நம்மூர் கட்டிடம் வெறும் கோயில் இல்லை. குதுப்மினார் மாதிரி தூண் இல்லை. சிற்பம் பண்ணி வைக்கிற ஆர்ட் காலரி இல்லே. (ஜிஎம்பீ சார் கவனிக்கவும்). மதம் பரப்பற இடம் இல்லே. இது தத்துவம்.
கோபுர தரிசனம் பாவ விமோசனம்ன்னு சொல்லுவாங்க.. ஏன் ஒவ்வொரு கோபுரமும் ஒரு யாகசாலை. கீழே தாமரை மாதிரி இருக்கும். அது பத்மம். மேலே அரை உருளையா ஒரு இடம். அது குமுதம். --அதுக்கு மேலே பட்டை கல்லா இருக்கறது கண்டம். இதுக்கு மேலே வேதிகை. அது நிக்கற இடம் கட்டிடம். யாக குண்டம் மாதிரி கட்டிடம்.
அதுக்கு மேலே கோபுரம். என்ன மாதிரி? நெருப்பு மாதிரி. தீ.... ஜூவாலை மாதிரி. மேலே கும்பம். ஏன் யாக குண்டம் சிம்பாலிக்கா வைச்சான்? அக்னியால் வளர்ந்து, அக்னியால் அழிந்து... எல்லா உடம்பும் யாக குண்டம். எல்லா உயிரும் தீச்சுடர். தகதகன்னு எரிஞ்சிண்டிருக்கற உயிர். பூச்சி, புழு, ஆடு மாடு, தாவரம் .., எல்லாம், ஏன், பூமி கூட ஒரு யாக குண்டம் தான். சகலமும் அக்னி தான். அதான் அக்னியே தெய்வம். அக்னியை வழிபடறதாலே, எல்லா உயிரையும் வழிபட, எல்லா உயிரையும் வணங்கற தத்துவம் வர்றது. எனவே அக்னி குண்ட ரூபமா கோயில் கட்டியிருக்கிறான். சகலரையும், சகல் நேரமும் தன்னை உட்பட வணங்கற தத்துவம் இது. இதான் கோயில்.
=======================================================
பெரிய பெரிய மன்னர்களும், முரட்டு தளபதிகளும், செல்வக் கோமான்களும் காணாமல் போக, தமிழ்ச் சரித்திரம் 'யாயும் ஞாயும் யாரா கியரோ' என்று ஒரே ஒரு கவிதை
எழுதியவனை குறுந்தொகையோடு நினைவுக்குள் வைத்திருக்கிறது. எல்லோர் வாழ்க்கையும் சரித்திரம் தான். சாதித்தவனுக்கு மட்டுமே சரித்திரம் என்பது முட்டாள்தனம்.
========================================================
விஷயம் நல்லதோ, கெட்டதோ ஒரு அலசல் செய்யத்
தோன்றுகிறது. ரீ கலெக்ஷன் ஆஃப் தாட்ஸ், மனுஷனுடைய பெரிய சொத்து. நடந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து யோசனை பண்ணத் தன்னைப் பக்குவப்படுத்திக்கறது மனுஷனுக்கு மட்டுமே உண்டு. மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ தாமமோ வந்துடறதில்லே. வாலை மிதிச்சவுடனே பாஞ்சுடறதில்லே. கோபப்பட்டா என்னாகும்னு நம்மாலே யோசிக்க முடியும். தொடர்ந்து யோசிக்கறவன் ஞானி. முடியாதவன் மிருகம். யோசனை பண்ணினதின் விளைவு, ஏன் என்ற கேள்வி கேட்டதின் பதில், இன்றைய வாழ்க்கை வளர்ச்சி. அண்ணிலேந்து இன்னி வரைக்கும் மிருகத்திற்கு பசி தான் பிரச்னை. நமக்கு ஆயிரம். வளர்ச்சின்னா இடைஞ்சல் உண்டு. இடைஞ்சலைத் தாண்டறது தான் வளர்ச்சி.
நாய்க்குட்டியை நிலைக்கண்ணாடிக்கு முன்னாடி வச்சா என்ன பண்ணும்? நக்கிப் பாத்துட்டு திங்க முடியலேன்னு போயிடும். மனுஷன்னா அடடா, நான் இவ்வளவு அழகான்னு யோசிப்பான். தன் இருப்பும் தெரிந்து எதிர்ப்பக்கம் போய் தன்னையே பாத்துக்கற சுபாவம் வர்றது. நாய்க்குட்டிக்கு இருப்பு மட்டும் தான் முக்கியம். மனுஷனுக்கு இருப்பும் தொலைவும் உண்டு. தொலைவுப் பார்வை இருக்கறதாலே வீடும், அரிசி சேம்ப்பும் அல்லது ஏதாவது
ஒண்ணு வந்துடறது. படருவதால், வளர்வதால் வரும் பிரச்னை. படர்ந்த இடம் மரமோ, முள்ளுச் செடியோ, மலையோ, தரையோ அந்தந்த சூழ்நிலை, பிரச்னை மனுஷனைச் சூழ்ந்திடறது.
