ஊர்மிளாவிற்கு சந்தோஷம் பிடிபடவில்லை. "சொல்லு, வேணி! மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள்லாம் வந்திட்டுப் போயிட்டாங்களா?" என்றாள்.
"அதுக்குத்தாங்க அக்கா கூப்பிட்டேன். அவங்கள்லாம் வர்றப் போறாங்கங்கறது உங்களுக்கு தெரியுமா?"
"தெரியும். ஜோதி சொன்னா.. என்னாச்சு?.."
"அக்காவை அவங்களுக்கெல்லாம் பிடிச்ச மாதிரி தான் தெரியுது, அக்கா! ஆனா எது ஒண்ணும் நிச்சயமா சொல்லாம போயிருக்காங்க.. அவங்களுக்கு ஊர் வேலூராம். மெட்ராஸ்லே பொண்ணு எடுத்தா, கல்யாணம் கட்டிக்கிட்டு மெட்ராஸ்லேயே தான் வேலை பாத்துக்கலாம்ன்னு கட்டிக்கப் போறவர் நெனைக்கறாராம். அதுலே அவங்க கண்டிஷனா இருக்காங்க-- மெட்ராஸிலே வேலை கிடைச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம்ங்கறதிலே. பொண்ணு பாக்க வந்தவங்க மெட்ராஸ் வேலையைப் பத்தியே பேசிகிட்டு இருக்காங்க.. அவங்க பேசறதைப் பாத்தா, நாம முயற்சி எடுத்து இங்கே ஒரு வேலையை வாங்கித் தரணும்ங்கற மாதிரியும் இருக்கு. அவருக்கு இங்கே ஒரு வேலை கிடைச்சிருச்சுன்னா அக்கா கல்யாணம் முடிஞ்சிட்ட மாதிரி தான். ஆனா, நீங்களே சொல்லுங்க அக்கா, வேலை கிடைக்கறதுங்கறது அவ்வளவு ஈஸியாவா இருக்கு? "
"அதெல்லாம் சரி, வேணி!..அவர் இப்போ அங்கே என்ன வேலைலே இருக்கார்?"
"ப்ரஸ்லே அக்கா. ஆறு வருஷ சர்வீஸாம். பிரிண்ட்டிங் வேலைலாம் அல்லாம் தெரியுமாம்."
"அப்போ கவலையை விடு. நம்ம பதிப்பகத்திலேயே பாத்துக்கலாம். எதுக்கும் பெரியவர்கிட்டே சொல்லி வைக்கிறேன்" என்று தன்னாலே ஊர்மிளாவிடமிரு ந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.
"அப்படியாக்கா?.. அது கூட முடியுமாக்கா?.. இது கூட என் புத்திலே படலேயே!இப்போத் தான் தெரியுது.. நான் பதிப்பகத்திலே வேலை செய்யறது தெரிஞ்சு தான் எங்க வீட்லே பொண் பாக்கவே வந்திருப்பாங்களோ?"
"ரொம்ப போட்டுக் குழப்பிக்காதே.. முயற்சிக்கலாம். கிடைச்சா சரி, இல்லேன்னாலும் சரின்னு இந்த மாதிரி விஷயங்கள்லே போக வேண்டியது தான். இங்கே வேலை இல்லேனா, எங்க வீட்டுக்காரர்கிட்டேயும் சொல்லி வைக்கிறேன். பாக்கலாம். எல்லா பிரச்னைக்கும் அந்த பிரச்னை அடிப்படையிலேயே ஒரு தீர்வு இருக்கும். எப்படிப் போனா சரியா இருக்கும்ன்னு பாக்கலாம். சரியா?.."
"சரிக்கா.. ரொம்ப தேங்க்ஸ்க்கா. அம்மாக்கு இப்போ இந்தக் கவலை தான். அம்மாகிட்டே சொல்றேன்."
"இப்போ அவங்க கிட்டே சொல்ல வேண்டாம். வேலை நிச்சயம்ன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம். நீ எத்தனை நாள் லீவு?.."
"லீவு இன்னிக்கு மட்டும் தான் அக்கா. திங்கட்கிழமை வேலைக்கு வந்திடுவேன்."
"எங்கிருந்து பேசறே?"
"வீட்டுப் பக்கத்லே ஒரு போன் பூத் இருக்கு. அங்கேயிருந்து அக்கா.."
"பூத்லேந்தினா?.. ரொம்ப நேரம் விவரமா பேசமுடியாது.. சனி, ஞாயிறு போகட்டும். திங்கட்கிழமை வந்திடுவேல்யோ?.. நேரே பேசிக்கலாம். சரியா?"
"சரிக்கா..." என்று வேணி சொன்னதில் தெரிந்த நம்பிக்கையை ஊர்மிளா உணர்ந்தாள்.
