பகுதி--5
இசைக்கு எப்படி சுப்புடு சாரோ, அந்த மாதிரி இலக்கியத்திற்கு க.நா.சு. அவர்கள். இரண்டு பேருமே தில்லியில் நெடுங்காலம் வாழ்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கிடையான இன்னொரு ஒற்றுமை.
கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் இலக்கிய வட்டத்திற்கு க.நா.சு. ஆனார். நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று தமிழின் எல்லா வகைகளிலும் இவர் எழுதிப்பார்த்தவர். ஆனால் க,நா.சு. என்றதுமே பலருக்கு அவரது சமரசமேயில்லாத விமர்சனக் கட்டுரைகள் தாம் நினைவுக்கு வரும். மனிதர் விமரிசன சமாசாரத்தில் மன்னர் என்றாலும் இந்தத் தொடரைப் பொறுத்த மட்டில் அவர் நாவல் உலகைப் பார்ப்போம்.
தொடர்கதைகள் வேறு நாவல் என்பது வேறு என்பது இலக்கிய விமரிசனங்களில் ஆழ்ந்து தோய்ந்த நம் காலத்து தலைசிறந்த படைப்பாளி ஜெயமோகனின் கருத்து.. அதாவது தொடர்கதைகள் நாவாலாகாது என்று அடிக்கோடிட்டுச் சொல்கிறார்.
அப்போ தொடர்கதைகளாய் பத்திரிகைகளில் வெளிவந்து வாராவாரம் படித்தவர் மனசை ஈர்த்த, என்றோ எழுதியது என்றாலும் இன்றும் வாசித்தவரின் மனசில் நீக்கற நிறைந்திருக்கும் பேற்றைப் பெற்றிருக்கும் அந்த தொடர்கதைகளெல்லாம் நாவல் இல்லையா என்றால் இல்லை என்று நிர்தாட்சண்யமாய் மறுக்கிறார் ஜெயமோகன்.
ஏனாம்?..
வாசகரின் ரசனைக்காகவும் அவர்களின் ஆவலைத் தூண்டும் விதமாகவும் அடுத்த வாரப் பகுதியை எதிர்பார்க்கிற தூண்டுதலுக்காக சுவாரஸ்யமான இடத்தில் தொடரும் போட்டுத் தொடர்வது நாவலில்லை என்பது அவரது கட்சி.; இலக்கியம் என்பது ரசனை அடிப்படையில் அமைய வேண்டுமா அன்றி கோட்பாடு அடிப்படையிலா என்பதும் விவாதத்திற்குரிய பொருள் தான். கோட்பாடு அடிப்படையில் என்பதில் அவற்றை எவ்வளவு தான் நியாயப்படுத்தினாலும் கலாபூர்வ அழகுகள் கோட்பாடுகளின் கறாரான விதிகளின் நெரிசலில் சிக்கிப் பலியாவதும் தவிர்க்க முடியாத இழப்பாகவும் தெரிகிறது.
நாவல் என்பது துண்டு துண்டாக அத்தியாயம் அத்தியாயமாக ஒட்டுப் போடும் சமாசாரமில்லை. வாசகரின் வாசக ரசனைக்காக அவர்களின் ரசனை அம்சங்களைத் தேடித் தேடிக் கோர்த்துக் கதை பண்ணும் வேலையும் அல்ல. மாறாக நாவல் என்பது அதன் கருவைச் சார்ந்த அனைத்தையும் வாசகன் முன் தொகுத்து முன்வைக்க முயல்கிறது. இதனால் அனைத்தையும் ஆராய்ந்து வாசகன் தன் நோக்கை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்கிறது என்கிறார்.