=======================================================
மனிதனுக்கு சந்தோஷம் என்பது என்ன?
தன்னைப் பிறரிடம் உயர்த்திக் காட்டிக் கொள்ளுதலா? எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலா? எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலே சந்தோஷம். அந்தப்
பகிர்தலின் பொருட்டே உறவும், உறவுக்கான சந்தோஷமும்.
பகிர்ந்து கொள்ள மறுப்பவன் பயமுள்ளவன்.
'தனிமை கண்டதுண்டு; அதிலே சாரமிருக்குதம்மா' என்கிற த்வனியிலேயே ரகசியம் பரிமாறும் உணர்வு இருக்கிறது.
=======================================================
சகல உயிர்களுக்கும் உணர்வு ஒன்றே. வலி பொது. காமம் பொது. உயிர் வாழும் விழைவு பொது. மரணம் பொது.
மாறுதல்களை மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த மாறுதலும் இவனை அழிக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அத்தனை மாறுதலிலும் புகுந்து மீளும் திடம்
இவனுள் உண்டு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
புயல் வருகிற பொழுது புயலோடு வாழுங்கள். புயலற்ற பொழுது அமைதியை அனுபவியுங்கள். புயலோடு உண்டான போராட்டமே வாழ்க்கை என்றோ, அமைதியே உலகமென்றோ கனவு காணாதீர்கள். அமைதியான நேரத்தில் புயல் கவலையும், புயல் நேரத்தில் அமைதி பற்றிய கனவும் உங்களைச் சிக்கலாக்கி விடுகிறது.
=========================================================
புதுபுது அனுபவம் முக்கியம் உலகில் எந்த இயக்கமும், எந்த பாலிஸியும், எந்த தத்துவமும் முடிவான முடிவல்ல. வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருப்பது. வளர்ந்து கொண்டே இருப்பது. எப்போதும் வளர முடியும்.
வளர்ச்சி எது? மாறுதலே வளர்ச்சி. மாறாதது வளராது.
எது மாறும்? உயிருள்ளது அனைத்தும் மாறும். உயிர்ப்புள்ளது அனைத்தும் மாறும். மாற மாட்டாதவன் கல்மரம். டெட் வுட்.
======================================================
"ஒரு பத்திரிகை நிருபருக்கு அன்னியமானது எதுவுமில்லை. அவன் தொடாத விஷயம் எதுவுமில்லை. மனிதன் சம்பந்தப்பட்ட எல்லா விஷ்யமும் பத்திரிகை சம்பந்தப்பட்டது. மக்களைப் போய்ப்பார். நாலு வர்ண ஆட்களோடும் பேசு"
"நாலு வர்ணமா?... பிராமண, ராஜ, வைசிய..."
"இல்லை.. இல்லை.. இது வேறு. உண்மையில் இதில் ஐந்து வர்ணம். புவர் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ், மிடில் கிளாஸ், ரிச், வெரி ரிச்.. ஜாதி அழியாது, கல்யாணி.. ஏதோ ஒரு விதத்தில் அது மனிதரிடையே இருக்கும்.. இன்னொண்ணு. இனாமா எதுவும் கிடைக்காது, கல்யாணி.. கிடைத்தால் ஏற்பதும் இழிவு. உலக இயக்கம் முழுவதும் பண்டமாற்றல் நடைபெறுவது சாதாரண பார்வைக்கே புரியும்.."
========================================================
இதுவும் கூடல் தான் தமிழ் மகளே.. என்னோடு நீ நடத்துகிற பெண்ணுரிமை விவாதங்களும், சமூக நலச் சண்டையும் கூடல் தான். பார்த்துப் பார்த்துச் செய்கிற உதவிகள் கூட சுகம் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள இந்த பரஸ்பர ஈர்ப்பு இனி கடவுளாலும் நிறுத்த முடியாது. கூடலில் உள்ள சுகத்தை உலகம் ஒருபோதும் மறக்காது. துறவு பொய், கல்யாணி.. வன்முறை அது.
பழகு.. கலந்து பழகு.. மனசுக்குப் பிடித்தவனோடு வெளியே போ.. கை கோர்த்து நட.. காதல் செய். உருகு. கவிதை படி. கண் இறங்கி கனவு காண்... காமம் பழகு.. இயல்பாய் இரு. இயற்கைக்குத் தலைவணங்கு.
