமே சூழ்நிலை தான். சூழ்நிலை சரியாக அமைந்தால் ஒரு நல்ல மனிதனை உருவாக்க முடியும். பிரச்னையே இல்லை' என்று நம்பினார்கள். இந்த நம்பிக்கை டி.என்.ஏ. ஆராய்ச்சி வலுப்பட்டதும் கொஞ்சம் பின்வாங்கி விட்டது. மெல்ல மெல்ல பிறப்பில் நம் வியாதிகள் மட்டுமல்ல குணாதிசயங்களின் காரணங்களும் இருக்கின்றன' என்று கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
பல ஈக்கள், எலிகளிலிருந்து மானுட இரட்டையர்கள் வரை கவனிக்கும் பொழுது பல ஆச்சரியங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. ஒரே தோற்றமுள்ள இரட்டையர்கள் ஒரே சமயத்தில் பிறந்து தோற்றத்தில் வேறுபட்ட Fraternal twin-- இரட்டையர்கள் இரு வகையினரையும் ஒரே சூழ்நிலையிலும் வேறுபட்ட சூழ்நிலையிலும் வளர்த்து கிடைத்த விவரங்களிலிருந்து தெரியும் தகவல் -- நம் பிறப்பு, குணாதிசயங்களை முப்பதிலிருந்து எழுபது சதவீதம் வரை நிர்ணயிக்கிறது என்பதே.
ஆனால் ஒரு குணத்திற்கு ஒரு ஜீன் என்று சொல்ல முடியவில்லை. ஒரு வியாதிக்கு ஒரு ஜீன் என்று சொல்ல முடிகிறது. உதாரணம் சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ். ஆனால் குடிப்பழக்கத்திற்கு என்று ஒரு ஜீன் இருக்கிறதா, கோபத்திற்கு ஒரு ஜீன் உண்டா?-- இப்படி திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை.
இந்தப் பழக்கங்களுக்குக் காரணம் பிறப்பும் வளர்ப்பும் கலந்தது என்று சொல்கிறார்கள். இருபத்து மூன்று க்ரோமோசோம்களில் எந்த க்ரோமோசோம் எந்த குணத்தை நிர்ணயிக்கிறது என்பதை குத்து மதிப்பாகத் தான் சொல்ல முடிகிறது. உதாரணம்: 'ஆட்டிசம்' என்னும் ஒரு மனோவியாதிக்குக் காரணம் க்ரோமோசோம் என்பது தெரிகிறது.
இந்த ஆராய்ச்சி ஆரம்ப நிலையில் இருக்கிறது-- மாலிக்யுலர் பயாலஜியின் உதவியுடன். இந்த தகவல் வங்கி சேரச் சேர எதிர்காலத்தில் ஒரு ஆள் உங்களைக் கடக்கும் போது காரணமில்லாமல் விரல்களை முறுக்கி முஷ்டியை உயர்த்தி '....த்தா டேய்' என்றால், உன்னுடைய பதிமூன்றாவது க்ரோமோசோம் சரியில்லைப்பா...' என்று சொல்ல முடியும் என எதிர்பார்க்கிறார்கள்.
--- சுஜாதா
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
ஆரம்பித்து வைக்கும் முன்னுரை
நாம் நினைப்பதை எப்படி வார்த்தைகளில் பிறருக்குத் தெரிவிக்கிறோம் என்பது மிகப் பெரிய கலை. அதனால் தான் பேச்சுக்கலை அரசியல்வாதிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது. அரசியல்வாதிகளால் வெகுதிரள் மக்களுக்கு பலன் கிடைக்கிறதோ இல்லையோ, அது பெரிய விஷயமில்லை, பேசத்தெரிந்திருந்தால் போதும் அவர் தன் ப்ரொபஷனில் ஜெயித்து விடுவார் என்று நிச்சயமாய் சொல்லி விடும் அளவுக்கு அரசியல் உலகில் பேச்சுக்கலை வெற்றிகரமாக வலம் வருகிறது.
பேச்சுக்கலையைப் போலத் தான் எழுதுகலையும். வாசகர்கள் ரசித்துப் படிக்கிற மாதிரி எழுதத் தெரிந்தால் போதும், இந்தத் துறையில் வெற்றிக்கொடி நாட்டி விடலாம் என்பது வாசிப்புலகில் பலர் ஏற்றுக் கொள்கிற கருத்தாகியிருக்கிறது.

'வாசகர்கள் ரசிக்கிற மாதிரி' என்பதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
1. வாசகர்கள் பொதுவாக ரசிக்கக் கூடியவைகள் என்று சிலது இருக்கின்றன. (உ-ம்) 'காதல்' போன்ற இனக்கவர்ச்சி விஷயங்களை கையாளுகிற விதத்தில் கையாளுகிற மாதிரி எழுதுவது, எதை எழுதினாலும் அதல் நகைச்சுவை கலந்து எழுதுவது என்பது மாதிரி சில விஷயங்கள் இருக்கின்றன. இந்த மாதிரி சில சொக்குப்பொடிகளைத் தூவி வாசிப்பவர்களை மயக்கவும் செய்யலாம்.
