மின் நூல்

Friday, October 30, 2009

ஆத்மாவைத் தேடி....13 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

13. உத்தமனைக் காண வாரீர்!

மேகநாதன் மேலும் தொடர்ந்தார்: "பிரபஞ்ச காந்த வெளியில் வேண்டிய மட்டும் விதவிதமான சக்திகள் வாரியிறைந்து கிடக்கின்றன. இவை நமக்கு கிடைத்தற்கரிய செல்வம். இவற்றை தகுந்த முறையில் சகல உயிர்களின் மேன்மைக்கும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டிய கடப்பாடு நம் கையில் தான் இருககிறது.

"நான் சொல்லக்கூடியவை ஏதோ கற்பனைக் கதை போலத் தோற்றமளிக்கிறதோ என்கிற அச்சம் எனக்குண்டு. கொஞ்சமே நடைமுறைப் படுத்திப் பார்த்தால் அத்தனையும் நிதர்சன உண்மைகள் என்று உங்க்களுக்குப் புரியும். இதுவரை கண்டறிந்துள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அத்தனையும் இதுவரை இல்லாத ஒன்றைக் கண்டறிந்துள்ளதாக நமக்கு பிரமை உண்டு. மின்சாரத்திலிருந்து ஒவ்வொன்றாக நீங்கள் நினைத்துப் பார்த்தால், அத்தனையும் இயற்கையின் மடியில் ஏற்கனவே இருந்த செல்வங்கள் என்று புரியும். மழையில் இருந்து மந்தமாருதம் வரை இயற்கையில் ஏற்கனவே பொதிந்துள்ளகொடைகள் " என்று சொல்லி விட்டு மேலும் தொடர்வதற்கு முன் கையிலிருந்த காகிதக் கற்றைகளை பக்கம் வாரியாகச் சரிப்படுத்திக் கொண்டார் மேகநாதன்.

"இன்னொன்று. கண்டுபிடிப்புகள் அத்தனையும் மனிதனின் சுகபோக வாழ்க்கைக்காக என்கிற தவறான கருத்தும் பரவலாக ஏற்பட்டு விட்டது. சுகத்திற்காக என்ற எண்ணத்தினால் தான்
அத்தனையையும் காசாக்கி விட்டோம். இது என்றால் இவ்வளவு செலவு என்று தான் யோசிக்கிறோம். 'ஸ்விட்சைத் தட்டினால் வெளிச்சம்' என்கிற சாத்தியத்திற்கு தாமஸ் ஆல்வா எடிசன் எவ்வளவு சிந்தித்திருப்பார் என்கிற உணர்வு இல்லாது போய்விட்டது.
அந்த இல்லாத உணர்வே இயற்கையை இன்னும் புரிந்து கொள்ள முடியாத உணர்விற்கு ஆட்படுத்தியிருக்கிறது. இன்றைய அவசரத்தேவை, இயற்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். அதன் செல்வத்தை கப்ளீகரம் பண்ணாமல் அத்தனை உயிர்களும் தங்கள் தேவைக்கு அமைதியாக அனுபவிக்க வேண்டியது. வெட்ட வெட்ட தங்கம் என்கிற மாதிரி, அழித்து விடாத அமைதியான அனுபவிப்பால், இன்னும் இன்னும் இயற்கை நமக்கு
வாரிவழங்கக் காத்திருக்கிறது.

"எங்கும் எதிலும் இறைவனைக் காண்பதே விஞ்ஞானம் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். விறகில் நெருப்பு உள்ளது என்று அறிந்துகொண்ட அறிவு தான் ஞானம். அந்த நெருப்பை உபயோகப் படுத்திக் கொண்டு வளம் பெறுவது விஞ்ஞா னம். இறைவன் இருக்கிறார் என்பதை உணர்வது ஞானம். அவருடன் பேசுவது, கலந்து ஆனந்தம் பெறுவது விஞ ஞானம். இறைவனே பிரபஞ்சமாகவும், உயிர்களாகவும் திகழ்கிறார் என்பதைத் தரிசிப்பது விஞ்ஞான்ம் என்பார் பரமஹம்சர்" என்று சொன்ன போது மேகநாதனின் குரல் தழுதழுத்தது.

தொடர்ந்து பேசுகையில் அவர் குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது. "முதலில் இயற்கையில் இறைவனைக் கண்டு, பின் இயற்கையின் எச்சமாகிய தன்னில் இறைவனைக் காணுதல ஒரு யோகமாகும்.

உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினில்
உத்தமனைக் காண்" என்பது ஒளவையார் சொன்னது.

"---இதனால் எனக்கு என்ன பயன்?" என்று ஒரு செயலைச் செய்வதற்கு முன் ஒவ்வொன்றிற்கும் அத்னால் எனக்கு ஆவதென்ன என்று கேட்கும் உலகுக்கு, ஒள்வையார் சொன்னது இது. ஒரே ம்ட்டை அடி! 'உன் உடம்பினில் உள் உறையும் உத்தமனைக் காண்பது தான் நீ உடம்பு பெற்ற பயனே; அப்படிக் காணத்தவறின், பிறவி எடுத்ததே வீண்' என்கிறார் அவர்.

