49
ஆரம்பத்திலிருந்தே தன் எழுத்து நடையில் வித்தியாசம் காட்டியதால் சுஜாதா கதைகள் என்றாலே வார்த்தைகளை அவர் எப்படி பின்னியிருக்கிறார் என்பதே முக்கியமாகிப் போய்விட்டது. அதனால் அவரது காமா சோமா கதைகள் எப்பொழுதும் மனசில் முக்கிய இடம் பிடித்ததில்லை. இதனால் தானோ என்னவோ மற்றவர்கள் பெரும்பாலும் வாசித்து அறியாத அல்லது நினைவில் வைத்திருக்காத வித்தியாசமான கதைகளே என் நினைவில் இருப்பதாக ஆயிற்று.
'மத்யமர்' பன்னிரண்டு கதைகளில் முதல் கதையான 'ஒரு கல்யாண ஏற்பாடு' கதையில் ஒரு வரி வரும். 'நரசிம்மன் கூடத்து அலமாரியில் இருந்த ஹெரால்ட் ராபின்ஸ் புத்தகங்களை நீக்கி ஜே.கிருஷ்ணமூர்த்திகளை அடுக்கினார்' என்று வெகு சாதாரணமாக போகிற போக்கில் எழுதுகிற மாதிரி எழுதி விட்டுப் போய் விடுவார். நமக்கோ அதுவே அசாத்திய வேலப்பாடுகள் நிறைந்த வார்த்தை கோர்வைகளாகத் தெரியும். இந்த ஒற்றை வரியை ரசிப்பதற்கு ஹெரால்ட் ராபின்ஸ் எழுத்து பற்றியும், ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். ஒருவரின் குணாம்சத்தை எதையோ சொல்லி எப்படி வெளிப்படுத்தி விட்டார் என்று நமக்கு திகைப்பாக இருக்கும். அந்நாட்களில் மனம் தோய்ந்து சுஜாதாவை படித்த நினைவுகள் இவை.
'தேடாதே'ன்னு இன்னொரு குறுநாவல். கணபதி சுப்ரமணியம் என்கிற ஜி.எஸ்., எம்.ஏ. லிட்., சமூக அலைக்கழிப்பில் தமிழ் பத்திரிகைகளுக்கு கவர்ச்சிப் படங்கள் சப்ளை செய்யும் போட்டோகிராபர். தொழில் முறையில் நிறைய பெண்களோடு பரிச்சயம் என்றாலும் எல்லாரும் அவன் நிக்கானின் வ்யூ ஃபைண்டரில் தெரியும் எஸ்.எல்.ஆர். பிம்பங்கள் தாம். அன்றைக்கு தியாகராஜன் என்பவர் சொல்லி ஒரு குட்டி நடிகையை ஒரு சில போட்டோக்களில் சிறைப்படுத்த அவள் வீட்டிற்கு வந்திருக்கிறான்.
"கொஞ்சம் அப்படியே சாஞ்சுக்குங்க!.."
"இப்படியா ஸார்?"
"இல்லை.. கொஞ்சம் இடது பக்கமா.. தட்ஸ் இட். அப்புறம் மார்லே அந்த ஸாரியை லேசா.. ஓ.எஸ். போதும்! ப்யூட்டிஃபுல். கொஞ்சம் சிரிங்க! என் இடது கையைப் பாருங்க.. ரிலாக்ஸ்! தட்ஸ் இட்!"
அப்பெர்ச்சர் எஃப் 8.
ஸ்பீட் 125
காமிராவின் கழுத்தைத் திருக அந்தப் பெண் வ்யூஃபைண்டரில் தீட்டப்பட்டாள். அவளை நிறையவே பார்க்க முடிந்தது.
கிளிக்!
"தாங்க்ஸ். நீங்க டிரஸ் சேன்ஞ் பண்ணிகிட்டு வாங்க.."
"நீச்சல் உடை இருக்குதுங்க.... நல்லா இருக்கும்னு பேபி சொல்லிச்சு.."
"போட்டுக்கிட்டு வாங்களேன்.."
உள்ளே சென்றாள்.
வாசிக்கிறவரின் விழியோரங்கள் நீச்சல் உடையில் அந்த குட்டி நடிகையின் படத்தை ஜெயராஜ் போட்டிருக்கிறரா என்று சுவாரஸ்யமாக பக்கத்தைத் திருப்புகையில்...