2. இரண்டாவது தான் எழுதுவதை வாசகர்கள் ரசிக்கிற மாதிரி எழுதுவது. வாசகர் பிடிக்குத் தான் போகாமல் தன் பிடிக்கு வாசகர்களை வளைத்துப் பிடிப்பது. பிடித்த பிறகு தன் ரசிப்புகளை வாசகர்களின் ரசிப்பாக்குவது.
இந்த இரண்டாவது சொன்ன விஷயத்தில் எழுத்தாளர் சுஜாதா சமர்த்தர். அவர் அவரது லான்ட்ரி கணக்கை எழுதினாலும் சுவைபட எழுதுவார் என்பது தெரிந்த விஷயம் சொல்லப்போனால் சுஜாதாவின் வெற்றியே எழுதுகலையில் துறைபோகிய ஞானத்துடன் தனக்குப் பிடித்ததைச் சொல்லி அதைக் கையாண்ட ரகசியத்தில் அடக்கம்.
இந்த விஷயத்தில் தமிழ் எழுத்துலகில் சுஜாதா ஒரு துருவ நட்சத்திரம். தனக்கு முன்னாலும் பின்னாலும் தன்னைப்போல் பிரிதொருவர் இல்லாமல் தனித்த நட்சத்திரமாய் ஜொலித்த தனித்தன்மையான ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்.
அதனாலேயே தமிழ் எழுத்துலகின் அவரது இனிய வாசகர்களுக்கு அவர் வாத்தியார் ஆனார்.. பத்திரிகைகளில் கதை எழுதுவது தான் எழுத்தாளர்களின் வேலை என்ற நிலையை மாற்றி தாயினும் சாலப்பரிந்து தன் அனுபவத்தில் தான் பெற்ற கல்வியை தனது அருமை வாசகர்களுக்கும் புகட்டிய விநோதமான வாத்தியார் அவர்.
எந்தத் துறையிலும் வெற்றி ஒரு போதை. அந்தப் போதையிலிருந்து விலகத் தெரிந்தவர்கள், செய்யும் காரியங்களில் ஒரு தார்மீக பலத்தைப் பெற்றிருப்பார்கள். விலகத் தெரிந்திருந்தாலும் சில நிர்பந்தங்களினால் சில சுமைகளை ஏற்க நேரிடவும் கூடும். யார் யாரை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதின் அடிப்படையில் வேண்டாத சுமைகளையும் ஏற்க நேரிடும்.
அப்படி வேண்டாத சுமைகளாக பத்திரிகைகளின் விருப்பத்திற்கும் அந்தந்த பத்திரிகைகளின் வாசக வட்ட எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப எழுத வேண்டிய நிர்பந்தங்களும் அவருக்கு ஏற்பட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தும் பொழுது போக்கு வாசகர்களையும் அணைத்துக் கொள்கிற விதத்தில் தன் படைப்புகளை வார்த்தெடுத்தது தான் அவரது அசாத்தியமான சாமர்த்தியம்.
சுஜாதாவுக்கென்றே தனித்த ஒரு பாணி உண்டு. அந்த பாணியை அவருக்கு முன்னால் நடந்தவர்களின் பாணியாக இல்லாமல் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், பின்னால் வந்தவர்களும் தன் அளவுக்குத் தன் பாணியை கைக்கொள்ள முடியாத அளவுக்கு தனக்கே உரித்ததாக அமைத்துக் கொண்ட சிறப்பு சுஜாதாவுக்கு உண்டு.
தனக்கு அறிமுகமான அறிவியல் உலகையும் தமிழ் மரபுக்கென்றே வாய்த்த ஞானச்செல்வங்களையும் சம அளவில் கலந்து பிசைந்து தன் ரசவாத எழுத்தில் புதைத்து எளிமையான கட்டுரைகளாய் தனது வாசகர்களுக்கு அவர் பரிமாறிய நேர்த்தி அவருக்கான நமது நன்றியாய் நிலைத்து நிற்கிறது.
அறிவியல் உலகு நாள்தோறும் தன்னுள் வளர்ச்சி கொள்வதையே விஞ்ஞான உண்மையாய் கொண்ட ஒன்று. ஞான மரபுப் புதையல்களோ அவற்றின் விழுமிய நெறிகளைக் கற்கக்கற்க புதிய கல்வியாய் நம்முள் புதைந்து நம் செயல்பாடுகளில் மாற்றங்களை விளவிக்க சக்தி கொண்டதாய் திகழ்வது. இந்த இரண்டையும் கலந்து பிசைந்து தனக்கே உரிய பாணியில் சுஜாதா சொன்ன விஷயங்கள் சுஜாதாவோடு போய் விடக் கூடாது என்பது தான் இந்தத் தொடர் பதிவுகளுக்கான நோக்கம்.
