பகுதி---5
நம் குணநலன்களை மூன்றாக வகுத்துள்ளார்கள் பெரியோர்கள்.
நிமிஷத்திற்கு நிமிஷம் சலனங்களில் ஆட்பட நேர்கிற நிர்பந்தம் கொண்டிருக்கிற இன்றைய வாழ்க்கை அமைப்பிலும் கூட இன்றைய பெரியோர்களும் இந்த மூன்றையே இன்றும் சொல்லிக் கொண்டிருப்பதினால் இன்றைக்கும் பொருந்தி வருகின்ற மாதிரி அன்றே மூன்றில் அடக்கிய அன்றைய பெரியோர்களின் தீட்சண்யமிக்க செயல்பாடுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
அப்படிப்பட்ட அந்த அதிசய மூன்று தான் என்ன?..
சத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்
-- என்ற மூன்றும் அத்தனை பேரிலும் படிந்திருக்கிற மூன்று அடிப்படை குணங்கள் என்கிறார்கள்.
மூன்றுமே வடமொழி வழிப்பட்ட விளக்கங்கள் தாம். எந்த மொழியாய் இருந்தால் தான் என்ன? நமக்கு ஏதாவது உபயோகமாகிறதா என்று பார்ப்போம்.
யாரையாவது பார்த்து யாராவது, 'இவர் சாத்வீகமான ஆசாமிய்யா' என்றால் எதற்கும் கோபப்படாத சாந்தமான ஆசாமியைத் தான் சொல்கிறார் என்று பொதுவாக அர்த்தம் கொள்ளலாம். எதற்கும் கோபப்படாத என்பதை வேண்டுமானால் அநாவசியத்திற்கெல்லாம் கோபப்படாத என்று இன்றைய காலத்துக்கும் பொருந்தி வருகிற மாதிரி கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் போலிருக்கு.
ஏனென்றால் இன்றைய வாழ்க்கை அமைப்பில் கோபப்படாமலேயே இருக்க் முடியாது. பாரதியார் சொன்ன மாதிரி 'அவர் முகத்தில் உமிழ்ந்து விடு, பாப்பா' என்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் செவ செவ என்று சிவந்து விடுகிற முகத்தைத் திருப்பிக் கொள்ளவானும் செய்யலாம்.
நியாயமான கோபம் கூட இல்லையென்றால் நம்மை சொரணை கெட்டவனாகவும் ஆக்கிவிட நமது சொந்தங்களே காத்திருப்பார்கள். உடற்கூறுகளில் உற்பத்தியான கோபத்தை அடக்கினாலும் உடல் நலத்திற்குக் கேடாம். அதனால் உள்டக்கிய கோபத்தை எப்படியானும் வெளித்தள்ளியே ஆக வேண்டும் என்று உடல் சாத்திரம் வேறு இன்னொரு பக்கம் போதிக்கிறது.
"மொத்தம் மூணு தான் சார். இந்த மூன்றுக்குள் இது வரை இந்த உலகத்தில் பிறந்த, இன்னும் பிறக்க இருக்கிற எல்லா ,மனுஷ ஜென்மங்களாயும் அடக்கி விடலாம் என்று 'கெத்'தாய் சொல்கிறார்கள்.
முக்கோணம் போல மூன்றே குணங்கள்! யாருக்கும் தவிர்க்கவே முடியாமல் எல்லோரிலும் இந்த மூன்றும் பதுங்கியிருக்குமாம். ஆனால் அப்படிப் பதுங்கியிருந்தாலும் அதில் ஒரு விசேஷமும் இருக்குமாம். அதாவது இந்த மூன்றும் யாருக்கும் சம அளவில் இருக்காதாம். கூடக் குறைச்சலாய் இருக்குமாம். அவரவர் இயல்பில் மூன்று வகைப்பட்ட குணங்களில் ஏதாவது ஒரு குணத்தின் தன்மை மட்டும் சற்று மேம்பட்டு இருக்குமாம்.
