41
ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் உன்னைப் போல ஒருவன் குறுநாவல் பிரசுரம் கண்டு வாசகர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனந்த விகடனில் அவரது முதல் குறுநாவலும் அதுவே. பின்னால் இதே கதையை குறைந்த செலவில் திரைப்படம் ஆக்கினார் அவர். வழக்கமாக அந்தப்
படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் ப்லீம் ப்ரிண்ட் போட்டு ஊர் ஊராக சென்று அங்கு வாடகைக்குக் கிடைக்கும் தியேட்டரில் காலைக் காட்சி போல திரையிட ஏற்பாடுகள் செய்தார். இதற்கு பல்வேறு இடங்களிடம் விரவிக் கிடந்த அவரது வாசக அன்பர்கள், பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர்.
அந்த மாதிரி புதுவையில் உன்னைப் போல் ஒருவன் படப்பெட்டியோடு அவர் வந்திருந்த பொழுது அவருடனான அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்தத் தடவை அவரைச் சுற்றியிருந்த கூட்டந்தில் என்னை அடையாளம் கண்டு கொண்டு "எப்படியிருக்கீங்க, ஜீவி?" என்றார். நான் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வியாக "சிரில் வரலையா?" என்றார். "வர்றதா சொல்லியிருக்கிறார்.." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, இன்னொருவர் குறுக்கிட்டு ஏதோ கேட்டார். அதற்குள் என் வழக்கப்படி 'ஆட்டோகிராப்' நீட்டி கையெழுத்து வாங்கிக் கொண்ட பொழுது, 'அவசியம் வீட்டுக்கு வாருங்கள்.." என்று தன் சென்னை எழும்பூர் வீட்டு முகவரியையும் குறித்துக் கொடுத்தார். அதற்குள் சிரிலும் வந்து விடவே பேச்சு திரைப்படம் குறித்து அலைபாய்ந்தது.
படத்தில் இடைவேளையில் ஜெயகாந்தன் பேசினார். 'இன்றைய தமிழ் சினிமா ரசனையையும் அதன் சிருஷ்டி முறைகளையும் இந்தப் படம் பூரணமாக மறுத்து ஒதுக்கியிருக்கிறது. இது பற்றி ஓரளவு அறிந்திருந்தும் என்னைப் புரிந்து கொண்டமையால் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வந்திருக்கும் நண்பர்களே! உங்களை நான் வணங்குகிறேன். பாராட்டுகிறேன். காலத்தின் தேவையை உணர்ந்து அதற்கான கடமையை ஆற்ற வந்தவர்களின் படைப்பு என்ற அளவில் இந்தப் படமும் அதற்கான ஓர் ஆரம்பமே..' என்ற கருத்தில் தொடங்கியதாக நினைவு.
ஜெயகாந்தனே இயக்கிய படம் இது. ஆறு தயாரிப்பாளர்களில் ஒருவராக 'ஆசிய ஜோதி பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிருவனத்தின் தயாரிப்பாக இந்த படம் வெளிவந்தது. பின்னால் இந்த 'உன்னைப் போல் ஒருவன்' தேசிய விருதையும் பெற்றது. இந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் காந்திமதி நடித்திருந்தார்.
புதுவையில் நான் இருந்த வரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று இரண்டே இரண்டு கட்சிகள் தான் இருந்தன. கம்யூனிஸ்ட் இயக்கமும் தோழர் வ. சுப்பையாவின் தலைமையில் பஞ்சாலைத் தொழிற்சங்கங்களின் வலுவோடு தொழிலாளர் நலன் சார்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தது. குபேர் ஆட்சி போய் வெங்கட சுப்பையாயின் காங்கிரஸ் ஆட்சி வந்த பொழுது புதுவையில் காலூன்ற கழகங்களின் முயற்சிகள் லேசாக வேர் கொள்ள ஆரம்பித்தது.