கிருஷ்ணவேணியின் அக்கா லஷ்மியை பெண் பார்க்க வருகிறார்கள் என்கிற விஷயம் ஜோதியின் மூலம் இன்று காலைதான் அவளுக்கேத் தெரியும். மதியம் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் அந்தக் கல்யாணம் நடக்க வேண்டியதற்கான முக்கிய பொறுப்பொன்றை தான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு மாசத்திற்கு முன்னால் இப்படி நடக்கும் என்று தெரியாது. ரிஷிக்கு லஷ்மணனுடான அறிமுகம், இன்று ரிஷி 'காதல் தேசம்'ன்னு தொடர்கதையை பத்திரிகைலே எழுதுகிற அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கு. இடையிலே புதுப்புது அறிமுகங்கள். ஒன்றைத் தொட்டு ஒன்று என்று வாழ்க்கையின் இந்த 'நெட் ஒர்க்'கை நினைத்துப் பார்க்க பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. 'எனக்கு இந்தக் குழந்தைக்கு தலைவாரி, நெத்திக்குப் பொட்டு இட்டு, பூச்சூட்டி ஸ்கூலுக்கு அனுப்பனும்ன்னு குடுத்து வைச்சிருக்குன்னா'ன்னு அம்மாவை எல்லாம் தயார்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பறச்சே தாத்தாகிட்டே பாட்டி சொல்வாளாம். ஊர்மிளாவுக்கு எல்லாம் அவள் அம்மா சொல்லித் தெரிந்தது. 'பாட்டி சொன்னது கரெக்ட்! குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பற பாக்கியம் இன்னும் கிடைக்கலேனாலும், பாட்டி சொன்ன மாதிரி நாம செய்யறதுக்குக் கொடுத்து வைச்சிருக்கற மாதிரி தான் ஒவ்வொண்ணையும் பாக்கறச்சே தோண்றது' என்று நினைத்துக் கொண்டாள்.
ஊர்மிளா பெரியவளாகி காலேஜ் போகறத்தே கூட 'இப்படி பாட்டி சொல்லுவா, இந்த நேரத்திலே பாட்டி இப்படி நடந்துப்பா'ன்னு அவள் அம்மா, பாட்டியைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா. தன்னோட அம்மாவைப் பத்தி தன்னோட பொண்ணு கிட்டே எது ஒண்ணு சொல்றத்தேயும் அம்மா முகத்திலே அலாதியா ஒரு களை வந்து உக்காந்துக்கும். அதைப் பாத்து பாத்து மனசிலே அம்மாவோட அந்த செளந்தர்யம் அப்படியே படிஞ்சு போயிடுத்து. பாட்டியைப் பத்தி நெனைச்சாலே அம்மாவோட அந்த முக தரிசனமும் கூடவே ஞாபகத்துக்கு வரும். 'உன்னோட அம்மாவைப் பத்தியே சொன்னா எப்படின்னு இவ தான், அப்பாவோட அம்மாவைப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறையே'ன்னு ஒருநாள் கேட்டதுக்கு 'நான் வாக்கப்பட்டக் கதையைக் கேக்கறையா'ன்னா.. 'நான் செஞ்சு போட்டாத்தான் என் பிள்ளைக்குப் பிடிக்கும்'ன்னு தன்னோட கடைசி காலம் வரை என்னை சமையல் அறைக்குள்ளேயே நுழைய விடலை, உன்னோட இந்தப் பாட்டி.. நல்ல வேளை, அடுக்களை பத்தி அத்தனையையும் என் அம்மாகிட்டேயே தெரிஞ்சிண்டேனோ, பிழைச்சேனோ!' என்றாள்.
ஊர்மிளாவுக்கு அப்பாவைப் பெத்த அம்மா பற்றி அதிகம் தெரியாது. வீட்டு ஹாலுக்கு உள்ளடங்கி முன் ரூம் ஒண்ணு உண்டு. அதிலே அப்பாவோட பொருள்கள் தான் நிறைய அடைஞ்சு கிடக்கும். அப்பா டிரஸ் இருக்கற டிரங்க் பெட்டி, கேஷ் அலமாரி, சட்டை- பேண்ட் மாட்டியிருக்கற கோட் ஸ்டாண்ட், அப்பாவோட வாட்ச், ஆபீஸ் பைல்ன்னு எல்லாம் அப்பாவோடதா தான் இருக்கும். அந்த ரூம்லே இந்தப் பாட்டியோட சின்ன புகைப்படம் ஒண்ணு சுவத்திலே ஆணி அடிச்சு மாட்டியிருக்கும். ஆபிஸுக்குப் போறத்துக்கு முன்னாடி அப்பா இந்த ரூமுக்கு வந்து போட்டோ முன்னாடி தியானம் பண்ற மாதிரி கொஞ்ச நேரம் நின்னு கும்பிட்டுட்டுப் போவார். ஊர்மிளாவுக்கு இந்தப் பாட்டியைப் போட்டோலே பாக்கறச்சேயே பாவமா இருக்கும். நார்மடிப் புடவை முட்டாக்கு போட்டுண்டு, நெத்திலே வீபூதிக் கீத்தோட சாந்தமான மூஞ்சி. இந்தப் பாட்டியைப் பத்தி எனக்குச் சொல்றவாளே யாருமில்லையான்னு துக்கம் தொண்டையை அடைக்கும். அடக்க முடியாம ஒரு நாளைக்கு அப்பாகிட்டேயே அதைக் கேட்டுட்டாள்.