=========================================================
"இரண்டு கை தட்டினா சத்தம். கை தட்டறது எதுக்கு? எல்லார் கவனமும் என்னைப் பாருன்னு கூப்பிடறதுக்கு. பார்த்தவன் யாரு உதவப் போறான்? கூச்சல் புண்ணியமே இல்லை, ஈஸ்வரி.."
"கோபத்தை எப்படிக் காட்டறது?"
"ஏன் கோவம்? நீ நினைச்ச மாதிரி நடக்கலைன்னு தானே..
இன்னிக்கு மழை பெய்யணும்ன்னு நினைச்சா நடக்குமா? இன்னிக்கு காத்து கூட வேணும்னா வருமா?.. இல்லை.. நாம் நினைக்கிற மாதிரி நடக்கறதில்லே.. அதுவா ஏதேதோ நடக்குது.. சில சமயம் நடக்கற போது, நினைச்சிக்கறோம். ஆகா, நினைச்சது நடந்திருச்சின்னு குதிக்கறோம். இரண்டு தடவை குதிச்சிட்டு மூணாவது தடவை நினைச்சிக்கறோம். நடக்கலைனா, கத்தறோம். இது நடைமுறை.. தத்துவமல்ல.
=================================================
------ பாலகுமாரன்

அதுக்கு மேலே கோபுரம். என்ன மாதிரி? நெருப்பு மாதிரி. தீ.... ஜூவாலை மாதிரி. மேலே கும்பம். ஏன் யாக குண்டம் சிம்பாலிக்கா வைச்சான்? அக்னியால் வளர்ந்து, அக்னியால் அழிந்து... எல்லா உடம்பும் யாக குண்டம். எல்லா உயிரும் தீச்சுடர். தகதகன்னு எரிஞ்சிண்டிருக்கற உயிர். பூச்சி, புழு, ஆடு மாடு, தாவரம் .., எல்லாம், ஏன், பூமி கூட ஒரு யாக குண்டம் தான். சகலமும் அக்னி தான். அதான் அக்னியே தெய்வம். அக்னியை வழிபடறதாலே, எல்லா உயிரையும் வழிபட, எல்லா உயிரையும் வணங்கற தத்துவம் வர்றது. எனவே அக்னி குண்ட ரூபமா கோயில் கட்டியிருக்கிறான். சகலரையும், சகல் நேரமும் தன்னை உட்பட வணங்கற தத்துவம் இது. இதான் கோயில்.
=======================================================
பெரிய பெரிய மன்னர்களும், முரட்டு தளபதிகளும், செல்வக் கோமான்களும் காணாமல் போக, தமிழ்ச் சரித்திரம் 'யாயும் ஞாயும் யாரா கியரோ' என்று ஒரே ஒரு கவிதை
எழுதியவனை குறுந்தொகையோடு நினைவுக்குள் வைத்திருக்கிறது. எல்லோர் வாழ்க்கையும் சரித்திரம் தான். சாதித்தவனுக்கு மட்டுமே சரித்திரம் என்பது முட்டாள்தனம்.
========================================================
விஷயம் நல்லதோ, கெட்டதோ ஒரு அலசல் செய்யத்


நாய்க்குட்டியை நிலைக்கண்ணாடிக்கு முன்னாடி வச்சா என்ன பண்ணும்? நக்கிப் பாத்துட்டு திங்க முடியலேன்னு போயிடும். மனுஷன்னா அடடா, நான் இவ்வளவு அழகான்னு யோசிப்பான். தன் இருப்பும் தெரிந்து எதிர்ப்பக்கம் போய் தன்னையே பாத்துக்கற சுபாவம் வர்றது. நாய்க்குட்டிக்கு இருப்பு மட்டும் தான் முக்கியம். மனுஷனுக்கு இருப்பும் தொலைவும் உண்டு. தொலைவுப் பார்வை இருக்கறதாலே வீடும், அரிசி சேம்ப்பும் அல்லது ஏதாவது
ஒண்ணு வந்துடறது. படருவதால், வளர்வதால் வரும் பிரச்னை. படர்ந்த இடம் மரமோ, முள்ளுச் செடியோ, மலையோ, தரையோ அந்தந்த சூழ்நிலை, பிரச்னை மனுஷனைச் சூழ்ந்திடறது.
=======================================================
மனிதனுக்கு சந்தோஷம் என்பது என்ன?