சென்னையிலிருந்து காங்கிரஸ் பேச்சாளர்கள் சிலர் வந்து ஒதியஞ்சாலை மைதானத்தில் கூட்டம் போட்டதெல்லாம் நினைவிலிருக்கிறது. நாத்திகம் ராமசாமி சென்னையிலிருந்து வெளிவந்த நாத்திகம் என்ற பத்திரிகையின் ஆசிரியர். அந்நாட்களில் அவர் காங்கிரஸ் மேடைகளில் பேசுவது வழக்கம். எது எப்படியிருந்தாலும் புதுவை மக்களின் ஆசை, அபிலாஷையெல்லாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தது. 'புதுவை சென்னை மாகாணத்தோடு சேர்ந்து விடலாகாது; புதுவையின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்' என்பதே அது. அதனால் அந்நாட்களில் மேடைகளில் புதுவை மக்களின் ஒன்றுபட்ட இந்தக் கோரிக்கைக்கு எதிராக யாரும் பேச மாட்டார்கள். சொல்லப் போனால் புதுவையின் தனித் தன்மையை பாதுக்காப்போம் என்று உறுதி மொழி வேறு கொடுப்பார்கள்.
இந்த சமயத்தில் தான் எங்கள் தொலைத் தொடர்புத் துறையின் தமிழக வட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இதுகாறும் சேலம் தொலைதொடர்பு வட்டத்தில் இருந்த பவானி என்ற ஊர் கோவை வட்டத்தோடு சேர்ந்தது. இந்த மாற்றத்தை உபயோகப்படுத்திக் கொண்டு பவானிக்கு விருப்ப மாற்றலுக்காக நான் விண்ணப்பித்திருந்தது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பவானி அழகான ஊர்.. நான் தபால் அலுவலகத்தில் பணியாற்றிய குமார பாளையம் பவானிக்கு பக்கத்து ஊர் தான். இரண்டு ஊர்களையும் இணைப்பது காவிரிப் பாலம் தான்.
பவானியில் பணியாற்றும் காலத்தில் இந்தி எதிர்ப்பின் தீவிரம் மேலோங்கிய காலம். அந்நாட்களில் ஜெயகாந்தன் பவானிக்கு வந்திருந்தார். காங்கிரஸ் மேடையில் கர்ஜித்தார். அவர் பேச்சு முழுக்க முழுக்க தனி மனித உரிமையில் தடையிடல் சம்பந்தப்பட்டு அமைந்திருந்தது. கூட்டம் முடிந்ததும் அவர் தங்கியிருந்த ஓட்டலில் அவரது வாசகர்கள் கூட்டத்தோடு கூட்டமாக சந்தித்தேன்.
இதெல்லாம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகத்தில் இந்தி மொழி எதிர்ப்புக்கான காரணங்கள் உயிர்ப்புடன் இருப்பது தான் இன்னொரு ஆச்சரியம்.
வட இந்திய மக்களின் சில ஆங்கில உச்சரிப்புகள் அபத்தமானவை. -- sion -- tion என்று முடியும் வார்த்தைகளை விநோதமாக உச்சரிப்பார்கள்.
தெற்கில் ஆங்கிலம் வளர்ந்த அளவுக்கு வடக்கே இல்லை. அதனால் தான் இந்திக்கு அபரிதமான வளர்ச்சி அங்கே. இங்கே தமிழின் வளர்ச்சியை ஆங்கிலம் சாப்பிட்டு விட்டது. தமிழை ஓரங்கட்டி விட்டு ஆங்கிலத்தால் வாழ்க்கையை வளப்பமாக்கிக் கொண்டோம். ஆங்கில மொழித் தேர்ச்சியில் தனிமனிதனுக்கு லாபங்கள் எக்கச் சக்கம் தான். ஆனால் அந்த லாபங்கள் தாய் மொழி வளர்ச்சிக்கு அன்னியப்பட்ட லாபங்கள் என்ற உணர்வு மட்டும் நமக்கு இல்லாது போயிற்று.