அவள் கேட்டதும் அப்பாவுக்கு ஏனோ திடுக்குன்னது. தொண்டை கமறி, தழைஞ்ச குரல்லே, "அந்தப் பாட்டி ஒரு தெய்வம்மா.."ன்னு சொன்னப்போ அவர் கண் கலங்கித்து. "உன்னோட அம்மா தானேப்பா.. அந்தப் பாட்டியைப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறையே!" என்றாள். "என்னோட அம்மாவை நெனைச்சாலே எனக்கு அதாம்மா ஞாபகம் வர்றது.."ன்னு கம்பிச் சார்பு போட்டிருந்த ரேழி முத்தத்திலே விழுந்த நிழலைப் பாத்திண்டே அப்பா சொன்னார். "உன்னோட தாத்தா -அதான் என்னோட அப்பா- ரொம்ப முன் கோபக்காரர். எப்பப்பாத்தாலும் தாம்தூம்ன்னு குதிச்சிண்டே இருப்பார்; மூஞ்சிலே செவசெவன்னு ஒரு ரெளத்திரம் பூசி மெழுகியிருக்கும். வீட்லே இருந்தார்ன்னா அதிகாரம் தூள் பறக்கும். அப்பாவைப் பாத்தாலே பயம்; நான் பெட்டிப் பாம்பா அடங்கிடுவேன். காதைப் பிடிச்சுத் திருகினார்ன்னா செவந்து போய் ரெண்டு நாளைக்கு வலிக்கும். பாத்தா அப்பா மாதிரியே இருக்காது; ஏதோ ராட்சஷன் நிக்கற மாதிரி..
"ஒரு நாளைக்கு என்ன நடந்தது தெரியுமா?.. அன்னிக்கு ஸ்கூலுக்கு லீவு. பக்கத்து வீட்டு வாசல் திண்ணைலே கேரம் ஆடிட்டு ரொம்ப நேரமாச்சேன்னு அப்பாக்கு பயந்திண்டே வீட்டுக்குள்ளே நுழையறேன். அப்பா குரல் கர்ண கடூரமா சமைக்கற உள்ளுலே கேக்கறது. பதுங்கிண்டே அந்தப் பக்கம் போனேன். "என்னடி சாதம் வடிச்சிருக்கே?.."ன்னு அம்மாகிட்டே உருமிண்டு இருக்கார். அம்மா சப்த நாடியும் ஒடுங்கி நிக்கறா. சடார்ன்னு இலை முன்னாடி உக்காந்திருந்தவர் எழுந்து நிக்கறார். அம்மாவை அடிச்சிடுவாரோன்னு எனக்கு பயம். பாவம், அம்மான்னு நெனைசிண்டிருக்கறச்சேயே, "பாத்து வடிச்சிருந்தா, இப்படியா குழைஞ்சு போயிருக்கும்"ன்னு அப்படியே நின்ன வாக்கிலேயே சாதத்து வெங்கலப் பானையை எட்டி உதைக்கறார். சிப்பல் தட்டோட உருண்டு போன வெங்கலப் பானை.. சிந்திச் சிதறின சாதம்.. பயந்து போன அம்மா.. ராட்சஷனாய் நின்ன அப்பா.. எல்லாம் அப்படியே மனசிலே பதிஞ்சு போயிடுத்து.. பாவம், அம்மா.. கணுக்கால் பக்கம் வெந்து போய் ஒரு வாரம் கால்லே தேங்காய் எண்ணையைத் தடவிண்டு விசிறிண்டு இருந்தா.. அம்மாவை பாக்கறச்சேலாம் எனக்கு நெஞ்சு அடைச்சிக்கும்.. ரொம்ப வலிக்கறதாமான்னேன். என் தலையைக் கோதிண்டே "இல்லேடா.."ன்னா. அது எனக்காகத்தான் சொல்றான்னு தெரியும். இதான் என்னோட அம்மா! ஊர்மிளா,, இப்போ சொல்லு.. உன் பாட்டியைப் பத்தி என்னத்தைச் சொல்றது?.."ன்னு அப்பா எப்பவோ சொன்னதை இப்போ நினைத்துப் பார்க்கறத்தேயும் ஊர்மிளாவின் கண்கள் கலங்கின.
அடுத்த வாரமாவது லஷ்மணனைக் கூட்டிக் கொண்டு பெற்றவர்களைப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று ஊர்மிளா நினைத்துக் கொண்டாள். அவர்களும் ரொம்ப தூரத்தில் இல்லை; பக்கத்து திருவான்மியூரில் தான். திருவான்மியூர் வீட்டிலே அதே ரூமிலே அதே இடத்திலே பாட்டி படம் மாட்டியிருக்கிறது. இப்பவும் ஊர்மிளா அங்கே போனாளானால், முதலில் அந்த ரூமுக்குப் போய் பாட்டி போட்டோவைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் நின்று கொண்டிருப்பாள். சாந்தமான அந்த முகம் அவள் நெஞ்சில் படிந்து அவளை ஆசிர்வதிப்பது போல இருக்கும். அந்த உணர்வோடேயே ஹாலுக்கு வந்து அப்பா-அம்மாவை நிறுத்தி வைத்து நமஸ்கரிப்பாள்.
ஊர்மிளாவுக்கு அவளோடேயே ஊறிப்போன ஒரு பழக்கம் உண்டு. எந்த வேலையையும் கை பாட்டுக்க செய்து கொண்டிருக்கும் மனம் பாட்டுக்க வேறொண்ணை நினைத்துக் கொண்டிருக்கும். இரண்டுக்கும் சம்பந்தம் இருக்காது. இது பாட்டுக்க தனி; அது பாட்டுக்க தனிங்கற மாதிரி மனசிலேயே ரெட்டை பாட்டை போட்டு வைத்துக் கொண்டு வேலை நடக்கும். சொல்லப் போனால் இந்த இன்னொரு சிந்திப்பு இல்லை என்றால் மெயின் வேலை தடுமாறும். அந்த தடுமாற்றத்தைப் போக்கவே எப்படியானும் இந்த இன்னொரு நினைப்பு வந்து சேர்ந்து கொண்டு தனக்கென்று தனிப்பாதை போட்டுக் கொண்டு பயணிக்கும்..
