மின் நூல்

Thursday, April 10, 2008

நெஞ்சில் நிறைந்தவன்



எடுப்பு
அழைப்பாயோ என்னை அணைப்பாயோ--உந்தன்
அருகினில் வந்து இளைப்பாற....இப்போது
(அழைப்பாயோ..)

தொடுப்பு
கருவாகி உருவாகி கசிந்துருகி காதலாகி
மருவெலாம் நீங்கி உனை மருவத் துடித்தேன்
மனமெலாம் உன்னைத் தழுவ மயங்கித் தவித்தேன்
மோனம் கலைந்து நீயாக வந்து எனை
(அழைப்பாயோ..)

முடிப்பு
புவியாளும் ஜகன்நாதா! கோவர்த்தன கோபாலா!
தஞ்சம் அடைந்தேன்; என் நெஞ்சம் கவர்ந்தவ னல்லவோ?..
தணியாத தாபம் தீர தழுவிக் களித்திட
தவித்திடும் என் தாகம் தீர்க்க...கண்ணா...
(அழைப்பாயோ..)

Related Posts with Thumbnails