அடிக்கடி தில்லி போக வேண்டியிருக்கிறதே என்று அரசியல்வாதிகளும் இந்தியைக் கற்றுத் தேர்ந்தார்கள். ஒரே கட்சியில் கூட இந்தி கற்றவருக்கும் கற்காதவருக்கும் இடையே பாலமாக துபாஷி வேலை பார்க்க இந்தி உதவிற்று. தில்லி வாழ் மாற்றுக் கட்சிகாரர்களுடனான சொந்த லாபத்திற்கான நட்பு இறுக இந்தி கற்றது துணையாக இருந்தது.
அதனால் ஒன்று தெரிந்தது. அவசியம் உள்ளோருக்கு தெரியாத எந்த மொழியையும் கற்பதில் எந்தவிதத்தில் பார்த்தாலும் ஏதாவது ஒரு லாபமே தவிர இழப்பு ஏதுமில்லை என்று தெரிகிறது.. அதுமட்டுமில்லை.. இன்னொரு மொழியைக் கற்பதால் தாய்மொழித் தமிழுக்கு எந்த ஏற்றமோ அன்றி ஏற்றமின்மையோ ஏற்பட்டு விடவில்லை என்பது தெரிகிறது.. அது பாட்டுக்க அது, இது பாட்டுக்க இது என்று ஒன்றுக்கொன்று இணைப்பில்லாத இரு கோடுகள் தத்துவம் இதுவாயிற்று.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிவழிப் பிரிந்த மாநிலங்களுக்கும் நம்மைப் போலவான தாய் மொழிப் பற்று இல்லை என்று சொல்லி விட முடியாது.. மலையாளத்தில் இலக்கியம் அந்த மக்களின் இலக்கியம். எளிய மக்களின் வாழ்க்கை முறை தான் அங்கே இலக்கியம் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டிருக்கிறது.. இங்கே எப்படி என்று உங்களுக்கே தெரியும்.
எல்லா பிராந்திய மொழிகளும் வளரும் வரை இந்த அகண்ட பாரதத்தின் தொடர்பு மொழி ஆங்கிலமாகவே இருக்க வேண்டும் என்று அந்நாளைய பிரதமர் நேருவிடம் உறுதி மொழி வாங்கி நெஞ்சை நிமிர்த்தியது நாம் தான். பண்டித நேருவையே பணிய வைத்தோம் என்று எக்காளமிட்டோம்.
இந்தியை எதிர்க்க வில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்த்தோம் என்று பூசி மெழுகினதால் விளைந்தது ஏதுமில்லை. அன்று இந்தி இன்று சமஸ்கிருதம் என்று வேறொன்றுக்குத் தாவி இருக்கிறோம். அவ்வளவு தான். எதையாவது எதிர்க்கொண்டிருக்க வேண்டியது நமது தேவையாகி விட்டது. பக்கத்து மாநிலக் காரர்களோ நோகாமல் ஏற்றமிகு வாழ்க்கைக்கு தங்களின் ஆற்றலையே ஏணிப்படிகள் ஆக்கியிருக்கிறார்கள்.
பெற்ற அந்த உறுதிமொழியால் விளைந்த பலன் என்னவென்று கணக்குப் பார்க்க மட்டும் நாம் தயங்குவோம். ஏனென்றால் ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்திலேயே ஆங்கிலத்தை அவனை விட அழகாகப் பேசியது நாம் தான். ஆதியிலிருந்து ஆங்கிலேயரின் நடை, உடை, பாவனை, நாகரிகம் என்று மோகித்து ஆங்கிலம் அறியாத பாமர மக்களை சுரண்டிக் கொழுத்தது நாம் தான். ஆங்கிலத்திலேயே யோசித்தால் தான் நம் யோசனைகளே செயல்படும் என்ற அளவுக்கு மழுங்கிப் போனவர்கள் நாம்.
