மின் நூல்

Wednesday, January 14, 2015

வாசிப்பு என்னும் தனி உலகம்

வெகுஜன ஊடகங்களின் மூலம் சில  படைப்புக்கள்  தெரிய வந்தன.
இந்தப் புத்தகச் சந்தையில் அவற்றைத் தேடித் திரிந்து சுய வாசிப்புக்காகச் சொந்தமாக்கிக்  கொள்ள வேண்டும்.

மிளிர் கல்  ---  நாவல் -  இரா. முருகவேள் -  பொன்னுலகம் பதிப்பகம்

பைத்திய ருசி -  சிறுகதைத் தொகுப்பு  -  கணேசகுமாரன்  -  தக்கை பதிப்பகம்

டார்வின் ஸ்கூல் -  சிறுவர் இலக்கியம் -  ஆயிஷா இரா. நடராசன் -                   புக்ஸ் ஃபார் சில்ரன்

அரேபிய இரவுகளும், பகல்களும் - மொழிபெயர்ப்பு நாவல் - சா. தேவதாஸ் - எதிர் வெளியீடு

நீல நாயின் கண்கள் -  மொழிபெயர்ப்பு உலகச் சிறுகதைகள் + இரண்டு நாவல்கள் -  அசதா -  நாதன் பதிப்பகம்

உறங்காத உறவுகள்  -  சமூக நாவல் -  எஸ்,வி, ரமணி -  சாரதாம்பாள் பதிப்பகம்

அஞ்ஞாடி  -  நாவல்  -  பூமணி -  (சாகித்ய அகாதமி விருது பெற்றது)

 7 கதாசிரியர்கள், 96 சிறுகதைகள் -  கதாசிரியர்கள்:  புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, லா.ச.  ராமாமிர்தம்,  சூடாமணி,  அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன்-  ஒவ்வொரு கதாசிரியருக்கும் தனித்தனி புத்தகம்  -  ஆனந்த விகடன் வெளியீடு

சிவானந்தலஹரீ பாஷ்யம் -  ஸ்ரீ ராமகிருஷ்ண  மடம்

Self - knowledge  -  (An English Translation of Sankaracharya's  Atmabodha with Notes, Comments, and Introduction  -  ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

உபநிஷதங்கள் -- தனித்தனி புத்தகங்கள் - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

பாரதியார் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு  -- தனித்தனி  புத்தகங்கள் -  வர்த்தமானன்  பதிப்பகம்

மனவளக்கலை -  (இரண்டு பாகங்கள்)  -   தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி -
உலக சமுதாய சேவா சங்கம்,  வேதாத்திரி பதிப்பகம்

சங்க இலக்கியங்கள் ( மர்ரே எஸ்.ராஜம் அவர்களால் வெளியிடப் பெற்ற
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, பாட்டும் தொகையும் ஆகிய நூல்களை 'சங்க இலக்கியங்கள்' என்னும் தலைப்பில் 12 பாகங்கள் கொண்ட தொகுதி --  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

My Apprenticeship  and My Universities -  Maxim  Gorky  -  (Collected works of Maxim Gorky) -நியூ செஞ்சுரி  புக்  ஹவுஸ்

An Autobiography  -  Mahathma Gandhi -  Navajivan Publishing House

ஜீவா என்றொரு  மானுடன் -  பொன்னீலன் -  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சங்க சித்திரங்கள் -  ஜெயமோகன் -(ஆனந்த விகடன் ஸ்டாலில் கிடைக்கலாம்)

அவன் -  ரா.கி.ரங்கராஜன்   -- வானதி பதிப்பகம்


இப்போதைக்கு  இது!


10 comments:

Geetha Sambasivam said...

பெரிய பட்டியல் தான். அசோகமித்திரன் சிறுகதைகள் ஆனந்த விகடன் வெளியீடாக வருவது ஆச்சரியமே! :)))) படிச்சுட்டு விமரிசனம் எழுதுங்க. அதைப் படிச்சுக்கறேன். :)

ஸ்ரீராம். said...

ம்ம்..... சில புத்தகங்கள் கண்ணில் பட்ட ஞாபகம்.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜீவா என்றொரு மானுடன் மிக அருமையான தேர்வு. பொதுவுடைமை இயக்கத்தில் இப்படியும் தலைசிறந்த மனிதர்கள் இருந்தார்கள் என்று தெரிந்துகொள்ள உதவும் நூல்.

உபநிஷதங்களைக் குறித்த மிக எளிமையான விளக்கங்களைக் கொண்ட ராமகிருஷ்ண மட வெளியீடு ஒரே செட்டாகவும் கிடைக்கிறது. ஆர்வமுள்ள இளைஞர்களுக்குப் பரிசளிக்க மிகவும் ஏற்ற நூல் இது.

msuzhi said...

பைத்திய ருசி - சிந்திக்க வைக்கும் தலைப்பு.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

கிருஷ்ண மூர்த்தி S said...

பொன்னீலனின் ஜீவா என்றொரு மானுடன் மிக அருமையான வாசிப்பு அனுபவம். பொதுவுடமை இயக்கத்தில் இப்படியும் மனிதநேயம் மிகுந்தவர்கள் இருந்தார்கள், தலைவர்களாக வளர்ந்தார்கள் என்பதை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ளப் பயன்படும் அருமையான நூல்!

உபநிஷதங்கள்! முக்கியமான உபநிஷதங்களை மிக எளிமையாக அறிமுகம் செய்யும் நூல்.எட்டுப் புத்தகங்களும் சேர்ந்து ஒரே கிப்ட் பாக்ஸ் ஆக சென்னை ராமகிருஷ்ண மட வெளியீடாகத் தமிழில் கிடைக்கிறது. பயனுள்ள வாசிப்பு

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இரண்டு தடவைகள் அந்தப் பக்கம் போய் வந்து விட்டதாகத் தெரிகிறது.

நீங்கள் வாங்கியவைகளின் லிஸ்ட்
கடைசியிலா?

ஜீவி said...

@ கரந்தை ஜெயக்குமார்

வாருங்கள், கரந்தையாரே! தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான பொங்கள் வாழ்த்துக்கள்.

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி

வாருங்கள், எஸ்.கே சார்!
பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன்.

ஜீவாவைப் பற்றியும், பாலனைப் பற்றியும் எழுத வேண்டும் என்கிற நினைப்பு தள்ளிக் கொண்டே போகிறது. விரைவில் செய்ய வேண்டும்.

ஜே.கே.யின் ஒரு 'இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' துக்ளக்கில் வெளிவந்த நேரத்து பிரித்து எடுத்து வைத்திருக்கிறேன். சில அத்தியாயங்களைத் தவற விட்டிருக்கிறேன். அதுவும் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

தங்கள் அன்பான வருகைக்கு நன்றி.

Geetha Sambasivam said...

இதற்கு நான் கொடுத்த கருத்து வெளிவரவில்லை! :)))) ஆனால் மற்றவர்களின் கருத்துகள் எனக்கு மெயிலில் வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் பதிலும் சேர்ந்து! என்ன கருத்துக் கொடுத்தேன் என நினைவில் இல்லை. :))) எதுவானால் என்ன? புத்தகக் கண்காட்சிக்குப் போவதே இல்லை. ஆகையால் எதுவும் சொல்ல இயலாது. :))))

Related Posts with Thumbnails