என்றைக்கும் மாதிரி இன்றைக்கும் அலுவலகப் பணி ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தது. 'எம்.வி. வெங்கட்ராமின் வாழ்வும் எழுத்தும்' என்று பதிப்புக்காக காத்திருந்த கையெழுத்துப் பிரதியை படிக்க படிக்க ஊர்மிளாவுக்கு மனம் கசிந்தது.. 'மணிக்கொடி' எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம், ஜரிகைத் தொழிலில் சம்பாதித்த காசையெல்லாம் முடக்கி 'தேனி' என்கிற பத்திரிகையை அச்சிட்டு வெளியிட பட்டபாட்டிற்கு இடையே தொழிலும் நலிவடைந்து, சொத்துக்களையும் விற்ற உண்மைக்கதை பரிதாபமாக இருந்தது. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தனது காதுகளில் ஒரு வினோத ஒலி கேட்க அவஸ்தைப்பட்டவர், தனக்கேற்ப்பட்ட உணர்வுகளை 'காதுகள்' என்கிற நாவலாய் உருவாக்கிய சரிதம் மனம் பதைபதைப்பதாய் இருந்தது. தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா. போன்றோருடன் எம்.வி.வி. கொண்டிருந்த நட்பு கும்பகோணத்துச் சூழலில் வர்ணிக்கப்பட்டிருந்தது அற்புதமாக இருந்தது. தி.ஜானகிராமனின் மறைவின் பொழுது 'யாத்ரா' இதழில், 'ஜானகிராமனுக்காக ஒரு கதை' என்று எம்.வி.வி. எழுதியிருந்த கட்டுரையும் சேர்க்கப்பட்டிருந்தது. அதைப் படித்த பொழுது ஊர்மிளாவின் கண்கள் கலங்கிவிட்டன. எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுதே மனம் மருகிப் போனது. பக்கம் பக்கமாக படித்துக் கொண்டே வருகையில் அச்சுக்குப் போவதற்கு முன், முன் பின்னாக இருந்த சில செய்திகளை கோர்வை படுத்த வேண்டுமென்று ஊர்மிளாவுக்குத் தோன்றியது. அப்படிப்பட்ட இடங்களில் வாசிக்கும் பொழுதே சிவப்பு பென்ஸிலால் அடையாளத்திற்காக கோடு போட்டு வைத்திருந்தாள். அதையெல்லாம் அந்த அந்த நிகழ்வின் ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி கணினியில் குறிப்பெடுக்க ஊர்மிளா ஆயத்தமான பொழுது கேபின் போன் கணகணத்தது.
"ஹலோ..." என்றாள்.
"நான் தான் அக்கா..."
"சொல்லு, வேணி... எச்.ஆர். சுந்தரி சொந்த வேலையா வெளிலே போயிருக்கா. பர்மிஷனாம். முதல்லே பிரிண்டிங் ஆபிஸ்ல்லே காலி இடம் இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம். அதுக்குத் தான் சுந்தரி. இருந்ததுன்னா சின்னவர் கிட்டேயே மேட்டரைக் கொண்டு போகலாம்ன்னு இருக்கேன்."
"அதுக்கு தாங்க அக்கா கூப்பிட்டேன்."
"சொல்லு. என்ன விஷயம்?"
"இப்போ பாத்தா எங்கக்கா இந்த இடம் வேணாங்குது. அதான்."
"ஏனாம்?"
"எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு, அக்கா... கடனை உடனை வாங்கி நான் இருக்கறச்சேயே ஒங்கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னா, ஏண்டி உன் புத்தி இப்படிப் போர்றதுன்னு அம்மா அக்காவைக் கோவிச்சிக்குது."
"உங்கக்கா என்ன சொல்றா?"
"என்னத்தைச் சொல்லுதோ?.. அது சொல்றது யாருக்குப் புரியிது?.. 'இந்த இடம் வேணாம்ன்னு என் மனசுக்குத் தெரியுது. அதுனாலே வேணாம்'ங்கறது. என்ன மனசோ?.. யாருக்குத் தெரியுது?.. அதுவே வேணாங்கும் போது, நாம என்னத்தை அக்கா செய்யுறது? அதான் அம்மாக்கு வருத்தம்."
"அப்போ அந்தாளு வேலை விஷயமா ஒண்ணும் முயற்சிக்க வேணாம்ங்கறே? அதுக்குத் தான் போன் பண்ணினியா?"
"ஆமாக்கா. ரெண்டு நாள் போகட்டும். நா திங்கட்கிழமை ஆபிஸூக்கு வருவேன்லே.. அப்போ நேர்லே சொல்றேங்க்கா.. உங்களுக்குத் தான் சிரமம் கொடுத்திட்டேன். ஸாரிக்கா."
"இதுக்கெல்லாம் எதுக்கு ஸாரி, வேணி?.. உங்கக்கா சொல்றதிலே ஏதானும் காரணம் இருக்கும்.. அதைச் சொல்லி உங்கம்மாவை கோபிக்காம இருக்கச் சொல்லு.. மத்ததை நேர்லே பேசிக்கலாம்.சரியா? வைச்சிடட்டுமா?"