இத்தனை காலம் இந்தி தெரியாமலேயே வாழ்ந்தாயிற்று.. பாக்கி காலமும் அப்படியே தெரியாமல் வாழ்ந்தால் போச்சு.
(வளரும்)
ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் உன்னைப் போல ஒருவன் குறுநாவல் பிரசுரம் கண்டு வாசகர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனந்த விகடனில் அவரது முதல் குறுநாவலும் அதுவே. பின்னால் இதே கதையை குறைந்த செலவில் திரைப்படம் ஆக்கினார் அவர். வழக்கமாக அந்தப்

அந்த மாதிரி புதுவையில் உன்னைப் போல் ஒருவன் படப்பெட்டியோடு அவர் வந்திருந்த பொழுது அவருடனான அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்தத் தடவை அவரைச் சுற்றியிருந்த கூட்டந்தில் என்னை அடையாளம் கண்டு கொண்டு "எப்படியிருக்கீங்க, ஜீவி?" என்றார். நான் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வியாக "சிரில் வரலையா?" என்றார். "வர்றதா சொல்லியிருக்கிறார்.." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, இன்னொருவர் குறுக்கிட்டு ஏதோ கேட்டார். அதற்குள் என் வழக்கப்படி 'ஆட்டோகிராப்' நீட்டி கையெழுத்து வாங்கிக் கொண்ட பொழுது, 'அவசியம் வீட்டுக்கு வாருங்கள்.." என்று தன் சென்னை எழும்பூர் வீட்டு முகவரியையும் குறித்துக் கொடுத்தார். அதற்குள் சிரிலும் வந்து விடவே பேச்சு திரைப்படம் குறித்து அலைபாய்ந்தது.
படத்தில் இடைவேளையில் ஜெயகாந்தன் பேசினார். 'இன்றைய தமிழ் சினிமா ரசனையையும் அதன் சிருஷ்டி முறைகளையும் இந்தப் படம் பூரணமாக மறுத்து ஒதுக்கியிருக்கிறது. இது பற்றி ஓரளவு அறிந்திருந்தும் என்னைப் புரிந்து கொண்டமையால் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வந்திருக்கும் நண்பர்களே! உங்களை நான் வணங்குகிறேன். பாராட்டுகிறேன். காலத்தின் தேவையை உணர்ந்து அதற்கான கடமையை ஆற்ற வந்தவர்களின் படைப்பு என்ற அளவில் இந்தப் படமும் அதற்கான ஓர் ஆரம்பமே..' என்ற கருத்தில் தொடங்கியதாக நினைவு.
ஜெயகாந்தனே இயக்கிய படம் இது. ஆறு தயாரிப்பாளர்களில் ஒருவராக 'ஆசிய ஜோதி பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிருவனத்தின் தயாரிப்பாக இந்த படம் வெளிவந்தது. பின்னால் இந்த 'உன்னைப் போல் ஒருவன்' தேசிய விருதையும் பெற்றது. இந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் காந்திமதி நடித்திருந்தார்.
புதுவையில் நான் இருந்த வரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று இரண்டே இரண்டு கட்சிகள் தான் இருந்தன. கம்யூனிஸ்ட் இயக்கமும் தோழர் வ. சுப்பையாவின் தலைமையில் பஞ்சாலைத் தொழிற்சங்கங்களின் வலுவோடு தொழிலாளர் நலன் சார்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தது. குபேர் ஆட்சி போய் வெங்கட சுப்பையாயின் காங்கிரஸ் ஆட்சி வந்த பொழுது புதுவையில் காலூன்ற கழகங்களின் முயற்சிகள் லேசாக வேர் கொள்ள ஆரம்பித்தது.