நாம் வெளியே வந்து சுஜாதாவை தீவிரமாக ஆராய்வோம். எழுத்து அதல பாதாள அளவுக்கு இறங்காமல் அதே நேரத்தில் லேசான கிறக்க ஊஞ்சல் ஆட்டலில் வாரப் பத்திரிகை எழுத்துக்களில் மனம் பேதலிப்பவர்களுக்காக..
-- இது தான் சுஜாதாவா?.. இல்லை; இல்லை! இதெல்லாம் வாரப்பத்திரிகை விற்பனைக்காக! (நம்புங்க..) சினிமாக்கள்லேலாம் அந்தந்த ரசிகர்களுக்குத் தக்க மாதிரி சில பல ஐட்டங்கள் வைப்பார்கள் இல்லையா?... அந்த மாதிரி... வெள்ளை பேப்பர்களை கருப்பு மசியிட்டு போணியாக்குகிற வாராந்தரி இண்டஸ்ட்ரி என்ற பகாசுர யக்ஞனத்தில் தானும் ஒருவனாய் தலை கொடுத்த எழுத்தாளனுக்கு எத்தனையோ நிர்பந்தங்கள்..
அப்போ நிஜ சுஜாதா?.. கொஞ்சம் இருங்கள். அந்தப் பெண் டிரஸ் மாற்றி வந்து விட்டாள்.
"ரெடி ஸார்!"
திரும்பினேன். நீச்சல் உடை பொருந்தியே இருந்தது. கால்கள் நீளமாகவும், தொடை அரை படாமலும், சற்று வித்தியாசமானவள்.
"இது யார் ரூம்?" என்றேன்.
"என் ரூம் தான்!.."
"அப்ப இந்த புஸ்தகமெல்லாம் யார் படிக்கறாங்க?"
"நான் தான். ஏன்?"
ஏன் எப்படிச் சொல்வேன்?.. பெண்களில் உன் போன்றவர்கள் எல்லாம் 'ராணி'யில் படக்கதைக்கு மேல் படிக்க மாட்டார்கள். நீ எப்படி Zen படிக்கிறாய் என்று கேட்பது அநாகரீகம். பேச்சைத் தவிர். காமிரா மூலம் பேசு.
"உக்காருங்க.."
உட்கார்ந்தாள். சின்ன மார்பும், இலை போன்ற வயிறும், நீண்ட கால்களும்.. நிதானமாக ஃபோகஸ் செய்தேன்.
"முழங்காலை முதல்லே கட்டிக்கங்க."
ஃபிளாஷ் கைடு நம்பர் 80 : 100 ஏ.எஸ்.ஏ. பத்தடி தூரத்தில் எடுக்கிறோம் என்றால் அபெர்ச்சர் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று மனக்கணக்குகளில் எண்ணங்களைக் கட்டாயப் படுத்தினேன். அவள் கலைத்தாள்.
"சிரிக்க வேண்டாம்."
"ஏன் நல்லா இல்லையா?"
"இந்த போஸூக்கு சிரிச்சா நல்லால்லே.."
"சிரிக்க வேண்டாம்னு சொன்னா சிரிப்பு வருது" என்றாள்.
"சிரியுங்க.. சிரிச்சு முடிச்சுட்டு வாங்க. அப்புறம் எடுக்கலாம்."
"கோவிச்சுக்கறீங்களா?"
"என் தொழிலே கோபமே கூடாதுங்க!"
"என் தொழில்லயும்!"
"சிரிச்சாச்சா?"
"ஆச்சு.."