"சரிக்கா.."
(இன்னும் வரும்)
"அதுக்குத்தாங்க அக்கா கூப்பிட்டேன். அவங்கள்லாம் வர்றப் போறாங்கங்கறது உங்களுக்கு தெரியுமா?"
"தெரியும். ஜோதி சொன்னா.. என்னாச்சு?.."
"அக்காவை அவங்களுக்கெல்லாம் பிடிச்ச மாதிரி தான் தெரியுது, அக்கா! ஆனா எது ஒண்ணும் நிச்சயமா சொல்லாம போயிருக்காங்க.. அவங்களுக்கு ஊர் வேலூராம். மெட்ராஸ்லே பொண்ணு எடுத்தா, கல்யாணம் கட்டிக்கிட்டு மெட்ராஸ்லேயே தான் வேலை பாத்துக்கலாம்ன்னு கட்டிக்கப் போறவர் நெனைக்கறாராம். அதுலே அவங்க கண்டிஷனா இருக்காங்க-- மெட்ராஸிலே வேலை கிடைச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம்ங்கறதிலே. பொண்ணு பாக்க வந்தவங்க மெட்ராஸ் வேலையைப் பத்தியே பேசிகிட்டு இருக்காங்க.. அவங்க பேசறதைப் பாத்தா, நாம முயற்சி எடுத்து இங்கே ஒரு வேலையை வாங்கித் தரணும்ங்கற மாதிரியும் இருக்கு. அவருக்கு இங்கே ஒரு வேலை கிடைச்சிருச்சுன்னா அக்கா கல்யாணம் முடிஞ்சிட்ட மாதிரி தான். ஆனா, நீங்களே சொல்லுங்க அக்கா, வேலை கிடைக்கறதுங்கறது அவ்வளவு ஈஸியாவா இருக்கு? "
"அதெல்லாம் சரி, வேணி!..அவர் இப்போ அங்கே என்ன வேலைலே இருக்கார்?"
"ப்ரஸ்லே அக்கா. ஆறு வருஷ சர்வீஸாம். பிரிண்ட்டிங் வேலைலாம் அல்லாம் தெரியுமாம்."
"அப்போ கவலையை விடு. நம்ம பதிப்பகத்திலேயே பாத்துக்கலாம். எதுக்கும் பெரியவர்கிட்டே சொல்லி வைக்கிறேன்" என்று தன்னாலே ஊர்மிளாவிடமிரு ந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.
"அப்படியாக்கா?.. அது கூட முடியுமாக்கா?.. இது கூட என் புத்திலே படலேயே!இப்போத் தான் தெரியுது.. நான் பதிப்பகத்திலே வேலை செய்யறது தெரிஞ்சு தான் எங்க வீட்லே பொண் பாக்கவே வந்திருப்பாங்களோ?"
"ரொம்ப போட்டுக் குழப்பிக்காதே.. முயற்சிக்கலாம். கிடைச்சா சரி, இல்லேன்னாலும் சரின்னு இந்த மாதிரி விஷயங்கள்லே போக வேண்டியது தான். இங்கே வேலை இல்லேனா, எங்க வீட்டுக்காரர்கிட்டேயும் சொல்லி வைக்கிறேன். பாக்கலாம். எல்லா பிரச்னைக்கும் அந்த பிரச்னை அடிப்படையிலேயே ஒரு தீர்வு இருக்கும். எப்படிப் போனா சரியா இருக்கும்ன்னு பாக்கலாம். சரியா?.."
"சரிக்கா.. ரொம்ப தேங்க்ஸ்க்கா. அம்மாக்கு இப்போ இந்தக் கவலை தான். அம்மாகிட்டே சொல்றேன்."
"இப்போ அவங்க கிட்டே சொல்ல வேண்டாம். வேலை நிச்சயம்ன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம். நீ எத்தனை நாள் லீவு?.."
"லீவு இன்னிக்கு மட்டும் தான் அக்கா. திங்கட்கிழமை வேலைக்கு வந்திடுவேன்."
"எங்கிருந்து பேசறே?"
"வீட்டுப் பக்கத்லே ஒரு போன் பூத் இருக்கு. அங்கேயிருந்து அக்கா.."
"பூத்லேந்தினா?.. ரொம்ப நேரம் விவரமா பேசமுடியாது.. சனி, ஞாயிறு போகட்டும். திங்கட்கிழமை வந்திடுவேல்யோ?.. நேரே பேசிக்கலாம். சரியா?"
"சரிக்கா..." என்று வேணி சொன்னதில் தெரிந்த நம்பிக்கையை ஊர்மிளா உணர்ந்தாள்.