சென்னையிலிருந்து காங்கிரஸ் பேச்சாளர்கள் சிலர் வந்து ஒதியஞ்சாலை மைதானத்தில் கூட்டம் போட்டதெல்லாம் நினைவிலிருக்கிறது. நாத்திகம் ராமசாமி சென்னையிலிருந்து வெளிவந்த நாத்திகம் என்ற பத்திரிகையின் ஆசிரியர். அந்நாட்களில் அவர் காங்கிரஸ் மேடைகளில் பேசுவது வழக்கம். எது எப்படியிருந்தாலும் புதுவை மக்களின் ஆசை, அபிலாஷையெல்லாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தது. 'புதுவை சென்னை மாகாணத்தோடு சேர்ந்து விடலாகாது; புதுவையின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்' என்பதே அது. அதனால் அந்நாட்களில் மேடைகளில் புதுவை மக்களின் ஒன்றுபட்ட இந்தக் கோரிக்கைக்கு எதிராக யாரும் பேச மாட்டார்கள். சொல்லப் போனால் புதுவையின் தனித் தன்மையை பாதுக்காப்போம் என்று உறுதி மொழி வேறு கொடுப்பார்கள்.
இந்த சமயத்தில் தான் எங்கள் தொலைத் தொடர்புத் துறையின் தமிழக வட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இதுகாறும் சேலம் தொலைதொடர்பு வட்டத்தில் இருந்த பவானி என்ற ஊர் கோவை வட்டத்தோடு சேர்ந்தது. இந்த மாற்றத்தை உபயோகப்படுத்திக் கொண்டு பவானிக்கு விருப்ப மாற்றலுக்காக நான் விண்ணப்பித்திருந்தது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பவானி அழகான ஊர்.. நான் தபால் அலுவலகத்தில் பணியாற்றிய குமார பாளையம் பவானிக்கு பக்கத்து ஊர் தான். இரண்டு ஊர்களையும் இணைப்பது காவிரிப் பாலம் தான்.
பவானியில் பணியாற்றும் காலத்தில் இந்தி எதிர்ப்பின் தீவிரம் மேலோங்கிய காலம். அந்நாட்களில் ஜெயகாந்தன் பவானிக்கு வந்திருந்தார். காங்கிரஸ் மேடையில் கர்ஜித்தார். அவர் பேச்சு முழுக்க முழுக்க தனி மனித உரிமையில் தடையிடல் சம்பந்தப்பட்டு அமைந்திருந்தது. கூட்டம் முடிந்ததும் அவர் தங்கியிருந்த ஓட்டலில் அவரது வாசகர்கள் கூட்டத்தோடு கூட்டமாக சந்தித்தேன்.
இதெல்லாம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகத்தில் இந்தி மொழி எதிர்ப்புக்கான காரணங்கள் உயிர்ப்புடன் இருப்பது தான் இன்னொரு ஆச்சரியம்.
வட இந்திய மக்களின் சில ஆங்கில உச்சரிப்புகள் அபத்தமானவை. -- sion -- tion என்று முடியும் வார்த்தைகளை விநோதமாக உச்சரிப்பார்கள்.
தெற்கில் ஆங்கிலம் வளர்ந்த அளவுக்கு வடக்கே இல்லை. அதனால் தான் இந்திக்கு அபரிதமான வளர்ச்சி அங்கே. இங்கே தமிழின் வளர்ச்சியை ஆங்கிலம் சாப்பிட்டு விட்டது. தமிழை ஓரங்கட்டி விட்டு ஆங்கிலத்தால் வாழ்க்கையை வளப்பமாக்கிக் கொண்டோம். ஆங்கில மொழித் தேர்ச்சியில் தனிமனிதனுக்கு லாபங்கள் எக்கச் சக்கம் தான். ஆனால் அந்த லாபங்கள் தாய் மொழி வளர்ச்சிக்கு அன்னியப்பட்ட லாபங்கள் என்ற உணர்வு மட்டும் நமக்கு இல்லாது போயிற்று.