இந்த மாதிரி வரையறைகளுக்கு உட்பட்ட சட்டம் போட்ட இலக்கியம் என்பதில் எழுதுபவனின் கற்பனைச் சிறக்கடிப்பை ஒரு வரையறைக்கு உட்படுத்தி மழுங்கடிக்கும் ஆபத்தும் பதுங்கி இருப்பது தெரிகிறது. என்ன எழுதினாலும் அதை எழுதும் போதே கோட்பாடுகளை நினைவில் கொண்டே எழுத வேண்டும் என்பதும் எழுதுபவனுக்கு அவனது கற்பனைச் சுதந்திரத்தைக் காவு கொடுக்கிற அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
எழுதுகிறவன் தான் எடுத்துக் கொண்ட நாவல் கருவை நியாயப்படுத்துகிற பல விஷயங்களின் தொகுப்பில் அதன் வாசிப்பின் பயனாக வாசகனுக்கு ஒரு ஒட்டுமொத்த பார்வையை அளிப்பது நாவல் என்கிறார்கள். அப்போ கட்டுரை என்பதும் இது தானே என்று தோன்றுகிறது. அதனால் தான் இப்படியான போக்குள்ள நாவல்கள் கட்டுரைத்தன்மையைத் தவர்க்க முடியாமல் கொண்டிருக்கின்றன போலும்.
நாவலின் உள்ளடக்கமும் வடிவமும் மாறிக்கொண்டே இருப்பதினால் நாவல் என்பது வடிவம் சார்ந்ததும் இல்லை, உள்ளடக்கம் சார்ந்ததும் இல்லை என்று நாவல் கோட்பாடுகளை வரையறுக்கும் ஜெமோ வாசகரின் எதிர்பார்ப்பையே நாவலின் வடிவமாக முன் வைக்கலாம் என்கிறார். வாசகர் எதிர்ப்பார்ப்பு மட்டும் என்றென்றும் சாசுவதமா, மாறிக்கொண்டே இருக்காதா என்று கேட்கத் தோன்றுகிறது.
நாவலில் கதையோட்டம் தேவையில்லை; கதைப் பின்னல் தான் தேவை என்பது ஜெமோ சொல்லும் இன்னொரு கருத்து. இதை தி.ஜானகிராமனின் மோகமுள் கதை மூலமாக விளக்குகிறார். யமுனா--பாபு உறவையே பக்கம் பக்கமாக நீட்டிச் செல்கிறார் ஆசிரியர். வலுவான வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் மையக் கதையோட்டத்துடன் கலந்து ஊடறுக்கவில்லை. என்கிறார். பாபுவின் தந்தையோ அல்லது ரங்கண்ணாவோ பாபு--யமுனா உறவுக்கிடையே நுழைந்து ஊடறுத்திருந்தால் மோகமுள் ஒரு நாவல் உருக்கொண்டிருக்கும் என்பது அவரது பார்வை.
இன்னொன்று. 'வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் நாவலின் பின்னல், கயிறு முறுக்குவது போல இருக்கக் கூடாது. கூடை முடைவது போல இருக்க வேண்டும் என்கிறார். ஒரே கதையைப் பின்னிப்பின்னி சொல்லும் பொழுது நாவல் பலவீனமாகிறது.. கதைகளும் கதைமாந்தர்களும் பெருகிப் பெருகிச் செல்லும் பிரவாகமாக நாவலில் இருக்க வேண்டும்'.என்பது ஜெமோவின் கருத்து. நாவலின் வடிவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதன் உள்ளடகத்தை விடப் பிரதானமாகிப் போயிருப்பதும் தெரிகிறது.
தன் கால சமுகத்தின் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி இத்தனை காலம் காவியங்கள் நிறுவி விட்டுப் போன மதிப்பீடுகளை அதே வீரியத்துடன் எதிர் கொள்ளும் தன்மை கொண்டது நாவல், சொல்லப் போனால் காவியத்தை முழுமையாகக் கழித்து விடும் எதிர் காவிய வடிவமே நாவல் என்று அவர் குண்டைத் தூக்கிப் போடும் பொழுது நமக்கோ பகீர் என்றிருக்கிறது. சென்ற கால காவியங்கள் எல்லாம் கழிந்து போனவை போலத் தோற்றம் கொள்வது இதனால் தானோ என்கிற சம்சயம் வேறே.
(தொடரும்)
படங்கள் உதவியோருக்கு நன்றி.
இசைக்கு எப்படி சுப்புடு சாரோ, அந்த மாதிரி இலக்கியத்திற்கு க.நா.சு. அவர்கள். இரண்டு பேருமே தில்லியில் நெடுங்காலம் வாழ்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கிடையான இன்னொரு ஒற்றுமை.

