மின் நூல்

Sunday, June 1, 2008

தெய்வமாய் வந்தவன்

பரிந்துரைக்கும் ராகம்: கல்யாணி
தாளம்: ஆதி

எடுப்பு

மஹாதேவன் அருள் புரிவான்
மனமெலாம் நிறைந்தவன் அவன்
ஜனமெலாம் காத்திடுவான்

(மஹாதேவன்)

தொடுப்பு

கைலாசநாதன் கபாலி முக்கண்ணன்
காஞ்சி ஏகாம்பரன்; ஜொலிக்கும் கனக சொரூபன்
உமையொரு பாகன் ஊர்த்துவத் தாண்டவன்
நமைக்காக்கும் நஞ்சப்பன்; தேவாதிதேவன்

(மஹாதேவன்)

குஞ்சிதபாத தில்லை சிதம்பரநாதன்
நெஞ்சம் கவர்ந்த சிவகாமி நேசன்
ஐயா என்றழைக்க அருளும் ஐயாரப்பன்
தயாநிதீஸ்வரன்! கங்காதரன்! வைத்தீஸ்வரன்!

(மஹாதேவன்)


முடிப்பு

தில்லை சிவசிதம்பர சபாநாயகன்
முல்லை சிரிப்பு மோகன சுந்தரன்
தூக்கிய பத பொன்னம்பல நடராஜன்
தேக்கிய கருணையாய் தெய்வமாய் வந்தவன்

(மஹாதேவன்)
Related Posts with Thumbnails