அப்படி மேம்பட்டு இருப்பதற்கும் ஒரு விதி வகுத்திருக்கிறார்கள். அது என்னவென்றால் அவரவருக்கு வாய்த்த குணத்தின் அடிப்படைத் தன்மையில் மாற்றமிருக்காதாம். அதே சமயத்தில் அவரது அடிப்ப்டை குண இயல்பை ஒட்டி ஏதாவது நிகழும் பொழுது அப்படி அந்த நிகழ்வு நிகழ்கின்ற சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏறப இந்த குணங்கள் மாறி மாறி அமையுமாம்.
தமோ, ரஜோ, சத்வ இந்த மூன்றில் ஏதாவது ஒன்று ஒருவரின் அடிப்படை குணம் என்றால் அதைச் சார்ந்தே அவரது அடிப்படை அல்லாத மற்ற இரண்டு குணங்களும் மாறி மாறி அவரை ஆட்கொள்ளும்.
ரொம்ப சரி. இப்போ கீர்த்தி வாய்ந்த அந்த மூன்று குணங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
சத்வ குணம் ரொம்ப பெருமை வாய்ந்தது. சாத்வீகம் ஞானத்தை வளர்க்குமாம். நல்லன அல்லாத எந்தக் காரியத்தையும் செய்ய இந்த குணக்காரர்களுக்கு விருப்பமே வராதாம்.
ரஜோ குணம் தான் ஒன்றின் மீதான ஆசையை அல்லது பற்றுதலை ஏற்படுத்துமாம். ஒன்றின் மீது விருப்பம் ஏற்பட்டால் என்னவாகும்?.. அதை அடைந்து விட மனம் ஏங்கும். அதை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும்.
மூன்றாவது தமோ குணம். எதிலும் தாமதப் போக்கு உள்ளவர்கள் இந்த குணத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவர்கள்.
சரி, இவ்வளவு தானே பெரிசாய் இதில் என்ன இருக்கிறது என்று விட்டு விட முடியாதபடிக்கு மூன்றும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாய் பின்னப்பட்டிருப்பது தான் படைப்பின் விசித்திரம்.
அது என்ன விசித்திரம் என்று கடைசியிலிருந்து பார்ப்போம்.
தமோ குணம் இயல்பு அதிகமாய் இருந்தால் ஆள் டல்லடித்து தூங்கி வழிபவனாய் இருப்பான். கோபு சார் பாஷையில் சொல்வது என்றால் எழுச்சி இல்லாத ஆசாமியாய் சோம்பல் பேர்வழியாய் இருப்பான்.
அந்த சோம்பலைப் போக்க மருந்தாய் வந்த குணம் தான் ரஜோ குணம்.ஒன்றின் மேல் விருப்பம் ஏற்பட்டு அது ஆசையாய் கொழுந்து விடத் தொடங்கி விட்டதென்றால் கொட்டாவி விட்ட சோம்பல் ஓடியேப் போகும். மாமலையும் ஓர் கடுகாய் மாறுவதற்கு பெண்ணின் கடைக்கண் பார்வை ஒன்று போதும் என்பார் பாரதிக்கு தாசனார். அவர் சொல்லும் அழகு மடந்தையின் அந்தக் கடைக்கண் பார்வை தான் என்றில்லை. ஒவ்வொருவருக்கும் ஒன்று. ஒருவருக்கு 'ச்சீ' எனப்படுவது இன்னொருவருக்கு 'ஆஹா'. வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் இப்படியான தேர்வு முறை இருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம்..
ஒன்றின் மீதான விருப்பம் தீவிரமாகி அதாவது ரஜோ குணம் மேலோங்குவது அதை அடையும் வரை ஓயாது. விருப்பதற்கு எல்லையே கிடையாது. ஒன்றின் விருப்பத்தின் பலனான அனுபவிப்பின் முடிவு இன்னொரு விருப்பத்திற்கு ஆரம்பமாக இருக்கும்.