தன்னைப் பிறரிடம் உயர்த்திக் காட்டிக் கொள்ளுதலா? எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலா? எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலே சந்தோஷம். அந்தப்

பகிர்ந்து கொள்ள மறுப்பவன் பயமுள்ளவன்.
'தனிமை கண்டதுண்டு; அதிலே சாரமிருக்குதம்மா' என்கிற த்வனியிலேயே ரகசியம் பரிமாறும் உணர்வு இருக்கிறது.
=======================================================
சகல உயிர்களுக்கும் உணர்வு ஒன்றே. வலி பொது. காமம் பொது. உயிர் வாழும் விழைவு பொது. மரணம் பொது.
மாறுதல்களை மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த மாறுதலும் இவனை அழிக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அத்தனை மாறுதலிலும் புகுந்து மீளும் திடம்
இவனுள் உண்டு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

=========================================================
புதுபுது அனுபவம் முக்கியம் உலகில் எந்த இயக்கமும், எந்த பாலிஸியும், எந்த தத்துவமும் முடிவான முடிவல்ல. வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருப்பது. வளர்ந்து கொண்டே இருப்பது. எப்போதும் வளர முடியும்.
எது மாறும்? உயிருள்ளது அனைத்தும் மாறும். உயிர்ப்புள்ளது அனைத்தும் மாறும். மாற மாட்டாதவன் கல்மரம். டெட் வுட்.
======================================================
"ஒரு பத்திரிகை நிருபருக்கு அன்னியமானது எதுவுமில்லை. அவன் தொடாத விஷயம் எதுவுமில்லை. மனிதன் சம்பந்தப்பட்ட எல்லா விஷ்யமும் பத்திரிகை சம்பந்தப்பட்டது. மக்களைப் போய்ப்பார். நாலு வர்ண ஆட்களோடும் பேசு"
"நாலு வர்ணமா?... பிராமண, ராஜ, வைசிய..."
"இல்லை.. இல்லை.. இது வேறு. உண்மையில் இதில் ஐந்து வர்ணம். புவர் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ், மிடில் கிளாஸ், ரிச், வெரி ரிச்.. ஜாதி அழியாது, கல்யாணி.. ஏதோ ஒரு விதத்தில் அது மனிதரிடையே இருக்கும்.. இன்னொண்ணு. இனாமா எதுவும் கிடைக்காது, கல்யாணி.. கிடைத்தால் ஏற்பதும் இழிவு. உலக இயக்கம் முழுவதும் பண்டமாற்றல் நடைபெறுவது சாதாரண பார்வைக்கே புரியும்.."
========================================================
இதுவும் கூடல் தான் தமிழ் மகளே.. என்னோடு நீ நடத்துகிற பெண்ணுரிமை விவாதங்களும், சமூக நலச் சண்டையும் கூடல் தான். பார்த்துப் பார்த்துச் செய்கிற உதவிகள் கூட சுகம் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள இந்த பரஸ்பர ஈர்ப்பு இனி கடவுளாலும் நிறுத்த முடியாது. கூடலில் உள்ள சுகத்தை உலகம் ஒருபோதும் மறக்காது. துறவு பொய், கல்யாணி.. வன்முறை அது.
பழகு.. கலந்து பழகு.. மனசுக்குப் பிடித்தவனோடு வெளியே போ.. கை கோர்த்து நட.. காதல் செய். உருகு. கவிதை படி. கண் இறங்கி கனவு காண்... காமம் பழகு.. இயல்பாய் இரு. இயற்கைக்குத் தலைவணங்கு.
=========================================================
"இரண்டு கை தட்டினா சத்தம். கை தட்டறது எதுக்கு? எல்லார் கவனமும் என்னைப் பாருன்னு கூப்பிடறதுக்கு. பார்த்தவன் யாரு உதவப் போறான்? கூச்சல் புண்ணியமே இல்லை, ஈஸ்வரி.."

"ஏன் கோவம்? நீ நினைச்ச மாதிரி நடக்கலைன்னு தானே..
இன்னிக்கு மழை பெய்யணும்ன்னு நினைச்சா நடக்குமா? இன்னிக்கு காத்து கூட வேணும்னா வருமா?.. இல்லை.. நாம் நினைக்கிற மாதிரி நடக்கறதில்லே.. அதுவா ஏதேதோ நடக்குது.. சில சமயம் நடக்கற போது, நினைச்சிக்கறோம். ஆகா, நினைச்சது நடந்திருச்சின்னு குதிக்கறோம். இரண்டு தடவை குதிச்சிட்டு மூணாவது தடவை நினைச்சிக்கறோம். நடக்கலைனா, கத்தறோம். இது நடைமுறை.. தத்துவமல்ல.
=================================================
------ பாலகுமாரன்