அவளோ பி.ஏ. லிட்., அவள் வீட்டு புத்தக அலமாரியில் Zen and the art of Motor cycle maintenance என்னும் புத்தகம் பார்த்த திடுக்கிடுதலில் அவளின் மீதான மதிப்பு அவனுக்குக் கூடி, அறிவுலக பிரஜைகளாய் இருவரும் பிணைக்கப்பட்ட சடுதியில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து நிறைய மல்லாந்து... என்று கதை போகும். 'கரையெல்லாம் செண்பகப் பூவி'ன் விட்ட குறை தொட்ட குறையாக இந்தக் கதையில் ஆரம்பத்தில் புவியரசுவின் கவிதையில் ஆரம்பித்து, மு. மேத்தாவையும் தொட்டு, 'சேரும் முகவரி சரியில்லை; அனுப்பிய முகவரியும் அதில் இல்லை; ஒரு கடிதம் அனாதையாகி விட்டது' என்ற புதுக்கவிதையைச் சொல்லி அதை யார் எழுதியது என்று யோசிக்க வைத்து, ராபர்ட் ஃப்ராஸ்ட், எரிக்கா யாங், ஈஸாப் கதைகள், ஜென் கதைகள், அலைஸ், எலிஸபெதன் டிராமா, Image Processing, கம்ப்யூட்டர் டிஜிட்டைஸர் என்று நிறைய அறிமுகங்கள் சிடைக்கும் என்று சொல்லி விடுவது சுலபம். கதைப் போக்குக்கு உறுத்தாமல் இத்தனை சமாச்சாரங்களை தான் சொல்லுகிற விஷயத்தில் எப்படி உட்படுத்துகிறார் என்பது தான் சுஜாதாவின் சாமர்த்தியம். ஒரு இடத்தில், "எனக்கு பேசற விஷயம் பெரிசல்ல, ஜி.யெஸ்!.. பேசற முகம், அதனுடைய சலனங்கள், கண்கள், கைவிரல்கள்.. பேசுங்க.." என்று சொல்லி அயர வைப்பார்.
அதே மாதிரி தான் 'வண்ணத்துப் பூச்சி வேட்டை'யிலும். என்னவோ ஜிலுஜிலுன்னு ராஜபாட்டையில் போகிற சப்ஜெக்ட் தான். வேறு யார் எழுதினும் (அ) வழக்கமான மாவரைப்பாக இருந்திருக்கும்; (ஆ) சவசவக்க வைத்து சொதப்பி
இருப்பார்கள்; (இ) அத்தியாயம் அத்தியாயமாக கட்டுரை எழுதி கதை என்று பெயரிட்டு கொட்டாவி விட வைத்திருப்பார்கள். இந்த வண்ணத்துப் பூச்சியோ சுஜாதாவின் கைபட்டு சும்மா சிட்டு போல சிறகடிக்கிறது.
இதிலும், எலிசா பிஷப், வாலஸ் ஸ்டீவன்ஸ், எமிலி டிக்கின்ஸன், தாவ் தே சிங், டெரக் வால்காட் போன்றவர்கள் சொன்னதைச் சொல்லி அதற்கிடையில் ஆத்மா நாமையும், இளம்பிறையையும் நினைவு கொண்டு அவர்களின் துணுக்குக் கவிதைகளைத் தூக்கிப் பிடித்திருப்பார். இந்தப் புதினத்தில் தான் சுகுமாரனின் 'அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர், நதிக்கு அந்நியமாச்சு; இது நிச்சலனம்.
ஆகாயம் அலைபுரளும் அதில். கை நீரைக் கவிழ்த்தேன், போகும் நதியில் எது என் நீர்?' என்னும் கவிதை வரிகளை அங்கலாய்ப்புடன் சொல்லியிருப்பார். அதுமட்டுமில்லை, Bend and you will be whole - Cut and you will be straight - Keep empty and you will be filled - Grow old and you will be renewed..' என்னும் லாவ்ட்ஸுவின் வரிகளை அழகாக, அதற்கான இடத்தில், அற்புதமாக, அர்த்தபூர்வமாக எடுத்தாண்டிருப்பார்.
இதெல்லாம் தமிழுக்கு புதுசு. இதையெல்லாம் சொல்லாமல் அவரால் கதையை வெறும் கதையாக எழுத முடியாது. தான் படித்து பரவசப்பட்டதையெல்லாம் சொல்வதற்காகத் தான் கதை -- கட்டுரை என்று அது அதற்கேற்ற எழுத்து ரூபத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
'காகித சங்கிலிகள்', 'குருபிரசாத்தின் கடைசி தினம்' மனதை உருக்கும் குறுநாவல்கள் பலருக்கு அறிமுகம் ஆகியிருக்கும் என்பதினால் அவை பற்றிச் சொல்வதைத் தவிர்க்கிறேன்.