இப்படி முடிவு-- ஆரம்பம்-- அதன் முடிவு இன்னொன்றின் ஆரம்பம் என்று எவ்வளவு காலத்திற்குப் போய்க் கொண்டிருப்பது? அப்படிப் போகாமல் இருப்பதற்கு தான் சத்வ குணம். சத்வ குணம். மேலோங்கும் போது 'உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றுமில்லை' என்று கண்ணதாசனார் சொன்ன மாதிரி எதிலும் எதுவும் இல்லை என்ற ஞானத்திற்கு இட்டுச் செல்லும்.
எதிலும் எதுவும் இல்லை என்பது ஞானம் ஆயினும் அது ஒரு அசட்டு ஞானம்.
அந்த அரைகுறை ஞானம், எதிலும் எதுவும் இல்லை என்று தோற்றத்திற்குத் தட்டுப்பட்டாலும் எல்லாவற்றிலும் ஏதுவோ இருக்கிறது என்ற ஞானத்தின் பரமானந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அந்த எதுவோவும் இல்லை என்றால் -- டெட் வுட்-- இயக்கமே இல்லை என்ற தத்துவம் புரிதலாகும். எல்லாமே ப்யூர் சயின்ஸ் என்பது தான் இதிலிருக்கிற ஆச்சரியமே.
இந்த இடத்தில் இன்னொரு வேடிக்கை பற்றியும் சொல்ல வேண்டும். பரமானந்த நிலை பற்றிச் சொன்னோம், இல்லையா?.. . அந்த பரமானந்த நிலையில் ஆழ்ந்து கிடப்பதற்கும் வழியில்லாத மாதிரி-- சத்வ குணத்திலேயே மயங்கிக் கிடக்காமல்-- நமக்கு வாய்த்த இந்த நிகழ் வாழ்க்கை பார்த்துக் கொள்ளும். போட்டி, பொறாமை, விட்டுக் கொடுக்காமை, நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கை சதவ குணத்தை செல்லாக் காசாக்கி நிதர்சனத்தைப் புரிய வைக்கும்.
நமக்கென்று தனி வாழ்க்கை எதுவும் இல்லை. நம்மை சுற்றியிருக்கிற ஜனக் கூட்டத்தை சார்ந்தது தான் நம் வாழ்க்கையும். அதைத் தவிர்த்த தனி வாழ்க்கை என்றால் காட்டுக்குத் தான் போக வேண்டும் என்று அந்தக்கால வழக்கத்திலும் சொல்வதற்கில்லை. காடெல்லாம் அழிக்கப்பட்டு காங்கிரீட் தளங்களாகி விட்டன.
ஆக, சத்வ, ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களும் ஒருவனின் வாழ்க்கையில் இது விட்டால் அது, அது விட்டால் இது என்று அந்தந்த நேரத்து சொர்க்கமாய் அமைந்த வட்டப் பாதைகள்.
நிதர்சன வாழ்க்கை என்பது மாறிக் கொண்டே இருக்கும் பெளதீக உண்மை. அந்த நிதர்சனம் நம்மில் ஒழியும் பொழுது தான் உண்மையான ஞானத்திற்கும் கதவு திறக்கிறது.
அந்த ஞானக் கதவை திறக்க முடியாமலும் நிதர்சனம் பார்த்துக் கொள்கிறது.
அப்படி என்னய்யா கண்டும் விண்டும் உணர வேண்டிய ஞானம் அது என்றால் அதைத் தானே தேடித் திரிந்து தெரிந்து கொள்ளத் துடிக்கிறேன் என்'ற பதிலும் கியைக்கும்.
தட்டினால் தான் கதவும் திறக்கும்.
ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நீங்காத ஆவலும் தொடர்ந்த முயற்சியும் இருந்தால் தான் எது பற்றியும் கிஞ்சித்தானும் தெரிந்து கொள்ள முடியும்.
தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது என்பவர்கள் சுகவாசிகள்.
சொல்லப் போனால் இப்போதைக்கு சுகவாசிகள். தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் வரும் பொழுது தன்னாலே கை நீண்டு கதவைத் தட்டும்.