'சர்மாவின் உயில்' என்பது க.நா.சு--வின் முதல் நாவல்; கடைசி நாவல்: பித்தப் பூ'. இந்த இரண்டுக்கும் நடுவே 1946 வாக்கில் எழுதிய 'பொய்த்தேவு' அவரின் சிறந்த படைப்பாக பெயரைத் தட்டிக் கொண்டு போயிருக்கிறது.
'நாவல் என்பது வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளடக்கி வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஒரு இலக்கிய வடிவம்' என்பார் ஜெயமோகன்.
"நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றி சுயநினைவோடு எழுதப்பட்ட தமிழின் முதல் நாவல் இது" என்பது 'பொய்த்தேவு' நாவலுக்கான ஜெயமோகனின் கூற்று. நாவல் என்பதற்கு என்ன இலக்கணம் என்று ஜெயமோகன் கொண்டிருக்கிறாரோ அந்த இலக்கணத்திற்கு உருவம் கொடுத்த மாதிரி இந்த நாவல் அமைந்திருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
'நாவல் என்பது வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளடக்கி வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஒரு இலக்கிய வடிவம்' என்பார் ஜெயமோகன்.
"நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றி சுயநினைவோடு எழுதப்பட்ட தமிழின் முதல் நாவல் இது" என்பது 'பொய்த்தேவு' நாவலுக்கான ஜெயமோகனின் கூற்று. நாவல் என்பதற்கு என்ன இலக்கணம் என்று ஜெயமோகன் கொண்டிருக்கிறாரோ அந்த இலக்கணத்திற்கு உருவம் கொடுத்த மாதிரி இந்த நாவல் அமைந்திருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்போ தொடர்கதைகளாய் பத்திரிகைகளில் வெளிவந்து வாராவாரம் படித்தவர் மனசை ஈர்த்த, என்றோ எழுதியது என்றாலும் இன்றும் வாசித்தவரின் மனசில் நீக்கற நிறைந்திருக்கும் பேற்றைப் பெற்றிருக்கும் அந்த தொடர்கதைகளெல்லாம் நாவல் இல்லையா என்றால் இல்லை என்று நிர்தாட்சண்யமாய் மறுக்கிறார் ஜெயமோகன்.
ஏனாம்?..
வாசகரின் ரசனைக்காகவும் அவர்களின் ஆவலைத் தூண்டும் விதமாகவும் அடுத்த வாரப் பகுதியை எதிர்பார்க்கிற தூண்டுதலுக்காக சுவாரஸ்யமான இடத்தில் தொடரும் போட்டுத் தொடர்வது நாவலில்லை என்பது அவரது கட்சி.; இலக்கியம் என்பது ரசனை அடிப்படையில் அமைய வேண்டுமா அன்றி கோட்பாடு அடிப்படையிலா என்பதும் விவாதத்திற்குரிய பொருள் தான். கோட்பாடு அடிப்படையில் என்பதில் அவற்றை எவ்வளவு தான் நியாயப்படுத்தினாலும் கலாபூர்வ அழகுகள் கோட்பாடுகளின் கறாரான விதிகளின் நெரிசலில் சிக்கிப் பலியாவதும் தவிர்க்க முடியாத இழப்பாகவும் தெரிகிறது.
நாவல் என்பது துண்டு துண்டாக அத்தியாயம் அத்தியாயமாக ஒட்டுப் போடும் சமாசாரமில்லை. வாசகரின் வாசக ரசனைக்காக அவர்களின் ரசனை அம்சங்களைத் தேடித் தேடிக் கோர்த்துக் கதை பண்ணும் வேலையும் அல்ல. மாறாக நாவல் என்பது அதன் கருவைச் சார்ந்த அனைத்தையும் வாசகன் முன் தொகுத்து முன்வைக்க முயல்கிறது. இதனால் அனைத்தையும் ஆராய்ந்து வாசகன் தன் நோக்கை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்கிறது என்கிறார்.