அதனால் சுஜாதா எழுதிய விஷயங்களில் சுஜாதைத் தொடர்ந்து அவர் விட்ட இடத்திலிருந்து சொல்ல நாம் முயற்சிப்போம். ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய விஷயங்களின் தொடர்ச்சியாய் காலத்தின் வளர்ச்சிப் போக்கில் அந்தந்த விஷயங்களில் நாம் கற்றுக் கொண்டதை அலசுவோம். இதுவே சுஜாதாவுக்கான பெருமையும் ஆகும்.
வழக்கமான ஓரிரு வரி பின்னூட்டங்களை மறந்து விடுங்கள். சுஜாதா சொன்ன விஷயங்களில் அவர் சொன்னதற்குத் தொடர்ச்சியாய் ஒரு கலந்துரையாடல் போலக் கலந்து கொள்ளுங்கள்.
ஒருவர் சொன்னதைத் தொட்டோ, இல்லை சுஜாதா சொன்னதின் நீட்சியாகவோ கருத்துக்கள் அமைந்து அவற்றை அலசும் போக்கில் உங்கள் கருத்துக்கள் நீண்டால் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' கட்டுரைகளின் பிற்கால தரிசனமாய் அமையும்.
வாருங்கள், நண்பர்களே! கலந்துரையாடலைத் தொடர வாருங்கள்!
கட்டுரை-- 1
அறிவியலில் முக்கியமான கேள்விகளில் ஒன்று மனித குணங்கள் உருவாவது பிறப்பிலா, வளர்ப்பிலா என்கிற கேள்வி.
சென்ற இருபதாம் நூற்றாண்டின் பாதிவரை விஞ்ஞானிகள் 'எல்லாமே சூழ்நிலை தான். சூழ்நிலை சரியாக அமைந்தால் ஒரு நல்ல மனிதனை உருவாக்க முடியும். பிரச்னையே இல்லை' என்று நம்பினார்கள். இந்த நம்பிக்கை டி.என்.ஏ. ஆராய்ச்சி வலுப்பட்டதும் கொஞ்சம் பின்வாங்கி விட்டது. மெல்ல மெல்ல பிறப்பில் நம் வியாதிகள் மட்டுமல்ல குணாதிசயங்களின் காரணங்களும் இருக்கின்றன' என்று கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
பல ஈக்கள், எலிகளிலிருந்து மானுட இரட்டையர்கள் வரை கவனிக்கும் பொழுது பல ஆச்சரியங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. ஒரே தோற்றமுள்ள இரட்டையர்கள் ஒரே சமயத்தில் பிறந்து தோற்றத்தில் வேறுபட்ட Fraternal twin-- இரட்டையர்கள் இரு வகையினரையும் ஒரே சூழ்நிலையிலும் வேறுபட்ட சூழ்நிலையிலும் வளர்த்து கிடைத்த விவரங்களிலிருந்து தெரியும் தகவல் -- நம் பிறப்பு, குணாதிசயங்களை முப்பதிலிருந்து எழுபது சதவீதம் வரை நிர்ணயிக்கிறது என்பதே.
ஆனால் ஒரு குணத்திற்கு ஒரு ஜீன் என்று சொல்ல முடியவில்லை. ஒரு வியாதிக்கு ஒரு ஜீன் என்று சொல்ல முடிகிறது. உதாரணம் சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ். ஆனால் குடிப்பழக்கத்திற்கு என்று ஒரு ஜீன் இருக்கிறதா, கோபத்திற்கு ஒரு ஜீன் உண்டா?-- இப்படி திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை.
இந்தப் பழக்கங்களுக்குக் காரணம் பிறப்பும் வளர்ப்பும் கலந்தது என்று சொல்கிறார்கள். இருபத்து மூன்று க்ரோமோசோம்களில் எந்த க்ரோமோசோம் எந்த குணத்தை நிர்ணயிக்கிறது என்பதை குத்து மதிப்பாகத் தான் சொல்ல முடிகிறது. உதாரணம்: 'ஆட்டிசம்' என்னும் ஒரு மனோவியாதிக்குக் காரணம் க்ரோமோசோம் என்பது தெரிகிறது.
இந்த ஆராய்ச்சி ஆரம்ப நிலையில் இருக்கிறது-- மாலிக்யுலர் பயாலஜியின் உதவியுடன். இந்த தகவல் வங்கி சேரச் சேர எதிர்காலத்தில் ஒரு ஆள் உங்களைக் கடக்கும் போது காரணமில்லாமல் விரல்களை முறுக்கி முஷ்டியை உயர்த்தி '....த்தா டேய்' என்றால், உன்னுடைய பதிமூன்றாவது க்ரோமோசோம் சரியில்லைப்பா...' என்று சொல்ல முடியும் என எதிர்பார்க்கிறார்கள்.
--- சுஜாதா
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.