தட்டினால் தான் கதவும் திறக்கும். தட்டுவதற்கு அவசியம் இன்றி திறந்தே இருக்கிற கதவும் ஏதும் இல்லை. திறந்தே இருக்கும் என்றால் கதவுக்கும் அவசியமில்லை.
(படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.)
நம் குணநலன்களை மூன்றாக வகுத்துள்ளார்கள் பெரியோர்கள்.

அப்படிப்பட்ட அந்த அதிசய மூன்று தான் என்ன?..
சத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்
-- என்ற மூன்றும் அத்தனை பேரிலும் படிந்திருக்கிற மூன்று அடிப்படை குணங்கள் என்கிறார்கள்.
மூன்றுமே வடமொழி வழிப்பட்ட விளக்கங்கள் தாம். எந்த மொழியாய் இருந்தால் தான் என்ன? நமக்கு ஏதாவது உபயோகமாகிறதா என்று பார்ப்போம்.
யாரையாவது பார்த்து யாராவது, 'இவர் சாத்வீகமான ஆசாமிய்யா' என்றால் எதற்கும் கோபப்படாத சாந்தமான ஆசாமியைத் தான் சொல்கிறார் என்று பொதுவாக அர்த்தம் கொள்ளலாம். எதற்கும் கோபப்படாத என்பதை வேண்டுமானால் அநாவசியத்திற்கெல்லாம் கோபப்படாத என்று இன்றைய காலத்துக்கும் பொருந்தி வருகிற மாதிரி கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் போலிருக்கு.
ஏனென்றால் இன்றைய வாழ்க்கை அமைப்பில் கோபப்படாமலேயே இருக்க் முடியாது. பாரதியார் சொன்ன மாதிரி 'அவர் முகத்தில் உமிழ்ந்து விடு, பாப்பா' என்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் செவ செவ என்று சிவந்து விடுகிற முகத்தைத் திருப்பிக் கொள்ளவானும் செய்யலாம்.
நியாயமான கோபம் கூட இல்லையென்றால் நம்மை சொரணை கெட்டவனாகவும் ஆக்கிவிட நமது சொந்தங்களே காத்திருப்பார்கள். உடற்கூறுகளில் உற்பத்தியான கோபத்தை அடக்கினாலும் உடல் நலத்திற்குக் கேடாம். அதனால் உள்டக்கிய கோபத்தை எப்படியானும் வெளித்தள்ளியே ஆக வேண்டும் என்று உடல் சாத்திரம் வேறு இன்னொரு பக்கம் போதிக்கிறது.
"மொத்தம் மூணு தான் சார். இந்த மூன்றுக்குள் இது வரை இந்த உலகத்தில் பிறந்த, இன்னும் பிறக்க இருக்கிற எல்லா ,மனுஷ ஜென்மங்களாயும் அடக்கி விடலாம் என்று 'கெத்'தாய் சொல்கிறார்கள்.
முக்கோணம் போல மூன்றே குணங்கள்! யாருக்கும் தவிர்க்கவே முடியாமல் எல்லோரிலும் இந்த மூன்றும் பதுங்கியிருக்குமாம். ஆனால் அப்படிப் பதுங்கியிருந்தாலும் அதில் ஒரு விசேஷமும் இருக்குமாம். அதாவது இந்த மூன்றும் யாருக்கும் சம அளவில் இருக்காதாம். கூடக் குறைச்சலாய் இருக்குமாம். அவரவர் இயல்பில் மூன்று வகைப்பட்ட குணங்களில் ஏதாவது ஒரு குணத்தின் தன்மை மட்டும் சற்று மேம்பட்டு இருக்குமாம்.
அப்படி மேம்பட்டு இருப்பதற்கும் ஒரு விதி வகுத்திருக்கிறார்கள். அது என்னவென்றால் அவரவருக்கு வாய்த்த குணத்தின் அடிப்படைத் தன்மையில் மாற்றமிருக்காதாம். அதே சமயத்தில் அவரது அடிப்ப்டை குண இயல்பை ஒட்டி ஏதாவது நிகழும் பொழுது அப்படி அந்த நிகழ்வு நிகழ்கின்ற சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏறப இந்த குணங்கள் மாறி மாறி அமையுமாம்.