அடிக்கடி தில்லி போக வேண்டியிருக்கிறதே என்று அரசியல்வாதிகளும் இந்தியைக் கற்றுத் தேர்ந்தார்கள். ஒரே கட்சியில் கூட இந்தி கற்றவருக்கும் கற்காதவருக்கும் இடையே பாலமாக துபாஷி வேலை பார்க்க இந்தி உதவிற்று. தில்லி வாழ் மாற்றுக் கட்சிகாரர்களுடனான சொந்த லாபத்திற்கான நட்பு இறுக இந்தி கற்றது துணையாக இருந்தது.
அதனால் ஒன்று தெரிந்தது. அவசியம் உள்ளோருக்கு தெரியாத எந்த மொழியையும் கற்பதில் எந்தவிதத்தில் பார்த்தாலும் ஏதாவது ஒரு லாபமே தவிர இழப்பு ஏதுமில்லை என்று தெரிகிறது.. அதுமட்டுமில்லை.. இன்னொரு மொழியைக் கற்பதால் தாய்மொழித் தமிழுக்கு எந்த ஏற்றமோ அன்றி ஏற்றமின்மையோ ஏற்பட்டு விடவில்லை என்பது தெரிகிறது.. அது பாட்டுக்க அது, இது பாட்டுக்க இது என்று ஒன்றுக்கொன்று இணைப்பில்லாத இரு கோடுகள் தத்துவம் இதுவாயிற்று.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிவழிப் பிரிந்த மாநிலங்களுக்கும் நம்மைப் போலவான தாய் மொழிப் பற்று இல்லை என்று சொல்லி விட முடியாது.. மலையாளத்தில் இலக்கியம் அந்த மக்களின் இலக்கியம். எளிய மக்களின் வாழ்க்கை முறை தான் அங்கே இலக்கியம் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டிருக்கிறது.. இங்கே எப்படி என்று உங்களுக்கே தெரியும்.
எல்லா பிராந்திய மொழிகளும் வளரும் வரை இந்த அகண்ட பாரதத்தின் தொடர்பு மொழி ஆங்கிலமாகவே இருக்க வேண்டும் என்று அந்நாளைய பிரதமர் நேருவிடம் உறுதி மொழி வாங்கி நெஞ்சை நிமிர்த்தியது நாம் தான். பண்டித நேருவையே பணிய வைத்தோம் என்று எக்காளமிட்டோம்.
இந்தியை எதிர்க்க வில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்த்தோம் என்று பூசி மெழுகினதால் விளைந்தது ஏதுமில்லை. அன்று இந்தி இன்று சமஸ்கிருதம் என்று வேறொன்றுக்குத் தாவி இருக்கிறோம். அவ்வளவு தான். எதையாவது எதிர்க்கொண்டிருக்க வேண்டியது நமது தேவையாகி விட்டது. பக்கத்து மாநிலக் காரர்களோ நோகாமல் ஏற்றமிகு வாழ்க்கைக்கு தங்களின் ஆற்றலையே ஏணிப்படிகள் ஆக்கியிருக்கிறார்கள்.
பெற்ற அந்த உறுதிமொழியால் விளைந்த பலன் என்னவென்று கணக்குப் பார்க்க மட்டும் நாம் தயங்குவோம். ஏனென்றால் ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்திலேயே ஆங்கிலத்தை அவனை விட அழகாகப் பேசியது நாம் தான். ஆதியிலிருந்து ஆங்கிலேயரின் நடை, உடை, பாவனை, நாகரிகம் என்று மோகித்து ஆங்கிலம் அறியாத பாமர மக்களை சுரண்டிக் கொழுத்தது நாம் தான். ஆங்கிலத்திலேயே யோசித்தால் தான் நம் யோசனைகளே செயல்படும் என்ற அளவுக்கு மழுங்கிப் போனவர்கள் நாம்.
இத்தனை காலம் இந்தி தெரியாமலேயே வாழ்ந்தாயிற்று.. பாக்கி காலமும் அப்படியே தெரியாமல் வாழ்ந்தால் போச்சு.
(வளரும்)