தாளம்: ஆதி

எடுப்பு:
எந்தத் துன்பம் வந்தாலும் எனைக் காக்கும்
இவன் தாள் பணிவேன்; மறவேன் கருணையை
கந்தன் கதிர்காம வேலன் அழகு பாடுவேன்
(எந்தத் துன்பம்)
தொடுப்பு
நெஞ்சே நீ அறிவாய் சிங்காரவேலனை
அஞ்சேல் என்றென்னை ஆட்கொண்ட கதையை
எட்டுக்குடி முருகன் தட்டாமல் அருள்வான்
விட்டு விலகாமல் அவன் தாள் சரணம்
(எந்தத் துன்பம்)
வயலூர் முருகன் திருமால் மருகன்
மயில்வாகனன் கைவேல் காணீரோ?
வள்ளி தெய்வானை வலமும் இடமுமாக
சொல்லி மாளாதய்யா சொக்கநாதன் மகன் அழகை
(எந்தத் துன்பம்)

தணிகைச் செல்வனை தண்டாயுத பாணியை
தகப்பனுக்கு உபதேசித்த சுவாமிமலை சுவாமியை
எண்கண் சண்முகனை முத்துக் குமரனை
பண்ணால் பாட்டால் பாடிப் பரவி
(எந்தத் துன்பம்)
முடிப்பு
செந்தில் வேலவனை சேவல் கொடியோனை
முந்தி வந்த வினையறுக்கும் வள்ளி மணாளனை
பன்னிரு கையனை சூரபத்ம சம்ஹாரனை
உமையம்மை செல்வனை சிவகுமாரனை
(எந்தத் துன்பம்)