தமோ, ரஜோ, சத்வ இந்த மூன்றில் ஏதாவது ஒன்று ஒருவரின் அடிப்படை குணம் என்றால் அதைச் சார்ந்தே அவரது அடிப்படை அல்லாத மற்ற இரண்டு குணங்களும் மாறி மாறி அவரை ஆட்கொள்ளும்.
ரொம்ப சரி. இப்போ கீர்த்தி வாய்ந்த அந்த மூன்று குணங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
சத்வ குணம் ரொம்ப பெருமை வாய்ந்தது. சாத்வீகம் ஞானத்தை வளர்க்குமாம். நல்லன அல்லாத எந்தக் காரியத்தையும் செய்ய இந்த குணக்காரர்களுக்கு விருப்பமே வராதாம்.
ரஜோ குணம் தான் ஒன்றின் மீதான ஆசையை அல்லது பற்றுதலை ஏற்படுத்துமாம். ஒன்றின் மீது விருப்பம் ஏற்பட்டால் என்னவாகும்?.. அதை அடைந்து விட மனம் ஏங்கும். அதை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும்.
மூன்றாவது தமோ குணம். எதிலும் தாமதப் போக்கு உள்ளவர்கள் இந்த குணத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவர்கள்.
சரி, இவ்வளவு தானே பெரிசாய் இதில் என்ன இருக்கிறது என்று விட்டு விட முடியாதபடிக்கு மூன்றும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாய் பின்னப்பட்டிருப்பது தான் படைப்பின் விசித்திரம்.
அது என்ன விசித்திரம் என்று கடைசியிலிருந்து பார்ப்போம்.
தமோ குணம் இயல்பு அதிகமாய் இருந்தால் ஆள் டல்லடித்து தூங்கி வழிபவனாய் இருப்பான். கோபு சார் பாஷையில் சொல்வது என்றால் எழுச்சி இல்லாத ஆசாமியாய் சோம்பல் பேர்வழியாய் இருப்பான்.
அந்த சோம்பலைப் போக்க மருந்தாய் வந்த குணம் தான் ரஜோ குணம்.ஒன்றின் மேல் விருப்பம் ஏற்பட்டு அது ஆசையாய் கொழுந்து விடத் தொடங்கி விட்டதென்றால் கொட்டாவி விட்ட சோம்பல் ஓடியேப் போகும். மாமலையும் ஓர் கடுகாய் மாறுவதற்கு பெண்ணின் கடைக்கண் பார்வை ஒன்று போதும் என்பார் பாரதிக்கு தாசனார். அவர் சொல்லும் அழகு மடந்தையின் அந்தக் கடைக்கண் பார்வை தான் என்றில்லை. ஒவ்வொருவருக்கும் ஒன்று. ஒருவருக்கு 'ச்சீ' எனப்படுவது இன்னொருவருக்கு 'ஆஹா'. வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் இப்படியான தேர்வு முறை இருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம்..
ஒன்றின் மீதான விருப்பம் தீவிரமாகி அதாவது ரஜோ குணம் மேலோங்குவது அதை அடையும் வரை ஓயாது. விருப்பதற்கு எல்லையே கிடையாது. ஒன்றின் விருப்பத்தின் பலனான அனுபவிப்பின் முடிவு இன்னொரு விருப்பத்திற்கு ஆரம்பமாக இருக்கும்.
இப்படி முடிவு-- ஆரம்பம்-- அதன் முடிவு இன்னொன்றின் ஆரம்பம் என்று எவ்வளவு காலத்திற்குப் போய்க் கொண்டிருப்பது? அப்படிப் போகாமல் இருப்பதற்கு தான் சத்வ குணம். சத்வ குணம். மேலோங்கும் போது 'உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றுமில்லை' என்று கண்ணதாசனார் சொன்ன மாதிரி எதிலும் எதுவும் இல்லை என்ற ஞானத்திற்கு இட்டுச் செல்லும்.