கிருஷ்ணவேணியின் அக்கா லஷ்மியை பெண் பார்க்க வருகிறார்கள் என்கிற விஷயம் ஜோதியின் மூலம் இன்று காலைதான் அவளுக்கேத் தெரியும். மதியம் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் அந்தக் கல்யாணம் நடக்க வேண்டியதற்கான முக்கிய பொறுப்பொன்றை தான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு மாசத்திற்கு முன்னால் இப்படி நடக்கும் என்று தெரியாது. ரிஷிக்கு லஷ்மணனுடான அறிமுகம், இன்று ரிஷி 'காதல் தேசம்'ன்னு தொடர்கதையை பத்திரிகைலே எழுதுகிற அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கு. இடையிலே புதுப்புது அறிமுகங்கள். ஒன்றைத் தொட்டு ஒன்று என்று வாழ்க்கையின் இந்த 'நெட் ஒர்க்'கை நினைத்துப் பார்க்க பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. 'எனக்கு இந்தக் குழந்தைக்கு தலைவாரி, நெத்திக்குப் பொட்டு இட்டு, பூச்சூட்டி ஸ்கூலுக்கு அனுப்பனும்ன்னு குடுத்து வைச்சிருக்குன்னா'ன்னு அம்மாவை எல்லாம் தயார்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பறச்சே தாத்தாகிட்டே பாட்டி சொல்வாளாம். ஊர்மிளாவுக்கு எல்லாம் அவள் அம்மா சொல்லித் தெரிந்தது. 'பாட்டி சொன்னது கரெக்ட்! குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பற பாக்கியம் இன்னும் கிடைக்கலேனாலும், பாட்டி சொன்ன மாதிரி நாம செய்யறதுக்குக் கொடுத்து வைச்சிருக்கற மாதிரி தான் ஒவ்வொண்ணையும் பாக்கறச்சே தோண்றது' என்று நினைத்துக் கொண்டாள்.
ஊர்மிளா பெரியவளாகி காலேஜ் போகறத்தே கூட 'இப்படி பாட்டி சொல்லுவா, இந்த நேரத்திலே பாட்டி இப்படி நடந்துப்பா'ன்னு அவள் அம்மா, பாட்டியைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா. தன்னோட அம்மாவைப் பத்தி தன்னோட பொண்ணு கிட்டே எது ஒண்ணு சொல்றத்தேயும் அம்மா முகத்திலே அலாதியா ஒரு களை வந்து உக்காந்துக்கும். அதைப் பாத்து பாத்து மனசிலே அம்மாவோட அந்த செளந்தர்யம் அப்படியே படிஞ்சு போயிடுத்து. பாட்டியைப் பத்தி நெனைச்சாலே அம்மாவோட அந்த முக தரிசனமும் கூடவே ஞாபகத்துக்கு வரும். 'உன்னோட அம்மாவைப் பத்தியே சொன்னா எப்படின்னு இவ தான், அப்பாவோட அம்மாவைப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறையே'ன்னு ஒருநாள் கேட்டதுக்கு 'நான் வாக்கப்பட்டக் கதையைக் கேக்கறையா'ன்னா.. 'நான் செஞ்சு போட்டாத்தான் என் பிள்ளைக்குப் பிடிக்கும்'ன்னு தன்னோட கடைசி காலம் வரை என்னை சமையல் அறைக்குள்ளேயே நுழைய விடலை, உன்னோட இந்தப் பாட்டி.. நல்ல வேளை, அடுக்களை பத்தி அத்தனையையும் என் அம்மாகிட்டேயே தெரிஞ்சிண்டேனோ, பிழைச்சேனோ!' என்றாள்.
ஊர்மிளாவுக்கு அப்பாவைப் பெத்த அம்மா பற்றி அதிகம் தெரியாது. வீட்டு ஹாலுக்கு உள்ளடங்கி முன் ரூம் ஒண்ணு உண்டு. அதிலே அப்பாவோட பொருள்கள் தான் நிறைய அடைஞ்சு கிடக்கும். அப்பா டிரஸ் இருக்கற டிரங்க் பெட்டி, கேஷ் அலமாரி, சட்டை- பேண்ட் மாட்டியிருக்கற கோட் ஸ்டாண்ட், அப்பாவோட வாட்ச், ஆபீஸ் பைல்ன்னு எல்லாம் அப்பாவோடதா தான் இருக்கும். அந்த ரூம்லே இந்தப் பாட்டியோட சின்ன புகைப்படம் ஒண்ணு சுவத்திலே ஆணி அடிச்சு மாட்டியிருக்கும். ஆபிஸுக்குப் போறத்துக்கு முன்னாடி அப்பா இந்த ரூமுக்கு வந்து போட்டோ முன்னாடி தியானம் பண்ற மாதிரி கொஞ்ச நேரம் நின்னு கும்பிட்டுட்டுப் போவார். ஊர்மிளாவுக்கு இந்தப் பாட்டியைப் போட்டோலே பாக்கறச்சேயே பாவமா இருக்கும். நார்மடிப் புடவை முட்டாக்கு போட்டுண்டு, நெத்திலே வீபூதிக் கீத்தோட சாந்தமான மூஞ்சி. இந்தப் பாட்டியைப் பத்தி எனக்குச் சொல்றவாளே யாருமில்லையான்னு துக்கம் தொண்டையை அடைக்கும். அடக்க முடியாம ஒரு நாளைக்கு அப்பாகிட்டேயே அதைக் கேட்டுட்டாள்.