(வளரும்)
ஆரம்பத்திலிருந்தே தன் எழுத்து நடையில் வித்தியாசம் காட்டியதால் சுஜாதா கதைகள் என்றாலே வார்த்தைகளை அவர் எப்படி பின்னியிருக்கிறார் என்பதே முக்கியமாகிப் போய்விட்டது. அதனால் அவரது காமா சோமா கதைகள் எப்பொழுதும் மனசில் முக்கிய இடம் பிடித்ததில்லை. இதனால் தானோ என்னவோ மற்றவர்கள் பெரும்பாலும் வாசித்து அறியாத அல்லது நினைவில் வைத்திருக்காத வித்தியாசமான கதைகளே என் நினைவில் இருப்பதாக ஆயிற்று.
'மத்யமர்' பன்னிரண்டு கதைகளில் முதல் கதையான 'ஒரு கல்யாண ஏற்பாடு' கதையில் ஒரு வரி வரும். 'நரசிம்மன் கூடத்து அலமாரியில் இருந்த ஹெரால்ட் ராபின்ஸ் புத்தகங்களை நீக்கி ஜே.கிருஷ்ணமூர்த்திகளை அடுக்கினார்' என்று வெகு சாதாரணமாக போகிற போக்கில் எழுதுகிற மாதிரி எழுதி விட்டுப் போய் விடுவார். நமக்கோ அதுவே அசாத்திய வேலப்பாடுகள் நிறைந்த வார்த்தை கோர்வைகளாகத் தெரியும். இந்த ஒற்றை வரியை ரசிப்பதற்கு ஹெரால்ட் ராபின்ஸ் எழுத்து பற்றியும், ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். ஒருவரின் குணாம்சத்தை எதையோ சொல்லி எப்படி வெளிப்படுத்தி விட்டார் என்று நமக்கு திகைப்பாக இருக்கும். அந்நாட்களில் மனம் தோய்ந்து சுஜாதாவை படித்த நினைவுகள் இவை.
'தேடாதே'ன்னு இன்னொரு குறுநாவல். கணபதி சுப்ரமணியம் என்கிற ஜி.எஸ்., எம்.ஏ. லிட்., சமூக அலைக்கழிப்பில் தமிழ் பத்திரிகைகளுக்கு கவர்ச்சிப் படங்கள் சப்ளை செய்யும் போட்டோகிராபர். தொழில் முறையில் நிறைய பெண்களோடு பரிச்சயம் என்றாலும் எல்லாரும் அவன் நிக்கானின் வ்யூ ஃபைண்டரில் தெரியும் எஸ்.எல்.ஆர். பிம்பங்கள் தாம். அன்றைக்கு தியாகராஜன் என்பவர் சொல்லி ஒரு குட்டி நடிகையை ஒரு சில போட்டோக்களில் சிறைப்படுத்த அவள் வீட்டிற்கு வந்திருக்கிறான்."கொஞ்சம் அப்படியே சாஞ்சுக்குங்க!.."
"இப்படியா ஸார்?"
"இல்லை.. கொஞ்சம் இடது பக்கமா.. தட்ஸ் இட். அப்புறம் மார்லே அந்த ஸாரியை லேசா.. ஓ.எஸ். போதும்! ப்யூட்டிஃபுல். கொஞ்சம் சிரிங்க! என் இடது கையைப் பாருங்க.. ரிலாக்ஸ்! தட்ஸ் இட்!"
அப்பெர்ச்சர் எஃப் 8.
ஸ்பீட் 125
காமிராவின் கழுத்தைத் திருக அந்தப் பெண் வ்யூஃபைண்டரில் தீட்டப்பட்டாள். அவளை நிறையவே பார்க்க முடிந்தது.
கிளிக்!
"தாங்க்ஸ். நீங்க டிரஸ் சேன்ஞ் பண்ணிகிட்டு வாங்க.."
"நீச்சல் உடை இருக்குதுங்க.... நல்லா இருக்கும்னு பேபி சொல்லிச்சு.."
"போட்டுக்கிட்டு வாங்களேன்.."
உள்ளே சென்றாள்.
வாசிக்கிறவரின் விழியோரங்கள் நீச்சல் உடையில் அந்த குட்டி நடிகையின் படத்தை ஜெயராஜ் போட்டிருக்கிறரா என்று சுவாரஸ்யமாக பக்கத்தைத் திருப்புகையில்...