எதிலும் எதுவும் இல்லை என்பது ஞானம் ஆயினும் அது ஒரு அசட்டு ஞானம்.
அந்த அரைகுறை ஞானம், எதிலும் எதுவும் இல்லை என்று தோற்றத்திற்குத் தட்டுப்பட்டாலும் எல்லாவற்றிலும் ஏதுவோ இருக்கிறது என்ற ஞானத்தின் பரமானந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அந்த எதுவோவும் இல்லை என்றால் -- டெட் வுட்-- இயக்கமே இல்லை என்ற தத்துவம் புரிதலாகும். எல்லாமே ப்யூர் சயின்ஸ் என்பது தான் இதிலிருக்கிற ஆச்சரியமே.
இந்த இடத்தில் இன்னொரு வேடிக்கை பற்றியும் சொல்ல வேண்டும். பரமானந்த நிலை பற்றிச் சொன்னோம், இல்லையா?.. . அந்த பரமானந்த நிலையில் ஆழ்ந்து கிடப்பதற்கும் வழியில்லாத மாதிரி-- சத்வ குணத்திலேயே மயங்கிக் கிடக்காமல்-- நமக்கு வாய்த்த இந்த நிகழ் வாழ்க்கை பார்த்துக் கொள்ளும். போட்டி, பொறாமை, விட்டுக் கொடுக்காமை, நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கை சதவ குணத்தை செல்லாக் காசாக்கி நிதர்சனத்தைப் புரிய வைக்கும்.
நமக்கென்று தனி வாழ்க்கை எதுவும் இல்லை. நம்மை சுற்றியிருக்கிற ஜனக் கூட்டத்தை சார்ந்தது தான் நம் வாழ்க்கையும். அதைத் தவிர்த்த தனி வாழ்க்கை என்றால் காட்டுக்குத் தான் போக வேண்டும் என்று அந்தக்கால வழக்கத்திலும் சொல்வதற்கில்லை. காடெல்லாம் அழிக்கப்பட்டு காங்கிரீட் தளங்களாகி விட்டன.
ஆக, சத்வ, ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களும் ஒருவனின் வாழ்க்கையில் இது விட்டால் அது, அது விட்டால் இது என்று அந்தந்த நேரத்து சொர்க்கமாய் அமைந்த வட்டப் பாதைகள்.
நிதர்சன வாழ்க்கை என்பது மாறிக் கொண்டே இருக்கும் பெளதீக உண்மை. அந்த நிதர்சனம் நம்மில் ஒழியும் பொழுது தான் உண்மையான ஞானத்திற்கும் கதவு திறக்கிறது.
அந்த ஞானக் கதவை திறக்க முடியாமலும் நிதர்சனம் பார்த்துக் கொள்கிறது.
அப்படி என்னய்யா கண்டும் விண்டும் உணர வேண்டிய ஞானம் அது என்றால் அதைத் தானே தேடித் திரிந்து தெரிந்து கொள்ளத் துடிக்கிறேன் என்'ற பதிலும் கியைக்கும்.

ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நீங்காத ஆவலும் தொடர்ந்த முயற்சியும் இருந்தால் தான் எது பற்றியும் கிஞ்சித்தானும் தெரிந்து கொள்ள முடியும்.
தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது என்பவர்கள் சுகவாசிகள்.
சொல்லப் போனால் இப்போதைக்கு சுகவாசிகள். தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் வரும் பொழுது தன்னாலே கை நீண்டு கதவைத் தட்டும்.
தட்டினால் தான் கதவும் திறக்கும். தட்டுவதற்கு அவசியம் இன்றி திறந்தே இருக்கிற கதவும் ஏதும் இல்லை. திறந்தே இருக்கும் என்றால் கதவுக்கும் அவசியமில்லை.
(படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.)