அவள் கேட்டதும் அப்பாவுக்கு ஏனோ திடுக்குன்னது. தொண்டை கமறி, தழைஞ்ச குரல்லே, "அந்தப் பாட்டி ஒரு தெய்வம்மா.."ன்னு சொன்னப்போ அவர் கண் கலங்கித்து. "உன்னோட அம்மா தானேப்பா.. அந்தப் பாட்டியைப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறையே!" என்றாள். "என்னோட அம்மாவை நெனைச்சாலே எனக்கு அதாம்மா ஞாபகம் வர்றது.."ன்னு கம்பிச் சார்பு போட்டிருந்த ரேழி முத்தத்திலே விழுந்த நிழலைப் பாத்திண்டே அப்பா சொன்னார். "உன்னோட தாத்தா -அதான் என்னோட அப்பா- ரொம்ப முன் கோபக்காரர். எப்பப்பாத்தாலும் தாம்தூம்ன்னு குதிச்சிண்டே இருப்பார்; மூஞ்சிலே செவசெவன்னு ஒரு ரெளத்திரம் பூசி மெழுகியிருக்கும். வீட்லே இருந்தார்ன்னா அதிகாரம் தூள் பறக்கும். அப்பாவைப் பாத்தாலே பயம்; நான் பெட்டிப் பாம்பா அடங்கிடுவேன். காதைப் பிடிச்சுத் திருகினார்ன்னா செவந்து போய் ரெண்டு நாளைக்கு வலிக்கும். பாத்தா அப்பா மாதிரியே இருக்காது; ஏதோ ராட்சஷன் நிக்கற மாதிரி..
"ஒரு நாளைக்கு என்ன நடந்தது தெரியுமா?.. அன்னிக்கு ஸ்கூலுக்கு லீவு. பக்கத்து வீட்டு வாசல் திண்ணைலே கேரம் ஆடிட்டு ரொம்ப நேரமாச்சேன்னு அப்பாக்கு பயந்திண்டே வீட்டுக்குள்ளே நுழையறேன். அப்பா குரல் கர்ண கடூரமா சமைக்கற உள்ளுலே கேக்கறது. பதுங்கிண்டே அந்தப் பக்கம் போனேன். "என்னடி சாதம் வடிச்சிருக்கே?.."ன்னு அம்மாகிட்டே உருமிண்டு இருக்கார். அம்மா சப்த நாடியும் ஒடுங்கி நிக்கறா. சடார்ன்னு இலை முன்னாடி உக்காந்திருந்தவர் எழுந்து நிக்கறார். அம்மாவை அடிச்சிடுவாரோன்னு எனக்கு பயம். பாவம், அம்மான்னு நெனைசிண்டிருக்கறச்சேயே, "பாத்து வடிச்சிருந்தா, இப்படியா குழைஞ்சு போயிருக்கும்"ன்னு அப்படியே நின்ன வாக்கிலேயே சாதத்து வெங்கலப் பானையை எட்டி உதைக்கறார். சிப்பல் தட்டோட உருண்டு போன வெங்கலப் பானை.. சிந்திச் சிதறின சாதம்.. பயந்து போன அம்மா.. ராட்சஷனாய் நின்ன அப்பா.. எல்லாம் அப்படியே மனசிலே பதிஞ்சு போயிடுத்து.. பாவம், அம்மா.. கணுக்கால் பக்கம் வெந்து போய் ஒரு வாரம் கால்லே தேங்காய் எண்ணையைத் தடவிண்டு விசிறிண்டு இருந்தா.. அம்மாவை பாக்கறச்சேலாம் எனக்கு நெஞ்சு அடைச்சிக்கும்.. ரொம்ப வலிக்கறதாமான்னேன். என் தலையைக் கோதிண்டே "இல்லேடா.."ன்னா. அது எனக்காகத்தான் சொல்றான்னு தெரியும். இதான் என்னோட அம்மா! ஊர்மிளா,, இப்போ சொல்லு.. உன் பாட்டியைப் பத்தி என்னத்தைச் சொல்றது?.."ன்னு அப்பா எப்பவோ சொன்னதை இப்போ நினைத்துப் பார்க்கறத்தேயும் ஊர்மிளாவின் கண்கள் கலங்கின.
அடுத்த வாரமாவது லஷ்மணனைக் கூட்டிக் கொண்டு பெற்றவர்களைப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று ஊர்மிளா நினைத்துக் கொண்டாள். அவர்களும் ரொம்ப தூரத்தில் இல்லை; பக்கத்து திருவான்மியூரில் தான். திருவான்மியூர் வீட்டிலே அதே ரூமிலே அதே இடத்திலே பாட்டி படம் மாட்டியிருக்கிறது. இப்பவும் ஊர்மிளா அங்கே போனாளானால், முதலில் அந்த ரூமுக்குப் போய் பாட்டி போட்டோவைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் நின்று கொண்டிருப்பாள். சாந்தமான அந்த முகம் அவள் நெஞ்சில் படிந்து அவளை ஆசிர்வதிப்பது போல இருக்கும். அந்த உணர்வோடேயே ஹாலுக்கு வந்து அப்பா-அம்மாவை நிறுத்தி வைத்து நமஸ்கரிப்பாள்.
ஊர்மிளாவுக்கு அவளோடேயே ஊறிப்போன ஒரு பழக்கம் உண்டு. எந்த வேலையையும் கை பாட்டுக்க செய்து கொண்டிருக்கும் மனம் பாட்டுக்க வேறொண்ணை நினைத்துக் கொண்டிருக்கும். இரண்டுக்கும் சம்பந்தம் இருக்காது. இது பாட்டுக்க தனி; அது பாட்டுக்க தனிங்கற மாதிரி மனசிலேயே ரெட்டை பாட்டை போட்டு வைத்துக் கொண்டு வேலை நடக்கும். சொல்லப் போனால் இந்த இன்னொரு சிந்திப்பு இல்லை என்றால் மெயின் வேலை தடுமாறும். அந்த தடுமாற்றத்தைப் போக்கவே எப்படியானும் இந்த இன்னொரு நினைப்பு வந்து சேர்ந்து கொண்டு தனக்கென்று தனிப்பாதை போட்டுக் கொண்டு பயணிக்கும்..