"பெற்ற பேறும், வீணும் பேறு பெற்றவர்க்கேத் தெரியும். வியாபாரத்தில் நஷ்டம் என்பது லாபம் அடைந்தவனுககே தெரியும் என்பது போல. இலாபத்தையே அடையாதார் அந்தப் பேற்றையே அடையாதாராய், இதுதான் இயல்பு போலும் என்கிற எண்ணமே அவரிடத்தில் பதிந்து இருக்கும். நாளாவட்டத்தில் செககுமாடு போல அதுவே படிந்தும் போய்விடும்.

"'உத்தமனைக் காண்பதால் எனக்கு என்ன பயன்?'---என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க
கேள்வி. எந்தக் கேள்வியுமே தான் ஞானத்தை அடைய ஆரம்பப்படி என்றாலும், கேட்கும் வெற்றுக் கேள்விகளே ப்தில்களைத் தந்துவிடாது. உள்ளத்தில் எழும் கேள்விகள், எந்நேரமும் அந்த உள்ளத்தையே துளைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு துளைத்தலின் பொழுதும், எழுந்த கேள்விக்குப் பதில் தேடுவதை நோக்கி ஓரடியாவது எடுத்து வைத்திருக்க வேண்டும்.

"இன்னொருவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்த்து 'என்ன பயன்' என்கிற கேள்வியே எக்காலத்தும் இருந்து கொண்டிருந்தால், இன்னொருவர் பதில் சொன்னாலும் அந்த பதிலுக்கு கேள்வியாய் இன்னொரு கேள்வி எழும். தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ளும் கேள்விக்கு, தனக்கே பதில் கிடைத்தால், அந்தக் கேள்வியே தன்னுள் முடங்கி நல்ல பதிலாகிப் போகும்.

"இன்னொன்று. பிறரிடம் பதிலை எதிர்பார்த்துக் கிடக்கையில், பதிலே பயனாய்த் துய்த்தவ்ர்கள் கூட்டம் பல்கிப் பெருகி, அவர்கள் பதில் சொல்லக் கூட நேரமின்றி, தான் அடைந்தப் பல்னைப் பெருக்கிக் கொள்ளும் வேலையில் மூழ்கிப் போவ்ர். பயனடைந்தோர் கூட்டம் பெருகப்பெருக, பயனடையாதோர் பின்னுக்குத் தள்ளப்படுவர்.

"அத்னால் வாழ்க்கை என்பது கேள்விகளால் நிரம்பியது என்பது மட்டுமல்ல, உள்ளத்துள் எழும் கேள்விகளுக்கு நல்ல பதில்களைப் பெறுவதும் நம்மிடமே இருக்கிறது என்று தெரிகிறது. 'ரொம்ப சரி. தன்னுள் கேள்விகளே எழாதவ்ன்?' என்று கேட்டால், 'சாரி, டெட் வுட்டுக்கு சமம். இந்த நிலை அவன் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகிப் போகும்' என்று தான் சரிததிரம் சொல்கிறது," என்றவர், மிகவும் அர்த்தத்துடன் அவையைச் சுற்றிப் பார்த்தார்.

அவரின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்து, அடுத்த கால்மணி நேரத்தில் அமைய்ப்போகும் அடுத்த அமர்வுக்கு, வழக்கம் போல கீழ் தளத்திற்கு வந்து விடுங்கள். அந்த அமர்வை, 'கேள்வி--பதில்' அமர்வாக வைத்துக் கொள்ளலாமா?" என்று புன்னகையுடன் கேட்க, அவையே கலகலப்புடன் எழுந்திருந்தது.

பூங்குழலியும், சிவராமனும் எதுபற்றியோ ஆழ்ந்து விவாதித்தபடி, அவைக்கு வெளியே வந்தனர். பாதி வழியில் குறுக்கிட்ட மாலுவைப் பார்த்து, "நன்னா பாடினீங்க.. உங்கள் குரல்வளம் அற்புதம்" என்றார் பூங்குழலி.

(தேடல் தொடரும்)

4 comments:

கபீரன்பன் said...

//உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண் //

மனித உடல் தரித்திருப்பதற்கான கடமையை இவ்வளவு சிறப்பாக யாரும் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகமே. திருமூலர்

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்புளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே

என்று சொல்வதிலும் அந்த ’கடமை’ என்கிற உணர்வு தூண்டப்படவில்லை.

ஞானக்குறள் தாங்கள் குறிப்பிட்டது போல் ஒரே மட்டை அடி! சிக்ஸ்ர் தான்.

ஜீவி said...

@ கபீரன்பன்

தாங்கள் சொல்வது சரிதான். கருத்துக்கு மிக்க நன்றி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

////'சாரி, டெட் வுட்டுக்கு சமம். இந்த நிலை அவன் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகிப் போகும்' என்று தான் சரிததிரம் சொல்கிறது," ////

உண்மை தான்.

ஜீவி said...

@ ஷக்தி

தொடர் வருகைக்கும் கருத்தொற்றுமைக்கும் மிக்க நன்றி, ஷக்தி!

Related Posts with Thumbnails