இந்த மாதிரி வரையறைகளுக்கு உட்பட்ட சட்டம் போட்ட இலக்கியம் என்பதில் எழுதுபவனின் கற்பனைச் சிறக்கடிப்பை ஒரு வரையறைக்கு உட்படுத்தி மழுங்கடிக்கும் ஆபத்தும் பதுங்கி இருப்பது தெரிகிறது. என்ன எழுதினாலும் அதை எழுதும் போதே கோட்பாடுகளை நினைவில் கொண்டே எழுத வேண்டும் என்பதும் எழுதுபவனுக்கு அவனது கற்பனைச் சுதந்திரத்தைக் காவு கொடுக்கிற அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
எழுதுகிறவன் தான் எடுத்துக் கொண்ட நாவல் கருவை நியாயப்படுத்துகிற பல விஷயங்களின் தொகுப்பில் அதன் வாசிப்பின் பயனாக வாசகனுக்கு ஒரு ஒட்டுமொத்த பார்வையை அளிப்பது நாவல் என்கிறார்கள். அப்போ கட்டுரை என்பதும் இது தானே என்று தோன்றுகிறது. அதனால் தான் இப்படியான போக்குள்ள நாவல்கள் கட்டுரைத்தன்மையைத் தவர்க்க முடியாமல் கொண்டிருக்கின்றன போலும்.
நாவலின் உள்ளடக்கமும் வடிவமும் மாறிக்கொண்டே இருப்பதினால் நாவல் என்பது வடிவம் சார்ந்ததும் இல்லை, உள்ளடக்கம் சார்ந்ததும் இல்லை என்று நாவல் கோட்பாடுகளை வரையறுக்கும் ஜெமோ வாசகரின் எதிர்பார்ப்பையே நாவலின் வடிவமாக முன் வைக்கலாம் என்கிறார். வாசகர் எதிர்ப்பார்ப்பு மட்டும் என்றென்றும் சாசுவதமா, மாறிக்கொண்டே இருக்காதா என்று கேட்கத் தோன்றுகிறது.
நாவலில் கதையோட்டம் தேவையில்லை; கதைப் பின்னல் தான் தேவை என்பது ஜெமோ சொல்லும் இன்னொரு கருத்து. இதை தி.ஜானகிராமனின் மோகமுள் கதை மூலமாக விளக்குகிறார். யமுனா--பாபு உறவையே பக்கம் பக்கமாக நீட்டிச் செல்கிறார் ஆசிரியர். வலுவான வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் மையக் கதையோட்டத்துடன் கலந்து ஊடறுக்கவில்லை. என்கிறார். பாபுவின் தந்தையோ அல்லது ரங்கண்ணாவோ பாபு--யமுனா உறவுக்கிடையே நுழைந்து ஊடறுத்திருந்தால் மோகமுள் ஒரு நாவல் உருக்கொண்டிருக்கும் என்பது அவரது பார்வை.
இன்னொன்று. 'வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் நாவலின் பின்னல், கயிறு முறுக்குவது போல இருக்கக் கூடாது. கூடை முடைவது போல இருக்க வேண்டும் என்கிறார். ஒரே கதையைப் பின்னிப்பின்னி சொல்லும் பொழுது நாவல் பலவீனமாகிறது.. கதைகளும் கதைமாந்தர்களும் பெருகிப் பெருகிச் செல்லும் பிரவாகமாக நாவலில் இருக்க வேண்டும்'.என்பது ஜெமோவின் கருத்து. நாவலின் வடிவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதன் உள்ளடகத்தை விடப் பிரதானமாகிப் போயிருப்பதும் தெரிகிறது.
தன் கால சமுகத்தின் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி இத்தனை காலம் காவியங்கள் நிறுவி விட்டுப் போன மதிப்பீடுகளை அதே வீரியத்துடன் எதிர் கொள்ளும் தன்மை கொண்டது நாவல், சொல்லப் போனால் காவியத்தை முழுமையாகக் கழித்து விடும் எதிர் காவிய வடிவமே நாவல் என்று அவர் குண்டைத் தூக்கிப் போடும் பொழுது நமக்கோ பகீர் என்றிருக்கிறது. சென்ற கால காவியங்கள் எல்லாம் கழிந்து போனவை போலத் தோற்றம் கொள்வது இதனால் தானோ என்கிற சம்சயம் வேறே.
(தொடரும்)
படங்கள் உதவியோருக்கு நன்றி.