என்றைக்கும் மாதிரி இன்றைக்கும் அலுவலகப் பணி ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தது. 'எம்.வி. வெங்கட்ராமின் வாழ்வும் எழுத்தும்' என்று பதிப்புக்காக காத்திருந்த கையெழுத்துப் பிரதியை படிக்க படிக்க ஊர்மிளாவுக்கு மனம் கசிந்தது.. 'மணிக்கொடி' எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம், ஜரிகைத் தொழிலில் சம்பாதித்த காசையெல்லாம் முடக்கி 'தேனி' என்கிற பத்திரிகையை அச்சிட்டு வெளியிட பட்டபாட்டிற்கு இடையே தொழிலும் நலிவடைந்து, சொத்துக்களையும் விற்ற உண்மைக்கதை பரிதாபமாக இருந்தது. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தனது காதுகளில் ஒரு வினோத ஒலி கேட்க அவஸ்தைப்பட்டவர், தனக்கேற்ப்பட்ட உணர்வுகளை 'காதுகள்' என்கிற நாவலாய் உருவாக்கிய சரிதம் மனம் பதைபதைப்பதாய் இருந்தது. தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா. போன்றோருடன் எம்.வி.வி. கொண்டிருந்த நட்பு கும்பகோணத்துச் சூழலில் வர்ணிக்கப்பட்டிருந்தது அற்புதமாக இருந்தது. தி.ஜானகிராமனின் மறைவின் பொழுது 'யாத்ரா' இதழில், 'ஜானகிராமனுக்காக ஒரு கதை' என்று எம்.வி.வி. எழுதியிருந்த கட்டுரையும் சேர்க்கப்பட்டிருந்தது. அதைப் படித்த பொழுது ஊர்மிளாவின் கண்கள் கலங்கிவிட்டன. எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுதே மனம் மருகிப் போனது. பக்கம் பக்கமாக படித்துக் கொண்டே வருகையில் அச்சுக்குப் போவதற்கு முன், முன் பின்னாக இருந்த சில செய்திகளை கோர்வை படுத்த வேண்டுமென்று ஊர்மிளாவுக்குத் தோன்றியது. அப்படிப்பட்ட இடங்களில் வாசிக்கும் பொழுதே சிவப்பு பென்ஸிலால் அடையாளத்திற்காக கோடு போட்டு வைத்திருந்தாள். அதையெல்லாம் அந்த அந்த நிகழ்வின் ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி கணினியில் குறிப்பெடுக்க ஊர்மிளா ஆயத்தமான பொழுது கேபின் போன் கணகணத்தது.
"ஹலோ..." என்றாள்.
"நான் தான் அக்கா..."
"சொல்லு, வேணி... எச்.ஆர். சுந்தரி சொந்த வேலையா வெளிலே போயிருக்கா. பர்மிஷனாம். முதல்லே பிரிண்டிங் ஆபிஸ்ல்லே காலி இடம் இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம். அதுக்குத் தான் சுந்தரி. இருந்ததுன்னா சின்னவர் கிட்டேயே மேட்டரைக் கொண்டு போகலாம்ன்னு இருக்கேன்."
"அதுக்கு தாங்க அக்கா கூப்பிட்டேன்."
"சொல்லு. என்ன விஷயம்?"
"இப்போ பாத்தா எங்கக்கா இந்த இடம் வேணாங்குது. அதான்."
"ஏனாம்?"
"எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு, அக்கா... கடனை உடனை வாங்கி நான் இருக்கறச்சேயே ஒங்கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னா, ஏண்டி உன் புத்தி இப்படிப் போர்றதுன்னு அம்மா அக்காவைக் கோவிச்சிக்குது."
"உங்கக்கா என்ன சொல்றா?"
"என்னத்தைச் சொல்லுதோ?.. அது சொல்றது யாருக்குப் புரியிது?.. 'இந்த இடம் வேணாம்ன்னு என் மனசுக்குத் தெரியுது. அதுனாலே வேணாம்'ங்கறது. என்ன மனசோ?.. யாருக்குத் தெரியுது?.. அதுவே வேணாங்கும் போது, நாம என்னத்தை அக்கா செய்யுறது? அதான் அம்மாக்கு வருத்தம்."
"அப்போ அந்தாளு வேலை விஷயமா ஒண்ணும் முயற்சிக்க வேணாம்ங்கறே? அதுக்குத் தான் போன் பண்ணினியா?"
"ஆமாக்கா. ரெண்டு நாள் போகட்டும். நா திங்கட்கிழமை ஆபிஸூக்கு வருவேன்லே.. அப்போ நேர்லே சொல்றேங்க்கா.. உங்களுக்குத் தான் சிரமம் கொடுத்திட்டேன். ஸாரிக்கா."
"இதுக்கெல்லாம் எதுக்கு ஸாரி, வேணி?.. உங்கக்கா சொல்றதிலே ஏதானும் காரணம் இருக்கும்.. அதைச் சொல்லி உங்கம்மாவை கோபிக்காம இருக்கச் சொல்லு.. மத்ததை நேர்லே பேசிக்கலாம்.சரியா? வைச்சிடட்டுமா?"
"சரிக்கா.."
(இன்னும் வரும்)