நாம் வெளியே வந்து சுஜாதாவை தீவிரமாக ஆராய்வோம். எழுத்து அதல பாதாள அளவுக்கு இறங்காமல் அதே நேரத்தில் லேசான கிறக்க ஊஞ்சல் ஆட்டலில் வாரப் பத்திரிகை எழுத்துக்களில் மனம் பேதலிப்பவர்களுக்காக..
-- இது தான் சுஜாதாவா?.. இல்லை; இல்லை! இதெல்லாம் வாரப்பத்திரிகை விற்பனைக்காக! (நம்புங்க..) சினிமாக்கள்லேலாம் அந்தந்த ரசிகர்களுக்குத் தக்க மாதிரி சில பல ஐட்டங்கள் வைப்பார்கள் இல்லையா?... அந்த மாதிரி... வெள்ளை பேப்பர்களை கருப்பு மசியிட்டு போணியாக்குகிற வாராந்தரி இண்டஸ்ட்ரி என்ற பகாசுர யக்ஞனத்தில் தானும் ஒருவனாய் தலை கொடுத்த எழுத்தாளனுக்கு எத்தனையோ நிர்பந்தங்கள்..
அப்போ நிஜ சுஜாதா?.. கொஞ்சம் இருங்கள். அந்தப் பெண் டிரஸ் மாற்றி வந்து விட்டாள்.
"ரெடி ஸார்!"
திரும்பினேன். நீச்சல் உடை பொருந்தியே இருந்தது. கால்கள் நீளமாகவும், தொடை அரை படாமலும், சற்று வித்தியாசமானவள்.
"இது யார் ரூம்?" என்றேன்.
"என் ரூம் தான்!.."
"அப்ப இந்த புஸ்தகமெல்லாம் யார் படிக்கறாங்க?"
"நான் தான். ஏன்?"
ஏன் எப்படிச் சொல்வேன்?.. பெண்களில் உன் போன்றவர்கள் எல்லாம் 'ராணி'யில் படக்கதைக்கு மேல் படிக்க மாட்டார்கள். நீ எப்படி Zen படிக்கிறாய் என்று கேட்பது அநாகரீகம். பேச்சைத் தவிர். காமிரா மூலம் பேசு.
"உக்காருங்க.."
உட்கார்ந்தாள். சின்ன மார்பும், இலை போன்ற வயிறும், நீண்ட கால்களும்.. நிதானமாக ஃபோகஸ் செய்தேன்.
"முழங்காலை முதல்லே கட்டிக்கங்க."
ஃபிளாஷ் கைடு நம்பர் 80 : 100 ஏ.எஸ்.ஏ. பத்தடி தூரத்தில் எடுக்கிறோம் என்றால் அபெர்ச்சர் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று மனக்கணக்குகளில் எண்ணங்களைக் கட்டாயப் படுத்தினேன். அவள் கலைத்தாள்.
"சிரிக்க வேண்டாம்."
"ஏன் நல்லா இல்லையா?"
"இந்த போஸூக்கு சிரிச்சா நல்லால்லே.."
"சிரிக்க வேண்டாம்னு சொன்னா சிரிப்பு வருது" என்றாள்.
"சிரியுங்க.. சிரிச்சு முடிச்சுட்டு வாங்க. அப்புறம் எடுக்கலாம்."
"கோவிச்சுக்கறீங்களா?"
"என் தொழிலே கோபமே கூடாதுங்க!"
"என் தொழில்லயும்!"
"சிரிச்சாச்சா?"
"ஆச்சு.."
அவளோ பி.ஏ. லிட்., அவள் வீட்டு புத்தக அலமாரியில் Zen and the art of Motor cycle maintenance என்னும் புத்தகம் பார்த்த திடுக்கிடுதலில் அவளின் மீதான மதிப்பு அவனுக்குக் கூடி, அறிவுலக பிரஜைகளாய் இருவரும் பிணைக்கப்பட்ட சடுதியில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து நிறைய மல்லாந்து... என்று கதை போகும். 'கரையெல்லாம் செண்பகப் பூவி'ன் விட்ட குறை தொட்ட குறையாக இந்தக் கதையில் ஆரம்பத்தில் புவியரசுவின் கவிதையில் ஆரம்பித்து, மு. மேத்தாவையும் தொட்டு, 'சேரும் முகவரி சரியில்லை; அனுப்பிய முகவரியும் அதில் இல்லை; ஒரு கடிதம் அனாதையாகி விட்டது' என்ற புதுக்கவிதையைச் சொல்லி அதை யார் எழுதியது என்று யோசிக்க வைத்து, ராபர்ட் ஃப்ராஸ்ட், எரிக்கா யாங், ஈஸாப் கதைகள், ஜென் கதைகள், அலைஸ், எலிஸபெதன் டிராமா, Image Processing, கம்ப்யூட்டர் டிஜிட்டைஸர் என்று நிறைய அறிமுகங்கள் சிடைக்கும் என்று சொல்லி விடுவது சுலபம். கதைப் போக்குக்கு உறுத்தாமல் இத்தனை சமாச்சாரங்களை தான் சொல்லுகிற விஷயத்தில் எப்படி உட்படுத்துகிறார் என்பது தான் சுஜாதாவின் சாமர்த்தியம். ஒரு இடத்தில், "எனக்கு பேசற விஷயம் பெரிசல்ல, ஜி.யெஸ்!.. பேசற முகம், அதனுடைய சலனங்கள், கண்கள், கைவிரல்கள்.. பேசுங்க.." என்று சொல்லி அயர வைப்பார்.
அதே மாதிரி தான் 'வண்ணத்துப் பூச்சி வேட்டை'யிலும். என்னவோ ஜிலுஜிலுன்னு ராஜபாட்டையில் போகிற சப்ஜெக்ட் தான். வேறு யார் எழுதினும் (அ) வழக்கமான மாவரைப்பாக இருந்திருக்கும்; (ஆ) சவசவக்க வைத்து சொதப்பி
இருப்பார்கள்; (இ) அத்தியாயம் அத்தியாயமாக கட்டுரை எழுதி கதை என்று பெயரிட்டு கொட்டாவி விட வைத்திருப்பார்கள். இந்த வண்ணத்துப் பூச்சியோ சுஜாதாவின் கைபட்டு சும்மா சிட்டு போல சிறகடிக்கிறது.
இதிலும், எலிசா பிஷப், வாலஸ் ஸ்டீவன்ஸ், எமிலி டிக்கின்ஸன், தாவ் தே சிங், டெரக் வால்காட் போன்றவர்கள் சொன்னதைச் சொல்லி அதற்கிடையில் ஆத்மா நாமையும், இளம்பிறையையும் நினைவு கொண்டு அவர்களின் துணுக்குக் கவிதைகளைத் தூக்கிப் பிடித்திருப்பார். இந்தப் புதினத்தில் தான் சுகுமாரனின் 'அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர், நதிக்கு அந்நியமாச்சு; இது நிச்சலனம்.
ஆகாயம் அலைபுரளும் அதில். கை நீரைக் கவிழ்த்தேன், போகும் நதியில் எது என் நீர்?' என்னும் கவிதை வரிகளை அங்கலாய்ப்புடன் சொல்லியிருப்பார். அதுமட்டுமில்லை, Bend and you will be whole - Cut and you will be straight - Keep empty and you will be filled - Grow old and you will be renewed..' என்னும் லாவ்ட்ஸுவின் வரிகளை அழகாக, அதற்கான இடத்தில், அற்புதமாக, அர்த்தபூர்வமாக எடுத்தாண்டிருப்பார்.இதெல்லாம் தமிழுக்கு புதுசு. இதையெல்லாம் சொல்லாமல் அவரால் கதையை வெறும் கதையாக எழுத முடியாது. தான் படித்து பரவசப்பட்டதையெல்லாம் சொல்வதற்காகத் தான் கதை -- கட்டுரை என்று அது அதற்கேற்ற எழுத்து ரூபத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
'காகித சங்கிலிகள்', 'குருபிரசாத்தின் கடைசி தினம்' மனதை உருக்கும் குறுநாவல்கள் பலருக்கு அறிமுகம் ஆகியிருக்கும் என்பதினால் அவை பற்றிச் சொல்வதைத் தவிர்க்கிறேன்.
(வளரும்)




















